Soviet - Russian cinema films | சோவியத் - ரஷ்ய சினிமா திரைப்படங்கள்

தொடர் 44 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் ரஷ்ய சினிமா – 3 ஒரு மாபெரும் சோவியத் ரஷ்ய திரைப்படம். பிரிட்டிஷ் விமர்சகர்கள் TOM MILNE மற்றும் DEREK ADAMS என்பவர்கள் இந்தப் படத்தைப் பற்றி விமர்சிக்கையில், “COMPARED TO THIS 70 M.M. MONSTER, (5 EARS…
Soviet - Russian cinema films | சோவியத் - ரஷ்ய சினிமா திரைப்படங்கள்

தொடர் 43 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் - ரஷ்ய சினிமா ரஷ்ய திரைப்படங்கள் -2 தோல்ஸ்தோயும், தாஸ்தாவெஸ்கியும் ஷேக்ஸ்பியரும் உலகத் திரைப்படங்களாக - அவற்றின் அசல் மொழியிலிருந்து பிற மொழிகளில் திரைப்படங்களாகியுள்ளன. உலக மயமாக்கப்பட்ட இந்த கலைச் செயல்பாட்டில் சுத்த கலை நோக்கும் உண்டு. சுத்த வணிக…
Soviet - Russian cinema films | சோவியத் - ரஷ்ய சினிமா திரைப்படங்கள்

தொடர் 42 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் - ரஷ்ய சினிமா ரஷ்ய திரைப்படங்கள் -1 யு.எஸ்.எஸ்.ஆர். என அறியப்பட்ட சோவியத் சோஷலிஸ ஒன்றியம் மற்றும் ரஷ்யாவுக்குள் நமது பயாஸ்கோப்காரன் வந்து இறங்கியிருக்கிறான். பயாஸ்கோப்காரன் தனது மிக நீண்ட சர்வதேச சினிமா பயணத்தில் தன் பயாஸ்கோப் வழியாக தமிழ்நாட்டு…
Krzysztof Kieslowski - Eastern European cinema Polish Movies

தொடர் 41 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா போலந்து திரைப்படங்கள்-2 போலந்தின் மற்றொரு முக்கிய திரைப்படக் கலைஞர் கிறிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கி (KRZYSZTOF KIESLOWSKI) கீஸ்லோல்ஸ்கி வார்சாவில் 1941ல் பிறந்தார். காசநோயால் அவதிப்பட்ட தந்தையை குணப்படுத்தும் பொருட்டு காசநோய் மருத்துவமனைகளைத் தேடி ஊர் ஊராக நாடோடித்தனமாய் இவரது…
Roman Polanski Andrzej Wajda Polish History of film - European Cinema

தொடர் 40: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா போலந்து திரைப்படங்கள்-1 கிழக்கு ஐரோப்பிய சினிமாவில் ஜெர்மன் நாஜி ஆக்கிரமிப்பும், ஹிட்லரின் கொடிய ஜெஸ்டபோ போலீஸ் எஸ்.எஸ். படையினரின் கொடுமைகளோடு நரகமயமான அவர்கள் அமைத்த “CONCENTRATION CAMS”கள் ஏற்படுத்திய சிறை முகாம்களுக்கும் போலந்து பெயர் பெற்றது. போலந்திலுள்ள…
Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

தொடர் 26: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஜெர்மன் சினிமா ஒன்று
                                          – விட்டல்ராவ்

ஒவ்வொரு நாட்டு சினிமாவும் அதன் மௌனப்படங்களின் செழுமையிலிருந்து தனக்கான உன்னத வடிவை பேசும் படத்துக்கு கொண்டு சென்றதை உலக சினிமா வரலாறு குறிப்பிடும் சிலவரிகளாகும். ஒரு திரைப்படத்தின் கதையம்சம் கொலை, திகில், இசை, நாடகம், காதல், சாகசம், வலாற்று நிகழ்வு, அறிவியல், ஆன்மீகம் என்று பலதரப்பட்டதாயிருக்கலாம். அது முக்கியமல்ல. “ஒரு ஒட்டு மொத்த பார்வைக்கு முழுமையான கலை வடிவாக திரைப்படம் அமைந்திருபபதே அதன் அதி உயர்ந்த மேன்மையைச் சொல்லுவது, இதில் கதைக்கோ, நடிகர்களுக்கோ ஒரு பங்குதான் இருக்கும். இயக்குனரும் காமிரா ஒளிப்பதிவாளரும்தான் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

நவீன கலைகளின் 20-ஆம் நூற்றாண்டுப் பார்வைகளில் முக்கியமான ஒரு பார்வை “எக்ஸ்பிரஷனிஸம்” [EXPRESSIONISM]. எக்ஸ்பிரஷனிஸம் என்பது கலையின் வழியே குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுதல் என்றாகிறது. 19-ம்நூற்றாண்டின் இறுதியில் இருந்த ரியலிஸம் மற்றும் இம்ப்ரஷனிஸம் போன்ற கலைக் கோட்பாடுகள் வைக்கும் மரபார்ந்த வடிவங்கள் உண்மையான கலையை உருவாக்குவதில் தடையாக இருந்ததாய் எக்ஸ்பிரஷனிஸ்டுகள் தீர்மானித்தனர். ஜெர்மனியில் இவ்வகை கோட்பாடு அன்றைக்கு பெரிதும் பின்பற்றப்பட்டு “ஜெர்மன் எக்ஸ்பிரஷனிஸம்” என்றே சொந்தம் கொண்டாடினர். ஜார்ஜ் கெய்ஸர், ஏர்னஸ்ட் போல்லர் என்பவர்கள் எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர்களென அறியப்பட்டவர்கள். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் [BERTOLT BRECHAT] உலகப் புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர். டி.எஸ். எலியட், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவேல் பெக்கட், போன்றவர்கள் ஆங்கில மொழியில் எழுதிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஷனிஸ்டுகள் இசையிலும் ரிச்சர்டு வாக்னர் எக்ஸ்பிரஷனிஸ உத்திகளை தத்தம் இசைக் கோர்வைகளில் ஈடுபடுத்தினர். ஜெர்மனி சினிமாவும் அவ்வப்போது குழம்புச் சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ளுவதுபோல எக்ஸ்பிரஷனிஸத்தைத் தொட்டுக் கொண்டது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மனிய சினிமாவின் அதிமுக்கிய ஆரம்பப் பேசும்படம் “M” ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றியது. கொலை [MURDER] அல்லது கொலையாளி [MURDERER] என்பதைக் குறிக்கும். வார்த்தையின் முதல் எழுத்தான “M” படத்தின் பெயராகிறது. தொடர்கொலை சம்பவங்களை வைத்து சுவாரசியமான ஹாலிவுட் படங்களாக BOSTON STRANGLER, NO WAY TO TREAT AZ LADY, 10, RILLINGTON PLACE மற்றும் FRENZY என்பவை “M”–ன் பாதிப்பால் பின்நாட்களில் தயாரிக்கப்பட்டவை. மிகச்சிறந்தவையாகக் கொண்டாடப்பட்ட PSYCHO மற்றும் SILENCE OF THE LAMBS ஆகிய இருபடங்களுக்கும் அரிச்சுவடியாயிருப்பதும் “M”தான்.

1931-ல் வெளிவந்த “M” ஜெர்மன் தயாரிப்பாளர் – இயக்குநர் FRITZ LANG-ன் முதல் பேசும்படம் [ஜெர்மன்மொழி], LANG ஏற்கெனவே ஆல்ஃபர்டு ஹிட்ச்காக் 1927-ல்தயாரித்து இயக்கிய THE LODGER என்ற மௌனப்படத்தின் பாதிப்பாலும், ஹிட்ச்காக்கின் 1929ம் வருடத்து பேசும்படமான BLACKMAIL என்பதின் தொழில் நுணுக்கங்களின் கவனிப்போடும் “M” படத்தை உருவாக்கினதாகக் கூறப்படுகிறது.

ஃபிரிட்ஜ் லேங் 1890-ல் வியன்னா நகரில் பிறந்தவர். இவரது முதல் மௌனத் திரைப்படம்- 1919-ல் HALBBLUT [THE WEAKLING] என்ற பெயரில் ஜெர்மனிய UFA ஸ்டூடியோவில் தயாரித்து வெளியிட்டார். பெண்ணொருத்தியோடான காதலால் அழிந்து போகும் மனிதன் ஒருவனின் கதை இப்படம். இக்கருத்தை அவரது வேறு சில படங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. இப்படங்கள் யாவுமே லேங்குக்கு வெற்றியைத் தந்தவை. கடைசியாக அவர் தயாரித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியளித்த அறிவியல் கதைப்படம் METROPOLIS [1927]. அதன்பிறகு இயக்கிய திரைப்பட வரலாற்றில் நிலையான பெயரைப் பெற்றது அவரது முதல் பேசும்படமான “M” [1931]. தம் படத்தில் திகில் காட்சிகளின் போக்கில் சஸ்பென்ஸை உருவாக்கி அவர் மிகச் சிக்கலான ஒலிப்பதிவை [RECORDING] பயன்படுத்தியிருக்கிறார். EDVARD GRIEG-ன் இசைக்கோர்வை பிரமிக்க வைத்ததாயிருக்கிறது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

1933-ல் ஜெர்மனியின் திரைப்பட ஸ்டூடியோக்கள் யாவும் நாஜி விளம்பர இலாகாவுக்கு தலைவராயிருந்த ஜோசப் கோயபெல்ஸின் [JOSEPH GOEBBELS] கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய திரைப்பட இயக்குனர்களும் நட்சத்திரங்களும் ஜெர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் ஹாலிவுட்டை சென்றடைந்தனர். லேங்கின் திறமையைக் கண்டு மகிழ்ந்த நாஜிகள் அவரை ஜெர்ன் UFA ஸ்டூடியோவுக்கு தலைமைப் பொறுப்பேற்குமாறு 1933-ல்கேட்டுக் கொண்டபோது, அவர் அமெரிக்காவுக்குத் தப்பியோடிவிட்டார். மிகுந்த வெற்றிகரமான திரைப்படக் கலைஞராய் விளங்கிய LANG 1976-ல் காலமானார். அவர் இறுதியாக 1953-ல் தயாரித்து இயக்கியது “THE BIG HEAT” என்ற படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மன் நகரமான டுஸ்ஸெல்டார்ஃப் [DUSSELDORF] பகுதியில் பீட்டர் குர்பென் [PETER KURTEN] என்ற மனம் வக்கரித்தவன் சிறுமிகளைக் கொலை செய்து வந்ததை அன்றைய பத்திரிகைச் செய்திகள் “டுஸ்ஸெல்டார்ஃபின் ரத்தக்காட்டேரி” என்று அழைத்து வந்தன. “M” திரைப்படம் 1931-ல் திரையிடப்பட்டபோது பீட்டர் குர்டெனின் கொலைச் செய்திகளைப் படித்து மனத்தில் தேக்கியிருந்த ஜெர்மன் திரைப்பட ரசிகர்கள் படத்தின் கதைக்கு புதியவர்களாய் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு லேங், தன் படத்தின் கதைக்கு குர்டென் விஷயம் மூலக்கருத்தல்லவென்று கூறிவிட்டார். ஆனாலும் படத்தைப் பார்க்கையில் யார் குற்றவாளி என்பது முன்கூட்டியே தீர்மானிக்க இயலாத வகையில் லேங் கொண்டு போயிருப்பார். சிறுமிகளை ஏமாற்றிக் கொன்றுவிட்டு அவர்களின் முதுகில், “M” என்ற எழுத்தை எழுதிவிடுவான். கொலை செய்யுமுன் ஒரு ராகத்தை சீழ்க்கை ஒலியால் எழுப்புவான். இந்த ராகம், [EDVARDGRAIK] எட்வார்டு கிரேக்கின் இசையமைப்பில் திகழும், “HALL OF THE MOUNTAIN KING” எனும் பாடலின் ராகமாகும்.

ஃபிரஞ்ஜ் பெக்கெர்ட் [FRANZ BEKERT] என்ற மனநோய் பீடிக்கப்பட்ட இளைஞன் அழகிய சிறுமிகளை தின்பண்டங்கள் தந்து பாலியல் ரீதியாய் தீண்டி உணர்வுச் சுகம் பெற்றவனாய் கொலை செய்து வருகிறான். ஒவ்வொரு சிறுமியின் கொலைச் செயலும் மிகுந்த பூடகத்தனமாய் ஒருசில குறியீட்டுக் காட்சிகளோடு நமக்கு புரிய வைக்கப்படுகிறது. முதற் கொலைக் காட்சியில், பெக்கர்டின் நிழல்தான் நமக்குக் காட்டப்படுகிறது. உடனே காட்சி மாறி, சிறுமியின் வருகையை எதிர்நோக்கி வீட்டிலிருக்கும் அம்மாவைப் பார்க்கிறோம். அடுத்து ஜன்னலும், வெளிப்பகுதியும் காட்டப்படுகிறது. காலியான அறைகள் காட்டப்படுகின்றன. மேஜைமீது காலியான இரவுச் சாப்பாட்டுத் தட்டும் கடைசியாக புல்தரையில் உருண்டு சென்று நிற்கும் சிறுமியின் பந்தையும் காமிரா காட்டுகிறது, ஓர் ஒற்றை பலூன் காற்றில் மிதந்து போவதைக்காட்டி சிறுமி இறந்ததை உணர வைக்கிறார் லேங். கொலையாளி பெக்கெர்டின் பின்பக்கம் மட்டுமே படம் முழுக்கக் காட்டப்படுகிறது. அவன் தலைக்கு பரிசு ஒன்றை அறிவித்து, போலீசு வேட்டையாடும் சமயம். ஊர்மக்கள் சட்டத்தை தம் கையிலேந்தி ஒன்று திரண்டு அவனை அடித்துக்கொல்ல திட்டமிடுகின்றனர். இந்த முறையில் பெக்கர்டின் முடிவு ஏற்படுகிறது.

பீட்டர் லோரி [PETER LORRE] என்ற ஹங்கேரிய நடிகர் அப்பாவித் தனமான முகத்தோடு சிறுமிகளைக் கொலை செய்யும் பெக்கர்பாக அதிசிறப்பாய் நடிக்கிறார். இன்ஸ்பெக்டர் கார்ல் லேஹ்மன் [KARL LAHMANN] பாத்திரத்தில் ஆட்டோ வெர்னிக் [OTTO WERNICKE] என்பவர் சிறப்பாய் செய்திருக்கிறார். “M” மீண்டும் அதேபெயரில் அமெரிக்க ஹாலிவுட் தயாரிப்பாக 1951-ல் ஜோசப் லோஸி [JOSEPH LOSEY] என்பவரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது அவ்வளவு சிறப்பாயில்லை.

ஜெர்மனி என்றவுடனே சட்டென நினைவுகளில் மேலெழும்புவது ஹிட்லரும், இரண்டாம் உலகப்போரும் யூதர்கள் அழிப்பும். அந்த நினைவுகளை தூண்டும்படி கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடு போர் சாகசத் திரைப்படங்களை ஏராளமாய்த் தயாரித்து அளித்தது ஹாலிவுட். ஆனால், அவை பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான பார்வையில், சிந்தனையில் எடுக்கப்பட்டவை. உலக யுத்தத்தின் இறுதிப் பகுதியின் அரங்குகளில் பங்கேற்ற அமெரிக்கப்போர் இயந்திரம், பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா அளவுக்கு உயிர் பலிகளையும், ஊர்சிதைவு அழிவுகளையும் சந்திக்கவில்லை. ஹாலிவுட் தயாரிப்புகளாய் நாம் பார்க்கநேரிட்ட 2-ம் உலகப்போர் பின்னணியிலமைந்த பெரும்பாலான திரைப்படங்களில் ஜெர்மன் போர் இயந்திரத்தை சுக்குக்கும் உதவாதது போலவும், புத்தி கூர்மை, யுக்தி, வியூகம், என எல்லாவற்றிலுமே அமெரிக்க ராணுவம்தான் மற்ற எல்லா நாட்டு ராணுவங்களைக் காட்டிலும் உயர்ந்ததாயும் சிறப்பானதாயும் காட்டிக்கொள்ளும் விதமாகவே எடுக்கப்பட்டு வந்தன. அதேசமயம் உலகப்போர் பின்னணியில் இத்தாலி, பெல்ஜியம், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா ஆகிய நாடுகளில் உருவான திரைப்படங்கள் ஓரளவுக்கு நியாயமான பார்வையையும் நம்பகத் தன்மையையும் கொண்டிருப்பன. அவற்றில் ஜெர்மன் தயாரிப்புகளில் உருவான சில திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

EIN LIED VON LIEBE UND TOD- இந்த ஜெர்மன் சொற்றொடர், GLOOMY SUNDAY எனும் ஜெர்மன் திரைப்படத்துக்கான மூல நாவலின் தலைப்பு ஆகும், நாவலை எழுதியவர் NICK BAR KOW என்பவர் மூன்று ஆண்களுக்கு இடையில் ஒரு பெண் என்றும் சொல்லலாம். இத்தோடு கொலைக்காரத்தனமான ஓர் இனியபாடலும் – இசையும் சேர்ந்த பயங்கர காலக்கட்டத்து கதை. கதை, 2-ம் உலகப்போருக்கு முந்தைய 30-களின் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் ஓர் உயர்தர உணவுவிடுதியில் நடைபெறுகிறது. விடுதியின் பெயர் ஸாபோ [SIABO]. அதன் உரிமையாளரான லாஸ்லோஸாபோ [LASZLOSZABO] ஒரு ஹங்கேரிய யூதர். அந்த உணவுவிடுதியில் பரிசாரகம் செய்யும் அழகிய யூத இளம்பெண் இலோனா வர்னால் [ILLONA VARNAL] என்பவள். இசைஞானமும் இனிய குரலும் கொண்ட இலோனாவும் விடுதி உரிமையாளர் லாஸ்லோஸாபோவும் காதலர்கள்.

மூன்று ஆண்களுக்கிடையில் ஒரு பெண் மற்றும் அபாயகரமானதொரு அற்புதபாடல் என்பது இப்படத்தின் சாரம். மேற்கத்திய சாஸ்திரிய இசை ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி, போலந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் புகழ்பெற்ற இசைமேதைகளை கொண்டிருந்தன. ஹங்கேரிய பெருநகர் புடாபெஸ்டில் [BUDAPEST] உணவு விடுதிகளில் மற்ற ஐரோப்பிய, ஓட்டல்களில் இருப்பது போலவே பியானோ இசைச்சேவை முக்கியமாயிருக்கும். ஸாபோ உணவு விடுதியிலும் மிக மதிப்பு வாய்ந்த பியானா இருந்தது. அதை இசைக்க இசைக்கலைஞன் வேண்டி அறிவிப்பு செய்தபோது பலர் நிராகிக்கப்பட ஓர் இளைஞன் ஏழ்மை கோலத்தில் வந்து வாசித்து ஸாபோவை கவர்ந்து பணியில் அமருகிறான். அவன் பெயர் ஆண்ட்ராஸ் அராடி [ANDRAS ARADJ]. ஆன்ட்ராஸும் இலோனாவும் இசையின் இழுப்பில் ஈர்க்கப்படுகின்றனர். இதன்போக்கில் இலோனா ஒரே சமயத்தில் இரு ஆண்களை மனம் – உடல் ரீதியாக காதலித்து பழகுகிறாள். ஆன்ட்ராசும் ஸாபோவும் இந்த விஷயத்தில் ஒருவரையொருவர் தாராளமாய் அனுசரித்தே நடந்து கொள்ளுகின்றனர். திரௌபதை – பாண்டவர்கள் உறவுகூட இவ்வளவு நெருக்கமாய் இருந்திருக்குமென்பதுகூட சந்தேகம். இச்சமயம் ஜெர்மனியில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் முன்னணியிலிருந்த தொழில் அதிபர் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் [hanseberhardwieck] என்பவன் புடாபெஸ்டுக்கு வந்தவன் ஹாபோ உணவு விடுதியில் இலோனா பரிமாறிய மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளின் சுவைக்கு [BEEF ROLL] அடிமையாவதோடு இலோனாவிடமும் மனம் பறிகொடுக்கிறான்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

இதனிடையில் ஆன்ட்ராஸ் ஒரு புதிய இசைக்கோர்வையை பியானோவில் வாசிக்கிறான். அது அவன் மனதில் அதற்கான வார்த்தை வடிவங்களைக் கொண்ட இசைக்கோர்வை. அதை அவன் “GLOOMY SUNDAY” என அழைக்கிறான். அவ்விசைக் கோர்வை முதலில் மனதைச் சுண்டியிழுக்கும். அது சிறிது சிறிதாக ஓர் உயர்ந்த சோக வேகத்தை நோக்கிச் செல்லும். பரந்து நீண்டு வேகமெடுத்த ஆற்றைப்போல. அதன் ஓட்டம் அதிசோகமானது. இசைக்கோர்வையை கேட்பவர் வாடி வதங்க, சாய்ந்து சுருள வேண்டியது. பிறகு அச்சோக இசைக்கோர்வையால் ஒரு பயங்கர சூழலுக்கு கேட்போரை இழுத்து செல்லும். அதில் கேட்போரில் சிலர் அமிழ்ந்து சுழன்று செத்துப் போவர். நிறையபேர் தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்ட்ராஸின் நோக்கம், தன் இசையைக் கேட்பவர் தற்கொலை புரியவேண்டுமென்பதல்ல. ஆனால் பலவீனமான இதயமுள்ளவர்கள் அந்த இசையால் தாங்கவொண்ணா சோகம் மேலிட்டு அதீத உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மார்வலி கண்டுமாண்டார்கள்.

பியானோவில் இசைக்கப்பட்ட GLOOMY SUNDAY கோர்வையின் சோகம் மேலிட்ட உணர்ச்சிப் பெருக்கால் ஒரு கனவான ஸாவோ விடுதியில் விழுந்து சாகிறார். அடுத்தடுத்து ஐந்து தற்கொலை நிகழ்வுகளை அந்தப்பாடல் ஏற்படுத்தவும் இதுபோன்ற செய்திகளுக்கே காத்திருக்கும் ஊடகம் ஒன்று தன் நிருபர்களை அனுப்பி ஆன்ட்ராஸை பேட்டியெடுத்து GLOOMY SUNDAY கீத விவகாரம் பத்திரிகையில் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

ஒரேசமயம் இரு ஆண்களோடு உறவு வைத்த இலோனாவின் வாழ்வில் மூன்றாவது காதலனாக அதேசமயம் ஒருதலைக்காதலாக – ஜெர்மன் பணக்காரன் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் நுழைகிறான். ஒருநாள் விடுதியில் தனக்கு மிகவும் பிடித்தமான மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளை நிறைய உண்டு நிறைய குடித்த போதையில் அவன் இலோனாவை தன்னை மணக்கும்படி வற்புறுத்துகிறான். அந்த அழகி அவனது காதலையும் திருமண யோசனையையும் நிராகரிக்கிறாள். மனம் உடைந்த ஹான்ஸ்டான் வூபு ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முற்படுகையில் ஸாபோ குதித்து அவனைக் காப்பாற்றி ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கிறான்.

2வது உலகப்போர் தொடங்கி உலகெங்கும் உள்ள யூத இனத்தை அழிக்கும் காரியத்தில் முன்னேறும் ஹிட்லர், ஜெர்மனிக்கான “இறுதித் தீர்வை” [FINAL SOLUTION] முன்வைக்கிறார். ஹிட்லரின் இறுதித்தீர்வுத் திட்டம் படுபயங்கரமானது. நாஜி ஆக்கிரமிப்பிலிருந்த ஐரோப்பிய பகுதியில் வாழும் யூதர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்தும், துப்பாக்கிச் சூட்டிலுமாய் கொன்றழிப்பதுதான் அது. போர் சுறுசுறுப்படையும் சமயம், ஹான்ஸ் ஜெர்மன் ராணுவத்தில் ஒரு கர்னல் பதவி பெற்று, ஹங்கேரியின் யூதர்களை இறுதித் தீர்வுக்குள் அழிக்கும் படையின் பொறுப்புள்ள ஓர் உயரதிகாரியாக புடாபெஸ்ட்டுக்கு வருகிறான். இப்போது அவன் அதிகாரபூர்வமாகவே இலோனாவை அடைய முயற்சிக்கிறான். அப்போதும் அவன் உடன்படுவதில்லை. இதற்குள் ஆன்ட்ராஸின் இசைக்கோர்வை GLOOMY SUNDAY – நூற்றைம்பது தற்கொலைகளைக் கண்டு விடுகிறது. இலோனாவின் தூண்டுதலின் பேரில் ஆன்ட்ரஸ் “இருள் சூழ்ந்த இரவு” இசைக்க வார்த்தைகளைத் தேடிவார்த்தை வடிவப் பாடலாக்குகிறான். அந்த இசைக் கோர்வையும் பாடலும் மட்டுமே அவனது படைப்பு ரீதியான இசையும் பாடலுமாகும்.

அப்பாடலைத் தன் இனிய குரலில் இலோனா பாடுவாள். ஹான்ஸ் தன் சக அதிகாரி லெப்டினண்டு கர்னல் ஈஷ்மனுடன் உணவருந்த வந்தவன் மாட்டிறைச்சி பண்டத்துக்கு சொல்லிவிட்டு காத்திருக்கையில், ஈஷ்மன் “இதென்ன, யூதனின் ஓட்டலா?” என்று கேட்பதை ஆன்ட்ராஸ் கவனிக்கிறான். இறுதித் தீர்வை நினைவூட்டுகிறான் ஈஷ்மன். இருவரும் அபரிதமாகக் குடித்துவிட்டு பியானோ இசைக்க ஆன்ட்ராசை கேட்க, ஆன்ட்ராஸ் மறுக்கிறான். ஹான்ஸ் வற்புறுத்துகிறான். ஆன்ட்ராஸ் மறுத்து பியானோவிலிருந்து தள்ளி உட்காரவே, நிலைமை விபரீதமாக காத்திருக்க இலோனா இசைக்காக பாடலைப் பாடுகிறாள். அவர்கள் எழுந்து போகையில் ஈஷ்மன் இடறி விழுந்தவன், ஸாபோதான் வேண்டுமென்றே தள்ளியதாக “யூதப்பன்றியே, என திட்டி அடித்து உதைக்கிறான். ஹான்ஸ் சமாதானப்படுத்தி அழைத்துப் போகிறான். ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. ஆன்ட்ராஸ், ஹான்ஸின் துப்பாக்கியைப் பறித்துத் தன்னைச் சுட்டுக்கொண்டு செத்து கிடக்கிறான். GLOOMY SUNDAY பாடலுக்கு தற்கொலை புரிந்து கொண்ட 151-வது மனிதனாகிறான் ஆன்ட்ராஸ்.

யூதர்களை கூட்டம் கூட்டமாய் ரயிலில் ஏற்றி காஸ் சாம்பர்களுக்குள் அடைத்துக் கொல்ல கொண்டு போகிறார்கள். பணம், நகைகள் தருபவர்களை அதிகாரிகள் உயிர்பலியிலிருந்து தப்புவித்து போரிலிருந்து விலகி நிற்கும் “நியூடரல்” தேசங்களுக்கு போய்விட அனுமதிச்சீட்டு தருகிறார்கள். இலானாவையும் ஸாபோவையும் காப்பாற்றுவதாய்க் கூறிவிட்டு ஹான்ஸ் ஸாபோவை விஷவாயுப் பயணம் போகும் ரயிலில் ஏற்றியனுப்பி விடுகிறான். இலோனா கெஞ்சுகிறாள். ஸாபோவைக் காப்பாற்ற ஹான்ஸுக்கு அவள்தன் உடலையே தருகிறாள். அவளை அனுபவித்துவிட்டு ஏமாற்றி விடுகிறான் ஹான்ஸ்.

போர் முடிவுக்கு வருகிறது. வயதான ஹான்ஸ் தன் கிழ மனைவியோடு புடாபெஸ்டுக்கு வந்து ஸாபோ விடுதிக்குள் நுழைகிறான். 80-வயதை தொழிலதிப நண்பர்கள் அவனை அங்கு வரவழைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே மாட்டிறைச்சி ரொட்டிச் சுருள் தட்டில். ஸாபோ விடுதியை வயதான இலோனாவும் அவன் மகனும் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அதே GLOOMY SUNDAY பாடல் இசைத்தட்டு போடப்படுகிறது. பாடல் முடிகையில் ஹான்ஸ் துடிதுடித்து ஸாபோ விடுதியின் தரையில் சவமாகக் கிடக்கிறான்.

GLOOMY SUNDAY என்ற உள்ளத்தை உருக்கும் பாடலைப் படத்தில் இலோனாவுக்கு குரல் கொடுத்து அருமையாகப் பாடியவர் ஹதர்நோவா [HEATHER NOVA] என்பவர். ஹான்ஸ் எபர்ஹார்டு பாத்திரத்தில் BENBECKER என்ற ஜெர்மன் நடிகரும், ஆன்ட்ராஸாக STEFANO DIONISI என்பவரும், ஸாபோவாக JOACHIM KROL என்பவரும், இலோனாவாக ERIKA MAROZSAN என்ற நடிகையும், அற்புதமாய் நடித்திருக்க, ஒப்பற்ற ஒளிப்பதிவை போலந்து காமிராமென் EDWARD KLOSINSKI என்பவர் செய்திருக்கிறார். இச் சிறந்த ஜெர்மன் திரைப்படத்தை இயக்கிய ஜெர்மன் இயக்குனர் ROLF SCHUBEL தம் நேர்காணலில் கூறியதாவது “IT IS DIFFERENT TO THE WAY AMERICANS DEPICT NAZIS IN THEIR MOVIES, BUT ONE NEEDS STO DIFFERENTIATE AND FIND OTHER WAYS OF PLAYING NAZIS.” இதே கருத்தில்தான் ஜெர்மனியில் வேறு பலர் எடுத்திருக்கும் உலகப்போர் படங்களும் இருக்கின்றன. பெரிய எடுத்துக்காட்டு: “வீழ்ச்சி” – DOWNFALL எனும் ஒப்பற்ற 2-ம் உலகப்போர் பற்றிய ஜெர்மன் படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

போரின் கடைசி கட்டம். பெர்லின் முற்றுகை. பெரு நகரம் ரஷ்ய ராணுவத்தால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டு விட்ட நிலையில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் போர் அரங்காக மாறிவிட்ட துரதிர்ஷ்டம். பெர்லினுக்கு மேற்கு முனையில் அமெரிக்கப்படை அதன் நான்கு ஸ்டார் பெற்ற தளபதி ஜெனரல் பேட்டன் [PATTON] தலைமையில் வந்து பெர்லினுக்குள் நுழைய காத்திருந்தது. அவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரின் அனுமதி – உத்தரவு பெறாது நேரடியாக தன்னிச்சையாக பெர்லின் நகருக்குள் நுழைந்து ஹிட்லரை கைது செய்ய நினைத்தார். பெர்லினுக்கு கிழக்கு முனையில் ரஷ்ய ராணுவம் ஜெனரல் ஜுகாவ் [GEN.ZUCKOV] தலைமையில் பெர்னிலுக்குள் நுழைய கடுமையாகப் போரிட்டு முன்னேறி வந்தது. அவர் எந்த ஒரு காரியத்துக்கும் தன் நாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் அனுமதியும் உத்தரவுக்குமே பணிந்து செயல்படுவார். ஜெனரல் பேட்டன் பெர்லினுக்குள் முதலில் நுழைவதை சோவியத்துகள் எதிர்த்தார்கள்.

பல வகையிலும் ஜெர்மனியின் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நாஜி ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் கோடிக்கணக்கில் ரஷ்யர்களைப் பறிகொடுத்திருந்தது சோவியத் யூனியன். இறுதிப்போரின் வெற்றிமுனைக்கு லகம் வந்ததே, ஜெர்மன் இராணுவத்தை ரஷ்ய கடுங்குளிர் தட்பவெப்பம் வரும் வரை பல இன்னல்களைப் பொறுத்து காத்திருந்து அவர்களை அடித்து நாசமாக்கி இன்று பெர்லின் கிழக்கு வாசலில் வந்து நிற்கும் ரஷ்யாதான். பெர்லினிக்குள் முதலில் நுழையும் வாய்ப்பும் ரஷ்யாவுக்குத்தான் உரித்தானது என்று ஜெனரல் ஜுகாவ் கூறுகிறார். பேட்டனோடு பேசிப் பயனில்லையென்று அவர் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேச, அவர் ஐசனோவரோடு தொடர்பு கொண்டு நிலைமையை கூறுகிறார். ஐசனோவர் ஜெனரல் பேட்டனிடம் ரஷ்யர்களே பெரலின் நுழைவை முதலில் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறிவிட்டு பேட்டனை தன்னை வந்து பார்க்க கட்டளையிடுகிறார்.

சுயேச்சையாக முடிவு எடுத்ததற்காகவும், ரஷ்ய தளபதியோடு தேவையின்றி வாக்குவாதம் செய்ததற்காகவும் தண்டனையாக ஜெனரல் பேட்டனின் நான்கு நட்சத்திரங்களையும் பறித்துக் கொண்டதோடு அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் எதுவுமில்லாமல் வெற்று மனிதனாக பேட்டனை அனுப்புகிறார். பிற்காலத்தில் அமெரிக்கா தன் பிரபல கவச மோட்டார்களுக்கு ‘PATTON TANKS’ என பெயரிட்டு பாகிஸ்தானுக்கு கொடுத்தது.இந்த பிரம்மாண்ட பேட்டன் கவச மோட்டார்களில் நூற்றுக்கணக்கானவற்றை பாகிஸ்தான் இந்தியபோரில் [60-கள்] இந்திய ராணும் தன்னிடமிருந்த பழங்கால பிரிட்டிஷார் விட்டுப்போன CENTURIAN TANKS-களைக் கொண்டே நாசமாக்கியது வேறு வரலாறு.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் ஜெர்மன் ராணுவமான “வெஹர்மாட்” படையுடன் கடுமையான இறுதிச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறது. இனி DOWNFALL திரைப்படம். இந்தப்படம் மிகச் சிறந்த அந்நிய மொழிப் படம் என 2004-ல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2004-ல் வெளிவந்த இப்படம் மிகச் சிறந்த போர் பின்னணிப் படங்களில் ஒன்றாக உலகளவில் கருதப்படுகிறது.

“THIRD REICH” என்பது ஜெர்மன் அரசின் ஹிட்லர் காலத்தைக் குறிப்பது. “RISE AND FALL OF THIRD REICH” என்பது மற்றொரு பிரம்மாண்டமான பழைய திரைப்படம். “THE FALL OF BERLIN” என்பது ரஷ்ய தயாரிப்பிலான பிரம்மாண்டமான 70MM திரைப்படம். நூற்றுக்கணக்கில் 2-ம் போர் பின்னணியில் சர்வதே மொழிகளில் திரைப்படங்கள் இருக்கின்றன.

ஹிட்லரும் அவரது அதிமுக்கிய அதிகாரிகள் எனும் ஃபாசிஸ சக்திகளும் அடங்கி ஒடுங்கி ஹிட்லரின் பாதுகாப்பு நிலவறைக்குள் [BUNKER] குழுமியிருக்கும் 2-ம் உலகப் போரின் இறுதிக்கட்டம். ஹிட்லர் தன் இறுதி நாட்களில் தனது சிறப்பு பங்கரில் தனக்கான பெண் காரியதரிசியைத் தேர்வு செய்து நியமிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த அழகிய இளம் பவேரியப் பகுதயைச் சேர்ந்த காரியதரிசியின் பெயர், ட்ரோட்ல் கங்க் [TRAUDL JUNGE] கங்க்-ன் பார்வையில் வார்த்தைகளை வழியே முழுப்படமும் சொல்லப்படுவதாய் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார். ஜோக்கும் ஃபெஸ்ட் [JOACHIM FEST]என்பவர் எழுதிய “INSIDE HITLERS’S BUNKER என்ற ஜெர்மன் நூலையும் ஹிட்லரின் இறுதிகால காரியதரிசிப் பெண் ட்ரோடள் கங்க்-ம்மெல்லிசா முல்லர் [MSELISSA MULLER] என்ற பெண்ணும் சேர்ந்து எழுதிய “இறுதி நேரம் வரை” [UNTILTHE FINAL HOUR] என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு DOWNFALL திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

ஹிட்லர தமது வலிமை மிக்க 9-வது படைப்பிரிவை பெரிதும் நம்பியவராய் ஒளிமங்கிய தம் பதுங்கு அறைகளிலிருந்து கொண்டு, முன்னேறிவரும் ரஷ்ய துருப்புகளுடன் பலத்த பதிலடி தந்து விரட்டியடிக்குமென எதிர்பார்த்து தம் படைத் தளபதிகளுக்கு தைரியம் தருகிறார். அவர்களோ, “9-வது படைப்பிரிவு முற்றிலும் ரஷ்யர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து நிற்கிறது” என்று பதிலளிக்கின்றனர். நாம் ஹிட்லரின் முகமாற்றத்தைக் கவனிக்கிறோம். அவரது அசுரத்தனமான மன உறுதி கிழட்டு முகத்தில் இன்னும் வெளிப்படுகிறது. அதே சமயம் உடல்ரீதியாக மிகவும் சீணிக்கப்பட்டும் நரம்பு தளர்ந்தும் உளவியல் தொந்தரவும் மேலிட்ட அவரது இடதுகை சதா நடுங்கிக் கொண்டிருப்பதையும் மற்றவர்கள் அதை கவனித்து விடாதபடிக்கு அதை மறைக்கும் பொருட்டு அவர் பின்புறமாய் அந்தக் கையைக் கட்டிக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். ஜெர்மன் இராணுவத்தில் ஆள் பற்றாக்குறையால் பள்ளிக்கூடப் பையன்களையும் சேர்த்து ஆயுதமேந்த வைக்கின்றனர். அவர்களை நிற்க வைத்து விசாரித்தபடியே, “எதிர்கால ஜெர்மனி” என்று ஹிட்லர் குறிப்பிடுவது திகிலூட்டுகிறது. பெர்லினை சுற்றிவளைத்து நகரை நோக்கி முன்னேறும் ரஷ்யப்படைகளிலிருக்கும் தொலைவை அவ்வப்போது ஹிட்லருக்கு தெரிவிக்கப்படுகையில், அவர் 12-வது படைப்பிரிவை அனுப்பச்சொல்லுகிறார்.

12-வது படைப்பிரிவும் ரஷ்யர்களால் வளைக்கப்பட்டு நகர முடியாதிருக்கிறது” என அவர்கள் சொல்லும்போது ஆத்திரத்தில் கத்துகிறார் ஹிட்லர். ஹிட்லரைத் தப்பித்து ஓடிவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள். தன்னால் அது இயலாதென்று கூறி மறுத்து விடுகிறார் ஹிட்லர். அதே சமயம் அவரது படைப்பிரிவினருள் பலரும், GESTAPO காவல் துணை அதிகாரிகள் சிலரும்,
எஸ். எஸ். [S.S.(SCHLDZ STAFFEL)] எனும் கொடிய சிறப்புப்படையின் முக்கியமானவர்களும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். அவரைச் சுற்றியிருந்த பெண் ஊழியர்கள் இறுதிவரை அவரோடயே இருந்துவிட முடிவு செய்கின்றனர். நேரம் வந்துவிடுகிறது. “நாம் ரஷ்யர்களிடம் சரணடைவதைவிட அமெரிக்காவிடம் சரணடைவதே நல்லது. நான் வேண்டுமானால் ஐசனோவரிடம் பேசுகிறேன்”, என்கிறார் கோயபெல்ஸ். ஹிட்லர் அந்த யோசனையை ஏற்பதில்லை.

“ஒருவேளை சோவியத் தளபதியுடன் பேசவேண்டியிருக்குமானால் எவ்விதமான முறையில் வணக்கம் செலுத்த வேண்டும், ஹை ஹிட்லர் எனக் கூவி கையை விரைப்பாக உயர்த்தி நீட்டும் நாஜி வணக்கமா அல்லது சாதாரண சல்யூட் செய்வதா?” என்று ஒரு பெண் கேள்வியெழுப்புகிறாள். எதிரிகள் மிக அருகில் வந்துவிட்ட நிலையில் முடிவாக ஹிட்லர் கூறுகிறார், “எல்லாவற்றையும் எரித்து அழித்து விடுங்கள். என் எழுத்துக்கள், பதிவுகள், ஆவணங்கள் வையும் அவர்கள் கையிலல் சிக்கிவிடாவண்ணம் எல்லா கோப்புகளையும் எரித்து விடுங்கள். நானும் போய்விடுகிறேன். என்உடல் அவர்கள் கையில் கிடைத்து உலகுக்கு காட்சிப் பொருளாகாதபடி தீயிட்டு அழித்துவிடுங்கள்” என்று ஹிட்லர் தன் கடைசி இரா போஜனத்தை தம் நெருங்கிய வட்டத்து ஊழியர்கள், தளபதிகள், அதிகாரிகளோடு சாப்பிட்டு முடிக்கிறார். அவர்களை வரிசையாக நிற்க வைத்து கை குலுக்கி விடை பெறுகிறார்.

பெண் ஊழியர்களிடம் விடைபெறும் காட்சியில் ஹிட்லரும்கூட நம் மனதை நெகிழ வைத்துவிடுகிறார். இத்தனைக்கும் தன் காரியங்களுக்காக அவர் வருந்துவதேயில்லை. ஹிட்லர் என்ற அரக்கனின் இறுதிக்கட்டம் கூட மனிதர்களான நம்மை நெகிழ வைத்து விடுகிறது. “NINE HOURS TO RAMA” என்ற 60-களின் தடை செய்யப்பட்ட திரைப்படம் பலத்த எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டே தடை செய்யப்பட்டது. அதை எழுதியவர் ஸ்டான்லி ஓல்பிரட் [STANLEY OOLPRET] என்பவர். காந்தியை சுட்டுக் கொன்தற்கு ஒன்பது மணி நேரம் முன்பாக கோட்சேயின் நினைவுகளை பின்னோக்கிச் சொல்லும் நாவல் அது. அந்த இந்து தீவிரவாதியின் பேரில்கூட ஒரு கணத்தில் நெகிழ்வு ஏற்பட்டுவிடக்கூடும். ஏனென்றால் நாம் சாதாரண மனிதர்கள்.

முதலில் ஹிட்லர் நேசிக்கும் அவரது அல்சேஷன் நாய் விஷம் [சயனேடு] வைத்து சாகடிக்கப்படுகிறது. ஒண்டிக் கட்டையாக ஹிட்லர் சாகக்கூடாதென்று, அத்கு முன் அவருக்கு திருமணம் செய்வித்து இருவரையும் சாகவிடவேண்டுமென்று ஏற்பாடாகிறது. ஈவா ப்ரான் [EVA BRAUN] என்பவளை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஹிட்லரும் மனைவியான ஈவா ப்ரானும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். இக்காட்சி சில கணங்களுக்கு நம்மை சிலிர்க்கச் செய்து விடுகிறது. அந்த இரு உடல்களையும் எரிக்க பெட்ரோல் இல்லை. ஹிட்லருடைய கார் உள்ளிட்ட பல வண்டிகளிலிருந்து பெட்ரோல் எடுக்கப்பட்டு கொண்டு வந்து ஊற்றி எரிக்கிறார்கள். இந்தக் காட்சியம் அசாதாரணமாய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முன்பாக கோயபெல்ஸின் மனைவி பதினான்கு குழந்தைகளுக்கு சயனைடு ஊட்டி கொல்லும் காட்சி நம்மை ஆட வைத்து விடுகிறது. அடுத்து தங்களைச் சுட்டுக் கொண்டு சாகும் கோயபெல்ஸ் தம்பதிகளின் உடல்களும் எரிக்கப்படுகின்றன. பெர்லின் சோவியத் இராணுவம் வசமாகிறது. பெண்கள் வெளியேறுகையில் போரிலீடுபட்ட சிறுவன் ஒருவனோடு ட்ரோட்ல் கங்க் போகையில் ஒரு பாலத்தடியில் கிடாசப்பட்ட சைக்கிள் ஒன்றைப் பையன் எடுத்துவர அவனை முன்னால் வைத்து கங்க் மிதித்துச் செல்லும் காட்சியோடு படம் முடிகிறது.

அடால்ஃப் ஹிட்லராக மிக்க தோற்ற ஒற்றுமையோடும் மிக அற்புதமாயும் நடித்தவர் சுவிஸ் நாட்டு நடிகர் ப்ரூனோ கான்ஸ் [BRUNO GANZ] இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் முக்கிய ஜெர்மன் பேசும் நடிகராக போற்றப்பட்டவர். கான்ஸ் தமது 77-வது வயதில் 2019-ல் ஜுரிச் நகரில் கான்ஸர் நோயால் காலமானார். ட்ரோட்ல் கங்க் பாத்திரத்தில் நடித்தவர் அலெக்ஸாண்ட்ரா மரியா லாரா [ALEXANDRA MARIA LARA] என்பவர். ட்ரோட்ல் கங்க் ஹிட்லரின் இளம் பக்தையென குறிப்பிடப்பட்டவள். ஜெர்மனியிலிருந்த பல்வேறு நிறுவனங்களில் காரியதரிசியாகப் பணியாற்றிய கங்க் 2002-ல் காலமாகும்வரை மியூனிக் நகரில் வசித்து வந்தான். படத்தின் இறுதியில் வயதான கங்க் ஹிட்லரோடுதான் பணிபுரிந்த இறுதி அனுபவத்தை ஓரிரு நிமிடங்களுக்குப் பேசிய பேச்சும் தோற்றமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு பிறகு படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரானாக ஜுலியன் கொஹ்லெர் [JULIANE KOHLER] என்பவள் நடித்திருக்கிறாள். திரைக்கதை வசனத்தை பெர்ன்ட் ஐஷிங்கர் [BERND EICHINGER] என்பவர் எழுத ஒளிப்பதிவை ரெய்னர் க்ளாஸ்மன் திறம்பட காமிராவில் செய்திருக்கிறார் [RAINER KLAUSMANN] இசைப் பொறுப்பு ஸ்டீஃபன் ஜக்கரிரியா [STEPHAN ZACHARIA] என்பவரது அற்புதமான முறையில படத்தை இயக்கியவர் ஆலிவர் ஹிர்ஷ்பைகல் [OLIVER HIRSCHBIEGEL] இதே காலத்தில் (2003) வெளிவந்த மிக மிக அற்புதமான 2-ம் உலகப்போர் ஜெர்மன் திரைப்படம் “தஸ் பூட்” [DAS BOAT] ஹிட்லரின் “U BOAT” எனவும் அறியப்பட்ட பயங்கர நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றைக் கொண்ட அரிய படம் புதிய இளையவர்களோடு பயணமாகும். அதி நவீன நீர்மூழ்கியுள்ள காமிராவுடன் பத்திரிகையிலிருந்து வந்த யூத நிருபரும் ஒருவன் வேசிகளோடு கிளப்பில் ஆடலும் பாடலும் குடியுமாய் தொடங்கி ஆழ்கடலுக்குள்ளும் வெளியில் மிதந்தும் பாய்ந்தோடும் நீர்மூழ்கி, குடித்துவிட்டால், உள்மனம் உண்மைகளை உளரவைக்கும். வயதான தாம்ஸன் காப்டன் குடிபோதையில் கூறுகிறார்: “பெண் உறவில்லாத ஹிட்லர். சதா சுருட்டே வாயில் கதியான குண்டன் சர்ச்சில்” இப்படத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே சகல காட்சிகளையும் பார்க்கிறோம்.

மாலுமிகளின் அந்தரங்க வாழ்க்கையும் கோடி காட்டப்படுகிறது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாசகாரி கப்பல் [DESTROYER] ஒன்றை ஓபோட் அடித்து மூழ்கி விடும்காட்சி சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் DAS BOOT நீர் மூழ்கி பலமாய் தாக்கப்பட்டு 260 மீட்டர் ஆழத்துக்கு கீழே மூழ்கி பாறை படிமங்களில் மோதி நிறைய விரசல்களைப் பெற்று கடல் நீரின் அதிவேக பாய்ச்சல் மிக்க கசிவுகளால் சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருக்கும் இறுதி காட்சிகள். நிகரற்ற இந்த ஜெர்மன் யுத்தப் படத்தை இயக்கியவர் வுல்ஃகாங் பீட்டர்சன். [WOLF GONG PETERSON].

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தொடர் 25: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



இத்தாலி – 3
ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

நையாண்டி என்பது [SATIRE] கவிதை, கதை, நாடகம் என தொடங்கி, சினிமாவின் ஓர் அங்கமாயும் விளங்கலாயிற்று. தமிழில் சிறுகதைகள் சிலவற்றில் நையாண்டியை [SATIRE] மிக அற்புதமாக செய்து காட்டியவர் புதுமைப்பித்தன். இதில் சுயதிருப்தியும் அடங்கும், பழிவாங்கலுமுண்டு… இந்த முக்கிய இலக்கிய வகைப் பிரிவு மராத்திய நாடகம், தமிழ்சினிமா என்றும் தொட்டிருக்கிறது. உலக சினிமாவில் இத்தாலிய பங்களிப்பாக மிக உயர்ந்த நையாண்டி வகைப் படங்களை இயக்கியளித்தவர், ஃபெடரிகோ ஃபெல்லினி [FEDERICO FELLINI], இத்தாலிய சினிமாவின் முதல் அலை நியோ ரியலிஸம் என்றால், இரண்டாவது அலை பெல்லினியின் Satire வகைப் படங்களும், மைகேலாஞ்செலோ அண்டோனியோனியின் [MICHELANGELO ANTONIONI] அங்கத முடிவைத் தீண்டிய பல படங்களும் எனலாம். பெல்லினி ஓரிரு படங்களை நியோ ரியலிஸப் பாணியில் [LA STRADA; I VITELLONI] இயக்கிய பின்னர் தான் தனது சட்டையர் மற்றும் சுயசரிதை வகைப் படங்களை [ROMA; AMARCORD; SATYRICON] இயக்கினார்.

பெல்லினி 1921-ல் ரிமினி [RIMINI] எனும் சிற்றூரில் பிறந்து தனது 19வது வயதில் ரோமுக்கு இடம் பெயர்ந்தார். சட்டம் படிக்க புறப்பட்டவர், சினிமாவுக்குள் மூழ்கிப் போனார். பத்திரிகைகளில் நிருபராயும், கிசு கிசு விஷயங்களை துண்டுத் துக்கடாவாய் எழுதுபவராயுமிருந்திருக்கிறார். 1944-45ல் அவர் புகழ் பெற்ற இத்தாலிய இயக்குனர் ராபர்டோ ரோசெல்லினியிடம் உதவி இயக்குனராயிருந்து “ROME- OPEN CITY” படத்துக்கு திரைக்கதை எழுதினார். 50-களில் அவர் தாமே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
1953-ல் அவர் “I VITELLONI” எனும் ஜனரஞ்சகமும் நியோரியலிஸமுமாய் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தை இயக்கினார். இதற்குப் பிறகு பெல்லினி இந்தப் பாதையை விட்டு வெளியேறினார்.

ஐந்து இளைஞர்கள் தங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்துடன் மனம்போன போக்கில் மது, மாது, சூது என்று செலவழித்துச் சுற்றும் கதைப் படம். இதில் வரும் பல நிகழ்வுகளில் சில பெல்லினியின் சுய வரலாறுபோல என்பாருண்டு. ஓரளவுக்கு நன்கு எடுக்கப்பட்ட படம். 1954-ல் பெல்லினியின் புகழ் பெற்ற கருப்பு, வெள்ளைப் படம். “LA STRADA” (பாதை) வெளிவந்தது. மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் சங்கமித்த பிரபல குணசித்திர நடிகர் ஆந்தனி குவின் [ANTHONY QUINN] ஜம்பனோ [ZAMPANO] எனும் முரட்டு கோபக்கார கழைக்கூத்தாடி பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஜம்பனோ மனைவியை இழந்த நிலையில், மச்சினியை மணக்க ஏழை மாமியாருக்கு நிறைய பணம் தந்து புது மனைவியோடு தன் பயணத்தைத் தொடருகிறான்.

ஜம்பனோவின் இளம் மனைவி ஜெல்ஸோமினாவாக [GELSOMINA] பெல்லினியின் மனைவி மசீனா [MASINA] நடித்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்த பெரிய கூடாரம் போனற வாகனத்தில் ஜம்பனோ தனக்கான படுக்கை, சமையல் என்ற சகலத்தையும் ஏற்படுத்தி நீண்ட சாலையில் பயணித்து அங்கங்கே நிறுத்தி சின்னச் சின்ன வித்தைகளைக் காட்டி காசு வாங்கிப் பிழைக்கும் முரட்டுக் கழைக் கூத்தாடி. அந்தப் பாத்திரத்தில் பிரமாதமாக நடிக்கும் ஆந்தனி குவினின் உடல் வாகுவில் மூன்றில் ஒரு பங்கே உடல் வாகு கொண்ட மசீனா, நிஜ வாழ்க்கையில் தன் கணவரும், படத்தின் இயக்குனருமான பெடரிகோ பெல்லினியின் உடல் வாகுவில் நான்கில் ஒரு பங்கே உள்ளவர். இவரது பாத்திரமும் நடிப்பும் இரக்கத்தைக் காட்டிலும் சிரிப்பையே அதிகம் வரவைக்கும்படியாயிருக்கிறது.

ஜம்பனோவுடன் ஊர் சுற்றி, உலகம் சுற்றி உபயோகமாய் புதுப் புது வித்தைகளைக் கற்று அம்மாவுக்கும் நிறைய பணம் அனுப்புவதாய் குதியாட்டம் போட்டு புறப்பட்ட ஜெல்சோமினா ஒரு வேளைச் சோற்றுக்கும் ஒரு பிடி அன்புக்கும் ஏங்கி அவஸ்தைப்படுகிறாள். முதல் நாளே, தான் கம்பி வளையத்துக்குள் நுழைந்து அதை அறுக்கும் வித்தையின்போது கூட்டத்தைப் பார்த்துச் சொல்லும் வசனத்தை மாற்றிச் சொன்னதற்காக அவளைக் குச்சியால் விளாசி வெளியில் படுக்க விடுகிறான் ஜம்பனோ. அவள் இருக்கும்போதே வேறொரு வேசியோடு படுத்ததைக் கண்டு மனமும் உடலும் பதறிய ஜெல்சோமினா ஓர் இரவன்று ஓடிப் போய் விடுகிறாள். ஒரு சிறு சர்க்கஸ் ஆட்டக் குழுவைச் சந்திக்கிறாள். அதில் இசைத்து விதூஷகன் புரியும் விகடனும், மிக உயரத்தில் கட்டில் கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரியும் பபூனையும் சந்திக்கிறாள். அந்த பபூன் பாத்திரத்தில் ரிச்சர்டு பேஸ்ஹார்ட் [RICHARD BASE HEART] மிக நன்றாக செய்திருக்கிறார். ஜம்பனோ அங்கு வந்து சர்க்கஸில் புதிய நட்சத்திரமாய் சேர்கிறான். ஆனால் தன் பழைய எதிரியான பபூனுக்கும் அவனுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. பபூனை தாக்கியதற்காக கைதாகி சிறையிலடைக்கப்படுகிறான் முரடன் ஜம்பனோ.

முரடனை விட்டு விட்டு தன்னோடு வந்து விடும்படி ஜெல்சோமினாவை கேட்கிறான் விதூஷகன். அவள் மறுத்து விடுகிறாள். அதே சமயம் விடுதலையடைந்து வந்த ஜம்பனோ விதூஷகனை தாக்கிக் கொன்றுவிட்டு அவனுடைய காரையும் சேதப்படுத்தி விடுகிறான். ஜெல்சோமினா ஓடிப்போய் கான்வென்ட் ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கேயே மாண்டு போகிறாள். இதை பல நாட்கள் கழித்து அறிய வரும் ஜம்பனோ தனது எல்லா குற்றங்களையும் நினைத்து கடற்கரையில் கதறி விடுகிறான். இப்படம் மெலோடிராமாடித் தனத்தைக் கொண்டிருந்தாலும் பெல்லினியை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. LASTRADA என்றால் பாதை அல்லது பயணம் என்றாகிறது.

பெல்லினியின் சில திரைப்படங்கள் தேவாலய மதரீதியான ஒழுக்கவியல் தர்மத்துக்கு சிக்கலாயிருந்த காரணங்களால் இத்தாலியில் முக்கியமாக கத்தோலிக்கத் தலைமை பீடமான பாப்பல் நகரம் இருப்பதால், அரசு தணிக்கைக் குழுவினரால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாயின. இவரது பல படங்கள், நெறிப் படி ஒழுங்காக ஒருங்கிணைந்த மதக் கோட்பாடுகளைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும். ஆனால், பசோலினியினின்றும் தூரம் தள்ளியிருப்பவை. ஒரு பார்வைக்கு ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டதாயும் தெரியும். அதே சமயம் சில தகவல்கள் அடிப்படையில் பெல்லினிக்கு நிறைய மூட நம்பிக்கையுமுண்டு. தேவைப்படும்போதெல்லாம் அவர் ESP எனும் மீடியம்களையும் ஜோசியர்களையும் கலந்தாலோசித்ததுண்டு என அறியப்படுகிறது. மற்றொரு வேடிக்கையான செய்தி – அவர் தன் எல்லா படங்களின் ஆரூடங்களையும், அன்றைக்கு டெல்லியில் அசோக் ஓட்டலில் போய் தங்கி உலகின் பல்வேறு பிரபலங்களுக்கு ஜோதிடம் கணித்து இதோபதேசம் புரிந்துவந்த இராமகிருஷ்ண சாரதி என்ற ஜோதிட நிபுணரிடம் ஆலோசித்து [தொலைப்பேசி வழியாக] அறிவாராம். பெல்லினி இந்தியாவுக்கு வருகை புரிந்ததில்லை.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தன் வரலாறுபோல படங்கள் பண்ணுவதில் பெல்லினி சமர்த்தரீ. அவ்வகையான படங்களில் ஒன்று அவர் 1972-ல் இயக்கிய வண்ணப்படமான, “பெல்லினியின் ரோமா” [FELLIN`S ROMA] இப்படம் அவரின் நினைவுகளிலிருந்து முக்கிய நிகழ்வுகளை நையாண்டி ததும்ப காட்சிக் கோர்வையாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் தம் ரோம் நகரை எவ்வளவுக்கு நேசிக்கிறார் என்பது விளங்கும் மிக தாராளமாயும் அள்ளி வாரியிறைத்து வகை வகையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெல்லினியின் சுய வரலாறு.

முதலில், தன்னைப் பள்ளிச் சிறுவனாக பூகோளமும் சரித்திரமும் ரோம் நகரின் வழியாக காண்பவராகக் காண்பிக்கிறார். அதைச் சொல்ல மாணவ, மாணவிகளை ஒரு தாடி வைத்த குரூர ஆசிரியரும் வயதான வசீகரமிக்க ஆசிரியையும் அழைத்துக் கொண்டு சிறு ஆற்றை கடப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஆசிரியர் பெருமையோடு மாணவர்களிடம் சொல்லுகிறார்.
இந்த ஆறுதான் ரூபிகான்; [RUBICN] இந்த ஆற்றை ஜுலியஸ் சீசர் கடந்துபோனார். இப்போது அதை நாம் கடக்கிறோம்.”

பிறகு வகுப்பறைக் காட்சி. ஆதியில் காட்டில் கிடந்த இரு ஆண் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்தது. அவை வளர்ந்து ரோமுலாஸ், ரீமஸ் [ROMULOUS, REEMAS] என்று அழைக்கப்படுகின்றனர். அதனால் அவ்விடமும் ரோம் என பெயர் கொண்டது. அன்றைக்கு தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் ஓநாயின் உருவம் இன்றும் ரோம் நகர முக்கிய காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெல்லினியின் ஆசிரியர் சிறு ஒளி ஒலி காட்சி மூலம் அந்த தங்க ஓநாயைக் காட்டிவிட்டு தொடர்ந்து ரோம் நகரின் புகழ்பெற்ற இடங்களைக் காட்டிக் கொண்டே வருகையில் ஒரு காட்சியில் படம் சிக்கிக் கொண்டு நின்று விடுகிறது. அக் காட்சியைக் கண்ட சிறுவர்கள் எழுந்து குதித்து கூச்சலிட்டு கைதட்டுகின்றனர். அக்காட்சியை நகர்த்த இயலாது. தாடிக் கார ஆசிரியர், விளக்கை போடுங்கள் என்று கத்துகிறார். கூடவே அதைப் பார்க்காதீர்கள், அது பிசாசு, என்று கத்துகிறார். இருட்டில் ஒரு கணம் அவர் முகம் தாடி வைத்த பிசாசாகவே தோன்றுகிறது பிள்ளைகளுக்கு, கூச்சல் அடங்கவில்லை. அந்த காட்சியில், முழு நிர்வாண கோலத்தில் ஒரு பெண் தன் பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

பிறகு, ஜீலியஸ் சீசர் நாடகம் நடித்துக் காட்டப்படுகிறது. “YOU TOO BRUTE?” என்று கேட்டுக் கொண்டே புரூட்டஸ்ஸின் கடைசி கத்திக் குத்தோடு சீஸர் சாயும் காட்சி.
அதன் பிறகு பெல்லினி ஓர் இளைஞனாக அறிமுகமாகிறார். நிகழ்வுகள் இதிலிருந்து வேகமாக நகர்த்தப்படுகின்றன. ரோமா பெல்லினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவற்றில் முக்கியமானவற்றை ரோம் நகர வரலாறு வழியாக ஓர் அரிய தினப்படி சேதிக்குறிப்புப் பெட்டகமாய் [DIARY] தத்தளித்திருக்கிறார் ஃபெடரிகோ ஃபெல்லினி, படத்தின் இறுதி காட்சிகளில் ஒன்று ஃபாசன் காட்சி [FASION PARADE] ஆண், பெண்கள் புதுப் புதுசாக உடையணிந்து உடையலங்கார காட்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று நவீன மோஸ்தரில் மத ரீதியான ஆடைகளை [சாமியார்- கன்னியாஸ்திரிகளின் அங்கிகள்] அணிந்து போப் பாண்டவர் வந்து போகும் காட்சி. அதைத் தொடர்ந்து மடாலய கன்னிகளும், பாதிரியார்களும் ஆடைகளணிந்து ஒயிலாக நடந்துபோகும் காட்சிகள் பெல்லினியின் நையாண்டித்தனத்துக்கு ஆபத்தான உதாரணங்கள், ரோமா ஏற்கெனவே 1969-ல் பெல்லினி இயக்கிய வண்ணப்படமான “சட்டைரிகன்” [SATYRICON] என்ற படத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது.

மிகவும் விவாதிக்கப்பட்ட பெல்லினியின் கருப்பு வெள்ளைப் படம் “8½” 1965-ல் வெளிவந்த இப்படம் சர்வதேச அளவில் விவாதங்களையும் உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டது. இதில் மார்செல்லோ மாஸ்டிரியாயினியின் நடிப்பு அபாரம். கருப்பு வெள்ளை ஒளிப்பதிவை அதன் உச்சத்துக்கு இட்டுச் சென்ற உலகத் திரைப்படங்களில் 8½ ஒன்று என கூறலாம். படம், நாம் ஏற்கெனவே த்ரூஃபா, [DAY FOR NIGHT] மிருனாள் சென் செய்த, திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடியாய் எடுக்கப்பட்ட, “திரைப்படத்துக்குள் திரைப்படம்” வகையானது. படத்தின் இறுதிக் காட்சி ஆரம்பக் காட்சிக்கே வந்து நிற்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறும் சாலைப் போக்குவரத்து நெரிசல் காட்சி நிகழ்வுகள் அதியற்புதம். இதில் பெல்லனி ஒரு “FANTACY” காட்சியையும் புகுத்தியுள்ளார்.

ரோமானிய வரலாற்றை ஒட்டின பழங்கதை, அதற்கான பழங்கட்டிடங்கள் சார்ந்த நாவல் ஒன்றை பெட்ரோநியஸ் [PETRONIUS] என்பவர் எழுதினார். அந்நூலை அடிப்படையாய்க் கொண்டு தன் வரலாறு திரைப்படம் ஒன்றை பெல்லினி “சட்டைரிகன்” [SATYRICON] என்று 1969-ல் இயக்கினார். பெல்லினி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்து காட்டியவர் என்பது ரோமா, சட்டைரிகன் ஆகிய இரு படங்களில் தெரிகிறது. இருபடங்களுமே அவரது இளமைக் கால சம்பவங்களை ரோமானிய வரலாறு ஊடாக நையாண்டி வகையில் கொண்டுசெல்லப்பட்டவை. பெட்ரோ நியஸ்ஸின் நாவலை ரோமானி கொடுங்கோல் மன்னன் நீரோவின் காலத்திலிருந்த வாழ்க்கையை மறு வாசிப்பாக காட்சிரூபப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் வந்த மற்றொரு அரிய படம் “அமர்கார்டு” [AMARCORD].

1973-ல் பெல்லினியின் இயக்கத்தில் வெளிவந்த அமர்கார்டு சென்னைத் தியேட்டர் எங்காவது ஒன்றில் திரையிடப்படக்கூடும் என்று அ.ராமதுரை சொல்லிக்கொண்டிருந்தார். ராமதுரை சேப்பாக்கத்திலுள்ள ரெவின்யூ போர்டில் குமாஸ்தா. சர்வதேச திரைப்பட விழாவின்போது தினமணிகதிர் சார்பாக நான் போயிருந்தபோது, ஆனந்தவிகடன் சார்பாக அவர் வந்திருந்தார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாகவும் நன்றாகவும் பல வெகுஜன இதழ்களில் எழுதி வந்தவர் அ.ராமதுரை. இப்போது இல்லை. அவர்தான் பெல்லினி பற்றியும் அவரது அமர்கார்டு பற்றியும் எனக்கு அன்றே சொன்னவர். ஆனால் படம் சென்னையில் பொதுத் திரையிடல் பெறவேயில்லை.

“அமர்கார்டு” என்றால், “நான் நினைவு கூறுகிறேன்” என்றாகிறது. காலம்: முசோலினியின் பாசிஸகாலம். பெல்லினி தம் இளமைப் பொழுதுகளை நக்கல் நையாண்டித்தன காட்சிகள் வழியாக அன்றைய இத்தாலியின் உணர்ச்சிமிக்க ரசாபாச நிகழ்வுகள், பருவ வயதின் ஆசாபாசங்கள் மற்றும் அரசியல் அட்டூழியங்களைக் காட்சி நகர்வுகளால் கோர்த்தளித்திருக்கிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் நினா ரோட்டாவின் [NINA ROTTA] உயரிய இசைக்கோர்வை மறக்க முடியாதது. அவரது நினைவுச்சரம் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதையொன்றின் உருவைக் கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுக் கதைகளிலும் தொடர்ந்து அதே பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பதால் நமக்கு முழுமையான படமாய்க் கிடைக்கிறது. திருமணமாகாத 30 வயது அழகி கிராடிஸ்கா [GRADISCA] இளைஞன் டிட்டோ [TITTO] (இவன்தான் பெல்லினியின் ஆல்ட்டர் ஈகோ) இவனது அம்மா அப்பா, தாத்தா, மனநிலை பிறழ்ந்த 42 வயது மாமா டியோ [TEO] மற்றும் வழக்கறிஞர் ஆகியவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்கும் பாத்திரங்கள், வழக்கறிஞர் ஒருவித கதைசொல்லியாக வருபவர். ஆறு முக்கிய நிகழ்வுகளை கதை வடிவில் தம் நினைவுகளாய் காட்சிபடுத்தியிருக்கிறார் பெல்லினி. முரல் நினைவு கூறல் “சொக்கப்பனை எரித்தல்” அல்லது “போகி கொளுத்துதல்” என்று கொள்ளும் வகையில் இத்தாலிய கலாச்சாரத்தில் கிழட்டு சூனியக்காரியை கொளுத்தும் பிரம்மாண்டமானதொரு BONFIRE மிகவும் ரசிக்கத்தக்கது.

இங்கு கார்த்திகையின்போது பணஓலைக் கூடுகளை கோயில் முன்வைத்துக் கொளுத்தும் சொக்கப்பனை தீயிடலும், பொங்கலுக்கு முன் போகி கொளுத்துவதும், இத்தாலியில் வேறுவிதமாய் கொளுத்தப்பட்டு அட்டகாசமாய்க் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மைப்போலவே குளிர்கால BONFIRE தான் அங்கும் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கும் நாளன்று இரவில் “கடுங்குளிர் ஒழிந்தது” என்பதை “பழைய சூனியக்காரி எரித்துக் கொளுத்தும் வழக்கம் இத்தாலியில் இருந்து வருகிறது. அதற்காக எல்லாரும் தம் வீடுகளிலுள்ள உதவாத பழைய மரச்சாமான்கள், காகிதங்கள், துணி தினுசுகளையெல்லாம் மைதானத்தில் கொண்டு வந்து குவிப்பார்கள். கிழச்சூனியக்காரியின் உருவ பொம்மை ஒன்று, துணி, மரம், நாரால் செய்யப்பட்ட வண்டியில் கொண்டு வந்து, மைதானத்தில் குவித்துள்ள குப்பை கூளங்கள் மேல் நிறுத்தப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்படும். அப்பகுதி மக்கள் கண்டு களித்து போவர். இந்நிகழ்ச்சி அற்புதமாய் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிப் பருவ வாழ்க்கை நிகழ்வுகள் மிகவும் ரசாபாசமாய் போகிறது. வரலாறு, கணிதம், அறிவியல் வகுப்புகளும், பையன்களின் அட்டகாசமும், சிரிக்கச் செய்வன. கடைசியாக தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவ சங்கீர்த்தனம் பெறும் வயது வந்த பள்ளிப் பையன்களின் காட்சி பிரமாதமானது. பாதிரியார் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வரும் ஒவ்வொரு பையனையும் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி, “உன்னை நீ அந்தரங்கமாய் தொட்டுக் கொண்டாயா?” என்பது.

உடனே பையன், “இல்லவே இல்லை” என்று சொல்லவும் மன்னிப்பு பெற்றவனாய் போய்விடுவான். ஒருவன் தனக்குத்தானே தன்னை அந்தரங்கமாய்த் தொடுவதென்பது நாகரிகமான வார்த்தையில் “முஷ்டி மைதுனம் செய்து சுயஇன்பம் அடைந்தாயோ?” எனப்படும் கேள்வி. அதே சமயம் பையன்கள் நால்வர் [பெல்லினியும் ஒருவர்] ஒரு காரில் உட்கார்ந்து அவரவர்கள் தங்களுக்கு இஷ்டமான பெண்ணை கற்பித்து சுய இன்பம் அடையும் காட்சி ஆபாசம் என்பதைவிட நகைச்சுவை மிக்கதாகிவிடுகிறது. அதில் ஒருவருக்கொருவர் சண்டை வேறு. “நீ யாரை மனதில் நினைத்து செய்தாய்?” என்று ஒரு பையன் கேட்க, மற்றவன் தான் மனதில் வரித்த பெண்ணைச் சொல்ல, உடனே முன்னவன், “அது என்னோட ஆளே். அதையேண்டா நீ நினைச்சே?” என்று குஸ்திக்கு வரும் காட்சி.

பாசிஸ ஆட்சியை அமர்கார்டு சமூக நிகழ்வுகள் ரீதியாக கேலி செய்கிறது. கல்யாணச் சடங்கு கூட பாசிஸ முறையிலேயே நடத்தப்படுவதாய் பெல்லினி நைய்யாண்டி செய்கிறார்.

“பாசிஸ்ட் மணமகளுக்கும் பாசிஸ்ட் மணமகனுக்கும்” என்று கூறிவிட்டு சடங்கு தொடங்கும்.

“நான் பாசிஸ்ட் ரோசியை பாசிஸ்ட் மனைவியாக ஏற்கிறேன்” என பாசிஸ மணமகனும், “நானும் அவ்விதமே பாசிஸ்ட் ராபர்டோவை பாசிஸ்ட் கணவராய் ஏற்கிறேன்” என்று பாசிஸ மணப்பெண்ணும் பாசிஸ பாதிரியாரிடம் கூறுவார்கள்.

இறுதிக் காட்சிகளில் ஒன்று, பிரம்மாண்ட பனிமூட்டம், அப்போது ஒரு மயில் பறந்து வந்து தோகை விரிக்கும் காட்சி அருமை. ஒரு மனநல காப்பகத்திலிருந்து 42 வயது மனநோயாளி டியோ என்பவளை, அனுமதியுடன் வெளியில் அழைத்துப்போகும் நிகழ்வு சுவாரசியமானது.

கதாநாயகனுக்கு [பெல்லினி] மாமன் முறையாகும் 42 வயது. மிக உயரமான [TEO] மன நலக் குறைவால் காப்பகத்திலிருப்பவன். ஆணும் பெண்ணுமாய் கூட்டம். கிராமத்து பண்ணை வீட்டுக்குப் போகிற வழியில் மனநலக் காப்பகத்திலிருந்து அனுமதியுடன் டியோ மாமாவையும் [சமர்த்து] அழைத்துப் போகிறது. மற்றவர்கள் அங்குமிங்கும் திரிகையில், ஜேபியில் கற்களோடு டியோ ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்கு போய் கத்துகிறான். மற்றவர்கள் ஓடிவந்து அவனை கீழே இறங்கி வர கத்துகிறார்கள். அவன் இறங்காமல் உரக்க தொடர்ந்து பரிதாபமான தொனியில் கத்துகிறான்.

“எனக்கு ஒரு பெண் வேண்டும்” திரும்பத் திரும்ப அந்த மனநிலை பிறழ்ந்த டியோ தனக்கு ஒரு பெண் வேண்டும் என்பதையே பரிதாபமான தொனியில் கத்தி கேட்கிறான்.
“பைத்தியம் முத்தி விட்டதா?” என்று ஒருவர் கேட்கிறார்.

“இல்லை இப்போதான் தெளிந்திருக்கிறது” என்கிறார் ஒருவர்.

அப்போது டியோவின் தந்தை புன்சிரிப்போடு கூறுகிறார், “டியோவுக்கு 42 வயது. இயல்பான காம உணர்வுதான் அது”

அவனை இறங்கி வருமாறு கேட்டுவிட்டு ஏணி மூலம் ஒருவர் ஏறுகிறார். டியோ தன்னிடமுள்ள கற்களில் ஒன்றால் அவர் மண்டையை அடிக்கிறான். இன்னொருவர் ஏறுகிறார். அவரும் கல்லடிப்படுகிறார். கடைசியாக சொல்லியனுப்பி, மனநலகாப்பக வேன் வருகிறது. குள்ளமான நர்ஸ் ஒருத்தி ஏணியில் ஏறவும் டியோ மகிழ்ந்து இறங்கி வண்டியில் ஏறுகிறான்.
அமர்கோடு தன் இறுதி நினைவும் நிகழ்வுமாக 30 வயது அழகிய கிராடிஸ்கா [GRADISCA]வுக்கு நிகழும் திருமணத்தோடு முடிவுறுகிறது.

ஃபெடரிகோ ஃபெல்லினியின் நான்கு படங்கள் சிறந்த அயல்நாட்டுப் படங்கள் எனும் வரிசையில் பரிசு பெற்றவை. 1993-ல் அவர் வாழ்நாள் சாதனைக்கான ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது பெற்றார். பெல்லினி அதே ஆண்டு 1993-ல் ரோமில் காலமானார்.

இத்தாலிய சினிமா என்றதும் கூடவே வருவது அதன் நியோரியலிஸ படங்கள். விட்டோரியா டிசிகாவுக்குப் பிறகு வந்த இத்தாலிய இயக்குனர்கள் நியோரியலிஸத்தில் தொடங்கி, போகப்போக வேறு வகைமைகளைப் பிடித்துக்கொண்டனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மைகலாஞ்சலோ அண்டோனியோனி [MICHELANGELO ANTONIONI] 1912-ல் வட இத்தாலியிலுள்ள ஃ்பெர்ரரா [FERRARA] எனுமிடத்தில் பிறந்த அண்டோனியோனி இருபது திரைப்படங்கள் செய்தவர். BOLOGNA பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப்பட்டப்படிப்பில் முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்ற அண்டோனியோனி உள்ளூர் பத்திரிகையொன்றில் திரைப்பட விமர்சனம் செய்து வந்தவர். பிறகு ரோமுக்கு போய் “சோதனை வகை திரைப்பட மையம்”, [EXPERIMENTAL CINEMA CENTRE] என்ற திரைப்படக் கலை பள்ளியில் பயின்றவாறே “CINEMA MAGAZINE” இதழில் பணிபுரிந்தவர். இவை இரண்டுமே பாசிஸத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டவையென தீர்மானிக்கப்பட்டவை. 40களின் தொடக்கத்தில் ராபர்டோ ரோசெல்லினியுடன் திரைக்கதை எழுதுவதில் இணைந்திருக்கிறார். 1943-ல் அண்டோனியோனி தனது முதல் ஆவணப்படமான “THE PEOPLE OF THE PO” என்பதை எடுத்தளித்தார். அவர் இயக்கிய முதல் முழு நீள கதைத் திரைப்படம் “CRONACA DI UN AMORE” [CHRONICAL OF A LOVE] 1950-ல் வெளியானது.

இவரது துயர முடிவைக் கொண்ட“IL GRIDO” [THE OUTCRY] என்ற விறுவிறுப்பான படம் 1957-ல் வெளிவந்தது. ஆல்டோ [ALDO] மனைவியை இழந்த ஆறுவயது சிறுமிக்குத் தந்தை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மெகானிக். ஆல்டோ இர்மா [IRMA] என்ற திருமணமானவளை ஏழு வருடமாய் நேசிக்கிறான். அவள் கணவன் வேறு நாட்டில் மரணமுறுவதையடுத்து இர்மா மனம் மாறி விடுகிறாள். ஆல்டோவின் உறவை நிராகரிக்கிறாள். ஆல்டோ வெறுப்பில் வேலையை உதறிவிட்டு, மகளுடன் வேறொரு ஊருக்குப் போனவன் பெட்ரோல் பங்கு வைத்திருக்கும் விதவையுடன் வாழ்கிறான். விதவைக்கு ஆல்டோவின் பெண் ஒரு தலைவலி. அவன், தன் பெண்ணை, தங்கிப்படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டு, அங்கிருந்து வேறு இடம் போய் ஒரு விலை மாதுவுடன் இருந்து பார்த்துவிட்டு, சதா நினைவை அலைக்கழிக்கும் இர்மாவைப் பார்க்கப் போகிறான். ஒரு குழந்தையோடு அவளிருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து உயரமான இடத்திலிருந்து விழுந்து சாகிறான். இப்படம் ஒருபோதும் அலுப்பேற்படாத வண்ணம் இயக்கப்பட்டுள்ளது.

அண்டோனியோனி 1966-ல் இங்கிலாந்தில் “ப்ளோ அப்” [BLOW UP] என்ற வண்ணப்படம் செய்தார். இப்படம் சென்னை சஃபையர் வளாகத்து புளூடயமண்ட் தியேட்டரில் திரையிடப்பட்டது. மிகவும் பேசப்பட்ட படம். ஜுலியோ கோர்டஸரர் [JULIO CORTAZAR] என்பவரின் சிறுகதையைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ப்ளோ அப் மென்மையானதொரு திகில் வகைப்படம். அண்டோனியோனியின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் “L`AVVENURA” [THE ADVENTURE] [1960]வும்

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்ஒரு மர்மத்தைக் கொண்டதாகவேபடும். 1960-ல் லவெஞ்சுரா கேன்ஸ் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டபோது, அங்கு அண்டோனியோனியை வெறுத்துவந்த கும்பலால் கத்தி, விசிலடித்து ஆரவாரத்து எதிர்த்தனர். ஆனால் அங்கு வந்திருந்த சக்திமிக்க திரைப்பட விமர்சகர்களும் திரைப்பட இயக்குனர்களும் எதிர்ப்பாளர்களின் செயலை மறுத்து, லவெஞ்சுரா கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட படங்களிலேயே தலைசிறந்ததும் முக்கியமானதுமென்றும் சான்றிதழ் எழுதி கையெழுத்திட்டு வெளியிட்டனர். இது நடந்து இரு ஆண்டுகளுக்குள் பிரிட்டனின் புகழ்பெற்ற தர நிர்ணயப் பத்திரிகையான “்SIGHT AND COUND”-ன் சர்வதேச திரைப்பட விமர்சகக் குழுவினரால், அண்டோனியோனியின் LAVVENTURA படம் அதுவரை வெளிவந்த எல்லா படங்களிலும் இரண்டாவது மகத்தான படம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

பணவசதி கொண்ட ஒரு சிறிய ரோமானிய குழு ஓர் உல்லாச கப்பலிலேறி சிசிலியிலிருந்து பயணிக்கையில் ஆளரவமற்ற பாறைகள் நிறைந்த தீவில் இறங்கி பகற்பொழுதைக் கழிக்க விரும்பி சுற்றி வருகையில் அன்னா என்பவள் காணாமற் போகிறாள். அந்தப்பெண் கப்பலில் வந்த தன் புத்திசாலி சினேகிதி கிளாடியாவிடம் [CLAUDIA] தனக்கும் தன் கட்டிடக் கலை வல்லுன காதலனுக்கும் சரி வரவில்லையென கூறியிருக்கிறாள். தான் ஒரு சுறாமீன் போனதைக் கண்டதாக குளிக்கையில் பொய் சொல்லி பயமுறுத்தியுமிருக்கிறாள். இதன்பின் இருபத்தைந்து நிமிடங்களில் அன்னா காணாமற் போகிறான். ஒரு நிமிடம்விட்டு உண்மையிலேயே நாம் சுறாமீன் ஒன்றைப் பார்ப்பதோடு, நமது பார்வையில் சில கணங்களுக்கே பட்டு மறைகிறது ஒரு படகு. படகு சில வினாடிகளுக்கு தெரிந்து தீவைத் தாண்டி மறைகிறது.

அன்னா என்ன ஆனாள், அவளுக்கு என்னவாயிற்று என்பது எதையும் அண்டோனியோனி படத்தில் இறுதிவரை வெளியிடவேயில்லை. பீட்டர் வயர் [PETER WEIR] இயக்கிய அரிய படமான “PICNIC AT HANGING ROCK” என்ற படத்தின் மர்மமும் கூடவே நினைவுக்கு வருகிறது. பிக்னிக் போன பெண்கள் பள்ளி மாணவிகளில் ஒரு பெண் மர்மமாய் காணமற்போகிறாள். இறுதி வரை அந்த மர்மம் சொல்லப்படாமல் நம்முடைய யூகத்துக்கே விடப்படுகிறது. அண்டோனியோனி, அன்னா என்ன ஆனாள் என்பதைச் சொல்லாததுதான் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கலாட்டா செய்தது.

அன்னாவின் சினேகிதி க்ளாடியாவும் அன்னாவின் காதலன் சான்ட்ரோவும் [SANDRO] அன்னாவை தீவில் தேடுகையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த உறவு, உடலுறவு வரை செல்லுகையில் கிளாடியா குற்ற உணர்வால் வதைபடுகிறாள். தொலைந்து போன ஒருத்தியின் காதலனுக்கும், தொலைந்து போனவளைத் தேட முற்பட்ட அவளது சினேகிதிக்கும் ஏற்படும் காதல் உறவோடு நாம் சமாதானமடைவதில்லை. அந்த மறைவின் மர்மம் தீர்க்கப்படாததோடு, அண்டோனியோனியை மீண்டும் இங்கிலாந்தில் செய்த “BLOW UP” படத்திலும் அவ்விதமான அவிழ்க்கப்படாத மர்மத்தை நீட்டவும் செய்கிறது.

அதே சமயம் ப்ளோஅப் லவஞ்சுராவின் தீர்க்கப்படாத மர்மத்துக்கும் அப்பால் அதாவது அந்த மர்ம உணர்வுக்கான வெளியையும் தாண்டிச் செல்லுகிறது எனலாம். விரிவான போலீஸ் புலனாய்வு, சோதனைகளையும் கடந்து கதாநாயகனான புகைப்படக் கலைஞனின் மனவெளிக்கும் வெளியே அந்த மர்மம் தன் பூடக இருப்பை உ ணர்த்துகிறதா என்பது நமக்கான பரிதவிப்பு என்றால் அதையே அண்டோனியோனி மிக அழகாக படத்தின் இறுதிக் காட்சியில் மற்றொரு பூடக முடிச்சவிழ்ப்பாக மிக நாசுக்காக காட்டிச் செல்லுகிறார்.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

மைய பாத்திரமான தாமஸ் [DAVID HEMMINGS என்ற நடிகர்] ஒரு ஃபாஷன் புகைப்படக் கலைஞர். அவன் புகைப்படக் காட்சிகள் கொண்ட காஃபி டேபுள் புத்தகமொன்றைச் செய்ய மேற்கொண்ட நிலையில், ஒருநாள் ஆட்கள் இல்லாத பூங்காவுக்குள் நுழைந்து தன் நூலுக்கான இறுதி வடிவின் சில காட்சிகளை அங்கு படமெடுக்கிறான். தாமஸ், வயதான ஒரு மனிதனும், இளம் பெண் ஒருத்தியும் அங்கு காதலர்களாய் சுற்றுவதைக் கண்டு படமெடுத்து விடுகிறான். அது வேறுவிதமாகிறது. அவனைத் தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் அவனிடம் சண்டை போட்டு அந்த படத்தைக் கொடுக்கும்படி கேட்கிறாள். தாமஸ் உள்ளே போய் வேறொரு நெகட்டிவ் சுருளைத் தந்துவிட்டு பூங்காவில் எடுத்த படச்சுருளின் நெகட்டிவை மறைத்து விடுகிறான். பிறகு அந்த படச் சுருளை டார்க் ரூமில் கழுவிப் பார்க்கையில் புதர் ஒன்றில் கை ஒன்று யாரையோ குறி பார்த்து துப்பாக்கியொன்றை நீட்டினபடியிருக்கிறது. அடுத்த சட்டகத்தை மேலும் பெரிதாக்கிப் பார்க்கிறான். புகைப்படத்தை அதன் அளவுக்கு மேல் பெரிதாகுவதை “BLOW UP” என்பர். இங்கு படத்தை ப்ளோ அப் செய்வதோடு, ஒரு விஷயமும் ப்ளோ அப் செய்யப்படுகிறது.

அண்டோனியோனி அற்புதமான தலைப்பை அளித்துள்ளார். அடுத்த படம், புதர் அருகே ஒரு மனிதன் கிடப்பது போல. மறுநாள் தாமஸ் அங்கே போய் பார்த்தபோது, ஒரு சடலம் கிடக்கிறது. ரத்தக்கறை. உடனே இதை போலீசிடம் அவன் கூறவும், அவர்கள் அவனோடு அங்கு போய்ப் பார்க்க அங்கே எதுவுமே இல்லை. போலீசார் அவனைத் திட்டி எச்சரித்து அனுப்புகின்றனர். அவனுக்கு குழப்பம் தீரவில்லை. ஒரு வண்டியிலிருந்து கூட்டமாய் ஆணும் பெண்ணும் இறங்கி இரு குழுக்களாக பிரிந்து பந்து விளையாடும் காலி மைதானத்தை அடைகிறார்கள். வாலிபால் விளையாட்டடைத் தொடங்குகின்றனர். வலை கிடையாது, பந்தும் கிடையாது. ஆனால் சகல ஆட்ட நுணுக்கங்களோடும் ஆடுகிறார்கள்.

“லவ் ஆல்”, பந்தை அடிப்பது போல நெட்டுக்கு மேலே போகுமாறு ஒருவன் சர்வீஸ் அடிக்க, மறு அணியில் ஒருவன் திருப்பியடிக்கிறான். இதை தாமஸ் தள்ளி நின்று பார்க்கையில், பந்து கோட்டுக்கு வெளியில் போய் விழுந்ததாய், “அவுட்” என்று கத்துகிறார்கள். ஒருவன் தாமஸைப் பார்த்து, “பால் ப்ளீஸ்”, என்கிறான் புரிந்து கொண்டவனாய் தாமஸும் தரையில் குனிந்து பந்தை எடுப்பது போல் பாவனை செய்து, அதை அவர்களை நோக்கி வீசுவது போல பாவனை செய்ய, படமும் முடிகிறது.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்
JACK NICHOLSON

மைகலேஞ்சலோ அண்டோனியோனியின் மற்றொரு அற்புத படம் “பயணி” [PASSENGER] பயணியாக புகழ்பெற்ற நடிகர். ஜாக் நிக்கல் சன் [JACK NICHOLSON] நடிக்கிறார். டேவிட் லோகே [DAVID LOCKE] ஒரு தொலைக்காட்சி நிருபர். வட ஆப்ரிக்காவின் மணல் மேலிட்ட கிராமத்தில் வந்தவன், ஒரு விடுதியில் அறை தேடுகிறான். இன்னொரு பயணியோடு சேர்ந்து தங்க ஒப்புக்கொண்டு அறைக்குப் போனால், அந்த பயணி இறந்து கிடக்கிறான். அவனது டைரியை எடுத்துப் படித்துவிட்டு இறந்தவன் முகத்தை கவனிக்கிறான். ஒரே அச்சில் வார்த்தாற்போல, – தமிழ் சினிமாவின் சகல காலந்தோரும் நடிகர்கள் நடிப்பதற்கேற்றபடி கற்பிக்கப்பட்ட இரட்டை வேடத்துக்கேற்ப – இருக்கவும் நிருபர் இறந்தவனாக மாறிக்கொள்ளுகிறான். T.V நிருபர் இறந்துபோக, இறந்தவன் உயிரோடு நடமாடுகிறான். அதற்குமேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள திணறுகிறான். இறந்தவனுக்கும் பயங்கரவாத கும்பலுக்குமான தொடர்பு, இறந்தவனின் காதலி என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறான். வெளியில் வந்தவுடனே அவனைக் குறி வைத்து தாக்க பின் தொடரும் நபர்கள். இறுதியில் இவனும் சோக முடிவை மேற்கொள்ளுவதாக படம் முடிகிறது. மைகலேஞ்சலோ அண்டோனியோனி வாழ்ந்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது உட்பட நிறைய விருதுகளையும் பெற்றவர். அண்டோனியோனி தமது 94ம் வயதில் 2007-ல் காலமானார்.

(இத்தாலிய சினிமா முடிவுற்றது)

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

தொடர் 23: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

இத்தாலி – 1

நமது பயாஸ்கோப்காரனின் சினிமா பயணம் என்பது யுலிசெஸ்ஸின் கடற்பயணம் போல. பயாஸ்கோப்காரன் ஐரோப்பிய சினிமாவின் முக்கிய திரைப்படங்களைத் தந்திருக்கும் உலகின் முக்கிய திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலியில் வந்து இறங்கியிருக்கான். இந்திய திரைப்பட மேதைகள் ஒரு சிலருக்கு உந்து சக்தியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ள உலகத் திரைப்படங்கள் சிலதை உருவாக்கிய புகழ்பெற்ற திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலி இரண்டாம் உலகப் போரின் பாதிப்பும் தாக்கமும் பெற்ற இவர்களின் மகத்தான படைப்புகளைக் கொண்டது. போரின் அவலத்தை அப்பட்டமாயும் அங்கதமாயும் அழகியல் நயத்தோடும் சொல்லுபவை. இத்தாலிய சினிமா, உலக சினிமாவில் மிக முக்கிய பங்காற்றியதில் சில மேதைகளைக் கொண்டது. ராபர்டோ ரோசலினி, விட்டோரியா டி சிகா, லூசினோ விஸ்கோண்டி, பியர் பவாலோ பசோலினி ஃபெடரிகோ ஃபெல்லினி, கைலேஞ்சலோ அண்டோனியோனி, பெர்னார்டோ பெர்டு லுஸ்ஸி மற்றும் ஜிசிபே டோர்னடூர் என்ற இயக்குனர் பெயர் பட்டியல் முக்கியமானது. இத்தாலிய சினிமா “நியோ ரியலிஸம்” என்ற திரைப்பட கோட்பாட்டை கண்டெடுத்தது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

ராபர்டோ ரோசெல்லினி (ROBERTO ROSSELLIN) இத்தாலிய நியோரியலிஸ சினிமாவின் தந்தையாக குறிப்பிடப்படுவர். 1954-ல் ரோசெல்லினி, “நான் நியோரியலிஸத்தின் தந்தையில்லை”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை முன் வைத்த முரண்பாடு, ரோசெல்லினியின் கலைக்கோட்பாட்டிலிருந்து நேரடியாக எழுப்பப்பட்டதென்று கருதப்படுகிறது. நியோ ரியலிஸம் என்பது திரைப்படத்தில், “ஸ்டைலை” நிராகரித்த ஒரு புதிய ஸ்டைல்! இந்த திரைப்பட ஆக்க வகைமையை ரோசெல்லினி இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் பொருளாதார நெருக்கடி எதிரிகள் ஆக்கிரமிப்பு, வேலையாட்கள் பஞ்சம் என்பனவற்றின் இடையில் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு படத்தில் பங்கு பெறும் நடிகர்களும் படப்பிடிப்புக்கான இடங்களுமே, அந்தப் படத்தையும் அதன் இயக்குனரையும் அந்தப் படத்தை உருவாக்குபவையாக இருக்க வைத்தன. ஸ்டூடியோக்கள் தவிர்க்கப்பட்டு, கதை நடக்கும் நிஜமான அசல் இடத்திலேயே படம் எடுக்கப்படுவதோடு, தொழில் ரீதியான நடிகர்களோடு, அந்தந்தப் பகுதியில் வாழ்ந்து நடமாடும் மக்களையே படத்தில் நடிக்கச் செய்வது. இது நியோ ரியாலினி வகை திரைப்பட ஆக்கத்துக்கான எளிமையான விளக்கம். “WE MUST KNOW THINGS OUTSIDE OF ANY IDEOLOGY’’, என்று தன் திரைப்படக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார் ரோசெல்லினி.

ரோசெல்லினி 1906-ல் ரோமில் பிறந்தவர். இன்றைக்கு நாம் சிக்கியிருக்கும், “கொரோனா”வைப் போன்ற பேரழிவுப் பெருந்தொற்று நோயாக அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பரவிய “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்ற நோயால் ரோசெல்லினி இருபது மாதங்கள் படுத்த படுக்கையாயிருந்து உயிர் பிழைத்தவர். இவரோடு இவர் சகோதரர் ரென்ஜோ ரோசெல்லினியும் [RENZO ROSSELLINI] இணைந்து நாடகங்கள் போட்டனர். ரென்ஜோ பின்னாளில் ராபர்டோவின் படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பாளராகயிருந்து வந்தவர்.

ரோசெல்லினி “ROME OPEN CITY” [ROMA CITTA APERTA] படத்தை 1945-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இத்தாலியை ஜெர்மன் ராணுவம் 1945-ல் சூழ்ந்து ரோம் நகரை ஆக்கிரமித்தவுடனே இவர் இப்படத்தை செய்து முடித்தார். ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை அவற்றில் பெங்கு பெற்ற ரோமானிய பொது மக்களின் அவலத்தை அவர்களைக் கொண்டே – கிட்டத்தட்ட ஓர் ஆவணப் படம் போல செய்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய மையமாயிருப்பது, ஒன்பது மாத ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பில், அதை எதிர்த்து ரகசியமாய் போராடிய கம்யூனிஸ்டு “எதிர்ப்பாளர்”களின் கதை.

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ரோம் நகரம் ஜெர்மன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த மிக நெருக்கடி மிக்க கட்டம். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு போராட்டம். கடுமையான உணவுப் பங்கீடு அமுலில் வருகையில் மக்கள் ரொட்டிக்கு வரிசையில் நிற்கும் காட்சி. நிலக்கரி லாரிகளிலிருந்து சாலையில் சிந்தும் கரியை பொறுக்கும் சிறுவர்கள். அவர்களையே, அப்படியப்படியே அந்தந்த இடங்களிலேயே இப்படம் படமாக்கப்பட்டது. இப்படம் உலகின் முதல் நியோ ரியலிஸ திரைப்படம். அதுவரை, சர்வாதிகாரி முஸோலினி காலத்து “வெள்ளை டெலிபோன் திரைப்படங்கள்” எனும் 1940களின் தொடக்க கால மோகத்தை உடைத்து, கருப்பு டெலிபோன்களை படமாக்கிய முதல் படமும் இதுதான். முஸோலினிக்கு வெள்ளை டெலிபோன் கருவிகளின் மேல் மோகமாதலால், அன்றைய திரைப்படங்களில் இடம் பெற்ற தொலைப்பேசி கருவிகளும் வெள்ளை நிறத்தாலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்
ANNA MAGNANI

ரோமை நாஜிகள் ஆக்கிரமித்ததை, நகர ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுன் கம்யூனிஸ்டுகள் அதிகம். கம்யூனிஸ்ட் தலைவன் ஃபிரான்சிஸ்கோ என்பவரின் லித்தோகிராஃபிக் அச்சுக்கூடம் இடம் பெற்றிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மான்ஃபிரெடி எனும் எதிர்ப்பாளர் கம்யூனிஸ்ட் தலைவன் ஒளிந்திருக்கிறான். அதை சந்தேகித்த ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் திடீரென போய் சோதிக்கிறது. மான்ஃபிரடி தப்பித்து வேறொரு பெண் வீட்டில் தஞ்சம் புகுகிறான். அச்சுக்கூட உரிமையாளர் ஃபிரான்சிஸ்கோவின் மனைவி பினாவும், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்ட தேவாலய பாதிரியார் பின் பியட்ரோவும் புரட்சியாளருக்கு உதவி வருகின்றனர். இறுதி வெற்றி ரோம் நகருக்கு கிடைக்கும் தருணத்தில் கம்யூனிஸ்ட் மான்ஃபிரடி பிடிபட்டு மரண தண்டனை பெறுகிறான். அவனுக்கு உதவிய பினா, கர்ப்பிணி கோலத்தில் நாஜிகளால் வீதியில் சுட்டுக் கொல்லப்படுகிறாள். பாதிரியாரையும் சுட்டுக் கொல்லுகின்றனர். பினா பாத்திரத்தில் அன்னா மாக்னானியும் (ANNA MAGNANI), மான்ஃபிரடியாக மார்செல்லோ பாக்ளியரோவும் (MARCELLO PAGLIERO), பாதிரியாராக அல்டோ ஃபாப்ரிஜியும் (ALDO FABRIZI) தொழில்முறை திறனோடு நடித்திருக்கினற்னர். மற்ற பாத்திரங்களை ஏற்ற உப – உபரி நடிக நடிகைகள் யாவருமே நடிகர்களே அல்ல. இப்படம் எடுக்கப்பட்ட அவ்வந்த பகுதிகளிலுள்ள ஜனங்களே நடித்திருக்கிறார்கள். இந்த வகையான புதிய யதார்த்த வழி படமாக்கலை கடக் மற்றும் மிரினாள் சென்னும் தங்கள் சினிமாக்கு பின்பற்றியிருக்கிறார்கள். ரோம் ஓப்பன் சிடிகேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு PALME DOR விருது பெற்றது.

இவ்வகையான நியோ ரியலினி திரைப்பட முறை உலகெங்கும் பின்பற்றப்பட்டது. பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவை காமிரா கலைஞர் உபால்டோ அராடா  [UBALDO ARATA] செய்திருக்கிறார்.

ரோசெல்லின் அடுத்தடுத்து செய்த இரு படங்களும் ஓபன் சிடி போலவே நியோரியலிஸ் படங்கள். PAISA [1946]  என்ற படம் யுத்தகால இத்தாலி வாழ்க்கையை ஆறு பகுதிகளில் ஆறு கதைகளில் சொல்லும் படம். ஆறாவது பகுதி அற்புதமானது. மூன்றாவது GERMANY, YEAR ZERO [1947] என்ற படம் ஒரு ஜெர்மனிய பையன் குண்டு வீச்சால் படுமோசமாய் நாசமாகி சிதிலமடைந்த பெர்லின் நகரத்துக்குள் நடமாடும் அனுபவம் பற்றியது. இம் மூன்று திரைப்படங்களும் ராபர்டோ ரோசெல்லினியின் “யுத்த கால முப்படங்கள்”, என்று அழைக்கப்படுபவை. ரோசெல்லினிக்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச நடிகை ஒருவரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அன்பார்ந்த திரு ரோசெல்லினி, உங்கள் ஓபன்சிடி, பெய்சா ஆகிய திரைப்படங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு, நன்கு ஆங்கிலம் பேசும், ஜெர்மன் மொழியை மறக்காத, ஃபிரெஞ்சு மொழியில் பேசத் திணறும் இத்தாலிய மொழியறியாத ஸ்வீடிஷ் நடிகை ஒருத்தி தேவையிருக்குமானால் சொல்லுங்கள், நான் உடனே வந்து உங்கள் திரைப்படம் ஒன்றில் நடிக்கத் தயாராயிருக்கிறேன். இப்படிக்கு, இங்கிரிட் பெர்க்மன்.” என்றிருந்தது. அடுத்து ரோசெல்லினி இன்கிரிட் பெர்க்மனை கதாநாயகியாய் வைத்து  STROMBOLI. LAND OF GOD (1949) எனும் படத்தை இயக்கி வெளியிட்டார்.

இப்படத்தைத் தொடர்ந்து இன்கிரிட் பெர்க்மன் ரோசெல்லியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்ததோடு இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த உறவு 1956 வரை நீடித்தது. 1956-ல் இன்கிரிட் பெர்க்மன் அமெரிக்க ஹாலிவுட்டின் அழைப்பை ஏற்று அங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தார். 1956-ல் பிரம்மாண்டமான ANASTASIA [1956] என்ற படத்தை YUL BRYNER–வுடன் இணைந்து நடித்தார். ரஷ்ய புரட்சிக்குப் பின் ஜார் மன்னனின் உறவினர்கள் ஃபிரான்சுக்கு தப்பியோடி மறைந்திருந்தனர். அதில் முக்கியமான பெண் அனாஸ்தாசியா. அவர்களைத் தேடிப் பிடிப்பதில் போல்ஷெவிக்குகள் அலைகின்றனர். போல்ஷெவிக் அதிகாரியாக யூல் பிரின்னரும் அவருக்குப்  போக்குக் காட்டும் அனாஸ்தாசியாவாக இன்கிரிட் பெர்க்மனும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இப்படத்தோடு பெர்க்மனுக்கும் ரோசெல்லினிக்குமான உறவு முடிந்து போனது. இப்படத்தில் நடித்தமைக்காக பெர்க்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார். ரோசெல்லினி 1959-ல் INDIA என்ற மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்தளித்தார். ராபர்டோ ரோசெல்லினி 1977-ல் காலமானார். காலமாகும் தருணத்தில் ஏசு கிறிஸ்துவின் கதையை MESSIA என்ற தலைப்பில் படமாக்கினார். அவர் மறைவுக்குப் பிறகு 1978-ல் இப்படம் வெளி வந்தது.

ராபர்டோ ரோசெல்லினி தன் முதல் காதல் மனைவியிலிருந்து கடைசி மனைவி வரை எல்லோரோடும் இறுதி வரை தொடர்பிலிருந்தே வந்திருப்பவர். அவரது மரணத்தின் போது நல்லடக்கம் நடக்கையில் இறுதி மரியாதை செலுத்த அந்த எல்லா காதலிகளும் மனைவிகளும் வந்திருந்து மலர் வைத்துச் சென்ற நிகழ்வு மிக அரிதானது. இந்த நிகழ்வையே ஆரம்பக் காட்சியாக கொண்ட ஒரு ஃபிரெஞ்சு புதிய அலை படத்தை தயாரித்து இயக்கியவர் ஃபிரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] படம் “THE MAN WHO LOVED WOMEN”.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

நியோரியலிஸ திரைப்படங்களில் மற்றொரு மைல்கல் விட்டோரியா டிசிகா இயக்கிய மிக மிக புகழ் பெற்றதும் உலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுமான படம் “THE BICYLE THIEVES” விட்டோரியா டி சிகாவின் [VITTORIO DE SICA] புகழ்பாடும் இப்படத்தை பயாஸ்கோப்காரன் மிகவும் காலம் கடந்தே பார்க்க நேரிட்டது. இதற்கு முன்பாக டி சிகாவை நடிகராக சில படங்களில் பார்த்த அனுபவமுண்டு. பிறகு அவர் இயக்கிய பல்வேறு சிறப்பான படங்களைப் பார்த்த பிறகுதான் “சைக்கிள் திருடர்கள்” படத்தையும் அவரது பிற இத்தாலி படங்களையும் பார்க்க நேரிட்டது. சேலம் நியூ சினிமாவில் வெளியான “A FAREWELL TO ARMS” (1957) வண்ணப் படம் அவற்றில் ஒன்று. இந்த புகழ்பெற்ற அமெரிக்க நாவல் அமெரிக்க எழுத்தாளரான ஹெமிங்வே எழுதியது. 1932-ல் கேரி கூப்பர் நடித்த கருப்பு வெள்ளைப் படம் ஒன்றிருக்கிறது.

1957-ன் படத்தில் ராக் ஹட்சன் நடித்திருப்பார் A FAREWELL TO ARMS – நாவல், முதல் உலகப் போர் பின்னணியில் இராணுவ செஞ்சிலுவை வண்டியின் ஓட்டுனருக்கும் இராணுவ நர்ஸ் ஒருத்திக்குமான சோக முடிவைக் கொண்ட காதல். போர் காட்சிகள், தியாகம் எல்லாம் உள்ளிட்டது. கதையில் ஓர் இராணுவ அறுவை சிகிச்சை மருத்துவரின் பாகம், பாத்திரம் மிக முக்கியமானது. அவரை எதிரிகள் குற்றவாளியாக்கி சுட்டுக் கொன்று விடுவார்கள். அந்த உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று அதி சிறப்பாக நடித்தவர் விட்டோரியா டி சிகா. டி சிகாவை நமது பயாஸ்கோப்காரன் மேலும் சில படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க நேரிட்டது. [SHOES OF THE FISHERMAN]. இச்சமயம் அவரது அற்புத இயக்கத்தில் உருவான இத்தாலிய படம் “LA CIOCIARA – (1960)” [TWO WOMEN] ஓடியன் திரையரங்கில் இரண்டாவது ஓட்டமாய் திரையிடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பர்டோ மொரேவியா [ALBERTO MORAVIO] எழுதிய நாவலைக் கொண்டு
டி சிகா செய்த உயரிய படம். லா சியோசியாரா போரின் அவலம், மனித உறவுகள், தாய் – மகள் பாசம் என்பனவற்றைக் கொண்டது. இது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு “TWO WOMEN” என்று வெளியானது.

1901-ல் இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த டி சிகா தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்ற ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர். 17-வது வயதிலேயே சினிமாவில் நடித்தவர். அவரது வசீகர தோற்றம் விரைவில் புகழ் பெற்ற கதாநாயக நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அவருக்கும் திரைப்பட எழுத்தாளர் சிசேர் ஸவாட்டினிக்குமான
[CESARE ZAVATTINI]  நெருங்கிய உறவு டி சிகாவை உயர்ந்த திரைப்பட இயக்குனராக்கியது. ஸவாட்டினியுடன் இணைந்து 1946-ல் “ஷு ஷைன்” [SHOE SHINE] [ BICYCLE THIEVES] 1948 இரு படங்களையும் செய்தார். சைக்கிள் திருடர்களின் நியோ ரியலினி அதிசயம். இந்தியாவில் ஒரு சத்யஜித் ரே தோன்றுவதற்கும் வழி காட்டியாயிற்று. இவ்விரு படங்களும் இரண்டாம் உலக யுத்த கொடுமையையடுத்து இத்தாலியை வாட்டிய வறுமையைச் செல்லுபவை. பைசைகிள் தீவ்ஸ் படம், சிறப்பு ஆஸ்கார் விருதைப் பெற்றது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

யுத்தத்துக்குப் பிந்தைய ரோமில் வேலையற்று உழலும் அன்டோனியோ ரிக்குக்கு [ANTONIO RICCI] சினிமா சுவரொட்டி ஒட்டும் வேலை கிடைக்கிறது. அதற்கு சைக்கிள் அவசியம். சைக்கிள் இருந்தால் தான் வேலை தருவோம் என்கிறார்கள். மனைவி வீட்டு பெட்ஷீட்டுகளை அடகு வைத்து பழைய சைக்கிள் ஒன்றை வாங்கித் தருகிறாள். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் காட்சியே டி சிகாவின் கலை மேன்மையோடு அரசியல் – சமூக எதிர்கால சிந்தனையும் உள்ளிட்டதாயிருக்கும். அது பெரிய சுவரொட்டி. சுவரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து ஒட்டப்படும் அச்சுவரொட்டி ஒரு அமெரிக்க ஹாலிவுட் படத்துக்கானது. சுவரொட்டி முழுக்க கவர்ச்சியான நிலையில் ரீடா ஹேவர்த்தின் படம் கொண்டது. இத்தாலியை ஹாலிவுட் சினிமா ஆக்கிரமித்திருப்பதை டி சிகா இந்தக் காட்சி வழியே தெரிவிக்கிறார். முதல் நாள் போஸ்டரை ஏணியில் ஏறி ஒட்டி விட்டு இறங்கிக் கீழே வந்து பார்த்தால் சைக்கிள் காணோம். அண்டோனியோவின் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விடுகிறார்கள். தனது மகன் – சிறுவன் ப்ரூனோவுடன் [BRUND] திருடுபோன தன் சைக்கிளைத் தேடி அண்டோனியோ ஊரெங்கும் அலைகிறான். பழைய பொருட்கள் – திருட்டு சாமான்களை வாங்கி விற்கும் குஜிலி, அடகுக் கடைகள் எங்கும் பார்த்தாகி விட்டது. பார்க்கும் பழைய சைக்கிள்கள் எல்லாமே களவு போன தன் சைக்கிள் போலவே இருக்கிறது. அப்படியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும் வகையில் டி சிகா, ஆகா! என்னமாய் காட்சிகளை அடுத்தடுத்து கோர்த்திருக்கிறார். ஒரு சைக்கிள் இவர்களுடையது போலவேயிருக்கிறதால், “இதுதான் நம் சைக்கிள்” என்று ப்ரூனோ கூறவும் அதை எடுக்க முயற்சித்து மாட்டிக் கொள்ளும் காட்சி நமது இரக்கத்தைப் பெறுகிறது.

சைக்கிள் போனதால் கிடைத்த வேலையும் கோவிந்தா! இந்த அலைச்சலில் ரோமானிய சமூகத்தின் பல போருக்குப் பிந்தைய அவலங்களை புரையோடின வகுப்பு பேதங்களை சந்திக்கிறான் அண்டோனியோ. இந்த மகத்தான இத்தாலிய நியோரியலிஸ் படம் விட்டோரியா டி சிகாவை புகழின் சிகரத்துக்கு இட்டுச் சென்றது. தந்தைக்கும் மகனுக்குமுள்ள மாபெரும் பரஸ்பர பரிவை. அன்புறவை, பாசத்தை இப்படம் அபரிதமாகச் சொல்லுகிறது. இப்படத்தில் மிருதுவாய் இழையோடும் அங்கதம் மற்றும் எள்ளல் கூடிய சமூக நகைச்சுவையில் சாப்ளினையும் பார்க்க முடிகிறது. டி சிகாவின் உயரிய இயக்கத்தில் பக்க பலமாய் இணைந்திருப்பது அண்டோனியோவா நடிக்கும் லாம்பர்டோ மாக்கியோரானி [LAMBERTO MAGGFORANI] மற்றும் சிறுவன் ப்ரூனோவாக நடிக்கும் என்ஸோ ஸ்மீலாலா [ENZO STALOLA]. என்ஸோ ஸ்டலோபுலா நடிகனல்ல. அங்கிருந்த பையன். இருவரின் அதி உயர்ந்த நடிப்பும், அலெஸ்ஸாண்ட்ரோவின் இசையும், கார்லோ மாண்டுவோரியின் [CARLO MONTUORI] பிரமாத ஒளிப்பதிவும் மிகச் சிறந்த அயல் மொழிக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தன.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

இடையில் வேறு படங்களைச் செய்து விட்டு விட்டோ ரியா டிசிகா 1960-ல் “LA CIOCIARA” [TWO WOMEN] என்ற மீண்டும் நியோரியலிஸ பாணியில் ஒரு படத்தை இயக்கினார். இரண்டாம் உலகப் போர் முடியுந்தருவாயில் ஜெர்மனிய படையின் தாக்குதல் ஒருபுறம், நேச நாட்டுப் படைகளின் எதிர் தாக்குதல் மறுபுறம் என்றிருக்கையில் முஸோலியின் கைதுக்குப் பின் இத்தாலிய ராணுவம் சீர் குலைகிறது. இந்த சூழலில் செஸ்ரா எனும் இளம் விதவை கணவனின் கடையைக் கவனித்துக் கொண்டு தன் பதிமூன்று வயது மகள் ரோ செட்டாவுடன் வாழ்கிறாள். குண்டு மாரி பொழியும் நிலையில் கடை மூடப்படுவதும் திறப்பதுமாய். ரோமை விட்டு வெளியேறி மலைப்பகுதியிலிருக்கும், சொந்த ஊருக்கு மகளோடு போய் விட முடிவு செய்கிறாள் செஸீரா. தன் கடையை பார்த்துக் கொள்ளுமாறு கணவனின் நண்பன் ஜியோவன்னியிடம் கேட்டுக் கொள்ள, அதற்கு பிரதியுபகாரமாய் அவன் அவளையே கேட்கிறான். அவனது விருப்பத்துக்கு இணங்கிவிட்டு செஸீரா, ரோசெட்டாவுடன் ரயிலில் புறப்படுகிறாள். வழியில் குண்டு வீச்சுக்கு ரயில் இருப்புப் பாதை சேதமடைந்ததால் ரயில் நின்று விடுகிறது. இறங்கி நடந்தே போய் விடலாமென இரு பெண்களும் தங்கள் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து நடந்து விடுதியொன்றில் தங்குகின்றனர். அங்கும் இத்தாலிய சிப்பாய்கள் பாலியல் ரீதியான தொந்தரவை ஆரம்பிக்கின்றனர். அந்தப் பகுதியில் பாசிஸ்டுகள், ராணுவத்தை விட்டு விட்டு ஓடி வந்து ஒளிந்திருப்பவர்கள், கடத்தல் வியாபாரிகள் நிறைந்திருக்கின்றனர்.

அவ்வூரில் படித்த பணக்கார இளைஞன் ஒருவனுக்கும் செஸீராவுக்கும் காதலுறவு ஏற்படுகிறது. இளைஞன் பாசிஸத்தை எதிர்ப்பவன். ஒருநாள் அங்கு வரும் ஜெர்மானிய இராணுவம் மலைப் பகுதியில் வழிகாட்டியாக பிக்கோலை – இளைஞனை அழைத்துச் செல்லுகின்றனர். அவன் திரும்பல்லை. கிராமத்திலிருக்க பயந்த குடும்பங்கள் வெவ்வேறு திசையில் தப்பிச் செல்லுகையில், செஸீராவும் அவள் பெண்ணும் ஒரு பக்கம் செல்லும் வழியில் குண்டு வீச்சில் சிதிலமடைந்த தேவாலயத்தில் இராவு தங்குகின்றனர். அங்கு வரும் நேச நாட்டு படையைச் சேர்ந்த சிப்பாய்கள் வெறி கொண்டு தாயையும் மகளையும் ஒருவர் முன்னால் இன்னொருவரை, இருவரும் ஒருவரையொருவர் பார்க்கப் பார்க்க கெடுத்து நாசமாக்கி வல்லுலுறவு கொண்டு விட்டு போய் விடுகின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கும். ஒருகணம் ஆடிப்போய் விடுகிறோம். தாய் செஸீராவாக நடிக்கும் பிரபல இத்தாலி நடிகை சோஃபியா லாரன்ஸ் உலகப் புகழ்பெற்ற நடிகை. இந்த காட்சியிலும், அடுத்து ஒரு லாரியில் அமர்ந்து கண்ணீர் மல்க குடிகார லாரி டிரைவரின் ஆபாச பாட்டை சகித்தவாறு போகும் காட்சியிலும் சோஃபியா நடிப்பின் சிகரத்துக்குப் போய் விடுகிறார். ஓர் எளிய பெண்ணின் அனுபவ ரீதியாக இத்தாலியின் யுத்த வரலாற்றை டி சிகா மிக அழுத்தமாய் – அற்புதமாய் படமாக்கியிருக்கிறார். பல சர்வதேச விருதுகளைப் பெற்ற “இரு பெண்கள்” படத்தில் செஸீராவாக நடித்தமைக்கு சோஃபியா லாரன்ஸ் சிறந்த நடிகை விருது பெற்றவர்.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகா 1963-ல் “THE CONDEMNED OF ALTONA” என்ற அரிய படத்தை இயக்கினார். “ஜெர்மனி யுத்தம் ஓய்ந்த பின்” – என்றும் இதைப் பெயரிடலாம். ஹிட்லர் காலத்தில் அவர் அமைத்திருந்த இரண்டு கொடூரமான அமைப்புகள்: ஜெஸ்டபோ மற்றும் எஸ்.எஸ். [SHUDTS STAFFEL] இந்த எஸ்.எஸ். அமைப்பு ஜெர்மனிய ராணுவத்தை விட கொடூரமானது. இதைச் சேர்ந்த நாஜிகள்தான் யூதர்களை விஷவாயு நிரம்பிய அறைகளில் தள்ளிக் கொன்றவர்கள். ஹிட்லர் மரணமுற்றபின், பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைவராக வைசந்தால் என்றவர் தலைமையில், அர்ஜெண்டினாவுக்கும் பிற இடங்களுக்கும் தப்பியோடி தலைமறைவான எஸ்.எஸ். தலைவர்களில் பிறகு பிடிபட்டு மரண தண்டனையளிக்கப்பட்டவர்களில் அடால்ஃப் இஷ்மன் [ADALF EACHMAN] எடுவார்டு ரோஷ்மன் [EDUVARD ROSHMAN] ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்வாறு தேடப்பட்டு வந்த ஒருவன் புத்திபேதலித்துப் போகிறான். அவனது தந்தை பெரிய தொழிலதிபராகிறார் – மேற்கு ஜெர்மனியில் மகனைக் காப்பாற்ற ஒரு பாதாள அறைகட்டி அதற்குள் வைத்திருக்கிறார். அவன் சதா பிதற்றியபடி கிழிந்துபோன எஸ்.எஸ். சீருடையில், பெரிய கரும்பலகையில் கிறுக்கல் கோட்டோவியங்கள் கிறுக்கி ஜெர்மனி நேச நாடுகளால் அழிந்து போய் அதன் இளைஞர்கள் ரவுடிகளாய், கூட்டிக் கொடுப்பவர்களாய் அலைகிறார்கள் என படம் கிறுக்கி தனக்குத் தானே பேசுவான். ஜெர்மன் இளம்பெண்கள் எல்லாம் சோரம் போய் வேசிகளாகி விட்டனர் என்கிறான்.

அப்படியெல்லாம் இல்லை, ஜெர்மனி தொழில்வளத்தில், கடல் வாணிபத்தில் கல்வியில் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று அவனுக்கு அவன் தொழில் அதிபரான தந்தை சொல்லியும் பயனில்லை. ஒருநாள் அவனைக் காரில் வைத்து மழை பெய்யும் சமயம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லுகிறார் தந்தை. உயரமான இடத்துக்கு இட்டுச் சென்று துறைமுகத்தில் நங்கூரமடித்து நிற்கும் வணிகக் கப்பல்களைக் காட்டுகிறார். தொழிற்கூடங்களைக் காட்டுகிறார். மகன் சிரித்துக் கொண்டே தன் தந்தையைப் பிடித்துத் தூக்கி வெகு உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறான். மழை வலுக்கிறது. பைத்தியக்காரனின் தொழிலதிபத் தந்தையின் பிணம் மழையில் கிடக்கிறது. இப்படம் 1964-ல் சென்னை க்ளோப் திரையரங்கில் வெளியானது. இப்படத்தின் கதை-வசனத்தை டி சிகாவின் விருப்பப்படி அமைத்து எழுதியவர் உலகப் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எக்சிஸ்டென்ஷியலிஸ தத்துவ மேதை ழோன் பல் சார்தர். கரும்பலகைக் கிறுக்கல் கோட்டோவியங்களை வரைந்தவர் போலந்து ஓவியரும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நண்பருமான ஃபெலிக்ஸ் டோபால்ஸ்கி.
[FELIX TOPALSKI]. புத்திபேதலித்த மகனாக சிறப்பாக நடித்தவர் ஆஸ்திரிய நடிகர் மாக்ஸிமில்லியன் ஷெல் [MAXIMILLON SCHELL]. தந்தையாக நடித்தவர் ஃபிரெடரிக் மார்ச்
[FREDERIC MARCH]. டி சிகாவின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகாவின் மற்றொரு யுத்த பின்னணியிலான படம் “SUN FLOWER”. இப்படம்

1969-ல் தயாரித்து இயக்கி வெளியானது. இத்தாலி ஃபிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பு. இத்தாலிய ராணுவ சிப்பாய் ஒருவன் இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்ய எல்லைக்கு அனுப்பப்படுகிறான். ரஷ்யாவில் கைதாகி போர் ஓய்ந்த பிறகு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அங்கேயே சூரியகாந்திச் செடிகளை பயிரிட்டு சாகுபடி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். தாய்நாடான இத்தாலிக்குத் திரும்புவதே இல்லை. அவனது இத்தாலிய மனைவி அவனைத் தேடிக் கொண்டு ரஷ்யாவுக்கு வருகிறாள். ஒருவழியாக இராணுவ விவரங்களைக் கொடுத்தபின் அவனை கண்டடைகிறாள். இப்போது அவன் பொது மன்னிப்பு பெற்று, ரஷ்ய குடிமகனாகி, ரஷ்ய பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாக சுகமாய் வாழ்கிறதைப் பார்த்துவிட்டு இத்தாலிய மனைவி, ஊர் திரும்புகிறாள். இந்தப் படத்தில் ரஷ்ய இயற்கைக் காட்சிகளை ஏராளமாக வழங்கியிருக்கிறார் டி சிகா. இத்தாலி மனைவியாக சோஃபியா லாரன்ஸும், அவளது கணவனாக மார்செல்லோ மாஸ்டிராயினியும் நடிக்கிறார்கள். ரஷ்ய மனைவியாக லூட்மிலா சவேலியெவா [LUDMILA SAVELYEVA] மற்றும் கலினா ஆண்ட்ரீவா [GALINA ANDREEVA] எனும் ரஷ்ய நடிகையும் நடிக்கிறார்கள். சென்னையில் சஃபையர் திரையரங்கில் திரையிடப்பட்ட SUN FLOWER விட்டோரியா டி சிகாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொள்ளப்படாதது.

உலக சினிமாவில் மனித நேயத்தை முன்னெடுத்துச் சென்ற திரைப்பட மேதைகளில் டி சிகா ஒருவர். இவர் 1974-ல் காலமானார்.

(வளரும்)

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன்(மேற்கு ஐரோப்பிய சினிமா) – விட்டல்ராவ்

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மேற்கு ஐரோப்பிய சினிமா

துருக்கிய சினிமா மிகவும் அறிவு ஜீவித்தனமாயிருக்கிறது. மிக மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் துருக்கிய திரைப்படங்கள் சில மிக மிக ஆழமான பொருள் பொதிந்தவை. மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அவற்றின் கேள்விகளையும் உள்ளிட்ட கதையாடல்கள் ஊடே அவற்றுக்கான பதில்களை தாமாகவே மிகவும் சாவதானமான நடையில் தேடிக் கொண்டவையாக இருப்பவை. யோசிக்கும்போது, ஒரு வித “ மணிகவுல் ” தனமான சினிமாவாக சில துருக்கித் திரைப்படங்கள் படுகின்றன. அப்படியிருப்பதுவே அவற்றின் மேன்மை. துருக்கிய சினிமாவின் அரிதான திரைப்படங்கள் சிலதைத் தயாரித்து இயக்கி நடித்து, சர்வதேச அளவில் பெயரும் பாராட்டும் புகழும் பெற்றவர் நூரி பில்கெ சீலான் (NURI BILGE CEYLAN). இவரது மனைவி எப்ரு சீலானும் (EBRU CEYLAN) இவரோடு இவரது படங்களில் நடித்து வருபவர்.

Nuribilgeceylan.jpg
NURI BILGE CEYLAN

நூரி துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் 1959 – ல் பிறந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடீத்த இவர் இஸ்தான் புல் நகரின் மிமர் செரியன் (MIMAR SERIAN ) பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் திரைப்பட ஆக்கத்துக்கான படிப்பை முடித்துத் தேறியவர். இவரது மனைவி எப்ருவும் அதே சர்வ கலா சாலையில் திரைப்படிப்பு படித்து தேறியவர். நூரி 1995-ல் எடுத்த “ கோஸோ ” ( KOZO ) எனும் குறும்படம் புகழ்பெற்றது. பிறது இவர் கசபா ( KASABA – 1997 ), மாயிஸ் சிகின்டிஸி ( MAYIS SIKIN – NAYIS SIKINTISI – 1999 ), உஸக் (UZAK – 2002 ) க்ளைமேட் (IKLIMLER – 2006 ) ஆகிய திரைப்படங்களைச் செய்திருப்பவர். உளிக் படத்தில் முயன்ற தனித்தன்மைகளை நூரி, க்ளைமேட் படத்தில் தான் முழுமையாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.

துருக்கிய மொழியில் IKLIMLER என்று சொல்லப்படம் CLIMATES நவீன உலக சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படம் ஆக்கப்பட்ட விதம் குறித்தான சிறிய ஆவணப்படம் ஒன்றில், படத்தின் வெவ்வேறு மூன்று காட்சி நிகழ்வுகளை தூரி படமாக்கி இயக்கும் விதத்தைக் காண்கையில், அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு நடிப்பு அசைவையும் எவ்வளவுக்கு எளிதாகவும் அதே சமயம் கால விரயமின்றி கச்சிதமாயும், காட்சி அரங்கேறும் சமயம் – எதிர்பாராத சிறு குறுக்கீடுகளை சமாளிக்கும் விதமும் துல்லியமாக தெரிபவை.

“ க்ளைமேட்ஸ் ” ஓர் இத்தாலியல் ( EXISTENTIALIST ) கோட்பாட்டை உட்கொண்டு உள்ளடக்கிய காவியம். துருக்கியின் புற நகர்ப் பகுதியின் கோடை, மழை, குளிர் – பனிக்காலமென்ற மூன்று பருவ காலங்களின் போது நிகழும் ஓர் ஆண் – பெண் உறவின் சிதறலையும் அது ஒன்று சேருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் கதையைக் கொண்டிருப்பது. தங்களுக்கு கிடைத்து பிறகு விலகிச் செல்லும் வாழ்க்கையின் பத்தை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் மனப்போராட்டம் கொண்ட ஓர் ஆண் – பெண் உறவைப் பற்றிய அரிய படம் க்ளைமேட்ஸ். மிக உயரிய நடிப்பாற்றலின் வெளிப்பாடும் திகைக்க வைக்கும் காமிரா கோணங்களும் இக்கதையை நகர்த்துகின்றன.

இஸா ( ISA )  வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் கல்லூரி போதகரும், உயர்பட்டப் படிப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு காஸ் ( KAS ) எனும் நகரில் இருப்பவன். இவனது பெற்றோர்கள் சற்று தொலைவிலுள்ள இடத்தில் வசிப்பவர்கள். இவனது காதலி பஹார் ( BAHAR ) . இவள் தொலைக்காட்சிப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கலை இயக்குனராக பணியிலிருப்பவள். காஸ் நகரில் இஸா ஒரு விடுதியிலிருக்கையில் பஹார் அவனைச் சந்திக்க வருகிறாள். அது நல்ல கோடைகாலம். வெயில் அதிகம். நகரின் புறப்பகுதியிலிருக்கும் மிகப் பழைமையான அசீரிய – பர்ஷிய நகர எச்சமாய் நிற்கும் கட்டிடத்தின் பிரம்மாண்ட தூண்களை இஸா காமிராவில் படமெடுக்கிறான். பஹார் கவனித்தபடி அலுப்பால் பொறுமையிழந்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனக்கு அலுப்பு எதுவுமில்லை என கூறிவிட்டு தூரமாய் போய் நிற்கிறாள்.

பிறகு அவர்கள் ஸ்கூட்டரில் வெகு தூரத்திலுள்ள அவ்வூர் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். இஸா கடலில் நீராட, பஹார் மணலில் அரை நிர்வாணத்தில் சூரிய குளியல் எடுத்த நிலையில் கண்மூடி மல்லாந்து படுத்திருக்கிறாள். இஸா அவளை நெருங்கி, தன் கை கால்களில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அன்போடு அழைத்து முத்தமிடுகிறான். அவள் தன்னை மறந்து கிடக்கையில், இஸா விளையாட்டாக மணலை அள்ளி அவளை கழுத்து வரை மூடுகிறான். அவளும் அவனது விளையாட்டை ரசித்தபடி கண் மூடிக் கிடக்கிறாள். திடீரென்று அவன் மணலையள்ளி அவளது மூக்கு வாய் தலை முழுவதையும் மூடி மணல் சமாதி கட்டி விட, பஹார் அலறித் துடித்து எழுந்து விடுகிறாள். இதை, வெறும் விளையாட்டா, அல்லது வினையாவென்று அவளாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை நம்மாலும் நினைக்க முடியவில்லை.

அடுத்து அவர்கள் கடற்கரையிலிருந்து விடுதியை நோக்கி மலைப் பாதையில் ஸ்கூட்டரில் வேகமாய் வந்து கொண்டிருக்கையில், பின்னால் உட்கார்ந்து வரும் பஹார், சட்டென்று இஸாவின் கண்களை இறுகப் பொத்துகிறாள். அவன் அலறியடித்து ஸ்கூட்டரை பாலன்ஸ் இழந்து கன்னா பின்னாவென திருப்பியோட்ட அது, “ ஸ்கிட் ” டாகி விழுகிறது. அவன் எழுந்து அவளைத் திட்டி அடிக்கிறான். அவளது அந்த செய்கையால் இருவருமே இறந்து போயிருக்க வேண்டியவர்கள் என்று திட்டுகிறான். அவளைத் தூக்கி கடலில் அமுக்கப் போகிறான். பஹாரும் பதிலுக்கு அவனை அடித்தும் காலால் உதைத்தும் வைக்கிறாள். பிறகு மௌனமாக நடந்தே போகிறாள். அவனிடமிருந்து அவள் பிரிந்து தன் ஊருக்குப் போய் விடுகிறாள். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவர்கள் உறவில் அது மேலும் பெரிதாகிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது இஸா புத்தகக் கடையொன்றில் தன் நண்பன் குய்வன் (GIJVEN ) எனும் பத்திரிகையாளனையும் அவனது கவர்ச்சியான காதலி செராப்பை (SERAP) யும் சந்திக்கிறான். பஹாரையும் அவர்கள் அறிந்தவர்களே. பஹாருக்கும் இஸாவுக்குமான உறவு பற்றியும் பேசுகின்றனர். தான் பத்திரிகை வேலையாய் அன்று வெளியூருக்குப் போக இருப்பதை குய்வன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இஸா, அன்றிரவு செராப்பின் வீட்டுக்குப் போய் அவளது விருப்பத்துக்கு எதிராக நுழைகிறான். பஹாருக்கும் அவனுக்குமிடையில் உறவு விரிசலடைந்திருப்பது குறித்து மீண்டும் செராப் கேட்கிறாள். ஆண்  பெண்ணுக்கிடையில் உருவாகும் அந்தரங்க உறவு விரிசலை அறிவதில் தனக்கு ஆர்வமதிகம் என்கிறாள் செராப். இஸா அவளை நெருங்குகிறான். அவளது பலத்த எதிர்ப்பையும், முறியடிப்பையும் மீறி, இஸா செராப்புடன் வல்லுடலுறவு கொள்ளுகிறான். இஸா தன் பெற்றோர்களிடம் போகையில், “ சீக்கிரம் பஹாரை மணந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள் ” , என்கிறாள் அம்மா.

இஸாப்பிற்கு செராப்பிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வரவும், அவன் அவளிடம் போகிறான். நேற்று அவனால் வல்லுறவுக்கு உட்பட்ட செராப் இன்று தானாக முன் வந்து அவனையழைக்கிறாள். இஸா வேண்டா வெறுப்பாக இருக்கிறான்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ISHAKPASHA

அதன் பிறகு இஸா காஸ் நகரை விட்டு பழைமையான இஷக்பாஷா ( ISHAKPASHA ) எனும் நகரையடைந்து புகைப்படமெடுக்கிறான். மழைக் காலம் போய் குளிர்மிக்க பனிக்காலம் வந்திருக்கிறது. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் பார்க்கையில் பனி மூடிய சூழலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை படமாக்க வண்டியில் வந்து இறங்கும் பஹாரைப் பார்க்கிறான் இஸா. அவன் மனம் முற்றிலும் மாறுகிறது. அவளுக்காக இளகுகிறது. அவள் வந்த பஸ் புறப்படத் தயாராகும்போது இவன் பஸ்ஸில் நுழைந்து அவளருகில் உட்காருகிறான். அவள் திடீரென விசும்பி அழுகிறாள்.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, இனி இருவரும் முன்பு மாதிரி இருக்கலாமென்றும், இஸ்தான் புல்லுக்குப் போய் திருமணம் செய்து கொண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழலாமென்கிறான். அவள் மேற்கொண்டு தனக்கு டெலிபோன் செய்ய வேண்டாமென கூறிவிட, பஸ் புறப்படத் தயாராகிறது. இசா போய் விடுகிறான். ஆனால் இரவு அவனது விடுதியறைக்கு பஹார் வருகிறாள். அவர்கள் உறவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இஸாவாக தூரியும், பஹாராக அவன் மனைவி எப்ருவும் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை காமிரா கலைஞர் கோகன் துயாகி ( GOKHAN TUYAKI ) பாராட்டும்படி செய்திருக்கிறார்.

துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் ஒருவித தார்மீக எரிச்சல், பொறாமை சண்டையெல்லாம் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க – ரோமானிய கலை வடிவங்களின் ஆதி கட்டுமான சிதிலங்கள் துருக்கியின் பெருமை வாய்ந்த தொல்லியல் சான்றுகளாய் நிற்பவை.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
MICHAEL CACOYANNIS

கிரேக்க சினிமாவின் நன்கறியப்பட்ட ஓரிரண்டு திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் மைகேல் ககோயானிஸ் ( MICHAEL CACOYANNIS ). ககோயானிஸ் செய்த இரு கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் நவீன கிரேக்க சினிமாவிற்கு பெருமை சேர்த்தவை. அவற்றில் ஒன்று, “ கருப்பு உடையில் ஒரு பெண் ” . ( A GIRL IN BLACK ). Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ் ககோயானிஸ் தமது முதல் கிரேக்கப் படம், A WINDFALL IN ATHENS “ – ஐ 1954 – ல் தயாரித்து இயக்கினார். அதன் பிறகு இயக்கி 1956 – ல் வெளிவந்த கருப்பு உடையில் ஒரு பெண் – படம் உலகுக்கு அவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு கிரேக்க சினிமாவையும் மைகேல் ககோயானிஸ்ஸையும், அதில் தகாநாயகியாய் நடித்த எல்லி லாம்பட்டி ( ELLI LAMBETTI ) யையும் சர்வதேச கவனம் பெறச் செய்தது. இப்படத்தின் சில சிறப்புகளில் ஒன்று இதன் படமாக்கல் முறை. இதன் கதை, இயக்குனர் ககோயானிஸை தொடர்ந்து சில காலத்துக்கு அலைக் கழித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அடுத்து அவர் செய்த ஓரிரண்டு படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

பாவ்லோ ( PAVLO ) திறமையான எழுத்தாளனாயிருந்தும் அதிர்ஷ்டமற்ற இளைஞன். அந்தோனி நடுத்தர வயதான கட்டிட பொறியியல் வல்லுனன். இருவரும் நண்பர்கள். கிரேக்கம், நிறைய சிறு சிறு தீவுகளைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு தீவும் தனித்துவம் கொண்டதென்றாலும், மக்களின் சிந்தனை, வாழ்வுமுறை என்பவை தீவுக்குத் தீவு எவ்வித வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. தீவுகளைச் சென்றடைய அழகிய பயணிகள் கப்பல்களுண்டு. அப்படியான கப்பல் ஒன்றில் பாவ்லோவும் அண்டோனியும் ஹைட்ரா ( HYDRA ) எனும் தீவுக்கு பயணித்து போய் ஒரு வாரத்துக்கு தங்கி கழிக்க விரும்பி புறப்படுகிறார்கள். தீவில் இறங்கினதுமே கூலியொருவன் அறிமுகமாகி இவர்களின் ஜங்கமங்களை தூக்கிக் கொண்டவன். அவர்கள் விருப்பப்படி பழைய வீடு ஒன்றில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறான்.

அந்த வீடு ஃப்ரோசோ ( PHROSO ) என்ற நடுத்தர வயது விதவைக்குச் சொந்தமானது. அவளுடைய அழகிய இளம் பெண் மரினா ( MARINA), அவளுக்கு இளையவன் மிட்சோ ( MITSO ). அந்த பழுதடைந்த கிரேக்க வீடு போலவே, அந்த குடும்பமும் தத்தளிக்கிறது. பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும். பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த நிலையில் அம்மாகாரி ஃப்ரோசோவுக்கும் பனாகிஸ் ( PANAGIS ) என்பவனுக்குமான கள்ள உறவு புதர் மறைவில் நடப்பதை சிறுவர்கள் பார்த்துவிட, அம்பலமாகிறது. கோபமுற்ற மகன் மிட்சோ, அம்மாவை தெருவில் வைத்து அடிக்கிறான். குடும்பப் பெயர் கெட்டதால், அக்காவும் தம்பியும் வெளியில் தலைகாட்டவும் முடியவில்லை.

இதையெல்லாம் பாவ்லோவும் அண்டோனியும் கவனிக்கின்றனர். அதே சமயம் பாவ்லோ மரினாவை நேசிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்கிறாள். ஆனால் அண்டோனி இதை விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மரினா பேரில் ஒருதலைக் காதல் கொண்ட அவ்வூர் இளைஞன் கிறிஸ்டோ வன்முறைக்குத் தயாரா கையில் மரினாவின் தம்பி மிட்ஸோ சண்டை வலித்து ரவுடிகளால் தாக்கப்படுகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை வம்புக்கிழுத்தபடியே இருக்கிறான். பாவ்லோ மரினாவைத் தன்னோடு ஏதென்சுக்கு வந்து விட கேட்கிறான். அண்டோனி, பாவ்லோ புறப்படாததால் தான் மட்டும் புறப்பட்டுப் போகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான்.

பாவ்லோவ் படகுச் சவாரி செய்ய படகு ஒன்றை வேண்டுகிறான். கிறிஸ்டோ தனது மீன்பிடிக்கும் படகை தர முன் வருவதோடு அதனுள் கடல் நீர் புகும்படி செய்து விடுகிறான். படகு மூழ்கட்டும் என்ற எண்ணம். பாவ்லோ படகை கிளப்புகையில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் – பெண் குழந்தைகள் ஓடி வந்து தங்களையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்க பாவ்லோ சம்மதித்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு படகு வலிக்கிறான். சிறிது தூரம் போனதும் தண்ணீர் படகினுள் புகுந்து அது மூழ்கத் தொடங்குகிறது.

குழந்தைகளில் ஒரு சிறுமி கிறிஸ்டோவின் தங்கை. நிறைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாண்டு போகின்றன. பாவ்லோவை போலீஸ் கைது செய்து சிறையிலிடுகிறது. அவன் மீது கொலைக் குற்றம் பதிவாகிறது. மரினா கிறிஸ்டோவை கட்டாயப்படுத்தி உண்மையைக் கேட்டறிவதோடு, போலீசில் உண்மையைச் சொல்ல மிரட்டுகிறாள். குற்றமனப்பான்மை தாக்க, அவன் போலீசில் உண்மையைக் கூறி சரணடைகிறான். விடுதலையடைந்த பாவ்லோ கடற்கரையில் இவனுக்காக நிற்கும் மரினாவை எதிர்பார்ப்போடு சந்திக்கிறான்.

இந்தப் படத்தின் கதை வசனம் நடிப்பு எல்லாமே எளிமையானது. ஆனால் படமாக்கப்பட்ட முறை இசை, ஒளிப்பதிவு என்பவை பிரமிப்பூட்டுபவை. பாவ்லோவாக டிமிட்ரி ஹான் ( DIMITRI HORN) என்பவரும் மரினாவாக எல்லி லாம்பெட்டி என்பவரும் ( ELLI LAMBETTI ) சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா நிபுணர் வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் எட்டே எட்டு வாரங்களில் ஒரே ஒரு காமிராவைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது கருப்பு உடையில் ஒரு பெண்.

 

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ZORBA THE GREEK

ககோயான்னிஸ் இயக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க கிரேக்கப் படம் “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இப்படம் ஆங்கிலமாக்கப்பட்டு சென்னை ஓடியன் தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படம்  1964-ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் “ க்ரேட் “ ( CRETE ) என்ற கிரேக்கத் தீவின் பொது மக்களே உதிரிபாகங்களில் வியப்பூட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

நிகோஸ் கஸாண்ட்ஸகிஸ் ( NIKOS KAZANTZAKIS ) கிரேக்க மொழி இலக்கியத்தின் தாஸ்தாயெவ்ஸ்கி என போற்றப்படுபவர். கஸாண்ட்ஸகியின் அமர நாவல், “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இந்நாவலை திரைப்படமாக்கிய தயாரிப்பாளருள் ஒருவர், அதில் ஜோர்பாவாக நடித்த உலகப் புகழ் பெற்ற குணசித்திர நடிகர் ஆந்தனி க்வின். ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN) ஏற்கனவே “ THE VISIT “ போன்ற அற்புதமான திரைப்படங்கள் தயாரிப்பிலும் பொறுப்பேற்று நடித்த மிக உயரிய நடிகர்.

கிரேக்க தேசத்தின் பல சிறு தீவுகளில் ஒன்று க்ரேட்.. இதில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஒன்று தூரீந்து செயல்பாடின்றி கிடக்கிறது. க்ரேட் மோசமான வறுமையில் கிடக்கிறது. அச் சுரங்கத்தின் உரிமையாளரின் மகன் இங்கிலாந்து கப்பலில் ஏதென்ஸ் வந்து அங்கிருந்து க்ரேட் தீவுக்கு வருகிறான். கவிதை, கட்டுரைகள் எழுதும் புத்தகப் புழு அவன். நடுவழியில் சரியான மழையில் நரைத்த முடியும் மழிக்காத முகமுமாய் ஒருவன் அறிமுகமாகிறான்.

“ நான் ஜோர்பா. அலெக்சிஸ் ஜோர்பா.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் சுரங்க வேலையில் அனுபவமிக்கவன் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இளைஞன் இங்கிலாந்தில் வளர்ந்த கிரேக்கன். ஜோர்பா தன்னையும் சேர்த்துக் கொள்ள கேட்டு உடன் புறப்படுகிறான். இவர்கள் தீவின் நகரை நோக்கி வாடககைக் காரில் வருவதைப் பார்க்கும் ஓர் அரை லூசு “ அமெரிக்கன் வருகிறான் ” , என்று வீடு வீடாகச் சொல்லுகிறான். வறுமையில் வாடும் அந்த ஜனங்கள், அமெரிக்கன் என்றால் பணக்காரன் என்று எண்ணத்தில் “ கஞ்சிவரதப்பா ”, என்றதும், “ எங்கே வருதப்பா ” , என்று அலை பாய்கின்றனர்.

தீவில் சிறு விடுதி வைத்து நடத்தும் ஹார்டென்ஸ் ( HARTENSE ) என்ற வயதான ஃபிரெஞ்சுக்காரி ஒருத்திக்கு அறிமுகமாகி அவளது இடத்தில் தங்குகின்றனர். இளமையில் பாரிஸில் காபரே நடனக்காரியாக இருந்த அந்த பணக்காரிக்கு நிறைய ஆண் உறவு இருந்தது. எல்லாம் கப்பல் தலைவர்கள். கடைசியாக ஒரு கப்பல்காரன் அவளை விதவையாக்கி இந்தத் தீவில் விட்டுவிட்டு இறந்து போனான். ஹார்டென்சுக்கு துணையாக அரை லூசும், மாலுமி விட்டுச் சென்ற “ காணவரோ ” ( CANAVARO ) என்ற கூண்டுக் கிளியுமிருந்தனர். ஊரில் லோலா என்ற ஓர் அழகிய இளம் விதவை. லோலாபேரில் ஊரில் பலருக்கும் காம இச்சையுண்டு. இளைஞனின் சுரங்கம், நில புலன்களை மாவ்ரண்டோனி என்பவன் பார்த்துக் கொள்ளுகிறான். இவனது மகன் பாவ்லோவுக்கு லோலா மீது பயங்கர காதல். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை.

ஹார்டென்சுக்கு அந்த வயதிலும் ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதை, ஜோர்பா பூர்த்தி செய்கிறான். தூர்ந்து சரிந்து பாழாகிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் புத்தியிர் பெற உள் கட்டுமானத்துக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அருகிலுள்ள மலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை அவ்வூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உரியவை. சுரங்கம் மீண்டும் உயிர் பெற்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ஜோர்பாவும், குட்டி முதலாளியும் அனுமதி பெற்று மரங்களைக் கீழே இறக்க திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் குட்டி முதலாளிக்கும் விதவை லோலாவுக்கும் காதல் உறவு ஏற்படுகிறது. அவளை நெருங்கும்படி ஜோர்பாவும் முதலாளிக்குத் தூபமிடுகிறான்.

முதல் கட்டமாய் கொஞ்சம் பேர் சுரங்கத்துள் இறங்குகிறார்கள். சுரங்கம் மீண்டும் குமுறி சரிகிறது. இதனால் மிகவும் மனம் தளர்ந்த முதலாளியை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஜோர்பா நடனமாடுகிறான். இந் நடனமும் அதன் பின் ஒலிக்கும் ஸ்பானிஷ் கிட்டார் வாத்திளய இசையும் மிக மிக ரம்மியமானது மட்டுமல்ல, முக்கியமும் ஆகும். படத்தின் ஜீவன் போன்றது. ZORBA என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதுகெலும்பு போன்றது இந் நடனமும் இசைவும். அதற்கான கிரேக்க நாடோடி கிட்டாரின் பெயர் “ சந்தூரி ” ( SANTOURI ) என்பது என்று கூறுகிறான் ஜோர்பா. எப்போதெல்லாம் தன் மனத்தில் தொய்வும், சோர்வும், தோல்வி மனப்பான்மையும் சோகமும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் நடனமாடுவதாக கூறுகிறான் ஜோர்பா.

“ என் மனைவி இறந்தாள், முதல் மகனும் இறந்தான். அப்போது நான் நடனமாடினேன். அதனால் இன்று நன்றாக இருக்கிறேன் “, என்கிறான்.

அன்றிரவு முதலாளி இளைஞனை லோலாவிடம் அனுப்பி வைக்கிறான்.

மறுநாள் அதைக் கொண்டாடும் விதமாக ரம் குடிக்க வைக்கிறான்.

“ ஜோர்பா, உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ” என்கிறான் இளைஞன். உடனே சட்டென்று தொடர்கிறான் ஜோர்பா.

“ சாத்தானும் கூட, பாஸ் ” , “ நாம் செய்யும் காரியங்களில் சாத்தான்தனமும் கலந்திருக்கு “ , என்கிறான்.

மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் வகுத்து முதலாளியின் ஒப்புதலைப் பெற்ற அவள் ஏதென்சுக்குப் போய் சில முக்கிய உபகரணங்களை வாங்கி வரப் போகிறான். திரும்பி வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. லோலா பேரில் அடங்காத காம இச்சை கொண்ட பாவ்லோ அவளோடு முதலாளி இளைஞன் இருப்பதை பார்த்துவிட்டு மனமுடைந்து கடலில் விழுந்து சாகிறான். இது பெரிய விஷயமாகிறது. தேவாலயத்துக்கு எல்லோரும் போகிற நேரம், லோலாவும் புறப்படுகிறாள். இறந்துபோன மகனுக்கு பழி வாங்க அவனது அப்பா முடிவெடுத்து ஊரார் முன்னிலையில், அவளைக் குத்திக் கொன்று விடுகிறான்.

மழை கடுமையான நிலையில் நனைத்தபடி ஃபிரெஞ்சுக்காரி ஹார்டென்ஸ் இறந்து போகிறாள் நாதியற்ற அயல்நாட்டுப் பணக்காரியான அவளது வீட்டுக்குள் அத் தீவின் பஞ்சத்திலடிபட்ட ஆண் பெண்கள் புகுந்து அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு போகின்றனர். அரசாங்கம் அவற்றை வசப்படுத்து முன் நாமே எடுத்துக் கொள்ளலாமென்று கத்தியபடியே அவர்கள் சூரையாடுகிறார்கள். இந்தக் காட்சியும் லோலாவின் படுகொலைக் காட்சியும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கடைசி முயற்சியாக, மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதைப் பார்க்க தேவாலயப் பாதிரியார் முதல் ஊரே கூடியிருக்கையில், அந்த முயற்சியும் பெருத்த தோல்வியில் முடிகிறது. ஊருக்கே திரும்பி விடுவதாய் முதலாளி இளைஞன் கூறுகிறான். ஜோர்பா மீண்டும் தனியனாய் நிற்கிறான். முதல் முறையாக தனக்கு நடனம் கற்றுத் தருமாறு ஜோர்பாவை முதலாளி கேட்கிறான். நடனமாடுதென்பது, தோல்வி, இழப்பு, மரணம் என்பதன்போது அத்துயரை மறக்கதான் செய்யும் காரியம் என்பான் ஜோர்பா. இப்போது அவன் இளைஞனுக்கு கடற்கரையில் நடனமாட ஒவ்வொரு அடியெடுத்து கற்றுத் தருகிறான்.

ஜோர்பாவாக ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN ) மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பரிந்துறைக்கப்பட்டவர். இளைஞனாக ALAN BATES –ம், லோலாவாக IRNE PAPA – வும் நிறைவாக செய்திருக்கின்றனர். இதன் இனிய இசையை மிகிஸ் ( MIKIS THEODU RAKIS) தியோடோராகிஸும், ஒளிப்பதிவை வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) யும் செய்திருக்கின்றனர்.

நவீன கிரேக்க சினிமாவின் மிக முக்கிய குறியீடாக பரந்துபட்ட பார்வையில் பேசப்படுபவர் தியோடோரோஸ் ஆஞ்செலோ பௌலோஸ் ( THEUDOROS ANGELO POULOS ). இவருடையது பிரமிப்பூட்டும் திரைப் படங்கள்.

தியோ ஆஞ்செலோ பௌலோஸ் ஏதென்சில் 1935-ல் பிறந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து விட்டு, ஃபிரெஞ்சு திரைப்பட பள்ளியான IDHEC – ல் திரைப்படக் கலையை கற்றவர். பிரான்சிலிருந்து 1964-ல் ஏதென்சுக்கு திரும்பியவர். ‘’ DIMOKRATIKI ALLAGI “ என்ற கிரேக்க தினசரி இதழில் 1967 வரை சினிமா விமர்சகராகப் பணியாற்றியவர். 1965-ல் இவர் திரைப்படமெடுக்கத் தொடங்கினார். 1968-ல் “ BROAD CAST “ என்ற குறும்படத்தை இயக்கினார். 1975-ல் இவரது “ THE TRAVELLING PLAYERS “ என்ற படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1988-ல் வெளியான இவரது “ LANDSCAPE IN THE MIST ”, 1991-ல் வெளியான ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “. GAZE 1996-ல் எடுத்த “ ULYSSES GAZE “ ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றவை.

சமகால உலக சினிமாவில் இவரது கிரேக்கத் திரைப்படங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியவை. அதே சமயம் இவரும் வேறொரு உலக சினிமா ஆளுமை – மேதையின் திரைப்படங்களால் பாதிப்பு பெற்றவர். இவரது முக்கிய பேட்டியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்று மிக முக்கியமானது. அந்த நேர்காணலில் அவர் இசையைப் பற்றி மிக விரிவாக பேசுகிறார். சத்யஜித் ரே தம் படங்களுக்கான இசை குறித்து பேசியதற்கு இணையானது தியோ ஆஞ்செலோபௌலோசின் இசைக் குறித்த கருத்துக்கள். இவரது படங்களில் இசைக் கோர்வை ரம்மியமாய், எடுப்பாய் சிலிர்க்க வைக்கும்.

இந்த நேர்காணலில் இவர், உலக சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ரஷ்ய திரைப்பட மேதை, ஆண்ட்ரீ தார்காவ்ஸ்கி குறித்து நிறைய சிலாகிக்கிறார். அவரோடு ஃபிரான்சில் கழித்த நாட்களை பெருமையோடு நினைவு கூர்கிறார். தார்க்காவ்ஸ்கியின் பாதிப்பு தியோவின் பல படங்களில் தெரிகிறது. ஆரம்பத்தில் தாம் ஜெர்மானிய தத்துவ நாடக மேதை BERTOLT BRECHT – ன் ஆளுமையால் முழுக்கவே பாதிக்கப்பட்டிருந்ததாயும் பிறகு அதிலிருந்து வெளியில் வந்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலின் மரணம் குறித்த கருத்துக்கு நேரெதிரான வழியில் படம் எடுத்ததாயும் கூறுகிறார்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தியோ ஆஞ்செலோ பௌலோசின்  ‘’ ALEXANDER THE GREAT “ 1980-ல் வெளி வந்தது. படம் தொடங்கும்போது ஒரு சிறு வாசகம் : கிரேக்க நாட்டை அந்நியர் படையெடுத்து தாக்க வருகையில் , மாசிடோனிய வீரர்களோடு அலெக்சாண்டர் என்ற வீர இளைஞன் போரிட்டு முறியடித்துத் துரத்தினான். அதன் பின் அவன் ஆசியாவின் பகுதிக்குள் நுழைந்து போரிட்டு, சிறைபட்டிருந்தவர்களை மீட்டான். நிறைய நாடுகளை வென்று மகா அலெக்ஸாண்டர் என்றானான்.

இதையடுத்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கோச்சு வண்டிகளும் குதிரைச் சவாரியுமாயிருந்த காலத்து கிரேக்கம். கிராமங்கள் பலதின் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அங்குள்ள பிரபுக்கள் ஆக்கிரமித்தும் பிடுங்கியும் சொந்தமாக்கிக் கொண்டதை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களை நியாயம் வேண்டி குரல் கொடுத்தவர்களை அரசியல் குற்றவாளிகளாய் அரசு சிறையிலடைத்திருந்தது. அவர்கள் ஒருநாள் சிறையிலிருந்து தப்பி காட்டுக்குள் நுழைகின்றனர்.

ஓரிடத்தில் வெள்ளைக் குதிரையொன்றும் நட்டு வைத்த வாளும், வாள் மீது பண்டைய கால கிரேக்க போர்வீரர் தரிக்கும் தலைக் கவசமும் இருக்கிறது. தப்பி வந்தவர்களில் தலைவனாயிருந்தவன் இவற்றை எடுத்து குதிரைமேல் ஏறி பயணமாகிறான். அவன் அலெக்ஸாண்டர் என எல்லாராலும் அழைக்கப்படுகிறான். அவனைத் தொடர்ந்து தப்பி வந்தவர்களும் அவனோடு இணைந்து ஒரு படையாக உருவாகிறார்கள். கிராமம் கிராமமாக அலெக்ஸாண்டர், அந்த ஹெல்மட் அணிந்து போர்வாளை இடையில் செருகி வெள்ளைக் குதிரைமீதமர்ந்து, தன் படையினர் முன்னும் பின்னும் நடந்து வர பயணித்து கிராமங்கள் தோறும் அறிமுகமாகிறான்.

போலீஸ் நிலையங்களில் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கொள்ளுகிறார்கள். ஏழெட்டு பிரபுக்களையும், சமாட்டிகளையும் கடத்தி வந்து பணயக் கைதியாய் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசுகிறான் அலெக்ஸாண்டர். தன்னிடமிருக்கும் சீமான்களையும் சீமாட்டிகளையும் விடுவிக்க, கிராம வாசிகளிடமிருந்து அபரிக்கப்பட்ட நிலங்களைப் பிடுஙகி உரியவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். அலெக்ஸாண்டர் மீதும், அவனது படையினர் மீதும் விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகி, பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இடையிடையே அலெக்ஸாண்டருக்கு காக்கய் வலிப்பு வந்து விடும். உடனே அங்குள்ள எல்லோரையும் திரும்பி நின்று முதுகைக் காட்ட கட்டளையிடுவார்கள் காப்டனின் வலிப்பு அவஸ்தை யாருக்கும் தெரிந்து விடலாகாது. ( ஜுலியஸ் சீசரின் விஷயமும் கூட ? ) இந்த அலெக்ஸாண்டர் என்பவன் முழு வழுக்கைத் தலையும் அதை சமன்படுத்தும் விதமாய் பின் சிகையை ஏராளமாய் வளரவிட்டும், தாடியை நீண்டு பறக்க விட்ட தலையைக் கொண்டவன். மனைவி கிடையாது. ஒரே ஒரு மகள், கிராமத்திலுள்ள பழைய வீட்டிலிருக்கிறாள். அலெக்ஸாண்டர் தன் படையுடன் தன் சொந்த ஊருக்கு, பணயக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

இவனுடைய படையைச் சேர்ந்த ஒருவன் பணயக் கைதிகளிலிருக்கும் அழகிய சீமாட்டி ஒருத்தியை கற்பழிக்க முயற்சிக்கையில் பிடிபட்டு அலெக்ஸாண்டரால் தூக்கிலிடப்படுவதோடு பெண் பயணக் கைதிகளை விடுவித்து விரட்டி விடுகிறான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பணயக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். அச்சமயத்தில் அரசு உயரதிகாரி நிறுத்தக் கோரி நிபந்தனைகள் ஏற்கப்படுவதாய்க் கூறுகிறார். ஆனால் விரைவில் அரசு இராணுவம் கிராமத்தைச் சுற்றி வளைக்கிறது.

தன்னை எதிர்த்து எதிர் புரட்சி செய்தவர்களைச் சுட உத்தரவிடுகையில் அலெக்ஸாண்டரின் மகளே தன் தாயின் திருமண உடை தரித்து சுடப்படுபவர்களோடு சேர்ந்து நின்று, “ நானும் அவர்களில் ஒருத்தியே ” என்கிறாள். அவளையும் சேர்த்து சுட்டுக் கொல்லுகிறார்கள். இதனிடையில் அலெக்ஸாண்டர் என்ற பெயர் கொண்ட சிறுவன் ஒருவனும் அவனது ஆசிரியர் ஒருவரும் படத்தின் முக்கிய பாத்திரங்களாய் வருகிறார்கள். ஆசிரியர்தான் எதிர் புரட்சியாளர்கள் உருவானதுக்கு பொறுப்பானவர் என்பதால் அவரும் சுடப்பட்டுச் சாகிறார்.

இராணுவம் அலெக்ஸாண்டரின் படையினரைச் சுட்டு காலி செய்த நிலையில் மகா அலெக்ஸாண்டரும் இறந்து கீழே சாய்கிறான். அடுத்த காட்சியில் கிரேக்க யுத்த ஹெல்மட்டணிந்த அவனது தலையளவு வெள்ளைக் கற்சிற்பம் தரையில் கிடக்கிறது. இராணுவத் தலைவன் பயந்து அதை நெருங்குகையில் குதிரைக் குளம்பொலி கேட்டு பயந்து ஓடிவிடுகிறான். சிறுவன் அலெக்ஸாண்டர் மட்டக் குதிரை மீதமர்ந்து போகிறான். அவன் மலை மீதிருந்து பார்க்க, நவீன மயமான கிரேக்க நகரம், அதன் பல மாடி கட்டிடங்களோடு தெரிகிறது. இப்படத்தின் கதையோட்டத்தின் வழியே ஆஞ்செலோ பௌலோசியின் அரசியல் சார்பும் தெரிய வருகிறது.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

1991-ல் இவர் எடுத்த ‘’ SUSPENDED STEP OF A STORK “ என்ற அரிய படம், தேசத்துக்க தேசம் கொண்ட எல்லை, போர் நிமித்தம் ஏற்படும் அகதிகள் வருகை, அதன் காரணமான பிரச்சினைகள் உள்ளிட்டது. உலகப் போரின் போதே ரஷ்யாவிலிருந்த ஏராளமான கிரேக்கர்கள் அகதிகளாக கிரீஸுக்கு திரும்பி வந்து பிரச்சினைகள் ஏற்படுத்திய வரலாற்றை இப்படம் ஓர் உரையாடலில் தெரிவிக்கிறது. துருக்கியும் அல்பேனியாவும் கிரேக்கத்துக்கு அண்டை நாடுகள். சற்று தள்ளி இத்தாலிவுமிருப்பதால் இங்கேற்படும் போர்களின் போது பீதியில் மக்கள் அகதிகளாக கிரேக்க பூமிக்குள் நுழைவது வழக்கம்.

சமீபத்தில் நடந்த துருக்கி, சிரியா போர்களின்போது அகதிகளின் வருகை பெருகியது. இந்த பின்னணியில் கிரேக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எவ்வித காரணமுமின்றி மறைந்து விடுகிறார். கொலைக் காட்சி ஊடகம் ஒன்று, அகதிகள், அவர்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகளை பதிவு செய்ய வருகிறது. அதன் முக்கிய மைய இயக்குனரான இளைஞன் ஒருவனுக்கு மறைந்து போன அரசசியல்வாதியைக் கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகிறது. அந்த அரசியல்வாதியை அறிந்தவர்களும் கூட அறியாதவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

அவரோடு நன்கு பழகி உறவு கொண்ட அயல்நாட்டுப் பெய் ( தனக்கு கிரேக்கமொழி தெரியாது என்று சொல்லிக் கொண்டவள் ) தொலைக்காட்சிக்காரனுக்கு அறிமுகமாகி சிலவற்றைக் கூறுகிறாள். உபயோகமற்று ரெயில்வே வெளியில் நிற்கும் நிறைய ரயில்பெட்டிகள் அகதிகள் தங்குமிடங்களாயிருக்கின்றன. அகதிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து கிரேக்கம் ஊதிப் பெருக்கும்போது, அவர்களின் வருகைக்கு தடை விதிக்கிறது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அந்தந்த எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவம் காவல் புரிகிறது. டி.வி.காரன் தன் கிரேக்க ராணுவ கர்னலின் உதவியுடன் தைரியமாக சுற்றுகிறான்.

ஒருமுறை எல்லைக்கு அழைத்துச் சென்று, கிரேக்க எல்லைக் கோடான நீல நிறக் கோட்டைக் காட்டி கூறுகிறார். “ இந்தக் கோட்டைத் தாண்டி சும்மா, ஓர் அடி வைத்து விடமுடியாது. வச்சா ? ” என்று கூறி வலதுகாலை உயர்த்துகையிலேயே, அடுத்த நாட்டு இராணுவ அதிகாரி துப்பாக்கியுடன் விரைந்து வருவது தெரிகிறது. அடுத்து என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “ என்பது.

அவன் பனிமழையில் ஒரு ரயில் பெட்டிக்குள் நுழைய கூடவே ஒரு மனிதன் வருகிறான். அம்மனிதனின் அனுமதியின்றி நுழைந்ததற்கு மன்னிப்பு கோரி பனிக்காக அண்டுகிறான் டி.வி.காரன். அந்த அகதியின் தோற்றமும் முகமும் டி.வி.காரனக்கு சந்தேகத்தையும் நம்பிக்கையையும், ஆர்வத்தையுமூட்டுகிறது. ஒரு பையன் ஓடி வந்து ரொட்டி வினியோகம் செய்து விட்டு, “ காற்றாடி பற்றி கதை சொல்லு ” என்று அகதியைக் கேட்க, அகதி, காற்றாடி ( பட்டம் )யிலிருந்து, ராக்கெட், அதிலிருந்து வான எல்லை, நாடுகளின் எல்லைகள் வரை சொல்லி விட்டு, மேற்கொண்டு இன்னொரு நாள் பேசலாமென்கிறான்.

டி.வி.குழு ரெயில்வே பெட்டிகளை, அங்கு வசிக்கும் ஏராளமான – கணக்கில் வராத அகதிகளைப் படமாக்குகிறது. அறைக்கு வந்து T.V. இளைஞன் பழைய படம் ஒன்றைப் போட்டு, மறைந்துபோன கிரேக்க வம்சாவளி மந்திரியின் பேச்சையும், முகத்தையும் ZOOM செய்து கவனிக்கிறான். அவன் சந்தேகம் தீருகிறது. ரயில்பெட்டியில் பார்த்த நபரேதான். டி.வி.காரனும் அவனது குழுவும் வருகை தரும் உணவு விடுதியில் ஓர் இளம்பெண் இவனையே உற்று கவனிக்கிறாள். இவனது அறை வரை வந்து விட்டு, தான் போக வேண்டுமென்று கூறி போய் விடுகிறாள். அந்த இளம் கிரேக்க வம்சாவளி அகதிப் பெண் டி.வி.காரனின் மற்றொரு கேள்விக்குறி.

ஒருநாள் அவளிறியாது பின் தொடர்ந்து அகதிக் குடியிருப்பிலுள்ள அவளுடைய இடத்தையடைகிறான். தனக்கு இளைய குழந்தைகள் இரண்டைப் படுக்க வைத்து விட்டு கூறுகிறாள். பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றுக்கு அப்பாலிருந்து அகதிகளாய் வந்ததையும், அம்மா இறந்ததையும், அப்பா டெலிஃபோன் பழுது பார்ப்பவராய் வேலை பார்ப்பதாய் கூறுகிறாள். மோசமான பருவநிலையால் டெலிபோன்கள் நிறைய பழுதடைந்ததால் இராப்பகலாக மஞ்சள் சீருடையில் டெலிபோன் பணியாளர்கள் மழையில் வேலை செய்கிறார்கள். அப்பெண்ணின் அப்பா வருகிறார். டி.வி.காரனுக்கு மேலும் ஒரு திடுக்கிடல். வந்தவர், அகதிகள் ரயிலில் பார்த்த அதே ஆள். தங்களோடு உணவருந்த அழைக்கிறார்.

இரண்டொரு நாட்களில் ஆற்றுக்கு மறுபுறமுள்ள தேசத்திலிருக்கும் இளைஞனுக்கும், இங்குள்ள டெலிபோன்காரரின் பெண்ணுக்கும் சோகமான கல்யாணம் நடக்கிறது.மறுகரையில் மணமகனும் அவனைச் சேர்ந்தவர்களுமாய் நிற்க, இக் கரையில் மணப் பெண்ணும் அவள் தந்தையும், மற்ற அகதிகளும் நிற்க, பாதிரியார் சைக்கிளில் வந்து ஆணும் பெண்ணும் அகதிகளால் ஆறு பிரிக்க விலகி நிற்கும் நிலையிலேயே திருமணச் சடங்கை முடித்தவராய்ப் போகிறார்.

“ என் கணவன் ஒருநாள் ஆற்றைக் கடந்து வந்து என்னை அழைத்துப் போகப் போகிறான் ” , என்று மணப்பெண் கூறுகிறாள்.

” நீங்கள் எனக்கு காற்றாடி கதையை சொல்லி முடிக்கவில்லையே ” என்று கேட்கிறான் ரொட்டி வினியோகிக்கும் பையன்.

” நீயே முடிவை அனுமானித்துக் கொள் ”, என்கிறார். மணப்பெண்ணின் தந்தையும் டெலிபோன் பணியாளருமான அகதி. டி.வி.கார இளைஞனைப் பொறுத்தளவு அவனும், கிரேக்க மக்களும் தேடும் மறைந்துபோன மந்திரியும் அவராகத் தானிருக்க வேண்டும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. டி.வி.குழு புறப்படுகிறது.

இப்படத்தில் காணாமற்போன மந்திரியாகவும், அகதியாக டெலிபோன் பணியாளராக வரும் மிகச் சிறந்த இத்தாலி நடிகரும், சர்வதேச அளவில் புகழும் பரிசும் பெற்ற மார்செல்லோ மாஸ்ட்ராயினி நடிக்கிறார். தியோ ஆஞ்செலோபௌலசின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்