Posted inPoetry
கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்
குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!
*********
பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு
********
நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!
********
கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!
********
கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!
********
தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!
*******
சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
********
சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கவிதா பிருத்வி
தஞ்சை