எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்

எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்




உனக்கென்று
பிரத்யேகமாய்
எதுவுமில்லை
எப்பொழுதாவது
தோன்றுவதை
சலிப்பின்றி
சலனமின்றி
கிறுக்கிக்
கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
உன்பார்வைப்பட்டு
பெருங்காதலின்
மாயையால்
கவிதையாகலாம்
அல்லவா

மு.ராம்குமார்
கல்லூர்
9566317364