எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 18: கரையேற வேண்டியது யாரு?
வர்க்கப் பாகுபாட்டிற்கும் வர்ண வகைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு?
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்?
தங்கேஸ் கவிதைகள்
நூல் அறிமுகம்: என். சரவணனின் ”அறிந்தவர்களும் அறியாதவைகளும்” – பொன் விஜி
வாசிப்பு நண்பர்களே,
ஊடகத்துறை , பத்திரிகைத்துறை, வாசித்தல், கட்டுரைகள் எழுதுதல், விமர்சனங்கள், நாவல்கள், தேடுதல், இவை எல்லாவற்றையும் தாண்டி, *ஆவணப்படுத்துதல் * என்பது ஒரு கலையாகவும் இருக்கலாம், ஒரு கொடையாகவும் இருக்கலாம், இடைவிடாத தேடலாகவும் இருக்கலாம், சலிப்புத்தட்டாத ஒரு உற்சாகமாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் பலருக்கும் இருக்கலாம், (பல ஐரோப்பிய, ரஷ்ய, வட மற்றும் தென் அமெரிக்க, ஆசிய நாட்டவர்கள்) இவற்றில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்களில் ஒருவர் தான்
*என். சரவணன் * என்ற படைப்பாளி.
அவரது *வரலாறு, அரசியல்* சார்ந்த இந் நூலில் அவர் முழுக்க முழுக்க *தேடலின்* அடிப்படையில் பல அறிந்திராத *இலங்கையில் * வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப் பற்றி மிக நுட்பமான ஆதாரங்களுடன் நமக்கு அறியத்தருகிறார். அதற்காகவே அவர் பல காலம் செலவு செய்திருப்பது இதில் காணக்கூடியதாக உள்ளது. அதற்காக அவரை மிகக் கடுமையாக *வாழ்த்துகிறேன்*
ஆசிரியர் *என். சரவணன் அவர்கள் தனது முன்னுரையில், பத்திரிகைத்துறையிலும் ஊடகத்துறையிலும் தன்னை மேம்படுத்தியவர்களை மிக ஆழமாக நினைவு கூர்வது, அவரது திறந்த மனதைக் காட்டுவது கவனிக்கத்தக்கது. மிகக் குறுகியகாலத்தில் *முகப்புத்
இங்கே 25 வேறுபட்ட மனிதர்களின் வரலாறுகளை முன்வைக்கும் ஆசிரியர், அவர்களது பிறப்பு, தொழில், அது சார்ந்த அவர்களது உழைப்பு, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகளை ஆராய்கிறார். இதில் *விஜேசிங்க முதலியார் * என்பவரைத் தவிர மற்றைய 24 நபர்களும் அயல் தேசத்தை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*சாதி, சமய * ஒடுக்கு முறைகள் இன்றோ, நேற்றோ தோன்றியது அல்ல. அது பண்டைய காலம் தொட்டு *நீண்ட கயிறு * போல் பல தலைமுறையாகத் தொடரும் ஒரு சீர்கேட்டை இங்கு பதிவாக்குகிறார். அதிலும் குறிப்பாக *ரொடியர்* என்ற ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், அவர்களை அதிலிருந்து விடுபடக்கூடாது என்று பல வகைகளிலும் எதிர்ப்பு நடந்ததையும், பின்னர் அவர்கள் எப்படி அதிலிருந்து படிப்படியாக விடுதலையானார்கள், அதற்கு வித்திட்டவர் யார் என்பதனைத் தேட, நண்பர்களே நூலை வாசியுங்கள், ஆச்சரியப்படவைக்கும் அரிய செய்திகளைக் காணலாம்.
*பதூதா* என்ற *மொறக்கோ* நாட்டை
*பிலிப்பு பால்டேஸ் * ஒரு டச்சு நாட்டு அமைச்சர், பின் அவர் ஒரு பாதிரியானார். ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றியதும் அவரை இங்கே அனுப்பியது. அதன்பின்னர் ஏற்பட்ட மதமாற்றம், சாதிய வேறுபாடுகள், ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்திய விதம், குடும்ப இணைப்புகள் போன்றவற்றை இவரது காலகட்டத்தில் அறியக்கூடிய அருமையான தகவல்கள்
*19 வருடங்கள்* இலங்கையில் ஒரு கைதி போலவே வாழ்ந்த *ரொபர்ட் நொக்ஸ்* எப்படி அங்கிருந்து இங்கிலாந்துக்குத் தப்பிப் போனார், அதற்குரிய திட்டங்கள் என்ன? இடைப்பட்ட காலங்களில் அவரது வளர்ச்சி எப்படி, அவரது ஆரம்ப கடல்பயணங்களில் ஏற்பட்ட ஆபத்துக்கள், போன்ற வரலாற்றுச் சம்பவங்களை ஆசிரியர் தெழிவு படக் கூறுகிறார்.
கல்கிசையிலுள்ள *மவுன்ட் லெவினியா* என்ற பெயர் வரக் காரணமென்ன, அதற்கும் *தேசாதிபதி மெயிற்லண்ட்* க்கும் என்ன தொடர்பு, இவர் மூலமாக *ரொடியர் * சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், போன்ற *அறிந்திராத பல * தகவல்களை ஆசிரியர் தருகிறார்.
*1815* ல் *கண்டி இராச்சியம் * ஆங்கிலேயர் வசம் பலத்த எதிர்ப்புகள் இன்றி வீழ்ந்தது. அதற்குரிய சூத்திரகாரன் யார்? கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற என்னவெல்லாம் தந்திரங்களைச் (உளவாளிகள் உட்பட) செய்தார், கடைசிக் கண்டி மன்னன் *விக்கிரமசிங்கன்* குடு
டொய்லியைப்பற்றி குறிப்பிடும் ஆசிரியர், இப்படியாக முடிக்கிறார், *இலங்கையில் வரலாற்றில் டொய்லி ஒரு நயவஞ்சகன். ஆங்கிலேயர்களுக்கோ அதிக இரத்தம் சிந்தாமல் இலங்கையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்த சாணக்கியன் **
மேலும், *பெர்கியூசன், வில்லியம் ஸ்கீன் ஹென்றி மார்ஷல் பிளாவ்ட்ஸ்கி, ஓல்கொட், மேரி ரட்ணம், * இவர்களைப்போல் இன்னும் பல நிர்வாகத் திறமையுடையவர்களைப் பற்றியும் இன் நூல் சிறப்பிக்கின்றது என்றே சொல்லலாம்.
இங்கே மிக முக்கியமாக ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இந்த ஆளுமைகள் இலங்கையில் இருந்தபோதும், வெளியே சென்றபோதும் பல *நூல்களை * எழுதியுள்ளார்கள். அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி, எந்த நோக்கத்திற்காக, மேற்கொண்டும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்குப் பயன்படுத்தியமை பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.
இங்கே அதிகமான நூல்களை சிங்கள மொழியில் அப்பப்போ மொழிமாற்றம் செய்யப்பட்டதுபோல், தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இருந்த போதிலும், இவ்வளவு சிறப்பாக பல விடயங்களை வாசிப்பாளர்களுக்குக் கொடுத்ததையிட்டு ஆசிரியர் என். சரவணன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவிப்பதோடு, *அறியப்படாத பல வரலாற்று நாயகர்களை * அறிந்து கொள்வது நமது கடமை என்று சொல்லி, வாசிப்பாளராகிய நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கோரி நிறைவு செய்கிறேன்…
புத்தகத்தின் பெயர்: அறிந்தவர்களும் அறியாதவைகளும்
ஆசிரியர் : என். சரவணன்
விலை: 700/- (இலங்கை ரூயாயில்)
பக்கம்: 221
நூல் வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
பெறுவதற்கு : பாத்திமாபுக்ஸ் 0094775494977
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
நன்றிகள்
பொன் விஜி – சுவிஸ்
நூல் அறிமுகம்: திருக்குமரன் கணேசனின் ’கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ – பாவண்ணன்
உரையாடலுக்கான வாசல்
கடந்த நூற்றாண்டில் நிலவிய சாதியப்பார்வைக்கும் இந்த நூற்றாண்டில் இப்போது நிலவும் சாதியப்பார்வைக்கும் நுட்பமான அளவில் சில வேறுபாடுகள் உள்ளன. கொரானா வைரஸ் போல அதுவும் தன்னை காலந்தோறும் உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. தீண்டாமையின் பெயரால் முன்னொரு காலத்தில் சொன்னதுபோல யாரும் யாரையும் தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள் வராதே, குளத்துக்குள் இறங்காதே என இன்று தடுத்துவிட முடியாது. அனைவரும் கலந்து நடமாடுவது இன்று இயல்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக்கொண்டு தம் சாதியப்பற்றை உதறியும் சாதியக்கோட்டைக் கடந்தும் வந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. அதே சமயத்தில் தம்மை அறியாமலேயே ஆழ்மனத்தில் இன்னும் சாதியப்பார்வையைச் சுமந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். சாதியப்பார்வையை முற்றிலுமாகக் கடந்து அனைவரும் நல்லிணக்கப்பார்வையுடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கைமுறை எதிர்காலத்தில் சாத்தியமாக வேண்டும். அதற்கு, சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஓர் உரையாடல் நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அந்தப் புள்ளியை நோக்கி அனைவரும் நகர்ந்துவர வேண்டும்.
அந்த உரையாடலுக்கான ஒரு வாசலை இளம் எழுத்தாளரான திருக்குமரன் கணேசன் தன் சுயசரிதைக்குறிப்புகள் வழியே திறந்துவைத்திருக்கிறார். கசப்புகள் மண்டிய பல கணங்களை அவர் தம் இளம்பருவத்தில் கடந்துவந்திருக்கிறார். சாதி என்னும் நெருப்பு அவரை தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அத்தகு பல தருணங்களை அவர் தேர்ந்தெடுத்த சிற்சில நிகழ்ச்சிகள் வழியாக இத்தொகுதியின் மூலம் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். சாதியினால் சுட்ட வடு எத்தகைய வலி மிகுந்தது என்பதை நம்மை உணர்ந்துகொள்ள வைத்திருக்கிறார்.
வடுக்களை ஏற்படுத்தியவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். ஒவ்வொரு நாளும் அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களே. பெரும்பாலும் ஆசிரியர்கள். கூடப் படித்த நண்பர்கள். நண்பர்களின் குடும்பத்தார்கள். தெருவில் வசிப்பவர்கள். அன்பொழுகப் பழகுகிறவர்களின் நெஞ்சத்தில் கூட சாதியத்தின் நஞ்சுக்கொடி சுற்றியிருக்கிறது. தன்னிரக்கம், குற்ற உணர்ச்சி ஆகிய இரு உணர்வுகளும் கலந்துவிடாதபடி கச்சிதமான மொழியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முன்வைத்திருக்கும் திருக்குமரனின் எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது.
எதிர்காலத் தலைமுறையினரான மாணவ மாணவிகளின் நெஞ்சிலிருந்து சாதியப்பார்வையை அழிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஆசிரியர் பெருமக்களே சாதியத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் நெருப்பெனச் சுடுகிறது. தம் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களே அத்தகு பார்வையுடன் நடந்துகொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்து வெளிப்படுத்தியுள்ளார் திருக்குமரன். சாதி இரண்டொழிய வேறில்லை என வகுப்பறையில் சொல்லிக்கொடுக்கும் பாடத்தின் வரிகள் அந்த ஆசிரியர்களுடைய நெஞ்சில் பதியாமலேயே போய்விட்டதை காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும்.
அந்நிகழ்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தைப் படிக்கும்போது அந்த ஆசிரியர்மீது அருவருப்புணர்வே எழுகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடக்கிறது. மாணவ மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆசிரியரொருவர் ஏற்றிருக்கிறார். முதன்முதலாகப் பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் ஆவலோடு அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிச் சென்று செலுத்திவிட்டு, பயணம் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறான் ஒரு சிறுவன். குறிப்பிட்ட நாளில் ஒரு பகல் வேளையில் சுற்றுலாவுக்கு பேர் கொடுத்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்கு வருமாறு அறிவிக்கிறார் ஆசிரியர். ஆவலின் காரணமாக, சொன்ன நேரத்துக்கு முன்பாகவே பள்ளிக்குச் சென்று காத்திருக்கிறான் சிறுவன். பதிவு செய்திருந்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த இரண்டு வாகனங்கள் வந்து சேர்கின்றன.
மாணவ மாணவிகளின் பெயர்ப்பட்டியலை கையில் வைத்திருக்கும் ஆசிரியர் அவர்களை வாகனங்களில் அமரவைக்கும் விதத்தில் அவர் கையாளும் தந்திரம் அவருடைய உள்ளப்போக்கைப் புலப்படுத்திவிடுகிறது. முதலில் சன்னதித் தெருவிலிருந்து வரும் பிள்ளைகளின் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்லி அழைத்து அவர்களை இரு வாகனங்களிலும் முதல் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதன் பிறகு நடுத்தெருப் பிள்ளைகள். அடுத்து மேலத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகள். அவர்களை அடுத்திருக்கும் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதற்குப் பிறகு மாரியம்மன் கோயில் தெரு பிள்ளைகளின் பெயர்களைப் படிக்கிறார். இறுதியாக வடக்குத்தெரு, தெற்குத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகளை அழைத்து இறுதி வரிசைகளில் அமர்ந்துகொள்ளும்படி அறிவிக்கிறார். வகுப்பறை வருகைப்பதிவேட்டில் கடைபிடிக்க முடியாத சாதிப் பிரிவினையை சுற்றுலா வாகன இருக்கை வரிசைகளில் கடைபிடித்து நிறைவேற்றுகிறார் அந்த ஆசிரியர். சுற்றுலா முடிந்து திரும்பும்வரை ஒருவரும் இடம் மாறி அமரக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அந்த ஆசிரியரிடம் வெளிப்படும் சாதிவெறி நோக்கும் தன் சாதி மேட்டிமைப்பார்வை வெளிப்படையாக வெளிப்பட்டுவிடாதபடி செயல்படும் தந்திரமும் அருவருப்பூட்டுகின்றன. இன்று சமூக ஊடகங்களில் வெளிப்படுவதும் கூட இத்தகைய மனநிலைதான்.
வகுப்பறையிலேயே ஓர் ஆசிரியரிடம் வெளிப்பட்ட சாதியப்பார்வையை இன்னொரு அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன். ஒருநாள் தேசத்தலைவர்களின் படங்களை வகுப்பறையில் மாட்டுவதற்காக சுவரில் நேர்க்கோட்டில் ஆணியடிக்கச் சொல்கிறார் ஓர் ஆசிரியர். காந்தி, நேரு, திலகர் என மூன்று படங்களை ஒரே நேர்க்கோட்டில் தொங்க வைத்துவிட்டு, நான்காவதாக அம்பேத்கர் படத்துக்கான ஆணியை படவரிசையிலிருந்து சற்றே கீழே தாழ்த்தி அடிக்கச் சொல்கிறார். விவரம் புரியாமல் “அந்த படத்தையும் நேரா மாட்டியிருந்தா அழகா இருக்கும் சார்” என்கிறான் சிறுவன். அப்படி சுட்டிக்காட்டியதற்காக கோபம் கொண்ட ஆசிரியர் அச்சிறுவனை கையை நீட்டச் சொல்லி குச்சியால் அடிக்கத் தொடங்குகிறார்.
இன்னொரு அத்தியாயத்தில் மற்றோர் ஆசிரியரின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் திருக்குமரன். வகுப்பில் படிக்கும் மாணவியை தொட்டுப் பேசும் மகிழ்ச்சிக்காக பக்கத்தில் அழைத்து நிற்கவைத்துக்கொள்ளும் அற்பமனம் கொண்டவர் அந்த ஆசிரியர். ஒருநாள் அம்மாணவியை அழவைத்து, பிறகு அமைதிப்படுத்திப பேசுவதுபோல தொடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார் அவர். அதற்காகவே திருத்தப்பட்ட தேர்வுத்தாளைக் கொடுக்கும் தினமன்று பதினைந்தாவது ரேங்க் வாங்கிய மாணவனை முதல் ரேங்க் என்று அறிவித்துவிட்டு, முதல் ரேங்க் வாங்கிய அம்மாணவியை பதினைந்தாவது ரேங்க் என அறிவிக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோல தேர்வுத்தாளை கைநீட்டி வாங்கும் அவள் அழத் தொடங்குகிறாள். உடனே அவள் தோளைத் தொட்டுத் திருப்பி காதைப் பிடித்தித் திருகி “பறையன் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துட்டான். உனக்கு என்னடி ஆச்சு?” என்று அவளை மேலும் கலங்கவைத்து அழவைக்கிறார். பிறகு மெல்ல மெல்ல அமைதிப்படுத்திவிட்டு அவளே முதல் ரேங்க் வாங்கியிருப்பதாக அறிவிக்கிறார்.
ஆசிரியர் தொடர்பாக இன்னொரு காட்சி. பள்ளிப்படிப்பை முடித்து பட்டப்படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். புதிய ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வந்து மாணவ மாணவிகளிடம் ஒவ்வொருவராக எழுந்து நின்று தன் பெயர், ஊர், படித்த பள்ளிக்கூடம், இலட்சியம், குலதெய்வத்தின் பெயர் எல்லாவற்றையும் வரிசையாகச் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். பெயர், ஊர், பள்ளி, இலட்சியம் எல்லாம் சரி.
குலதெய்வத்தின் பெயர் எதற்காக என்று புரியாமல் குழம்புகிறான் அவன். அதற்கான விடை அடுத்த நொடியே அவனுக்குப் புரிந்துவிடுகிறது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி எழுந்து நின்று தன் குலதெய்வத்தின் பெயரைச் சொன்னதுமே, அவள் சாதியை ஊகித்து அறிந்துகொள்ளும் அவருடைய அற்பமனத்தை அவன் எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் வரிசைப்படி தன் முறை வந்த போது, தன் குலதெய்வம் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் என்று தெரிவிக்கிறான். அவரால் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் போய்விடுகிறது. கடுகடுப்புடன் அடுத்த மாணவனிடம் தம் கேள்விகளை முன்வைக்கச் சென்றுவிடுகிறார் அவர்.
மற்றொரு காட்சி. மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருக்கிறான் திருக்குமரன். வீட்டிலிருந்து தொலைவான ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது என்பதுதான் காரணம். அப்போது பாரதி என்பவன் அவனுக்கு நண்பனாக அமைகிறான். அவனோடு சேர்ந்து பாரதியின் வீட்டில் மதிய உணவு உண்பது எப்படியோ பழகிவிட்டது. பாரதியின் அம்மாவும் அவனிடம் பாசமாகவே இருக்கிறார். தினமும் இருவரையும் ஒன்றாக உட்காரவைத்து உணவு பரிமாறுகிறார் அவர். ஒருநாள் அவன் வரவில்லையென்றாலும் அதற்காக ஆதங்கப்படுகிறார் அந்த அம்மா. ஒருமுறை இருவருக்கும் வழக்கம்போல கறிக்குழம்பு ஊற்றி சாப்பாடு பரிமாறுகிறார் அவர். அப்போது எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு வேலையாக பாதி சாப்பாட்டில் எழுந்து போகிறான் பாரதி. அவன் இல்லாத தருணத்தில் தன் மகனைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் சில கேள்விகளை திருக்குமரனிடம் கேட்கிறார் அந்த அம்மா. அவள் மனம் நிறைவு கொள்ளும் வகையில் அவனைப்பற்றி பெருமையாகவே சொல்கிறான் திருக்குமரன். இறுதியில் அந்த அம்மா அங்கலாய்ப்புடன் ”எல்லாம் சரிதான் தம்பி. ஆனா திடீர்திடீர்னு இந்த பறப்பசங்கள வீட்டுக்குள்ள அழச்சிட்டு வந்துடறான். அத நினைச்சாதான் வருத்தமா இருக்குது” என்று சொல்கிறார். அதற்குப் பிறகு அவனால் தொடர்ந்து சாப்பிடமுடியாமல் எழுந்துவிடுகிறான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனால் பாரதியின் வீட்டுக்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் தாயார் சொன்ன சொற்களை நண்பனிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. நல்ல அம்மாவின் மனத்திலும் இந்த மேட்டிமைப் பார்வை பதுங்கியிருப்பதை வேதனையுடன் தாங்கிக்கொள்கிறான். உண்மையை வெளிப்படுத்தாமலேயே அந்த நட்பைத் துண்டித்துக்கொள்கிறான்.
அன்பின் ஈரத்துடன் தொடங்கி பாதியிலேயே முறிந்துபோன மற்றொரு நட்பு பற்றிய காட்சியும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இணைபிரியாத தோழனாக இருக்கிறான் ஒரு சிறுவன் அவன் பெயர் கார்த்திகேயன். உயர்சாதியைச் சேர்ந்தவன். ஆனால் அதுசார்ந்த எவ்விதமான வேறுபாடான பார்வைகளும் இல்லாதவன். ஒருநாள் தன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கொய்யாமரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் பறிக்க திருக்குமரனையும் அழைத்துச் செல்கிறான் அவன். மரம் வீட்டுக்குப் பின்னால் இருக்கிறது. வீட்டின் எல்லா அறைகளையும் கடந்துதான் பின்கட்டுக்குச் செல்லவேண்டும். வழியில் அமர்ந்திருந்த அவன் தாத்தா “அவாள்லாம் நம்ம ஆத்துக்குள்ள வரக்கூடாதுன்னு நோக்கு தெரியாதா என்ன? போகச் சொல்லுடா வெளியில” என்று தாத்தா சத்தம் போடுகிறார். அதைப் பொருட்படுத்தாத நண்பனை மரம் வரைக்கும் அழைத்துச் சென்று பழங்களைப் பறிக்கவைக்கிறான். இருவரும் ஓடோடி பள்ளிக்குத் திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக ஒரு பேருந்தில் இருவரும் இளைஞர்களாக சந்தித்துக்கொள்கிறார்கள். பழைய நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் “டேய், கார்த்தி, எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ வருஷமாச்சி?” என்று ஆவலோடு பேசுவதற்கு நெருங்கிச் செல்கிறான். ஆனால் கோவில் பூசாரி கோலத்தில் இருந்த அவன் பேருந்து இருக்கையில் ஜன்னலோரமாக உடல் நசுங்க நகர்ந்து உட்கார்ந்தபடி ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறான்.
நட்பை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்த காதலையும் ஒருநாள் துறந்துவிட நேர்ந்ததை மற்றொரு அத்தியாயம் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. காதல் காலம் முடிவடைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலம் வந்தபோது அந்தப் பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி தன் பெற்றோரிடம் பேசி ஏற்றுக்கொள்ள வைத்துவிடமுடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். தொடர்ந்து, அடுத்த கணமே காதலனைத்தான் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியுமே தவிர, காதலனுடைய பெற்றோரையோ, அவர்கள் வாழும் சூழலையோ ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது என்றும் அதனால் திருமணமானதும் தனியாக வந்துவிடவேண்டும் என்றும் அவள் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். அந்தக் காதல் தோல்வியடைய அதுவே காரணமாகிவிடுகிறது. இப்படி சாதிவெறுப்பு நோக்கினை எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறு தருணங்களை சின்னச்சின்ன கட்டுரைகள் வழியாக பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன்
திருக்குமரன் தன் தாத்தா மொட்டையன் பற்றியும் தந்தை கணேசன் பற்றியும் தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் இத்தொகுதியின் மிகமுக்கியமான பகுதிகள். இரு பகுதிகளுமே காவியத்தன்மையுடன் உள்ளன. இருவரும் இருவேறு தன்மை கொண்டவர்கள். அமைதியாக இருக்கவேண்டிய தருணங்களில் அமைதி காத்தும் எதிர்ப்பைப் புலப்படுத்தவேண்டிய தருணங்களில் துணிவுடன் எதிர்த்தும் சாதியத்தைக் கடந்த தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார் தாத்தா மொட்டையன். ஆனால், ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கூட, கட்சி மேலிடம் தன்னை தொடர்ச்சியாக மூன்றுமுறை ஒதுக்கிவைக்கும் நிலையில் கூட அமைதி காத்து தன் எல்லையை தானே சுருக்கிக்கொள்கிறார் தந்தை கணேசன். எந்த நிலையிலும கட்சித்தலைமையை எதிர்த்து கசப்புடன் ஒரு சொல் கூட சொல்ல அவர் மனம் துணியவில்லை. அவருக்கு இருந்த ஒரே ஆசை தலைவர் உயிர்துறப்பதற்கு முன்னால் தன் உயிர் பிரிந்துவிடவேண்டும் என்பதுதான். வியப்பூட்டும் வகையில், அவர் விரும்பிய விதமாகவே அவருடைய மரணம் அமைந்துவிட்டது. தன் இறுதிமூச்சு வரைக்கும் தன்னை தன் கட்சி ஓர் அடியாளாகவே நடத்தியது என்பதை அறியாமலேயே அவர் மறைந்துவிட்டார்.
கணேசனின் நெஞ்சில் நிறைந்திருந்த உணர்வை ஆழமும் உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த கட்சிப்பற்று என்று குறிப்பிடலாம். ஆனால், காலமெல்லாம் அவரை தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு அங்குலம் கூட வாழ்வின் ஏணிப்படியில் ஏறிவிடாதபடி என்றென்றைக்குமாக அவரைத் தரையிலேயே தடுத்து நிறுத்திவைத்திருந்த கட்சிக்காரர்களின் நயவஞ்சகத்தையும் நம்பிக்கை துரோகத்தையும் அப்பட்டமான சுயநலத்தையும் குறிப்பிட தமிழில் சொல்லே இல்லை.
இந்நூலில் உள்ள பெரும்பாலான நினைவுச்சித்திரங்களில் சாதிப்பெயர் சாதி அடையாளத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இழிவுக்குறிப்பு, அழகின்மை, முரட்டுத்தனம், கரிய உடல் என வெவ்வேறு பண்புகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. நெஞ்சின் ஆழம் வரைக்கும் சென்று படிந்துவிட்ட சாதியப்பார்வைதான் இதற்குக் காரணம். இது நெருக்கமான நண்பர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பே இல்லாத மனிதர்களிடமும் வெளிப்படுகிறது. நட்புச்சக்திகளுக்கு அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி நட்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகமுக்கியம். நட்புச்சக்திகளின் வட்டம் விரிவடையும் தோறும் நல்லிணக்கச் சமூகத்தின் எல்லைகளும் விரிவடையும்.
– பாவண்ணன்
நூல்: கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – தன்வரலாறு
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
விலை: ரூ. 175/-
வெளியீடு: காலச்சுவடு,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் -629001.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி
*நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்*
*நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்*
*நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்*
*நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
*நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி*
நண்பர்களே இதை நான் கூறவில்லை, பெரியார் கூறியதாக *ஆசிரியர் சரவணண்*அவர்கள் இக்கட்டுரையில் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஆசிரியர் சரவணன் அவர்கள் தான் சொல்ல வந்த விடயத்தை வாசிப்போர் ஆகிய எங்களை தனது சிந்தனைக்குள் இழுத்துச் செல்வதை இந்த நூல் மிக அழகாக எடுத்துச் செல்கின்றது
# *தமிழனுக்குக்* கொடுக்பப்பட்ட நிறம் என்ன?
இது போன்ற 32 வகையான சிறு தலையங்கங்களை உள்ளடக்கி ஆராய்கிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.
*அருந்ததியர் * என்ற ஒரு இனம் *இலங்கையில் * இருப்பதாக இப் புத்தகத்தின் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை காலமும் *பஞ்சமரைத் தான், *கிட்ட வராதே * அங்கேயே விலகிநில் என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பதனை, அதனைக் காட்டிலும் மிகக் கீழ்மையான *நீ துப்பரவு செய்யும் வேலைக்குத்தான் லாயக் * என்று போற்றப்படும் இனமான இந்த *அருந்ததியர்* இருந்துள்ளமையும், ஏன் தற்போது கூட அவர்களது அடுத்த நேர சாப்பாட்டிற்குப் *பிச்சை* எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து (இலங்கையில்) வருவதை ஆசிரியர் *என். சரவணன்* அவர்கள் தனது மிக நீண்ட தேடலுக்குப் பின் இங்கே பதிவு செய்கிறார்.
(உண்மையும் தான்).
ஆசிரியர்கள் : என். சரவணன்
விலை: ரூ. 180/-
பக்கம் : 196
வெளியீடு : எழிலினி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்
நூல் : ஏலோ…லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹360/-
பக்கங்கள் – 384
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும்.
“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !……..
ஏலக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும். ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம்! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா?
மலைக் காடுகளில் காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை, கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.
என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர்! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர்!
டி.செல்வராஜின் ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின் ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும்; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும், அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]
அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ… லம்”. ஆசிரியர் ஜனநேசன். ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .
“இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை. இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள், குறுநாவல்கள் தந்துள்ளார். இரா.வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர்.
இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும், 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .
பொதுவாய் தேயிலை, காப்பி, ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும், சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள். ஆம், வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது. ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும். இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.
கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது. ரவி வழியே புதினம் விரிகிறது.
அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம்; அவர் எப்போதாவது வந்து போகிறவர். மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர், கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர். அவரின் உதவிக்கு குப்பய்யா .
இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர், சீனி மாதாரி, பரமன், சின்னாத்தேவர், இராமர், குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய், சிவனம்மா, மாரியம்மா உள்ளிட்ட பெண்கள், கோட்டி நாய்க்கர், மாரிமுத்து, முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .
“இல்லம்மா! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ, சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான்; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான்.! ஏம்மா, சக்கிலி பறையன்னா என்னம்மா?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி, நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும். ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .
கள்ளர், தேவர், சக்கிலியர், பள்ளர், பறையர், நாய்க்கர், செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள். சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா? இல்லையே! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.
“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம்!” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .
லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை. அவர்களின் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, அன்பை, வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது. “ இதயமற்றவர்களின் இதயமாக, ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது.
தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில், கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம், லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன் வார்த்தைகளைக் கொட்டினார்..
“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு, பறைக, மாதாரி, கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல… அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும்..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .
வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது. நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .
யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர், பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது. போராட்டம் வென்றது. அடியாள், வஞ்சகம், சதி எல்லாம் காட்சியாகிறது. ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் எல்லாம் பறிபோனது. தலைகீழானது .
51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக, அரசியல்,
பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.
ஆயினும், எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒன்று மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர! இது என் புரிதல் கோளாறா? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே! ஏன்? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !
இரண்டு, போலீசும், அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம். ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா?
மூன்று, ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா?
11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே. தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம், வட இந்திய தொழிலாளர் வருகை, அவர்கள் படும்பாடு அவர்களின் பலம், பலவீனம், அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு, பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .
“காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க. உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க.. அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை! கருமாயப்பட்ட பொழப்பு….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க…” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .
புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது. ஒன்றுமில்லை. மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது. அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .
பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அது பெரும் உண்மை.
சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன், நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு, 2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார். கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும், புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்.
கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம். தமிழில் மிகக்குறைவு. ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார். அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று. பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி!
சு.பொ.அகத்தியலிங்கம்.
20/8/2022.








