Poem - Cat murder | பூனையின்கொலை

பூனையின்கொலை – கவிதை

ஒவ்வொருமுறையும் கூண்டுக்கிளிகளைத் தின்றுவிட யத்தனிக்கும் அப்பூனை. விரட்டிவிட்டாலும் சுவர்மேல்நின்றபடி கிளிகளைவெறிக்கும். இரவானால் உள்ளேவைத்துவிடும்நான் நேற்றுமறந்துவிட்டேன். விடிந்துபார்க்கையில் கூண்டெங்கும் சிதறிக்கிடக்கின்றன கொலைக்கான தடயங்கள். மறந்துவிட்டதற்கு பதில் திறந்துவிட்டிருக்கலாம். உண்மையில் கொன்றது பூனைதானென நான் சமாதானமடைகிறேன்.   எழுதியவர்  கௌ. ஆனந்தபிரபு   இப்பதிவு…