Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது – அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு



Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதமர் நரேந்திர மோடி 2022 பிப்ரவரி 07 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் திரும்பிப் பார்க்கின்ற போது ​​அந்த உரை அவருக்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது குடிமக்கள் அவரிடமிருந்து நாட்டின் மீது அரசியல்வாதி ஒருவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையையே எதிர்பார்ப்பார்கள்; அனைத்துக் கட்சிகள், எம்.பி.க்களிடம் அடிப்படையான மரியாதையை அவர் வெளிப்படுத்துவார் என்றே அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர்தான் அவையின் தலைவர். அவர் அங்கே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவராக இருப்பதில்லை. அவரையும், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் எழுப்புகின்ற கேள்விகளின் மூலமாக பாராளுமன்றம் மற்றும் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவே பிரதமரும், அவரது அரசாங்கமும் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்றாலும் பிரதமர் வேறு தரத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறார். திமிர் பிடித்தவராக அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவராக பிரதமர் இருக்க ​​முடியாது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் அன்றைய பேச்சு பொய்யாக்கியுள்ளது. தன்னுடைய பொறுமையை இழந்து போன அவருடைய பேச்சின் தொனி ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கேட்பதாகவே இருந்தது. மேலும் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை அதாவது எதிர்க்கட்சியை மிகவும் மலினமாகவே அவர் நடத்தியிருந்தார்.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதமரின் பேச்சிற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் காரசாரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமரை ‘ராஜா’ என்று அன்றைய தினம் ராகுல் விளித்திருந்தார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை பிரதமர் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பன்முகத்தன்மையைப் புறக்கணிப்பது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பலவீனமான உறவைச் சிதைப்பது குறித்து ராகுலால் மோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே ஆள முடியாது என்றும், மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகப் பேசியிருந்தார். அரசியலமைப்பு ரீதியாக இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்றும், பாஜகவின் பார்வையில் இருப்பதைப் போல அது ஒரு தேசமாக இல்லை என்றும் பிரதமருக்கு ராகுல் நினைவூட்டிக் காட்டினார்.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு
நாம் இருவர் நமக்கு இருவர்

ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு மற்றொன்று என்று இரு வகை இந்தியா இருந்து வருகிறது என்று ராகுல் கூறிய போது அது பிரதமரைச் சற்றே அசைத்துப் பார்த்தது; அம்பானி, அதானி ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் மூலதனத்தின் மோசமான மையப்படுத்தல் மோடி பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியாவில் மிகவும் யதார்த்தமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.

ராகுல் காந்தி இன்னும் கண்ணியமாகப் பேசியிருந்திருக்கலாம் என்று சொல்பவர்கள்கூட பிரதமர் அவ்வாறாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி நுணுக்கம் அறிந்தவரில்லை. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் நெட்டித் தள்ளுகின்ற அணுகுமுறையே அவருடைய தனிச்சிறப்பான ஆளுமையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல மோடி ஒன்றும் பாராளுமன்ற மரபுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர் இல்லை. பாராளுமன்றத்திற்குள்ளே முதன்முறையாக அவர் பிரதமரான 2014ஆம் ஆண்டில்தான் மோடி நுழைந்திருந்தார். ஆனால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியதன் மூலமும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்த மகத்தான தலைவர்களுடன் உறவாடியதன் மூலமும் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குரல் கவனித்துக் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய மரியாதையும் தரப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுமூகமான செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் தேவையென்று கருதப்பட்ட அந்த நேருவிய காலத்தின் தயாரிப்பாகவே வாஜ்பாய் இருந்து வந்தார். நேருவைக் கடுமையாக விமர்சித்த போதிலும் நேருவின் பாசத்தை வாஜ்பாயால் பெற முடிந்தது.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

ஆனால் இப்போது மோடி வித்தியாசமான காலகட்டத்தின் தயாரிப்பாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலமைச்சராக இரும்புக்கரம் கொண்டு குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தார்; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை. தான் தவறு செய்யவே முடியாதவர், கட்சியில் அல்லது வெளியில் இருந்து ஒருபோதும் யாராலும் விமர்சிக்கப்படக் கூடாதவர் என்ற மனநிலையுடனே அவர் இருந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை – நான் எந்தத் தவறும் செய்வதில்லை; என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; நாட்டை எப்படி நடத்துவது, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி யாரும் எனக்குக் கற்றுத் தர முயற்சி செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்கப் பொதுக் கண்ணோட்டத்தில் பிரதமரின் அந்த பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சியாகவே இருந்தது. மோடியின் ஆளுமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே ராகுல் காந்தியின் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அதை அலட்சியப்படுத்துவது பிரதமருக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

ராகுல் காந்தி அவரிடமிருந்து தகுந்த பதிலைப் பெறுவார் என்று மோடி பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிச்சயம் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவே முயன்றார் என்றாலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறுக்கிட்ட பிறகு அவர் பொறுமையிழந்து விட்டார். தான் இதுவரை யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், இப்போது காங்கிரஸின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது தரம் தாழ்ந்த அவரது பேச்சின் ஆரம்பமாக மாறியது. அவர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதை எளிதில் காண முடிந்தது.

மோடி எப்போதும் தேர்தல் களத்திலேயே இருக்கும் அரசியல்வாதி. வாக்காளரிடம் பேசுகின்ற வாய்ப்பை ஒருபோதும் அவர் நழுவ விடுவதே இல்லை. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் அவரைப் பொறுத்தவரை அது வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, மக்களவையில் தனது பேச்சில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான நேரத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ‘காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி. மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் எந்தவொரு நன்மையும் அந்தக் கட்சி செய்திருக்கவில்லை, அதனால்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாக்காளர்களிடம் அவர் அந்த உரையின் மூலம் கூறினார்.

ஆனாலும் மத்தியில் தனக்குச் சவால் விடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று மோடி கருதுவதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தவே செய்தது. காங்கிரஸிற்கு மாற்றாக மத்தியில் பாஜக எதிர்ப்பு முன்னணியாக தன்னுடைய கட்சி உருவெடுத்துள்ளதாகக் கூறி வருகின்றது என்பதாக மம்தா பானர்ஜியின் சாகச அரசியல் பேச்சுகள் இருந்த போதிலும், ‘காங்கிரஸை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்; இடைவிடாது தொடர்ந்து அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்; மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்து அந்தக் கட்சி நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்’ என்பதில் மோடி மிக உறுதியாக இருந்து வருகிறார். மக்களவைக்குப் பிறகு மாநிலங்களவை என்று மீண்டும் மோடியின் உரையில் பெரும்பான்மை பங்கை காங்கிரஸ் கட்சியே ஆக்கிரமித்துக் கொண்டது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால், பரம்பரை அரசியல், 1984 கலவரங்கள், நெருக்கடி நிலை, ஏழ்மை என நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காங்கிரஸே காரணம் என்று வெறியுடன் அவர் குற்றம் சாட்டியது அவரது சிந்தனைச் செயல்பாட்டின் பின்னணியில் உள்ளவற்றையே நமக்கு நினைவூட்டியது.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

காங்கிரஸின் மீது மோடி கொண்டிருக்கும் ஆவேசம், காங்கிரஸின் மீதான அவரது மனவேதனை அல்லது வெறுப்பின் பிரதிபலிப்பாக அல்லது நேரு-காந்தி குடும்பத்தின் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கவில்லை. மிகப் பெரிய அரசியல் தந்திரத்தின் பகுதியாகவே அவரது பேச்சு பொதுவாக இருக்கிறது. தனது ‘புதிய பாஜக’ (தி நியூ பிஜேபி) என்ற புத்தகத்தில் காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் இடைவிடாத வெறித்தனமான பேச்சுகள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளை நளின் மேத்தா தந்துள்ளார். பாஜக தனது வெளியுலகத் தொடர்புகளில் – அதாவது பேச்சுகள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகளில் – காங்கிரஸையே அதிகம் குறிப்பிட்டு வருகிறது என்று அவர் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த தரவரிசையில் காங்கிரஸ் என்ற வார்த்தையே அவர்களுடைய பேச்சுகளில் முதலிடத்தைப் பெற்றது. மோடி, பாஜக, வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பின்தங்கி காங்கிரஸ் என்ற வார்த்தைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. ‘இந்த பெரிய அரசியல் தொடர்பு மாற்றம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது, அதற்குப் பிறகு காங்கிரஸ் தொடர்பான பாஜகவின் பேச்சுகளில் வியத்தகு மாற்றத்தை நம்மால் காண முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு எதிரான பேச்சை படிப்படியாக பாஜக அதிகரித்துக் கொண்டே வந்தது. பாஜகவின் தகவல் தொடர்புகளில் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸிற்கு எதிரான பேச்சு மற்ற அனைத்து விஷயங்களையும் முந்திவிட்டது’ என்று நளின் மேத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘காங்கிரஸின் முதன்மையான சித்தாந்த எதிர்ப்பாளராக, தனது போட்டியாளரைப் பற்றி பாஜக அதிகம் பேசுவது மிகவும் இயல்பானது என்றாலும் பாஜகவை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முக்கிய அரசியல் பாடத்தை கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே காங்கிரஸுக்கு எதிரான அதன் பேச்சுகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு இருக்கிறது’ என்று எழுதியுள்ளார்.

Rahul Gandhi Speech at Lok Sabha by Asuthosh in tamil translated By T. Chandraguru மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது - அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு

எனது பார்வையில் பிரதமர், அவரது கட்சியினரிடம் உள்ள இந்த வெறுப்பு வரப் போகின்ற எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான ஆட்சி எதிர் மனோநிலை மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், மோடி தன்னை பாதிக்கப்படக்கூடியவராகவே உணருவார். மேலும் காங்கிரஸ் இழைத்துள்ள தீமைகளை வாக்காளர்களும் நாட்டு மக்களும் மறந்து விடக் கூடாது என்றும், அவர்கள் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் நிச்சயம் விரும்புவார். அதற்காக நாகரீகமான விவாதங்கள், உரையாடல்களுக்கு நமது பிரதமர் அதிக அளவிலே தடையை ஏற்படுத்துவார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். அவர்களிடமிருந்து வேறு என்ன நமக்கு கிடைக்கப் போகிறது?

(‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அசுதோஷ் satyahindi.com என்ற இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார்)

https://www.ndtv.com/opinion/pms-speech-reveals-rahul-gandhi-got-under-his-skin-2755902
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு



Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.

கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.

அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.

உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.

தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.

https://www.ndtv.com/opinion/are-muslim-girls-excluded-from-beti-bachao-beti-padhao-2760357
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி – தமிழில்: தா. சந்திரகுரு




அல்-ரிஃபா
கர்நாடகாவில் உள்ள பண்டார்கர் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து கொண்டு நுழைய முடியாது என்று கூறப்பட்ட போது தான் உணர்ந்ததை பத்தொன்பது வயது மாணவி அல்-ரிஃபா விவரித்திருக்கிறார்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கல்லூரி மாணவிகள்

கடந்த வியாழன் அன்று (2022 பிப்ரவரி 03) குண்டபுராவில் உள்ள எங்களுடைய பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நானும் எனது நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். கல்லூரிப் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்துள்ள ஹிஜாப்களை கழற்ற வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் கல்லூரிக்குள் நாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்று அவர் எங்களிடம் கூறினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்காமல் நாங்கள் கல்லூரிக்குள்ளே நுழைந்தோம்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

அதையடுத்து எங்கள் கல்லூரி கண்காணிப்பாளர் எங்களைத் தடுத்து நிறுத்தினார். அவரும் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றுமாறு உத்தரவிட்டார். ஆனாலும் எங்கள் வகுப்பறை நோக்கி நாங்கள் நடந்தோம். வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்பியது. துப்பட்டாவிற்குப் பொருத்தமான ஸ்கார்ஃப் தலையில் அணிந்து வரலாம் என்று எங்களுடைய கல்லூரி நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாங்கள் வகுப்பிற்கு வந்த போது எங்களில் ஒரு சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சில மாணவர்களுக்கு முந்தைய நாள் இரவிலேயே ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்படாததால், வகுப்பிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

போடப்பட்ட தடை

ஒரு மணி நேரம் கடந்தது. கல்லூரிக்குள் இப்போது மதம் சார்ந்த எந்த வகை ஆடைகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கல்லூரி முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஹிஜாப் அணிந்திருந்த எனது தோழியும், நானும் துறைத் தலைவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். எங்கள் ஹிஜாப்களைக் கழற்றுமாறு துறைத்தலைவர் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் தானும் ஆதரவற்ற நிலையிலேயே இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையில் தங்கள் தரப்பிலிருந்து எதுவும் செய்ய முடியாது என்றும் துறைத் தலைவர் எங்களிடம் கூறினார். நாங்கள் விரும்பினால் இது குறித்து முதல்வரிடம் நாங்கள் பேசலாம் என்றார்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

அதனால் நாங்கள் கல்லூரி முதல்வரிடம் சென்றோம். கல்லூரிக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தனக்கு கடிதம் வந்துள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் அனைத்து மத ஆடைகளையும் தடை செய்ய தாங்கள் விரும்புவதாக எங்களிடம் கூறினார். அந்தக் கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று கேட்டபோது, ​​ அவர் அது அரசு உத்தரவு என்று கூறினார். ஆனாலும் அவர் அந்த உத்தரவை எங்களிடம் காட்டவே இல்லை.

அது அரசு உத்தரவு என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளின் நிலை என்ன? ஒருசில கல்லூரிகளில் மட்டுமே மதம் சார்ந்த ஆடைகளுக்கு இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் அவரிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவே கேட்டேன். பதிலுக்குத் திரும்பப் பேசுகின்ற பழக்கம் எங்களிடம் இருக்கிறது என்று கூறிய அவர் எங்களை அங்கிருந்து தொலைந்து போகுமாறு சொன்னார். அதற்குப் பின்னர் நாங்கள் அவரது அலுவலகத்திலிருந்து வெளியேறினோம்.

அதைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. உடனே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய விரும்புகின்ற மாணவிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். மீண்டும் அப்போதும் முதல்வர் தான் உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். வீட்டிற்குச் சென்று, என்ன செய்வது என்பதைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசுமாறு எங்களுக்குப் பரிந்துரைத்த அவர் வளாகத்தில் போராட்டம் எதையும் நாங்கள் நடத்தக் கூடாது என்றார். காவல்துறையின் பாதுகாப்புடன் பஸ் நிறுத்தத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நாங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.

மறுநாள் கல்லூரிக்கு வந்த போது ​​கல்லூரி வாசல் மூடி வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் எங்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து எங்களுக்கு ஆதரவாக நின்றனர். அரை மணி நேரம் கழித்து, இரண்டு மாணவிகள், நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்காக உள்ளே சென்றனர். அந்த மாணவர்களிடம் பேசிய முதல்வர் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பிறகும் அந்தப் பெற்றோர்களைச் சந்திக்கவே இல்லை.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

அவ்வளவு நேரமும் நாங்கள் வெளியே கல்லூரி வாசலிலேயே காத்திருந்தோம். முதல்வர் வெளியே வந்து மீண்டும் ‘தான் உதவியற்றவர், அதிகாரிகளிடம் நீங்கள் செல்லலாம்’ என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வியாழக்கிழமையிலிருந்து ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கியிருந்தனர். காவித்துண்டுடன் வந்த அவர்களும் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதற்கு அவர்களிடமிருந்த தீர்வு அதுதான். ஆனால் அது சரியல்ல. பல ஆண்டுகளாக ஹிஜாப் நாங்கள் அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஹிஜாப் அணிந்த எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் திடீரென கல்லூரி வளாகத்திற்கு இப்போது காவித்துண்டை அணிந்து வந்திருந்தனர்.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

வியாழனன்று காவல்துறையினர் வந்து, கல்லூரிக்குள் நுழைய வேண்டுமானால், காவித்துண்டுகளைக் கழற்ற வேண்டுமென்று சொன்ன போது அவர்கள் அதை உடனடியாகச் செய்தார்கள். ஆனால் ஹிஜாபைக் கழற்றுவது எங்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதானது அல்ல. தாங்கள் விரும்புவதை அந்த மாணவர்கள் அணிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றச் சொல்லாதீர்கள். அது இல்லாமல் எங்களை நாங்கள் முழுமையாக உணர்வதில்லை.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

எனக்கு பத்தொன்பது வயது ஆகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் இதை அணிந்து வருபவளாகவே இருந்திருக்கிறேன். நான் இந்தக் கல்லூரியில் ஆறு மாதங்களாகப் படித்து வருகிறேன். ஹிஜாப் அணிவது இதுவரையிலும் இங்கே ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. நாட்டில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றி நான் சமூக ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போதுதான் என் வாழ்நாளில் அதை முதன்முறையாக நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு முஸ்லீம் என்று, வித்தியாசமான உடை அணிபவள் என்று அன்று உணர வைக்கப்பட்டேன். இதற்கு முன்பாக நான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை.

வீட்டில் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்பதே அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவாகும். வெள்ளிக்கிழமையன்று எனது தந்தை என்னுடன் கல்லூரிக்கு வந்திருந்தார்.

கல்லூரிப் படிப்பு, ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கல்லூரி எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் உடுப்பி புகுமுக கல்லூரியில் நடந்திருந்தாலும், அதுபோன்று எங்கள் கல்லூரியில் நடக்கும் என்பதை நான் உண்மையில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.

Udupi college student shares his opinion on the hijab ban Article By Al Rifa in tamil translated By T. Chandraguru ‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி தமிழில் சந்திரகுரு

காவல்துறையுடன் மாணவர்கள் காவித்துண்டு அணிந்திருப்பது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றார்கள். அவர்களால் கல்லூரிக்குத் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பிற்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ கல்லூரி நிர்வாகமோ எங்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் எங்களுடன் நின்றால், நாங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்போம். ஆனால் இந்தப் பிரச்சனையில் தாங்களும் ஆதரவற்றவர்களாக இருப்பதாகவே அவர்களும் நினைக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையால் எங்கள் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களால் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. நான் மிகவும் மோசமாய் உணர்கிறேன். என்னுடைய உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது. இந்தச் சிறுவயதிலேயே இதுபோன்ற கேவலமான சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.

இருப்பினும், இவையனைத்தும் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது. நிச்சயம் நான் ஹிஜாபைக் கழற்ற மாட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் இங்கே படிப்பதை நிறுத்தக்கூட நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் இங்கிருந்து அப்படியே விட்டு விட்டுச் செல்ல மாட்டேன். நிச்சயம் நான் மல்லாடுவேன், போராடுவேன்.

உமங் போதரிடம் கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி அல்-ரிஃபா கூறியது.

https://scroll.in/article/1016683/i-was-made-to-realise-i-am-a-muslim-a-student-shares-her-account-of-the-udupi-college-hijab-ban
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

‘காந்தி கொலையாளி’ நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் – தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு



'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

நாதுராம் கோட்சே சாவர்க்கரைச் சந்திக்கச் சென்றது குறித்தோ அல்லது அவர்களுக்கிடையிலான அந்த அறிமுகச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது குறித்தோ குறிப்பிட்ட பதிவுகள் எதுவுமில்லை. ரத்னகிரிக்கு 1929ஆம் ஆண்டு கோட்சே சென்ற தருணத்தில் அவருக்கும் சாவர்க்கருக்கும் இடையில் தொடர்பு உருவாகி வளர்ந்ததாக கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.

‘முதன்முதலாக ரத்னகிரிக்கு நாங்கள் வந்த போது சாவர்க்கர் தங்கியிருந்த இடமே இப்போது நாங்கள் தங்கியிருக்கும் இடமாக தற்செயலாக மாறியுள்ளது. பிறகு அதே தெருவின் மறுமுனையில் இருந்த மற்றொரு வீட்டில் அவர் தங்கினார்’ என்று கோபால் நினைவுபடுத்திக் கூறியிருந்தார்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு
கோபால் கோட்சே

கோட்சேவின் இளமைப் பருவத்தில் சாவர்க்கர் அவ்வளவு நெருக்கமில்லாதவராகவே இருந்து வந்தார். ரத்னகிரிக்கு கோட்சேவின் குடும்பம் குடிபெயர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சாவர்க்கரை முதன்முதலாகச் சென்று சந்தித்த போது கோட்சேவிற்கு உத்வேகம் அளித்தவராகவே சாவர்க்கர் இருந்தார். இருந்த போதிலும் சாவர்க்கரை முழுமையாகப் பின்பற்றுபவராக கோட்சே மாறியதற்கான நம்பகமான ஆதாரங்களில் பெரும்பாலானவை 1930ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே கிடைக்கின்றன.

சாவர்க்கரை முதன்முதலாகச் சந்தித்தபோது கோட்சேவிற்கு வயது பத்தொன்பது. ஒல்லியாக இருந்த போதிலும், தன்னைக் காட்டிலும் உயரமாக இருந்த சாவர்க்கரை விட ஆரோக்கியமானராகவே கோட்சே இருந்தார். கட்டுப்படுத்தப்பட்ட நடத்தையுடனிருந்த கோட்சே அமைதி, பணிவு கொண்டவராக இருந்தார். அந்தமானில் இருந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பிய புரட்சியாளராக சாவர்க்கரால் அவர் முழுமையாக ஈர்க்கப்பட்டிருந்தார்.

கோட்சேவின் அரசியல் நம்பிக்கைகள் – அவ்வாறு எதுவும் இருந்திருக்குமென்றால் – தெளிவற்றே இருந்தன. அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். அந்தக் கூட்டங்கள் சிலவற்றில் உரையாற்றவும் செய்திருந்தார். ஆயினும் அடிப்படையில் தனது எதிர்காலத்தைப் பற்றி இன்னும் தீர்மானித்துக் கொண்டிராத ஒருவராகவே அவர் இருந்து வந்தார். அரசியல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட அவர் தன்னை சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

சாவர்க்கரைப் பின்பற்றுபவராக, ஹிந்துத்துவாவை ஆதரிப்பவராக கோட்சேவை மாற்றியது ஒன்றும் சுமுகமாக நடைபெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் அவரது அவதானிப்புகள் ஹிந்து வகுப்புவாத தத்துவத்தின் விசித்திரமான விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாத வகையிலேயே இருந்துள்ளன.

‘பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற காந்தியின் அழைப்பின் பேரில் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு ஆஜராகப் போவதில்லை என்ற என்னுடைய முடிவை அவரிடம் [சாவர்க்கரிடம்] தெரிவித்தபோது அவர் மிகவும் எரிச்சலடைந்ததாகவே எனக்குத் தோன்றியது. இரண்டு அல்லது மூன்று முறை அவர் அந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு என்னிடம் வற்புறுத்த முயன்றார். என்னிடம் அவர் படிப்பைத் தொடர்வது எந்த அளவிற்கு முக்கியம் என்று விளக்கினார்’ என்று பின்னர் ஒருமுறை கோட்சே கூறியிருந்தார்.

சாவர்க்கரின் ஆலோசனை பெரியவர் ஒருவரின் நல்ல அர்த்தமுள்ள அறிவுரையாகத் தோன்றக்கூடும். ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை இந்தியாவில் இருந்த பெரும் எழுச்சியிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ள அவரிடமிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது அவ்வாறான அறிவுரையாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்க கோட்சே மறுத்து விட்டார். அவர் அதன் மூலமாக பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் முகாமில் இருந்து கோட்சேவை வெளியேற்றுவதற்கான சாவர்க்கரின் முதல் வெளிப்படையான முயற்சியை முறியடித்திருந்தார்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

சாவர்க்கர் மேற்கொண்ட மனமாற்ற முயற்சி குறித்து தொடக்கத்தில் கோட்சே சுயநினைவுடன் இருந்ததையே அவருடைய அந்த ஆரம்பகட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அது விரைவிலேயே முறிந்து போனது. மகாராஷ்டிராவின் முன்னாள் பிராமண ஆட்சியாளர்களான பேஷ்வாக்களின் உண்மையான தொடர்ச்சி என்று பலராலும் – குறிப்பாக சித்பவான் பிராமணர்களால் – காணப்பட்டு வந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதில் அவர் ஒருவேளை மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.

சாவர்க்கரைப் போலவே, பேஷ்வாக்களின் வாரிசுகள் என்று தங்களைக் கருதிக் கொண்ட மேல்தட்டு பிராமணர்களின் துணைக்குழுவிலிருந்து வந்தவராகவே கோட்சேவும் இருந்தார். கோட்சேவின் பார்வையில் அந்த பிராமணர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சாதியரீதியான பிணைப்பு, மற்ற ஹிந்துக்களைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவிலான மேன்மை உணர்வை அவருக்கு கொடுத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

பிராமணர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வருகின்ற வழக்கமான புரோகித சலுகைகளைத் தவிர, போர்க்களத்தில் வீரத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்ற இந்தியாவின் அரிய பிராமண சமூகங்களில் ஒன்றாக சித்பவன் பிராமணர்கள் இருந்தனர். இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த அவர்கள், இந்தியாவில் முகலாயர், பதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தனர். அந்த உண்மையே ஹிந்து தேசியவாதத்தின் தேவைகளின் அடிப்படையில் தங்களுடைய வரலாற்றை மறுவிளக்கம் செய்ய அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது; அவர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஹிந்து எதிர் பாரம்பரியத்தை நிலைநிறுத்துபவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர்.

எவ்வாறாயினும், ஹிந்து மறுமலர்ச்சி குறித்த ஆர்வமுள்ளவர்களிடம் சாவர்க்கர் தூண்டிய பெருமையொன்றும் கோட்சேவைப் பொறுத்தவரை புதியதாக இருக்கவில்லை. பூனாவுடன் பரம்பரைத் தொடர்பு இருந்ததால், அந்த உணர்வை – தெளிவற்றதாக இருந்தாலும் – கோட்சே நன்கு அறிந்தே இருந்திருப்பார். பூனாவை ஹிந்து தேசிய மறுமலர்ச்சியாளர்களுக்கான மேடையாகவே பாரம்பரிய சித்பவன் பிராமணர்கள் கருதி வந்தனர். பூனாவிற்கு அப்பால் இருக்கின்ற மலைகளில் பிறந்து வளர்ந்த சிவாஜி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக தனது கொரில்லா பிரச்சாரத்தை நடத்தினார்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

சிவாஜி போர்வீரர் சாதியில் பிறந்த மராத்தியர் என்றாலும் முதல்வர்கள் அல்லது பேஷ்வாக்களாக வந்த அவரது வாரிசுகள் சித்பவன் பிராமணர்களாகவே இருந்தனர். சிவாஜிக்குப் பிறகு இறுதியில் 1818ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் அடிபணியும் வரை முகலாயர்கள், பதான்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி வந்த பேஷ்வாக்களுடைய கட்டுப்பாட்டு மையமாக பூனாவே செயல்பட்டு வந்தது.

பூனாவின் சித்பவன் பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தலைவர் திலக், 1897ஆம் ஆண்டில் பூனாவின் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனராக இருந்த டபிள்யூ.சி. ராண்டின் படுகொலையில் ஈடுபட்ட சபேகர் சகோதரர்கள் – தாமோதர் ஹரி சபேகர், பாலகிருஷ்ண ஹரி சபேகர், வாசுதேவ் ஹரி சபேகர் – போன்ற இந்தியப் புரட்சியாளர்களை உருவாக்கியிருந்தனர்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு

கோட்சேவின் மூதாதையர்கள் சித்பவன் பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் பூனாவுக்கு அருகிலுள்ள உக்சன் கிராமத்தில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனாலும் கோட்சே கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருந்து வந்தார். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அரபிக் கடலின் கரையில் சாவித்திரி நதியால் உருவான கழிமுகப் பகுதியில் உள்ள பாறைக் கடற்கரை நிலமான ஹரிஹரேஷ்வரில் இருந்து அந்தக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர் என்று குடும்பத்தின் பரம்பரை குறித்த வரலாறு குறிப்பிடுகிறது.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ராமச்சந்திர கோட்சேவிலிருந்து தொடங்கிய கோட்சே குலத்தைச் சேர்ந்த அனைத்து சித்பவன் பிராமணர்களின் வம்சாவளிகளின் தொகுப்பான கோட்சே குல்வ்ரிதாண்ட் பரம்பரைப் படியில் நன்கு அறியப்பட்டுள்ள முன்னோர்களின் எட்டாவது ஏணியில் கோட்சேவின் தந்தையான விநாயகராவ் இருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்களின் ஆட்சியின் போது உக்சன் கிராமத்தில் இருந்த மற்ற சித்பவன் குடும்பங்களைப் போலவே ராமச்சந்திர கோட்சேவின் வழித்தோன்றல்களும் முக்கியத்துவம் பெற்று நிலமானியங்களைப் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர, இடைப்பட்ட தலைமுறைகளைப் பற்றி அதிகமாக வேறொன்றும் அறியப்படவில்லை. பரம்பரை பரம்பரையாக அவர்களிடமிருந்த விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால், விநாயகராவின் தந்தை வாமன்ராவ் மிகச் சொற்ப அளவிலான நிலத்தையே பெற்றார்.

தனது முன்னோர்களைப் போலவே விவசாயத்துடன் அர்ச்சகர் தொழிலையும் கலந்து வாமன்ராவ் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவரிடம் நவீன கல்வியை அவரது மகன் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. எனவே தனது மகன் ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் பூனாவில் இணையான நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். அவர்கள் குடும்பத்தில் மெட்ரிகுலேஷன் படித்து முடித்த முதல் ஆளாக விநாயகராவ் இருந்தார். அதற்குப் பின்னர் அவருக்கு தபால் துறையில் அரசு வேலை கிடைத்தது. மாற்றத்திற்கு உட்பட்டதாக அவரது பணி இருந்ததால், விநாயகராவ் தனது மூதாதையர் கிராமத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இருப்பினும் அவருக்கு சிறிய அளவிலே விவசாய நிலம், விசாலமான வீடு இன்னும் அங்கே இருந்து வந்தது.

சாவர்க்கரின் குழுவிற்கு கோட்சே அந்த வயதில் மாறியதை அல்லது சேர்ந்து கொண்டதை உண்மையான சித்பவனின் இயல்பான பாதை என்று விளக்குவதற்கு அவரது பின்னணி போதுமானதாகவே இருந்தது. தனது கடந்த காலம், சாதி பற்றி அவருடைய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் ​ கோட்சே என்ற அந்த இளைஞர் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள், உள்ளூர் எதிரிகள் என்று அழைக்கப்பட்ட முஸ்லீம்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஹிந்துக்களைத் தயார்படுத்துவது என்ற பெயரில் சாவர்க்கரால் மேற்கொள்ளப்பட்ட காலனித்துவ ஆட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் அணுகுமுறை ஆகியவற்றிற்கு இடையே என்று இரண்டு உலகங்களிலும் சுதந்திரமாகப் பயணித்து ஊசலாடிக் கொண்டிருந்ததாகவே தெரிய வருகிறது.

ஆனால் கோட்சேவிடம் இறுதியில் சாவர்க்கரின் வழியே வெற்றி பெற்றது. தனது சொந்த வழியில் தன்னுடைய சாதி சகோதரர்களிடையே அதிகமான ஆறுதலை கோட்சே கண்டடையத் தொடங்கினார். அவர்களுடைய மறுமலர்ச்சித் திட்டத்துடன் அவர் ஒருங்கிணைக்கப்பட்டார். அந்தக் குழு சிலர் மதம் சார்ந்து இயங்குபவர்களாக, சிலர் மதச்சார்பற்றவர்களாக என்று ஒரு கலப்பான குழுவாக இருந்தது. சாதி விசுவாசத்தால் சாவர்க்கரின் தலைமையைச் சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனர்.

சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து தான் விலகியதற்கான காரணம் தன்னுடைய மகன் அதிகாரிகளைத் தொந்தரவு செய்வதை விரும்பாத, அரசாங்க ஊழியராக இருந்த தந்தையின் அச்சத்தில் வேரூன்றியதாகவே இருந்தது என்று கோட்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறியிருந்தார். ‘எனது செயல்பாடுகள் அவரது வேலையைப் பாதிக்கக்கூடும் என்று என்னுடைய தந்தை அஞ்சினார், எனவே என்னிடம் சட்டங்களை மீறுகின்ற வகையில் இருக்கின்ற எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்’ என்று கோட்சே விவரித்திருந்தார்.

சாவர்க்கரின் வற்புறுத்தல் அல்லது கோட்சே குடும்பத்தினரின் அழுத்தம் என்று இரண்டு காரணங்களில் எது, தேசியவாத கிளர்ச்சியாளர்களுடனான தொடர்பைக் கைவிடுவதற்கான கோட்சேவின் முடிவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த அறியப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. அவரது தந்தை காங்கிரசின் தலைமையிலான போராட்டக் கூட்டங்களில் கோட்சே பங்கேற்கத் தொடங்கியதிலிருந்தே தனது அச்சங்களை அவரிடம் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் கோட்சே தன்னை சாவர்க்கர் வேறு வழியில் அழைத்துச் செல்லும் வரை தன்னுடைய தந்தையின் அச்சத்தை எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

சாவர்க்கரின் வழி மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. மிகவும் உறுதியுடன் வலிமையாக அவர் பேசி வந்தார் என்றாலும், தனது மனதில் உள்ளவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதில் இருந்து அவர் எப்போதும் பின்வாங்கிக் கொண்டவராகவே இருந்தார். ஆங்கிலேயர்கள் குறித்து தன்னிடமிருந்த சமரச உணர்வை மறைப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பேச்சுகளில் அவர் ஈடுபட்டார். ‘சிறைவாசத்தின் போது அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்ததால் பாரிஸ்டர் சாவர்க்கர் அரசியலை மிகவும் அரிதாகவே விவாதித்து வந்தார்’ என்று கோட்சே அதுகுறித்து விவரித்தார். அதுபோன்ற வாய்ச்சவடால்கள் குறிப்பிட்ட வகையிலான அரசியலை கணிசமாக, வலுவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அப்போது அவரால் அறிந்து வைத்திருக்க முடியாது.

காந்தியால் உருவான கவலைகளே அந்த அரசியலுக்கான அடையாளமாக இருந்தன. ஒரு பழமைவாதியாகவும் இல்லாமல், முற்போக்குவாதியாகவும் இல்லாமல் இரண்டின் பொதுவான சாராம்சம் கொண்டவனாக தான் இருப்பது போல காந்தி தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட சமூக மாற்றங்களும், மக்களிடமிருந்து அவர் கோரிய அரசியல் செயல்பாடுகளும் ஆச்சாரமான ஹிந்துத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலேயே இருந்தன.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை இந்தியக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, கீழ்நிலையில் இருந்த பிராமணர் அல்லாத விவசாயக் கலாச்சாரங்களை உண்மையான ஹிந்து மதம் என்று வடிவமைத்ததன் மூலம், தங்களுடைய கடந்த கால மேலாதிக்கத்தை புதுப்பிக்க கனவு கண்டு வந்த ஹிந்து மேல்தட்டினரிடம் காந்தி அச்சத்தை உருவாக்கியிருந்தார். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி ஆண்களுக்குச் சமமான நிலைக்கு பெண்களைக் கொண்டுவர முயல்வதன் மூலம் அத்தகைய ஹிந்துக்கள் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான காந்தியின் முயற்சியைக் கூட ஆழ்ந்த கவலையுடனே பார்த்தனர்.

பிராமண மேலாதிக்கத்தைத் தகர்க்க முயன்ற காந்தி தன்னை சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும் அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்வை அதிகரித்திருக்க வேண்டும். தன்னை ஒரு சனாதானி, ஆச்சாரமான ஹிந்து என்றே காந்தி உறுதியாக நம்பி வந்தார்.

காந்தி மீதிருந்த அந்தப் பார்வையை நீக்குவதே சாவர்க்கர் அரசியலின் முக்கிய பகுதியாக இருந்தது. அப்போதுதான் தனது அரசியலில் வெற்றியடைய முடியும் என்று சாவர்க்கர் நினைத்திருக்கக் கூடும். சாவர்க்கருக்கென்று சில அனுகூலங்களும் இருந்தன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற மேல்தட்டு சமூகத்தினரின் மேலாதிக்கத்தை மாற்றியமைக்காமலேயே, பல்வேறு சாதி ஹிந்துக்களை ஒன்றிணைப்பதற்காக தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையிலான தேசியவாதத்தின் எதிரிகளாக முஸ்லீம்களை முன்னிறுத்தி அரசியலில் பிராமணர்களின் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் வகையில் அவரிடமிருந்த உத்வேகத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டிருந்தவர்களிடம் அவர் முன்வைத்த பார்வை எளிதில் சென்றடைந்தது.

ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவது, சமூகத்தின் மையத்தில் இருந்து பிராமணர்களை வெளியேற்றுவதன் மூலம் ஹிந்து மதத்தை அரசியல் ரீதியாக மறுவரையறை செய்வது என்று மேற்கொண்ட முயற்சிகள் மூலமாக அவர்களை அச்சுறுத்திய காந்தி அவர்களிடம் அதற்கான சாத்தியங்களை உருவாக்கியிருந்தார். சித்பவன் பிராமணர் பிரிவினரைப் பொறுத்தவரை – குறிப்பாக சமகால சமூக அரசியல் அமைப்பில் தங்களுடைய பாரம்பரிய சிறப்புரிமை நிலைக்கும், தங்களுடைய தற்போதைய உண்மையான நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தவர்களுக்கு – அவ்வாறு உருவாகியிருந்த கவலை அந்தக் காலத்தில் அவர்களிடமிருந்த நிரந்தர உணர்வாகவே இருந்தது. இழந்த பெருமையை மீட்டெடுக்க அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது ​​காந்தியின் கவர்ச்சி அவர்களை ஈர்க்கவில்லை.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு
மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையில் இருந்த நாதுராம் கோட்சே (இடது, முன் வரிசை) வி.டி.சாவர்க்கர் (இடமிருந்து இரண்டாவது, மூன்றாவது வரிசை)

காந்தியின் மீதான அந்த வெறுப்புக்கு மிகவும் குறுகிய, சாதிய நோக்கும் ஒரு காரணமாக இருந்தது. பனியாவாக அதாவது வணிகர்கள் மற்றும் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதியைச் சார்ந்தவராக, பம்பாய் மாகாணத்தில் இருந்த சமூக கலாச்சார மண்டலமான குஜராத் பகுதியைச் சார்ந்தவராக காந்தி இருந்தார். அப்போது மகாராஷ்டிராவில் இருந்த அந்தப் பகுதி பாரம்பரியமாக பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பகுதியாகவே இருந்து வந்தது. மகாராஷ்டிரர்களில் ஒரு பிரிவினரிடம் குஜராத்திகள் குறித்து எப்போதும் மோசமான பார்வையே இருந்து வந்தது. அதுமட்டுமல்லாது பனியாக்களை சூழ்ச்சி நிறைந்தவர்கள் என்றே பிராமணர்கள் பலரும் கருதி வந்தனர்.

'Gandhi Killer' How Savarkar turned Nathuram Godse into a supporter of his anti-Muslim cause Article By Dhirendra Jha in tamil translated by T. Chandraguru 'காந்தி கொலையாளி' நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் - தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு
தீரேந்திர ஜா எழுதியுள்ள ‘காந்தி கொலையாளி: நாதுராம் கோட்சேவும், இந்தியா குறித்த அவரது சிந்தனையும்’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

 

https://scroll.in/article/1014167/gandhis-assassin-how-vd-savarkar-converted-nathuram-godse-to-his-anti-muslim-cause
நன்றி: ஸ்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் உடன் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை – ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் | தமிழில்: தா. சந்திரகுரு



Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ், எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்தார். ‘எனக்கு ஆதரவாக இருக்கின்ற கூட்டத்தின் முன்பாக ரஷ்யாவில் விளையாடுவதற்காக பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் விளையாடுவதைக்கூட நான் கைவிடுவேன்’ என்றும் அப்போது அவர் கூறினார்.

மெட்வெடேவ்-ரஃபேல் நடால் இடையிலே நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மெட்வெடேவ் 2-0 என்று இரண்டு செட்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். ஆனால் நடாலுக்கு ஆதரவாக இருந்த ராட் லாவர் அரினா கூட்டத்தின் முன்பு இறுதியில் அவர் தோல்வியையே சந்தித்தார். 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் மெட்வெடேவ் கூட்டத்துடன் மோதியிருந்தார். விளையாட்டரங்கில் கூடியிருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டி முழுவதும் மெட்வெடேவின் தவறுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர், பல கட்டங்களில் தன்னை அவர்கள் உற்சாகமிழக்க வைத்தனர் என்று அவர் குறை கூறினார்.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

உலக அளவில் இரண்டாவது தரவரிசையில் உள்ள மெட்வெடேவ் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது ​​கூட்டத்தை மறைமுகமாகத் தாக்கினார். அதற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பை டென்னிஸ் நட்சத்திரம் என்ற தன்னுடைய பயணத்தைப் பற்றிய நீண்ட கதையுடன் மெட்வெடேவ் தொடங்கினார். தனக்கு எதிராக இருந்த ஆஸ்திரேலிய ஓபன் கூட்டத்திடமிருந்து கிடைத்த அனுபவத்திற்குப் பிறகு சிறுவயதிலிருந்தே தன்னிடமிருந்து வருகின்ற டென்னிஸ் கனவின் ஒரு பகுதி மரணித்து விட்டதாக இருபத்தைந்து வயதாகும் மெட்வெடேவ் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்
நெறியாளர்: இன்றிரவு நேரம் குறைவாகவே இருக்கிறது… மிகவும் தாமதமாகி விட்டது. துரதிர்ஷ்டம் டேனியல். இந்த தோல்வியைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பது கடினம் என்றே நினைக்கிறேன். போட்டியின் போது எல்லாவற்றையுமே நீங்கள் வித்தியாசமாகச் செய்து பார்த்தீர்களா? அதுகுறித்து உங்கள் பயிற்சியாளருடன் விவாதித்தீர்களா?

டேனியல் மெட்வெடேவ்: உண்மையில் வித்தியாசமாக கொஞ்சம் செய்து பார்த்தேன். புது வகை செய்தியாளர் சந்திப்பாக இது இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முக்கியமானவற்றை மட்டுமே கொண்டு இதை நான் தொடங்கப் போகிறேன். அது சுருக்கமாக இருக்குமா அல்லது மிகவும் நீண்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். டென்னிஸில் பெரிய விஷயங்களைப் பற்றி கனவு கண்ட சிறு குழந்தையின் கதையை…

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

ஆறு வயதில் டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் எடுத்தேன். ​​ நேரம் வேகமாகச் சென்றது. பன்னிரண்டு வயதாக இருந்தபோது ​​பயிற்சிகளை மேற்கொண்டேன். சில ரஷ்ய போட்டிகளில் விளையாடினேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை, பெரிய நட்சத்திரங்கள் விளையாடியதை, ரசிகர்கள் அந்த நட்சத்திரங்களுக்கு ஆதரவளித்ததை டிவியில் பார்த்த நான் அங்கே நானும் இருக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்கினேன்.

பின்னர் சில ஐரோப்பிய டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளை விளையாடியது என்னுடைய நினைவில் உள்ளது. அது யூத் ஒலிம்பிக் விழா அல்லது வேறு ஏதோ பெயரில் இருந்தது என்று நினைக்கிறேன். அங்கே இறுதிப் போட்டிக்கு வந்தேன். அது அருமையாக இருந்தது. எங்களுக்கு நடு கோர்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது துருக்கியில் நடந்தது. அங்கே ஓராயிரம் பேர் இருந்திருக்கலாம். இரண்டாயிரம் பேர் என்றும் கூறலாம். அங்கே இருப்பது மிகவும் அருமையாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. அது தான் அடைய வேண்டும் என்று ஒருவர் கனவு காணும் தருணம்… ஆம், மிகப் பெரிய உயரத்தை அடைவது…

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவதுதான் ஒவ்வொரு ஜூனியருக்கும் பெருமை. அங்கேதான் தங்களிடம் சாதகமாக உள்ளவற்றைப் பார்க்க முடியும். யுஎஸ் ஓபனில் கலந்து கொள்பவர்களுடன் உணவகத்தில் சாப்பிடலாம். அது போன்ற சிறிய விஷயங்கள் கிடைக்கும். யார் என்று உங்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, உங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஆட்கள் வருவார்கள். ஜூனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இருப்பார்கள். உண்மையில் அது அருமையான தருணம்… எவரும் விரும்பும் தருணம் அது… உலகின் மிகச் சிறந்த நபர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைத் தருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன்.

யுஎஸ் ஓபனுக்குச் சென்றிருந்த போது, ​​ஜான் இஸ்னர் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. ஓ… அவர் மிகவும் ஆஜானுபாகான ஆளாக இருந்தார்… டிவியில் பார்ப்பதைக் காட்டிலும் பெரிய ஆளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது உண்மையிலேயே இனிமையான தருணம்.

மிகப் பெரிய போட்டிகளில் விளையாடத் தொடங்கும் போது எதிர்காலத்தில் விளையாடப் போகிறவர்கள், உங்களுக்குச் சவாலாக இருப்பவர்கள் என்று ஏராளமானோர் உங்கள் வழியில் வர முயற்சி செய்வார்கள். எனது வாழ்க்கையில் அதுபோன்ற பெரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கனவு காண வேண்டுமா, வேண்டாமா என்று இந்தக் குழந்தை சந்தேகப்பட்ட சில தருணங்களும் உள்ளன.

எனக்கு ஒன்று நன்றாக நினைவிலிருக்கிறது. ரோலண்ட் கரோஸில் இரண்டு முறை மிகவும் கடினமான போட்டிகளில் தோற்றுப் போனேன். நான் பிரெஞ்சு பேசுவேன். அந்த தோல்வி என்னுடைய வயதில் மோசமானதல்ல என்று முதல் ஐவரில் நான் இருக்கின்ற இந்த தருணத்தில் உணர்கிறேன். நம்மிடம் மிகப் பெரிய தலைமுறை உள்ளது. ஏராளமான திறமையுடன் உள்ள டாப்-10 வீரர்களை உங்களால் இப்போது காண முடியும்.

இப்போது முதல் நூறு பேரில் ஒருவராக இருக்கின்ற பெஞ்சமின் போன்சியிடம் நான் தோற்றது எனக்கு நினைவிலிருக்கிறது. என்னைத் தவறாக நினைக்கவில்லை என்றால், அந்த அறையில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். உண்மையில் நான் அதுபோன்று எப்படி இருந்தேன்? அது ஒரு கிராண்ட்ஸ்லாம். அப்போது நான் முதல் ஐம்பது இடங்களுக்கு அருகில் இருந்தேன் என்று நினைக்கிறேன். உண்மையில் அது ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்யப் பத்திரிகையாளருடன் – நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசினோம். பத்திரிகையாளர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும்.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டிடம் ஏற்பட்ட கடினமான தோல்வி நன்றாக நினைவிலிருக்கிறது. நான் 2-0 என முன்னிலை பெற்றிருந்தேன். அது உண்மையிலேயே அற்புதமான போட்டி. அவர் அற்புதமாக விளையாடினார். அதுபோன்ற போட்டிகள் எனக்குப் பிடிக்கும். அதனாலேயே டென்னிஸ் எனக்குப் பிடிக்கும்.

முதல் பத்து இடங்களுக்குள் வருகின்ற இடத்தில் நான் இருந்தேன். என்னுடைய அந்த வயதில் நான் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது அநேகமாக ஸ்வெரெவ்வாக இருக்கலாம். ஒருவேளை முதல் இருவராக இருக்கலாம் – நிச்சயமாக டொமினிக். ஆனால் அவர் கொஞ்சம் வயதானவர்.

அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்தேன். நான் கொஞ்சம் – ஆமாம், ரசிகர்கள் மற்றும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விரக்தியடைந்திருந்தேன். அந்தச் சந்திப்பைச் சுருக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதால் அது வேடிக்கையாக இருந்தது. இரண்டு வார்த்தைகளில் அல்லது அதுபோன்று ஏதாவது பதில் சொல்லவே விரும்பினேன். பத்திரிகையாளர் ஒருவர் அங்கே இருந்தார். அவர் இத்தாலியன் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் ஏதோ கேட்டார். இரண்டு வார்த்தைகளில் நான் அவருக்குப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு கேள்விகள் எதுவும் எழவில்லை. சில ரஷ்யர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் என்னிடம் சில விஷயங்களை கேட்டார்கள். பெரும் கனவுகளைத் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கொண்டதாகவே அப்போது அந்தக் குழந்தை இருந்தது.

அது ஏன் என்பதை நான் விளக்கப் போவதில்லை. ஆனால் இன்று போட்டியின் போது நான் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அது வேடிக்கையாக இருந்தது. பத்திரிகையாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடன் பேசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது அது முக்கியமானதல்ல. அந்தக் குழந்தை கனவு காண்பதை நிறுத்திய சில தருணங்களைப் பற்றியே நான் இப்போது பேசுகிறேன். இன்றும் அதுபோன்றதொரு தருணமாகி இருக்கிறது. அது ஏன் என்று நான் இங்கே சொல்லப் போவதில்லை.

இனிமேல் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்காகவும் – நிச்சயமாக அனைத்து ரஷ்யர்களுக்காகவும் நான் விளையாடப் போகிறேன். என்னை அவர்கள் நிறைய ஆதரிப்பதாக நான் உணர்கின்றேன்.

அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ரோலண்ட் கரோஸ் அல்லது விம்பிள்டனுக்கு முன்பாக – விம்பிள்டன் அல்லது ரோலண்ட் கரோஸ் அல்லது வேறு எங்கு செல்வதைத் தவறவிட்டாலும் மாஸ்கோவில் ஹார்ட் கோர்ட்டுகளில் போட்டிகள் நடந்தால் நிச்சயம் நான் அங்கே சென்று விளையாடுவேன். கனவு காண்பதை அந்தக் குழந்தை இப்போது நிறுத்திக் கொண்டது. இனிமேல் அது தனக்காக விளையாடப் போகிறது. அவ்வளவுதான். இதுதான் என்னுடைய கதை. கேட்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே.

இப்போது நாம் டென்னிஸ் அல்லது வேறு எதையும் குறித்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

அறையில் கேள்விகள் ஏதேனும் எழுந்தனவா?

அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை (சிரிக்கிறார்).

டேனியல், உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள்.

மிக்க நன்றி கிரேக்.

இப்போது உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றன? வெளிப்படையாக நீங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் இப்போது நடந்திருப்பதையே நீங்கள் தொடரப் போகிறீர்களா?

டென்னிஸ் பற்றி பேசினால் அந்த அளவிற்கு நான் ஏமாற்றமடையவில்லை. இது மிகப் பெரிய போட்டி. வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயமாக சில சிறிய பாயிண்டுகளில், சிறிய விவரங்களில் நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் டென்னிஸ். அதுதான் வாழ்க்கை.

இது மிகப் பெரிய போட்டியாக இருந்தது. ரஃபா நம்ப முடியாத வகையிலே விளையாடினார். அவர் தனது நிலையை உயர்த்திக் கொண்டார். இரண்டு செட்களில் 2-0 என்று முன்னணியில் இருந்த போது ‘கமான் அவருடன் போராடு, இன்னும் அதிகமாகப் போராடு’ என்ற உணர்வுடனே நான் இருந்தேன்.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

ஐந்தாவது செட்டில் அவரைக் கடுமையாக முயற்சி செய்ய வைத்ததாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் நம்ப முடியாத வகையில் விளையாடினார். மிகவும் வலுவுடன் இருந்தார். நான்கு மணி நேரம் அவர் விளையாடிய விதம் குறித்து அப்போது உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். ஆனாலும் ரஃபா எப்படி விளையாடுவார் என்பது நமக்குத் தெரியும். ஆறு மாதங்களாக அவர் விளையாடவே இல்லை. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம், தான் அதிகம் பயிற்சி செய்யவில்லை என்று சொன்னார். அது நம்ப முடியாதவாறே இருந்தது.

டென்னிஸ் பற்றி பேசுகின்ற போது, என்னிடம் அதிகம் வருத்தமில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகத் தொடர முயற்சி செய்வேன். ஆமாம், இன்னும் கடினமாக நான் உழைக்கப் போகிறேன். ஒரு நாள் இந்த சிறந்த போட்டிகள் சிலவற்றில் சாம்பியனாக இருக்க முயற்சிப்பேன்.

உண்மையில் இன்று இந்த தோல்வி, என்னுடைய டென்னிஸ் அல்லது அது போன்ற எது குறித்தும் நான் ஏமாற்றமடைந்தவனாக இல்லை.

இதுதான் அந்தக் கூட்டத்திடமிருந்து உங்களுக்கு கிடைத்ததா?

அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை, மன்னிக்கவும் (சிரிக்கிறார்).

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

நீங்கள் கோர்ட்டிற்கு வருகிறீர்கள் – மக்கள் கூச்சலிடுவதைக் கேட்கிறீர்கள்.

நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். ஐந்தாவது செட்டில் கூட ரஃபா சர்வீஸ் செய்வதற்கு முன்பாக யாரோ ஒருவர் கமான் டேனியல் என்று கத்தியதைக் கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். ஆயிரம் பேர் ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ் என்று ஒலியெழுப்பினார்கள். எனது செர்விற்கு முன்பாக அதுபோன்ற சப்தத்தை அவர்கள் எழுப்பினார்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையில் அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. அது அவமரியாதை செய்வதாக, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாட விரும்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

(மைக்ரோஃபோன் வேலை செய்யவில்லை)

ஆம்… அது என்னைச் சுற்றியுள்ளவர்கள், அவர்கள் என்னிடம் என்ன சொல்லப் போகிறார்கள், இந்த பயணத்தில் எப்படி ஒன்றாகச் செல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்தது.

கனவு கண்ட அந்தக் குழந்தை இன்றைக்குப் பிறகு எனக்குள் இல்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். இவ்வாறாக இருக்கின்ற போது டென்னிஸைத் தொடர்வது மிகவும் கடினமாகவே இருக்கும்.

மூன்றாவது செட்டில் டிரிபிள் பிரேக் பாயிண்ட்டைப் பெற்றிருந்த போதும், ஒப்பீட்டளவில் இந்தப் போட்டியில் மிகவும் எளிதாக வெற்றியை நீங்கள் நெருங்கி விட்டதாகத் தோன்றிய போது உங்கள் ஆட்டத்தில் அல்லது உங்கள் எண்ணத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

ஆம், டிரிபிள் பிரேக் பாயிண்ட் பெற்றது அருமையான தருணமாகவே இருந்தது. உண்மையில் அவையனைத்தும் எனக்கு விவரமாக நினைவில் இல்லை. நான் செய்த அந்த மூன்று ரிட்டர்ன்களும் எனக்கு நினைவிலிருக்கின்றன. அவை கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தன. ஆனால் மீண்டும் சொல்வேன் – அதுதான் டென்னிஸ்… நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் ஒருவேளை போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

உத்தியாக எதையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் சரியாக விளையாடுவதாகவே உணர்ந்தேன். ஆனால் ரஃபா முன்னேறினார். உடல்ரீதியாக கொஞ்சம் மேலும், கீழுமாக இருந்தேன் என்றாலும் இன்று அவர் உடல்ரீதியாக என்னை விட வலிமையுடன் இருந்தார். மூன்றாவது செட் ஆரம்பத்திலிருந்தே அவரது சில ஷாட்கள் மற்றும் பாயிண்டுகள் நான் கொஞ்சம் பின்வாங்கிக் கொள்ளும் வகையிலேயே இருந்தன அதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஃபா அந்த தருணங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ஆனாலும்… ஆம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

உங்களின் இந்த போட்டிக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

இன்றிரவு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் சொன்ன கதை இன்றிரவுக்கு முன்பாகவே நீங்கள் உணர்ந்திருந்ததா அல்லது இன்றிரவைப் பற்றியதாக மட்டுமே அது உள்ளதா?

நான் சொன்னதைப் போல, என் கேரியரில் சில தருணங்களுக்கேற்றவாறு என்னை மாற்றியமைக்க முடிந்திருக்கிறது. என்னுடைய கதையில் அந்தக் குழந்தையைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

டாப் 20, டாப் 30 என்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உயர ஆரம்பித்த போது​ரோஜர், நோவக், ரஃபா ஆகியோருக்கு எதிராக விளையாட ஆரம்பித்தேன். எங்களுக்கிடையே சில கடினமான போட்டிகள் நடந்தன. நான் இன்னும் அவர்களை வெல்லவில்லை. அப்போதும் ஏராளமான பேச்சுகள் இருந்தன. இப்போது இருப்பதைப் போல அவ்வளவாக அப்போது இருந்ததாக நான் நினைக்கவில்லை என்றாலும் நிறைய பேச்சுகள் இருக்கவே செய்தன. ஆனால் இளைய தலைமுறை சிறப்பாகச் செய்ய வேண்டும், இளைஞர்கள் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதைப் போன்றதாகவே அந்தப் பேச்சுகள் இருந்தது நினைவில் உள்ளது. அது எனக்கு உந்துதலை அளித்த மாதிரி உணர்ந்தேன். ஆமாம், அவர்களுக்கு கடினமான நேரத்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் என்னிடமிருந்தது.

ஆனால் மக்கள் பொய் சொல்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பெரிய போட்டிகளில் ஒவ்வொரு முறை நான் கோர்ட்டில் அடியெடுத்து வைக்கும் போது, ​​நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றவர்களை அதிகமாக என்னால் பார்க்க முடியவில்லை.

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

இது இன்றிரவால் மட்டும் நடந்ததல்ல; படிப்படியாக உருவானது என்று சொல்லலாமா?

ஆம். இது படிப்படியாக வந்ததுதான். ஆனால் இன்றிரவு (தெளிவாக இல்லை), அல்லது அதை எப்படிச் சொல்வது… மலையின் உச்சியை அடைந்ததைப் போன்றுள்ளது.

இது உங்களுடைய தேசம் குறித்ததா அல்லது நீங்கள் இளையவர், அவ்வளவாக நன்கு அறியப்படாதவர் என்பதாலா?

நான் எந்த தேசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன். ரஷ்ய டென்னிஸ் சிறிது காலம் வீழ்ந்திருந்தது. நான் ஏராளமாக முயற்சி செய்து வருவதாகவே நினைக்கிறேன். ரஷ்யாவில் இப்போது டென்னிஸ் பற்றி நிறைய பேச்சுகள் இருப்பதை உணர்கிறேன். என்னுடன் ஆண்ட்ரி, கரேன், அஸ்லான் போன்றவர்களும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அருமை. எங்களுக்காக இன்னும் பலரை விளையாட வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

மற்ற நாட்டில் யாருடனாவது விளையாடும் போது, ​​அவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ரஷ்யன் அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றிற்காக அல்ல என்றே என்னால் நிச்சயமாகப் பார்க்க முடிகிறது.

அன்று நோவக் என்ன செய்வார் என்று நீங்களே கேட்டுக் கொண்டீர்கள். இன்று இரண்டு செட் பின்னால் இருந்த ரஃபா திரும்பி வந்ததைப் பார்க்கும் போது, ​​அந்த நிமிடத்திலிருந்து அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புவீர்களா?

Baby who stopped dreaming - Russian tennis player Daniel Medvedev Interview in tamil translated By T. Chandraguru. கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் நேர்காணல் | தமிழில்: தா. சந்திரகுரு

ரஃபா இடதுகை ஆட்டக்காரர். அடுத்த முறை நான் 2-0 என்று இரண்டு செட் பின் தங்கியிருக்கும் போது ‘உனக்கு எதிராக ரஃபா விளையாடியதைப் போல் விளையாடு’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

இன்று அவர் விளையாடிய விதம், அதை நான் அவர் போராடினார் என்று சொல்ல விரும்பவில்லை. ரஃபா எப்போதும் போராடுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திடீரென்று ரஃபா இன்று ஒரு ஸ்லாமின் இறுதிப் போட்டியில் போராடினார் என்று அதைச் சொன்னால் யாரும் ஆச்சரியப்படப் போவதில்லை.

அனைத்து செட்களிலும், கடினமான தருணங்களில் கூட அவர் விளையாடிய விதம் அவரைப் பொறுத்தவரை வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது. அதைப் பற்றி சிந்திக்காமலே இருக்க அவர் முயற்சி செய்திருக்கிறார் என்றாலும் அது அவரது தலையில் எங்கோ இருந்து கொண்டே இருந்திருக்க வேண்டும்.

நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனாக இருக்கின்றேன். ஆமாம், முடிந்தவரை முயற்சி செய்து விளையாடிய போது என்னை அவர் வென்றதில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். நான் உண்மையில் மிகவும் நன்றாகவே முயற்சி செய்தேன்.

நன்றி நண்பர்களே.

https://www.foxsports.com.au/tennis/australian-open-2022-daniil-medvedev-press-conference-loss-to-rafael-nadal-full-transcript-angry-at-crowd-rod-laver-arena/news-story/da08b88411473616f6f118b0258742d4

நன்றி: ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது – அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு



'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இஸ்லாமியர்களைப் பெருமளவில் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் ஹரித்துவாரிலும், தில்லியிலும் விடுத்த அழைப்புகள் இதுவரையிலும் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி தங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து திரட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் மூர்க்கத்தனம் கொண்டவையாக இப்போது மாறியிருப்பதையே காட்டுகின்றன. முன்னெப்போதுமில்லாத வகையிலே முஸ்லீம்களுக்கு எதிராக முழு அளவிலான ஆயுதப் போருக்கு இவ்வாறு அழைப்புகள் விடுக்கப்படுவது குறித்து நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். அவர்களிருவரிடம் உள்ள மௌனம் இரண்டு வழிகளில் இருப்பதாகக் காண முடிகிறது. ‘யாரும் தண்டனைக்குட்பட மாட்டோம்’ என்ற நம்பிக்கையை அளிப்பதற்கான அடையாளமாக, பாதுகாப்பின்மை குறித்து தங்களிடம் எழுந்துள்ள சந்தேக உணர்வின் அடையாளமாக என்று இரண்டு வழிகளில் அவர்களது மௌனம் இருக்கிறது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்த வாதங்களை இந்தக் கட்டுரையில் நான் முன்வைக்கிறேன்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

என்னுடைய வாதம் உத்தரப்பிரதேசத் தேர்தல், தனக்கு முக்கியமான புனிதம் நிறைந்த பகுதிகளில் தான் அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிய பாஜகவின் கவலை குறித்ததாக மிகவும் வழக்கமான அணுகுமுறைவாதமாக இருக்கப் போவதில்லை. இனப்படுகொலைவாதம் என்று நான் குறிப்பிடுவதையே நாடு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இனவெறி தேசியவாதங்கள் அனைத்தையும் பாதிக்கின்ற ஆழ்ந்த தர்க்கத்திலிருந்தே இந்த இனப்படுகொலைவாதம் உருவாகின்றது. அதன் தர்க்கம் தேசியவாதத்திற்கும், வன்முறைக்கும் இடையிலான தொடர்புடன் நன்கு பிணைக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் மார்க்சிஸ்டுகள் பலரும் அதனை ‘டிரெட்மில் விளைவு’ என்றே அடையாளப்படுத்துகின்றனர்.

தேசியவாதத்துக்கும், வன்முறைக்கும் இடையிலுள்ள உறவு அந்தரங்கமானது, இருவழியிலானது என்ற வாதங்களை பிறிதொரு கட்டுரையில் முன்வைத்திருந்தேன். ‘தேசத்தின் பெயரால் மக்கள் இறந்து போவார்கள், தேசியவாதம் மக்களைக் கொல்வதை நோக்கியே இட்டுச் செல்லும்’ என்று கருதுவதற்கே நாம் பழகியிருக்கிறோம். தேசியவாதம் தீவிரமடையும் போது அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தேசத்திற்காக இறந்து போவது அல்லது மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்களுக்குத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அனைத்து தேசியவாதங்களும் தங்களிடம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான கருவையே சுமந்து கொண்டுள்ளன.

இஸ்லாம் மட்டுமே ஜிஹாதிகளை உருவாக்குகிறது என்ற சிந்தனை நம்முடைய காலத்தின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். போர் வீரன், தியாகி என்ற அந்தஸ்தை ஒருசேர அடைவது என்ற நம்பிக்கையின் பேரிலே தீக்குளிப்பதற்கு அல்லது தற்கொலை செய்து கொள்வதற்குத் ​தயாராக இருக்கின்ற ஒவ்வொரு ஹிந்து, கிறிஸ்தவர் அல்லது யூதரும் தீவிர தேசியவாதத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றனர். தேசியவாதத்தின் எக்காளத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தாத ராணுவம், காவல்துறைப் படை, கமாண்டோ படை போன்றவை உறுதியுடன் இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. ஒருவேளை அவ்வாறு இருக்குமானால் அவை திறனற்றவையாகவே இருக்கும். தேசியவாதத்திலிருந்து வன்முறைக்கு இட்டுச் செல்கின்ற பாதை பற்றி அதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.

தேசிய-அரசு குறித்த நவீன வடிவத்தின் வருகைக்குப் பிறகு குழு வன்முறைகள் புதிய செயல்பாட்டைப் பெற்றிருக்கின்றன. அது தேசத்தின் மீதான பற்றுதல் என்ற சிந்தனைக்கு எரிபொருளை ஊற்றுவதாக மாறியிருக்கிறது. அதை நாம் காணக்கூடிய முக்கிய இடமாக பயிற்சி, ஒத்திகை, உண்மையான போர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசம் குறித்த புனைகதைகள், கருத்துருவாக்கங்களின் மீதான பற்றுதலை உருவாக்குகின்ற நவீன ராணுவங்களின் உருவாக்கம் இருக்கிறது. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை தேசம் என்பது கருத்துருவாக, கற்பனையாக, எட்டாத தொலைவிலே இருப்பது என்பதால் அவர்களிடத்தே தேசத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகும். அத்தகைய கருத்துருவாக்கத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகளாகவே தேசத்திற்காக இறந்து போவது, மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்பாடுகள் உள்ளன. அவை தியாகம், கௌரவம், தூய்மை போன்ற அனைத்து தேசியவாதங்களுடனும் ஆழ்ந்து பிணைந்துள்ள சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன.

அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வன்முறைகளின் மூலம், தேசத்தின் புனிதத்தன்மை மீதான உணர்வு புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் தரப்பட்டு மீட்டெடுக்கப்படுகிறது. எப்போதும் கிடைக்கின்ற வகையிலே தேசியவாத இயந்திரத்திற்குத் தேவையான புனிதமான எரிபொருளைப் புதுப்பித்துக் கொள்ளும் வழிகளாகவே சமீபத்தில் மோடியும் அவரது கூட்டாளிகளும் வாரணாசி போன்ற இடங்களில் நடத்தியுள்ள நாடகக் காட்சிகள் இருந்திருக்கின்றன. மத்திய தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது, பாடப்புத்தகங்கள், சமூக ஊடகங்கள், அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் மூலமாக வரலாற்றை மாற்றி எழுதுவது, காஷ்மீரைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக அடிபணிய வைப்பது போன்ற முயற்சிகளும் அதுபோன்றே இருக்கின்றன. இந்திய ஆயுதப் படைகள் இந்திய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அனைத்து இடங்களிலும் (பழங்குடியினர், மாவோயிஸ்ட் பகுதிகளில், வடகிழக்கில், அனைத்து எல்லை மாநிலங்களில்) வன்முறை என்பது பயனுள்ள செயல்பாட்டைக் கொண்டுள்ள (அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகின்ற ஒழுங்கு) போதிலும் – அது தனக்குள்ளே பகட்டான, நாடகரீதியான செயல்பாட்டையும் கொண்டுள்ளது. தேசியவாதம் உயிர் பிழைத்திருக்கப் போராட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் அது இருக்கிறது.

டிஜிட்டல் ஊடகங்கள் இன்றைய நிலைமையில் உள்ளூர் நிகழ்வுகள் தேசிய அரங்கில் உடனடியாக, பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கான உத்தரவாதத்தைத் தருபவையாக இருக்கின்றன. ஆனாலும் திட்டமிட்டு இந்திய முஸ்லீம்களை ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவா விடுத்து வருகின்ற அழைப்புகளில் நாம் காண முடிகின்ற சுயமுரண்பாட்டின் முக்கியமான தருணத்தை நோக்கியதாக இருக்கின்ற அது மிகவும் எளிமையானதாக இருக்கவில்லை.

சிந்தனையாளர்கள் – குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் முதலாளித்துவத்தில் டிரெட்மில் விளைவை கண்டதைப் போலவே இங்கே இனப்படுகொலைவாதம் என்று நான் கூறுவதையும் காணலாம். இனப்படுகொலை வரலாற்றில் தேசியவாதத்தின் குறைந்தபட்சத் தேவையை நிலைநிறுத்துவதற்காக வன்முறைகளைப் பெருமளவிலே அதிகரிக்க வேண்டிய தருணமாகவே இனப்படுகொலைவாதம் அமைகிறது. முதலாளித்துவத்தைப் போலவே அது அமைப்புரீதியானதாக, ஒற்றைமயமாக்கலுடன், அச்சுறுத்திக் கைப்பற்றிக் கொள்வதாகவும் இருக்கின்றது. ஒட்டுமொத்தக் கவனம், அர்ப்பணிப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்களின் முழுமையான பங்கேற்பைக் கோருவதாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலைவாதம் முதலாளித்துவத்தைப் போலவே வன்முறையின் அன்றாட உற்பத்தியைத் தக்கவைத்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சுரண்டுகிறது. வன்முறையின் டிரெட்மில்லை எதிர்நோக்கி, வடிவமைத்து, அதிலிருந்து பயன்பெறுகின்ற சிறிய வகை தொழில்முனைவோர், மேலாளர்கள் போன்றவர்களுக்குப் பயனளிப்பதாக அது இருப்பதால், இனப்படுகொலைவாதம் மூலம் பலனைப் பெற்றுக் கொள்பவர்களாகவே அவர்கள் கருதப்படுவர்.

மோடி இந்தியா இப்போது தேசியவாதத்தின் மிக முன்னேறிய கட்டமான இனப்படுகொலைவாத கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, இனப்படுகொலை என்ற இயந்திரத்திற்கான எரிபொருள் வெளிப்படையாகவே தேவைப்படுகின்றது. இந்தியாவில் ஆங்காங்கே, தானாக எழுகின்ற, உள்ளூர் வன்முறை நிகழ்வுகளால் திருப்தியடைய முடியாத தேசியவாத இயந்திரத்தின் வெறித்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கிறது. முறையான வலுவூட்டல், அணிதிரட்டல் ஆகியவற்றுடன் அரசிடமிருந்து அல்லது அரசிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்து ஆட்சிக் கொள்கையும் அதற்குத் தேவைப்படுகிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வான்சீ மாநாட்டில் இறுதித் தீர்வு அதிகாரப்பூர்வ நாஜிக் கொள்கையாக மாற்றப்பட்டதற்கு இணையானதாகவே 2021 டிசம்பர் 17-19 நாட்களில் நடைபெற்ற ஹரித்துவார் சன்சத் கூட்டம் அமைந்திருந்தது. இப்போதும், அதைத் தொடர்ந்து காவியுடை உடுத்திய ஆண்களும் பெண்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விடுக்கப்பட்டு வருகின்ற போருக்கான அழைப்புகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது நாஜிக்களின் கீழ் வாஃபன்-எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஈடான பாத்திரத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் சாது-அகாடா தரப்பு கொண்டிருப்பதற்கான விளக்கத்தையே தருகின்றது. மேலும் அது மையப்படுத்தப்பட்ட தலைமையைத் தேடுகின்ற பல்வேறு குண்டர்கள், கும்பல்கள், படைப்பயிற்சி பெற்றவர்கள் என்றுள்ள ஈட்டியின் முனையாகவும் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தொடர்புடைய முக்கியமான நபர்களுக்கு எதிராக சமீபத்தில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடத்தக்க இந்தப் பொதுவெளி பேச்சுகள் குறித்து மோடியும் அமித்ஷாவும் மௌனம் காப்பது இன்றைக்கு இந்தியாவில் இனப்படுகொலைக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வ சட்டபூர்வமான தன்மையின் அலட்சியப்படுத்த முடியாத குறியீடாகவே இருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

நான் சொல்வது சரியாக இருக்குமென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் மிக உயர்ந்த மட்டத்திலே உருவாகியுள்ள பீதி, பதட்டம் நிறைந்த தருணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய இனப்படுகொலைவாதம் எழுந்துள்ளது. அவர்களுடைய மனநிறைவு அல்லது மகிழ்ச்சிக்கான தருணமாக அது இருக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இந்திய சமூகத்தில் அழிந்து போனவர்களாக முஸ்லீம்களை மாற்ற நினைக்கின்ற போர்க்குணமிக்க ஹிந்துத்துவாவின் நோக்கத்தால் வரையறுக்கப்படாத இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளதை இன்றைக்கு நடைபெறுகின்ற நாடகம் நமக்கு நினைவூட்டிக் காட்டுகிறது. தாங்கள் ஹிந்துத்துவக் கருத்தொற்றுமையில் அங்கம் வகிக்கவில்லை என்பதைக் காட்டுகின்ற வகையிலே – ஏறக்குறைய ஓராண்டு காலாமாக தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டிருந்து, தங்களை அடக்க நினைத்த மோடியின் மனவுறுதியை முறியடித்த இந்திய விவசாய சமூகங்களைச் சார்ந்த பிரதிநிதிகள்; கோபம் கொண்டவர்களாக, அரசியல்மயப்படுத்தப்பட்டவர்களாக, அதிகரித்து வருகின்ற எதிர்பார்ப்புகளின் விளைவான புரட்சியின் நாயகர்களாக பெரும் எண்ணிக்கையில் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற தலித்துகள் என்று இரண்டு முக்கியமான சக்திகளிடமிருந்து கோபம் வெளிப்பட்டிருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

ஆட்சிக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள், ஹிந்துத்துவா எதிர்ப்பு தலித்துகள் என்று இந்த இரண்டு மக்களின் எண்ணிக்கை மேலோட்டமாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் இன்றைக்கு முப்பது கோடி இந்தியர்கள் என்ற அளவிலே இருக்கும். அந்த அளவிற்கான மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளோர் தற்போதைய ஆட்சிக்கு அடிபணிந்து போவதற்கான அறிகுறிகளையோ, அரசியல் மேடையில் இருந்து அமைதியாக வெளியேறிக் கொள்வதற்கான அறிகுறிகளையோ காட்டவில்லை.

அந்த முப்பது கோடிப் பேர் இந்தியாவின் இருபது கோடி முஸ்லீம்கள் மீதான ஹிந்துத்துவா வெறியின் இலக்காக இருக்கின்றனர். அதன் தர்க்கத்திற்கும், இன்றைய இனப்படுகொலைவாதத்தின் மையத்தில் உள்ள டிரெட்மில் விளைவுக்கும் ஏராளமான தொடர்பு இருக்கின்றது. இனப்படுகொலைக்கான அழைப்புகளை விடுப்பதன் மூலம் ஒருபுறத்தில் முஸ்லீம்களைப் பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் உண்மையில் இனப்படுகொலை செய்யப்படுவதற்கான ஆட்களாக தாங்கள் மாறி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள், தலித்துகள், பிற எதிர்ப்புக் குழுக்களுக்கு விடுகின்ற எச்சரிக்கை சமிக்ஞையாகவே உள்ளது. மற்றொரு புறத்தில் இந்த குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு புதிய இனப்படுகொலைவாதச் செயலில் பங்கு கொடுத்து அவர்களை ஹிந்துத்துவா குடையின் கீழ் இழுத்துக் கொள்ளும் வகையில் ஆட்சேர்ப்பு உத்தியாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலை இயந்திரங்கள் எந்த வேகத்தில் இயங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதையே இந்த இரட்டை உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இனப்படுகொலைத் திட்டங்களுக்குத் தேவையான ஆட்களை முடிந்த அளவிற்கு வழங்குவதாகவும் அது இருக்கிறது.

இந்த புதிய இனப்படுகொலைவாதத்தை ஆளுகின்ற அரசிடம் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாகப் பார்க்கின்ற என்னுடைய வாதத்திற்கு இப்போது திரும்புகிறேன். மனித உரிமைகள் – குறிப்பாக இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் உரிமைகள் – மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற மேற்குலகம் மற்றும் பிற அரசியல் சக்திகளின் அங்கீகாரம் மோடி, அவரது ஆட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது. மற்ற இனவெறி எதேச்சதிகாரிகள் போலல்லாமல் மோடியால் அந்த வட்டாரங்களில் தன்னுடைய நம்பகத்தன்மையை இதுவரையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் அது இப்போது ஆபத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனது ஆதரவாளர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகளை விடுப்பதை அனுமதித்திருப்பது இந்த ஆட்சியிடம் உள்ள இனப்படுகொலை குறித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. அதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பாளர்களின் பார்வையில் அவர்கள் மீதுள்ள பிம்பத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. அதுவே அவர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் விரக்திக்கான காரணமாக உள்ளது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறப் போகின்ற பிற மாநிலத் தேர்தல்கள் இந்த புதிய இனப்படுகொலைவாதத்திற்கான காலம், இடங்களுக்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்றாலும் அவை பெரிய அளவிலே அல்லது புரிந்து கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் இந்த ஆட்சி சுதந்திரமான சட்டமன்றம், நீதித்துறை அல்லது பத்திரிகைகளுக்கான தேவைக்கு எதிராக தன்னையே பணயம் வைத்துக் கொண்டுள்ளது. அந்தப் பணயத்திற்காக இனப்படுகொலைவாதத்தை தங்களுடைய வெளிப்படையான அரசியல் தளமாக்கியுள்ள இந்த ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் போதுமான இந்தியர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வைத்திருப்பது மிகவும் மோசமான பணயமாகும் என்றாலும் அதுவே ஒருவேளை இருள் கவிந்துள்ள இப்போதைய அரசியலில் நம்பிக்கைக்கான விடியலாகவும் இருக்கக் கூடும்.

https://thewire.in/politics/narendra-modi-india-genocidalism
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் – தமிழில் தா.சந்திரகுரு



Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

மோகன்தாஸ் காந்தி (1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப் பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. நோபல் விருதிற்காகப் பலமுறை காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விருது அவருக்கு ஒருபோதும் வழங்கப்படவேயில்லை. நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியுடன் – நார்வே நோபல் விருதுக் குழுவின் பார்வை குறுகிய கண்ணோட்டத்துடன் அமைந்திருந்ததா, விருதுக் குழு உறுப்பினர்கள் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையே நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் பாராட்ட முடியாதவர்களாக இருந்தார்களா, காந்திக்கு விருதை வழங்குவதால் பிரிட்டனுக்கும், தங்களுடைய நாட்டிற்கும் இடையே இருக்கின்ற உறவுக்குத் தீங்கு விளையும் என்று அவர்கள் பயந்தார்களா என்பது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பட்டு வருகின்றன.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

1937, 1938, 1939, 1947ஆம் ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரியில் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தலாய்லாமாவுக்கு 1989ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்ட போது, காந்தி ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டது குறித்து நோபல் விருதுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர். அப்போதைய விருதுக்குழுவின் தலைவர் ‘ஒருவகையில் தலாய்லாமாவிற்கான இந்த விருது மகாத்மா காந்தியின் நினைவாகவே வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆயினும் காந்திக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை என்பது குறித்து இருந்து வருகின்ற ஊகங்களைப் பற்றி தங்களுடைய கருத்துகளை ஒருபோதும் நோபல் குழுவினர் தெரிவித்ததே இல்லை. காந்திக்கு விருது வழங்கப்படாமை குறித்த அந்த சர்ச்சையின் மீது சிறிதளவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஆதாரங்கள் எதுவும் சமீபகாலம் வரையிலும் கிடைக்கவில்லை.

மகாத்மா காந்தி – யார் அவர்?
மிகச் சிறந்த ஆத்மா என்பதாக மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இன்றைய மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்த சிறிய ஆட்சிப்பகுதி ஒன்றின் தலைநகராக இருந்த போர்பந்தரில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே முதலமைச்சராக இருந்தார். அவரது தாயார் ஆழ்ந்த ஹிந்து மதப்பற்றாளர். அவரும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அகிம்சை, மதக் குழுக்களிடையே சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிக முக்கியமானதாகக் கருதுகின்ற ஹிந்து மதப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இந்தியச் சமூகத்தில் மோகன்தாஸ் காந்திக்கு கிடைத்த இடத்தை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது என்பதற்கான மிகமுக்கியமான விளக்கமாக அவரது குடும்பப் பின்னணியே இருக்கிறது. மோகன்தாஸ் 1880களின் பிற்பகுதியில் லண்டனுக்குச் சென்று அங்கே சட்டம் பயின்றார். படிப்பை முடித்த பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய அவர் அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் 1893இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள நடாலுக்குச் சென்று அங்கே இருந்த இந்திய வர்த்தக நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்திய சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்ற வகையிலே காந்தி அங்கே பணியாற்றி வந்தார். இனவெறிச் சட்டத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட அந்தப் பணியே தன்னிடம் வலுவான மத உறுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சுய தியாகத்திற்கான உறுதியை ஏற்படுத்திக் கொள்ளவும் அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அடிப்படை மனித உரிமைகளுக்காக அங்கே நடைபெற்ற போராட்டத்தில் அகிம்சை முறையை பெரும் வெற்றியுடன் காந்தி அறிமுகப்படுத்தினார்.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

அவர் கடைப்பிடித்த சத்தியாக்கிரகம் என்ற ‘உண்மையான ஆற்றல்’ என்ற வழிமுறை கருத்தியல் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது. சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்காமல், நியாயமற்ற அல்லது அடக்கி வைக்கக்கூடிய சட்டங்களை இந்தியர்கள் மீற வேண்டும் என்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்வதோடு, அனைவரும் சட்டத்தை மீறியதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அமைதியாக, இன்னும் உறுதியுடன், கேள்விக்குரிய அந்த சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையை நிராகரிக்க வேண்டும் என்பதாக அந்தக் கருத்தியல் இருந்தது. அவ்வாறான நடவடிக்கை அவரது எதிரிகளை – முதலில் தென்னாப்பிரிக்க அதிகாரிகள், பின்னர் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் – தங்களுடைய சட்டங்களில் இருந்த சட்டவிரோதத்தை உணர வைத்தது.

காந்தி மீண்டும் 1915ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்த போது, தென்னாப்பிரிக்காவில் அவர் செய்திருந்த சாதனைகள் குறித்த செய்திகள் அவரது சொந்த நாட்டில் ஏற்கனவே பரவியிருந்தன. சில ஆண்டுகளிலேயே – முதலாம் உலகப் போரின் போது – அவர் இந்திய தேசிய காங்கிரசில் முன்னணி நபரானார். போரின் இடைக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அகிம்சைப் பிரச்சாரங்களை அவர் தொடங்கினார்.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

அந்த நேரத்தில் இந்திய ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வலுவான முயற்சிகளை மேற்கொண்ட காந்தி ஹிந்து சமுதாயத்தில் இருந்த ‘தீண்டத்தகாதவர்களின்’ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடினார். அவரது சக இந்திய தேசியவாதிகள் பலரும் திட்டமிட்ட சில காரணங்களுக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை முறைகளைப் பயன்படுத்த விரும்பினாலும், காந்தியிடமிருந்த அகிம்சையானது கொள்கை ரீதியானதாகவே இருந்தது. இந்திய தேசியவாதம் அல்லது மதம் குறித்த அணுகுமுறைக்கு அப்பாலும் மக்கள் அவர் மீது மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அகிம்சை மீது அவர் கொண்டிருந்த உறுதியே காரணமாயிற்று. சிறைத்தண்டனையை அவருக்கு விதித்த பிரிட்டிஷ் நீதிபதிகள் கூட காந்தி ஒரு விதிவிலக்கான ஆளுமை என்பதாகவே அங்கீகரித்திருந்தனர்.

அமைதிக்கான நோபல் விருதிற்கான முதல் பரிந்துரை
1930களின் முற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்டிருந்த, காந்திக்கு ஆதரவாக இருந்த ‘இந்திய நண்பர்கள்’ சங்கங்களின் வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காந்தியை அதிகம் பாராட்டியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர். அந்த இந்திய நண்பர்கள் வெவ்வேறு சிந்தனைகளின் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களில் மதம் சார்ந்திருந்தவர்கள் காந்தியிடம் இருந்த பக்தியைப் பாராட்டினர். ராணுவ எதிர்ப்பாளர்கள், அரசியல் தீவிர உணர்வாளர்கள் அவரது அகிம்சை தத்துவத்தின் மீது அனுதாபம் கொண்டு அவரை ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக ஆதரித்தனர்.

1937ஆம் ஆண்டில் நார்வே ஸ்டோர்டிங் (பாராளுமன்றம்) உறுப்பினரான ஓலே கோல்ப்ஜார்ன்சன் (தொழிலாளர் கட்சி) அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்காக காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார். நார்வே நோபல் குழு தயாரித்த சுருக்கப்பட்டியலில் இருந்த பதின்மூன்று பேரில் ஒருவராக காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தார். ஆனால் காந்தியின் நியமனத்திற்கு செயலூக்கம் தருகின்ற வகையில் கோல்ப்ஜார்ன்சன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவில்லை. ‘இந்திய நண்பர்கள்’ அமைப்பின் நார்வே கிளையில் இருந்த முன்னணி பெண்களால் எழுதப்பட்ட கடிதத்திலிருந்த சொற்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற வகையிலே நேர்மறையாகவே இருந்தன.

குழுவின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேக்கப் வோர்ம்-முல்லர் அப்போது காந்தி குறித்து விமர்சனப்பூர்வமான அறிக்கை ஒன்றை எழுதினார். ஒருபுறம் ‘சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு மிகச் சிறந்த உன்னதமான துறவி – இந்திய மக்களால் தகுதியுடையவராக, மரியாதைக்குரியவராக நேசிக்கப்படுகின்ற முக்கியமான மனிதர்’ என்று ஒரு மனிதராக காந்தியைப் பற்றிய பொதுவான அபிமானத்தை அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் மறுபுறத்தில் அரசியல் தலைவராக காந்தியைப் பற்றிய அந்த நார்வே பேராசிரியரின் விளக்கம் சற்று மட்டுப்படுத்துகின்ற வகையிலேயே இருந்தது. ‘அவரைப் பின்பற்றுபவர்களால் திருப்திகரமாக அவற்றை விளக்க முடியாத அளவிற்கு கூர்மையான திருப்பங்கள் அவருடைய கொள்கைகளில் உள்ளன(…) சுதந்திரப் போராளி, சர்வாதிகாரி, லட்சியவாதி, தேசியவாதியாக அவர் இருக்கின்றார். பொதுவாக புனிதராக இருக்கின்ற அவர் யாரும் எதிர்பாராத வகையிலே மிகச் சாதாரண அரசியல்வாதியாகவும் இருக்கின்றார்’ என்று அவர் எழுதியிருந்தார்.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

சர்வதேச அமைதிக்கான இயக்கத்தில் இருந்த பலரும் காந்தி மீது விமர்சனம் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களைப் பின்பற்றி ‘காந்தி ஒரு சமாதானவாதி அல்ல, பிரிட்டிஷார் மீதான தனது வன்முறையற்ற பிரச்சாரங்கள் வன்முறையாக, பயங்கரவாதமாக மாறி விடும் என்பதை காந்தி அறிந்திருக்க வேண்டும்’ என்று நோபல் குழுவின் ஆலோசகராக இருந்தவரும் குறிப்பிட்டிருந்தார். 1920-1921இல் முதலாவது ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தின் போது அதுதான் உண்மையில் நடந்தது. ஐக்கிய மாகாணத்தில் இருந்த சௌரி சவுராவில் கூடியிருந்த கும்பல் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியது. காவல்துறையினர் பலரைக் கொன்ற பின்னர் அந்தக் கும்பல் காவல் நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தியது.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

அவர் ஓர் இந்திய தேசியவாதி என்பதே இந்தியர்கள் அல்லாதவர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற காந்தி குறித்த விமர்சனமாகும். பேராசிரியர் வோர்ம்-முல்லர் தன்னுடைய அறிக்கையில் ‘தென்னாப்பிரிக்காவில் நன்கு அறியப்பட்டிருந்த அவருடைய போராட்டம் இந்தியர்கள் சார்பானதாக மட்டுமே இருந்தது; அது இந்தியர்களைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருந்த கறுப்பர்கள் சார்ந்ததாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றே கூற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காந்தியின் கொள்கைகள் உலகளாவியவையா அல்லது இந்தியத் தன்மை கொண்டவையா என்பது குறித்த சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார்.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு
செல்வுட் பிரபு சிசில்

செல்வுட் பிரபு சிசில் 1937ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றிருந்தார். அந்த ஆண்டு காந்திக்கு அமைதி விருது வழங்குவதை நார்வே நோபல் குழு தீவிரமாகப் பரிசீலித்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. அமைதிக்கான விருதிற்காக 1938, 1939ஆம் ஆண்டுகளில் மீண்டும் காந்தியின் பெயரை ஓலே கோல்ப்ஜார்ன்சன் பரிந்துரைத்தார். ஆனால் குழுவின் சுருக்கப்பட்டியலில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் கடந்து செல்ல வேண்டியதாயிற்று.

1947: வெற்றியும் தோல்வியும்
1947ஆம் ஆண்டில் காந்திக்கு விருது வழங்குவது குறித்த பரிந்துரைகள் இந்தியாவிலிருந்து நார்வே வெளியுறவு அலுவலகத்தின் வழியாக தந்தி மூலமாக வந்து சேர்ந்தன. பம்பாய் பிரதமராக இருந்த பி.ஜி.கெர், ஐக்கிய மாகாணங்களின் பிரதமராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், இந்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்த மாவ்லங்கர் ஆகியோர் காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தனர்.

‘இந்த ஆண்டுக்கான நோபல் விருதிற்கு மகாத்மா காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்கிறேன். மகாத்மா காந்தி இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பியவர். தார்மீக ஒழுங்கு நிறைந்த மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இன்றளவில் உலகின் அமைதிக்கான மிகச் சிறந்த வெற்றிவீரராக இருப்பவர்’ என்று தந்தி பாணியில் கோவிந்த் வல்லப் பந்த் எழுதியிருந்ததைப் போலவே அவரது பெயரை முன்வைத்து ஆதரித்தவர்களின் கருத்துகள் இருந்தன. ஆறு பெயர்களுடன் இருந்த நோபல் குழுவின் சுருக்கப்பட்டியலில் மோகன்தாஸ் காந்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.

இந்திய அரசியல் வரலாற்றில் 1937க்குப் பின்னர் காந்தியின் பங்கை முக்கியத்துவப்படுத்தி நோபல் குழுவின் ஆலோசகரும், வரலாற்றாசிரியருமான ஜென்ஸ் அருப் சீப் புதிய அறிக்கையொன்றை எழுதினார். ‘காந்தி மற்றும் அவரது இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் ஒரே நேரத்தில் பெற்றுத் தந்த இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினையை நோக்கியதாகவே 1937 முதல் 1947 வரையிலான பத்து ஆண்டுகள் இருந்தன’ என்று சீப் எழுதினார். சுதந்திரத்திற்கு முந்தைய கடைசி பத்தாண்டுகளில் இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான போராட்டம்; இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கேற்பு, இறுதியாக ஹிந்து, முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கையாள வேண்டியிருந்த மூன்று வெவ்வேறான ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோதல்களின் போது காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த அறிக்கை விவரித்தது. அந்த அனைத்து விஷயங்களிலும் காந்தி தனது அகிம்சைக் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வோர்ம்-முல்லர் எழுதிய அறிக்கையைப் போன்று காந்தியைப் பற்றி சீப் எழுதிய அறிக்கை விமர்சிக்கவில்லை. அது மிகவும் சாதகமாகவே இருந்தது என்றாலும் வெளிப்படையாக ஆதரவும் அளிக்கவில்லை. இந்தியா, புதிய முஸ்லீம் நாடான பாகிஸ்தானைப் பிரித்ததைப் பற்றியும் சீப் ‘1947 ஆகஸ்ட் 15 அன்று டைம்ஸ் பத்திரிகையில் வெளியானவாறு இந்தியப் பிரிவினை என்ற பிரம்மாண்டமான அறுவைச்சிகிச்சை மிகப் பெரிய அளவிலே ரத்தக்களரிக்கு வழிவகுக்கவில்லை என்பதற்கு காந்தியின் போதனைகள், அவரைப் பின்பற்றியவர்களின் முயற்சிகள், அவரது இருப்பு போன்றவற்றிற்கு கணிசமான பங்கு உண்டு என்றே பொதுவாக கருதப்படுகிறது’ என்று சுருக்கமாக எழுதி முடித்திருந்தது இன்றைய நிலையில் பார்க்கும் போது முதிர்ச்சியற்றதாகவே தோன்றுகிறது.

அவரது அறிக்கையைப் படித்த பின்னர் நார்வே நோபல் குழுவின் உறுப்பினர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் குறித்து புதிய தகவல்களைப் பெற்றதாக உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும் அமைதிக்கான நோபல் விருது அதுபோன்ற போராட்டங்களுக்காக ஒருபோதும் வழங்கப்பட்டதே இல்லை. அகிம்சையின் அடையாளமாக காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் 1947ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அமைதியற்று இருந்த நிலையில், மிக முக்கியமான இந்தியத் தலைவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டால் அதன் மூலம் என்னவிதமான அரசியல் விளைவுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களையும் குழு உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டியிருந்தது.

நோபல் குழு உறுப்பினர்கள் 1947 அக்டோபர் 30 அன்று தங்கள் முடிவை எடுத்த போது, குழுவிலிருந்த இரண்டு செயற்குழு உறுப்பினர்களான கிறிஸ்தவ பழமைவாதியான ஹெர்மன் ஸ்மிட் இங்க்பிரெட்சன், தாராளவாத கிறிஸ்தவரான ஆஃப்டெடல் ஆகியோர் காந்திக்கு ஆதரவாகப் பேசினர் என்பதை குழுவின் தலைவராக இருந்த குன்னர் ஜானின் நாட்குறிப்பில் இருந்து இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக அவர்கள் இருவரும் ஒய்.எம்.சி.ஏ தலைவராக இருந்த ஜான் மோட்டை தீவிரமாக ஆதரித்தனர். பொதுவாக அவர்கள் சமூக மற்றும் கருத்தியல் மோதல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள உலகில் தார்மீகம், மத அடையாளங்களுடன் பணியாற்றக் கூடியவர்களை விரும்பியதாகவே தெரிகிறது. இருப்பினும் அவர்களால் 1947ஆம் ஆண்டு மற்ற மூன்று உறுப்பினர்களைச் சமாதானப்படுத்த முடியவில்லை. தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி மார்ட்டின் டிரான்மல் இந்திய-பாகிஸ்தான் மோதல்களுக்கு மத்தியில் காந்திக்கு விருது வழங்கப்படுவது குறித்து மிகுந்த தயக்கம் காட்டினார். டிரான்மலுடன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட் உடன்பட்டிருந்தார். போரில் ஈடுபாடு கொள்வதற்கு மிகவும் ஆதரவானவராக காந்தி இருந்தார் என்றே அவர்கள் கருதினார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றதொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி வெளியிட்டிருந்த அறிக்கை அவர் போரை தொடர்ந்து நிராகரிப்பதை கைவிட்டு விட்டதைக் குறிப்பதாக இருந்ததாக டிரான்மல், ஜான் இருவரும் உணர்ந்தனர். ‘பாகிஸ்தானுடனான ‘போரில்’ திரு.காந்தி’ என்ற தலைப்பில் 1947 செப்டம்பர் 27 அன்று வெளியான ராய்ட்டர்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் தந்தியில் ‘இன்றிரவு காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: தான் எப்போதுமே எல்லா யுத்தங்களையும் எதிர்த்து வந்திருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து நீதியைப் பெறுவதற்கு வேறு வழியில்லை என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிரூபிக்கப்பட்ட பிழைகளைக் கண்டு கொண்டு, அவற்றை அகற்றிக் கொள்ள மறுப்பதைத் தொடருமானால், இந்திய ஒன்றிய அரசு அதற்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும். போரை யாரும் விரும்பவில்லை என்றாலும் நீதியைத் தாங்கிக் கொள்ளுமாறு ஒருபோதும் யாரையும் அறிவுறுத்த முடியாது. நியாயமான காரணத்திற்காக அனைத்து ஹிந்துக்களும் நிர்மூலமாக்கப்பட்டால் தான் கவலைப்படப் போவதில்லை. போர் என்று வந்தால், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் பாராமுகமாக ஐந்தாவது தூணாக இருக்க முடியாது. பாகிஸ்தானுடன் விசுவாசமாக இருக்க முடியாவிட்டால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோன்று பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கின்ற முஸ்லீம்கள் இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனடியாக ‘அந்த அறிக்கை சரியானதுதான் என்றாலும் முழுமையானது அல்ல’ என்று காந்தி கூறியிருந்தார். அந்தக் கூட்டத்தில் தனது எண்ணத்தை தான் மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறிய காந்தி ‘அவர்கள் விரும்புகின்ற ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அவை போன்ற எதையும் புதிய அரசாங்கம் கொண்டிருப்பதை தான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலாவது வந்த அந்த அறிக்கை முழுமையானது இல்லை என்பதை ஜான், டிரான்மல் இருவருமே அறிந்திருந்தனர் என்றாலும் அவர்கள் சந்தேகத்துடனே இருந்தனர். தன்னையே மேற்கோள் காட்டிக் கொண்ட ஜான் ‘பரிந்துரைக்கப்பட்டவர்களிலே அவர் (காந்தி) மிகப் பெரிய ஆளுமை என்பது உண்மைதான் என்றாலும், – அவரைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும் – அவர் அமைதிக்கான தூதர் மட்டுமே அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; முக்கியமாக அவர் ஒரு தேசபக்தர்(…) மேலும் காந்தி அப்பாவி இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சிறந்த நீதிபதி, வழக்கறிஞர்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்றே ஒரு மாதத்திற்கு முன்னதான காந்தியின் அறிக்கையை விருதுக் குழுத்தலைவர் சந்தேகித்ததாகத் தெரிகிறது. 1947ஆம் ஆண்டு இருந்த ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் காந்திக்கு விருது வழங்குவதை எதிர்த்ததால், அந்த விருதை குவாக்கர்ஸ் குழுவிற்கு வழங்க அந்தக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

1948: மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்க கருதப்பட்டது
அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதைப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு குழுவிற்கு ஆறு கடிதங்கள் கிடைத்திருந்தன. பரிந்துரைத்தவர்களில் குவாக்கர்ஸ் மற்றும் அதற்கு முன்னால் விருது பெற்றிருந்த எமிலி கிரீன் பால்ச் ஆகியோரும் அடங்குவர். குழுவின் சுருக்கப்பட்டியலுக்குள் மூன்றாவது முறையாக காந்தி இடம் பெற்றார் – இந்த முறை அந்தப் பட்டியலில் மூன்று பெயர்கள் மட்டுமே இருந்தன. காந்தியின் வாழ்க்கையின் கடைசி ஐந்து மாதங்களில் அவரது நடவடிக்கைகள் குறித்து குழுவின் அறிக்கையை குழுவின் ஆலோசகரான சீப் எழுதினார். தனது வாழ்க்கை முறையின் மூலமாக நெறிமுறை மற்றும் அரசியல் அணுகுமுறையில் தன்னுடைய ஆழ்ந்த அடையாளத்தை காந்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ‘இந்த விஷயத்தில் காந்தியை மதங்களின் நிறுவனர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும்’ என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஒரு தரமுறையாக ஏராளமான மக்களிடம் நிலவுகிறது என்று முடித்திருந்தார்.

மரணத்திற்குப் பின் யாருக்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் நோபல் விருதுகள் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம் என்றே அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் விதிகள் இருந்தன. அதனால் காந்திக்கு விருது வழங்க முடியும் என்பதற்கான சாத்தியம் இருக்கவே செய்தது. இருப்பினும் காந்தி ஓர் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல, எந்தவொரு சொத்தையும் அவர் விட்டுவிட்டுச் செல்லவில்லை, தன்னுடைய இறுதி விருப்பத்தையும் அவர் எழுதி வைக்கவில்லை என்பதால் விருதிற்கான பணத்தை யாரிடம் தருவது என்று கேள்வியெழுந்தது.

நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனரான ஆகஸ்ட் ஷூ, மரணத்திற்குப் பின் விருதை குழு வழங்கினால் ஏற்படுகின்ற நடைமுறை விளைவுகளைப் பரிசீலிக்குமாறு குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஓலே டோர்லீஃப் ரீட்டிடம் கேட்டுக் கொண்டார். பொதுப் பயன்பாட்டிற்குப் பணத்தைப் பயன்படுத்தும் வகையிலான சாத்தியமான பல தீர்வுகளை ரீட் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர் சுவீடனில் உள்ள விருது வழங்கும் நிறுவனங்களின் கருத்தையும் கேட்டறிந்தார். அந்த நிறுவனங்களின் பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன. அந்த நிறுவனங்கள் விருது வழங்குவதென குழுவின் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், விருது பெற்றவர் இறந்தாலொழிய மரணத்திற்குப் பிந்தைய விருதுகளைத் தரக்கூடாது என்றே கருதின.

‘விருதைப் பெறுவதற்கு உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அந்த ஆண்டு யாருக்கும் விருதை வழங்குவதில்லை என்று 1948 நவம்பர் 18 அன்று நார்வே நோபல் குழு முடிவு செய்தது. ‘மரணத்திற்குப் பிந்தைய விருது என்பது விருதை நிறுவியவரின் இறுதி விருப்பத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை’ என்று குழுவின் தலைவரான குன்னர் ஜான் தனது நாட்குறிப்பில் எழுதினார். முடிவில் தலைவரின் கூற்றை அவரது மூன்று சகாக்களும் ஏற்றுக் கொண்டனர். ஆப்டெடல் மட்டுமே மரணத்திற்குப் பிந்தைய விருது காந்திக்கு தரப்படுவதற்கு ஆதரவாக இருந்தார்.

‘உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாருமில்லை’ என்று அறிவித்தது குறித்து, காந்தியைத் தவிர்த்து அமைதிக்காகப் பணிபுரிந்த, இறந்து போன வேறொருவரை அதாவது 1948 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்கான ஸ்வீடனின் ஐ.நா.தூதரான கவுண்ட் பெர்னாடோட்டை அந்தக் குழு மனதில் கொண்டிருந்ததாக பின்னர் ஊகங்கள் எழுந்தன. 1948இல் விருதிற்காக பெர்னாடோட் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் அந்த ஊகங்களை நிராகரித்து விடலாம்.

ஆக, இன்னும் ஓராண்டு காந்தி உயிருடன் இருந்திருந்தால் அமைதிக்கான நோபல் விருதைப் பெறுவதற்காக அவர் ஒஸ்லோவுக்கு அழைக்கப்பட்டிருப்பார் என்று கருதுவதற்கான நியாயம் இருக்கவே செய்கிறது.

Why was Mahatma Gandhi Never Awarded the Nobel Peace Prize Article in tamil Translated By Chandraguru மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் - தமிழில் தா.சந்திரகுரு

அமைதிக்கான நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவே இல்லை?
அமைதிக்கான நோபல் விருது கிட்டத்தட்ட ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்கு மட்டுமே 1960ஆம் ஆண்டு வரையிலும் வழங்கப்பட்டிருந்தது. பின்னோக்கிப் பார்த்தால், நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருப்பதாகத் தோன்றலாம். காந்தி ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் உண்மையான அரசியல்வாதியோ அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவரோ அல்ல. முக்கியமாக அவர் மனிதாபிமான நிவாரணப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளின் அமைப்பாளரோ அல்ல என்பதால் ஒருவேளை விருது கிடைத்திருந்தால், நிச்சயம் அந்த விருதைப் பெற்ற புதிய இனத்தைச் சார்ந்தவராகவே அவர் இருந்திருப்பார்.

காந்திக்கு வழங்கப்படுகின்ற விருது குறித்து பிரிட்டிஷ் எதிர்விளைவை ஏற்படுவதற்கான சாத்தியத்தை நார்வே நோபல் குழு கருத்தில் கொண்டதாக எந்த குறிப்பும் காப்பகங்களில் இல்லை. ஆகவே பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தூண்டி விட விரும்பாததாலேயே அந்தக் குழுவின் உறுப்பினர்கள் காந்தியைத் தவிர்த்தனர் என்பதாக ஏற்பட்டிருந்த கருதுகோள் நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1947ஆம் ஆண்டில் இடையில் ஏற்பட்ட மோதலும், காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட அறிக்கையும் காந்தி தன்னிடமிருந்த நிலையான சமாதானக் கொள்கையை கைவிட்டுவிடப் போகிறாரா என்று பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே குழுவின் பெரும்பான்மை மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு முதன்மைக் காரணங்களாக இருந்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நிலைமையைப் போல் அமைதிக்கான விருதை பிராந்திய மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தூண்டுதலாகப் பயன்படுத்த நார்வே நோபல் குழு முயன்று பார்க்கும் பாரம்பரியம் அன்றைக்கு இருந்திருக்கவில்லை.

தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் எழுந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர காந்தி கடுமையாக உழைத்தார். குன்னர் ஜானின் நாட்குறிப்பில் நவம்பர் 18 அன்று எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதிவைத் தவிர, 1948ஆம் ஆண்டில் காந்தியின் பெயரைப் பரிசீலித்த நார்வே நோபல் குழுவின் விவாதங்களைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் மரணத்திற்குப் பிந்தைய விருதை காந்திக்கு வழங்குவது குறித்து அவர்கள் தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான காரணங்களின் அடிப்படையில் அந்த விருதை வழங்காமல் 1948க்கான விருது தொகையை செலவழிக்க வேண்டாம் என்றும், அந்த விருதை ஓராண்டு காலம் கழித்து வழங்கிட முன்பதிவு செய்து வைப்பது என்றும் அந்தக் குழு முடிவு செய்தது. விருது பெற்றவர்களின் பட்டியலில் மகாத்மா காந்திக்கு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் கருதினாலும், மௌனத்துடன் மரியாதையாக அந்த முடிவு எடுக்கப்படாமலே கைவிடப்பட்டது.

https://www.nobelprize.org/prizes/themes/mahatma-gandhi-the-missing-laureate/
நன்றி: நோபல் விருது இணையதளம்
தமிழில் தா.சந்திரகுரு

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் – சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு



How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

ஒன்றிய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2040ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை முழுமையாக ‘மாற்றம்’ செய்து விட முயல்கின்றது. கல்வியை இணையவழியில் எளிதான, நெகிழ்வான முறையில் அணுகுவதற்கான உதவி, கல்லூரிகளுக்கான தன்னாட்சியையும், கல்விக்கான தனியார் நிதியுதவியையும் உறுதி செய்வது, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கற்றலுக்கான முக்கியத்துவத்தை அளிப்பது போன்ற அரசின் லட்சியங்களை காகிதத்தில் மட்டுமே பிரதிபலிப்பதாக அது இருக்கிறது. மேலும் கற்றுக் கொள்ளப் போகின்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை அதிக அளவிலே மாணவர்களிடமே வழங்குவது, திறமையானவர்களாக, பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடியவர்களாக ஆசிரியர்களை மாற்றுவதுடன் கல்வியை தாராளமயமாக்குகின்ற முயற்சிகளிலும் ஈடுபடப் போவதாக அது கூறுகிறது.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (DUTA) தலைவராக இரண்டு முறை இருந்த செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியை நந்திதா நரேன் தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று சஞ்சுக்தா பாசு நடத்திய நேர்காணலின் போது தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய அளவிலே பின்னுக்குத் தள்ளப்பட வேண்டிய தேவையிருப்பதாக அப்போது அவர் கூறினார்.

உரையாடலின் பகுதிகள்:
எந்த அளவிற்கு தேசிய கல்விக் கொள்கை – 2020 நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது?

ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கைக்கு பல மாநிலங்கள் ஒப்புதல் அளித்து உத்தரவுகள் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன என்றாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கல்வியாளர்களும், எதிர்க்கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தே வந்துள்ளனர்.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

தேசிய கல்விக் கொள்கை – 2020இல் உள்ள எந்த அம்சங்கள் மிகவும் கவலையளிப்பவையாக இருக்கின்றன?
தேசிய கல்விக் கொள்கை – 2020 கல்வி, நிர்வாகம் என்று இரு முனைகளிலிருந்தும் கல்வியை மறுசீரமைக்கிறது. மேலும் கல்வியை தனியார்மயமாக்கவும் அது முயல்கிறது. கல்வியின் தரத்தைப் பாதிக்கும் வகையிலே இருக்கின்ற இந்த கல்விக் கொள்கை ஆசிரியர்களைத் தேவையற்றவர்களாக ஆக்குகிறது. பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக தரம் தாழ்த்துகிறது.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

கல்வியைப் பொறுத்தவரையில் தில்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஏபிசி (அகாடமிக் பேங்க் கிரெடிட்) ஒழுங்குமுறை, ஸ்வயம் விதிமுறைகள், கற்பித்தல் மற்றும் கற்றலில் கலப்பு முறை என்று மூன்று விதிமுறைகளை முன்மொழிந்தது. ஏபிசி ஒழுங்குமுறை ஒரு ‘கிரெடிட் வங்கியை’ உருவாக்குகிறது. அதன் மூலம் தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தியாவில் உள்ள A அல்லது A+ தரம் பெற்ற எந்தவொரு பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஐம்பது சதவிகித கிரெடிட்களைப் பெற்றுக் கொண்டு பல தடவை வெளியேறி-நுழைகின்ற வகையிலே ஏழு ஆண்டுகளுக்குள் தன்னுடைய படிப்பை முடித்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் இணையவழியில் இருகின்ற இந்த ஐம்பது சதவிகித கிரெடிட்களுக்கான கற்றல் தரத்தின் மீது தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது.

தொற்றுநோய் காலத்தில் வழங்கப்பட்ட இணையவழிக் கல்வியின் தரம் சொல்லிக் கொள்ளுமாறு இருக்கவில்லை என்பதை நாம் அனைவருமே கவனித்திருக்கிறோம். அவற்றை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, அவர்கள் பொதுவாக படிப்பின் மீது உரிய கவனத்தைச் செலுத்தாமல் பக்கத்திலேயே வேறு ஏதாவதொரு வேலையைச் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.

மிகவும் வசதியாக இருப்பதாக மாணவர்கள் கருதுகின்ற வெளிப்படையாக புத்தகத்தைக் கொண்டு இணையவழியில் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் பெருமளவிற்கு மற்றவர்களைப் பார்த்து பிரதி எடுத்துக் கொள்வதே மிகவும் சாதாரண நடைமுறையாகி விட்டது. ஆசிரியர்களுக்கும் இணையவழிப் பயன்பாடு மிகவும் வசதியானதாகி விட்டதால் அவர்களும் போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை. டிஜிட்டல் இடைவெளி, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை குழுக்களின் அணுகல் குறித்து எழுந்துள்ள சிக்கல்களுக்கு தேசிய கல்விக் கொள்கை எந்தவொரு தீர்வையும் கொண்டிருக்கவில்லை.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

உலகின் பிற பகுதிகளில் தோல்வியடைந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்பு (MOOC) மாடலையே இணையவழி படிப்புகளுக்கான கிரெடிட் கட்டமைப்பான ‘ஆர்வமுள்ள இளம் மனங்களுக்கான தீவிர கற்றல் வலைகள் (ஸ்வயம்)’ தீவிரமாகப் பின்பற்றுகின்றது. பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்ற இந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்புகள் ஸ்வயம் எனப்படும் அரசு தளத்திலே பதிவேற்றப்படுகின்றன. ஸ்வயம் தளத்திலிருந்து நாற்பது சதவிகித பாடத்திட்டத்தை மாணவர் ஒருவர் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஒழுங்குமுறை கூறுகிறது.

ஆக ஐம்பது சதவிகிதப் பாடங்களை மற்ற பல்கலைக்கழகங்களிடமிருந்தும், நாற்பது சதவிகித பாடங்களை ஸ்வயம் தளத்திலிருந்தும் ஒரு மாணவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், தொன்னூறு சதவிகித கற்றல் பணி வகுப்பறை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்து மிகவும் திறம்பட நீக்கி வைக்கப்படுகிறது. ‘இனிமேல் எங்களுக்கு ஆசிரியர்களே தேவையில்லை’ என்பதுதான் அதிலிருந்து கிடைக்கின்ற பாடமாக உள்ளது. இன்றளவும் ஐம்பது சதவிகித ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்களில் இருந்து வருகின்ற நிலையில், இதுபோன்ற முயற்சிகளால் அவர்கள் அனைவரும் படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள். இனிமேல் ஆசிரியர் – மாணவருக்கிடையிலான விகிதம் முக்கியமில்லாமல் போய் விடும்.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

மூன்றாவது ஒழுங்குமுறை தில்லி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு பாடமும் நாற்பது சதவிகிதம் வரை முன் தயாரிக்கப்பட்ட, முன் பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மூலமாகவே வழங்கப்படும் என்றிருக்கிறது. மீதமுள்ள நேரத்தில் வழிகாட்டுதல், தரப்படுத்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்கள் செய்வார்கள். அதன் மூலம் மாணவர்-ஆசிரியருக்கிடையிலான உரையாடல் என்ற கருத்தே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

இதுபோன்ற மாடல் மற்ற நாடுகளில் எங்காவது இருக்கிறதா?
இல்லை. வழக்கமான பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இணையவழி படிப்புகள் இவ்வளவு அதிகமாக இருக்கின்ற வகையிலான மாடல் உலகில் வேறெங்கும் கேள்விப்படாததாகவே இருக்கிறது. தொற்றுநோய்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர்களின் பங்கை நீர்த்துப் போகச் செய்கின்ற, மிகவும் எளிதில் பெற்றுக் கொள்ளக் கூடிய பட்டங்கள் என்ற கேரட்டை மாணவர்கள் முன்பாகத் தொங்கவிட்டு ஆசை காட்டுகின்ற மிகப்பெரிய மாற்றங்களை இந்தக் கல்விக் கொள்கை மூலமாக அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.

வகுப்பறைகளில் நாம் என்ன சொல்லித் தருகிறோம் என்பதைப் பொறுத்ததாக மட்டுமே கல்வியின் தரம் இருப்பதில்லை. மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது இருக்கும். பலதரப்பட்ட மாணவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து தில்லி பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வருகிறார்கள். அவர்களில் பலர் விளிம்பு நிலைக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது உலகத்தைப் பற்றிய பார்வை மாணவர்களிடம் மாறுகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையோ இந்த மாணவர்களை முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தனிமைப்படுத்தி வைக்கிறது. மனித தொடர்புகள், நிறுவனத் திறன்கள், கலை, நாடகம், விவாதங்கள் நிறைந்த கற்றல் வெளியை அது சுருக்குகிறது. மனிதர்களிடையே உள்ள பிணைப்பு, நிறுவனரீதியான உறவுகள், தொடர்ச்சி போன்றவை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

பட்டத்தின் தரம் அது அச்சிடப்பட்டுள்ள காகிதத்தின் மதிப்பில்கூட இல்லை என்ற நிலையில் பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டம் வழங்குகின்ற அமைப்பாக மட்டுமே கருதப்படுகின்றன. இளைஞர்களைப் பேச முடியாதவர்களாக்குகின்ற கல்வி நிறுவனங்கள் அரைகுறையாகப் படித்தவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கிக் பொருளாதாரத்திற்குத் தேவையான மலிவான உழைப்பாளிகளாக உருவாக்கித் தருகின்றன.

இனிமேல் ‘இதை நான் ஏன் செய்ய வேண்டும்’, ‘என்னுடைய ஊதியம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது’ என்று கேள்விகளைக் கேட்கின்ற எண்ணம் இளைஞர்களிடம் தோன்றப் போவதில்லை. சுதந்திரமான விமர்சன சிந்தனைக்கான வெளி முற்றிலுமாக வறண்டு போய் விடும்.

நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன?
தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளும் பல்கலைக்கழக மானியக் குழு, அது விதித்துள்ள ஆசியர்களுக்கான பணிநிலைமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிலான உள்கட்டமைப்பு, மாணவர்-ஆசிரியர் விகிதம், படிப்புகளின் தரம், தேர்வுகள் போன்றவற்றை சரியாகப் பராமரித்து வர வேண்டும். நாடு முழுவதற்கும் இந்த ஒழுங்குமுறைகள் ஒரேமாதிரியாக இருப்பதாலேயே அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களும் ஒரே மாதிரியான பணிநிலைமைகளில் பணியாற்றி வருகின்றனர்.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

ஆனால் இனிமேல் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுக்காது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைவிக்கும் அமைப்புமுறை இனிமேல் இருக்காது என்று கூறுகிறது. அனைத்துக் கல்லூரிகளும் இனி ‘முழுமையாக ஆய்வு’, ‘ஆய்வு மற்றும் கற்பித்தல்’ அல்லது ‘முழுமையாக கற்பித்தல்’ போன்ற பணிகளுக்காகன தனித்த நிறுவனங்களாக மாறப் போகின்றன. அதனால் கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இல்லாத வகையில் தனித்து வைக்கப்படுகின்ற நிலைமையே உருவாகும்.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இனிமேல் நிர்வாக வாரியம் (BoG) என்பது இருக்கும். இதுவரையிலும் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகின்ற நிர்வாகக் குழு, கல்லூரியில் உள்ள ஆட்சிக் குழுவை அது முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறது. தற்போது செயற்குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து சிலர், கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிலர் என்று பெரும்பாலும் கல்வியாளர்களாகவே இருந்து வருகின்றனர். இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவில் இருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள், ‘பொதுஎண்ணம் கொண்ட அறிவுஜீவிகள்’ என்று கல்வியாளர்களாக இல்லாதவர்களே மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு உறுப்பினர்களாக இருக்கப் போகின்றனர்.

கல்வி நிறுவனங்கள் 2030ஆம் ஆண்டிற்குள் சுயநிதி கொண்டு செயல்படுபவையாக மாறி விடும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது கல்விக்கான பொது நிதியுதவியை நீண்ட காலத்திற்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அந்தக் கொள்கை இருக்கிறது. ‘பொதுஎண்ணம் கொண்ட அறிவுஜீவிகள்’ என்றால் யார் என்பதை கல்விக் கொள்கை தெளிவாக வரையறுக்கவில்லை. நிச்சயம் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள், கருத்தியல் ரீதியாக எதிர்க்கின்றவர்களும், வேறுபட்டவர்களும் முழுமையாக ஓரங்கட்டப்படுவார்கள் என்றே நாம் கருதலாம். அந்த உறுப்பினர்களே கல்வி நிறுவனங்களுக்குள் இருக்கின்ற கல்வியாளர்களிடமிருந்து மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினரை செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

நிர்வாக வாரியத்தில் பதினெட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களில் ஆறு பேர் மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள். அதுவும் அரசு மற்றும் பெருநிறுவன நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பன்னிரண்டு பேரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற கல்வியாளர்களே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உண்மையில் அரசு மற்றும் கார்ப்பரேட் சித்தாந்தங்களுக்கு இடையிலான திருமண ஒப்பந்தமாகவே அது இருக்கும். இனிமேல் சீனியாரிட்டி அல்லது சுழற்சி முறை என்று எதுவுமே கருத்தில் கொள்ளப்படாது. தேர்தல் குறித்த கேள்வியே எழப் போவதில்லை. பழைய உறுப்பினர்கள் புதியவர்களை நியமிப்பதாக இருப்பதால் ஒரு தன்னிறைவுடனான அமைப்பாக அது இருக்கும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

நிர்வாக வாரியம் எந்த அளவிற்கு அதிகாரம் மிக்கதாக இருக்கும்?
இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருக்கின்ற அனைத்து அதிகாரங்களும் இனிமேல் இந்த நிர்வாக வாரியத்திடமே இருக்கும். கற்பிக்கப்பட வேண்டிய படிப்புகள், பாடநெறி உள்ளடக்கம், கட்டண அமைப்பு, மாணவர்-ஆசிரியர் விகிதம், புதிய பணியிடங்களை உருவாக்குதல், பணியமர்த்தும் கொள்கைகள், ஆசிரியர்களின் பணி நிலைமை, அவர்களுடைய பணி மேம்பாடு போன்றவை அதில் அடங்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக புதிய நிர்வாக வாரியம் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதாக இருக்காது.

நிறுவனத் தரங்களை பராமரிப்பதற்கு, மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு திட்டமிடுகிறது?
நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படுத்தப்படும். ஆனாலும் முதன்முறையாக தேவையான உள்ளீடுகளுக்கு அரசாங்கம் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், உற்பத்தியைக் கொண்டு மட்டுமே மதிப்பிடுவது என்றே அது இருக்கப் போகிறது. பொதுநிதிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும் சோதனை, கண்காணிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அந்த கல்வி நிறுவனம் தனது தரத்தை இழக்க நேரிடும். ஆனாலும் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தொலைதூரத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ளதா, மாணவர்களின் நிதிப் பின்னணி என்ன, அவர்களால் ஏன் நன்றாகச் செயல்பட முடியவில்லை என்பது போன்ற காரணிகள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?
இந்தியாவில் சுமார் ஐம்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்ற தேசிய கல்விக் கொள்கை அந்த எண்ணிக்கை பதினைந்தாயிரமாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் அது ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பல துறைகளுடன் இருக்க வேண்டும், ஐயாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் கூறுகிறது. அதன்படி பார்க்கும் போது, ஆயிரத்து இருநூறு மாணவர்களைக் கொண்ட செயின்ட் ஸ்டீபன் போன்ற கல்லூரிகள் இனிமேல் நீடித்திருப்பதற்கான சாத்தியம் என்பது காணப்படவில்லை.

தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற சாத்தியமில்லாத கல்வி நிறுவனங்களைக் கையகப்படுத்திக் கொள்வதற்கும், அவற்றையெல்லாம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வைத்துக் கொள்வதற்கும் இந்தக் கல்விக் கொள்கை அடித்தளம் அமைத்துத் தருகிறது. ஒரு அம்பானி அல்லது அதானி ஐயாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட மூன்று அல்லது நான்கு கல்லூரிகளை வாங்கி ஒன்றிணைத்து வைத்துக் கொள்வார். ஆய்வுகளில் நன்கு கவனம் செலுத்தி வருகின்ற ஜேஎன்யூ போன்ற பல்கலைக்கழகங்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரி, வணிகக் கல்லூரி போன்றவற்றையும் உள்ளடக்கியவையாக இருக்கும்!

ஆனால் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் தனிப்பட்ட சட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் இத்தகைய பெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமா?
தில்லி பல்கலைக்கழகச் சட்டம் அல்லது ஜேஎன்யூ சட்டம் போன்ற தற்போதுள்ள அனைத்து சட்டங்களையும் மீறுகின்ற வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதே அவர்களுடைய திட்டமாக இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கின்ற மோடி, உலகெங்கிலும் உள்ள மற்ற வலதுசாரி தலைவர்களை விட ஒரு படி மேலே சென்றிருக்கிறார். அறிவார்ந்த காலனித்துவத்தை உருவாக்குகின்ற இதுபோன்ற முயற்சிகள் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் விழித்தெழ வேண்டும்.

தாராளவாதக் குழுக்கள் ஒன்றுகூடி சுதந்திரமான உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொள்ள முடியாதா?

How will the new education policy be implemented at Delhi University? Interview with Nandita Narain in tamil translated by Tha Chandraguru ‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் - சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

அரசு தன்னுடைய கட்டுப்பாட்டை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. கார்ப்பரேட்டுகளுடன் அரசின் பிரதிநிதிகளும் நிர்வாக வாரியத்தில் இருப்பார்கள். லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்கள் அரசின் விதிகளின்படி செயல்படும். அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை மீறுகின்ற எந்தவொரு நிறுவனத்தையும் துன்புறுத்துவதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும்.

https://www.nationalheraldindia.com/interview/how-is-the-new-education-policy-being-implemented-in-delhi-university
நன்றி: நேஷனல் ஹெரால்டு
தமிழில்: தா.சந்திரகுரு

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை – இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை – பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு



The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

கடந்த வாரம் மகாராஷ்டிராவில் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தலோட் என்ற சிறிய நகரத்திலுள்ள உள்ளூர்க் கடையில் திடீரென்று மக்களால் தங்களுக்குத் தேவையான கோல்கேட் பற்பசையை வாங்க முடியாமல் போனது. கோல்கேட் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தலோட்டில் உள்ள மளிகைக் கடைக்கு வழங்குவதில்லை என்று நந்துர்பார் மாவட்ட விநியோகஸ்தர் முடிவு செய்ததாலேயே அந்த நிலைமை உருவானது. நிறுவனங்களிடமிருந்து நிறுவனங்களுக்கு (B2B) விற்பனை செய்கின்ற ரிலையன்ஸின் ஜியோ மார்ட் மற்றும் உடான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறாக கோல்கேட் நிறுவனம் தனது பாரம்பரியமான விநியோகஸ்தர்களை நியாயமற்ற முறையில் நடத்துகின்றது என்று கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பொருட்களின் விநியோகஸ்தர்களும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

இந்தியாவில் கோல்கேட் போன்ற நுகர்வோர் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்ற ஏறக்குறைய ஐந்து லட்சம் விநியோகஸ்தர்கள் அவற்றை லட்சக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் வலையமைப்பு மூலமாக நாடு முழுவதும் உள்ள ஏழு லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அமைந்துள்ள ஒரு கோடியே முப்பது லட்சம் உள்ளூர் சிறு கடைகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்த உள்ளூர்க் கடைகளுடன் பல்லாண்டுகளாக உறவுகளை வளர்த்து வந்திருக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களில் பெரும்பாலானோர் சிறு குடும்ப வணிக நிறுவனங்களையே நடத்தி வருகின்றனர்.

தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடை நுகர்வோருக்கு நூறு கிராம் கோல்கேட் பற்பசையை அதிகபட்ச சில்லறை விலையான (எம்ஆர்பி) ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறது. பற்பசை உற்பத்தியாளரான கோல்கேட் நிறுவனம் தன்னுடைய விநியோகஸ்தருக்கு நாற்பது ரூபாய்க்கு பற்பசையை விற்கிறது. நந்துர்பார் விநியோகஸ்தர் அதனை தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடைக்கு நாற்பத்தைந்து ரூபாய்க்கு கொடுத்து வருகிறார். நுகர்பொருள் தொடர்பான தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலி பொதுவாக இந்தியாவில் இவ்வாறாகவே இருந்து வருகிறது.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

இடைத்தரகர்களைத் தவிர்த்து விட்டு தலோட்டில் உள்ள மளிகைக் கடையுடன் மொபைல் போன் செயலி மூலமாக தங்களை நேரடியாக இணைத்துக் கொள்கின்ற தொழில்நுட்பங்களை புதுயுகத்து B2B தொழில்நுட்பநிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. விநியோகஸ்தரின் நாற்பத்தைந்து ரூபாய் என்ற விற்பனை விலையைக் காட்டிலும் குறைவாக முப்பத்தைந்து ரூபாய்க்கு உள்ளூர்க் கடைகளுக்கு பற்பசையை அவை நேரடியாக வழங்கத் தொடங்கியுள்ளன. தலோட் மக்கள் உள்ளூர்க்கடைகளில் இதுபோன்ற குறைந்த விலையில் பொருளை வாங்கிப் பயனடைவார்கள் என்றே இதனை மேம்போக்காகப் பார்க்கும் போது தோன்றும்.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

இத்தகைய மிகவும் குறைவான விலைகளுடன் போட்டியிட முடியாததால் தங்களுடைய வணிகத்தை இழந்து விடும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் விநியோகஸ்தர்கள் அவை நியாயமற்ற நடைமுறைகளாக இருப்பதாகக் கூறுகின்றனர். கோல்கேட் போன்ற உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை B2B தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கோல்கேட் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால், விநியோகஸ்தர்கள் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.

மிகவும் அரிதான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’
ஏற்கனவே உள்ள செயல்முறையைக் குலைப்பதன் மூலம் நடைமுறையில் இருந்து வருபவற்றை பயனற்றவையாக்குகின்ற புது கண்டுபிடிப்புகள் ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என அறியப்படுகின்றன. அந்தக் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியமான செயல்முறையாக இருப்பதாக ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஷம்பீட்டர் கூறுகிறார். ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான அழிவு என்பது புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்படுவதாக இல்லாமல், வெறுமனே விலை நிர்ணய அதிகாரம் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றால், உண்மையிலேயே அது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி எழுகின்றது.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர்க் கடைகளிடம் தாங்கள் விற்கின்ற ஒவ்வொரு கோல்கேட் பற்பசையிலும் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற விநியோகஸ்தர்களிடமிருந்து விலகி உள்ளூர்க் கடைகள் தங்களை நோக்கி நேரடியாக வருகின்ற வகையில் வேண்டுமென்றே அடக்க விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு தங்களுடைய தயாரிப்புகளை அவை விற்கத் துவங்கியுள்ளன. மேலும் உள்ளூர்க் கடைகளுக்கு மிகவும் விரிவான கடன்களையும், நடப்பு மூலதனத்தையும் அவை வழங்கி வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை வென்றெடுப்பதற்காக மொபைல் ஃபோன் செயலி என்ற புதுமையை மட்டுமல்லாது, மிக அதிக அளவிலான விலை தள்ளுபடி, மலிவான நிதியுதவி போன்றவற்றையும் நம்பியே இருக்கின்றன.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

உடான் நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் மொத்தத்தில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது. ஜியோமார்ட் நிறுவனம் இன்னும் கூடுதலான இழப்பை அறிவித்திருக்கிறது. ஏற்படுகின்ற பேரிழப்பை அதிக அளவில் பணம் கிடைப்பதால் இத்தகைய இந்திய நிறுவனங்களால் சமாளித்துக் கொள்ள முடிகிறது. இந்த நிறுவனங்களுக்கு பெரும்பாலும் அமெரிக்க ஓய்வூதிய நிதி மற்றும் பல்கலைக்கழக அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படுகின்ற வெளிநாட்டு துணிகர மூலதன நிறுவனங்களின் நிதிகள் வந்து குவிகின்றன. வெளிப்படையாகச் சொல்வதென்றால் நந்துர்பார் விநியோகஸ்தரை கோல்கேட் நிறுவனம் வெளியேற்றி விடும் போது ​​ தலோட் கிராமவாசிக்கு அமெரிக்க மூத்த குடிமகன் ஒருவரே தள்ளுபடி விலையில் கோல்கேட் பற்பசையை வழங்குபவராக இருப்பார். அவர்கள் அதற்காக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்ற உலகளாவிய மூலதனப் பாய்ச்சல்களுக்கே நன்றி சொல்ல வேண்டியிருக்கும். அத்தகைய மூலதனப் பாய்ச்சல்களே புதுமையை வளர்த்தெடுத்து, நுகர்வோருக்கு மகத்தான பலன்களை அளிக்கின்றன என்பதே புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடாக இருந்து வருகிறது.

மறுபக்கத்தில் இந்தியாவின் லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் இடைத்தரகர்களால் அதுபோன்ற நிதியைப் பெற முடிவதில்லை. பொதுவாக அவர்கள் சிறிய அளவிலான வங்கிக் கடன்களுக்கு ஈடாக தங்கள் தனிப்பட்ட சொத்துக்களை அடமானமாக வைத்து கட்டமைக்கப்பட்ட சிறு வணிகங்களையே பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த சிறு நிறுவனங்கள் புது யுகத்து ஸ்டார்ட்அப்கள் மற்றும் நன்கு நிறுவப்பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் சுதந்திரமாக முடிவில்லாது பாய்கின்ற வெளிநாட்டுப் பணத்தின் பாய்ச்சலில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பெறுகின்ற பணத்தை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், தங்களுடைய போட்டியாளர்களைக் குறைப்பது மற்றும் அவர்களுடைய சந்தைப் பங்கைத் திருடிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படையானது. அவர்களால் ஏற்கனவே சந்தையில் இருப்பவர்களை அழித்து தங்களுக்கென்று அதிக சந்தைப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வரை தங்களுக்கு ஏற்படுகின்ற பேரிழப்புகளை பல ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அந்த இழப்புகளுக்குப் பிறகு தங்களுக்கான லாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக அவர்கள் விலைகளை உயர்த்திக் கொள்ளக்கூடும். அது தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்திடம் இந்தியா பெற்ற அனுபவத்தை ஒத்திருக்கும்.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

அடிமாட்டு விலை நிர்ணயம் என்று அழைக்கப்படுகின்ற இந்த கொள்ளை நடைமுறை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமான செயலாகவே இருக்கிறது. ஆனாலும் ஸ்டார்ட்அப்கள் என்ற இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பின்னணியில் விலை நிர்ணய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்ற இருண்ட பக்கமும் இருந்தே வருகிறது. இதுதான் உண்மையான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என்பதாக இருக்கும் என்றால், ஒவ்வொரு விற்பனையிலும் இழப்பைச் சந்தித்து, மலிவான நிதியை வழங்குவதைக் காட்டிலும் இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தலோட்டிலுள்ள கடை உரிமையாளரை தங்கள் புதுமையான செயலி மற்றும் செயல்திறன் மூலமாக கவர்ந்திழுப்பவையாக மட்டுமே இருக்கும்.

மிகக் குறைந்த விலையால் நுகர்வோர்கள் பயன்பெறுகின்றார்கள் என்றாலும், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சமமான, எளிதான பணம் கிடைக்காத லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள், வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் அதனால் பாதிக்கப்பட வேண்டுமா? நந்துர்பரில் உள்ள விநியோகஸ்தர், வர்த்தகர்கள் மற்றும் தலோட்டில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் என்று அவர்கள் அனைவரும் ஒரே உள்ளூர்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவற்றில் சில குடும்பங்களைக் குழப்பத்திற்குள் தள்ளிவிடுவதால் அந்தச் சமூகத்திற்குள் நிச்சயமாக சமூகப் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

உலகளாவிய பிரச்சனை
இது இந்தியாவிற்கான பிரச்சனையாக மட்டுமல்லாது உலகளாவிய பிரச்சனையாகவே இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளைப் பொருட்படுத்தாமல் குறைந்த விலை நிர்ணயம் என்பது தனித்த, தகுதியான நோக்கம் என்று வழக்கத்தில் இருந்து வருகின்ற பொருளாதாரக் கருத்து இப்போது கடுமையான சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் தயாரிப்புகளை ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இலவசமாக வழங்கியும், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து நுகர்வோருக்குப் பெரும் பயனளித்து வருகின்றன என்றாலும் அவை மிகப்பெரிய சமூக மோதல்கள் மற்றும் வேற்றுமையை ஏற்படுத்தவே செய்கின்றன. இந்த விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தொழில்நுட்ப நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனின் புதிய தலைவரான லினா கான், இதுபோன்ற போட்டிக்கு எதிரான நடத்தையைச் சரிசெய்வதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார்.

இந்தியா எதிர்கொள்ளவிருப்பது
இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் கூடுதல் சிக்கல் உள்ளது. அமெரிக்காவில் சுதந்திரமாக அச்சிடப்படுகின்ற பெரும் தொகை இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் ஸ்டார்ட்அப் சந்தைகளுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இந்திய வணிகங்களில் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே அந்த மூலதனத்தைப் பெறுவது சாத்தியமாகிறது. அதுபோன்றதொரு நிலைமையில் இந்த விநியோகஸ்தர்களைப் போல இருக்கின்ற லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் பெருமளவிலான வருமானம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாக இருக்கின்றது. சுதந்திரமான மூலதனப் பாய்ச்சலின் முன்னாள் வெற்றியாளர்கள்கூட அவற்றின் சமூக தாக்கங்கள் குறித்து இப்போது மிகவும் எச்சரிக்கையுடனே இருக்கின்றனர்.

இதுபோன்ற வாதம் இ-காமர்ஸ் அல்லது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு எதிரான – முன்னேற்றத்திற்கு எதிரான – லுடைட் வாதமாக இல்லை என்பது தெளிவு. சட்டவிரோதமான, கொள்ளையடிக்கின்ற அடிமாட்டு விலை நிர்ணயம், எளிதாக வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவதற்கான முன்னுரிமை மூலம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையே இங்கே உண்மையான பிரச்சனைகளாகும்.

The very low price of slavery set by corporations - nothing is going to happen except the destruction of Indian livelihoods Article By Praveen Chakravarty in tamil translated by Tha Chandraguru பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை - இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை - பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு

இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் (சுமார் பத்து கோடி மக்கள்) வாழ்வாதாரம் நுகர்பொருட்கள் விநியோகச் சங்கிலியில் இடைத்தரகர்களையே சார்ந்துள்ளது என்று சில மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு திடீரென்று இந்தக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தனிமையில் விடப்படுமேயானால், அது நாட்டில் மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்பையே ஏற்படுத்தும். அமெரிக்கப் பணத்தால் தங்கள் சமூகத்தில் உள்ள சில குடும்பங்கள் துயரத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை உணருகின்ற தலோட்வாசிகள் சற்றே கூடுதலான விலையில் தங்கள் பற்பசையை வாங்கிக் கொள்ளக்கூட தயாராக இருக்கக் கூடும்.

https://www.thehindu.com/opinion/op-ed/predatory-pricing-is-prising-indian-livelihoods-apart/article38279438.ece
நன்றி: தி ஹிந்து
தமிழில்: தா.சந்திரகுரு