கவிதை Poem கவிதைகள்

கவிஞர் சந்துரு ஆர்.சியின் – கவிதை

உங்கள் மீது கவிழ்க்கப்பட்ட இந்த இரவிலிருந்து விரைவாய் வெளியேறிவிடுங்கள் தார் கலவையைவிட தடித்திருக்குமதை குழந்தையின் நகங்களால் சுரண்டிக்கொண்டிருக்காதீர்கள் உங்களிடம் நிறைய தீக்குச்சிகள் இருக்கின்றன பற்ற வைக்க வைத்திருக்கும் பட்டைகளை அவர்கள் நமத்துப்போகச் செய்கிறார்கள் அவர்கள் தந்திரக்காரர்கள் உங்கள் பகலையும் கொளுத்தி புகையால்…
சந்துரு கவிதை

சந்துரு கவிதை

என்னை தொடர்ந்துவராதே... என் பாதங்களுக்குத் தெரியாது எனது பாதை எதுவென்று... எனது சுவடுகளை நான் ஓரக்கண்ணால் திரும்பி பார்ப்பதற்குள்ளாகவே அலைகள் அவற்றை ஒளித்துக்கொள்கின்றன.... என்னை தொடர்ந்து வராதே... பின்தொடர்வதில் ஒரு வேளை பிழை நேர்ந்தால் என் சுவடுகள் தீண்டமுடியா திசையில் தேங்கிவிடலாம்…
துரோகங்களை பிணைத்தபடி – சந்துரு

துரோகங்களை பிணைத்தபடி – சந்துரு

துரோகங்களை பிணைத்தபடி *************************************** ஏமாற்றத்தின் இழைகளால் நெய்யப்பட்டிருக்கிறது மனதின் அறை அழுத்தும் துரோகங்களால் தேற்றுவாரற்று நினைவுகளின் செதில்கள் உதிர்கின்றன துரோகத்தின் பள்ளங்களில் பதுக்கப்பட்டிருக்கின்றன பறிகொடுத்த செல்வங்கள் காக்கையின் தாகத்தில் இரவின் குடுவைக்குள் நித்திரையின் கற்கள் போட்டாலும் உறக்கத்தின் துளிகள் கண்களை மறுதலித்து…
கவிதை: *பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்* – சந்துரு

கவிதை: *பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்* – சந்துரு

பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள் ****************************************** முன்னோர்களின் விரல் பிடித்த கலப்பைகளின் மிச்சங்களால்தான் தேசத்தின் மனிதர்கள் இன்னமும் உழுதுகொண்டிருக்கிறார்கள்... . நிலம் அவர்களையும் பயிர்களை அவர்களும் சேர்ந்தே வளர்க்கிறார்கள்... . முதுகுத் தோலுரிக்கும் வெயிலையும் உதட்டுத்தோல் வெடிக்கும் குளிரையும் சமமாய் குடித்தே…
சந்துரு கவிதைகள்

சந்துரு கவிதைகள்

1)சிறகுகளில் நதியின் வாசம் ************************************ கோடையின் முடிவற்ற பருவத்தில் கழிமுகத்தினருகில் உன்னிடமிருந்து இரையெடுத்துச் சென்ற நாள்தான் நாம் கடைசியாய் சந்தித்துக்கொண்டதென நினைவு... பொய்த்த பருவங்களால் வாய்க்காமல் போன வசந்தத்தை சாக்காக வைத்து தரைதட்டத்தொடங்கியது நுரைத்த உன் மார்புகள்... அகழ்ந்த பள்ளங்களின் இருட்டில்…
சந்துரு கவிதைகள்

சந்துரு கவிதைகள்

மரணத்தின் குருதிச்சித்திரம் மரணத்தின் தெருக்களில் உணரப்படாத சில வலிகளின் நெடியடிக்கும் வாசனையை வதை முகாம்களே உற்பத்தி செய்கிறது... அடி தாங்க முடியாதவர்களின் காயத்தின் பிசுக்குகளை கரைக்கமுடியாத மெழுகென கெட்டியாய் சேமித்துவைக்கிறது காலம்...! கொலைக்கூடங்களின் மடியில் ஒருவனைக் கிடத்த பெருங்குற்றங்களின் நிரூபணம் அவசியமில்லை…
சந்துரு கவிதைகள் : பெருந்தொற்றின் காலம், தேவைகளின் கால்கள்….

சந்துரு கவிதைகள் : பெருந்தொற்றின் காலம், தேவைகளின் கால்கள்….

பெருந்தொற்றின் காலம் வாழ்வின் இரு கரைகளுக்கு நடுவில் வறண்ட நதியின் வெறுமையை உணர்த்திச் செல்கிறது... மேகங்கள் கைவிட்ட நாளில் சூரியன் புசிக்கும் ஆற்றின் பாதைகளில் மீன்களின் செதில் சிலுப்பலும் புரளும் தண்ணீரின் அதிர்வுகளுமின்றி அனலின் புழுக்கம்... ஆற்றிம் பக்கம் தலை சாய்ந்த…