ரஷ்ய நாட்டுப்புற கதை (Russian folk story): மூன்று கரடிகள் (Three bears) | Moondru Karadikal Story | லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) | உதயசங்கர்

ரஷ்ய நாட்டுப்புற கதை: மூன்று கரடிகள்

மூன்று கரடிகள் லியோ டால்ஸ்டாய் தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் ஒரு சிறுமி காட்டுக்குள் ஒரு நடை நடந்து போனாள். அவள் பாதையைத் தொலைத்துவிட்டாள். வீட்டுக்குப் போகும் பாதையைத் தேடி அலைந்தாள். ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டுக்குள் இருந்த…
ரஷ்ய நாட்டுப்புற கதை (Russian folk story): கோபக்கார வான்கோழி சேவல் (Turkey Bird) | Kobakkara Vaankozhi Seval Story | ஈனோ ரௌட் | உதயசங்கர்

ரஷ்ய நாட்டுப்புற கதை: கோபக்கார வான்கோழி சேவல்

கோபக்கார வான்கோழி சேவல் (Turkey Bird) ஈனோ ரௌட் தமிழில் - உதயசங்கர் பண்ணையில் இருந்த எல்லாருக்கும் தெரியும் வான்கோழி சேவலுக்குக் கோபம் அதிகம் என்று. காலையிலும் மாலையிலும் அது கோபமாக இருக்கும். பகலிலும் அப்படித்தான். முழுநாளும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும்.…
ரஷ்ய நாட்டுப்புற கதை (Russian folk story) - வெள்ளைக் காகமும் துன்னெலியும் (Vellai Kakamum Thunneliyum) | விக்டர் வாழ்டாயேவ் | உதயசங்கர்

ரஷ்ய நாட்டுப்புற கதை: வெள்ளைக் காகமும் துன்னெலியும்

ரஷ்ய நாட்டுப்புற கதை: வெள்ளைக் காகமும் துன்னெலியும் விக்டர் வாழ்டாயேவ் தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் வெள்ளைக் காகம் ஒன்று அதுவரை போயிராத காட்டுப்பகுதிக்குள் பறந்து சென்றது. மிகப் பரந்து விரிந்து உயரமாக இருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தது. அதன் உச்சியில்…
பயங்கர மிட்டாய் - நூல் அறிமுகம், உதயசங்கர் - Udhaya Sankar's Bayangara Mittai childrens story book published by Books For Children - https://bookday.in/

பயங்கர மிட்டாய் – நூல் அறிமுகம்

பயங்கர மிட்டாய் - நூல் அறிமுகம்    நூலின் தகவல்கள் : நூல் : பயங்கர மிட்டாய் எழுத்தாளர் : கே. அனாமிகா (மலையாளம்) தமிழில் : உதயசங்கர் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் - புக்ஸ் ஃபார் சில்ட்ரன் விலை…
எருமையின் நிழல் (Erumaiyin nizhal) | நீதிமணி | Book Review | Books For Children

எருமையின் நிழல் – நூல் அறிமுகம்

  எருமையைக் கொண்டாடுதல்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் மரபில் வந்தோர் நாம். ஆனால், விலங்குகள், பறவைகளிடையேயும் பாகுபாடு காட்டத் தொடங்கினோம். 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' தன் 'பொல்லாச் சிறகை' விரித்ததான மனிதப் பார்வை பேதம் உடையது. மயிற்பீலியை, அன்னத்தின்…
கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அப்பா சிறுவனாக இருந்த போது – மொ. பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அப்பா சிறுவனாக இருந்த போது – மொ. பாண்டியராஜன்

      அப்பா சிறுவனாக இருந்த போது, (When daddy was little boy) இந்த நூல் சோவியத் எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய நூல். இதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நா. முகமது செரிபு. இதனுடைய மறுவரைவு ஈஸ்வர சந்தான மூர்த்தி அவர்கள். ஓவியங்கள் ராம்கி. இதன் மொத்தப் பக்கங்கள் 128.…
Children Stories by Era Kalaiyarasi. குழந்தை கதைகள் - இரா.கலையரசி

குழந்தை கதைகள் – இரா.கலையரசி




என் உலகம்.

அந்தப் பூங்காவிற்கு இன்ப சுற்றுலா சென்றனர் மாணவர்கள்.

திலீபனும், ஆசையுடன் வண்டியில் ஏறி இருந்தான். ஓஹோ! ஓஹோ! என சத்தம் எதிரொலித்தது.

பஞ்சவர்ணக் கிளிகள், வரவேற்க “கீச் கீச்” சத்தத்துடன் இங்குமங்கும் நகர்கின்றன. மயிலின் வண்ணத் தோகை, பச்சை மரகதமாய் மின்னுகிறது.

மற்றக் குழந்தைகள் எல்லாம், வெறுமனே பார்த்தபடி சென்றனர்.

திலீபன் மட்டும் ஒவ்வொரு பறவையின் வண்ணம், அலகு ஆகியவற்றை மனதில் படம் பிடித்தான்.

துள்ளி குதித்து வந்த மான் ஒன்று திலீபனிடம் ஏதோ பேசி சென்றது.

வரிக்குதிரை வளைந்து பார்க்க, கண்களில் மத்தாப்பு பூத்தது திலீபனுக்கு.

கைகளை தட்டி, உற்சாகத்துடன், ரசித்தான்.

மற்றவர்களுக்கு காட்சி பொருளாக இருந்த விலங்குகள், திலீபன் மனதில் ஒரு வண்ண திரைப்படமாக விரிந்தது.

கற்பனையின் சிறகுகள், விரிந்து பறந்தன. அவனுக்கான உலகில் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கிறான் திலீபன்?

குறுகுறு ஆர்வத்துடன் இருக்கும் திலீபன் ஒரு “ஆட்டிசக் குழந்தை”.

Maithili language Children Story Leaf and Soil Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை இலையும், மண்கட்டியும்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இலையும், மண்கட்டியும் – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு வயலில் ஒரு அரசமரத்தின் இலையும், ஒரு மண்கட்டியும் இருந்தன. அவை இரண்டும் நண்பர்கள். இரவு, பகல் எந்த நேரமும் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

இந்த இரண்டின் நட்பையும் பார்த்து எல்லோரும் பொறாமைப்பட்டார்கள். மழையும், காற்றும் இவர்கள் இருவரையும் பிரித்து விடுவது என்று சதியாலோசனை செய்தன. காற்று இலையை வெகு தூரத்திற்கு பறக்கச் செய்து விடுவது என்றும், மழை பலமாகப் பெய்து மண்கட்டியை கரைத்து விடுவது என்றும் முடிவு செய்தன.

இலைக்கும், மண்கட்டிக்கும் இந்த சதி பற்றி நண்பர்கள் மூலம் தெரிந்து போனது. இரண்டும் இந்த ஆபத்திலிருந்து தப்ப யோசனை செய்தன. திட்டமிட்டபடி மழை முதலில் தாக்கியது. மண்கட்டி அழ ஆரம்பித்தது. ‘நண்பனே ! நமது நீண்ட கால நட்பு முடியப் போகிறது. இந்த மழையின் வேகத்தில் நான் கரைந்து போய்விடுவேன் போலிருக்கிறதே !’ என்று கதறியது.

இலை, ‘நான் இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தையும் வர விடமாட்டேன்,’ என்றது புன்னகையுடன். சொல்லிவிட்டு, மண்கட்டியின் மீது உட்கார்ந்து மழை நீர் அதன் மீது விழாமல் பாதுகாத்தது. சிறிது நேரத்தில் மழை சோர்வடைந்து நின்றது. இப்போது காற்றின் முறை. அது வேகமாக வீச ஆரம்பித்ததும், இலை நடுங்கியது. ‘மண்கட்டி நண்பா ! இந்த காற்றின் வேகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லையே ! இந்த காற்று நம்மை பிரித்து விடும் போல் இருக்கிறதே !‘ என்று அழுதது.

‘கவலைப்படாதே நண்பனே ! நான் இருக்கிறேன், என்றது மண்கட்டி. சொல்லி விட்டு அது இலையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.

காற்று சிறிது நேரத்தில் களைப்படைந்து நின்றது. ஆபத்துகளிலிருந்து தப்பிய மண்கட்டியும், இலையும் புன்னகை செய்து கொண்டன. அவர்களின் நட்பின் ஆழமும், ஒருவரது பலத்தை மற்றவரைக் காக்கப் பயன்படுத்திய விதமும் எல்லோரையும் வியப்படைய வைத்தன.