வாய்ப்புகள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

வாய்ப்புகள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




முன்பெல்லாம்
வாய்ப்புகள் கதவை தட்டும்
சரியாக திறந்தால்
முறையாக பறக்கலாம்

இப்போதெல்லாம்
வாய்ப்பை வரவழைத்து
கதவை நாமே செய்து
திறந்தால்
பறக்கிறான் இன்னொருவன்

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

திரைவிமர்சனம்: கார்கி – சிரஞ்சீவி இராஜமோகன்

திரைவிமர்சனம்: கார்கி – சிரஞ்சீவி இராஜமோகன்




சாய் பல்லவி படத்தில் காதலியாக வந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான். இவ்வளவு ஏன் சாய் பல்லவி திரையில் வந்தாலே சந்தோசம் தான். அந்த ரோஸ் கலர் கன்னம் இயற்கையான பதின் பருவ பருக்கள். அழகு தான். முற்றிலுமாக மாறுபட்ட வேடத்தில் வறுமையில் வாடும் குடும்பத்தின் மூத்த பெண்ணாக வேலைக்கு செல்லும் சாய் பல்லவி தான் கார்கி. தோற்றமும் கதையும் ஒன்று சேராதோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் தோன்றும். சில நிமிடத்திலேயே நம்மை நடிப்பில் திக்கு முக்காட செய்கிறார். தந்தை ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி. தாய் மாவு அரைத்து விற்று வருமானத்தில் உதவும் குடும்ப பெண். சாய் பல்லவி டீச்சர். தங்கை பள்ளி மாணவி. இப்படியாக இருக்க நல்ல திருமண வரம் சாய் பல்லவிக்கு சாய் பல்லவி டீச்சர் வேலை தாண்டி டியூஷன் எடுத்தும் சம்பாதிக்கிறார். நல்ல வரன் நல்ல இடம் இருப்பினும் குடும்ப பலத்துக்கு மீறின செலவுகள் ஒரு புறம்.

இப்படியாக இருக்க. திடீரென செக்யூரிட்டி தந்தையை போலீஸ் அரெஸ்ட் செய்து செல்கின்றனர். கதை கரு தலைகீழா மாறும் இடம் இதுவே. அடுத்த வீட்டு UNCLE தந்தையுடன் செக்யூரிட்டி வேலை பார்ப்பதால் அந்த வீட்டுப் பெண்ணும் கார்க்கியும் நடு இரவில் போலீஸ் ஸ்டேஷன் சென்று விசாரித்து தந்தையை மீட்டு வரும் எண்ணத்தோடு புறப்படுகின்றனர். அங்கே சென்ற பின் கார்க்கியை உதவி ஆய்வாளர் உங்கள் தந்தை குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் விஷயம் மீடியாவிற்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் தெரியும் முன்னமே ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விடுங்கள் அதுதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது என்று எச்சரிக்கிறார். கார்க்கி செய்வதறியாது தன் தந்தையின் நண்பர் வக்கீல் ஒருவருக்கு போன் செய்து உதவி கேட்கிறார் அந்த வக்கீல் தன்னால் ஆன முயற்சியை செய்துவிட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் ஊட்டிவிட்டு திடீரென கவுன்சிலில் இந்த கேசில் வாதாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதனால் என்னால் என்னுடைய எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் உங்கள் தந்தைக்காக அழித்துக்கொள்ள முடியாது மன்னிக்கவும் என்று விலகி விடுகிறார். அவருக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்யும் இந்திரன் என்பவர் எந்தவித கேசும் தனக்கு கிடைக்காததாலும் தான் திக்கு வாய் என்பதாலும் இந்த கேசை எடுத்து நடத்தினால் தன் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்பதாலும் தைரியமாக இந்த கேசில் இறங்கி வாதாடவும் வருகிறார் கார்க்கியும் அவருடன் இணைந்து அலைந்து தந்தையை மீட்டெடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிகிறார்.

ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு பெண் குழந்தை தினமும் வாக்கிங் செல்லும் ஒரு அங்கிளின் நாயை பிஸ்கட் போட்டு கொஞ்சுகிறாள். சரியாக மாலை நேரத்தில் அந்த நாய் வாக்கிங் அழைத்து செல்வது அவரின் வழக்கம் அந்த நேரத்தில் மாடிப்படி வழியாக நாயை அழைத்து வரும்போது யாரும் இல்லை என்பதை அந்த மனிதன் நன்கு உணர்ந்து கொள்கிறான் தன்னுடன் சேர்ந்த சக மனிதர்களையும் ஒன்று கூட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு தப்பி செல்கிறான் செக்யூரிட்டி வேலை முடித்து வரும் கார்க்கியின் தந்தை அவளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு செல்கிறாள் விஷயம் தெரிந்த பின் காவல்துறைகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி ஆராயும் போது அந்த வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண் கார்க்கியின் தந்தையையும் அடையாளம் காட்டுகிறாள். அவள் மனநிலை சரியில்லை என்பதாலும் மயக்கத்தில் இருப்பதாலும் தன்னால் முடிவெடுக்க முடியாததாலும் சரியான ஆளை சுட்டி காட்டும் மனப்பக்குவம் இல்லாததாலும் தன் தந்தை தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதே கார்க்கியின் வாதாட்டம்.

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஷிவரிங் நடுக்கு தன்மை குறைவதற்கு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது அந்த மாத்திரை வயதானவர்களுக்கு கொடுக்கும் மாத்திரை, டோசேஜ் அதிகம் உள்ள மாத்திரை அது கொடுத்தால் முடிவெடுக்கும் திறன் குறையும் என்பதும் டாக்டரால் நிரூபணம் செய்யப்படுகிறது இது போன்ற சின்ன சின்ன துணுக்குகளை ஆராய்ந்து தந்தைக்கு ஆதரவாக விஷயங்களை அவரை மீட்டெடுக்க கார்கி அலைந்து திரிந்து கண்டெடுக்கிறாள். எது எப்படி கெட்டாலும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக் காட்டாமல் இருந்தால் ஒழிய தந்தையை மீட்டெடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட கார்கி அந்த பெண்ணிடம் பேச முயற்சி செய்யும்போது அவருடைய தந்தை (பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தந்தை) ஒரு ஐந்து நிமிடம் அழுது கொண்டே கார்கியிடம் பேசுவார் பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த அனைத்து தந்தைக்கும் அடிவயிறு கலங்கிவிடும் அருமையான நடிப்பை அந்த ஒரு காட்சியில் முழுங்கிவிட்டு செல்வார் சரவணன் என்னும் நடிகர். பல போராட்டத்திற்குப் பிறகு அந்த பெண்ணை சம்மதிக்க வைத்து அந்த பெண்ணிடம் நடந்த உண்மையை கேட்டரிந்து கார்கி மீண்டும் ஒருமுறை சுட்டி காட்டுவதற்கான ஏற்பாடு செய்வாள். 

தந்தையை மீட்டெடுத்தாரா உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் கடைசி 15 நிமிடக் கதை உங்களை உருக்குலைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

படத்தின் பலம் : சரவணன் நடிப்பு 

பலவீனம் : சிறு குழந்தைகள் பார்க்க முடியாத படம் ( இருப்பினும் பெண் குழந்தைகளை பார்க்க வைக்க வேண்டும் என்பது என் கருத்து )

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

திரை விமர்சனம்: DUAL – சிரஞ்சீவி இராஜமோகன்

திரை விமர்சனம்: DUAL – சிரஞ்சீவி இராஜமோகன்




சுமார் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து இருக்கும் ஒரு வெளிநாட்டுச் சூழலை உரித்தாக்கிக் கொள்ளுங்கள் அதாவது டெக்னாலஜிகள் அதன் உச்சத்தைத் தொட்டியிருக்கும் காலகட்டம். அந்த காலகட்டத்தில் க்ளோனிங் முறை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் யார் நினைத்தாலும் தன்னை போன்ற இன்னொரு உயிரினத்தை உயிரை மனிதனை நகல் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு விதிமுறைதான் தாங்கள் இறக்கப் போவது அரசால் மருத்துவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் அதற்கான சான்று இருந்தால் போதும். இதுவே குளோனிங் முறை எனப்படும் பூனை எலி போன்றவற்றை இன்றைய கால அறிவியல் அறிஞர்கள் குளோனிங் முறை செய்து வெற்றி கண்டுள்ளனர். கதைக்கு வருவோம். கதாநாயகனுடன் வாழ்ந்து வரும் கதாநாயகி சற்று உடல்நிலை குறைவால் பாதிக்கப்படுகிறாள் அவள் இறப்பது 90% உறுதியாகிவிட்டது இந்த நிலையில் யாரிடம் இதை எப்படி சொல்வது என்பது அறியாமல் திகைத்து திக்கு முக்காடி போய் கையறு நிலைக்கு ஆளாகிறாள்.

தனக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர் மூலமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட குளோனிங் முறையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படுகிறாள். அந்த டாக்டர் உனக்கு விருப்பமெனில் உன்னுடைய இழப்பு யாருக்கும் வருத்தம் அளிக்காத அளவிற்கு குலோனிங்கில் உன்னை நீயே உருவாக்கி இந்த உலகத்திற்கு அளித்துவிட்டு போ என்று கூறுகிறாள். தாயிடம் தான் இறப்பதை சொன்னால் வருத்தப்படுவாள் என்பதற்காக கணவனிடம் மட்டும் உத்தரவு வாங்கிக்கொண்டு குளோனிங் முறைக்கு தயாராகிறார் அந்த பெண். குளோனிங் முறையில் நல்லபடியாக தன்னை போலவே ஒரு பெண்ணை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

டாக்டர்கள் நீங்கள் இறப்பதற்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருக்கிறது அதற்குள் உங்களுடைய கதாபாத்திரம் என்ன குடும்ப சூழ்நிலை என்ன நீங்கள் எவ்வாறு நடப்பீர்கள் ஆடை அணிவீர்கள் என்பதெல்லாம் இந்த பெண்ணுக்கு அனிச்சையாகப் பழகி போகும் வரைக்கும் டிரைனிங் கொடுக்கவும் என்று அறிவுரை கூறுகின்றனர் அவளும் அதற்கு ஏற்றது போல் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து தன்னை போன்ற ஒரு குலோனிங்கை உருவாக்கி செல்கிறாள்

அந்த குளோனிங் கணவனுடன் இணைந்து ஷாப்பிங் செல்வது போன்றவற்றில் அன்றாட வாழ்வினை தொடங்குகிறாள். அப்போது தனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரிடம் இருந்து ஒரிஜினல் பெண்ணுக்கு போன் வருகிறது தங்களிடம் சற்று பேச வேண்டும் நேரில் சந்திக்கவும் என.

அவள் மருத்துவரை சந்தித்து க்ளோனிங் முறையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறி தான் இறப்பதற்கு தயாராகவும் சந்தோஷமாகவும் இருப்பது குறித்து முனகுகிறாள். அப்போது ஒரு சிறிய தவறு நடந்து விட்டதாகவும் தன் உடலில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் தான் இறக்கப் போவதில்லை என்பதும் அந்த டாக்டர் சொல்ல அவளை திக்கு முக்காட செய்கிறது. நீங்கள் 90% இறந்து விடுவேன் என்று சொல்லித்தானே இந்த க்ளோனிங் முறைக்கு நான் தயாரானேன் இப்போது என்ன செய்வேன் என்று கெஞ்சுகையில் மீதமுள்ள 10 சதவீதம் கடவுள் கையில் என்று கை வைக்கிறார் அந்த டாக்டர் கதை இந்த இடத்தில் இருந்து விறுவிறுப்பாகிறது.

வீட்டில் இந்த உண்மையைச் சொல்லி குளோனிங்கை தான் மீண்டும் அழிக்கப் போவதாக அந்தப் பெண் கணவனிடம் கூறுகிறாள். கணவன் சற்றே மன சங்கட்டத்துடன் எனக்கு உன்னை விட குளோனிங் பெண்ணே பிடித்துள்ளது அவளை அழிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறான் பின்பு அதுவே சண்டையாகவும் மாறுகிறது. பதிலுக்கு இந்த குளோனிங் பெண் இதில் என் தவறு எதுவும் இல்லை நான் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது தகுதி இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். முடிவில் யார் ஜெயித்தார் யார் இறந்தார்? யார் கணவனுடன் சேர்ந்து வாழ போகிறார் என்பதே கதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 100% நீங்கள் எப்படி நினைத்தாலும் அது முடிவாக இருக்காது முடிவில் ஒரு மிகப்பெரிய விறுவிறுப்பு உங்களுக்காகவே பிரத்யேமகமாக காத்திருக்கிறது.

கதையின் பலம் : வித்தியாசமான திரைக்கதை தத்ரூபமான நடிப்பு மனதை குலைக்கும் மனோ தத்துவ நீண்ட வசனங்கள்.

பலவீனம் : சில இடங்களில் தேவையில்லாத நீண்ட வசனங்கள் வறட்சியை ஏற்படுத்துகிறது திரைக்கதையில்

தி ஆர்ட் ஆப் செல்ஃப் டிபன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்தப் படத்திலும் தன்னுடைய தத்ரூபத்தை காட்டியுள்ளார். அவருக்கு ஒரு சல்யூட்.

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

-சிரஞ்சீவி இராஜமோகன்