கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) - நூல் அறிமுகம் | Nivedita Louis's Christhavathil Jaathi Tamil Book Review By Ilaiyavan Siva | தலித் கிறிஸ்துவ மக்கள் - https://bookday.in/

கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) – நூல் அறிமுகம்

கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) - கள ஆய்வுகளும் நேர்காணல்களும் வரலாறு தொல்லியல் பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருபவர், முன்னாள் மத்திய அரசுப் பணியாளர், உள்ளூர் மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை முனைப்போடு மக்களிடம்…
நூல் அறிமுகம்: மும்தாஸ் அலீ கானின் ’மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்’ (ஒரு சமூகவியல் ஆய்வு) – சம்சுதீன் ஹீரா

நூல் அறிமுகம்: மும்தாஸ் அலீ கானின் ’மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்’ (ஒரு சமூகவியல் ஆய்வு) – சம்சுதீன் ஹீரா




தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆல் நேரடியாக (தன் துணை அமைப்புகளைப் பயன்படுத்தாமல்) நிகழ்த்தப்பட்ட மூன்று தாக்குதல்களாகச் சொல்லப்படுவது ஒன்று பழனிபாபா படுகொலை, இரண்டாவது அல் உம்மா பாஷா பாய் மீதான கொலை முயற்சி, மூன்றாவது கூரியூர் ஜின்னா படுகொலை.

பழனி பாபா, பாஷா பாய், மீதான தாக்குதலுக்குக்கூட அவர்களின் வீரியமான செயல்பாடுகளைக் காரணம் சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஆனால் கூரியூர் ஜின்னா விசயத்தில் ஆர்.எஸ்.எஸ் க்கு அப்படி என்ன சிறப்புக் கவனம்?

பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு விசயத்துக்கு அஞ்சி நடுங்கும் என்றால் அது மதமாற்றம் தான். தலித் சமூகத்திலிருந்து குடும்பத்தோடு இஸ்லாத்துக்கு மாறிய கூரியூர் ஜின்னா, தன்னைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் பெருந்திரள் மதமாற்றத்தை முன்நின்று நடத்தினார். ஆர்.எஸ்.எஸ் பதறிக்கொண்டு ஓடிவந்தது காரியத்தை முடித்தது.

பொதுவாகவே மதம் மாறிய மக்களை காசுக்காக, ரொட்டிக்காக, மாறினார்கள் என்றெல்லாஉதவும். இழிவு செய்து குரூரமாய் வன்மத்தைப் பரப்பினாலும் அதன் உள் மனதில் பேரச்சம் கொள்ளச்செய்யும் நிகழ்வு மதமாற்றம். அது பார்ப்பனியத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்து விடக்கூடியது.

இப்போது மோடியரசு கொண்டுவரத் துடிக்கும் மதமாற்றத் தடைச் சட்டம், ஆயிரமாண்டுகளாய் அவர்களின் ஜீன்களில் உறைந்து போயுள்ள அடிப்படைத் திட்டம்.

விசயத்துக்கு வருகிறேன்.

சீர்மை பதிப்பகத்தின் ‘மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் – ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற நூலை வாசித்தேன்.

அரபுநாடுகளின் நிதியிலிருந்து பெரும் செலவு செய்து பணத்தாசை காட்டித்தான் பெருந்திரள் மதமாற்றம் செய்யப்பட்டது என்கிற ஆர்.எஸ்.எஸ் மற்றும் அப்போதைய அ.இ.அ.தி.மு.க அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், மதம் மாறிய, மாறாத அம்மக்களிடம் நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணல்கள் ஆய்வுகள் அடிப்படையில் இதுகுறித்த முழுமையான சித்திரம் இந்நூலில் கிடைக்கிறது.

200 ஆண்டுகளுக்கு முன்பே பெருந்திரள் மதமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்லும் இவ்வாய்வு, இக்குறிப்பிட்ட மீனாட்சிபுரம் மதமாற்றம் ஏதோ சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த அம்மக்கள் எடுத்த முடிவு அல்ல. இரண்டு தலைமுறைகளாக ஒரு கிராமத்தின் 300 குடும்பங்கள் தங்களுக்குள் நடத்திக்கொண்ட விவாதங்கள் உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் இந்த முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதையும் விளக்குகிறது.

அந்த 300 குடும்பங்களும் தங்களுக்குள் உறவுமுறை கொண்டிருந்ததும் இந்த கூட்டு மதமாற்றத்துக்கு முக்கிய காரணம் என்பதையும், ஏற்கனவே கிருத்துவத்துக்கு மாறியிருந்த மக்களில் பலரும் இந்நிகழ்வில் இஸ்லாத்துக்கு மாறியதையும், அதற்கான காரணிகளையும் விளக்குகிறது.

தீண்டாமைக்கெதிராக, சமூக இழிவுகளுக்கெதிராக இந்து மதத்திலிருந்து வெளியேறுவதென்று முடிவு செய்த மக்களுக்கு கிருத்துவம் இஸ்லாம் என்கிற இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பௌத்தம் பிரபலமாகியிருக்கவில்லை.

ஏற்கனவே இவ்விரண்டு மதங்களுக்கும் மாறிய மக்களின் வாழ்க்கைச் சூழல் சமூக அந்தஸ்து குறித்து நீண்ட ஆய்வைச் செய்கிறார்கள். உயர்ஜாதி இந்துவாக இருந்து கிருத்துவத்துக்கு மதம் மாறியவர்கள், அங்கும் தங்கள் ஜாதியைச் சுமந்து சென்றதால் சமூக இழிவுகள் அங்கும் நீடிப்பதால் ஒருமனதாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

படிப்பறிவில்லாத பாமர மக்கள் எளிதாக மூளைச்சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டனர், பொருளாதார நிலையில் கீழுள்ள மக்கள்தான் மாற்றப்பட்டனர் என்கிற வாதங்களையெல்லாம் இவ்வாய்வு புள்ளி விவரங்களோடு முறித்துப் போடுகிறது.

பெருந்திரள் மதமாற்றத்துக்குப் பிறகு இந்துத்துவா சக்திகள், ஊடகங்கள், மாநில அரசு, உள்ளூர் சாதிய சக்திகள், போலீஸ், அரசு அதிகாரிகள் போன்ற எல்லா அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தாங்கி நின்ற ஒரு சமூகத்தின் உளவியலைப் புரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.

– சம்சுதீன் ஹீரா

நூல் : மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு
ஆசிரியர் : மும்தாஸ் அலீ கான்
விலை : ரூ.₹300
வெளியீடு : சீர்மை பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா




12.12.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும், சென்னைப் பல்கலைக்கழகம் அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனமும் இணைந்து, பாரதியார் பிறந்த நாள் விழா நினைவுக் கருத்தரங்கமும், தமிழின் தொன்மை : அகழ்வாய்வுகள் என்ற ஆய்வு நூல் வெளியீடும் இனிதே நடைபெற்றது.

இறை வணக்கத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்துமுடிந்த பின்பு, கல்லூரிச் செயலர் அருள்முனைவர் போனிபஸ் ஜெயராஜ் சே.,ச. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் தொன்மை: அகழ்வாய்வுகள் நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். அப்பொழுது பாரதியாரின் பிறந்தநாள் குறித்தும், மொழிகளின் முக்கியத்துவம் குறித்தும் அதில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றிய தன் கருத்துக்களை எடுத்துவைத்தார். குறிப்பாக இவ்வுலகில் 7000 மொழிகளுக்குமேல், பேசப்பட்டாலும் தமிழ் உள்ளிட்ட எண்ணிக்கையில் குறைவான மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி தகுதிக் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்தால், தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது. எந்த இடங்களுக்குச் சென்றாலும் மாணவர்கள் தாய்மொழியில் பேசவேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் பாரதியார், தன்னுடைய கவிதைகளை இசை வடிவத்தில் எழுதிய அழகை வியந்து பேசினார். அப்பொழுது பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு என்ற கவிதையின் சிறப்பைப் பற்றி சிலாகித்துப் பேசியது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சி அளித்தது. தமிழ்த்துறை எப்பொழுதும் தன் இலக்கை நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நூல் வெளியீடு, கருத்தரங்கம், இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்டவற்றை தமிழ்த்துறை மிக சிறப்பாக நடத்தி வருவதைக் கண்டு தமிழ்த்துறைத் தலைவர் சூ அமல்ராஜ் அவர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நிற்கும் மற்ற பேராசிரியர்களையும், மாணவர்களையும் இன்முகத்துடன் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

அடுத்து அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனத்தலைவர் பேராசிரியர் முனைவர் ஏகாம்பரம் அவர்கள் பாரதியாரைப்பற்றி குறிப்பிடும்போது யாமறிந்த மொழிகளிலே…. யாமறிந்த புலவனிலே…. என்று சொல்லுவதற்கு பாரதிக்கு ஒரு தகுதி உண்டு. காரணம் அவன், பல மொழிகளைக் கற்றவன் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி உயர்ந்தது என்று சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு தார்மீக உரிமையும் உண்டு. இன்று வந்திருக்கக்கூடிய நூல்களில் மக்களிடம் அதிகமாக சென்றடைந்த நூல்கள் இரண்டு. ஒன்று திருக்குறள். மற்றொன்று பாரதி. இதில் எந்த கருத்து முரணும் இருக்காது என்று நம்புகிறேன். கிருத்துவத்திற்கும், பாரதிக்கும் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. பாரதியும் மக்களிடம் அதிகமாக சென்றடைந்தான். கிருத்துவமும் மக்களிடம் சென்றடைந்தது. இன்றைக்கு பாரதியின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும் ஏன் வைக்கிறார்கள்? கவிதையை எழுதவரும் படைப்பாளிகள் பாரதியை முன்மாதிரியாகக் கொண்டிருக்கக் காரணம் என்ன? பாரதி ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கிறான். அல்லது அவனுடைய கவிதை ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கக்கூடும்.

பாரதிக்கும், கிறித்துவத்துக்குமான தொடர்பு முதலில் கல்வியிலிருந்து தொடங்குகிறது. கல்வி எல்லோருக்குமானது. இந்த உணர்வு எப்பொழுது வந்ததென்றால்? ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தான். கல்வி பரவலாக்கப்பட்டது. அதுவரை கல்வி ஒரு சாராருக்கு மட்டும்தான் என்றிருந்த நிலையில் பாரதி சொல்லுவான், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்…. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று கூறியுள்ளார். அதே போன்று தான் இலயோலா கல்லூரியும். ஏழை எளியோருக்கு தான் முதலில் கல்வி தர வேண்டும். மட்டுமல்ல அவர்களைதான் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் அடிப்படையில் மனிதர்களை சமமாக பாவிக்கும் மனோபாவம். இந்த மனோபாவம் எங்கிருந்து வந்தது என்றால்? எல்லாம் இயேசு பெருமான் வழங்கிய கொடை. அதனால்தான் அவர்கள் கல்வியை பரவலாக்கினார்கள். பாரதிக்கும் – கிறித்துவ நிறுவனங்கள் வழங்கும் கல்விக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. ஏதாவது பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருந்தால் அதை கொளுத்து என்கின்றார் பாரதி.

அடுத்து இந்தியாவில் நிலவும் சாதிக்கொடுமை. ஐரோப்பியர்களிடம் இங்கிருந்தவர்கள் பட்டியலின மக்களைப் பற்றி எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் அவர்களைத் தொடக்கூடாது தொட்டால் தீட்டு என்றனர். அப்பொழுது ஆங்கிலேயர்கள் எங்கள் ஊரில் கரண்டை தான் தொடக் கூடாது என்பார்கள். அதைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதால் இங்கு வினோதமாக இருக்கிறதே மனிதர்களுக்கு மனிதன் தொடக்கூடாது என்றால்…. ?

இங்கு பாரதியார் சாதி ஒழிப்பிற்காக குரல் கொடுத்தவர். அதனால் தான் பொதுவுடமைக் கட்சி இயக்க தோழர் தா. பாண்டியன் அவர்கள் பாரதியும் சாதி ஒழிப்பும் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் அனைவரும் படிக்க வேண்டும். படரும் சாதிக்கு மருந்தவன் என்று பாரதியைப் பற்றி பாரதிதாசன் கூறியிருக்கிறார். பாரதியார் சார்ந்த சொந்த சமூகத்தால் அடைந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர் உயிருடன் இருந்தபோதே நான் இறந்தால் என்சவத்திற்குப் பின்பு இரண்டு பேர்க்கூட வரமாட்டார்கள் என்பதை, அந்த சமூகம் மெய்ப்பித்தது.

அதேபோன்று நந்தனைப் பற்றி பேசும் பொழுது, நந்தனைப் போன்ற ஒரு பார்ப்பான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிறப்பால், உடல் நிறத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள் இல்லை. மாறாக குணத்தால் உயர்ந்தவர்களே உயர்வானவர்கள் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவன். குறுகிய காலத்தில் வாழ்ந்தவன் பாரதி. வாழ்நாள் குறுகிய காலம் என்றாலும் அவன் இச்ச சமூகத்திற்கு நிறைவான செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றான். இப்படிப்பட்ட பாரதிக்கு இலயோலா கல்லூரியில் விழா எடுப்பது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தன் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஏகாம்பரம் அவர்களைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் அவர்கள் பாரதியாரை பற்றி கூறும் பொழுது, பாரதிக்கு இறுதியாக ஒரு கனவு இருந்தது. கிருத்துவத்தின்பால் ஈடுபாடு கொண்ட பாரதி பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினார். பிறப்பால் ஒரு சமூகத்தில் பிறந்த அவர், முற்றிலும் வேறான ஒரு சமயத்தின் வேதநூலை மொழிபெயர்க்க விரும்பினார். ஒருவேளை இயற்கை அவருக்கு வாய்ப்பு அளித்திருந்தால் பாரதியின் மொழிபெயர்ப்பில் ஓர் அழகான பைபிள் கிடைத்திருக்கும். ஆனால் காலம் அவருக்கு கையளிக்கவில்லை.

நவீன யுகத்தின் அடையாளமாக கருதப்படுபவன் பாரதி. ஏன்…? வேறெந்தப் புலவனுக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால்? மற்றத் தமிழ் புலவர்கள் எல்லாம் அறத்தைப் பாடினார்கள், மறத்தைப் பாடினார்கள். இயற்கையை, பறவையை, விலங்குகளை, சுகத்தை, துக்கத்தை உள்ளிட்டவற்றைப் பாடினார்கள். இரண்டாயிரமாண்டு கவிதை பாரம்பரியம் கொண்ட பாரதி, விடுதலை வேட்கையைப் பாடினார். அதனால்தான் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளானப் பின்பும் பாரதியாரைப் பாடுகிறோம். அதுபோன்றே தான் நவீன கவிதையின் அடையாளமாக இருக்கக்கூடிய ஆத்திச்சூடி எல்லா கடவுளை வணங்குவதைப்போல, இயேசு பிரானை வணங்குகிறார். பாரதிக்கு சாதியின்பால், மதத்தின்பால் எந்த பற்றும் கிடையாது. ஆனால் மற்றவர்கள் பாரதியை ஒரு சாதிச் சிமிழுக்குள் அடக்க நினைக்கிறார்கள். அவரை எப்படியாவது ஒரு வலதுசாரி சிந்தனை மனநிலைக்குக் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று பலரும் போராடுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த புலவன் சாதியை மறுத்திருக்கிறான்.

தமிழில் மிகவும் ஆழங்கால் பட்டவர், தமிழில் நவீன கவிதைகளைப் பாடியவர் பாரதிதாசன். மிக நுட்பமான கவிஞர் பாரதிதாசன் பாரதியின் புலமையை ஏற்றுக்கொண்டு, நெறிமுறைகளின் தன்மைகளாக புதிய வாசம் பெற்றதனால் தான் தன்னுடைய பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார். அவர், ஒருபோதும் படிக்காமல் தாசன் ஆகவில்லை. படித்து விட்டுதான் தாசன் ஆகியுள்ளார். பாரதிக்கு முற்றிலும் வேறான அரசியல் பின்புலம் கொண்ட பெரியாரை தன்னுடைய இலக்காகவும், இலட்சியமாகவும் கொண்ட பாரதிதாசன், பாரதியை ஏற்றுக் கொள்கிறானே என்று அவரைப் பற்றி படிக்கப் போனவன்தான் நான், பாரதியில் வீழ்ந்தேன்.

1914 பாரதி புதுச்சேரியில் இருந்த போது மாபெரும் புயல் காற்று வீசியது. அந்தப் புயல் காற்றில் வீட்டின் கூரைகள் பீய்த்துக்கொண்டு எங்கோ சென்று காணாமல் போய்விட்டன. ஆடு, மாடுகள் எல்லாம் சாலைகளில் இறந்து கிடந்தன. பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. பட்டியலின மக்கள் வாழும் இடம் (சேரிக்குச்) சென்று அந்த மக்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உணர்ந்து முதலில் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்து சேவகம் /ஊழியம் செய்தார்.

நண்பர்களே…. கிருத்துவத்தின் மிக முக்கியமான வார்த்தை ஊழியம். பாரதி சொல்கிறார் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்கிறார். யோகம் என்பது வீட்டில் அமர்ந்து கொண்டு தியானம் பண்ணுவது அல்ல. ஊருக்கு உழைத்திடல் யோகம் அப்படி என்றால் யோகமும் / ஊழியமும் எங்கு இருக்கிறது என்றால்..? ஊருக்கு உழைப்பதில் தான்.

இப்படி அரிய ஒவ்வொரு நிகழ்வுகளை எல்லாம் அடுக்கிக் கொண்டே சென்றார். புயலுக்கு பின் அமைதி என்பதைப்போல மாணவர்களும் அத்தனை அழகாக, பொறுமைக் காத்து செவிமடுத்தனர். அந்த அளவிற்கு ஒரு ஆழமான உரை.

பொழிவாளர் கடற்கரை மத்த விலாசம் அவர்கள் உரை ஆழமான ஏறக்குறைய தியான மனநிலைக்கு அழைத்து சென்றார்.

பொழிவாளரின் உரைக்குப் பிறகு, நன்றி கூறுவதற்காக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள், அன்றைய முழு நாள் நிகழ்வையும், அத்துணை அழகாக தொகுத்துரைத்தார். குறிப்பாக நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து நிறைவு விழா வரைக்கும் யாருடைய பெயரும் விடுபட்டு விடாமல் அதே சமயத்தில் தன் கவனத்தை அன்றைய நாள் முழுதும் நடந்த நிகழ்வில் செலுத்தியதை எடுத்து இயம்பும் வண்ணம் தொகுத்துரைத்தார்கள்.

முனைவர் எல். சூசை சகாயராஜா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறக்க தங்கள் பங்களிப்பை நல்கினர்.

இது போன்ற நிகழ்வுகள் அறிஞர் பெருமக்களுக்கு மரியாதை அல்லது அவர்களை நினைத்துப் பார்ப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தி செல்வது முக்கிய காரணம் என்று சொல்ல முடியும். இவ்விழாவில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

அடுத்த தலைமுறையிடம் ஒரு நல்ல விதையைக் கொடுத்திருப்பதைப் போல, பாரதியை அவருடைய பிறந்த நாளில் கடத்தி இருக்கிறோம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கி விட்டது.

– பேரா எ.பாவலன்

தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்… கட்டுரை – பேரா. எ. பாவலன்

தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்… கட்டுரை – பேரா. எ. பாவலன்




தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்…

தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றும் சாவதில்லை என்பதற்கு வீரமாமுனிவர் ஒரு சாட்சி. அவர் மறைந்து சுமார் 275 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த தினமும், நினைவு நாளும் வரும் பொழுது அவர் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர் வேண்டுகோளுக்கு இணங்க இத்தாலி நாட்டு லிஸ்பனிலிருந்து வருகை தந்தவர் கான்ஸ்டன்ட் ஜோசப் பெஸ்கி.‌ முதலில் அவர் சமய பணி செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்தது. அதன் பொருட்டு 1810இல் கோவாவில் தரையிறங்கினார். அங்கு இருந்து விட்டு இருப்பு கொள்ளாமல், தமிழ்நாட்டிற்கு செல்வதற்கு பெரும் விருப்பம் கொண்டிருந்தார். அதனால் கொச்சி வந்தடைந்து நடைப் பயணமாக அம்பலக்காடு ஊரில் தங்கி பின்னர் மதுரை காமாயக்கன் பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழ்நாடு தான் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. சமயப் பணி ஆற்றுவதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதை அறிந்தவர், முதலில் தமிழைக் கற்கத் தொடங்கினார். ஆனால் தமிழ் அவரை புலன் மாற்றி போட்டது. தான் ஒரு கிறிஸ்தவர் என்பதையும் கடந்து தமிழராகவே வாழ பெரும் விருப்பம் கொண்டார். அதன் அடிப்படையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர் கூட செய்ய முடியாத அரும் பெரும் பணிகளை செய்தவர் வீரமாமுனிவர். விடுவான் முத்துசாமி பிள்ளை அவர்கள், இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது. கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு தலைக்குச் சூரியகாந்திப் பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும். வெள்ளைப்பாகையும் இளங்காவி யுந்தரிய முக்காடும். கையினிற் காவி ஒருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், நெற்பொட்டுச் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும். கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெந்தையின் மேலிட்டிருக்கும்புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும். தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார். வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து.குறிப்பாக தொல்காப்பியர் காலத்தில் இருந்து தொடங்கிய குழப்பத்தை வீரமாமுனிவர் தீர்த்து வைத்தார் என்று சொல்லும் அளவிற்கு தமிழில் புலமைப் பற்று திகழ்ந்தவர். தொல்காப்பியத்தை போலவே சிறந்த இலக்கண நூல் ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்ற தனியாத ஈடுபாட்டின் காரணமாக தொன்னூல் விளக்கம் என்ற ஐந்து இலக்கண கோட்பாட்டோடு அற்புதமான இலக்கண நூலை படைத்தவர். வீரமாமுனிவர் தன் வேர் பரப்பை இலக்கியத்தின் அனைத்து தலங்களிலும் பரவச் செய்தவர். இலக்கணம், இலக்கியம், மொழிபெயர்ப்பு, காப்பியம், உரைநடை இலக்கியம், அகராதி உருவாக்குதல், மொழிபெயர்ப்பு பணி, சிற்றிலக்கியம் இப்படி அனைத்து உள்ளடக்கத்திலும் தன் ஆளுமையை நிரூபித்தவர்.

வீரமாமுனிவரை முற்றும் முதலும் உணராதவர்கள் தான் அவர் மீது தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்கிறார்கள். அதில் ஒன்று இது. வீரமாமுனிவர் எப்படி இத்தனை அளவிற்கு இலக்கியத்தைப் படைக்க முடியும். அது கூட சாத்தியம்தான் தொல்காப்பியத்தை போலவே தொன்னூல் விளக்கத்தை அவரால் எப்படி எழுதி இருக்க முடியும். இன்னும் பலவாறு அவர்கள் அடிப்படைச் சான்றுகளே இல்லாமல் கேள்விகள் முன்வைக்கின்றனர். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல காரணம் இல்லாத விமர்சனத்திற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒன்று வீரமாமுனிவர் மேற்குலக தேசத்திலிருந்து தனது முப்பதாவது வயதில் இந்திய தேசத்திற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர் என்பதும் நன்கு அறியமுடியும். அதேபோல் தமிழ் அவருக்கு தாய் மொழி இல்லை என்பதையும் அனைவரும் அறிவோம். ஆனால் தொடர் முயற்சியும் பயிற்சியும் ஒரு மனிதனை கோபுரத்தின் உச்சாணிக்கொம்பை தொட முடியும் என்பதற்கு வீரமாமுனிவரின் அறிய முயற்சி ஒவ்வொருவருக்கும் பாடம்.

அந்த வகையில் அவர் பல நூல்களை படைத்திருக்கிறார். அந்த நூல்களின் விவரங்களை அறிந்தாலே போதும் அல்லது அந்த நூல்களின் தலைப்பை உற்று நோக்கினாலே போதும் தமிழ் படித்த வித்வானுக்கு கூட இப்படியான ஒரு சிந்தை எழுந்திருக்கும் என்பதில் சந்தேகம். முதல் முதலில் தமிழில் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் வீரமாமுனிவர். தொல்காப்பியர் கூட எகரமும் ஒகரமும் இயற்கை யற்றே என்ற ஒற்றை நூற்பாவில் சொல்லி முடித்து விட்டார். அதற்கு முன்பாக எத்தனையோ பெரிய ஆளுமைகள் அந்த நூற்பாவை படித்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் அந்த நூற்பாவில் ஏற்பட்ட மயக்கத்திற்கு தீர்வு சொல்ல முனைந்தது கூட இல்லை. முதல் முறையாக எகரத்தை ‘ஏ’ என்று ஒரு சிறு கோடு மட்டுமே உண்டாக்கி நெடிலாக மாற்றியவர். அதேபோன்று ஒகரத்திற்கு ஒரு சிறு சுழியை மட்டும் சுழித்து ஏகாரம் நெடிலாக மாற்றியவர்.

1822ஆம் ஆண்டு வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை முத்துசாமிப்பிள்ளை தமிழில் எழுதினார். அந்நூல் 1840இல் ஆங்கிலத்திலும் 1843இல் தமிழிலும் அச்சானது. அதில் அவர் “வீரமாமுனிவர் தமது ஜென்ம தேசத்திற்றானே தமது சுய பாஷையாகிய இத்தாலிய பாஷையோடு எபிரே, கிறீக்கு, லத்தீன், போர்ச்சுக்கீசு ஆகிய அநேக பாஷைகளிலே தேர்ந்த பாண்டித்தியராய் இருந்தன்றியும், இந்து தேசத்துக்கு வந்தபின்பு சமஸ்கிருதமும் தெலுங்கும் படித்துப் பற்பல அரிய நூற்களைச் செய்தார். தெலுங்கு பாஷைக்கு லத்தீனிலே வியாகரணமும் செய்தார்.

திருச்சிராப்பள்ளிக்கு நவாப்பாய் இருந்த சந்தா சாகிப்பைத் தாம் சந்தித்துப் பேசவேண்டுமென்று பார்சும், இந்துஸ்தானியும் மூன்று மாதத்திற்குள்ளாகப் படித்தார்” என்று கூறுகிறார். ஆகவே முத்துசாமி பிள்ளையவர்கள்படி வீரமாமுனிவருக்குப் பத்து மொழிகள் தெரிந்திருக்கின்றன என்று பதிவு செய்துள்ளார். ஆனால் இதை முனைவர் எஸ்.இராசமாணிக்கம் அடிகளார் மறுத்து
“முனிவருக்குத் தெரிந்த மொழிகள் தாய்மொழி இத்தாலி. முனிவர் எழுதிய நூல்களில் பாதி இலத்தீன் மொழியிலும், விவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் இருந்ததால் அதைக் கற்றிருக்க வீரமாமுனிவர் மறைப் பணியாற்றிய தளத்தில் போர்ச்சுக்கீசியம் அதிகாரப்பூர்வமான மொழியாகப் பயன்பட்டு வந்தது. முனிவர் அம்மொழியில் அகராதி முதலிய நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் பார்சும். இந்துஸ்தானியும் கற்றதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. மேலும் முனிவரது தெலுங்கு அறிவுக்கோ. சமஸ்கிருத அறிவுக்கோ தக்க சான்றுகள் இல்லை, முனிவர் வேறு சில மொழிகளை அறிந்திருக்க வேண்டும். பிரெஞ்சு மொழியில் அகராதி இயற்றியிருப்பதால் அது அவருக்குத் தெரிந்த மொழி. மேலும் போர்ச்சுக் கீசியத்தை ஒட்டி இஸ்பாஞ்ஞ மொழி அமைந்திருப்பதாலும், முனிவர் காலத்தில் (1680-1747) போர்ச்சுக்கல் இஸ்பாஞ்ஞ நாட்டோடு ஒரே நாடாக 1680 தொடங்கி 1740வரை இணைந்திருந்ததாலும், இஸ்பாஞ்ஞ மொழியே ஆட்சி மொழியானபடியாலும் அதை முனிவர் அறிந்திருக்க வேண்டும். ஆக மொத்தம் கணக்கிடுங்கால் வீரமாமுனிவருக்குத் தெரிந்த மொழிகள் என்று உறுதியாகக் கூறக்கூடியவை. இத்தாலி, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், போர்ச்சுக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பாஞ்ஞம், தமிழ் என்று எட்டு மொழிகள் ஆகும்”(மேலைநாட்டவர்களின் தமிழ்த்தொண்டு பக். 116,117) என்ற கருத்தை உறுதியாக பதிவு செய்து இருக்கிறார். வீரமாமுனிவரின் மொழி புலமைக்கும், இலக்கிய அறிவுக்கு பல சான்றுகளைக் காட்ட முடியும். தேம்பாவணி காப்பியமும், தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் உள்ளிட்ட சில நூட்கள் அவருடைய புலமைக்க போதுமானது.

திருமறைத் தொண்டர்களுக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய வேதியர் அல்லது உபதேசிமார்களுக்காக ஒரு பயிற்சிப்பள்ளி நிறுவினார். அவர் மேற்கொண்ட பணியில் சிறந்து விளங்கும்படி வீரமாமுனிவர் ‘வேதியர் ஒழுக்க நூலை எழுதியதோடு ‘ஞான உணர்த்துதல்’ என்ற தியான நூலையும் எழுதினார். அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கத் ‘தொன்னூல் விளக்கமும்’ அதன் உரையும் எழுதியபின் ‘சதுரகராதியும்’ தொகுத்துத் தந்து அவர்களுக்குச் செந்தமிழைக் கற்றுத்தந்தார்.

காரணமே இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பவர்களுக்கு இது ஒன்றே போதும். அவர் தமிழை எந்த அளவிற்கு உற்று கவனித்து படித்திருக்கிறார் என்பதற்கு. இருப்பினும் அவர் எழுதிய நூல்களை அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.

தேம்பாவணி
அன்னை அழுங்கல் அந்தாதி
திருக்காவலூர் கலம்பகம்
கித்தேரி அம்மாள் அம்மானை
அடைக்கல மாலை
வெண் கலிப்பா
கருணாம்பர பதிகம்
வண்ணம்
தனிப்பாடல்கள்
வேதியர் ஒழுக்கம்
வேதியர் ஒழுக்கச் சோதனை
வேத விளக்கம்
பேதக மறுத்தல்
லுத்தேரினத்தியல்பு
பொது நிருபம்
திருக்கடையூர் நிருபம்
பரமாத்மா குரு கதை
வாமன் கதை
ஞான உணர்த்துதல்
சதுரகதாதி
தமிழ் – லத்தின் – அகராதி
போர்த்துக்கீசியம் – லத்தின்- தமிழ்- அகராதி
தமிழ் – பிரெஞ்சு – அகராதி
பிரெஞ்சு- தமிழ் – அகராதி
கொடுந்தமிழ்
செந்தமிழ்
கிளாவிஸ்
தேம்பாவணி
தொன்னூல் விளக்கம்
திருக்குறள் உரை
திருக்குறள் உரை பேச்சுத் தமிழில்
திருக்குறள் உரை பரிமேலழகர் உரைத்தொகுப்பு
இந்திய பஞ்சாங்கம்
தமிழ்ப் பஞ்சாங்கம்
திருக்குறள் 1080 பாடல்கள்
பரமார்த்த குருவின் கதை
வாமன் கதை
இலக்கணங்களில் வரும் மேற்கோர்

இப்படி எண்ணற்ற நூல்களை இயற்றி தமிழின் சிறப்பை உலகறிய ஓர் அங்குலம் உயர்த்திய பெருமை அவருக்கு உண்டு.
அகராதி தொகுத்த ஆசிரியர் வீரமாமுனிவர் தொகுத்ததாகக் கருதப்படும் அகராதிகள் வருமாறு: 1.சதுரகராதி 2.தமிழ்-இலத்தீன் அகராதி 3. போர்ச்சுக்கீசியம் இலத்தீன்-தமிழ் அகராதி 4. தமிழ்-பிரெஞ்சு அகராதி 5.பிரெஞ்சு- தமிழ் அகராதி ஆகியவை. வீரமாமுனிவருக்குமுன் தமிழில் அகராதி இல்லை. அகராதியின் உள்ளடக்கத்தில் அகராதி என்ற பெயரே வீரமாமுனிவர் ஏற்படுத்தியதுதான். எனினும் மனப்பாடம் செய்யப் பெரும்பாலும் செய்யுளில் அமைந்த நிகண்டுகள் பல இருந்தன. மேலும் தமிழ் போர்ச்சுக்கீசியம் போன்ற இரட்டை மொழி அகராதி பலவற்றை முனிவருக்கு முன்னரே பிரயோன்சா போன்ற மேல்நாட்டவர் தொகுத்துள்ளார்கள். முனிவர் இயற்றிய அகராதி அனைத்திலும் சிறந்தது தமிழ்-இலத்தீன் அகராதியாகும். மேலும் முதல் முதலாகத் தமிழில் அமைந்த இச்சதுரகராதியால் முனிவர் ‘அகராதியின் தந்தை’ என்ற பெயரும் பெற்றுள்ளார்.
முனிவர் காலத்தில் தமிழ் பயில்வோருக்கு நல்ல பாடப் புத்தகங்கள் இல்லை என்கின்ற குறை இருந்தது. இக்குறையை நீக்கி, ‘பரமார்த்த குரு’ என்ற நூலைக் கொடுந்தமிழுக்கு முன்மாதிரியாகவும், தேம்பாவணியிலிருந்து எடுத்த வாமன் கதையைச் செந்தமிழ்ப் பாடமாகவும் எழுதினார். அயல் மொழியைப் பயிலும்போது ஏற்படும் சோர்வு, மனத்தளர்ச்சியைப் போக்க நகைச்சுவையோடு கூடிய பரமார்த்த குரு கதையை எழுதியதாகச் சொல்கிறார். இவ்விரு பாடப் புத்தகங்களும் மாணவருக்கு எளிதில் விளங்கும் வண்ணம் தமிழை ஒட்டித் தாம் அமைத்த இலத்தீன் மொழிபெயர்ப்பை இரண்டு பாடங்களோடும் இணைத்திருக்கிறார்.
முனிவர் காலத்தில் தமிழ் நெடுங்கணக்கு தெளிவாய் அமையவில்லை. ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்து புள்ளி பெறவில்லை. எகர ஒகரங்களில் குறில் நெடில் வேறுபாடு குறிக்கப் பெறவில்லை. அகர நெடிலைச் சுட்டும் காலுக்கும், ஒகர ஒகார உயிர்மெய்யில் வரும் காலுக்கும், ரகர மெய்க்கும் உயிர்மெய்க்கும் வேறுபாடு இல்லை. நான்கும் ஒரே வடிவில் அமைந்திருந்தன. தமிழ் தெரியாதவர்களுக்கு இந்நிலை எத்தகைய தொல்லை அளித்தது என்பது சொல்லத் தேவையில்லை. தேம்பாவணி முதலிய நூல்கள் எழுதிய பிறகு தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எகர ஒகரங்களில் சுழித்து வேறுபாடு காட்டினார். மேலும் நகரம் புள்ளி பெற ‘ரி’யகர உயிர் மெய் கீழே வளைவு பெற்றது. கால் முன் உள்ளபடி விடப்பட்டது ( முனைவர் எம். ஏ. சவேரியார், மேலை நாட்டறிஞர்களின் தமிழ் தொண்டு; 2014, பக்.114,115) இப்படி தொல்காப்பியர் காலத்தில் தொடங்கிய சிக்கலுக்கு சுலபமாக பதில் சொன்னவர். அப்படி தமிழில் முதல் எழுத்து சீர்திருத்த செம்மல் என்று அழைக்கும் அளவிற்கு உயர்ந்தவர்.

தமிழ் உரைநடை வளர்ச்சியைப்பற்றிக் கூறும்போது கைலாசபதி (1968:63-64) வீரமாமுனிவரைப் பற்றிக் கூறுவதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மேனாட்டவருள் வீரமாமுனிவர், தத்துவ போதக சுவாமிகள், சீகன்பால்க் ஐயர் முதலியோர் இயன்றளவு எளிமையாகத் தமிழ் வசனநூல்கள் எழுதினர். பொது மக்கள் பேச்சை ஆங்காங்குத் தழுவிக்கொண்டவராயினும், இவர்கள் தமிழ் உரையாசிரியர் நடையை முன் மாதிரியாகக்கொண்டே பெரும்பாலும் எழுதினர். இதனால், நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெரிதும் வற்புறுத்திக் கூறிய கிறிஸ்துவக் கொள்கைகளை எழுதிய போதும், இவர்களின் நடையில் உணர்ச்சிப் பெருக்கைக் காணமுடியாதுள்ளது. கடின உரைநடை அமைப்பு, உருகும் உள்ளங்களையும் உறைய வைத்தது போலும். ஆயினும் கல்வியறிவில்லாதாரும் கேட்டின்புறும் வண்ணம் வீரமா முனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு கதை’ நகைச்சுவை நிறைந்து காணப்படுகின்றது. அந்த வகையில், அறவியல் சார்ந்த நூல்களும் பயபக்தியுடன் கூடிய நூல்களுமே
எழுதப்பட்ட காலகட்டத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க அவைக்கும் வேடிக்கைக் கதையொன்றை எழுதித் தமிழ் வசனத்தின் தோக்கெல்லையை விரிவுபடுத்திய இத்தாலிய முனிவர் நவீன நகைச்சுவை எழுத்தாளரின் முன்னோடி என்று கூறலாம்..

கைலாசபதியின் இக்கூற்றில் வரும் “தமிழ் வசனத்தின் நோக்கெல்லையை விரிவுபடுத்திய” என்ற தொடர் மிகவும் ஆழ்ந்து நோக்கவேண்டிய தொடராகும். இலக்கிய இலக்கணங் களையும் கூறவும் மட்டுமே வீரமாமுனிவருக்கு முன் தமிழ் உரைநடை பயன்பட்டு வந்தது; இந்நிலையை வீரமாமுனிவர் முதன் முதலாக மாற்றி. வேடிக்கைக் கதையொன்றினை எழுதித் தமிழ் உரைநடையில் கதை எழுதும் பணியினைத் துவக்கி வைத்துள்ளார். இக்கதையினை வீரமாமுனிவர் எழுதுவதற்கான காரணம் எது என்பதனைக் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

“18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் அக்காலத் திலிருந்த மடாதிபதிகளின் இழிநிலையை எடுத்துக்காட்டும் வகையில் பரமார்த்த குரு கதை என்னும் அங்கத நூலை எழுதினார். மூளையற்ற அக்குருவும் அவர் சீடர்களும் செய்யும் நகைப்பிற்கிடமான காரியங்களைச் சம்பவம் சம்பவமாக எழுதினார்.” என்று தாமஸ் சீனிவாசன் குறிப்பிடுவார். புராட்டஸ்டண்டு சபையினரின் நான்கு பிரிவினரையும் கேலி செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக தெ.பொ.மீ (1965:175) குறிப்பிடுவார்.
இதற்குப் பரமார்த்த குரு கதையில் நேரடியாகச் சான்று எதுவுமில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் விவிலியத்தில் இருந்து ஆதாரம் கேட்பதாக புராட்டஸ்டண்டு பிரிவினர் மீது குற்றம்சாட்டி அவர்களின் அவ்வியல்பினை பரமார்த்த குருவின் சீடர்களின் செயலோடு ஒப்பிட்டு “வேத விளக்கம் என்ற நூலில் வீரமாமுனிவர் இவ்வாறு எழுதுகின்றார்:

“இப்படியாகியும் பதிதர்… நாஞ்சொல்லுவதற்கெல்லா மீது வேதத்தில் எழுதினதாகக் காட்டுங்கள் என்றும். எழுதாததைச் செய்யோமென்றுந்… திரிகிறார்கள். அப்படிக் கள்ளக் குருவாகிய லூத்தோசிஷரான பதிதர் இதிலே பரமார்த்த குருவின் சீஷரேயானார்கள். அதெப்படியென்றால் இந்நாட்டில் வழங்கும் கதையின்படியே ஒரு கண் குருடும், ஒரு கால் நொண்டியும், வாலுமின்றிக் காதுமின்றித் தவ உருபமாய் வற்றியதோர் குதிரை மேலே பரமார்த்தகுரு வழிப் பாதையிற் போகையிலே கீழே தொங்கின மரக்கொம்பு பட்டுத் தலைப்பாகு பிறகே விழுந்ததாம். அதனைச் சீடர்கள் எடுத்தார்கள் என்றெண்ணிச் சற்றப்பால் நடந்தபின் அதெங்கேயென்று குரு கேட்டானாம். அதற்கவர்கள் தலைப்பாகு அங்கே விழுந்து கிடக்கும் என்றதற்கு அவன் கோபித்து, விழுந்ததெல்லாம் எடுக்கத் தேவையில்லையோ என்றான். அதைக் கேட்ட சீஷர் ஓடிப்போய் விழுந்த பாகையை எடுத்துக்கொண்டு வருகையில் அந்திராத்திரி பசும் பயிரில் மேய்ந்த குதிரை கழிந்து விடா நின்ற லத்தியிந் தலைப்பாகையில் ஏந்தியெடுத்துக் குருவின் கையில் வைத்தார்கள்(ஆ. சிவசுப்பிரமணியன், கிறிஸ்தவமும் தமிழ்ச் சூழலும்; 2014, பக். 85,86). இலக்கியத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் தன்மையில் அவருடைய பரமாத்மா குரு கதை அமைந்திருந்தது.
“ஒரு விடயத்தில் தமிழ், இந்தியாவின் மற்றைய சுதேச மொழிகளிலும் பார்க்க மேன்மையொன்றினையுடையதாக வுள்ளது மிகத்தொகையான கிறிஸ்தவ இலக்கியம் இம்மொழியிலேயுள்ளது. மற்றெந்தச் சுதேச மொழியினைப் பேசுபவர்களிலும் பார்க்கத் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாயிருந்ததால், அந்த [தமிழில்] எழுதப்பெற்றுள்ள [கிறிஸ்தவ] நூல்கள், மற்றைய மொழிகளிலுள்ள கிறிஸ்தவ நூல்களின் விகிதப்படி பார்க்கும் பொழுது அதிக தொகையினவாகவேயுள்ளன.”மீறோன் வின்ஸ்லோ – தமிழ் ஆங்கில அகராதியின் முன்னுரையிலிருந்து (1862).

கிறித்தவத் தமிழ்ப் பங்களிப்பு பற்றிப் பேசும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கிறித்தவத்தின் இரு பெரும் கிளைகளான றோமன் கத்தோலிக்கப் பிரிவும் கத்தோலிக்கம் அல்லாத கிறித்தவமும் தமிழ்நாட்டிற் பரவிய முறைமையினையும், அதன் காரணமாகத் தமிழ் இலக்கியப் பங்களிப்பிற் பெறும் (ஒன்றுக்கொன்று சிறிது வேறு பாடான இடத்தினையும் தெளிவுபடுத்துவதில்லை. கிறித்தவர்கள் தமிழுக்காற்றிய “தொண்டு” எனக் கூறிக் கிறித்தவர்களை மானசீகமாகத் “தமிழிலிருந்து ஒதுக்கிவைக்க விரும்பியோரும், கிறித்தவர்கள் பங்களிப்பினையும் மேனாட்டர்” பங்களிப்பினையும் எவ்வாறு பிரித்து நோக்குவது எனத் தயங்கினோருமெனப் பலர் இக்களத்திலே நடமாடியுள்ளனர் தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழிலேயுள்ள இலக்கியங்களின் காலவரன்முறை நெறிப்பட்ட வரலாறே எனக் கொண்டதனாலேயே இக்குழப்பம் ஏற்பட்டது (கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 2010, பக். 21) ரோமன் கத்தோலிக்கர்கள் செய்த பணியை பிரித்து அறிய வேண்டிய தேவை உள்ளது என்று கா. சிவத்தம்பி கூறுகிறார். மேலும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி அளப்பரியது என்றும் பதிவு செய்துள்ளார்.

கித்தேரியம்மாள் அம்மானை-கித்தேரி வரலாறு
வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரியம்மாள் அம்மானையில் கண்டுள்ளபடி, புனித கித்தேரி லுசித்தானியா நாட்டில் பிராகம் நகரில் காயன் என்ற மன்னனுக்கு மகளாக எட்டுத் தங்கைமாரோடு ஒரே சுரத்தில் கி.பி.120இல் பிறந்தாள். மன்னவனாலும், பிறராலும் என்ன பழி வருமோ என்று ஒன்பது பெண்களைப் பெற்ற தாய் அஞ்சி, சீலதி என்ற பாங்கியை மறைவாக அழைத்துக் குழந்தைகள் அனைத்தையும் எவரும் அறியாதபடி ஓடும்நீரில் எறியும்படி கட்டளையிட்டாள். கீழ்ப்படிவது போலக் காட்டிய சீலதி, அக்குழந்தைகளை ஏற்று, அவ்வூர் மேற்றிராணியாரிடம் ஒப்படைத்துக் கத்தோலிக்கத் திருமறையில் வளர்க்கும்படி வேண்டினாள். குழந்தைகளும் அவ்வாறே வளர்ந்து வந்தன. அக்குழந்தைகளின்பெயர்கள் வருமாறு: கித்தேரி, பாசீலி, செனேவுரி, வித்தோரி, எப்பேமி, வீரவி, பிறாத்தை, செருமானி, மாரீனை. மார்சியாள் என்பனவாம். இறைபத்தியில் வளர்ந்த அக்குழந்தைகள், தம் பிறப்பின் வரலாற்றை முனிவர் ஒருவரால் அறிந்தபின், அம்முனிவர் அறிவுரைப்படி துறவு வாழ்க்கை மேற்கொண்டனர்.

இவர்களது பெருமையும் சிறப்பும், அஞ்ஞான மதம் மேற்கொண்டவனும் கிறிஸ்துவ மத எதிரியுமான காயன் காதில் விழ, தன் ஆணைக்கு மாறாகக் கிறிஸ்துவ மதம் தழுவிய அக்கன்னியரைக் கொணர்ந்து, அந்த வேதத்தைக் கைவிடுமாறு பணித்தான். சிறுமியர் மறுத்தது மட்டுமன்று; கிறிஸ்து மதத்தின் பெருமையைப் பல சான்றுகளால் நிலைநாட்டினர். அச்செயலில் கித்தேரி சிறந்து விளங்கினாள். அவர்களது அறிவையும் அஞ்சாமையையும் கண்டு வியந்த மன்னன், அவர்கள் யார் என்று வினவியபோது, தன் மக்கள் என்று வியப்போடு கண்டு மகிழ்ந்து. தன் அரண்மனையில் வாழும்படி செய்தான். சில நாள்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் தன்மதம் ஏற்கவேண்டுமென அரசன் வற்புறுத்தினான். உடன்படாத நிலையில், அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். சிறைவாழ்க்கையைக் கண்டு அஞ்சாது கடவுளை வாழ்த்தி வரும்போது, வானதூதர் சிலர் வந்து அவர்களை விடுவித்தபின், அவர்களைத் தனித்தனியாய்ப் பிரித்துப் பல் வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் அவர்களைக் காணவில்லை. மன்னன் பல இடங்களுக்கு ஆளனுப்பித் தேடுகையில் கித்தேரி மட்டும் அகப்பட்டாள். ஒருத்தியாவது கிடைத்தாள் என்ற நிலையில் கித்தேரிமீது தனியன்பு காட்டினான். கித்தேரியும் அரண்மனையில் வாழ்ந்து வந்தாள். எனினும் அவளுக்குத் தெரியாமல் திருமணம் பேசி, அதற்கு இசைய முப்பது பாங்கியரை அவளிடம் அனுப்ப, அனைவரும் தோல்வியுற்றனர். இதனால் கோபமுற்ற மன்னன் கித்தேரியை மீண்டும் சிறையில் அடைத்தான்.
அங்கே மரியன்னையைப் பார்த்து நெஞ்சுருகத் தன்னையும் தன் கற்பையும் கண்காணிக்குமாறு வேண்ட, மரியாளும் அவள்முன் தோன்றிப் பல தேவ அணிகலன்களால் அவளை அலங்கரித்துப் பொம்பேர் மலை செல்லுமாறும், அங்கு அவள் வெற்றி வாகை சூடி வீடுபேறு அடைவாள் என்றும் உறுதிமொழி கூறியபோது, வானவர்கள் அவளையும் முப்பது தோழிமாரையும் பொம்பேர் மலையில் கொண்டு சேர்த்தனர். அங்கிருந்த கோயிலில் ஆண்டவனை வழிபட்டு அருந்தவ வாழ்க்கை மேற்கொண்டனர். காயனுக்குத் தெரியாவிட்டாலும், கித்தேரியின் துறவறச் சிறப்பு எங்கும் பரவ, பலர் அவளைக் காண வந்தனர். அவர்கள் வழியாய்ப் பக்கத்திலுள்ள புரோசன் என்ற சிற்றரசன், காயனுக்கஞ்சிக் கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு அஞ்ஞானியானதைக் கேள்விப்பட்டுமனம் வருந்தினாள். இறைவனை மன்றாடியபின் அவன் அலை சென்று. கிறிஸ்தவ மதப் பெருமையை நன்கு எடுத்தோதியபோது மறுப்புக் கூறமுடியாத புரோசன் கித்தேரியைச் சிறையில் அடைத்த இவ்வாறு கித்தேரி மூன்றாம் முறை சிறையுண்டாள். எனினும் ஒருவன் அவளை விடுவித்துப் பொம்பேர் மலை சேர்ப்பித்தான் மறுநாள் அவளைச் சிறையில் காணாது கோபமுற்ற புரோசன், படைகள் சூழ அம்மலை ஏறி வருகையில், கை கால் விளங்காமல் பார்வையி தரையில் விழுந்தான். அவனை ஏவலர் மலையுச்சிக்குச் சுமந்து செல்ல அவனும் அழுது மனந்திரும்பி, இழந்த கை கால் கண்களைப் பெற்று திருமறையை மீண்டும் தழுவி, கித்தேரி விருப்பப்படி நாட்டை நல்லமுறையில் ஆண்டு வந்தான். மேலும் கித்தேரி சாகும் நாளில் தானும் செத்து வீடுபேறு அடைவான் என்ற முன்னுறுதியும் பெற்றான்.

நிற்க. புரோசனின் மதம் மாறுதலும் அதன் காரணமும் காடன் செவியில் பட்டன. கோபமுற்ற மன்னன் புரோசனைக் கொல்ல உடனே போர்வீரரை அனுப்பினான். மேலும் கித்தேரி தன் மகளானாலும், அவன் இருக்கும்வரை அமைதி இராது என்று எண்ணி அவளுக்கு மாப்பிள்ளையாய்த் தேர்ந்தெடுத்த பரிபாலனையே அனுப்பி, அவளையும் வெட்டுமாறு கட்டளையிட்டான். அவனும் மனமகிழ்ந்து திரளான சேனையோடு பொம்பேர் மலையை வளைத்தான். இஃதறிந்த கித்தேரி மலையிலிருந்து இறங்கித் தன் தோழியரோடு அவனை நோக்கிச் சென்றாள். பரிபாலன் கல்நெஞ்சோடு கித்தேரியைப் பிடித்து அவளது தலையை வெட்டினான். அதேபோல் தோழியரும் வெட்டுண்டனர். வெட்டுண்டாலும் கித்தேரி தன் தலையைக் கையிலேந்திக் கொண்டு மலையுச்சி சென்று, கோயிலின் முன் காணிக்கையாக வைத்த பின்னரே உயிர் நீத்தாள். அன்று கி.பி.130 வைகாசி (மே) 21-ஆம் நாள். இதைக் கண்ட கொலைஞன் பரிபாலன் மனந்திரும்பி மதம் மாறினாள். கித்தே செத்தபோது, வானம் இருண்டு இடியோடு பெருமழை கொட்டட படைவீரர் யாவரும் ஓடினாலும் பயனின்றி அவ்விடத்திலேயே அவலமாய்ச் செத்து மாண்டனர். வானவன் ஒருவன் தந்த ஆணைப்படி துறவி ஒருவர் கித்தேரியின் உடலை எடுத்து மலைமீது அடக்கம் செய்தார்
விண்ணுலகம் சென்ற கித்தேரி தன் தங்கையரை மறக்காது அவர்களுக்காக இறைவனை வேண்ட, அவர்களும் பல நாடுகளில் திருமறைக்காகத் தொண்டு புரிந்து வானுலகம் சென்றனர். மேலும் அவளது வேண்டுதலால் அவள்தன் பெற்றோரும், பிறந்த போர்த்துக்க நாடும் மனந்திரும்புவர் என்றும், நாட்டினர் பல சென்று திருமறையைப் பரப்புவர் என்றும், அவளது நாட்டை ஐந்தாம் ஜான் ஆளும்போது மக்கள் எல்லாம் அவளைப் புகழப் பல அற்புதங்களால் பொம்பேர் மையில் ஆய்வாளர் என்றும் இறைவன் அவளுக்கு உறுதியளித்தார். (முனைவர் எம்.ஏ. சவேரியார், மேலைநாட்டறிஞர்களின் தமிழ்த் தொண்டு; 2014, பக். 124, 125). இப்படி சித்திரை அம்மாள் அம்மானை நூலில் வீரமாமுனிவர் பதிவு செய்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கத்தரி அம்மாள் வீரமாமுனிவரின் ஆகச்சிறந்த படைப்பு. அது கிருத்துவர்களின் நம்பிக்கை கூறிய பெரும் படைப்பாகும். அதனால்தான் அருட்தந்தை ஆனந்த் அமலதாஸ் சே.ச. அவர்கள் மறு பதிப்பு கொண்டு வந்துள்ளார். ஏன் இந்த மறு பதிப்பு என்கின்ற கேள்வியை முன்வைத்து அதற்கு அவர் தரும் பதில் பின்வருமாறு வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் கொடுக்கும் நூல். இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல், இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள்.

இரண்டாவது, இந்நூல் முதன் முறையாக இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. அதுவும் அதிக அளவிலான அடிக்குறிப்புகளுடன் அங்கு காணும் நுணுக்கமான வரலாற்றுத் தரவுகளைச் சுட்டிக்காட்டி உள்ளது.
மூன்றாவது, இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் பெண்ணியச் சிந்தனைக்கு நம்மை ஈர்க்கும் நூலாகவும் இது அமைகிறது. கித்தேரி குழந்தைப் பருவத்தில் அநுபவித்த அவலநிலை, பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, மற்றவர் கருணையில் வளர்ந்து, சமயம் கொடுத்த நம்பிக்கையில் திடம் பெற்று; இவ்வுலகச் செல்வாக்குச் சிறப்புகளை இறைவனிடம் தஞ்சம் புகுந்ததாக அமைந்த கதை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைக்கும் நூல். அதனால் இத்நூல் மிக முக்கியம் பெறுகிறது.அதுவும் தமிழ்ப் பண்பாடு முன்வைக்கும் பெண்னிலி பின்னணியில் பார்க்க வேண்டிய நூல். ‘உண்டி கொடுத்தோர்கலி கொடுத்தோர்’ என்று செயல்பட்ட மணிமேகலை. நீதிக்கா போராடி மதுரை மன்னனைத் தெறிக்க வைத்த கண்ணல், ‘லத்திய, செல்லினும் அத்திசை சோறே’ என்று தன்மானம் க அவ்வையார், பக்தியால் பரமனிடம் தஞ்சம் புகுந்த ஆண்டான். இந்த அம்சங்கள் அனைத்தையும் தன்னில் இணைத்த ஒரு வரலாற்றுப் பெண் கித்தேரி.அதனால் இந்நூலை இந்தப் பார்வையில் வெளிக் கொணர்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர். கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார்.

தமிழை தனது முப்பதாவது வயதில் விரும்பி கற்கத் தொடங்கிய வீரமாமுனிவர் தன்னுடைய 67 வது வயதில் இறை பேரருளை அடைவதற்காக சென்றுவிட்டார். கடைசி 37 ஆண்டுகள் இத்தமிழ் சமூகத்திற்கு அவர் செய்த பெருங் கொடை வரலாற்றின் பேரோட்டில் பதிவாகி இருக்கிறது. சமயத்தை பரப்ப வந்த போதகராக வந்தவர் தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை தமிழை தாய் மொழியைப் போல சுவாசித்தவர்.

இலக்கியத்தின் அனைத்து உள்ளடக்கங்களில் தன் ஆழமான பதிவை அழுந்த பதிவு செய்திருக்கிறார். இலக்கியப் பேரேட்டிலும், வரலாற்று நெடுங் கணக்கிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தன் பிறப்பை அர்த்தமுடையதாக மாற்றிய பெருமை கான்ஸ்டன்ட் ஜோசப் பெஸ்கிக்கு உண்டு.

– பேரா. எ. பாவலன்