Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
1)
ஒடித்த பறவை இறகு
இதமாய் இறங்குகிறது
காதுகளில்
2)
இரட்டை விரல்களின் நடுவே
சிம்மாசனம் போட்டது
சிகரெட்
3)
உலுக்கிய கைகளில்
முத்தமிட்டு அமர்ந்தன
சரக்கொன்றை மலர்கள்
4)
அழுத்தியதும் வெடித்தது
ஏழைகளின் பட்டாசு
எருக்கம்மொட்டு
5)
வரிகள் இருந்தும்
கவிதை இல்லை
உதடுகள்.
