நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி




நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
விலை : ரூ. 140/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றவருமான நமது அருமைத்தோழர் சா.சுப்பாராவ் அவர்கள் தன்னுடைய மகளும், மருமகனும் வேலை காரணமாக ஓராண்டு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் பொழுது, நமது எழுத்தாளருக்கு வெளிநாடு செல்ல அழைப்பு வந்து புறப்பட்டுச் சென்றார். அப்படி அவர் சென்ற பொழுது ரோட்டர்டாமில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை கண்டுணர்ந்தார். அவர் பார்த்தது மட்டுமல்லாமல் நம்மிடமும் பகிர்ந்தும் கொள்கிறார். ஆஹா என்ன அற்புதமான பயண அனுபவம்!

35 ஆண்டு காலமாக ஆங்கில புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பாவை, அது எந்த முக்கியமான நகரமாக இருந்தாலும் அதை களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவர் மனதில் வந்து போனதாக நம்மிடையே பகிர்கிறார். அவர் பார்த்த சில இடங்களைப் பற்றி உங்களோடு…

ஐரோப்பாவில் தன் மகள் வாழும் நெதர்லாந்து ரோட்டர்டாமில் ஆசிரியர் தன் பயணத்தை தொடங்குகிறார். மக்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படை இரண்டு மணி நேரத்தில் 86 ஆயிரம் மக்களை கொன்றொழித்த கொடுமையான வரலாற்றை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்நகரம் மீண்டும் புத்துணர்ச்சியோடு நிர்மாணிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ‘கியூப் வீடு’ என்று யூட்யூபில் பதிந்தால் அருமையான வீடுகளை நாம் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் அங்க மருந்து கடைகளே இல்லையாம்! மருத்துவமனை கூட அரசு மருத்துவமனை மட்டுமே. நம்ம ஊர்ல தலைவலிக்கு, காய்ச்சலுக்கு என ஓடிப்போய் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் அங்கே கிடையாதுங்க. எதுக்கெடுத்தாலும் அங்கு ஆஸ்பத்திரிக்கு ஓடற நிலைமையும் இல்லை. சளி, ஜலதோஷம் அப்படின்னு மருத்துவமனைக்கு போனா ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சரியாயிடும் போயிட்டு வாங்க’ என்று மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்களாம். இன்னும் நிறைய இருக்குங்க. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கிற கிண்டர்டையக். அப்பப்பா நிறைய இருக்கு. இதையெல்லாம் எழுதி முடிக்க நான் ஒரு புத்தகம் தனியாக போடணும் போல.

அடுத்ததாக வான்கோ வாழ்ந்து துன்புற்ற இடமான ஹேக் அதாங்க சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் ஆசிரியர் செல்கிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை. அருமையான அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கேயும் ஒரு மரம். நம்ம கந்தசாமி படத்தில் வருவது போல துண்டு சீட்டுகள் அட்டைகள் தொங்குகின்றன. நம்ம ஆசிரியரும் ‘உலகினை அழித்துவிடும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என்றும் வேண்டும் சமாதானம்’ எழுதி மரத்தில் கட்டி வைத்தார். அந்த மரத்தில் தமிழில் எழுதிய ஒரே ஒருத்தர் அவர் நம்ம தோழராத்தான் இருக்கும். அடுத்ததாக உலகை வலம் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆம் காரல் மார்க்ஸ் பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவர் வந்து சேர்ந்த இடம் தான் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸலஸ். ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! என்று எழுதிய மாமேதையின் இடத்தை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சசுவான் ரெஸ்டாரண்ட் இடம் இப்போது ஒரு தனியார் உணவு விடுதியாக மாற்றப்பட்டதால் அங்கே மார்க்ஸ் இருந்த அடையாளமாய் அன்னப்பறவை சிலையைக் கண்டு ஆனந்தமாகி அந்த விடுதியின் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மக்களின் வரலாற்றை யாரேனும் ஒருவர் புதுப்பிப்பார் என்கிற உணர்வு ஏற்பட்டது தோழர்களே. இப்படியாக வான்கோ மற்றும் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை சலிப்பில்லாமல் மிகவும் அருமையாக தரவுகளை வாரி வழங்கியபடியே பயணம் செய்கிறார். வான்கோவின் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய வாழ்வும் மிகவும் துயரம் நிறைந்தது. தன்னுடைய சகோதரன் அனுப்பும் தொகை மட்டுமே வான்கோவுக்கு உயிர்நாடி. அப்படி துன்பப்பட்டவர்தான் உலக அதிசயங்களை அள்ளி வழங்கினார்.

அடுத்ததாக பாரிசுக்கு பயணம் செய்கிறார். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அந்த நகரத்தை பற்றிய ஒரு நூலை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார். அப்படித்தான் ஈபிள் டவருக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போரில் ‘பாரிஸ் என்னும் நகரமே இருக்கக்கூடாது அதை அழித்து விடு’ என்று ஹிட்லர் கூறியபோது, கோல்டிஸ்ட் அப்படி செய்யாமல் விட்டு விடுகிறார் என்கிற செய்தி வியப்பைத் தருகிறது.

கோபுரத்தின் உச்சிக்கு கூட உணவு பொருள் எடுத்து செல்லலாம் என்பது வியப்பை தருகிறது. நம்மூர்ல இதெல்லாம் எப்போது சாத்தியமோ. நாஜிக்களிடமிருந்து பாரிஸை காப்பாற்றுவதற்காக 18 முதல் 50 வயது வரையிலான அத்தனை பேரும் நாட்டர்டாம் தேவாலயம் முன்பு கூடி போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றிய காட்சியை லாரி காலின்ஸூம், டொமினிக் லாப்பியரும் அவ்வளவு நுணுக்கமாக விவரித்த விஷயத்தை நம் ஆசிரியர் மிக அழகாக குறிப்பிடுகிறார்.

அடுத்து லூவர் அருங்காட்சியகத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த ஒரு நாவல் டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ மோனலிசா பற்றிய நூல். என்ன ஒரு எழுத்தாளர் எப்படித்தான் இதெல்லாம் படிச்சிருக்காரோ தெரியல. அப்பப்பா அருங்காட்சியகத்தை பாக்கணும்னா பயங்கர பிரம்மாண்டம்! மூன்று ஈபில் டவர் கோபுரங்கள் ஒன்றாக படுக்க வைத்திருக்கும் அளவு தூரம் 46,000 கலைப் பொக்கிஷம். மோனலிசா பற்றிய செய்திகள் நிறைய தெரிஞ்சிக்கலாம். மோனலிசா ஓவியம் ஆயிரத்து பதினொன்றில் திருடு போய் இருக்கு. அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்கு, அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்காங்க. இரண்டாம் உலகப் போரின் போது அந்த மோனலிசா ஓவியத்தை காப்பாற்றுவதற்கு பல திட்டம் போட்டிருக்கிறார்கள். 10 லட்சம் மணல் மூட்டை கட்டி காப்பாற்றியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. டான் பிரவுன் ஓவியங்கள் அனைத்தும் 95 லாரிகளில் வெளியூருக்கு அனுப்பி இருக்கிறார்கள். மோனலிசா மட்டும் அங்கேயே தனியே ஒரு ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். 1939 லிருந்து 1945 வரைக்கும் லூவர் அருங்காட்சியகத்தில் காப்பாற்றுவதற்கு அவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள்.

அவர் போன இடத்தை எல்லாத்தையும் குறிப்பிடலாம் என்றால் அவர் மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கண்டிப்பா யாரும் படிக்க மாட்டீங்க. அதனால அவர் எழுதிய இந்நூலில் முழுவதும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் நெதர்லாந்து ‘ஆஸ்ட்விட்ச் சர்வைவல் இன் ஆப் சுவிட்ச்’ என்கிற கொடுமையை பற்றிய எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது கண்கலங்காமல் யாராலும் படிக்க முடியாது. முகாமில் காலையில் ஆட்களைக் எண்ணுவார்கள். ஒருவர் குறைந்தால் கூட பத்து பேரை சுட்டுக் கொள்வார்கள். முகாமில் கைதிகளே யாராவது தப்பித்து போனாலும் மற்றவர்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். கொடுமைகள் ஏராளம். சாகப்போகிற ஒருவர் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்ள வேண்டும். குழி வெட்டிய பின்பு குழியின் மூளையில் நிற்க வேண்டும். நாஜி துப்பாக்கியால் சுடுவான் அப்படியே குழிக்குள் விழ வேண்டும் தள்ளுவதற்கு வேலை மிச்சமாம்.
பசிக்கு சூப்பு கொடுப்பானுங்க. அத குடிச்ச பின்னாடி தெரியும் அது இறந்தவர்களுடைய உறுப்புதான் அதில் கிடக்கிறது என்று. குடித்தவர்கள் அப்படியே வாந்தி எடுப்பார்கள். எவ்வளவு கொடுமையான நாஜிக்கள். சோவியத் வீரர்கள் வந்து காப்பாற்றும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளையும் நூல்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.

இறுதியாக ஆம்ஸ்டர்டாம் செல்கிறார் ஆசிரியர். ‘ஆசிரியர் குடும்பத்தோட வா செல்கிறார்?’ என்று கேலியாக பேச்சு வரும். ஏனெனில் அங்கு இரவு விடுதி புகழ் பெற்றது. ஆனால் நமது ஆசிரியரோ பார்க்கச் சென்றது வேறு ஒன்றை. ஆம் வான்கோ, ஆன் பிராங்க் நடந்த, உலாவிய ஆம்ஸ்டர்டாம் வீதியில் தான் பேராசிரியரும் நடந்தார். மிகப்பெரிய அருங்காட்சியகம்! அப்பப்பா மிகவும் பிரமிப்பான அருங்காட்சியகம்! வான்கோவினுடைய கையெழுத்து கடிதத்தைக் கண்ட ஆசிரியர் மொழி தெரியாவிட்டாலும் கண்கலங்கினார். ஆன் ஃபிராங்க் குடும்பம் நாஜி படையினரிடம் இருந்து தப்பிக்க தன் அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு புத்தக அலமாரிக்கு பின்புறம் ரகசியமாக சிறு வீடு கட்டி மறைவாக வாழ்ந்து வந்தனர். சிலரின் நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாகினர். ஆன் பிராங்க் சிறையில் கொடும் நோயில் இறந்துவிட, அவர் தந்தையார் மட்டும் பிழைக்க பிறகு ஆன் அவர்கள் இளம் வயதில் நாஜி கொடுமைகளை தனது டைரியில் எழுதி வைத்த குறிப்புகளை கொண்டு அவற்றை நூலாக வெளியிட்டார். சிறிய வயதில் மிகவும் அபாரமான திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் ஆன். அப்படி அவர்கள் வாழ்ந்த இந்த மறைவான இடம் தான் தற்போது அருங்காட்சியமாக உள்ளது. பார்வையிட வருபவர்கள் அந்த அலமாரியை விலக்கி உள்ளே சென்று பார்ப்பது போன்று பழைய நடைமுறையில் இன்னும் இருப்பது சிறப்பு.

அப்பப்பா ஆசிரியரின் வாசிப்பு எவ்வளவு தூரம் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆனால் மனிதராகப் பிறந்தவர்கள் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல் ஊர்சுற்றிப் புராணமாக நாம் உலகை வலம் வர வேண்டும். நிறைய பொக்கிஷங்களை கொண்டுள்ள பூமியின் ஓவியத்தைக் கண்டு உணர்வதற்காக அவசியம் உலகை வலம் வர வேண்டும். அதற்கு வாசிப்பு மிக மிக அவசியம். அப்படி உலகை வாசித்து நமக்கு அளித்த எழுத்தாளர் தோழர் சா. சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

நான் உங்களிடம் சொன்னது தம்மாத்தூண்டு. ஆனால் அறிய தகவல் களஞ்சியங்கள், புகைப்படக் காட்சிகள் இந்நூலில் நிறைய கொட்டிக்கிறது!
வாசியுங்கள் தோழர்களே!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

’மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்’ கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

’மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்’ கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாஜக பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தான்ய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட வலியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது.

எனினும், இவர்கள் பட்டியலிட்டுள்ள சாதனைகளில் காணப்படாதிருப்பது என்னவென்றால், மோடி அரசாங்கம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles) குறிப்பிட்டுள்ள சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அது என்ன செய்தது என்பதேயாகும்.

இது வேண்டுமென்றேதான் விடுபட்டிருக்கிறது. ஏனெனில் மோடி அரசாங்கமானது கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசமைப்புச்சட்டத்திற்கும் அளப்பரிய அளவில் தீங்கினை ஏற்படுத்தி இருக்கிறது.

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாடாளுமன்றத்தை மதிப்பிழக்கச் செய்திடும் வேலையும், நாடாளுமன்ற நடைமுறைகளை இழிவுபடுத்திடும் வேலையும் மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்றபின்பு உக்கிரமடைந்துள்ளது. நாடாளுமன்றம் சென்ற ஆண்டில் நாற்பது நாட்களுக்கும் குறைவாகவே நடந்திருக்கிறது. கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளின் மீது போதிய அளவிற்கு விவாதங்கள் நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் நுண்ணாய்வுக்கு அனுப்பும் நடைமுறையே அநேகமாக ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தின் மக்களவை 60 முதல் 70 விழுக்காடு சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பி இருந்தது. அது மோடியின் முதல் முறை ஆட்சிக்காலத்தின்போது 27 விழுக்காடாகவும், இரண்டாவது முறை ஆட்சிக் காலத்தின்போது வெறும் 13 விழுக்காடாகவும் வீழ்ந்தது. இத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரச்சனைகளை எழுப்புவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும், சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படுகையில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளன. மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்களும் அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்ட வழிமுறையே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

நாடாளுமன்றத்தின் நடைமுறை சுருக்கப்படுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் நெறிக்கப்படுவதும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையையே அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது, நாளுக்குநாள் அது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஓர் அமைப்பாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரங்கள் விநியோகம், லஞ்ச ஊழலை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. இதன் வழியாக ஆளும் கட்சிக்கு நிதி திரட்டுவது என்பது உத்தரவாதப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பு வாசல்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தாலும், அமலாக்கத் துறையினராலும், வருமான வரித் துறையினராலும் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சுகாதார அமைச்சரும், மகாராஷ்ட்ர மாநில தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கேபினட் அமைச்சரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். டஜன் கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றப் புலனாய்வுக் கழகத்தினராலும், அமலாக்கத் துறையினராலும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு நாணமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையினரால் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது.

அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுப்பது என்பதும், குடிமை உரிமைகளை நசுக்குவது என்பது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசத் துரோகக் குற்றப்பிரிவு போன்ற கொடுங்கோன்மை சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கின்றன. 2014க்கும் 2020க்கும் இடையே, ஏழு ஆண்டுகளில், சுமார் 690 வழக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 10,552 பேர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில், அரசியல் செயற்பாட்டாளர்கள், குடிமை உரிமைகள் வழக்கறிஞர்கள், இதழாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் அடங்குவர். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ என்னும் தேசத் துரோகக் குற்றப்பிரிவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களுக்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. 2014லிருந்த 2021 வரையிலும் தேசத் துரோகக் குற்றப் பிரிவின்கீழ் 450க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுத்திட, மிரட்டல் உருட்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதழாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதுடன், சில ஊடகங்களின் உடைமையாளர்கள் பொருளாதாரக் குற்றங்களுக்காகக் குறிவைக்கப்பட்டு, அது தொடர்புடைய ஏஜன்சிகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறி இருக்கின்றன.

மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட எதேச்சாதிகார நடைமுறையானது ஜனநாயக அமைப்புமுறையின் கூட்டாட்சி அம்சத்தையே காலில் போட்டு மிதித்திருக்கிறது. மாநிலப் பட்டியலிலும், பொதுப்பட்டியலிலும் (concurrent list) உள்ள பல துறைகளில் மாநிலங்களுக்கு இருந்து வந்த உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் ஒன்றிய ஆட்சியின் கருவிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாநில அரசாங்கங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சில சமயங்களில் மாநில அரசாங்கங்களின் வேலைகளில் குறுக்கிடுகிறார்கள்.

ஜனநாயகத்திற்குப் பதிலாக இவர்கள் மாற்ற விரும்புவது, பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். நாடாளுமன்றத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, மத மாற்றத் தடைச்சட்டம், கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை போன்ற சட்டங்களை சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்துமே சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதைக் குறியாகக் கொண்டவைகளாகும். இத்தகைய சட்டங்கள் இந்துத்துவா அமைப்பினர்களால் சிறுபான்மையினத்தவர் மீது குரூரமானமுறையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கெல்லாம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளித்து வருகின்றன.

இவை அனைத்தும் எதேச்சாதிகார ஆட்சியை ஒருமுகப்படுத்தும் அடையாளங்களாகும். ஆயினும் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் முன்னணி செய்தித்தாள்களோ இவற்றை முழுமையாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகின்றன. இந்தியாவை, இந்துத்துவா எதேச்சாதிகார அரசாக மாற்ற நடந்துகொண்டிருக்கும் எதார்த்த உண்மைகளை மிகவும் கவனத்துடன் மூடிமறைக்கின்றன.

பாஜக அரசாங்கத்தின் எட்டு ஆண்டு கால ஆட்சியின் மையமான உண்மை என்பது, இந்தியாவை, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின்படி மாற்றியமைக்க இடைவிடாது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதேயாகும். இதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இதுவரை இருந்துவந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு, நீதித்துறையின் பங்களிப்பு, நிர்வாக அமைப்பு மற்றும் ஊடகங்கள் தங்களின் நயவஞ்சகமான எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரக் கொள்கையின் அனைத்து வரம்புகளும், இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின்கீழ் ஏதேனும் படிப்பினையைப் பெற்றிருக்கிறோம் என்றால் அது நாட்டின் ஜனநாயகமும் அடிப்படைப் பொருளாதார, சமூக மற்றும் குடிமக்களின் குடியுரிமைகளும் ஆள்வோரால் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன என்பதேயாகும்.

– தமிழில்: ச.வீரமணி

(ஜூன் 1, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின்  சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்



நூல்: சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர்: ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 140
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பயணம் என்ன செய்யும் மாற்றத்தை நம்முள் நிகழ்த்தும். நேற்று தான் தோழர். சுப்பாராவ் எழுதிய ” சில இடங்களும் சில புத்தகங்கள் ” என்ற நூலை படித்து முடித்தேன். சிறு வயது முதலே ஐரோப்பிய நாடுகள் மீது ஓரு அதீத ஈர்ப்பு. அதற்கு காரணம் ஐரோப்பியர்கள் கலை,இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றிய வர்கள் என்பதாலோ என்னவோ. எங்கள் உறவினர்களில் சிலர் பிரான்ஸ் இருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது எல்லாம் ஓரு முறை ஐரோப்பிய நாடுகள் சென்று அப்படி என்ன இருக்கும் என்று நினைத்து உண்டு. அதன் பின் பணி நிமித்தமாவது மட்டுமாட்சி போகலாம் என்று நினைத்தேன. அதற்கு பின் நான் எடுத்த படித்து வேலை பார்த்தது  வேறு  எதுவோ…பாரிஸ்  மேற்கத்திய ஆடை வடிவ உலகத்தின் ஜாம்பவான். ஆகையால் பேஷன் துறையை எடுக்க  வேண்டும் என்று நினைத்தேன். இங்கு பாண்டிச்சேரியில் பலர் இரட்டை குடியுரிமை உள்ள குடும்பங்கள் உள்ளது. ஏன் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கும் கூட இரட்டை குடியுரிமை உள்ளது என்பதே பின் நாட்களில் தான் தெரியும். பிரான்ஸ் பற்றி கேட்க கூடவே ஓட்டிக்கொண்டது போன்று வரும்  அதன் இலக்கியமும், அழகியலும், சுதந்திரமான நாடு என்றும். ஆகையால் நிறைய பிரஞ்சு படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் மிட்நைட் இன் பாரிஸ், ரோடு டு பாரிஸ், விவி டடூர், பிரஞ்சு கிஸ் போன்ற படங்களின் வழி ரசித்து இருக்கிறேன்.அதே போன்று இலக்கியங்களிலும் கலையும்  கைதேர்ந்த கலைஞர்ள்  நிரம்பிய  ஊர், ஈபிள்

கோபுரம்,,  ஷேக்ஸ்பியர் புத்தக கடை,  மார்கஸ் வாழ்ந்த Rue Vanue,, venice ,, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை  பிறந்த இடம் இவையெல்லாம் ஒரு பக்கம். மற்றொரு  பக்கம் அவர்களின் வாழ்க்கை சௌகரியம.இவற்றை எல்லாம் டேவிட் லேபோ எழுதிய நூலான The Sweet Life in Paris ஓரு  பகுதியை   உணர முடிகிறது. ஆனால் நம்  ஊராகாரர்  நாம் பார்க்கும் பார்வையில் எழுதுவது ஆலாதி சுகம் தான். அதிலும் புளியோதரையுடன் உங்களுடனே நானும் கூடவே  ஈபிள் டவர், காலோஷியம்,பைசா கோபுரம் வந்து கடைசியாக வால்காவின் ஓவியத்தை ரசித்துப், அனா பிரங்கின் துயரத்தையும்  அறிய முடிந்தது. புத்தகத்தில் வரும் புத்தகத்தை எல்லாம் படிக்க முடியவில்லை யென்றாலும் சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன் படிக்கலாம் என்று. அடுத்த முறை ஓரு வேலை போக வாய்ப்பு இருப்பின் நான் போனவற்றையும் சேர்த்து பேசலாம் தோழர்.  உங்களின் இப்புத்தகத்திற்கு என் நன்றியும் அன்பும்

Sindhuja Sundaraj Poems சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்

சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்




ஜனநாயக நாட்டில்
**************************
புலம்பெயர் தொழிலாளர்களின்
புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும்
கேட்கிறது
உயரற்ற உடல்களாய்
ஊர் திரும்புகையில்
உடல் மட்டுமே ஊரையடைந்தது
உறவுகளைத் தேடி
உயிர் பிரிந்தது
இந்த ஜனநாயக நாட்டில்………

உரிமைக்குரல்
*******************
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றோம்
எட்டு மணி நேர வேலை என்றோம்
குழந்தைகள் கூலித்தொழிலாளியில்லை என்றோம்
ஆண் பெண் சமம் என்றோம்
சுரண்டலே கூடாது என்றோம்
இவையனைத்தும் உழைப்பாளர் உரிமை என்றோம்
அமைப்பாய் திரண்டோம் சிகாகோவின்
ஹேமார்க்ககெட் சிவந்தது
“உழைப்பாளர் தினம் “ உரிமை பிறந்தது
“உலகமயமாக்கல் சூழ்நிலையில்
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”
நோயும்,பேயும் (முதலாளித்துவம்) ,
பசியும்,பட்டினியும்
நம்மை துரத்துகிறது
நாம் நெடும்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது
முழங்குவோம்
வாழ்க மே தினம்! வளர்க்க தொழிலாளர் ஒற்றுமை
ஓங்குக மே தின தியாகிகள் புகழ்………

பசி எனும் பிணி
*********************
வருவதும் போவதுமாய் இருந்த
வாழ்கையில்
அழையா விருந்தாளியாய் வந்தது
இந்த நோய்
அரசாங்கம் அழைத்து கொடுத்தது
கையில் தட்டை
முன்பு சாப்பிட்ட மீச்சமிதியை
தேடிகொண்டிருந்ததோம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
ஆனால்
வயிறு மட்டும்
வாய் திறக்கிறது
பசி பசி பசி
என்று சொல்லிக்கொண்டே………

வேண்டாம் சா(தீ) மனிதநேயம்
************************************
சா(தீ) என்னும் தீயெடுத்து
செங்கழலில் அவளையிட்டு
அவளின் அழுகுரலில்
ஒய்யாரமாய் குளிர்காயும்
உங்ககளை தீயும் கூட
தீண்டமறுக்கும்
காரி உமிழும்
உங்களின் சாதீ
என்னும் சாக்கடையில்
தீயும் தற்கொலை செய்யும்
இந்த மனிநேயமற்ற காட்டுமிரண்டிகளிடமிருந்து……

ஒட்டு அரசியல்
******************
காலம் கடந்து காத்திருந்தோம்
கையில் மையிட்டு
எதிர்காலம் எதுவென்று நினைத்து
காலம் காட்டியது
காலணி இல்லாமல்
கால்நடை பயணம்
நிகழ்காலம் எதுவென்று சொல்லி
பசி ,பரிவு
வறுமை, வலி
துயர், தூக்கம்
அழுகை, ஆற்றுமை
இவையனைத்தும் பாலைவனமானது
எங்கள் பாதங்களில்
வாழ்க பாரதம்…..

விசாரணை
***************
உதிரம் கொட்ட இருவரின்
உடல் உதிரகண்டேன்
அதிகாரம் ஆட்கொண்டு
ஆளக்கண்டடேன்
ஆயிரம் ஆயிரம்
வலிகள் வலியகண்டேன்
வாய்திற என்று உள்ளம்
சொன்னது
வீதிக்கு சென்று உண்மையை
சொல் என்றுது
கணவன் கரம்பிடித்து
மகளின் விருப்பமறிந்து
எழுந்தேன் ரேவதி என்ற
ஒன்றை ஆடையாளமாய்
நின்றேன் ரேவதீயாய்……..

விவசாயின் குரல்
**********************
சட்டமென்று இயற்றி
கையில் கொடுத்து
பரிசு என்றாய்
அது பரிசு அல்ல
பாதகம் என்று
எழுந்து நின்ற கால்களை
உதைத்து சென்றாய்
தடுப்பனைகள் போட்டு
தடுக்க நினைத்து
தடுப்புகள் அடுப்புகளானது
நெடுஞ்சாலைகள் உழுது
எங்களை பதுங்கு குழியில்
அடைக்க சொன்னாய்
மண்ணிற்கு பிரசவம் பார்த்த
மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்
இதோ
உன் பதங்கு குழிகளின் மேல்
பாலமைத்து
புறப்படுகிறோம்
பார்லிமென்ட் நோக்கி……….

நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய
கைகள்
இன்றைக்கு உங்களின் லத்தியை
கையாள்கிறது
வானம் பார்த்தே விவசாயம் செய்து பழகிய
கண்கள்
இன்றைக்க் கண்ணீர்புகைக்குண்டுகளை
பார்க்கிறது
குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே
பழகிய காதுகள்
இன்றைக்கு தண்ணீர் பீரங்கியால்
காதுகளை துலைக்கிறது
வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய
கருணை
இன்றைக்கு வீதியிலிறங்கி கையேந்துகிறது
சட்டம் நீதியை மட்டுமே தரும் என்று
நம்பிருந்த எங்களுக்கு
கார்ப்ரேட்க்கு மட்டுமே
சேவகம் செய்யும் என்பதை உணர்த்துகிறது
போராட்டம் எங்கள் விதை எங்களுக்கு
கற்றுத் தந்த பாடம்
கட்டாயம் மீண்டு எழுவோம் விதையிலிருந்து செடிகளாக……

ஏன் என்று கேள்வி
எல்லோருகம் எங்களிடத்தில்
வயக்காட்டில் கோதுமை
விளையவில்லை என்று
வீதிக்கு வரவில்லை
கையில் கலப்பை தவிர
உழவேறு எந்த ஆயுதமில்லை
வயலருகே கருவேலம்
வளர தொடங்கியது அது
வேளாண் பாதுகாப்பல்ல
வேலிப்போல தோன்றும் விஷம்
உறைப்பனி, கடுங்குளிர்
கொட்டிய மழை
திட்டிய அரசு
இனி
சுட்டெரிக்கும் வெயிலென
போரடிக்கொண்டியிருக்கிறோம்
போர்களத்தில் நின்றல்ல
எம் நாடு
எம் மக்களிடம்
செவிமடுத்து கேளுங்கள்
பகத்சிங் பிடித்த
செங்கொடி பிடித்து
செங்கொடி ஊன்றி
வருகிறோம்
புரட்சி பாதையில்
சுதந்திர இந்தியாவின்
மிக நீண்டப்போரட்டம்
நடத்தி
கருவேலம்(வேளாண் சட்டம்) எங்கள்
காவலுக்கு தேவையில்லை
என்ற உரிமைக்குரலோடு……
100வதுநாள்
விவசாயின்குரல்

நல்ல இதயம் புன்னகைகட்டும்
************************************
நல்ல இதயம் பூங்காவாகட்டும்
நல்ல இதயம் வேராகட்டும்
நல்ல வார்த்தை பூக்களாகட்டும்
நல்ல செயல்கள் பழங்களாகட்டும்
பட்டாம்பூச்சியாய் சிறக்க
வானம் கேட்கவில்லை
பயந்து நின்றே
பள்ளங்கள் புதைக்குழியானது
இனி புதைகுழி மீது பூக்கும்
புன்னகைக்கட்டும் சிறார்களின்
சிரிப்புகளில்……

பெண் கல்வி
****************
தோட்டாக்கள் என்னை
துளைத்தபோதும்
என் பேனாவின் முனை
உங்களின் மூளைக்குள்
சென்று
கேட்டுகொண்டேயிருக்கும்
பெண் கல்வி என்னும்
முழக்கத்தோடு……

நிறவெறி
*************
எங்கள் நிறம் கொண்டு
உங்கள் அதிகாரம்
எங்கள் மீது பாய்கிறது
நிற வெறியால்
“கான்ட் பரீத்” என்று
நான் சொல்லியது
உங்கள் காதுகளில்
விழவில்லை
ஆனால் இன்றோ
எல்லோர் காதிலும்
விழுகிறது
என் மூச்சுத் துடிப்பின்
“லப் டப்”
நமது உரிமையக்காக
எழுந்து நின்று
போராடுங்கள் என்கிறது…..

அதிகாரம்
*************
உழைப்பாளியின் வலியறியாத
நீங்கள் எங்கள் வாசல் வந்து
கேட்ட பிச்சை
நீங்கள் வைத்திருக்கும்
இந்த அரசாங்கம்
காலம் வரும்
உங்கள் அதிகாரம்
வீழும்……

ஜிகாத்
*********
கொடுமைமிகு நாட்டுகளிலும்
கண்ணியம் காப்பது ஜிகாத்
கடமையொன்றே கண்ணாக களம்
காண்பது ஜிகாத்
பொறுப்போடு பெற்றோருக்கு
பெருமை சேர்ப்பது ஜிகாத்
பொருத்தாலும் மனிதம் போற்றி
மறத்தலும் ஜிகாத்
கால்கடுக்க காதங்கள் பல கடந்து
நீதிக்கு போர் ஜிகாத்
மதமறியாது ,குலமறியாது
மொழியறியாது, இனமறியாது
மனதை பிணைத்தவாறு
அணைத்து கொள்வது ஜிகாத்
அன்பை அள்ளி தெளிப்பது
லவ் ஜிகாத்……..

கருத்து சுதந்திரம்
***********************
கருத்து சுதந்திரம் பேசும்
மக்களின் மொழியாய்
பாமரனின் எழுத்தாய்

கருத்து சுதந்திரம் பேசும்
கேள்விகள் அனலாய்
மதியின் முகமாய்

கருத்து சுதந்திரம் பேசும்
அதிகாரத்தை எதிர்த்து
எங்கள் குரல்கள் நசுக்கப்படுமாயின்
ஆயிரம் ஆயிரம் குரல்கள்
கூக்குரலிடும்
உண்மையை
உடைப்பதற்கு

கருத்து சுதந்திரம் பேசும்
ஊடகத்தின் வழியாய்
மக்களின் முகமாய்
ஊடகவியலாளர்களாய்
உண்மை
எழுதுகோலில் மையாகட்டும்………

எங்கள் குடியுரிமை
************************
கறைப்பட்ட கைகள்
கரம் நீட்டிக்கேட்கிறது
குடிமக்கள் யாருயென்று?
புண்பட்ட நெஞ்சம்
புலம்பலோடு சொல்கிறது

ரத்தம் சிந்தி
யுத்தம் புரிந்தோம்
பிரிவினை இல்லையென்று
மதம் என்னும் கொடாளி கொண்டு
வெட்டப்பட்டது
தொப்புள் கொடி உறவு
எங்கள் குடியுரிமையும்
எங்கள் அடையாளமும்…….

புத்தாண்டு பிறக்கட்டும்
*****************************
ஆஸ்திரிய காடுகள்
அழிந்தன
விலங்குகள் கலங்கின
எரிமலை வெடித்தது
என்குமியிர்கள் மாய்ந்தன
கிருமிகள் கால் பதித்தன
காலமின்றி காலம் பதில் சொல்கிறது
புலம்பெயர் தொழிலார்களின் புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும் செப்ப்பனிகின்றது
கறுப்பின கொலை நிகழ்ந்தது
உலகம் கொதித்து எழுந்தது
கால்பந்து நாயகன்
களம் காணாது மண்ணில் போனது
விவசாயிகள் வீதியிலிறங்கி
போரட்டங்கள் நிகழ்கின்றன
என் உலகம் முழுதும்
துயர்கள் சுழ்ந்தன
பூமி புன்னைகக்க
புத்தாண்டு பிறக்கட்டும்
இப்படிக்கு காலம்

சட்டமும் சுற்றுச்சுழலும்
****************************
தென்றல் தடுப்பனையால் நிற்பதுயில்லை
அலைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாது
பெய்யும் மழை நதியின் ஓட்டத்திற்கு காத்திருக்காது
விடியும் கதிரவன் வெப்பத்தை காணாது
கானகம் விலங்குகளின் குடாரம்
கிளையமைப்புரு கலைந்தனவே பேராசைப் பெருந்தீனியர்
கணமும் காத்திருக்காது
கடைசி மரம் காணமல் போகும் வரை
கடைசி நீர்த்துளி விஷமாகும் வரை
கடைசி மூச்சுக்காற்று நச்சுயாகும் வரை
கடலில் கடைசி மீன் பிடிக்கும் வரை
கணப்பொழுது தாமதிக்காமல்
இயற்கை அன்னையின்
ஆற்றல் அறிந்தவர்கள் நாம்
விழித்தெழு சவக்கிடங்கில் சொர்க்கம் ஒருபோதும் மலரது……….

நிறம் மாறும் மனிதிர்கள்
அலைகள் இல்லா கடற்கரைகள்
எதிரொலிக்காத மலை முகடுகள்
ஈரமில்ல்லாத பாறைகள்
அழகாய் தோன்றும் புதைக்குழிகள்
இயன்றவரை உதவாத உள்ளங்கள்
பசுமையை பிரசிவிக்கும் –கார்புகனிகள்
நறுமணம் வீசும் நச்சுமலர்கள்
விண்ணிலிருந்து விழும் குண்டுமழைகள்
இப்படி நிறம் மாறும் மனிதர்கள்
பச்சோந்தியின் விசுவரூபங்கள்…..

ஆம் போர் நடக்கிறது
**************************
துயருள்ளம் துடித்திடர் தூக்கிலிடும்
போர் நடக்கிறது
காயமுற்ற கால்கள் கானகத்திலிடும்
வன்மம் நடக்கிறது
பட்டினிக்கு மக்கள் பலியிடும்
கொலைதொழியில் நடக்கிறது
கண்கள் பார்த்துகொண்டு
தான் இருக்கும்
காதுகள் கேட்டுக்கொண்டு தான்
வாய் மட்டும் பேசாது எதிர்வினையாற்ற
ஊமையாய் ஊடகம்
ஊமையாய் ஊமையாய்
எம் மக்கள்…….

பெருந்தொற்று
*******************
பெருந்தொற்றுக்கு
ஏது சாதி, மதம்
விலகி
இருப்பதில்லை
மனிதனிடம்
வீதியெங்கும்
பிணக்குவியல்
சுவாசிக்கும்
காற்றும்
சுவாச மற்றுப்போகிறது
வான் உயர்ந்த
சிலைகளுக்கு
இடமிருக்குமிடத்தில்
உயிருடனிருக்க
ஒரு படுக்கையில்லை
மாத்திரை மருந்து
மந்திரிகளுக்கு மட்டும்
மரணபடுக்கையில்
எண்ணற்ற உயிர்கள்
ஏன் என்று
கேட்க
நாத்தியற்றவர்களை
நடுத்தெருவில்
புலம்பல்
இன்னொரு
பொது முடக்கம்
பட்டினியை
காட்டவிருகிறது
ஆனால்
அங்கோ காட்டமாய்
கூட்டமாய்
தேர்தல் பரப்புரை
கும்பமேளாவில்
குளியல்
ஏதுமற்றவர்களாய்
நாளும்
இந் நாட்டில்….

சிவப்பு சிந்தனையில்
*************************
சிவப்பு சிந்தனையில்
உதித்தது
சுதந்திரம் சுய உரிமையென
பதிந்தது
இயக்கங்கள் இயக்கியது
நேர்மைக்கு மட்டுமே
தலைவாங்குயென்று
போராட்டங்கள் , புரட்சிகள்
வீதியெங்கும் வழிந்தோடும்
உழைப்பவனின் உரிமையென்று
முதுமை ஒருபோதும்
முடக்கியது இல்லை
போராடி பெற்ற
சுதந்திரத்தை பாதுகாக்கவும்
போராட்டம் தேவைப்படுகிறது
இன்றைய சுழலில்……..

மாதவிடாய்
***************
மாதம் மாதம்
மாதவிடாய்
மங்கை இவள்
தீட்டுனால்
மானுட பிறப்பும்
தீட்டே…
மாதத்தில் வரும்
மூன்று நாட்டுகளுக்கு
முற்றத்தை
முடுடுபவனும்
முடனே…
மாதம் மாதம்
முதுகுதண்டு
முச்சுயிரைக்கிறது
உதிர்ந்த உதிரம்
உடுத்ததுணி
கந்தலும் கிழிச்சலுமே
மங்கையின் உடல்
மாற்றம்
எப்படி
மனிநேயமற்றோக்கு
தீட்டாகிறது தெரியவில்லை?