உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700 – எஸ்.மோகனா

உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700 – எஸ்.மோகனா




இந்த பூமிப் பந்தில், முதலில் தோன்றிய பெரிய நாகரிகம் என்பது எகிப்தில்தான் உருவானது.மனிதர்களின் நோய்க்கு காரணி, கடவுள்கள், தேவதைகள், தீய சக்திகள் தான் என எகிப்தியர்கள், கருதினர். அவர்களே அந்தக் காலத்தில் மருத்துவர்கள் என அழைக்கப்பட்டனர். மருத்துவர்கள், சில சக்திகள், உடலின் அடைத்துக்கொள்வதால் , உடல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு நோய் வருவதாக எண்ணினர்.

Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700எகிப்தில் கி.மு 2700 களில் (.சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் ) மருத்துவர்கள் இருந்தனர் என்ற பதிவு உள்ளது. அவர்களில் முக்கியமானவராகவும், முதன் முதல் துணிந்து மருத்துவம் செய்த பெண் மேரிட் ப்டா Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700(Merit ptah=”Beloved of the god Ptah”; c. 2700 BCE ) என்பதாகும். அவர் அந்த காலத்தில் மிகவும் அதிகமாக மக்களுக்கு சேவை செய்து பெருமை பெற்றிருந்தார். மேரிட் ப்டா கடவுளுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் என்றும் கருதினர். மேரிட் ப்டா வின் பெயர் எகிப்தின் மருத்துவ உலக சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்தான் முதன் முதல் அறியப்பட்ட அறிவியல் பெண் மருத்துவர்.

மேரிட் ப்டா வின் உருவம் அப்போது இருந்த நெக்ரோபோலிஸ்(necropolis) நகரில் உள்ள, சக்காரா(Saqqara )என்ற பிரமிடின் அடிவாரத்தில் உள்ள கல்லறையில் (Tomb )பொறிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வாழ்ந்த அவரின் மகன்தான் அந்த ஊரின் பெரிய மதகுரு ஆவார். அவரே தன தாயை மிகப் பெரிய முதன்மை மருத்துவர் என்ற விவரிக்கிறார். மேரிட் ப்டா வின் கணவர் யார் என்ன விபரம் ஏதும் தெரியவில்லை.

ஆனால் அவரின் பெருமையை பின்னால் உணர்ந்த சர்வதேச வானியல் அமைப்பு, வெள்ளி கோளில் உள்ள ஒரு பள்ளத்துக்கு மேரிட் ப்டா வின் பெயரைச் சூட்டி, உலகின் முதல் பெண் மருத்துவரை பெருமை படுத்தியுள்ளது.

Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700

Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700Ulakim Muthal Pen Maruththuvar Meri Merit P Tah உலகின் முதல் பெண் மருத்துவர்.. மேரி ப்டா-கி.மு, 2700

நூல் மதிப்புரை : கோ.ஜனார்த்தனன் நேர்காணல். நடுநிலையாளன் என்பது மோசடி – பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை : கோ.ஜனார்த்தனன் நேர்காணல். நடுநிலையாளன் என்பது மோசடி – பெரணமல்லூர் சேகரன்




நூல்: நடுநிலையாளன் என்பது மோசடி
நேர்காணல் நூல்
பக்கங்கள்: 32
விலை: ₹30
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018
044 24332424 ,044 24334924 ,

முற்போக்கு எழுத்தின் தடம்
“பகுத்தறியாதவன் பிடிவாதக்காரன்
பகுத்தறிய முடியாதவன் அறிவிலி
பகுத்தறியத் துணியாதவன் அடிமை”

எச்.டி.ரூமாண்ட்
பிடிவாதக்காரனாகவும், அறிவிலியாகவும், அடிமையாகவும்

வாழாமல் பகுத்தறிவாளனாக வாழ்வது மேலானது. அதற்கு கற்றல் இன்றியமையாதது. ‘கற்றலின் கேட்டலே நன்று’  என்பர். அத்தகைய ‘கேள்வி’ குறித்து ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார் திருவள்ளுவர்.

ஒருவரது கேள்வி ஞானம் அவரது பேச்சாலும் எழுத்தாலும் பளிச்செனத் தெரிந்துவிடும். அவ்வாறுதான் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனும். அவரது எழுத்தின் வழி அவர் எத்தகையவர் என்பதை உணர்ந்துள்ள தமிழ் கூறும் நல்லுலகம் அவரது நேர்காணல் வழி அவரது அகப்புற தோற்றம் குறித்து அழுத்தம் தரும். அவ்வகையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘அறம்’ கிளை எடுத்துள்ள எழுத்தாளுமைகளின் நேர்காணல் என்னும் நல்ல முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனின் நேர்காணல் அமைந்துள்ளது.

இச்சிறு நூலில் எழுத்தாளரிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன.

எழுத்தாளரின் பெயரிலிருந்து துவங்குகிறது கேள்வி. எழுத்தாளரின் குடும்பப் பின்னணியில் அவரது தந்தை ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலாரின் சிந்தனை வயப்பட்டவர் என்பதும் அவர் தமிழ் ஆர்வலர் என்பதும் புலனாகிறது. இது இயல்பாகவே எழுத்தாளராகப் பரிணமிக்க ஜீவகாருண்யன் அவர்களுக்கு உந்துவிசையாக இருந்துள்ளது.

சைவ அசைவ உணவு குறித்த பார்வையில் எழுத்தாளர் சரியான பதிலையே தந்துள்ளார். ‘சைவம் – அசைவம் என்பது மனிதர்களின் விருப்பம் சார்ந்தது’ என்றும் ‘புரதச்சத்து மிகுந்த விலையுயர்ந்த தானியங்கள் போன்றவற்றை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியாத ஏழை-எளியவர்களுக்கு ‘குறைந்த விலையில் நிறைந்த புரதம்’ என்னும் வகையில் மாட்டிறைச்சி போன்றவை மிகவும் அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக முன் நிற்கிறது’ என்பது அர்த்த அடர்த்தி மிக்கது. அதே நேரத்தில் கடந்த ராம நவமியன்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு உண்ட மாணவர்கள் மீது வன்முறையைத் கட்டவிழ்த்து விட்ட மதவெறி மாணவர்கள் கண்முன் வந்து நிற்கின்றனர். உண்ணும் உணவு, உடுத்தும் உடை போன்றவற்றில் மூக்கை நுழைத்து வன்முறையில் இறங்குவோர்க்கு ஒன்றிய அரசின் ஆதரவும், வெறுப்பு அரசியலும் நெருஞ்சி முள்ளாய் குத்தத்தான் செய்கிறது.

நேர்காணலில் தமது சிறு வயதிலிருந்தே வாசிக்கும் வழக்கம் கைகூடியதைக் குறிப்பிடும் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன், இத்தகைய வாசிப்பு அனுபவம் பிற்காலத்தில் தான் எழுத்தாளனாவதற்கு அடிகோலியதாக எண்ணுகிறார். ஆனால் இன்றைய இளைஞர்கள் கைபேசியில் செயலி, சமூக வலைதளங்கள் என தொலைந்து போவதை வேதனையுடன் குறிப்பிடுகிறார். உண்மையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கையறு நிலையில் உள்ளது இளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கும் எனின் மிகையன்று. இதனால் இளைஞர்களின் உடல் நலமும் உள்ள நலமும் நம் கண்முன் கெடுவதைப் பார்க்கும் அவலம் அணி வகுக்கிறது.

எழுத்தாளரை எழுதத் தூண்டியதும் எழுத்தார்வத்தை வளர்த்ததும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அவ்வமைப்பு சார்ந்த இலக்கிய ஆளுமைகளும் எனக் கூறியிருப்பதிலிருந்து அவரது இலக்கியப் பயணம் சரியான பாதையில் பயணித்தது என்பதையும் அதன் பலனாக இதுவரை சிறுகதை, கவிதைகள், நாவல், மொழிபெயர்ப்பு என 28 நூல்களை வெளியிடவும் பல நூல்கள் தமிழக அரசு மற்றும் பல அமைப்புகள் வழி விருதுகள், பரிசுகள் என இவருக்குக் குவிந்தன என்பதையும் உணர முடிகிறது.

‘மாற்றுக் கருத்தை மறுத்து இலக்கியம் படைப்பதற்கு மாற்றுக் கருத்து குறித்த நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும்’ என்னும் கருத்துடன் இளம் வயதிலிருந்து இன்றுவரை பல துறை நூல்களையும் படிப்பவராகத் திகழ்கிறார் ப. ஜீவகாருண்யன்.

பழந்தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்களின் வழி ஆதித் தமிழர் வாழ்வியலை அடையாளம் காண முடிவதைக் கூறும் எழுத்தாளர், சங்க இலக்கியங்கள் குறித்து பிற மொழிகளில் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தமது வேட்கையையும் தெரிவிக்கிறார்.

எழுத்தாளரின் ‘கிருஷ்ணன் என்றொரு மானிடன்’ என்ற நூல் அவருக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் ரசித்துப் படித்திருப்பர் என்பதில் ஐயமில்லை. அந்தளவுக்கு அந்நூலில் அழகியலும், வர்ணனைகளும், புராண இதிகாசமெனும் மகாபாரதக் கதைகளின் மீதான குறுக்கு விசாரணைகளும் மற்றும் அதற்கான பதில்களும் பொதிந்து கிடக்கின்றன.

பெண் சமத்துவம் குறித்து மட்டுமல்லாமல் ‘மனிதர் யாவரும் சமம்’ என்னும் கருதுகோளை மையப்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் எழுத்தாளர், அதற்கான அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுவது குறித்தும் அழுத்தம் கொடுத்திருப்பது சிறப்பு

சாதி, மதம், கடவுள் எனும் வலைப் பின்னலில் ஏழை எளியோரும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் சிக்குண்டுச் சீரழிவை மதங்களின் வெற்றியாகச் சித்தரிக்கிறார் எழுத்தாளர்.

ப. ஜீவகாருண்யன், இந்திய இலக்கியங்கள் மட்டுமல்லாது பிற நாட்டு இலக்கியங்களையும் படித்துப் பரவசமடைந்த நிலையில் அவை போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்னும் வேட்கையைத் தணிக்க அவரும் அவரையொத்த சிந்தனையுடைய தமிழ் எழுத்தாளர்களும் முன்வர வேண்டும்.

வாழ்க்கை சவால் மிக்கது. இன்றைய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழும் அனைவரும், குறிப்பாக கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ப. ஜீவகாருண்யனும் எதிர்கொண்டுப் போராடி முன்னேறி வந்துள்ளார் என்பதை நேர்காணலில் உணர முடிகிறது.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாமல் ஊருக்கு உபதேசிக்கும் இலக்கியவாதிகளே அதிகம் நிறைந்துள்ள இக்காலத்தில் எழுத்தின் வழி வாழ்க்கை என்பதை வரித்துக் கொண்ட எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதுமனை புகுவிழாவில் புரோகிதத்தைப் புறக்கணித்தது பாராட்டத்தக்கது. பின்பற்றத் தக்கது.

அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனும் நிலையில்,’நான் நடுநிலையாளன்’ என்பது ஏமாற்று மோசடி என சாட்டையைச் சுழற்றுகிறார் எழுத்தாளர். முதியோர் இல்லங்கள் பெருகி வர ஆண்களை விட பெண்களே அதிக காரணகர்த்தாக்களாக உள்ளனர் என்ற எழுத்தாளரின் கூற்றை முழுமையாக ஏற்க இயலவில்லை. இக்கால நுகர்வு கலாச்சாரம், மேல் நாட்டு நாகரிகம்,  உட்பட பல காரணிகள் முதியோர் இல்லங்கள் பெருகக் காரண கர்த்தாக்களாகின்றன.

‘தன்னைப் போல் பிறரை நேசிப்பவர் ஆரோக்கியமான மனிதர்’ என்பது உள்ள ஆரோக்கியத்தை வைத்து எழுத்தாளர் கூறியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது 42வது வயதில் புற்றுநோயின் கொடும்பிடியில் சிக்கி மீண்டபோது இடதுசாரிக் கட்சியும், இலக்கிய அமைப்பும் தொழிற்சங்கமும் உற்ற தோழனாய் இருந்ததை நினைவு கூர்ந்துள்ளார் எழுத்தாளர். அதை போன்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அவரது ‘மாதொரு பாகன்’ நூல் மூலம் ஏற்பட்ட மிகப் பெரும் அச்சுறுத்தலின் போது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மட்டுமே அவரை அரவணைத்துக் கொண்டதைப் பதிவு செய்திருப்பது பாராட்டத் தக்கது.

இன்றைய ஒன்றிய அரசும், அதனால் வரலாறும் பாட நூல்களும் திருத்தப்படுவதும் ஆபத்தானவை என்பதை உணர்ந்த எழுத்தாளர் ஒரு படி மேலே போய் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் ‘புதிய கல்விக் கொள்கை’ நாடு முழுவதும் நடைமுறையாக்கப்பட வேண்டும் என தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது எழுத்தாளரின் துணிச்சலான தெளிவான அணுகுமுறை.

‘பொதுத்துறை நிறுவனங்கள் தேசத்தின் ஆலயங்கள்’ என்ற ஜவகர்லால் நேருவின் வாக்குப் பொய்யாய் பழங்கதையாய் ஆகுமளவிற்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித அறம், சமூக அறம், இயற்கை அறம் குறித்த ஜீவகாருண்யனின் விளக்கம் அருமை. இறுதியாக மரணம் குறித்து ‘இயன்ற வரையில் அர்த்தமுள்ளதோர் வாழ்க்கை வாழ்ந்து மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்’ என்னும் எழுத்தாளர் ஜீவகாருண்யனின் பதிலுடன் நேர்காணலை முடித்துள்ளார் கோ.ஜனார்த்தனன்.

இந்நூல், வடிவில் சிறியதாக இருந்தாலும் உட்பொருளில் பெரிதாகவே இருக்கிறது. இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டியது அவசியம்.

..பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: ஆர். பாலகிருஷ்ணனின் JOURNEY of A CIVILISATION – இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: ஆர். பாலகிருஷ்ணனின் JOURNEY of A CIVILISATION – இரா.இயேசுதாஸ்



JOURNEY OF A CIVILISATION
Indus to Vaigai…..
என்ற 503+பக்கங்கள்
கொண்ட ரூபாய் 2400/- விலையுள்ள
ஆங்கில நூலை “ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம்”பதிப்பிக்க..
பாரதி புத்தகாலயம் அதை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியை மேற்
கொண்டு 2021ல் இரண்டாம் பதிப்பு
வெளிவந்துள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகள் ..மற்றும் ஆதிச்சநல்லூரில் நூறாண்டுகள் கடந்து மீண்டும் அகழாய்வு….அங்கிருந்து தாழியிலிருந்து ஒரு முழு மனித எலும்புக்கூடு
பெங்களூருவுக்கு மதுரை உயர்நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் கொண்டு செல்லப்பட்டுஅங்கே எந்தவித பின்தொடர்வும் (followup) இன்றி இருக்கும் நிலையில் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள இந்த
ஆராய்ச்சி நூல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நூலை பார்க்கும் போது படிக்க முடியுமா என் மலைப்பாகத்தோன்றிடினும்.. இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்நூலை நமது குடியரசுத்தலைவர்..
பிரதமர்..துபாய்…அபுதாபி ஆட்சியாளர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்குவதை பார்த்த பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய நூலை எப்பாடு பட்டாவது படித்தே தீர்வது என முடிவுசெய்து ஒன்பது நாட்களில் படித்து பின் ஓரிரு நாட்கள் மீள்வாசிப்பும் குறிப்புகளும் எடுத்தேன்.

ஒரு நூலைப் படித்து தான் புதிய தகவல்கள் பெறுவது…அதனினும் அதை பிறருடன் பகிர்ந்துகொள்வது இன்பமானது.. ஏராளமான பிரமிப்பூட்டும்….திகைக்க
வைக்கும்…சிந்திக்கத்தூண்டும்….ஏன்… நம்மையே ஆராய்ச்சிக் களத்தில் இயல்பாகவே இறக்கிவிட்டு விடும் அற்புத சாகசத்தை இந்நூல் நிகழ்த்துகிறது. ஒரு ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பது போன்ற நிலை..பொன்னியின் செல்வன் ஐந்துபாகமும் ஒன்றாக உள்ள நூலை படிப்பதுபோல….வேள்பாரி இரு பாகத்தை ஒன்றாக்கி
படிப்பது போன்றது இந்த வாசிப்பு.. ஆசிரியர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று….பின் தமிழ்வழி ஐ.ஏ.எஸ்.எழுதி முதல் முயற்சியிலேயே தமிழகத்தில்
முதலிடம் பெற்று..இந்திய குடிமைப்பணியில் ஒரிசா மாநிலத்தில் பழங்குடிகள் பெருமளவு வசிக்கும் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுகிறார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் இவர் திரு.ஐராவதம்மகாதேவன் அவர்கள் எடுத்த “சிந்துச்சமவெளி நாகரிகம்”பற்றி எடுத்த வகுப்பும்..பின் களப்பணிக்கு சென்றபோது இவர் கண்ணில்பட்ட”தமிழி”(TAMILI) என்ற மைல்கல்லும் பெரும் திருப்பமாக அமைந்தன. தமிழிலக்கிய மாணவரான இவர் சங்க இலக்கியத்திலும்..அதில் விவரிக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறையிலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்தார். இந்தப்பண்பாட்டிற்கான ஆதாரங்களை பொருள் வடிவில் தேடிக்கொண்டிருந்த இவருக்கு ஐராவதம் அவர்களின் சிந்துநாகரிகம்-திராவிட நாகரிகத் தொடர்பு பற்றிய உரையும் நூல்களும் இயற்கையாகவே ஆர்வத்தை ஈர்த்தன. இதனால் காலப்போக்கில் ஐராவதம் அவர்களுக்குப் பின் இவர் சிந்து நாகரிக ஆராய்ச்சிப் பணியில் ரோஜா முத்தையா
நூலகத்தில் பொறுப்பேற்றார்.

2010 கோவை செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து…அங்கே ரோஜா முத்தையா நூலகம் மூலம் கண்காட்சியும் ஏற்படுத்தி..சிந்து சமவெளி நாகரிகத்தின்
அடித்தளம் திராவிடம்…என்பதை ஏதோ மொழிவெறியோ…மாநிலப்பற்றோ..என்று இல்லாமல் நவீன அறிவியல் உலகின் எல்லா ஆராய்ச்சி வசதிகளையும் மிக நுணுக்கமாக…மிக மிக நேர்த்தியாக பயன்படுத்தி நிரூபணம் செய்கிறார்.. இதன் முழு வெளிப்பாடே இந்த அற்புதமான மகத்தான நூல்..

ஹரப்பாவிலும்….மொகஞ்சோதாராவிலும்… ஆதிச்சநல்லூரிலும்..கீழடியிலும்.. நாம் நேராகக்களத்தில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு தத்ரூபமாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! ஏனெனில் ஏரியல் வ்யூ எனும்பருந்துப் பார்வையில் க்ரேன் கேமரா மூலம் பல புகைப்படங்கள் உள்ளன. அட்டவணைகள்(Tables),வரைபடங்கள் (Maps),அகழ்வாய்வில் கிடைத்த பொக்கிஷங்களின் நேர்த்தியான புகைப்படங்கள்(Colour Photos) வரை ஓவியங்கள்
(Line drawings) என் அனைத்துமே நம் வாசிப்பை சுவாரசியம் மிக்கதாக மாற்றுகின்றன.

முப்பது ஆண்டுகள் தொடர் கடின உழைப்பு.. ஒரிசா முதல்வரின் சிறப்பு ஆலோசகர்.. தலைமைச்செயலர்….ஒரிசாவில் பேரிடர் மேலாண்மையில் முன்னுதாரணமான சாதனை..இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்..என வித்யாசமாக பணி ஆற்றும் சூழலிலும் பணி நிமித்தம் மேற்கொள்ளும் பயணங்களையே தனது ஆராய்ச்சிக்கான களங்களாகவும் மாற்றிக்கொண்டது அதனினும் சிறப்பு.. முடியாத கட்டத்தில் ஓராண்டு ஓய்வு விடுப்பு எடுத்து ஆராயச்சியில் ஈடுபட்டதும்…பின் இந்நூலை எழுத முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதும்….சாதாரண டாக்டர் பட்டத்துக்கு என்ற ஆராய்ச்சிப்
படிப்பு(Project )என்ற நிலையை மறுத்து உண்மையான ஈடுபாட்டுடன்….மன உறுதியுடன் மிகச்சிறந்த யாராலும் மறுதலிக்க முடியாத அளவிற்கு சான்று மேல் சான்று….சாட்சிக்கு மேல் சாட்சி என எல்லா கல்வித்துறை ஆராய்ச்சி அறிவையும் இதிலே பயன்படுத்தியுள்ளதே இநாநூலின் தலையாய சிறப்பம்சம்!.

நான் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வேன்….ஒவ்வொரு வாசிக்கத்தெரிந்த மனிதனும் ஒரு வாரம் படிப்புக்கென விடுப்பு எடுத்துக்கொண்டு வாசிக்க வேண்டிய நூல்…இது கொஞ்சம் ஓவராக உங்களுக்குத் தோன்றினாலும்..இதில் கொஞ்சமும் மிகையில்லை. அவ்வளவு உழைப்பு…காலம்…பொருள்….பொறுமை..
இந்நூலுக்குச்செலுத்தப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளுக்குச் சான்றுகளாக சிந்து சமவெளி நாகரிக அகழ்விடத்தின் காட்சிகளும் பொருட்களும் இன்று மறைக்க முடியாத சாட்சிகளாக உள்ளதை இந்நூல் பட்டியலிடுகிறது. ஊரின் பெயர்கள்…இங்கும்…அங்கும்….இன்றும் அப்படியே ஒன்றாக இருப்பதை யாராலும் இனி மாற்றமுடியாது!
சேவற்கோழிச்சண்டை….. சிபு காளையும்….காங்கேயம் காளையும்…. வன்னிமர வழிபாடு….. குயவருக்கு முக்யத்துவம்.. விவசாய விளைச்சலுக்கு பலி கொடுத்தல்..
சிவப்பு…பின் கறுப்பு-சிவப்பு…நிறத்திற்கு முக்கியத்துவம்…தாமிரம் -செம்பு பயன்பாடு.. பானை…தாழி….மணி(Beads), சங்கு வளையல்கள்…சிலம்பு..பெண்தெய்வ வழிபாடு….சாதாரண மக்களையே நாயகர்களாக(Hero/Heroin)போற்றும் அக பாடல்கள்..வீரம்…காதல்…இறந்த பின்பும் ஒருவருக்கு புகழ் நீடிக்க விரும்புதல்… மதக்குறியீடின்மை..  உன்னதமான மேம்பட்ட நாகரிகம்(யாதும் ஊரே…யாதும் கேளீர்),விட்டுக்கொடுக்கும் காதலர்(குட்டையில் உள்ள சில சொட்டுநீரை குடிப்பது போல் பாவனை காட்டும் மான்ஜோடி) செங்கல் தயாரிப்பில் நிபுணத்துவம்… இன்றைய நவ நாகரிகத்தையும் மிஞ்சும் நகரமைப்பு(பொது நீச்சல் குளம்…பெரும் கோட்டைச் சுவர்,சாக்ககடை-கழிவுநீர் வசதி, ஆக்ரமிப்பு இல்லாத சீரிய நேர்க்கோட்டு சாலைகள்…மேற்கிலிருந்து கிழக்கு சரிவான நகர் வடிவமைப்பு(Slope).. ஏழு(seven) எண்ணிற்கு முக்கியத்துவம்.. அரசர்களை/தளபதிகளைவிட புலவர்களுக்கு மரியாதை(தமிழ்ச்சங்கங்கள்..கடை எழு வள்ளல்கள்)..பழைய வரலாறை நினைவு கூர்ந்து பதிவுசெய்தல்(செய்யுள்/கல்வெட்டுகள்/நடுகற்கள்), தாயக்கட்டை விளையாட்டு…சிறு குழந்தைகளுக்கு பொம்மைகள்…ஆடற்கலை.(dancing girl)
கண்ணகி மார்பை அறுத்துவீசி சாபமிட்டது போல பல பதிவுகள்…மலைகளில் முருகன்.. கடலோரமாகவே நாகரிகம் ஆற்றங்கரை நகர் அழிவுகளை தொடர்ந்து புலம்பெயர்தல்.. கடல்வணிக வழிகளை் வாஸ்கோடாகாமா வழிகாண்பதற்கு முன்பே திராவிட நாகரிகத்தவர் கண்டுபிடித்தது..அன்னிய நாணயங்கள்..மீன்..படகு… ஓவிய அச்சுக்க்கள் கண்டுபிடிப்பு….இவை சங்கப்பாடல்களிலும்
இடம் பெற்றுள்ளது..

கொற்கை-வஞ்சி-தொண்டி(Korkai-Vanchi-Thondi Complex)என்பதை விளக்கி ஆதாரத்தை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.கீழ்…மேல்……என்ற பொருள்(Concept)கவனம் பெறுகின்றது. கவரிமான் முடியில்லாமல் உயிர்வாழாது என நாம் பொதுவாக பேசிகாகொள்கிறோம்.. ஆனால் அது மான் அல்ல…கவரி என்ற இன்றும் இமயமலை உச்சியில் வாழும் ஒரு வகை மாடு என்பதையும்…. பாலைவனத்து ஒட்டகம் கடும் வறட்சியின் பசியில் எலும்பைத்தின்னும் என்பதும்.. குஜராத் கடற்கரையில் பொதிசுமந்து செல்லும் கோவேறுகழுதையின் கால்களை சுறாமீன் குட்டிகள் கடிக்கும்…..போன்ற பல வட நாட்டுச்செய்திகள் தமிழ்ச்சங்க பாடல்களில் இடம்பெற்றுள்ளது சிந்துச்சம வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளத்தை ஐயமற நிறுவுகின்றன.

வைகைக்கும் சிந்துவுவிற்குமான தூரம் 1400கி.மீ…சிந்து நாகரிகம் முடிந்து திராவிட நாகரிகமாக தொடரும் கால இடைவெளி 1900ஆண்டுகள்.இந்த கால…..தூர…  இடைவெளியை ஆதாரப் புள்ளிகள் மூலம் இணைக்கும் பணியை இந்நூல் செய்கிறது…வைகை….தாமிரபரணி ஆற்றங்கரை அகழாய்வுப்பணிகளின் கண்டுபிடிப்புகள் நடுநிலையோடு ஒன்றிய அரசால் நிறுவப்பட வேண்டும் என்ற பதைப்பும்…எதிர்பார்ப்பும் இந்நூலின் வாசகர் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்..
சுதந்திரத்திற்கு முன்பு அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆங்கிலேயனுக்கு இருந்த நேர்மை நம்மவர்(?)களுக்கு இல்லாமல் போனது போலிபண்பாட்டுப் பெருமை! இங்கே ஆரியர்-திராவிடர் என்ற பார்வை..

கேள்வி எழவில்லை…மஹாராஷ்ட்ராவிலும்.. குஜராத்திலும்….இன்றைய பாகிஸ்தான்.. பலுசிஸ்தான்..ஆப்கானிஸ்தான்…என நாகரிகத்தின் பயணப்பாதையின் மைல்கற்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளது.. வடக்கு..தெற்கு என்ற எல்லை விரிவடைந்து கொண்டே சென்று இன்றைய நவீன மனிதனின் ஆதிநிலமாக ஆப்பிரிக்க கண்டம் உள்ளது என்ற டோனி ஜோசப்பின் கருத்தும் இந்தநூலுக்கு வலு சேர்க்கிறது.

ஆழிப்பேரலைகள்…காட்டாற்று வெள்ளம்.. புயல் சூறாவளி பருவகால பேரிடர்கள். எரிமலை…மேம்பட்ட மிருகம்…வாகனம்.. ஆயுதங்களுடன் வரும் புது மனிதக்குழுவின் தாக்குதல்…கடல் ஆட்கொண்டது….என் பல காரணங்களால் மனிதனின் புலம் பெயர்வு தொடர்ந்து கொண்டே உள்ளது. அப்படிப் புலம்பெயரும் போது அவனோடு சேர்ந்து அவனது வளர்ப்பு மிருகம்..பறவை.. மரம்…விளையாட்டு..வழிபாடு..ஊர் பெயர்கள்..தானியம்..இலக்கியம்..பண்பாடு என் அனைத்தும் பயணிக்கின்றன.. இப்படித்தான் அழிவினிறுதியில் சிந்துசம வெளிநாகரிகம் குஜராத்…மஹாராஷ்ட்ரா.. என திராவிட நாகரிக அம்சங்களோடு தெற்கு முனையை அடைந்தது என இந்நூல் ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறது..

இன்று தமிழகத்தை DNA ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் 65000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட நவீன மனிதனின் கலப்பில்லாத வாரிசு என்று யாரும் இருக்க மாட்டார்கள் என இந்நூல் கூறுகிறது..

ஆமாம்…5 சதவீதத்திற்கும் குறைவான அளவிலே இன்றும் அந்தமான் நிக்கோபார் அடர்காடுகளிலும்..இந்தியாவின் சில மலைப்பகுதிகளிலும் ஆதிப் பழங்குடியினர் மரபணு கலப்பின்றி வாழ்கின்றனர்.(இவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது) சிந்துச்சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. குமரிக்கோடு கடல் கொள்ளப்பட்ட பின் தமிழ்ச்சங்கம் மதுரை நோக்கி புலம்பெயர்ந்தது என்பதும்.. தொல்காப்பியத்தில் ஏராளமான பழைய நூல்கள் முன்பு இருந்தது குறிப்பிடப்படுவதும்.,.அப்போது என்ன மொழி இருந்தது என்பதற்கும் இனி மேல்தான் ஆதாரங்கள் கிடைத்தாக வேண்டும். ஹரப்பாவிில் துணியின் மீது எழுதப்படும்ம் முறை இருந்ததாக ஊகிக்கப்படுகிறது. அவை அழிந்திருக்க்கூடும். திராவிடப் பண்பாடு தான் நம்நாட்டின் அடிப்படை என்பதையே சிந்து-வைகை அகழ்வாராய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் தீவிர கவனம் பெற்றுள்ளன. கீழடியிலும்…ஆதிச்சநல்லூரிலும் இரும்பையும்..குதிரையையும் தேடியவர்கள் அவை இல்லாத காரணத்தால் கிடப்பில் போட்டிருந்தனர்..ஆனால் இன்று நாமே எதிர்பாராதவை சாட்சியங்களாய் வெளிப்பட்டு சவால் விடுகின்றன. மரபியல் ஆய்வுமுறை(DNA Test..Carbondating) சென்ஸஸ்்…வாக்காளர் பட்டியல், விலங்கியல்..தாவரவியல்…இலக்கியம்… வரலாறு…மனிதகுல வரலாறு…புவியியல்.. ஜியோ ஆர்பிட்டரி சிஸ்டம்..நேரடி கள ஆய்வு..நாட்டார் கதைகள்..சொலவடைகள்.. வழிபாடாடுமுறைகள்…திசை அடிப்படையில் வீடு கட்டுதல்…சில எண்களுக்கான
முக்யத்துவம்..குல தெய்வம்..கோயிலுக்கென ஸ்தல மரங்கள்…அணிகலன் அணியும் முறை..சொந்த பந்த உறவு முறை.உணவுப் பழக்கம்..விவசாய முறை.. வைத்திய முறை.. எழுத்து முறை..ஆடை.. உலோகம்..கணித முறை.திருமணமுறை…என பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டு சிந்து வெளி நாகரிகத்தின்..வைகை/பொருநை நதிக்கரை நாகரிகத்தின் அடிப்படை எது என விருப்பு வெறுப்பின்றி நிறுவும் முயற்சியை இந்நூல்!!

ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள இடம்பெற்றிருக்கும் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருந்தால் இன்னும் தமிழர் வாசிக்க எளிதாக இருந்திருக்கும். இரண்டு பாகங்களாக பிரித்து அச்சடித்திருந்தால் நூலை எளிதாக மலைப்பின்றி கையாள முடியும்.. விரைவில் தமிழ் வடிவத்தை எதிர்பார்க்கிறோம்!. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வந்தால் இந்திய அளவில் புரிதல் ஏற்படும். அனைத்துத்தரப்பு மாணவர்களும் படித்து அறிவை விரிவு செய்து கொள்ள அற்புதமான வாய்ப்பை நூல் தருகிறது!.

இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்(WhatsApp 7010303347)
மன்னார்குடி 8903105814
rajueasudoss@gmail.com