தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்

தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்




“ராகுல் ராம் விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்தது.”

தமிழ்செல்வி, “ராம் குழந்தையை திட்டாதே டா” என்றார்

அக்கா, “நீ சும்மா இரு, கஷ்டப்பட்டு இவனை G.E சேர்த்து, கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணம், பயணக் கட்டணம் எனக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். இவன் என்னவென்றால் எளிதாக இரண்டு தாள் அரியர் வந்துள்ளது எனச் சொல்றான். அதுவும் இல்லாமல் இப்போழுது மறுமதிப்பீடு செய்யக் கட்டணம் கொடுங்கள் எனக் கேட்கிறான். நான் களாவாடிக் கொண்டு தான் வர வேண்டும். இவன் ஓழங்காக எழுதியிருந்தால் தேர்வாகி இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து என புலம்பிக் கொண்டிருந்தான்.

அத்தை, “நான் எல்லா தேர்வும் நல்லா எழுதினேன்.” எங்க. பேராசிரியர் கூட தேர்வு தாளை இணையவழியாக சரிபார்த்து 85 மதிப்பெண் வரும் எனச் சொன்னார்கள். மறுமதிப்பீடு கட்டணம் கட்டு என சொன்னார்கள். அதனால் தான் கேட்கிறேன்.

“அப்பாவை கட்டணம் கொடுக்க சொல்லுங்க அத்தை”. நான் என்ன எழுதினேன் என எனக்கு தானே தெரியும் என ஆவேசமாக அவன் பேசியது, தமிழுக்கு தன்னுடைய பிம்பமாக அவன் காட்சி தருவது போல் இருந்தது.

அவளின் நினைவலைகள் சற்றே பின்நோக்கி சென்றது.

“ல்* பல்கலைக்கழகத்தில் *வெட்டியியல்” பட்டயம் படிக்க ஆர்வம் வந்த காரணம், ஒரு பயிலரங்கில் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மூத்த தோழர்களாக இருக்கிறார்கள் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டு அந்த எழுத்துகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க சிலர் முன் வரவேண்டும் என மூத்த தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

“பேசும் மொழி பல உண்டு. ஆனால் எந்த மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளதோ அதுவே நீடிக்கிறது” என்றார்.

“ஜாங்கிரி எழுத்துக்களை” வருங்கால தலைமுறைக்கு சொல்லித் தரலாம் என் ஊக்கப்படுத்தினார்கள். அந்த பயிலரங்குக்கு பின் தமிழும், சகதோழமைகளும் “ஜாங்கிரி எழுத்துக்களை” பள்ளியில் சென்று கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

பள்ளியில் சென்று கற்றுக் கொடுப்பதை தொடர் செயலாக செய்ய எண்ணியதால் “ல்* பல்கலைக்கழகத்தில் பட்டயம் படிப்புச் சேரலாம் என தமிழும் பயிலரங்கம் கலந்துக் கொண்ட மற்ற தோழமைகளும் முடிவு செய்தனர்.

தொலைநிலைக் கல்வி விண்ணப்பம் அனுப்பி அனைவரும் “ல்” பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, வகுப்புகளில் கலந்து கொண்டு *வெட்டியியல்” தேர்வும் எழுதி முடித்தனர்.

யாரும் எதிர்பாரத கொரானா தொற்று பரவுவியதால் வாய்மொழித் தேர்வும், ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்க எந்த ஒரு அறிக்கையும் “ல்* பல்கலைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.. பெரும்பாலன பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை இணைய வழியாக நடத்தி முடித்தனர்.

“ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, இணைய வழியாக நடத்த இயலாது. “ஒரே நாள் நேரில் வந்து சமர்பித்துச் செல்லுங்கள்” என தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் பெண்கள் பல ஊர்களில் இருந்து “ல்* பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வு அறிக்கையை சமர்பித்து, வாய் மொழி தேர்வு இரண்டையும் முடித்து வந்தனர்.

“தேர்வு முடிவுகள் விரைவில் ‌‌வந்துவிடும்” என்றனார்.

நாட்கள் நகர்ந்தன. “ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, “கொரானா காரணத்தினால் முடிவுகள் தாமதமாகிறது”, என்றனர்.

அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஒரு நாள் அதிசயமாக, “ல்” பல்கலைக்கழகத்திலிருந்து இன்று தேர்வு முடிவுகள் வெளிவரும்.. யாரெல்லாம் தேர்வில் தேர்வு ஆகவில்லையோ அனைவரும் தேர்வு கட்டணம் கட்டி விடுங்கள் என ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக அலைப்பேசியில் தெரிவித்தார்கள்.

என்ன ஆச்சரியம்! . நாம் எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் சரியான பதில் நமக்கு ஒரு போதும் கிடைக்காது. இன்று மட்டும் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன் அழைத்து முன் அறிவிப்பு அளித்தது ஆச்சிரியமாக இருந்தது. அனைவரும் இது எப்படி சாத்தியம் என் கேள்வியோடு காத்திருந்தனர்.

எப்படியோ “ல்” பல்கலைக்கழகத்தில் எழுதிய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகிறது. 47 வயதிலும் படிச்சு நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை நிறைவேற ‌போகும் நாள் என ஆவலோடு மாலை வர போகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தாள், தமிழும், தோழர்களும்

அவர்கள் அளித்த தகவலின்படி, தேர்வு முடிவுகள் வந்தது.

தமிழுக்கு தலையே சுற்றியது. “வெட்டியியல்” தேர்வில் தான் தேர்வாகவில்லை என்ற செய்தி அவளை நிலைக் கொள்ளாமல் செய்தது. அவள் தேர்வாகதது என்பதை விட ஒற்றை எண் மதிப்பெண் பெற்று தேர்வாகவில்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடன் எழுதிய தோழமைகளில் ரதி மட்டுமே தேர்வு! ரதி டிஸ்டிங்ஷன் வாங்கும் பெண்மணி. சிறு வயது முதலே வெட்டியியல் எழுத்துக்களைப் பார்த்து அதன் மேல் மையல் கொண்டவர். *வெட்டியியல்” படிக்க வேண்டும் என்ற அவருடைய ஆர்வம் திருமணம் முடிந்து தான் இந்த பட்டயம் படிப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்டவர். அவரின் மதிப்பெண் அவரை மிகவும் பாதித்தது. தேர்ச்சி தான் ஆனால் அது “என்னுடைய மார்க் இல்லை”. நான் இன்னும் அதிகமாக பெற்று இருப்பேன் என ஆதங்கப்பட்டு கொண்டு இருந்தார்’

இதைவிட மிகவும் சிறப்பான செய்தி என்னவென்றால் தேர்வு எழுதிய சில தோழமைகள் தேர்வே எழுதவில்லை என முடிவுகள் வெளியாகியிருந்தது. ‌

இந்த ஒரு தகவல் தான் தமிழுக்கும் தமிழுடன் தேர்வு எழுதிய தோழமைகளுக்கு ஒரு செய்தியை உறுதிப்படுத்தியது. “ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.” “இது நம்முடைய மதிப்பெண் அல்ல” என்று.

மாணவர்கள் செய்யும் தவற்றை தட்டிக் கேட்கலாம். ஆனால் . பல்கலைக்கழகத்தில் நடந்தால் எப்படி? பதில் யாரிடமும் இல்லை.

மாணவர்கள் அனைவருக்கும் இது மற்றொரு கேள்வியாக எழுந்தது.

தோழர்களிடமிருந்து வரும் அழைப்பு இவள் தோழர்களிடம் ஆலோசனை பெறுவதென மனம் சூழன்று கொண்டே இருந்தது.

இன்று என்று பார்த்து தன் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழல். அங்கிருந்து அலைபேசியில் பேசவும் முடியவில்லை. ஆனாலும் பேசினாள்.

தமிழும் ஷோபாவும் தான் சேர்ந்து வெட்டியியல் தேர்வுக்கு தயாரானார்கள்.

தமிழ் ஷோபாவை அழைத்து என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசித்தனர். அப்போது அவர்கள் நினைவில் உதித்தவர் நிலா மேடம். பக்குவமாக ஆணையர் அவர்களிடம் பேசுவார். ஆதலால் நாம் கான்பிரன்ஸ் கால் செய்து நிலா மேடத்தை பேச சொல்லாம் என‌ முடிவு செய்து அவரிடம் தகவல் பகிர்ந்து கொண்டார்கள்.

நிலா மேடம் அனுபவம், நாம் அனைவரும் சேர்ந்து இமெயில் அனுப்பி வைக்கலாம் என அவரின் தோழர் வழியாக ஆலோசனை பெற்று ஆணையர் மற்றும் “ல்” பல்கலைக்கழகம் அனைவருக்கும் இமெயில் அனுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு இருந்த மறுதேர்வு அட்டவணை தேதி பின் அறிவிக்கப்படும் என‌ சுற்றறிக்கை “ல்” பல்கலைக்கழகத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி.

தமிழ் மறுமதிப்பீடு மற்றும் அரியர் தேர்வு இரண்டிற்கும் கட்டணம் கட்டினாள். பலர் அரியர் தேர்விற்கு பணம் கட்டினார்கள்.

ரதி, மறுமதிப்பீடு செய்ய தேர்வு கட்டணம் கட்டபோவதில்லை.

ஏன் என்று கேட்ட தமிழிடம் எனக்கு பல்கலைக்கழகத்தின் மேலிருந்த நம்பிக்கை போய்விட்டது என்றார்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இது மிக பெரிய பிரச்சனை.

அதே போல் தமிழோடு சேர்ந்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கலாவும் தேர்வு எழுதியிருந்தார். அவரும் தேர்வாக வில்லை. ஆனால் அவர் மறுமதிப்பீடு விண்ணப்பமோ, அரியர் தேர்வு விண்ணப்பமோ எதுவும் செய்யவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்திடம் நமது கோரிக்கையை வைக்கும் போது அனைவரும் சேர்ந்து வைப்பது தானே சரி.

தமிழ் அவர்களை அலைபேசியில் அழைத்து மேடம் தங்களின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை. தாங்கள் நிச்சியமாக தேர்வு ஆகியிருப்பிர்கள் இருந்தும் ஏன் தாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? என கேட்டாள். அதற்கு அவர் நாம் கேட்டாலும் பல்கலைக்கழகத்திலிருந்து நமக்கு சாதகமாக பதில் வராது என்றார்.

ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு தவறு நடப்பதை கேட்காமல் இருப்பதும் தவறு தானே? என கேட்டாள் தமிழ். ஆனால் மனதில் ஒரு ஆசிரியரின் முயற்சிக்கு கூட முற்றுப்புள்ளி வைத்துவிட்டதே பல்கலைக்கழகம் எனவும் தோன்றியது.

ஒருபக்கம் “வெட்டியியலை காப்போம்”. ஜாங்கிரி எழுத்துக்களை அனைவரும் கற்க வேண்டும். மொழி வளர்ப்போம் என பிரசங்கம் செய்வது. மறுபுறம் “வெட்டியியல்’ படிக்கும் மாணவர்களை வேடிக்கையாக எடுத்துக் கொள்வது. இதுவே “திங்கிலம்” படிப்பு‌ என்றால் ஒரு ஈர்ப்பு. ‘திங்கிலம்” பேசினால் முதல் உரிமை.

ஒப்பீடு எழுத்துக்கள் தெரிந்தால் தானே பழமையை உணர முடியும். இதை “ல்” பல்கலைக்கழகத்திற்கு நாம் சொல்லி தர வேண்டுமா?. “வெட்டியியல்” ஆர்வாலர்களை இப்படி மூடக்க என்ன காரணம். இதற்கும் அவர்களுக்கு பதில் இல்லை.

அதே சமயம் ஜாங்கிரி எழுத்துக்களை கல்வி வழியே கற்காமல் புத்தகங்கள், ஆராய்ந்து கற்வர்களே பலர்.

சில சமயங்களில் இப்படி தோன்றினாலும் சமூகம் ஒரு தாளை அதன் மதிப்பீடுகளை வைத்து தானே அவர் கற்றலை உறுதி செய்கிறது. இதில் எப்போது மாற்றம் வரும்.

மனம் சிந்தனைகளை சிதறிக் கொண்டேயிருந்தது. எப்படியும் தேர்வு கட்டணம் கட்டியாகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரின் தவறால் தவறு நடக்க சாத்திய கூறுகள் இருக்கலாம். நம் முயற்சியை கைவிட வேண்டாம், முயற்சி திருவினையாக்கும்., என தொடர்ந்து இமெயில், மெஸேஜ், அலைபேசி என கோரிக்கையை தமிழ் “ல்” பல்கலைக்கழகத்தின் முன் வைத்து கொண்டே இருந்தாள்.

ஒரு நல்ல பேராசிரியர், துணை வேந்தர் துணையுடன் அந்த முயற்சிகள் தொடர்ந்துக் கொண்டு இருந்தன,

அதே நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுவன் ரித்விக், சிறுவயது முதல் மாநில முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர்களால் மற்றும் சமூகத்தால் மூளை சலவை செய்யபட்டவன் கொரானா காரணத்தால்,சமீபத்தில் 10வது 12வது தேர்வு ரத்தான செய்து கேட்டு பல நாட்கள் உளவியியல் சிக்கலில் சீக்குண்டான். தேர்வு எத்தனை பிரச்சனைகளை சமூகதில் உருவாக்குகிறது..

இதற்கிடையில் நம்பிக்கையுடன் காத்திருந்த “வெட்டியியல்” பட்டயம் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் கோரிக்கையும் ஏற்று தேர்வு தாள்கள் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையர் உத்தரவு ‌அளித்தார்.

ஆம் சில தினங்களில் “பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனர்” என்ற அறிவிப்பு வெளியானது” அதிலும் சிலர் தோல்வியை தழுவினர். அதிலும் மறு தேர்வு எழுதிய ஒரு தோழருக்கு தேர்வு எழுதவில்லை என வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி தோழமைகள் மறு தேர்வு எழுதியது நினைவிற்கு வந்தது.

“அத்தை அத்தை அப்பாவிடம் பேசுங்கள்” என்ற ராகுலின் குரல் கேட்டு நினைவு திரும்பினாள் தமிழ்.

ராம், ராகுல் கண்டிப்பாக தேர்வாகி இருப்பான். அப்படி மறுபதிப்பிடும் செய்தும் தேர்ச்சி ஆகவில்லை என வந்தால் பார்த்துக் கொள்ளலாம். சில நேர்ங்களில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என வெளியாகி, அதை பார்த்து தவறான முடிவு எடுத்த மாணவர்களை நாம் இழந்து இருக்கிறோம். அதன் பின் அந்த மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிரிண்டிங்க மிஸ்டேக் என செய்தி தாள்களில் பார்த்துள்ளோம்…..

ஏன் என் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்தது உனக்கு தெரியும் தானே. தேர்வு என்பது ஒரு மதிப்பீடு. அவ்வளவு தான். அதுவே பிள்ளைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக கூடாது. அந்த நிலையில் பிள்ளைகளின் மனநிலை சார்ந்தே அவர்கள் அதை வெளிப்படுத்த முடியும். உளவியல் ரீதியாக சிந்தித்து பார்த்தால் பிள்ளைகளின் நிலையை நாம் உணர முடியும்.

ஏன் சமீபத்தில் இணைய வழி வகுப்பு, இணைய தேர்வு என சிறு வயது குழந்தைகள் mute செய்துவிட்டு விளையாடியதையும், கல்லூரி மாணவர்கள் ஒப்பன் புக் தேர்வுயென பார்த்து எழுதியதை நாம் பார்த்ததை மறந்துவிட்டாயா? அப்போது எங்கு சென்றது இந்த தேர்வு முறை வரைமுறைகள் டா…

“மதிப்பெண்” என்பது நமது வயது போல நம்பர் தான்டா. ஆனால் நம் உள்ளுணர்வு நம்மை “முயற்சி செய்” என சொல்லும் போது முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்.

“ராகுலின் உறுதி சொல்கிறது அவன் பாஸ்” என்று என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அத்தை என தமிழை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ராகுல்.

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு



Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.

கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.

அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.

உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.

தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.

https://www.ndtv.com/opinion/are-muslim-girls-excluded-from-beti-bachao-beti-padhao-2760357
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

தேர்வுகளை ரத்து செய்வது சரியா.. – ஆயிஷா இரா. நடராசன்

தேர்வுகளை ரத்து செய்வது சரியா.. – ஆயிஷா இரா. நடராசன்

இந்தியாவின் பிரதமர் மோடி 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்திருக்கிறார். இதனை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் பரவல் அதிகரித்து வருவதால்.. மாணவர்கள் உயிர் பாதுகாப்பு கருதி எடுத்த நடவடிக்கை சரிதான் என்று வாதிடுகின்றனர். ஒரு…
காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி  – பேரா. நா. மணி

காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி  – பேரா. நா. மணி

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் துணைவேந்தராக வரவேண்டும் எனில், அவர் ஒரு புகழ்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருக்கிறது. தேர்வாளர்கள், அந்த நியமனதை கண்ணுறுவோர் என, எல்லோருக்கும் அதில் ஒரு மையல் அல்லது…