உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்

உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்




நொடிதனில் கடந்தவை
முடிவற்றுக் கிடந்திட

நிமிடத்தில் கடந்தவை
திரும்பிடா நிலைதொட

நாள் பொழுதில் கடந்தவை
மீளாமல் உறங்கிட

வாரத்தில் கடந்தவை
வாராமல் மறைந்திட

மாதத்தில் கடந்தவை
காததூரம் அடைந்திட

வருடத்தில் கடந்தவை
வரும்திசை மறந்திட

நூற்றாண்டில் கடந்தவை
காற்றொடு கலந்திட

நிரந்தரம் என்று ஒன்றல்ல
நிகழ்காலத்தைத் தவிர

தோற்றது நீயல்ல
தோல்விகள் முடிவல்ல

நேற்றோடு நிறைவல்ல
நேரமும் குறைவல்ல

இனியும் தாமதமா…..
இலட்சியம் உயிர்கொள்ள….?

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
9840308787
acuhealerpriya@gmail.com