ஒரு இறுதிச்சடங்கும் ஒரு மரணமும் குமார் ஷிரால்கர் (1948-2022) – தமிழில்: கி.ரமேஷ்

ஒரு இறுதிச்சடங்கும் ஒரு மரணமும் குமார் ஷிரால்கர் (1948-2022) – தமிழில்: கி.ரமேஷ்




எளிமை என்றால்…
நட்பு என்றால்…
அர்ப்பணிப்பு என்றால்…

ஒரு இறுதிச்சடங்கும் ஒரு மரணமும்
குமார் ஷிரால்கர் (1948-2022)

அது ஒரு விளக்க முடியத தருணம். குமாரின் அசைவற்ற உடல் கீழே இருக்க, சுற்றிலும், பழங்குடி மக்களும், பழங்குடி அல்லாதவர்களும், நெருங்கியவர்களும் பெரும் எண்ணிக்கையில் சுற்றிக் கூடியுள்ளனர். தமது வாழ்நாளில் அரை நூற்றாண்டை அவர் யாருடன் செலவழித்தாரோ அந்தப் பழங்குடியினர் இப்போது உண்மையை ஏற்கத் தயாராக இல்லை. பெண்கள் ஒரே குரலில் புலம்பினர், ‘குமார்பாவு பரத் யா’. குமார் அண்ணா திரும்ப வாருங்கள். அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களில் ஓரிருவர்தான் அவரது நேரடி ரத்த சொந்தங்கள்.

அந்தக் கூட்டு அஞ்சலியில் ஒவ்வொருவரும் அவரது இழப்பைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்தனர். அங்கு ஒரு தெளிவான கடின நிலையும், தெளிவற்ற சக்தியும் நிரம்பியிருந்தது. அந்த விதைகள், இப்போது ஓய்வு கொண்டிருப்பவரால் அவர்களிடையே தூவப்பட்டன. அந்த அசைவற்ற உடலும், ஆன்மாவும், அருகே நின்று கொண்டிருக்கும் நானும் வெறும் உடல்கள்தானா?

நான் அந்த நிலையற்ற சிந்தனையை அடக்குவதற்கு முன்னால், நீண்ட காலமாக குமாருக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜெய்சிங் மாலி தனது நடுங்கும் கரங்களால் மைக்கை எடுத்துப் பேசத் தொடங்கினார். “தோழர் . . .” என்று அழைத்து நிறுத்தினார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் உறுதியற்று, சரியான சொல்லைத் தேடிக் கொண்டிருந்தார் என்று சந்தேகப்படக்கூடும். இல்லை. அவர் குமாரைக் குறிப்பிடவில்லை.

மராத்தியில் காம்ரேட் என்ற சொல்லுக்கு ஒருமை, பன்மை இரண்டும் பொருந்தும். ஜெய்சிங் எங்களிடம்தான் பேசிக் கொண்டிருந்தார். “குமார்பாவுக்கு நாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் இது.” தொடக்கத்தில் ஏற்பட்ட தயக்கத்தை அவரால் விட முடியவில்லை. பிறகு மேலும் சரியான சொற்களைத் தேடி எடுத்துக் கொண்டு அவர் தொடர்ந்தார். “நாம் இப்போது அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யப் போகிறோம். அவரது உடலுக்கு எரியூட்ட நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இங்கு கூடிய அனைத்துப் பழங்குடியினரும், ”அவர் எங்களில் ஒருவர். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தின்படி அவருக்கு இறுதிச் சடங்கு செய்வோம். எனவே நாங்கள் முடிவெடுத்து விட்டோம் . . .”

இப்போது அவரது சொற்கள் மேலும் அளவுடன் இருந்தன, உறுதியான குரலில், “நாங்கள் அவரைப் புதைப்போம், குமார் உடலை எரிக்க மாட்டோம்.”

நான் ஸ்தம்பித்துப் போனேன். நேர்மையாகச் சொல்கிறேன், அவர் சொல்வதை ஜீரணித்துக் கொள்ள எனக்கு சிறிது நேரமாயிற்று.
”தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். அவர் எங்களுக்கு உரியவர்”. ஜெய்சிங் இறுதியாகச் சொன்னார்.

அனைவரும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அனைவரும் ஒரு பெரும் கலாச்சாரத் தாவலை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் தோழர். பி.டி.ரணதிவே பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தது. அதில் ஏற்கனவே ஆறு-ஏழு அடிக்குக் குழி தோண்டப்பட்டிருந்தது. குமாரின் உடல் லால் சலாம் என்ற கோஷத்துடன் குழியைச் சுற்றி சில சுற்றுக்கள் வந்த பிறகு குழிக்குள் வைக்கப்பட்டது. அதற்கு குறியீடான முறையில் வேகவைக்கப்பட்ட அரிசியும், வெல்லம் கரைத்த தண்ணீரும் ஊட்டப்பட்டது. பின்னது பழங்குடியாகப் பிறந்த ஒருவருக்கு மதுவாக இருக்கும். குமாருக்காக ஒரு சமரசம் செய்யப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவரும் திரும்பி நின்று குழிக்குள் ஒரு கை மண்ணைப் போட்டோம். அவர் என்னவாக வளருவார்?

குமார் ஒரு பிராமணனாகப் பிறந்தவர். அவர் ஒரு பிராமணனாக இறக்கவில்லை. அவரது பெற்றோரின் வீடு ஒரு பகுதி ஆச்சாரமானதாகவும், ஒருபகுதி முற்போக்காகவும் இருந்திருக்க வேண்டும். அந்த மக்கள் வாழும் முறையில் ஏரளமான மதச்ச்சார்பின்மை நிகழ்ந்துள்ளது.

குமாரின் இறுதிச்சடங்கு என்னை சிந்திக்க வைத்தது. ஒரு பிராமணனோ, ஆசாரமானவரோ, இல்லையோ ஒரு மகாராஷ்டிரர் ஒருபோதும் இறந்த பிறகு புதைக்கப்பட மாட்டார். இத்தகைய விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவோ, நிறைவேற்றப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதேயில்லை. ஒருவர் தனது உடலை மருத்துவக் கல்விக்கும், பரிசோதனைக்கும் தானம் கொடுக்க விரும்புவார். அந்த விருப்பத்தை யாரும் கோபமாகப் பார்ப்பதில்லை.

குமாரின் உடலைப் புதைக்கும் அந்த இறுதிச் செயல்பாடு போராட்டம் என்ற நெருப்பில் புடம் போட்ட ஒருமைப்பாடு. குமார் தனது கலாச்சாரப் பையையும் தன்னுடன் கொண்டு சென்றிருந்தால் அது புடம் போடப்பட்டிருக்காது.

குமாரின் பூர்வீக வீடு மிராஜ் நகரத்தில் இருக்கிறது. அந்நகரம் பொறாமைப்படும் வகையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நடைமுறைப்படுத்துவதற்கும், அவ்வப்போது வகுப்புவாத மோதல்கள் நடைபெறுவதற்கும் பெருமை கொள்வதாகும். குமாரின் வீடு பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது. அவர் இயக்கத்தில் இணைந்து நந்தர்பாரில் பழங்குடியினர் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும், அந்தப் போராட்டத்தை மெதுவாக பல்வேறு ஒடுக்குமுறைகளையும், சுரண்டல்களையும் உருவாக்கும் இந்த முறையைத் தூக்கியெறியும் போராக மாற்றவும் தொடங்கிய போது அவர் வழக்கத்தால் அவரிடம் கொடுக்கப்பட்ட கலாச்சாரப் பையை உதறத் தொடங்கினார். அவர் தனது பாரம்பரிய வீட்டை விற்று விட்டுத் தனது தாய்க்காக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அவர் எப்போதாவது சாதாரணக் காலத்தில் (அது அவருக்கு மிகவும் அரிது) கட்சியிலிருந்து விடுப்புப் பெற்று (அவர் முழுநேர ஊழியர்)அவரது தாய்க்குத் தேவைப்படும்போது சேவகம் செய்யச் செல்வார். சானடோரியத்தில் இருந்த அவரது மூத்த சகோதரிக்குச் சேவை செய்யவும் அவர் கட்சியிலிருந்து விடுப்புப் பெற வேண்டியிருந்தது. இந்த உதவியாளரின் வேதனைகளும், வலிகளும் முழுதாக அவரது சொந்த விஷயம். மற்றவர்களின் வலிகளையும், பிரச்சனைகளையும் கூட அவர் சொந்த விஷயமாக்கிக் கொண்டார். அவர் தனக்கென்று இருப்பதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள விரும்பினார், அவருக்கு மிகச் சிறிய தேவைகளே இருந்தன.

அவர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் நான் பயன்படுத்தாத ஒரு பழைய செருப்பைக் கோரினார். நான் மிகவும் நொறுங்கிப் போனேன். அவர் தனது செருப்பை உடைந்து போகும் வரை பயன்படுத்தியிருந்தார். அதை இனியும் செருப்பு என்று கூற முடியாது. நான் புதிதாக ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறினேன். அவர் உறுதியாக மறுத்து விட்டார். வெறுங்காலுடனேயே திரும்புவதாக மிரட்டினார். நான் சரணடைந்தேன்.

குமாரின் திருமண வாழ்வு மிகவும் குறுகியது. மிகவும் குறுகியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். நான் ஒருமுறை அது பற்றி அவரைத் துருவிய போது, அவர் சொன்னார், “அரே. நீ அதில் நிறைய நேரத்தை வீணடிக்க வேண்டும். எனக்கு செய்வதற்கு அதைவிட நல்ல காரியங்கள் உள்ளன” என்று எளிதாகச் சொல்லி விட்டார்.

அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரும் அவரிடம் பெற்ற சிறு விஷயங்களைக் கூற விரும்பினர். சிலர் அவரிடம் காந்தியைக் கண்டனர், சிலர் பூலேவையும், சிலர் அம்பேத்காரையும் கண்டனர். ஆனால் அவர் கடைசிவரை கம்யூனிஸ்ட் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

நான் அமர்ந்து அவர்களது உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சிந்தனை ஓடியது. அவரது நினைவைப் போற்ற எப்படிப்பட்ட நினைவகத்தை நாம் கட்ட முடியும்? தனிப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்துவது என்பது இயலாதது. எந்த சொந்தப் பொருட்களையும் விட்டுச் செல்வதைப் பழங்குடிக் கலாச்சாரம் உறுதியாக அனுமதிப்பதில்லை. அவரது முதுகுப்பை அவரது உடலுடன் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டு விட்டது.

ஒரு அருங்காட்சியகம் என்பது மிதமிஞ்சிய யோசனை. அந்தப் பழங்குடிக் குடிசைகளில் ஒவ்வொன்றும் அவர் விட்டுச் சென்ற அருங்காட்சியகம்தான்.
களங்கமற்றவையின் அருங்காட்சியகம் என்ற ஒரு நாவலை ஓரான் பாமுக் எழுதியுள்ளார். அந்தப் பகுதியிலிருக்கும் ஒவ்வொரு வீடும் குமாரின் நினைவுகளின் அருங்காட்சியகமே.

நாங்கள் அனைவரும் மாலையில் கிளம்பினோம். இன்று காலை ஒரு தோழர் செய்தி அனுப்பியிருந்தார். இளைஞர் குமார் தனது விதியை இந்தப் பழங்குடியினருடன் பிணைத்துக் கொண்டு 1971 இல் நாராயண் தாக்கரே என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பதினேழு வயதாக இருந்த நாராயண் அவருக்கு உடனடியாக நம்பிக்கைக்குரிய தோழராக மாறினார். குமார் தாக்கரே குடும்பத்தில் ஒருவரானார். அது அவரது முகவரியாக மாறியது. குமாரின் பெயர் தாக்கரேவின் ரேஷன் கார்டில் இடம் பெற்றது. வாக்காளர் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் கூட அந்த முகவரிதான் இடம்பெற்றது.

குமாரின் உடல் கிடைக்கப்பட்டிருந்தபோது, எழுபது வயது நாராயண் அஞ்சலி உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அவர் விலகிச் செல்வதைப் பார்க்கவில்லை. அன்றிரவு நாராயண் பெரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

செவ்வணக்கம் காம்ரேட்

உதய் நார்கர்
செயலாளர்,
மகாராஷ்டிரா மாநிலக்குழு
சிபிஐ(எம்.)

தமிழில்: கி.ரமேஷ்

பேசும் பிரபாகரனின் கவிதை

பேசும் பிரபாகரனின் கவிதை




நகரத்தில் தமிழ் பாடும்  நல்மூதாய் பூச்சி 

நற்றிணை பாடும் நல்மூதாய் !
நகரத்தை பார்க்கலாம் வா என் தோழாய் !
வற்றிய வயிறுக்கும் வாழ் வளிக்கும் !
பணம் கொட்டிட தொழில்கள் வளர்ந்திருக்கும் !
நட்டிய கம்பமும் நகர்திருக்கும் !
நலம் பற்றிய பெயர்கள் மறைந்திருக்கும் !
நகரத்தைக் காணும் நல்மூதாய் !

வயல்களில் கட்டடம் விளையாடும் !
வாய்க்காலில் குடிசைகள் குடியேறும்  !
நதிகளில் நகரங்கள் வழிந்தோடும்  !
அங்கு நச்சுப்புகை நாகரிக துதி பாடும்  !
தண்ணீர் புகுவதற்கு  இடம் தேடும்  !
அந்தத் தார் ரோட்டில் தவளை உயிர் போகும்  !
இயற்கை தண்டனை பெற்ற  இடமாகும்   !
இங்கே மனிதம் அதிகம்   விலைபோகும்
சங்கம் பாடும் புள்ளினமே !
இந்த சங்கடத்தை பாடு மூதாய் இனமே !

ஆறுகளில் நுரைகள் அலை மோதும் !
அந்த  சாயங்களால்  நிலங்கள் நிறம்மாறும் !
ஏரிகளில் வாரியங்கள் வழிதேடும் !
இந்த ஏமாற்றுத் தனத்தால் பல்லுயிர் மாயும் !
புகையில் பூக்கள் மலர்ந்திருக்கும் !
அங்கு புன்னகைக்க மனங்கள் மறுத்திருக்கும் !
பாரு பாரு பழம் மூதாய் !
பத்துப்பாட்டு பாடும் கோப மூதாய் !

நகரம் என்ற ஒரு சொல்வாழும் !
அது நாகரிகம் என்று  தன்னை ஓதும் !
பசுமை என்ற சொல் மாளும் !
அங்கு செயற்கை என்ற செடிகள்  உயிர் வாழும் !
என் பப்பாளியும் முருங்கையும் குணம் மாறும்!
சாப்பாட்டில் நெகிழிகள் விளையாடும் 1
வளர்ச்சி என்னும் இயற்கை அபகரிப்பு !
நகர அங்கீகாரம் என்பது விவசாய கருக்கலைப்பு!
இந்த நரகத்தைப் பாரு தாம்பலமே !
இந்த தரணிக்கு கொடு மனோபலமே !

முனைவர் இரா பிரபாகரன் 

Comrade Bhagat Singh in tamil translated By S. Veeramani தோழர் பகத்சிங் - சிவவர்மா | தமிழில்: ச. வீரமணி

தோழர் பகத்சிங் – சிவவர்மா | தமிழில்: ச. வீரமணி

(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி – சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)

“மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.

சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள். அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.

இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்
பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928 – 1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.

அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.

நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம். முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.

நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்று கூற முடியும்.

விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி …
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.

அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். … கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். … விவசாயிகள் – தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும், இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.

பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com

Muthal Vaguppu Pothuthervu Book By Andanur Sura Bookreview By Era Savithri நூல் அறிமுகம்: அண்டனூர் சுராவின் முதல் வகுப்பு பொதுத்தேர்வு – முனைவர். இரா. சாவித்திரி

நூல் அறிமுகம்: அண்டனூர் சுராவின் முதல் வகுப்பு பொதுத்தேர்வு – முனைவர். இரா. சாவித்திரி




நூல்: முதல் வகுப்பு பொதுத்தேர்வு
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று ஒரு தொடரை மாணவர் எழுதி இருந்தால் தவறாக எழுதி இருக்கிறார் என்று அதனைக்கடந்துவிடலாம் இதையே ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குக் கற்பித்தால் மாணவர்கள் நிலை என்ன? என்ற வினாவின் அடிப்படையில் எழுந்த ஒரு கற்பனைக்கதை தான்” முதல் வகுப்பு பொதுத்தேர்வு  கதையை எழுதியவர் அண்டனூர் சுரா.

ஆசிரியர் தவறாக வரலாற்றைக் கற்பித்த நிலையில் தவறு எனத் தெரிந்து கொண்ட மாணவன் எப்படி அதை சரி செய்ய முயற்சி செய்கிறான் என்பதும் அதில்அவனுடைய மனப் போராட்டமும் உள்ள உறுதியும்  எப்படிக்கதை வடிவம் கொள்கிறதுஎன்பதும் முதல் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிறது.

ஐந்தாம் வகுப்பு மாணவன் வயது அனுபவம், மனநிலை அடிப்படையாக இதை எப்படி அணுகுகிறான் அதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன என்பதெல்லாம் சுவையாகச் சொல்லப்படுவது உண்மைதான். ஆனால் எடுத்த உடன் ஒருசரித்திர ஆசிரியர் இவ்வளவு பிழையான வரலாற்றை க்கற்பிக்க முயல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆசிரியர் சமூகத்திற்கு இழுக்கு அல்லவா .இப்படி ஒரு கதையை எழுதலாமா என்ற பொதுப்புத்தியோடு இருந்தால் இக் கதையைத்தொடர்ந்து படிக்க முடியாது .சிறார் நாவல் என்பது சிறுவர்கள் மனநிலையில் படிக்க வேண்டுமோ என்று சமாதானம் செய்து   கொண்டு கதையைத் தொடர்ந்து படிக்கலாம்.

சிவப்பிரகாசம் சரித்திர ஆசிரியர். தான் சொன்னதை மாணவர்கள் கேட்க வேண்டும் என்கிற ஆதிக்க ஆசிரியர் மனோபாவம் உடையவர். மற்றபடி கற்பித்தல் திறனில் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அவருடைய எழுத்தாற்றல் வகுப்பின் கரும்பலகையில் எழுதி இருந்த தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ற வரிகளில் முழுவடிவம் கொண்டிருந்தது. சிவப்பு ,மஞ்சள் ,பச்சை வண்ண சுண்ணாம்புக்கட்டிகளால் அலங்காரமாக எழுதப்பட்டிருந்த அந்த தொடர் ஆசிரியரின் திறமையைப் பறைசாற்றியது மிகுந்த கவனத்தோடு அவர் வரைந்த தாஜ்மகால் ஓவியம்  பக்கத்தில் பகீரத கவனத்துடன் வரையப்பட்ட சிவாஜியின் ஓவியம் பொறுப்புணர்ச்சியுடன் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்க்கும் போது இவ்வளவு திறமையுடன் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடம் தவறாக இருக்குமா என்ன என்று பொதுப்பார்வை நினைக்க வைக்கும் போது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எம்மாத்திரம் ?

சத்ரபதி சிவாஜியை முழுமையாக உருவாக்கிய திருப்தியில் வகுப்பின் கடைசி வரிசையில் சென்று கரும்பலகையைப் பார்த்தபடி தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்றார். மாணவர்கள் பின்தொடர்ந்து சொன்னார்கள். அடுத்து நம் கதாநாயகன் சுரேந்திரன் எப்படி அறிமுகமாகிறான் பாருங்கள். பார்வைக்கு அவன் பாவமாகத் தெரிந்தான். தலைக்கு அவன் எண்ணை வைக்கவில்லை. மெலிந்த குச்சி போன்ற தட்டான் உடல்வாகு கொண்டவன். அவன் உடுத்தியிருந்த சீருடை அவனுக்குச் சற்றும் பொருந்தாமல் தொள தொள என இருந்தது சிவப்பிரகாசம் அவனது கண்களை கழுகுக் கண் கொண்டு பார்த்தார் அப் பார்வையில் அவன் முகம் ஒடுங்கி நடுங்கி இருந்தது.

வாசிக்கத் தெரியும் தானே! அவன் நடுங்கிக்கொண்டு “வாசிப்பேன சார் .” வாசிக்க வேண்டியது தானே ! தப்பாஎழுதி இருக்கீங்க சார். ஆசிரியர் மேல் முதல் அம்பு பாய்கிறது . 30 வருட பணி அனுபவத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படியாக குற்றம் கடிதல் புரிந்ததில்லை இவன் மட்டும் கேள்வி கேட்கிறான். சிவப்பிரகாசம் உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு  அடேய் நான் எழுதி இருப்பதில் என்ன பிழை கண்டாய் ?எழுத்துப் பிழையா ?சொற்பிழையா? சுரேந்திரன் மார்போடு இறுக்கி கட்டி இருந்த கையை மெல்ல விலக்கி “சரித்திர ப்பிழை சார்” என்று இன்னும் ஓர் அம்பை எய்கிறான் .மற்ற மாணவர்கள் விதிர்விதிர்த்தார்கள் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் தாஜ்மகாலைக்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ன சொல்ல வருகிறேன் .

நேத்து வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான். இன்றைக்கு எப்படி சத்ரபதி சிவாஜி ஆனார்? அக்கேள்வியை அவன் குழந்தைத் தனத்துடன் கேட்டிருந்தாலும் கேட்டலில் ஒரு துடுக்குத்தனம் இருந்தது. கேள்வியில் தடுமாற்றமும் பதற்றமும் இருந்திருக்கவில்லை எனும்போது ஐந்தாம் வகுப்பு மாணவன் அரியணை ஏறிய அரசனாகக் காட்சியளிக்கிறான். சிவப்பிரகாச த்தின் தொடரும் தாக்குதல்கள் மிக பலவீனமானவை.

தஞ்சைப்பெரிய கோயில் பக்கத்தில் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலை இருப்பதுபோல் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கோட்டையை கட்டிய விஜயரகுநாத தொண்டைமான் சிலை இருப்பது போல ஒரு வாதம் செய்வதும் சுற்றுலா புகைப்படங்களைக்காட்டி தாஜ்மகால் பக்கத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இருப்பதால் தான் சொல்வதே சரி என்று தன் கட்சியை நிறுவ முயலும் பரிதாபம் தான் அது .விடுவானா சுரேந்திரன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகில் பெரியார் ஈவேரா சிலை இருப்பதால் கோயிலைக் கட்டியவர் அவரா?

எங்கள் ஊர் நீர் தேக்கத் தொட்டியில் பக்கத்தில் காந்திசிலை இருப்பதால் தொட்டியைக்கட்டியவர் காந்தியா என்று கேட்டவுடன் அவர் கட்டிய பொய்மைக்கோட்டைகள் சரிந்தாலும்  அதிகாரம் பேசுகிறது. சுரேந்திரன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதுபெற்றோர் வந்து மன்றாடியதால் திரும்பவும் சேர்க்கப்பட்டான் தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று 200 முறை எழுதிக்கொடுத்தபின்னரே   அவன் தேர்வுக்கு அனுமதிக்கப் படுகிறான்.

பொதுத்தேர்வுஒரேவினா. 60 மதிப்பெண்கள். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? நான்குமே தவறான பதில்கள். குழப்பத்தில் ஆழ்ந்த சுரேந்திரன் இறுதியில் ஒரு முடிவெடுத்து தேர்வு எழுதினான் . சரியான விடையை எழுதுக  என்ற தொடர் அவனுக்குத் தெளிவைக் கொடுத்ததாக கதை நிறைவடைகிறது. திறமையாக க்கற்பித்தல் வேறு உண்மையாகக் கற்பித்தல் வேறு என்பது இக் கதையின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வரலாற்றுத் திரிபுகள் தொடர்ந்து நிகழலாம் அதை த்திருத்துவதற்கு யாரும் முன்வரவில்லை என்றால் வரலாறு மாறிவிடும். அதைத்தொடர்ந்து தவறுகள் மிகுதியாகும் அபாயம் வரலாம். தவறாகச்சொல்வதை சரி என்று சாதிக்கும் அதிகாரத்தின் குறியீடாக செருக்கு நிறைந்த சரித்திர ஆசிரியரும், உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று உறுதியுடன் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு குரலாக சுரேந்திரனும் படைக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்துக்கும் தண்டனைக்கும் பயந்து மௌனம் சாதிக்கும் மாணவர்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் சமூகத்திற்குக் குறியீடுகளாகப் படைக்கப்பட்டுள்ளனர்  சிவப்பிரகாசம் என்னும் கதை மாந்தர் படைப்பு வெற்றிக்கு அவரைப் பற்றிய அறிமுகம், வர்ணனை, அவர் மனப்பான்மையை  வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றைக் காரணிகளாகக்கூறலாம்.

சரித்திர வகுப்பு எடுக்கையில் பாடத்துடன் தொடர்புடைய மன்னன், மகுடம், மாளிகை, வாள்,உடை, உடைமைகளை வரையாமல் அவர் பாடத்துக்குள் நுழைபவர் அல்லர். அவர் நடத்துவது குறைவாக இருந்தாலும் அவரது மெனக்கெடல் நிறைவானதாக இருக்கும். அதற்கு உகந்ததாக தேர்ந்த கையெழுத்தும் எதையும் நுணுக்கமாக வரைந்து அசத்தி விடும் அசாத்தியமும் அவருக்குக்கை கூடி இருந்தது (பக்கம் 10)

பயந்த மாணவர்களின் செயல், வர்ணனைகள் எதற்கும் பயந்து பழக்கத்துக்கு அடிமையாகிப் போகிற சமுதாயத்தைச் சித்திரமாக்கும் வரிகளாகின்றன. . “மாணவர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல் ஒவ்வொரு ஆசனமாகச்செய்து முடிப்பார்கள்.” (பக்கம் 21) விளைவுகள் பற்றி கவலைப்படாது மேலும் மேலும் தான் நினைத்ததைச்சாதிக்கும் ஆதிக்க மனப்பான்மையைப் பொருத்தமான சொற்களில் வெளிப்படுத்தும் ஆசிரியரின் எழுத்துத்திறம் பாராட்டுக்குரியது.

சிவப்பிரகாசரின் பண்பினை வெளிப்படுத்தும் தொடர்கள் இவை. அப்பள்ளிக்கு வரும் எத்தகைய பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய. பிரச்சினையைத் தீர்த்தும் ,பெரிதாக்க வேண்டிய பிரச்சனையைப் பெரிதாக்கியும் தன் இருப்பைப் பள்ளி சரித்திரத்தில் தக்க வைக்க முடிந்திருக்கிறது. (பக்கம் 30)

தான் நினைப்பதைத் தன் மாணவன் கூற வேண்டும் என்ற மமதையால் அவர் செய்யும் செயல்களை மன உறுதியுடன் எதிர்கொள்கிறான் சுரேந்திரன். ஒவ்வொருமுறையும் அவன் மன உறுதி வெளிப்படுகிறது. தன் தோற்றத்துக்கு யோகா போன்ற கவசங்களை அணிந்து தன்னை பெரிய சக்தியாக காட்டிக்கொள்ளும் நிலை இச்சமூகத்தில் பொய்யும் மெய்யும் இரண்டறக் கலந்து நிற்கின்ற நிலையினைக் காட்டுகிறது.

ஒரு வினை அதன் எதிர்வினை இணைந்து ஒரே ஒரு நிகழ்வாக அமைந்த இச்சிறார் நாவல் 55 பக்கங்களைக் கொண்டுள்ளது. குறியீட்டு இயல் வகையில் அமைந்த இந்த நாவலை சிறார் எந்த அளவில், எந்தவகையில் எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறி .மாணவர்களின் உணர்வுகள் பற்றிக் கவலைப்படாமல் திறம்படக் கற்பித்தல் தொழிலைச் செய்யும் ஆசிரியராக ஒரு ரோபோவையும் உணர்வற்ற ஜடப் பொருளாக மாணவர்களை நினைத்துப் பாடம் நடத்துவதாக வெற்று இருக்கைகளையும் காட்டி இருக்கும் அட்டைப்படம் சிந்தனைக்கு உரியது.

மாணவன் தொடங்கி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருடைய சமூகப் பொறுப்புணர்வை யும் உணர்த்துதல் என்ற அடிப்படையில் இந்த நாவல் வெற்றிபெற்றாலும் குறியீட்டியல் வகை நாவலுக்கு ஏற்ற இன்னும் பொருத்தமான கற்பனையை இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Thozhamai Endroru Peyar Book By Aasu Bookreview By Anbumanivel. நூல் அறிமுகம்: ஆசுவின் தோழமை என்றொரு பெயர் – அன்புமணிவேல்

நூல் அறிமுகம்: ஆசுவின் தோழமை என்றொரு பெயர் – அன்புமணிவேல்




நூல்: தோழமை என்றொரு பெயர்
ஆசிரியர்: ஆசு
வெளியீடு: வாசகசாலை
பக்கங்கள்: 115
விலை: 150

ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யக்கூடும்…
புன் முறுவல் சிந்த வைப்பதாக…
வெடிச் சிரிப்பைப் பற்ற வைப்பதாக…
மெல்லியதாயொரு அழுகையைக் கிள்ளிவிடுவதாக…
கொஞ்சம் பாரமேற்றி வேடிக்கை செய்வதாக…
முடிச்சொன்றை அவிழ்க்கவோ.. தொடுக்கவோ செய்வதாக… இப்படி எதையேனுமொரு அதிர்வைத் தந்து நம்மின் அந்த நேரத்து நொடியைக் கொஞ்சம் காவு கேட்கலாம்.

வாசிக்க முற்படுகையில் நாமாக நிற்பவர்களை வாசித்த பின்பு அதுவாகி நிற்க வைக்கும் ஒரு யுக்தியும் உண்டு. இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தது தான் .. இந்த ” தோழமை என்றொரு பெயர்’.

நடுரோட்டில் தூக்கியெறியப்பட்டு வாகனத்திற்குள் மிதிபட்டுக் கிடக்கும் ஒற்றைச் செருப்பை.. குப்பையில் சேர்த்திருந்தால் அதன் வாதை போக்குமொரு தோழமையை அதற்குத் தந்திருக்கலாமே என்று செருப்பின் வாதைக்குக் கவலையாற்றுகிறார். மண் புழுவின் வலி எழுதுகிறார்.

ஒரு நகரத்துச் சாலையைக் கடக்கக் கூட யாரோ ஒரு துணை நமக்குத் தேவையென்பதும்… ஒரு குருவியின் பறத்தலுக்குக் காற்றின் அவசியமும்.. ஒரு மீன் கொத்தியிடமிருந்து தப்பிப் பிழைக்கவென குட்டையின் பாசிக்குள் ஒடுங்குகிற அந்த மீனுக்கு.. தோழமையைத் தருகிற அந்தக் குட்டையின் அரவணைப்பும்…

ஒரு தோழமையென்பது எங்கிருந்தெல்லாம் நீள முடியுமென்று.. அவரின் அன்றாடங்களில் அவரைக் கடக்கின்ற எதுவொன்றையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

‘எழுதியவை கரை சேர்ந்தும் இந்த நதியை விட்டுப் போக மனமில்லை’ என்ற வரிகளில் எழுத்துக்கும் ஆசிரிருக்குமான தோழமையும்…

இந்த நூலின் மொத்தப் பக்கத்திலுமான வரிகளிலும் சக உயிர்கள் மீதான ஆசிரியரின் பார்வையுமாக.. தோழமை உணர்வுக்குள் வேரோடிக் கிளைத்திருக்கும் இவரின் மனப்பாங்கு பழுத்த பதமாகப் பளிச்சிடுகிறது.

அஃறிணை உயர்திணை தாண்டி நீயோ, நானோ, செருப்போ, எறும்போ, காக்கையோ, குருவியோ, மரமோ, இலையோ உயிர் பேதம் ஏதுமின்றி அத்தனைக்கும்.. ஒரு தோழமைக் கரத்துக்கான அவசியத்தையும் தேவையையும் சொல்லுவதோடு…

இப்படியான அச்சங்களுக்குள் சிக்கிக்கொண்டு மிரண்டு நிற்கும் வாழ்க்கையை.. தோழமை உணர்வோடு இப்படிப் பற்றிக்கொள்கையில் அதே வாழ்க்கை எத்தனை நம்பிக்கைக்குரியதாக மாறிவிடுகிறது என்பதையும்…

துவளும் மனங்கள் விழித்துக் கொள்ளும் விதமாக தன் கவிதைக் கரங்களில் நம்பிக்கை நீட்டியிருக்கிறார். தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் தோழமையைத் தருவதன்றி.. யாருக்குத் தேவையென்று ஆராய்ச்சி தேவையில்லை எனும் வாழ்தலை வாழ்தலாக நுகரும் கலையை தனக்குத் தெரிந்த மொழியின் வழியே பாடமாக்கியிருக்கிறார்.

தெருவே வைதாலும் தினமும் தெரு நாய்களுக்குப் படையலிடும் பாட்டியையும்… எதிர்ப்படும் நாய்களுக்குத் தர வேண்டி பேண்ட் பை நிறைய
டைகர் பிஸ்கட்டுகளோடு அலையும் “பிஸ்கட் தாத்தா” வையும்.. வெஞ்சனத்துக்கென இருக்கும் மிக்சரை வேடிக்கை செய்யும் காக்கைக்கும் பங்கு வைக்கும் சித்தாளையும்… நானறிவேன்.

காக்கைக் குருவி ஆடு மாடுகளுக்கு வீட்டு வாசலில் தண்ணீர்த் தொட்டி நிரப்புவதும்… எறும்பு தின்ன வேண்டி பச்சரிசிக் கோலமிடுவதுமாக.. நமது மூத்தோரையும் நாமறிவோம்.

இதுவெல்லாம் தானே தோழமை. இவர்களெல்லாம் தானே தோழமையின் ஊற்று. வாழ்க்கைப் பாதையின் நீண்ட நெடிய பயணத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தோழமைச் சங்கிலியால் மட்டுமே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்திய வகையில்..

இனி.. என்னைச் சுற்றிலுமான எந்தவொரு உயிரின் தவிப்பையும் கவனிக்கத் தவறக் கூடாது என்ற நினைப்பை வலுவாக்கியிருக்கிறது..
இந்த நூலின் வாசிப்பு. எனக்குப் பிடித்ததென்று எந்தவொரு கவிதையையும் நான் இங்கு எடுத்து நீட்டப்போவதில்லை.

தோழமை நீட்டுவதற்குப் பாகுபாடு தேவையில்லை என்றுரைக்கும் மொத்தக் கவிதைகளிலும் ஒன்றிரண்டை உறுவித் தந்து.. இந்தப் படைப்புக்குள் ஒரு பாகுபாட்டினைப் புகுத்தாது..
அத்தனை கவிதைகளோடும் தோழமையாகிறேன் நான்.

Jai Bhim Poem by Pichumani பிச்சுமணியின் ஜெய்பீம் கவிதை

ஜெய்பீம் கவிதை – பிச்சுமணி




இந்த தேசத்தின்
எதேனும் ஒரு ஊரில்
எந்த ஒரு தெருவிலும்
ஒடுக்கப்பட்ட வரின் குரலை
பாதிக்கப்பட்டவரின் சொல்லை
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
மனிதம் நேசித்து கேட்டு கொண்டிருப்பான்
ஒருவன்.

அவன் வேறு யாருமில்லை
அவன் பெயர் தோழர்.
உரிமை
சம உரிமை
சமூக நீதி
எதிலும் அந்த
தோழனின் கைகளில்
செங்கொடி உயர்ந்து பறக்கும்.

தேசம் காக்கும் போராட்டமோ..
தெருக்களின் பிரச்சினையோ..
இரண்டிலும் அவனிருப்பான்.
அவன் பொதுவுடமைக் காரன்.
காற்றைப்போல்
இந்திய தேசத்தில் அவன்
கலந்து பல நூற்றாண்டு
ஆகிவிட்டது.

கடுகளவோ
கடலளவோ..
கவலை பிரச்சினை
தீர்வு தேடி..
காயங்களை
நெஞ்சில் சுமந்து
புன்னகை யோடு
வணக்கம் தோழர்
சொல்லும் எளியவர்கள்
நெஞ்சில் நிறைந்து
நிற்கிறான்..
பொதுவுடமைக் காரன்.

இழக்க ஏதுமற்ற
எளியவனே
இரக்கமற்ற
அரசதிகாரத்தை
எதிர்த்து நிற்பான்

எளியவனும்
பொதுவுடைகாரனும்
வேறு வேறல்ல
உரக்க சொல்வேன்
ஜெய்பீம்
லால் சலாம்…

(2)
ஆகாயத்தில்
அசந்துறங்கும் ஆதவனை
நீர் தாளம் தட்டியெழுப்புகிறாள்
கடல் அன்னை.

(3)
ஓடிப்பிடித்து விளையாடினோம்
நானும் அலையும்
ஓய்ந்து போன கால்கள்
இளைப்பாற இடந்தேடுகிறது
ஓய்வறியா அலையோ
வா..வா.. என்கிறது…

நூல் அறிமுகம்: காம்ரேட்  (சிவப்பின் வசீகரம்) – மு. கோபி சரபோஜி

நூல் அறிமுகம்: காம்ரேட்  (சிவப்பின் வசீகரம்) – மு. கோபி சரபோஜி

காம்ரேட் யஷ்பால் முதல் பதிப்பு: 2006 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 தொலைபேசி :044-24332424 விலை ரூ .50/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kamrate-9241/ ”காம்ரேட்” என்ற உச்சரிப்புக்கு ஒரு வசீகரம் இருக்கும். தோழர்களுக்கு அது இன்னுமொரு படி…
நூல் அறிமுகம்: யஷ்பாலின் *காம்ரேட்* – குமரேசன் செல்வராஜ்.

நூல் அறிமுகம்: யஷ்பாலின் *காம்ரேட்* – குமரேசன் செல்வராஜ்.

நூல்: காம்ரேட் ஆசிரியர் - யஷ்பால் விலை: ₹50.00 பதிப்பகம் - பாரதி புத்தகாலயம். புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kamrate-9241/ விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தின் புரட்சி இயக்க வரலாற்றை இந்த நாவலில் திரை விலக்கிக் காட்டுகிறார் யாஷ்பால். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தலைமையேற்று நடத்திய துணிகரமான…
முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து கம்யூனிச சமூகத்தை நிறுவ முயற்சிப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் – ஜோடி டீன் | தமிழில்: தா.சந்திரகுரு

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து கம்யூனிச சமூகத்தை நிறுவ முயற்சிப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் – ஜோடி டீன் | தமிழில்: தா.சந்திரகுரு

2016ஆம் ஆண்டு நேர்காணல் நேர்காணல் நடத்தியவர்: சக் மெர்ட்ஸ் 2016 ஜனவரி 23 அன்று சிகாக்கோ, திஸ் இஸ் ஹெல்! என்ற ரேடியோ நிகழ்ச்சியில் ஜோடி டீனுடன் நடத்தப்பட்ட உரையாடலின் தமிழ் எழுத்தாக்கம். சக் மெர்ட்ஸ்: அரசியல் கட்சியொன்றின் மூலமாக ‘வால்ஸ்ட்ரீட்டை…