உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சம் கட்டுரை – அ.பாக்கியம்

உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சம் கட்டுரை – அ.பாக்கியம்




சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் வருகிற 16-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான பிரதிநிதிகளை இறுதிப்படுத்தி விட்டார்கள்.

2296 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பிரதிநிதிகளில் நேரடி களத்திலும் உற்பத்தி துறையிலும் பணியாற்றக் கூடியவர்கள் 771 பேர். அதாவது 33. 6 சதவீதம் பங்கு பெறுகிறார்கள்.

192 பிரதிநிதிகள் 8.4 சதவீதம் தொழிலாளர்கள்.
85 பேர்கள் 3.7 விவசாயிகள்.
266 பேர் தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள்.
இவர்கள் 11.6%.

பெண் பிரதிநிதிகள் 619 பேர்.
இது கடந்த 19வது கட்சி காங்கிரசை விட 68 பேர் அதிகம்.

சீனாவில் உள்ள 40 சிறுபான்மை குழுக்களில் இருந்து 264 பிரதிநிதிகள் அதாவது 11.5 சதவீதம் பங்கேற்கிறார்கள்.

2296 பிரதிநிதிகளில் சராசரி வயது 52.2 ஆகும்.
இவர்களில் 59.7% பிரதிநிதிகள் 55 வயதுக்கு குறைவானவர்கள்.
18.9% பிரதிநிதிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மொத்த பிரதிநிதிகளில் 52.7 சதவீதம் முதுகலை பட்டப்படிப்புகளையும் 36 சதவீதம் இளங்கலை பட்டங்களையும் பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 9கோடியே 60 லட்சம் கட்சி உறுப்பினர்களில் இருந்து இந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எதுமேதிகளில் 2 224 பேர் சீர்திருத்தத்திற்கு பிறகு கட்சியில் இணைந்தவர்கள்.

பிரதிநிதிகள் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். பல்வேறு வழிகளில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களைப் பற்றி மக்களிடம் கருத்து கேட்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் கருத்தும் அறியப்பட்டது.

உட்கட்சி ஜனநாயகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் உட்பட தங்கள் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சீனாவில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு தொழில்களில் பரந்துபட்ட பகுதிகளை பிரதிபலிக்கின்றனர்.

இது மேற்கத்திய ஜனநாயகத்திலி ருந்து வேறுபட்டது.

சீனாவின் உட்கட்சி ஜனநாயகம் கவனமாக ஆலோசனை செய்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதாகும். மேற்கத்திய ஜனநாயம் பெரும்பாலும் எளிய வாக்குகளை உள்ளடக்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் நிலைபாடு, திறன், செயல்திறன் வறுமை நிவாரணத்தில் பங்கேற்பது, கோவில் 19 எதிர்த்து போராடுவது பேரிடர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பது, ஆகியவற்றில் பங்காற்றியவர்களை பரிசோதித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

புள்ளி விவர கணக்கின்படி 710 பிரதிநிதிகள் மாகாண அளவிலான கார்பஸ் மற்றும் கௌரவ பட்டங்களை பெற்றவர்கள்.
92.1 பரிதிநிதிகள் முன்னணியில் பணியாற்றுகின்றனர்.

இருபதாவது கட்சி காங்கிரஸ் மிகவும் இன்றியமையாதது. சீனாவை அனைத்து வகையிலும் நவீன சோசலிச நாடாக உருவாக்கி இரண்டாம் நூற்றாண்டு இலக்கை அடையும் பயணத்தில் உள்ளது. எனவே தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது..

– அ.பாக்கியம்

நன்றி: GLOBAL TIMES

https://www.globaltimes.cn/page/202209/1276173.shtml?utm_source=pocket_mylist

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி



(பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், தந்தை பெரியார் அவர்கள் ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)


தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே ! | வினவு

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம். இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன. ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொறுப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைத்தால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம்.

 ஆகவே இந்தக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுலபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.

(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு  எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி

ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி




ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த சமயத்தில் தேசிய இயக்கத்தின் அடையாளமாக இருந்த மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, சுதந்திர தினத்தைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்ததுடன், அனைத்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களும் காவிக் கொடியைத்தான் (Bhagwa Jhanda) வணங்கிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கே.பி. ஹெட்கேவார் அனைத்து ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

இன்று வரையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள்  காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல் ஜனநாயகத்தின் மீதான தங்கள் பற்றுதலைக் காண்பிப்பதற்காக மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கலாம். அதேபோன்றே இஸ்லாமியர்களின் மதராசாக்களில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கோரிக் கொண்டிருக்கலாம். எனினும் ஆர்எஸ்எஸ் இயக்கமானது மூவர்ணக்கொடியை வெளிப்படையாகவே கண்டித்தும், கேவலப்படுத்தியும்தான் வந்திருக்கிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர்களின் கீழ்க்கண்ட அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

1946 ஜூலையில் நாக்பூரில் நடைபெற்ற குருபூர்ணிமா வைபவத்தின்போது கோல்வால்கர் பேசியதாவது:

“பாரதத்தின் கலாச்சாரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது காவிக் கொடி (saffron flag)தான். அது கடவுளின் உருவகம். இந்தக் காவிக் கொடியின் முன் ஒட்டுமொத்த தேசமும் முடிவில் தலைவணங்கிடும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.”

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளிவரும் ஆர்கனைசர் என்னும் அதன் ஆங்கில இதழில் 1947 ஜூலை 17 தேதியிட்ட இதழில் தேசியக் கொடி என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், மூவர்ணக்கொடியைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்கள். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் நிர்ணய சபையில் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதை மூர்க்கமான முறையில் எதிர்த்தே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:

“இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாகும். கொடி என்பது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்துஸ்தானத்தில் ஒரேயொரு தேசம்தான் இருக்கமுடியும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான உடைசலும் இல்லாது இருந்துவரும் இந்து தேசம்தான். இதுவே நம் தேசம். இதை அடையாளப்படுத்தக்கூடிய விதத்தில்தான் கொடியும் இருந்திட வேண்டும். அனைத்து சமூகத்தினரின் ஆசைகளுக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் ஒரு கொடியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிடும், அது தேவையுமில்லை. அது முற்றிலும் அவசியமற்றதுமாகும். .. ஒரு தையல்காரரிடம் நாம் நமக்காக ஒரு சட்டையையோ அல்லது ஒரு கோட்டையோ தைப்பதற்கு உத்தரவு வழங்குவதுபோல் நாம் நம் கொடியைத் தெரிவு செய்வதற்கு உத்தரவு வழங்க முடியாது.

இந்துஸ்தானத்தில் உள்ள இந்துக்கள் ஒரு பொதுவான நாகரிகம் (civilization), கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், ஒரு பொது மொழி மற்றும் பொது பாரம்பர்யங்களைக் கொண்டிருந்ததைப்போல, அவர்கள் ஒரு கொடியையும் பெற்றிருந்தார்கள். உலகில் மிகவும் உன்னதமான, மற்றும் பழைமையான கொடியைப் பெற்றிருந்தார்கள். உலகில் அவர்களின் நாகரிகம் எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு அவர்களின் கொடியும் பழைமையானது. அந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் தேசியக் கொடியின் பிரச்சனையையும் அணுகிட வேண்டும். மாறாக இப்போது செய்திருப்பதைப்போன்று ஏனோதானோவென்று அணுகிடக்கூடாது.   அந்நிய படையெடுப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தற்காலிக துரதிர்ஷ்டங்கள் மற்றும் அனைத்துப் பயங்கரங்களும் சேர்ந்து இந்துக்களின் தேசியக் கொடியை ஓரங்கட்டிவிட்டது. ஆயினும் அந்தக் கொடி பழைமையான மகிமையையும் மகத்துவத்தையும் மீளவும் பெறும் என்று அனைவருக்கும் தெரியும். கொடியின் வர்ணம், கிழக்கே சூரியன் உதயமாகும்போது மெதுவாக ஆனால் கம்பீரமாகத் தோற்றத்தை அளிக்கும்போது என்ன வர்ணத்தை அளிக்குமோ அதேபோன்ற நிகரற்ற வர்ணத்தில், தேசத்தின் இதயத்தையும் ஆத்மாவையும் மிகவும் நேசிக்கும் விதத்தில் இருந்திடும்.

இதே வழியில், உலகத்திற்கே உயிரூட்டக்கூடிய சக்தியாக விளங்கும்,  இத்தகைய மதிப்புவாய்ந்த நம் கொடியை நம் முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். சூரியனைப்போன்றே புகழ்பெற்ற வசீகரத்துடனும், பெருந்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும் உள்ள விநோதமான நம் கொடியைக் காண முடியாதவர்கள் அல்லது பாராட்ட முடியாதவர்கள் எதுவும் அறியாதவர்களாகவோ அல்லது தீங்கிழைப்பவர்களாகவோதான் இருப்பார்கள். இந்தக் கொடிதான் இந்தக் கொடி மட்டும்தான் இந்துஸ்தானத்தின் உண்மையான தேசியக் கொடியாக இருக்க முடியும். அதுதான், அதுமட்டும்தான் தேசத்திற்கு ஏற்புடைய ஒன்றாக இருந்திட முடியும். பொதுமக்களின் மத்தியில் இதனை வலியுறுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் நிர்ணயசபை அவர்களின் விருப்பத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவது நல்லது.”

இந்தியா சுதந்திம் அடைந்த சமயத்தில், இந்திய தேசம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் தில்லி, செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான  ஆர்கனைசர் இதழில் (1947 ஆகஸ்ட் 14 தேதியிட்டது), மூவர்ணக்கொடியை இழிவுபடுத்தும் விதத்தில் எழுதியிருந்ததாவது:

“விதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்துள்ளவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனாலும் அது எந்தக்காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடியதாகவோ, சொந்தம் கொண்டாடக்கூடியதாகவோ இருக்க முடியாது. மூன்று என்கிற வார்த்தையே தீங்கு பயப்பதாகும். மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயமாக ஒரு மோசமான தீய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.”

எனவே, ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி இந்தியத் தேசியக் கொடி எந்தக் காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல. அது ஒரு மோசமான சகுனம் ஆகும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.

நாடு சுதந்திரம் பெற்றபின்னரும்கூட,  மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியே ஏற்க ஆர்எஸ்எஸ் மறுத்தே வந்திருக்கிறது. கோல்வால்கர், ‘சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of Thoughts’) என்னும் தன்னுடைய நூலில் மூவர்ணக் கொடியைத் தேசியக்கொடியாகத் தெரிவுசெய்திருப்பதை, கண்டித்து எழுதியிருப்பதாவது:

“நம்முடைய தலைவர்கள் நம் நாட்டிற்கு ஒரு புதிய கொடியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? இது மிகவும் போலித்தனமான நகர்தல் ஆகும். … நம்முடைய தேசம் மிகவும் பழைமையான மற்றும் புகழ்மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட மாபெரும் தேசமாகும். நமக்கென்று சொந்தக் கொடி இல்லாமலா நாம் இருந்தோம்? இவ்வளவு ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக தேசிய சின்னம் எதுவும் இல்லாமலா நாம் இருந்தோம்? சந்தேகமேயின்றி நாம் பெற்றிருந்தோம். பின் ஏன் நம் மனதில் இந்த வெற்றிடம், முழு வெற்றிடம்?”

(கட்டுரையாளர், தில்லிப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)

நூல் அறிமுகம் : ஜனநேசனின் ’ஏலோ… லம்’ நாவல் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம் : ஜனநேசனின் ’ஏலோ… லம்’ நாவல் – பெ.விஜயகுமார்




நூல் : ஏலோ… லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை :360
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018,
 
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும் : thamizhbook.com

பணி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி நூலகர் ஜனநேசனின் இயற்பெயர் இரா.வீரராகவன். நான்கு குறுநாவல்கள், ஏராளமான சிறுகதைகளை ஏற்கனவே எழுதியுள்ள ஜனநேசன்ஏலோ***லம்எனும் தன்னுடைய முதல் நாவலை தற்போது எழுதியுள்ளார். தான் மேற்கொண்ட கள அனுபவங்களின் அடிப்படையில் ரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைகள் நிறைந்த மலைப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களில் உடலை வதைக்கும் குளிரில் குடிசை வீடுகளுக்குள் ஒதுங்கி உழைக்கின்ற விவசாயக் கூலிகள் படும்பாட்டை எழுதியுள்ளார்

பல நாவல்களிலும் மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்கள் பதிவாகி உள்ளதை அறிவோம்மலேசியாவிற்கு 1950களில் பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் அனுபவித்த சொல்லொண்ணாத் துயரங்களைபால்மரக் காட்டினிலேஎன்ற நாவலில் அகிலன் சித்தரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட மலைவாழ் மக்கள் படும் அவதிகளைமனிதர்கள் விழித்திடும் போதுஎனும் நாவலில் கோதாவரி பாருலேக்கர் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். கொல்லிமலைப் பகுதியில் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட அவலங்களை, அந்த மக்கள் சங்கமாகத் திரண்டு மீண்டெழுந்ததைப் பற்றி சங்கம்நாவலில் கு.சின்னப்ப பாரதி சித்தரித்துள்ளார். பஞ்சம் பிழைப்பதற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து வால்பாறை தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்றவர்கள் அனுபவித்த சோகங்களைஎரியும் பனிக்காடுநாவலில் பி.எச்.டேனியல் விவரித்துள்ளார்.

இந்த வரிசையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வட்டப்பாறை எனும் மலைப்பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு வேலை தேடிச் சென்று சீரழிந்த ஏழை மக்களின் துயரமிகு வாழ்வை ஜனநேசன் தன்னுடைய ‘ஏலோ…லம்’ நாவல் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார். இரண்டு பாகங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலின் முதல் பாகம் ரவி எனும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னுடைய கடின உழைப்பு, விடாமுயற்சியால் படித்து சப் கலெக்டர் ஆகி வாழ்வில் வெற்றி பெற்ற அதே ரவியின் பார்வையிலேயே நாவலின் இரண்டாம் பாகம் விரிகிறது. நாவல் வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் அறுபதாண்டு கால சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை ஜனநேசன் நேர்மையுடன் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார்.         

ஏலத் தோட்டத்துக்கு எப்போதாவது மட்டும் வந்து போகும்  முதலாளி கிருஷ்ண ராஜா, போடி நகரத்திலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வருகின்ற அதன் மேனேஜர் வைரம் செட்டியார், தோட்டத்திலேயே தங்கியிருந்து மேற்பார்வை செய்து வரும் சங்கிலி கிழவர், கணக்குப்பிள்ளை துரைச்சாமி இவர்களின் கீழ் வேலை செய்யும் பழனிச்சாமி கவுண்டர், பரமன், சின்னாத்தேவர், சீனி மாதாரி, இராமர் ஆகிய கங்காணிகள் என்ற அதிகார வரிசையின் கீழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பஞ்சம் பிழைக்க வந்த ஏழை மக்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். ஏலம் எனும் பணப் பயிர் விளைந்து பெருகுகிறது. அந்த முதலாளி மேலும் மேலும் நிலங்களை வாங்கிக் குவிக்கிறார். ஆயினும் பணப் பயிர் விளையப் பாடுபடுகின்ற விவசாயக் கூலிகளின் வாழ்வில் மட்டும் எந்தவொரு மாற்றமும்  நிகழவில்லை. மலைக்கு எப்படி வந்து சேர்ந்தனரோ அதே நிலையிலேயே அந்த மக்கள் நாவலின் முடிவில் தங்கள் இடத்திற்குத் திரும்புகின்றனர். “காடு விளைஞ்சென்ன மச்சான்? நமக்கு கையும், காலுந்தான மிச்சம்எனும் பட்டுக்கோட்டையின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும் என்பதற்கிணங்க சிஐடியு சங்கம் இவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறது. கிருஷ்ணன் குட்டி, மாதவன் நாயர் என்ற இரண்டு தன்னலமற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் வழிகாட்டுதலில் தொழிலாளர்களின் நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் வருகின்றன. வட்டப்பாறை தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகம். குரங்குகளை விரட்டுவதற்கென்றே ரெங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் குரங்கால் தாக்கப்படுகின்ற  மாரியம்மாள் என்ற பெண் மலைச் சரிவில் விழுந்து பலத்த காயமடைகிறாள். மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்து விடுகிறாள். மாரியம்மாளின் இறப்பிற்கு நிர்வாகம் தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. தொழிலாளிகளை அடக்கி வைப்பதற்காக போலீஸ் தேடுகின்ற குற்றவாளியான பாண்டியன் தலைமையில்  ரௌடி கும்பல் ஒன்றை எஸ்டேட்டில் தங்க வைக்கிறார் முதலாளி. ரௌடிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சிஐடியு சங்கத்தின் துணைகொண்டு ப்பிரச்சனையையும் முறியடித்து வெற்றி பெறுகிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று கோரிக்கைப் பட்டியலை அளிப்பது என்று முடிவாகிறது. தொழிற்சங்கத்தின் நெருக்கடி நாளுக்கு நாள் கூடுவதாக நிர்வாகம் நினைக்கிறது. தொழிலாளிகளின் பேரணியை ரௌடிகளை வைத்து தாக்குவது என்று இடுக்கி பகுதியிலிருந்த அனைத்து தோட்ட முதலாளிகளும் ஒன்றுகூடிப் பேசி முடிவெடுக்கின்றனர். முதலாளிகளின் கூலிப்படையினர் தாக்குதலில்  பெண் தொழிலாளி ஒருவர் இறந்து விடுகிறார். நிர்வாகத்தின் வன்முறை வெறியாட்டம் மாவட்ட நிர்வாகத்தைக் கோபமடையச் செய்கிறது. ஆட்சித் தலைவர் முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. நேர்மையான ஆட்சித் தலைவரின் நியாயமான தீர்ப்பில் தொழிலாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. நிர்வாகம் பழிவாங்கிடத் துடிக்கிறது. முதலாளி திடீரென்று ஒரு நாள் இருநூறு ரூபாய் பணமும், நீண்ட விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அவர்களை அனுப்பி வைக்கிறார். முதலாளியின் சூழ்ச்சியை அறியாத தொழிலாளர்கள் வேலையிழந்து மீண்டும் பழைய வாழ்விற்கே திரும்புகின்றனர். வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. அனைவரும் மறுவாழ்வு பெறுகின்றனர். அவர்களில் சிறுவன் ரவி பெரும் வெற்றி அலாதியானது. சப் கலெக்டராகப் பணிபுரிந்த அவன் தான் பிறந்து வளர்ந்த கம்பம் பள்ளத்தாக்கிற்கே பணி ஓய்வுக்குப் பிறகு திரும்புகின்றான்.   

இரண்டாவதொரு நாவலைப் போலவே தனித்து விளங்குகின்ற நாவலின் இரண்டாவது பாகம் இந்திய அரசியலில் 2014க்குப் பின் நடந்துள்ள கொடூர மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குறிப்பாக மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சீரழித்தது என்பதை நாவல் நன்கு விளக்குகிறது. நாவலின் நாயகன் ரவி மௌன சாட்சியாய் இருந்திட மனமின்றி இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிடும் வகையில் அரசியல் இயக்கங்களில் கலந்து கொள்கிறார். ஏழை மக்களுக்கு குறிப்பாக தன்னுடைய பால்ய காலத்தில் வட்டப்பாறையில் உடன் உழைத்த மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்து ரவி காலத்தைக் கழிப்பதாக நாவல் முடிகிறது.   

நாவலின் வெற்றிக்கு ஜனநேசனின் கள அனுபவங்களே துணை நிற்கின்றன. சமீப காலங்களில் ’டாக்குமன்றி’ நாவல் என்று அழைக்கப்படும் நாவல்களில் ஒன்றாக ’ஏலோ…லம்’ நாவலை வகைப்படுத்த முடிகிறது. தமிழும், மலையாளமும் கலந்த இனிமையான மொழி தமிழ்நாடு-கேரளா எல்லையோரப் பகுதிகளில் வழக்கில் இருப்பதை அறிவோம். நாவலாசிரியர் ஜனநேசனுக்கு எளிதில்கைவந்துள்ளம்மொழியில் ஏலக்காய் விவசாயம் குறித்த பல நுட்பமான விஷயங்களை அவர் சொல்லிச் செல்கிறார்.  

நாவலில் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி சங்கம் தான் வட்டப்பாறை எஸ்டேட் தொழிலாளிகளை முதலில் சங்கமாக ஒருங்கிணைக்கிறது. இவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது தங்கள் பதாகையின் கீழ் வந்தடைந்த தொழிலாளிகளை அவர்களே மனமுவந்து சிஐடியுவிடம் அனுப்பி வைப்பது தொழிற்சங்க வரலாற்றில் கண்டிராத அதிசயமாகும். மேலும் கங்காணிகள் பொதுவாக எஸ்டேட்டுகளில் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருந்து தொழிலாளிகளைக் கொடுமைப்படுத்துவார்கள். ஆனால் இந்நாவலில் வர்க்க அணி வரிசையில் தங்களின் இடம் தொழிலாளிகளின் பக்கம் என்பதை உணர்ந்தவர்களாக கங்காணிகள் இருப்பதும் ஓர் அதிசயமே. தோட்டத் தொழிலாளிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளையும் கங்காணிகள் வகித்து வருகிறார்கள். பெண்கள் சார்பாக சிவனம்மா, பொன்னுத்தாயி, வெள்ளைத்தாயி ஆகியோர் சங்கப் பொறுப்புகளில் இணைந்திருந்து மிகவும் திறமையுடன் செயல்படுகிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து வளரும் சிறுவன் ரவி இளமையிலேயே வர்க்க அரசியலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறான். அதனாலேயே உயரதிகாரியாக ஆன பிறகும் இடதுசாரி அரசியலை அவனால் இறுகப் பற்றிக் கொள்ள முடிகிறது. தன்னுடைய நீண்ட தொழிற்சங்க அனுபவத்தில் இருந்து தொழிலாளிகளின் போராட்ட நடவடிக்கைகளை எழுதியுள்ள ஜனநேசன் மேலும் இதுபோன்ற காத்திரமான நாவல்களைப் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

– பெ.விஜயகுமார்

வரலாற்று உண்மையைச் சொல்ல மறுக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – பேரா. அருண்கண்ணன்

வரலாற்று உண்மையைச் சொல்ல மறுக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – பேரா. அருண்கண்ணன்




கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி  வெளியான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நடந்த காஷ்மீர் வன்முறையில் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறிய வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் விவேக் அக்னி ஹோத்திரி.

இந்தக் கட்டுரையை எழுதும் வரை இத்திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வருமானத்தை

ஈட்டியுள்ளது. நம்முடைய பிரதமர் மோடி இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு, அத்திரைப்பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் மார்ச் 15-ஆம் தேதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெகுவாக திரைப்படத்தைப் பாராட்டியதுடன் உறுப்பினர்களை இத்திரைப்படத்தைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.

பாஜக ஆட்சி செய்கிற எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திரைப்படத்துக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் முதல்வர் இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் இத்திரைப்படத்தைப் பார்க்கக் காவல் துறையினருக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்குவதாக அறிவித்தது. மேலும், மேற்கு வங்கம் ராஜஸ்தான் போன்ற மாநில அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக இத்திரைப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்குமாறு வலியுறுத்தியது. இது தவிர, தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும் என்று பேசியுள்ளார்.  ஒன்றிய, மாநில பாஜக அரசாங்கமும் அதனுடைய தலைவர்கள், சங் பரிவார அமைப்புகள்  இத்திரைப்படத்தைப் பெரிதும் ஆதரித்தும் விளம்பரப்படுத்தியதுமே இப்படியான ஒரு திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னைத் தள்ளியது.

திரைப்படத்தின் கதைச் சுருக்கம்
காஷ்மீரைச் சேர்ந்த கிருஷ்ணா பண்டிட் ஏன்யு (ANU)  பல்கலைக்கழகத்தில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) படித்துக் கொண்டிருக்கிறார்.  அங்கு பணிபுரிகிற பேராசிரியர் ராதிகா மேனனின் வழிகாட்டுதலின் படி மாணவர் தலைவர் தேர்தலில்   போட்டியிடுகிறார் கிருஷ்ணா பண்டிட். அந்த மாணவர் தேர்தலில் காஷ்மீர் முக்கியமான பேசுபொருள் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆட்சியாளர்களின் காஷ்மீர் குறித்தான கதையாடல்களை முறியடிப்பதற்கு காஷ்மிரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவுசெய்து அவரை மூளைச்சலவை செய்து இத்தேர்தலில் போட்டியிட வைக்கிறார் பேராசிரியர் ராதிகா மேனன். இதற்கிடையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாள் கிருஷ்ணாவின் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் கடைசி ஆசையான அவருடைய அஸ்தியை அவருக்குச்சொந்தமான மண்ணில் கரைப்பதற்காக காஷ்மீருக்குக் கொண்டு  செல்கிறார் கிருஷ்ணா.

தேர்தல் நெருங்குவதால் முதலில் ஆட்சேபிக்கிற ராதிகா மேனன் பிறகு கிருஷ்ணா இரண்டே நாட்களில் திரும்பிவிடுவேன் என்று உறுதி அளித்ததால், காஷ்மீரில் சில தொடர்புகளைக் கொடுத்து இந்தப் பயணத்தின் பொழுது சந்தித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார். அஸ்தியுடன் செல்கிற கிரிஷ்ணாவைச் சந்திப்பதற்காக அவருடைய தாத்தாவின் முன்னாள் நண்பர்களான காஷ்மீரின்  முன்னாள் டிஜிபி ஹரி நரைன், அமெரிக்காவில் இருந்து மருத்துவர் மகேஷ் குமார், பத்திரிகையாளர் விஷ்ணு ராம் ஆகியவர்கள் முன்னாள் காஷ்மீரில் இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரியான பிரம்மா தத்தின் விட்டில் காஷ்மீரில் ஒன்று சேருகின்றனர். அன்று நடக்கிற உரையாடலின் வழியாக தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் ஆகிய அனைவரும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் விபத்தில் இறக்கவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற உண்மையையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா. மேலும், ராதிகா மேனன் சந்திக்கச் சொல்கிற அந்த நபரை   அப்பயணத்தின் பொழுது சந்திக்கிறான். அந்த நபர் ஒரு  தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பதும் அந்த நபர் தான் தன்னுடைய குடும்பத்தினரைக் கொன்றவன் என்பதையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா.

காஷ்மீரில் இருந்து திரும்பிய கிருஷ்ணா பல்கலைக்கழகத்தில் தேர்தலுக்காக நடக்கிற விவாதத்தில் ராதிகா மேனன் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பேசுகிறான். ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்த முயற்சிக்கிறார் ராதிகா. ஆனால் மாணவர்கள் பேச்சைத் தொடருமாறு கேட்கின்றனர். படத்தின் இறுதிப் பகுதியில்தான் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்தப் பேச்சில் கிருஷ்ணா தன்னுடைய அம்மா அண்ணன் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 24 பேர்  இராணுவ உடை அணிந்த தீவிரவாதிகளால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டதை விவரிக்கிறார். அதே நேரத்தில் அந்தக் காட்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன. மிகக் கொடூரமான அந்தக் கொலை குறித்த காட்சிகளின் முடிவில் கிருஷ்ணா காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசுவதுடன் படம் நிறைவு பெறுகிறது.

காஷ்மீரின் சுருக்கமான வரலாறு
1975-இல் இந்திரா காந்திக்கும் சேக் அப்துல்லாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய தேசிய காங்கிரசின் துணையுடன் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராகப் பதவி ஏற்கிறார். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமானுல்லாஹ் கான் மற்றும் முஹம்மத் மக்பூல் பாட் ஆகிய இருவரும் இணைந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை உருவாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீரை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறச் செய்வதே முன்னணியின் நோக்கம். 1984-இல் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானவுடன் காஷ்மீரின் ஆளுநராக ஜக்மோகன் நியமிக்கப்படுகிறார். அதற்கு அடுத்த சில நாட்களுக்குள்  ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுடன் பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு அவருடைய மைத்துனரான குலாம் சாவின் கையில் ஆட்சியை ஒப்படைக்கிறார் ஜக்மோகன். அதே  ஆண்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் முஹம்மத் மக்பூல் பாட் தூக்கிலிடப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் கோபத்தை வரவழைக்கிறது.

1986-யில் குலாம் ஷா அரசு மசூதி கட்டுவதாக அறிவித்த இடம் பழமையான இந்துக் கோவில் இருந்த இடம் என்று சர்ச்சை கிளம்புகிறது. இதேகால கட்டத்தில் பிரச்சனைக்கு உரிய அயோத்தியில் உள்ள பாபர் மசூதியின்/ ராம ஜென்ம பூமியின் கதவுகள் இந்துக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து விடுகிறது ராஜீவ் காந்தி அரசாங்கம். இந்நிகழ்வுகளின் விளைவாக ஜம்மு காஷ்மீரில் கலவரம் நடைபெறுகிறது. இதனைக் காரணம் காட்டி குலாம் சாவின் ஆட்சியைக் கலைத்து விட்டு பரூக் அப்துல்லாவை ஆட்சியில் அமர்த்துகிறார் ஆளுநர் ஜக்மோகன். அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பல முறைகேடுகளைச் செய்து காங்கிரசுடன் இணைந்து  பரூக் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார். இத்தேர்தல் காஷ்மீரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

இத்தேர்தலில் நடந்த முறைகேடுகளினால் தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒருவரான யூசப் ஷா 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான கிஜுபுல் முஜாஹுதீனை உருவாக்கினார். அவரின் தேர்தல் முகவராக செயல்பட்ட யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக பின்னாளில் உருவெடுக்கிறார்.

தொடர்ச்சியான ஒன்றிய அரசின் தலையீடு மற்றும் தேர்தலில் நடந்த குளறுபடிகளாலும், காஷ்மீரின் இளம் தலைமுறையினர் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். உலக அளவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களும் சோவியத் ஆப்கன் யுத்தம் ஆகியவை ஆயுதம் ஏந்த ஏதுவான சூழலாக அமைந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் சோவியத் ஆப்கன் யுத்தத்தில் ரஷ்யாவிற்கு எதிராகச் சண்டையிடுவதற்காக அமெரிக்கா சவூதி அரேபியாவின் உதவியுடன் உலகம் முழுக்க திரட்டப்பட்ட  இஸ்லாமிய இளைஞர்களில்  சிலர் இச்சண்டையின் முடிவில் காஷ்மீருக்குள் வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் 1988-ஆம் ஆண்டு தொடங்கி காஷ்மீரில் தொடர்ச்சியாக பலரும் கொல்லப்படுகின்றனர். இதில் பண்டிட்டுகள், தேசிய மாநாட்டுக் கட்சியின் அரசியல் தலைவர்கள், என பல தரப்பினரும் கொல்லப்படுகின்றனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் 1990 களில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளை அணுக வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரண்டு இலட்சத்திற்கும் மேலான இஸ்லாமியர்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தான் படையினரால் சிறிய எண்ணிக்கையில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகும் 1980களின் இறுதி வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு சமூகங்களும் இணக்கமாகவே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று கூறுகிற அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, காஷ்மீர் தனிநாடாக  இருக்க வேண்டும் என்ற சொல்லக்கூடிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளும்,  பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர்க்கப்பட வேண்டும் என்று  சொல்கிற கிஜுபுல் முஜாஹுதீன் போன்ற வெவ்வேறு கருத்துகளை உடைய அமைப்புகளும் காஷ்மீரில் செயல்பட்டன என்பதயும்  கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2019-இல்  மோடி தலைமையிலான ஒன்றிய அரசு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்தை வழங்கக்கூடிய 370 ஆவது பிரிவை நீக்கிய பிறகு  அங்கு  நிலைமை முற்றிலும் வேறு மாதிரியாக  மாறியுள்ளதை  புரிந்து கொள்வதும் அவசியம்.

திரைப்பட காட்சிகளும் அதன் முரண்களும்
பண்டிட்டுகளின் சங்கமான சங்கார்ஷ் சமிதியின் அறிக்கையானது 1990க்கும்  2011க்கும் இடையில் 399 பண்டிட்டுகள் இறந்துள்ளனர் என்றும் இதில் 7 விழுக்காட்டினர் 1990 களில் இறந்துள்ளனர் என்று கூறுகின்றது. மேலும் அலெக்சாண்டர் இவான்ஸ் என்கிற ஆய்வாளரின் கணக்குப்படி 1,70,00 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்ததாக மதிப்பிடுகிறார். ஜம்மு காஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைப்பின் அறிக்கையானது 1990-ஆம் ஆண்டு  60,000 குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது. மேலும் அதே கால கட்டத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாகவும்,   50,000 இஸ்லாமியர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியதாகவும் குறிப்பிடுகிறார் காஷ்மீரின் வரலாற்றை ஆய்வு செய்யும் அசோக் பாண்டே.

உண்மை இப்படி இருக்கையில் 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் நடந்த காஷ்மிரி வன்முறையில் 4,000 பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள்  5 லட்சம் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து புலம் பெயர்ந்ததாகவும் திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பற்றி எந்தக் காட்சிகளும் திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை. இந்த நிகழ்வுகள் நடைபெறும் பொழுது மத்தியில் காங்கிரஸ் கட்சியும் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷேக் அப்துல்லா வும் பொறுப்பில் இருந்ததாகவும் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில் அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தது வி.பி சிங்கின் அரசு. அதனோடு   1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜக்மோகன் மீண்டும் ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார். ஜக்மோகன்  ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதும் பின்னாளில் அவர் பாஜகவில் பாராளுமன்ற உறுப்பினராகவும் வாஜ்பாயின் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு நடந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு ஜக்மோகனின் தவறான நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. இத்தகைய விடயங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியையும் இச்சம்vபவங்கள் நடைபெற்றதைத் தடுக்காமல் இருந்தனர் என்று பார்வையாளர்களை நம்பவைக்க முயற்சிக்கிறது  திரைப்படம்.

நிச்சயமாக 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் அன்று பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறையும் படுகொலைகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதைக் காட்சி படுத்தியதிலும் பிரச்சனையில்லை. ஜக்மோகன் பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு 21-ஆம் தேதி ஸ்ரீநகரில் அமைதியாகப் போராடிய இஸ்லாமியர்கள் ஐம்பதுபேரை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதும் வெளி உலகிற்குத் தெரிய வேண்டிய காட்சிகள்தான். இருப்பினும் இதையெல்லாம் இயக்குநர் காட்சிப்படுத்தவில்லை.

திரைப்படத்தின் கடைசிப் பகுதியில் கிருஷ்ணாவின் அம்மா அண்ணன் சிவா உட்பட இருபத்து நாலு பேரைக் கொல்லுகிற காட்சிகள் 2004-ஆம் ஆண்டு நந்திமார்கில் லக்சர் இ தொய்பா (Lashkar-e-Taiba) வினரால் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காட்சிகளை 1990-களில் நடைபெற்றதைப் போன்று படத்தில் சித்தரித்துள்ளார். புனைவில் இதற்கு இடமிருக்கிறது என்றாலும், உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இதையெல்லாம்  கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

1998-யில்  வண்தகாமாவிலும் 2004-யில் நந்திமார்கிலும் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். அக்கொலைகளை உலகுக்கு எடுத்துக்கூறி அக்கொலைகளை செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது முக்கியமானதுதான். அதேபோல் 1990யில் ஹன்ட்வாராவிலும் 1993யில் சபூர் மற்றும் பிஜ்பெஹராவிலும் vஇஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. விவேக் அக்னி ஹோத்திரி இப்படுகொலைகளைச் சொல்லாமல் விடுவதை இயக்குனருக்கான சுதந்திரம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ளமுடியாது.

இது ஒரு புறம் இருக்கட்டும், இருபத்து நாலு பேர் படு கொலை செய்யப்படுவதற்கு முன்னால் கிருஷ்ணாவின் அம்மாவின் ( சாரா) காவிநிற உடை தீவிரவாத அமைப்பின் தலைவரால் கிழிக்கப்பட்டு அரை நிர்வாணமாக காட்டப்படுகிறார்.  திரைப்படத்தின் வேறு ஒரு காட்சியில் சாராவைக் காப்பற்றுவதற்காக அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பார் ஆசிரியரான ஒரு வயதான இஸ்லாமியர். ஆனால் அதை சாரா மறுத்துவிடுவார். அந்த வயதானவர் திடீரென கடைசிக் காட்சிகளில் தோன்றி சாராவின் முகத்தில் காரித் துப்புகிறார். பிறகு சாரா பக்கத்தில் உள்ள மரஅறுப்பு மிசினுக்குள் படுக்க வைக்கபட்டு மிகக்கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகிறது. மேலும், மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு நெத்தியில் சுடப்படுகின்றனர். அவர்களுடைய நெத்தியில் இருக்கும் பெரிய குங்குமப் பொட்டின் மீதுதான் குண்டுகள் பாயச்சப்படுகின்றன. உண்மையில் 2004-லில் நந்திமார்கில் நடந்த சம்பவங்களுடன் பலவிடயங்கள் சேர்க்கப்பட்டு காட்சிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும் இத்திரைப்படத்தில் வருகின்ற ஒவ்வொரு இஸ்லாமிய கதாப்பாத்திரமும்(சிறுவர்கள் பெண்கள் உட்பட) திட்டமிட்டு இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரானவர்களாகக் காட்சிப்படுத்தப் படுகின்றனர்.

ஜம்மு &காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 தான் 1990 களில் நடந்த பண்டிட்டுகளின் படு கொலைகளுக்கும் அவர்களின் புலப்பெயர்விற்க்கும் காராணம் என வாதிடும் கிருஷ்ணாவின் தாத்தா கதாப்பாத்திரம். அதற்காகத் தான் 6,000 கடிதங்கள் வரை பிரதமருக்கு எழுதியுள்ளதாகக் கிருஷ்ணாவிடம் குறிப்பிடுவார். கிருஷ்ணாவின் தாத்தா ஒரு ஆசிரியர் மேலும் காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினையை உலகு அறியச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறவர். அப்படியான ஒருவரிடம் 30 ஆண்டுகள் வளரும் கிருஷ்ணாவிற்கு காஷ்மீர் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பதும் ராதிகா மேனனால் மூளைச்சலவை செய்வதைப் போன்றும் திரைக்கதை அமைத்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு  பிப்ரவரி  9-ம் நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உமர் காலித், பட்டாச்சாரியா போன்ற மாணவர்கள் சிலர் 2013-இல் தூக்கிலிடபட்ட அப்சல் குருவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் நடத்துகின்றனர். அக்கூட்டத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தடுத்து நிறுத்துகின்றனர். இக் கூட்டத்தில் தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு உமர் காலித் அன்றைக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக இருந்த கண்ணையா குமார் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னணியில்தான் கிருஷ்ணா இப்பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும், ராதிகா மேனன் (இடதுசாரி பேராசிரியர்) கிருஷ்ணா போன்ற அப்பாவி மாணவர்களைத் தவறாக இந்திய தேசத்தின் நலனுக்கு எதிராக வழிநடத்துவதைப் போன்றும் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தலில் காஷ்மீர் ஒரு மையப் புள்ளி என்று சொல்வதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் தாத்தா கிருஷ்ணாவிடம் ஆசாதி (தமிழில்- சுதந்திரம், இப்படத்தில் பல்கலைக்கழக காட்சிகளில் பலமுறை பயன்படுத்தப்படும் கோசம்) என்பதே தீவிரவாத சொல் என்றும், மேலும் காஷ்மீரின் விடுதலையைக் கோரும் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும்  பிரிவினைவாதிகள் என்றும் குறிப்பிடுகிறார்.  இப்படியான பல பொய்களின் ஊடாக ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுடன் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், மனித உரிமைப் போராளிகள் ஆகிய அனைவரையும் இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரிகள் என்று கட்டமைக்கின்றார் இயக்குனர்.

உலகில் மிக நீண்ட காலமாக ராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள பிரேதேசங்களில் ஒன்றான காஷ்மீரில் எடுக்கப்பட்ட படத்தில், ராணுவ வாகனங்களை ஒரு காட்சியில் கூட பார்க்கமுடியவில்லை. மேலும் படத்தில் அனைத்துக் காவல் துறையினரையும்  தீவிரவாதிகளுக்கு பயந்து ஓடி ஒளிபவர்களாக காட்சியமைத்திருப்பதெல்லாம் எதார்த்தமானவைகள் அல்ல. இப்படி பல விடயங்களை வலிந்து காட்டுவதும், சில விடயங்களை காட்டாமல் விட்டு விடுவதிலும் உள்ள இயக்குனரின்  அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சங் பரிவார அமைப்புகளின் வெறுப்புப் பிரச்சாரம்
திரைப்படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் சிலர் திரைப்படத்தின் இறுதியில் இஸ்லாமியர்களைத் தாக்கவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கவும் அறைகூவல் விடும் பல காட்சிகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. இவைகளெல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு சங் பரிவார அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது தி வயர் (The Wire.in) இணையதளத்தில் விரிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு ஜந்தர் மந்தரில் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட ராகேஷ் சிசொடியா சில கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து ப்ரொஜெக்டரில் இத்திரைப்படத்தை திரையிட்டுள்ளார்.  மேலும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாங்கள் திரைப்படத்திற்கான டிக்கட் பெற்று  அதிக எண்ணிக்கையில் நபர்களை அழைத்துக் கொண்டு சென்று திரைப்படத்தை பார்வையிடுவதாகவும் கூறுகின்றனர். கோயம்புத்தூரில் கூட இந்த்துத்துவ அமைப்புகள் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில்  அதிகரித்து வருவது பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். இது போன்ற சூழலில் இத்திரைப்படமும் அதை ஒட்டி நடைபெறக் கூடிய நிகழ்வுகளும்  இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்தவும் இந்நிலைமைகள் மேலும் மோசமடைய  மட்டுமே பயன்படும் என்பது பெரிதும் அச்சத்தை வரவழைக்கிறது.

இறுதியாக
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்குகிற படைப்பிற்கென்று சில பொறுப்புகள் உண்டு. வரலாற்றின் போக்கில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் தனியாக எடுத்து ஒரு பக்க சார்புடன் படைப்பை உருவாக்கும் பொழுது பார்வையாளனுக்கு அந்நிகழ்வை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். அர்பன் நக்சல் என்ற புத்தகத்தை எழுதியவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் விவேக் அக்னி ஹோத்திரியிடம்  அப்படியான ஒரு பக்க சார்பில்லாத  படைப்பை எதிர்பார்ப்பது அபத்தம்.   அவரே தொடர்ச்சியாக தான் இத்திரைப்படத்தை இயக்கியதற்கு ஒரு நோக்கம் இருப்பதாகச்  சொல்லிவருகிறார். அவருடைய நோக்கம்  எதுவாயினும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதில்  இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக ஒன்றைச்  சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். சமீபத்தில் வெளியான இரண்டு அறிக்கைகள் இந்தியாவில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்மை எச்சரித்துள்ளன. அந்த அறிக்கைகளில் ஒன்று அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பினுடையது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன் அமெரிக்க காங்கிரசில் பேசும்பொழுது இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான் ஆரம்பக் கட்ட கூறுகள் தென்படுவதாகவும், அது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறலாம் என்றும் கூறியுள்ளார். இந்த   கிரிகோரி ஸ்டாண்டன்தான் 1989-ல் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று முதலில் எச்சரித்தவர். 1994-ல் ருவாண்டாவில் அவர் எச்சரித்தது போல் டுட்சி இனத்தை சேர்ந்த நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் பேர்  இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. அப்படியான கிரிகோரி ஸ்டாண்டன் இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று எச்சரிப்பதை  நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூர

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்

1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

 

1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள்  62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.

பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.

கவனமான மதிப்பீடுகள்

  1. தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
  2. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
  3. இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால்  பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
  4. கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
  5. விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
  6. இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.

ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.

5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.

முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.

‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.

இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”

‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில்  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.

ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.

உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.

இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய  மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.

ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Avadi Socialim Image Credit: Frontline

எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.

நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.

அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Theprint

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.

இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.

மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.

ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Thewire

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு: ஒரு நூற்றாண்டின் ஒப்பாய்வு



சுருக்கம்

சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் நாட்டின் முக்கிய தரவுகோல்களாகும். சமூக மேம்பாடு அடைய, சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கல்வி, சுகாதரம், வேலைவாய்ப்பு போன்றவற்றினைச் சமஅளவில் அனுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும். இவற்றை நாம் “சமூக நீதி” என்கிறோம். பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாட்டைத் தவிர்த்து அடைய முடியாது. இந்தியா பல்வேறு இன, மத, மொழி குழுக்களை உடையது. இக்குழுக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. சமூகச் சீர்திருத்தங்களால் இவ்ஏற்றத்தாழ்வினைக் குறைக்க முடியும். இந்தியாவில் புத்தர் தொடங்கி, இன்றுவரை சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இச்சீர்திருத்தங்களை அரசியல் வழியாகக் கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்நாடு சமத்துவம், சமூக நீதியின் உரைவிடமாகும். வள்ளலார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகளை நடைமுறைப்படுத்த கடந்த ஒரு நூற்றாண்டாக 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கி, தற்போது உள்ள திராவிடக் கட்சி ஆட்சி வரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் பல முயற்சிகளை எடுத்துள்ளன. அதன் பயன் தமிழ்நாடு இந்திய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சமூக-பொருளாதார நிலைகளில் இனம் காணப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் கடந்த ஒரு நுற்றாண்டாகத் தமிழ்நாட்டை ஆண்ட மூன்று கட்சிகளின் (நீதிக் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சி) ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக்கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளி விவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ்வாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

முன்னுரை

உலகில் உள்ள சமூகக் குழுக்கள் பலவேறு நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பெரும்சவால்களை எதிர்கொண்டன. வலிமையான சமூகக் குழுக்கள் மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவற்றை அழித்தொழிக்கும் செயலையும் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் செய்துகொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூதாயம் தங்களின் உரிமைகளைப் பெற, சிலர் தலைமையின் விழித்தெழுந்து வெகுகாலம் போராடவேண்டியுள்ளது. சமுதாயத்தில் காலம்காலமாகக் காணப்படும் ஆண்டான் அடிமையினையும், சமுதாயத்தில் புரையோடி இருந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அறிஞர் பலர் விதைத்துச் சென்றுள்ளனர். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்களில் புத்தர் தொடங்கி, இன்று வரை பலர் உண்டு. மனித மேம்பாடு சமூகச் சீத்திருத்தங்களினால் தான் அடைய முடியும் என்று கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் கண்கூடாக அறிந்திருக்கிறோம்.

இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் இருந்தாலும் அவர்களில் மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயண குரு, தந்தை பெரியார் போன்றோரால் சமுதாயத்தின் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்களின் உரிமைகளைப் பெறப் பெரும் பங்காற்றியவர்களாவார்கள். இவர்களின் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல்தளங்களில் நாளடைவில் உள்வாங்கிக்கொண்டு நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. சமூதாயம் மேம்படும்போது அதன் சஙகலித்தொடராக பொருளாதாரநிலை மேம்படத்; தொடங்கும். இதனால் வறுமை ஒழியும், சமத்துவம் ஊண்றத் தொடங்கும். இந்தியாவில் குறிப்பிட்ட சில (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா) மாநிலங்கள் சமூக-பொருளாதார தளங்களில் உயர்நத்து நின்று உள்ளடக்கிய வளர்ச்சியின் வழியில் பயனிக்கிறது.

இந்தியாவில் உள்ள மநிலங்களில் தமிழ்நாடு சமூக-பொருளாதார தளத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பல வழிகளில் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. இடஒதுக்கீடு, ஆண்-பெண் சமத்துவம், கல்வி அறிவு, அளவான குடும்பம், இருமொழிக்கொள்கை என்ற சமூக நிலையிலும் வேளாண்மை, தொழில் துறை மேம்பாடு என்ற பொருளாதாரத் தளத்திலும் இந்தியாவிலேயே முன்னேடியான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் 4 விழுக்காடு நிலப் பங்கினைப் பெற்றுள்ளது ஆனால் 5.96 விழுக்காடு மக்களைப் பெற்றுள்ளது. பொருளாதார நிலையில் தமிழ் நாடு ஒட்டுமொத்தத் தேசிய வருமானத்திற்கு 8.59 விழுக்காடு பங்கினை அளித்து இரண்டாவது இடத்தை மார்ச்சு 2021இல் வகிக்கிறது (https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php). பத்தாண்டுகளுக்கு (2000-01ல்) முன்பு இது 7.62 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது (Shanmugam 2012). இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை, கடந்த 100 ஆண்டுகளாக ஆண்ட அரசியல் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. சமூகச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் இராமலிங்க அடிகளார், பெரியார், அண்ணா, கலைஞர் முதலியோர். இதன் விளைவு தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில்  இல்லாத வகையில் சக மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய நிலையும், சாதிய அடையாளங்களைப் பெயருக்குப் பின்னால் துறந்த நிலையும் இன்று காண முடிகிறது. மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகளைச் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகளே ஆகும்.

அவ்வகையில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் தளங்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் அவை நீதிக் கட்சிக் காலம், இந்திய தேசிய காங்கிரஸ் காலம், திராவிடக் கழகங்களின் (திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) காலம் எனலாம். திராவிடக் கட்சிகளின் ஆணி வேராகத் திகழ்வது நீதிக் கட்சியாகும். இக்கட்சியின் ஆளுகை தொடங்கப்பட்டு (சட்டமன்றம் 17.12.1920 தொடங்கப்பட்டது இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீதிக் கட்சி முன்னெடுத்த செயல்பாடுகளை திராவிடக் கட்சிகள் ஏற்றது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் ஏற்று அதே வழியில் சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதன் வெளிப்பாடு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்சசி, தொழில் நுட்ப மேம்பாடு எனப் பல தளங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் இக்கட்டுறையின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டை ஆண்ட இம்மூன்று கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக் கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளிவிவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ் ஆய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள்

சென்னை மாகாணம் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் மொழிவாரிய மாநிங்கள் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்றது. நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு புதிய சென்னை மாகாணம் உருவானது. மாநிலத்தின் சிலபகுதிகள் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி பொன்ற மாநிலங்களுக்குச் சென்றது (Perumalswamy 1985). சென்னை மாகாணம் என்று இருந்ததை, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்ச்சியில் அமர்நததும் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் 14 ஜனவரி 1969 முதல் நடைமுறைக்கு வந்தது.

அட்டவணை 1: தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளும் முதலமைச்சர்களும்

கட்சிகள்

ஆண்டு

முதலமைச்சர்கள்

நீதிக் கட்சி

1920 முதல் 1937 முடிய

ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனங்கல் அரசர், பி.சுப்பராயன், பி. முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கராவ், பி.டி.ராஜன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

1937 முதல் 1967 முடிய

சி.ராஜகோபாலாச்சாரி, டங்குத்துரி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, கு.காமராஜ், எம்.பக்தவச்சலம்,

திராவிடக்
கட்சிகள்

1967 முதல் 2021 தற்போது வரை

சி.என்..அண்ணாதுரை, எம்.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்

ஆதாரம்: Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

நீதிக்கட்சி 17.12.1920 முதல் 14.07.1937 வரை 17 ஆண்டுகள் அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது. இதில் திரு.ஏ.சுப்ராயலு ரெட்டியார் தொடங்கி திரு. குமார வெங்கட்ட ரெட்டி நாயுடு வரை 7 முதலமைச்சர்கள் (தொடக்கத்தில் மாநிலப் பிரதமர் என அழைக்கப்பட்டனர்) ஆட்சி செலுத்தினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 14.07.1937 முதல் 06.03.1967 முதல் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது. இதில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி தொடங்கி, திரு. எம். பக்தவச்சலம் முடிய 6 முதலமைச்சர்கள் ஆட்ச்சி செய்தார்கள். திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு. காமராஜ் போன்ற திறன்மிக்க முதலமைச்சர்கள் இவர்களில் அடங்குவர்.

திராவிடக் கழகக் கட்சிகள் 06.03.1967 முதல் தற்போது வரை 54 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை தொடங்கி, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதலமைச்சராக இக்காலக்கட்டங்களில் ஆட்சியிலிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தொடர்கிறார். 1921 முதல் தற்போது வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

இக்காலகட்டங்களில் பல புகழ்மிக்க வல்லவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் கோலாச்சியவர்கள் பலர் அவர்களில் முக்கியமானவர்கள் எ. ராமசாமி முதலியார், எ. லட்சுமணசாமி முதலியார், சத்திய மூர்த்தி, சி.பி. ராமசாமி ஐயர், பி.டி. ராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கிருஷ்ணய்யர், சி.சுப்பரமணியம், ஆர்.வெங்கட்டராமன், கே.வினாயகம், இராமசாமி படையாச்சியார், வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், என்.சங்கரய்யா, நல்லக்கண்ணு, ஆர்.உமாநாத், குமரி ஆனந்தன், துரைமுருகன் இவர்களின் சட்டமன்றச் செயல்பாடுகள் தமிழக மேம்பாட்டிற்குப் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

சமூக மேம்பாடு – கல்வி, சுகாதாரம்

தமிழ்நாட்டில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3 விழுக்காடு பங்குகொண்ட சில முன்னேறிய வகுப்பினர் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் இதர பிரிவினர் பெருமளவிற்குக் கல்வி-வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர் அல்லாத கல்வி பெற்றவர்கள் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, பி.டி.தியாகராய செட்டியாரால் ‘தென்இந்திய நல உரிமைக் கூட்டமைப்பு’ 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இது பின்னால் ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது (Mohan Ram 1974). அன்றைய நிலையில் மக்கள் தொகையில் 3.2 விழுக்காடாக மட்டுமே இருந்த பிராமணர்கள், மொத்தமான 130 உதவி ஆட்சியாளர்களில் 77 பேர் இருந்தனர், அதாவது 55 விழுக்காடு ஆகும். இதுபோன்றே நீதித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் உயர்பதவிகளில் இவர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. 1920ல் சென்னை மாகாணத்தில் ஆட்சியினைப் பிடித்த நீதிக்கட்சி, தொடக்கக் கல்வி பெறுவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம் மெட்ராஸில் (ஆயிரம் விளக்கு பகுதியில்) 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, மாணவர்களுக்கான உறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டது, 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடக்கக் கல்வி கட்டாயம் என்றானது. இதனால் பெருமளவிற்குத் தொடக்கக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன, உயர்கல்வி பெறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் இயற்றப்பட்டது, ஆந்திரா பல்கலைக்கழகம் (1929ஆம் ஆண்டு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (1926ஆம் ஆண்டு) போன்றவை தொடங்கப்பட்டன. வேலைவாய்பில் பிராமணர் அல்லாதோர் பயனடையும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடு 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவு நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் 1921 மற்றும் 1941ஆம் ஆண்டுகளுக்கிடையே இரண்டுமடங்கு அதிகரித்தது. வேலைவாய்ப்பினை அனைத்துப் பிரிவினரும் பெற இந்தியாவிலேயே முதன்முதலாக அரசு தேர்வாணைக்குழு 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது (ஜெயராமன் 2021).

அடுத்து வந்த காங்கிரஸ் அதிக அளவில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் முதன்முதலாகத் தனிஒதுக்கீடு 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்து எழுந்தது. அதற்குத் தலைவணங்கிய ஒன்றி அரசு, 1950ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுப் பிற்படுத்தப்பட்டோரும் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளியினை அமைக்கத் திட்டமிட்டார். மதிய உணவுத்திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி பயில வழிவகை செய்தார். இதனால் 1951ஆம் ஆண்டு 16037 எண்ணிகையிலான ஆரம்பப் பள்ளிகள் 1967ஆம் ஆண்டு 33529 பள்ளிகளாக உயர்ந்தன. இதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1951ஆம் ஆண்டு 1852 மில்லியனிலிருந்து 1961ஆம் ஆண்டு 3558 மில்லியனாக உயர்தது. 1969ஆண்டு கணக்கின்படி 30663 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது இதனால் 18.32 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இலவசச் சீருடைத் திட்டம் இக்காலகட்டங்களில் தான் தொடங்கப்பட்டது. இது போன்றே உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

அட்டவணை 2: தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் கல்வியறிவும்.

ஆண்டு

மக்கள்தொகை (மில்லியன்)

கல்வியறிவு (%)

கல்வியறிவு வீதத்தின் மாற்றம்

1921

21.63

7.60

நீதிக் கட்சி

+  6.70 %

1931

23.47

11.30

1941

26.27

14.30

1951

30.12

20.00

இந்திய தேசிய காங்கிரஸ்

+  25.43 %

1961

33.69

31.47

1971

41.20

45.43

1981

48.14

54.39

திராவிடக் கட்சிகள்

         +  34.90 %

1991

55.86

62.66

2001

62.40

73.45

2011

72.15

80.33

ஆதாரம்: Government of India,  various  Population Census, Director of Census of India

1956-57ஆம் ஆண்டு 3 பல்கலைக் கழகங்கள், 56 கலைக்கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்) செயல்பட்டு வந்தன இதில் 42000 மாணவர்கள் பயின்றனர். 1968-69ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பயில வழிசெய்யப்பட்டது. 23 ஜனவரி 1968 முதல் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது இதன்படி தாய்மொழியுடன் ஆங்கிலம் அல்லது இந்திய மொழி அல்லாத ஒன்றைப் படிக்க வழிவகை செய்தது. இது தமிழகம் முழவதும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போரட்டங்கள் வெடித்தது. அன்றை ஒன்றிய அரசு இந்தி திணிப்பினைப் கைவிட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியானதால் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் தழிழர்கள் செல்லவும், அறிவினைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. இதன் விளைவு இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழர்கள் உலஅளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கில இணைப்பு மொழி தமிழர்களின் போராட்டத்தால் பெறப்பட்டதால் தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க உதவியது. இதனால் இன்று உலகில் பல நாடுகளிலும் இந்தியர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றனர்

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் சமூக உரிமை, நீதி மற்றும் மேம்பாடு; தலையானதாக இருந்து வருகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 69 விழுக்காடு முறையை நடைமுறைபடுத்தினர். நாட்டிலேயே முதல் முதலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் சரியான பங்கினைப் பெறமுடியாமல் போன சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்குத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக்காலங்களில் சமூக நீதியினை வலுவாக நிலைநாட்டியுள்ளது. மேலும்; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் நடைமுறைபடுத்த அழுத்தம் தரப்பட்டு 1992இல் நடைமுறைபடுத்தப்பட்டது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்கள் (இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவுத் திட்டம், இலவசப் பேருந்து பயணம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கட்டணச் சலுகைகள்) நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. 2017-18ஆம் ஆண்டின்படி உயர் கல்வி நிறுவனங்களின் (பொதுக் கல்வி) எண்ணிக்கை 1535ம், தொழில் நுட்பக் கல்லூரிகள் 580ம், தொடக்க, இடைநிலை கல்வி நிறுவனங்கள் 45161ம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 8312ம் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. (GoTN 2020). இந்தியாவில் அதிக அளவு கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் 50 விழுக்காடு அளவிற்கு உள்ளனர், தொடக்கக் கல்வியில் முழு அளவிலான மாணவர் சேர்க்கை, படிப்பைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படும் அளவு மிகக் குறைவாகவும் உள்ளது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை பெரிய அளவில் இயற்கை வளங்கள் இல்லை, ஆனால் மனிதவளம் அதிக அளவில் உள்ளது. கல்வி அறிவு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தற்போது தமிழ்நாடு திகழ்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் கல்வி நிலையினை அளவிட முடியும். அவ்வகையில் நீதிக் கட்சி காலத்தில் கல்விஅறிவு பெற்றவர்கள் அளவு 1921ஆம் ஆண்டு 7.6 விழுக்காடாக இருந்து 1941ஆம் ஆண்டு 14.30 விழுக்காடாக அதிகரித்தது, அதாவது 6.7 விழுக்காடு கூடுதலானது (அதாவது ஒரு 10 ஆண்டுக்குச் சராசரியாக 3.35 விழுக்காடு உயர்ந்துள்ளது). இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது 25.43 விழுக்காடு கூடுதலாக அதிகரித்து, 1971ஆம் ஆண்டு 45.43 விழுக்காடாக உயர்ந்தது (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சராசரியாக 8.47 விழுக்காடு உயர்ந்துள்ளது) மேலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இது 34.9 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடுதலாக அதிகரித்து. 2011ஆம் ஆண்டின்படி 80.33 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சாராசரியாக 8.72 விழுக்காடு உயர்ந்துள்ளது).

சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வது சுகாதாரமாகும். இவற்றின் வெளிப்பாடடை பல காரணிகளைக்கொண்டு (பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், கருவுறுதல் வீதம், பாதுகாப்பான மகப்பேறு வீதம்) அளவிட முடிந்தாளும் ஆயுள் எதிர்பார்ப்பு என்பது மூலம் அளவிடுவது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைக் காரணியாகக் கொள்ளமுடியும். இதன் பொருள் ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் ஆயுள் நீடிப்புடன் வாழமுடியும் என்பதாகும். இது, முழக்க சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பினைப் பொறுத்தது. நீதிக் கட்சிக் காலத்தில் ஆண்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு 1911-21ஆம் ஆண்டில் 19.75ஆண்டுகள் என்றிருந்தது. 1931-41ஆம் ஆண்டில் 36.22 ஆண்டுகளாக உயர்ந்தது இதுபோலவே, பெண்களின் வயது இவ்வாண்டுகளில் 24.33லிருந்து 36.17 ஆண்டுகளாக உயர்நதது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1941-51 மற்றும் 1961-71ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாக 16.47 ஆண்டுகள் ஆண்களுக்கும் 11.94 ஆண்டுகள் பெண்களுக்கும் அதிகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் 1961-71 மற்றும் 2013-17ஆம் ஆண்டுகளுக்கிடையே 22.4 ஆண்டுகள் ஆண்களுக்கும் 27.2 ஆண்டுகள் பெண்களுக்கும் கூடுதலாக ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதாவது 2013-17ஆம் ஆண்டுக் கணக்கின்படி 69..90 ஆண்டுகள் ஆணகளுக்கும் 73.70 ஆண்டுகள் பெண்களுக்கும் ஆயள் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு பெருமளவிற்கு ஆண்களைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்பபு, சுகாதாரப் பாதுகாப்பு. சுயதொழில் செய்ய உதவி, பெண்கள் சுய உதவிக் குழக்கள், பெண்குழந்தைகளைப் பாதுகாப்பது போன்ற சில முக்கிய திட்டங்கள் திராவிடக் கழகங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிடலாம். இது மட்டுமல்லாமல் சுகாதாரக் கட்டமைப்பை பெருமளவிற்கு வலுபடுத்தியதையும் குறிப்பிடலாம்.

அட்டவணை 2: தமிழ் நாட்டில் ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்)

ஆண்டு

ஆண்கள்

பெண்கள்

ஆண்கள்-மாற்றம்

பெண்கள்-மாற்றம்

1911-1921

19.75

24.23

நீதிக் கட்சிக் காலம்

16.47

நீதிக் கட்சிக் காலம்

11.94

1921-1931

28.71

30.94

1931-1941

36.22

36.17

1941-1951

35.03

37.23

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

11.28

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

10.33

1951-1961

41.09

39.24

1961-1971

47.50

46.50

1971-1981

52.50

51.90

திராவிடக் கட்சிகள் காலம்

22.40

திராவிடக் கட்சிகள் காலம்

27.20

1981-1991

57.40

58.50

1991-2001

63.80

66.70

2001-2011

67.60

71.40

2013-2017

69.90

73.70

Source: GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai .

நீதிக் கட்சிக் காலத்தில் நோய்த் தடுப்பு மற்றும் தொற்று நோயினைக் கட்டுப்படுத்த முதன்முதலாகப் பொது சுகாதாரத்துறை 1923ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு மாநிலத் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் (நுஅpடழலநநள’ ளுவயவந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn) கொண்டுவரப்பட்டது. 1966ஆம் ஆண்டு குடும்ப நலத்துறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1966ஆம் ஆண்டு 1249 அரசு சுகாதார மையங்களாக இருந்து 2017-18ஆம் ஆண்டு 11137 ஆக உயர்ந்துள்ளது (GoTN 2020). இதுபோலவே 1968ல் 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலை தற்போது 25 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் பெண்கல்வி, சமத்துவம் போன்றவற்றில் தமிழ்நாடு சிறப்பாக முன்னிலையில் உள்ளதற்கு அரசின் திட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், மகிளிருக்கென அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்றவை திராவிடக் கட்சிகளின் முக்கிய சமூகநலத் திட்டங்களாகும். இதன் விளைவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கருவுறுதல் வீதம் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவாக ஒரு தாய்க்கு 1.6 குழந்தைகள் என்று பதிவாகியுள்ளது, மருத்துவமனைகளில் சென்று தாய்மார்கள் பாதுகாப்புடன் குழந்தை பிரசவிக்கும் அளவு 99 விழுக்காடு ஆகும் (இந்திய அளவில் 78.9 விழுக்காடு), குழந்தை இறப்பு வீதம் 1000ம் குழந்தைகளுக்கு 21 (இந்திய அளவில் 42) எனப் பல நிலைகளில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் இயல்பாகவே எந்த உந்துதலும் இல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையினைத் தற்போது காணமுடிகிறது.

ஆட்டவணை 3: தமிழ்நாட்டின் சுகாதரா பாதுகாப்பின் வெளிப்பர்டு

குறியீடுகள்

அலகு

ஸ்ரீஆண்டு

1951

1971

2017

பிறப்பு வீதம் (CBR)

1000 மக்களுக்கு

19.1

(40.8)

31.4 (36.9)

14.9 (20.2)

,இறப்பு வீதம் (CDR)

1000 மக்களுக்கு

17.1 (25.1)

14.4 (14.9)

6.7

(6.3)

மொத்த கருவுருதல் வீதம் (TFR)

ஒரு பெண்ணிற்காகச் சாராசரி குழந்தை

NA

3.9

(5.2)

1.6

(2.4)

பேறுகால இறப்பு வீதம்

1 லட்சத்திற்கு

1050*

(1000)

450

(800)

63

(122)

பாதுகாப்பான மகப்பேறு

(Institutional Delivary)

விழுக்காடு

NA

82.8

(38.6)

99

(78.9)

குழந்தைகள் இறப்பு வீதம்

1000 குழந்தைகளுக்கு

120

(186.7)

113 (129)

21

(42)

Note: * 1965 as reference period; NA- Not Available

Source: Velappan 1986;  GoTN, Statistical Handbook 2019 and World Bank (https://data.worldbank.org).

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகள்

தொழில் துறையினை மேம்படுத்த, நீதிக் கட்சி ஆட்சியில் மாநிலத் தொழில் உதவிச் சட்டம் 1922ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்துஸ்த்தான் போட்டோ தொழிற்சாலை (உதகமண்டலம்), பல்நோக்கு மின்சாரம் தயாரித்தல், கல்பாக்கம் அனல் மின் நிலையம், சக்கரை ஆலைகள், நூற்பாலைகள், திருச்சி பாரத் கனரக மின் உற்பத்திபாக நிறுவனம்;, 22 தொழிற்பேட்டைகள் (கிண்டி, அம்பத்தூர், ஓசூர், திருச்சி, இராணிப்பேட்டை, விருதுநகர் உட்பட) தொடங்கப்பட்டன. கோயம்புத்தூரில் காட்டன் மற்றும் சர்க்கரைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கு மின்மோட்டார் பயன்படுத்துவது போன்றவை நடைமுறைபடுத்தப்பட்டன. இதன் விளைவு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அன்றைய நிலையில் மூன்றாம் இடத்தில் தொழில் துறை உற்பத்தியில் அங்கம் வகித்தது (Velappan 1986)..

வேளாண்மை வளர்ச்சிக்காகப் பவானி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிரு~;ணகிரி, பரம்பிக்குளம், வீடூர் போன்ற நீhத்;தேக்கங்கள் காங்கிரஸ் ஆட்ச்சியில் கட்டப்பட்டன. ஜமின்தார் ஒழிப்புச் சட்டம் நிரைவேற்றப்பட்டு 20 மில்லியன் குத்தகைதாரர்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், தமிழ்நாடு சிறுதொழில் கழகம், தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், என ஏராளமாகத் தொடங்கப்பட்டன. வேளாண்மையினை மேம்படுத்த இலவச மின்சாரம், நமக்கு நாமே, குடிமறாமரத்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம், உழவர் சந்தைகள் என வேளாண்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்ச்சிக் காலத்தில் 58.01 லட்சம் எக்டர் நிகர சாகுபடி பரப்பாக 1950-51இல் இருந்தது திராவிடக் கட்சிகளின் காலமான 2017-18இல் 46.38 லட்சம் எக்டராகக் குறைந்துள்ளது ஆனால் வேளாண்சாரா நிலப்பயன்பாடு 1961-61இல் 12.95 லட்சம் எக்டராக இருந்தது 2017-18இல் 22.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 1950-51இல் மொத்தப் பயிரிடும் பரப்பில் 50.9 விழுக்காடு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றது 2017-18இல் 57 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதோபோல் 1955-56இல் உணவு தானிய உற்பத்தி 40.88 லட்சம் டன்னாக இருந்தது 2017-18இல் 107.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. திராவிடக் கழகங்கள் ஆட்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாகப் பணப்பயிர் அதிகப் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண்சார் தொழில்களான பஞ்சாலை தொழிற்சாலைகள், சர்கரை ஆலைகள் அதிக அளவில் பல தமிழ்நாட்டின்; பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. 1960-61இல் 3000 சிறு தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில் 2017-18இல் 23.6 லட்சம் சிறு, நடுத்தரத் தொழில்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன்வழியாக அதிக அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் ஏற்றுமதியும் நடைபெறுகிறது (Perumalsamy, 1985; GoTN 2020).

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்பதில் தமிழ்நாடு முன்ணனியில் உள்ளதைத் தற்போதும் காண முடிகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையானது. உலகப் புகழ்பெற்ற ஹ_ண்டாய், ஃபோர்ட், ரெனோல்டு, பி.எம்.டபில்யு, அசோக் லைலேண்டு, டி.வி.எஸ் என மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை ‘இந்தியாவின் டெட்ராயிட்’ என அழைக்கப்படுகிறது.

இன்று இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் 11 விழுக்காடும், தொழில் நிறுவனங்களில் 17 விழுக்காடும், தொழில் துறை வேலைவாய்ப்பில் 16 விழுக்காடும், அந்நிய நேரடி முதலீட்டில் 6 விழுக்காடு பங்குகளைத் தற்போது பெற்றுள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டில் முன்னியில் இருப்பதற்கு மற்றொரு காரணம் இயற்கையாகவே நீண்ட கடற்கரையைப் (1076 கி.மீ) பெற்றுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் 3 (சென்னை, தூத்க்குடி, எண்ணூர்) தமிழ்நாட்டில் உள்ளது, பன்னாட்டு விமான நிலையங்கள் 4 உள்ளது. சாலை-இரயில் போக்குவரத்து நாட்டின் பல பகுதிகளையும் நேரடியான இணைப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதையும் குறிப்படலாம். இன்று திருப்பூர் (பின்னலாடை), சென்னை (வாகன உற்பத்தி), கோயம்புத்தூர் (மோட்டர் உற்பத்தி), மதுரை (வாகன உதிரி பாகங்கள்), திருச்சி (வேளாண்சார் மதிப்புக் கூட்டல் உற்பத்தி), சிவகாசி (பட்டாசு) போன்ற நகரங்கள் உலக அளவில் தொழில் துறைகளில் குறிப்பிடும் இடத்தை பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் நகரமயமாதலில் முதன்மையானதாகும் (49 விழுக்காடு அளவில் மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்). இதனால் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அதிக அளவில் ஒட்டுமொத்த மாநிலப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இயற்கைவள ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனால் மனிதவள ஆதாரங்கள் அதிகம் குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் பின்பற்றும் இருமொழிக்கொள்கையின் விளைவு, தொழில் நுட்ப மேம்பாட்டில் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்குகிறது. உலக அளவிலும் பல வல்லுநர்களை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியான சேவைத்துறையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டெட், வங்கித்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவம், காப்பீடு, சுற்றுலா, போன்றவற்றின்; தலைசிறந்து விளங்குகிறது. சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவத்திற்கான மையமாகத் திகழ்கிறது.

துறைவாரியான மேம்பாடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

வரைபடம் 1: தமிழ்நாட்டின் துறைவரியான பங்களிப்பு- 1960-61 மற்றும் 2017-18 ஒப்பீடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

ஆதாரம்: Tamil Nadu An Economic Appraisal and Tamil Nadu Statistical Hand Book 2019.

பொருளாதார மேம்பாட்டினைத் துறைவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கழகங்களின் ஆட்சிகளை ஒப்பிடும் போது வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையின் ஒட்டுமொத்த மாநில மொத்த வருவாயில் 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாகப் பங்களிப்பு இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலமான 2017-18ஆம் ஆண்டு உள்ள ஆண்டுகளில் 12 விழுக்காடு பங்களிப்பாகக் குறைந்துள்ளது (இந்திய அளவில் தற்போது 15.3 விழுக்காடு), தொழில் துறையினை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 விழுக்காட்டிலிருந்த பங்களிப்பு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 36 விழுக்காடாக இதே காலகட்டங்களில் அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 30.5 விழுக்காடு), இதுபோன்று சேவைத்துறை 31 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 54.2 விழுக்காடு) (Rajkumar et al, EPW, 12.07.2021). காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1960-61ல் ரூ.330ஆக இருந்த தலா வருமானம் 1970-71ஆம் ஆண்டு ரூ. 581ஆக அதிகரித்தது. இது தற்போது ரூ.138805 என 2018-19ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மொத்த மாநில வருவாயில் தலா வருமானம் 1960-61 மற்றும் 1970-71ல் 5.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருமடங்காக 11.82 விழுக்காடாக 1980-81 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அட்டவணை 4: தமிழ்நாட்டின் தலா வருமானப் போக்கு (நிலையான விலையில்)

ஆண்டு

தலா வருமானம் (ரூ.)

சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் (%)

1960-61

      330

இந்திய தேசிய காங்கிரசு காலம் 5.81

1970-71

      581

1980-81

    1269

திராவிடக் கட்சிகளின் காலம் 11.82

1990-91

    2275

2000-01

    53507

2010-11

    78473

2018-19

  138805

ஆதாரம்: Compailed from various Tamil Nadu Statistical Hand Book, published by Government of Tamil Nadu.

வறுமை ஒழிப்பு

ஒட்டுமொத்தப் பார்வையில் நீதிக் கட்சியானது பல்வேறு எதிர்புகளுக்கிடையே சமூகச் சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகப் பல திட்டங்களைக் குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தித் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு அடிகோலியது. அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தினையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக-பொருளாதார தளங்களின் தங்களின் சித்தாந்தை நடைமுறைபடுத்தியது, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என அனைத்திலும் தடம்பதித்துள்ளது. இதன் விளைவு இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் அதிகஅளவில் குறைத்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் 1957-58ஆம் ஆண்டு 67.8 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டு 15.80 விழுக்காடாகக் குறைந்துள்ளது அதாவது 1973-74 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் வறுமை 41.63 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. நகர்புறங்களில் 1973-74இல் 49.4 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளனர் இது 2011-12ஆம் ஆண்டு 6.50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது, உணவுப் பாதுகாப்பு (குறிப்பாக மதிய உணவுதிட்டம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து), முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களைத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்தியதைக் குறிப்பிடலாம். இவற்றின் ஒட்டு மொத்த விளைவு கிராம-நகர, ஆண்-பெண், வட்டாரங்களுக்கிடையேவும்,  சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வின் இடைவெளி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

அட்டவணை 5: தமிழ்நாட்டில் வறுமை வீதம் (விழுக்காடு)

ஆண்டு

கிராமப்புறம்

நகர்புறம்

மொத்தம்

% குறைந்து

1957-58

67.8

1963-64

52.0

1973-74

57.4

49.4

54.6

1977-78

57.7

48.7

54.8

0.15

1983-84

54.0

47.0

51.7

3.13

1987-88

45.8

38.6

43.4

8.27

1993-94

32.5

39.8

35.0

8.36

1999-00

20.6

22.1

21.1

13.9

2004-05

22.8

22.2

22.5

-1.40

2011-12

15.8

6.5

11.2

11.30

1973-74 & 2011-12 , இடையே குறைநத அளவு

41.6

42.9

43.4

ஆதாரம்: Shanmugam, 2012 and  C.Rangarajan 2014.

முடிவுரை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின் நிலையினை மதிப்பிடுவது சரியாக இருக்காது சமூகக் கூறுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று பல பொருளியல் அறிஞர்கள் அன்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே சமூக, பொருளாதாரம் உள்ளடக்கிய கூறுகளான கல்வி, சுகாதாரம், தலாவருமானம் ஆகியவற்றின் வெளிப்பாடான மனிதவள மேம்மபாட்டுக் குறியீட்டை ஐக்கிய நாடுகளின் சபை 1990ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியிட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டெண்ணில் தமிழ்நாடு 1981இல் 0.343 புள்ளியில் இருந்தது 2019ஆம் ஆண்டு 0.709 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய மாநிங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தமிழ்நாடு சமூக-பொருளாதார நிலைகளில் முன்னேடியாக இருப்பதற்குக் காரணம் சமூகச் நீதி, சமூகச் சீர்திருத்தங்கள் எனத் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படுவதே ஆகும். இதன் விளைவு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் தமிழ்நாடு பயணித்துக்கொண்டுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு பல நிலைகளில் ஒரு மாதிரிமாநிலமாக தற்போது இருப்பதற்குக் காரணம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல் வழியாக அவற்றை நடைமுறைப் படுத்தியதே ஆகும். இவை ஒருபுறம் இருந்தாலும் இந்தியவிற்கே முன்னேடியாக மதிய உணவுத் திட்டம், இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பொதுவிநியோகம், அனைவருக்குமான கல்வி, சுகாதாரம் திகழ்ந்தாலும் பல உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக்கொண்ட நிலையினைத் தற்போது காண முடிகிறது. முக்கியமாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு முழுமையாகக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. நோபல் பரிசுபெற்ற பேரா. அமர்த்தியா சென் தன்னுடைய புத்தமான Development as Freedom என்பதில் தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘சுகாதாரப் பாதுகாப்பின் வெளிப்பாட்டினில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ளது’ என்கிறார். An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் தமிழ்நாடு சமூக மேம்பாட்டில் உயர்ந்து இருப்பதால் வறுமை ஒழிப்பு, சமத்துவம் போன்றவற்றில் இந்திய அளவில் உயர்ந்து நிற்கின்ற மாநிலம் என்கிறார்.

முக்கிய சொற்கள்: சமூக-பொருளாதாரம், சமூக நீதி, சுகாதாரம், கல்வி, வறுமை
————————-

முனைவர் பு. அன்பழகன்
இணைப்பேராசிரியர், பொருளியல் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை-5

 

முந்தைய  பொருளாதார கட்டுரைகளை படிக்க கிளிக் செய்க: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

பொருளாதார கட்டுரை 3: வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

பொருளாதார கட்டுரை 4: கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 5: இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 6: பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்

References

Balasubramanian T and K Ayyanar (2020): “Socio-Economic Treands in Tamil Nadu After Independence,” Aegaeum, Vol.8, No.14, pp 1621-1630.

Business Standard (2016): “Tamil Nadu lost due to Bifurcation of Madras: Ramadoss”, 31.10.2016, https://www.business-standard.com/article/news-ians/tamil-nadu-lost-due-to-bifurcation-of-madras-ramadoss-116103101264_1.html\

GoI (2005),”Tamil Development Report,” Planning Commission, Government of India, New Delhi.

GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai

Government of Tamil Nadu (2003): “Tamil Nadu Human Development Report,” New Delhi, Social Science Press.

https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php

Mohan Ram (1974): “Ramaswami Naicker and the Dravidan Movement,” Economic and Political Weekly, Vol.9, No.6/8, pp.217-224.

ஜேயராமன், கோவி (2021): “ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,” பெண்ணைப் பதிப்பகம், கடலூர்.

Pallavi Roy (2011): “Tamil Nadu: Growth in the Time of Clientelism,” Working Paper, SOAS-AFD Research Project, Paris (http://eprints.soas.ac.uk/22131/).

Permalsamy S (1985): “Economic Development of Tamil Nadu,” S.Chand & Company Ltd., New Delhi.

Perumal C A and V K Padmanabhan (1987): “Political Alliances in Tamil Nadu,” The Indian Journal of Political Science, Vol 48, No 4, pp 618-624.

Rajaraman K R (1970): “Tamil Nadu State Administration Report 1968-69,” Government of Tamil Nadu.

Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

Rangarajan C (2014): “Report of the Expert Group to Review the Methodology for measurement of Poverty,” Planning Commission, Government of India.

Shanmugam, K.R (2012): “Monitorable Indicators and Performance: Tamil Nadu,” Madras School of Economics, Chennai.

Thamari Manalan (2018): “Role of Justice Party in Tamil Nadu Politics,” JETIR, Vol.5. Issue 5.

Velappan (1986): “Ecnomic Development of Tamil Nadu,” Emeral Publisher, Madras.

William Joe, Suresh Sharma, Jyotsna Sharma, Y Manasa Shanta, Mala Ramanathan, Udaya Shankar Mishra and B.Subha Sri (2015): “Maternal Mortality in India: A Review of Trends and Patterns,” IEG Working Paper No. 353.

ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி) 

ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி) 

ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மாநிலத் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் கட்சிக்குள் கலகக் கொடி எழுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம் இன்னமும் முடியவில்லை.  எனினும் அதன் முக்கியமான அம்சங்கள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியிருக்கின்றன.…