அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ

அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ




சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா வெயிலின் உக்கிரத்தால் உருகி ஓடும் தார்ச்சாலை அருகில் வயிற்றில் பசியோடும், தாகத்தோடும் நின்றிருந்தான். நடந்து நடந்து கால்களெல்லாம் ஓய்வுக்கு கெஞ்சின. சைக்கிளில் வந்தவர் முகக் கவசத்தை முக்கிலிருந்து லேசாக இறக்கி, பசியால் வாடிக் கிறங்கிப் போயிருக்கும் அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டார்.

“ஏம்ப்பா… அங்கே கிடக்கிற பிரேதம் யாரோடது ? உனக்கு வேண்டியவங்களா…?”

“யார்…யாருன்னு தெரியலைங்களே” பசி மயக்கத்தில் பிவாவினால் பேச முடியவில்லை.

“மரத்தடியில் நிக்கிற, பிரேதம் யாருதுன்னு கேட்டா மரம் மாதிரி நிக்கிறாயே…

அப்போது முகக் கவசம் அணிந்த இன்னொருவர் சைக்கிளில் வந்து இறங்கினார். பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்த்து, “ஏன் முகக் கவசத்தை நாடிக்குக் கீழே இறக்கிவிட்டிருக்கிறாய்? மூக்கின் மேலே ஏற்றிப் போடு” என்றவர் திரும்பி பிவாவை அருவருப்போடு பார்த்தார்: “அந்தப் பிணம் யாருதுனு ஏதாவது சொன்னானா?”

“ஒண்ணுமே தெரியலை என்கிறான். எப்போது இங்கு வந்து செத்துப் போனதுன்னு யாருக்குத் தெரியும்? புலம் பெயர்ந்து வருபவர்களை எவரென்று அறிய முடியாது.”

இரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரம் தேசிய நெடுஞ்சாலையை உற்று நோக்கினார்கள். ஊரடங்கினால் தார்ச் சாலையில் வெகுதூரம் வரையில் யாரும் தெரியவில்லை.

பல நாட்களாகவே வெளி மாநிலத்திலிருந்து ஜனங்கள் பெட்டிகளையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இந்த சாலை வழியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

“நான் நேற்று மாலை வரை இந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். மக்கள் சாரை சாரையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நேற்று இரவிலோ அல்லது அதிகாலையிலோ யாரோ இந்தப் பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் அல்லது சம்பவ இடத்திலே வந்து இறந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?”

“பிணத்தைக் கொண்டுவந்து போடுகிறவர்கள் ஏன் சாலையிலிருந்து இருபது அடி தள்ளி இருக்கிற மரத்தடியில் போட வேண்டும்?” சைக்கிளில் வந்த மற்றொருவர் கேட்டார்.

“ஆமா… நேற்று இந்தப் பகுதியின் காவல் பணி நீதானே செய்தாய்? இரவு காவலரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லவா நீ வந்திருக்க வேண்டும். வெளியூர்க்காரன் எவனாவது இந்த வழியே வந்து ஊருக்குள் நுழைந்திருக்கிறானா?”

பிணத்தைப் பற்றிய உரையாடல் அவர்களுக்குள் தொடர்ந்துகொண்டிருந்தது.

புலம்பெயர்ந்து இந்த சாலை வழியே நடந்து போய்க்கொண்டிருக்கும் ஏராளமான மக்களில் கொரோனா வைரஸ் பாதித்த யாராவது ஒருவர் ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்திலிருந்து ஊர்க்காவல் போட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இது வரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததில்லை. வெளியாள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாது. அப்படியிருக்க இந்தப் பிணம் இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

“சரி. அதை விடு. அடுத்து இந்தப் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவதென்று யோசிக்கலாம்”.

“போலீசுக்கு தகவல் சொல்லலாமா?”

“போலீஸ் வந்து என்ன செய்வாங்க? புகார் எழுதிக் கொடுக்கச் சொல்வாங்க…இறந்தவரைப் பற்றி நாங்க விசாரணை செய்துக்குறோம். இந்தப் பிணத்தை நீங்களே அடக்கம் பண்ணிருங்க என்பார்கள். நம் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு நம்மிடமே வேலை வாங்குவார்கள். இது தேவையா? அதற்கு முன் பிணம் அழுகி வீச்சம் எடுத்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம். அந்தப் பிணம் கொரோனாவால் பாதித்திருந்தால் நம்ம கிராமத்திற்குள் வைரஸ் பரவ ஆரம்பித்துவிடும்”.

அவர்களில் ஒருவர் பிவாவை ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்னார்: “இவனையே ஏன் பிணத்தை அடக்கம் செய்யச் சொல்லக் கூடாது?”

“ நல்ல யோசனை. அவன் வெறும் ஆளாகத்தான் இருக்கிறான். அவனை பிணத்தின் அருகே போகச் சொல்லுவோம். கிராமத்துக்காரர்கள் யாரும் பிணத்தைத் தொட மாட்டார்கள். நாம் விலகியே இருப்போம்”.

இவ்வளவு நேரமாக அத்தனை உரையாடல்களும் பிவாவின் முன்னால் தான் நடந்துகொண்டிருக்கிறது. சுற்றி நடப்பதைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லை. சோகங்களையும், துயரங்களையும் கடந்தே வந்திருக்கிறான். கொரோனாவைத் தேசிய பேரிடர் என்கிறார்கள். பேரிடர் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள்? கடந்த பல நாட்களாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அவன் கண்டது என்ன? பல்லாயிரம் மனிதர்கள் சொந்த வீடு நோக்கி வேகாத வெயிலில் கால் நடையாகப் பயணிக்கிறார்கள். பட்டினியால் மடிகிறார்கள். குழந்தைகள் பாலின்றி சாகின்றன.

தான் இவ்வளவு நேரமும் தகிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருப்பதை பிவா அப்போதுதான் உணர்ந்தான். சூரியனின் வெப்பத்திலிருந்து காக்க நிழல் பகுதியை நோக்கி நகர்ந்தான். உடனே அவர்கள் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.

“நில்லுப்பா… பிரேதம் யாருன்னு தெரியலைன்னா இருக்கட்டும். நீதான் அந்தப் பிணத்தை புதைக்க வேண்டும். அது வரையில் நீ போக முடியாது” என்று மிரட்டும் தொனியில் கூறினார்கள்.

பிவாவின் கால்கள் தளர்ந்து நடுங்கின. அவர்களின் பயமுறுத்தும் வார்த்தைகள் இன்னொரு பேரிடருக்குள் தள்ளியது போல் உணர்ந்தான். நா வறண்டு, கண்கள் உள்ளே போய், வயிறு ஒடுங்கி நிற்பவனைப் பார்த்து அவர்களில் ஒருவர் இரக்கத்துடன் கேட்டார், “பசிக்கிறதா?”

“தண்ணீர்…தண்ணீர் வேண்டும். கையில் காசு இல்லை.”

பேச்சே வரவில்லை. கொர கொரவென்று சத்தம் வந்தது. பட்டினியால் வயிறு ஒட்டிப் போயிருந்தாலும் அவன் உணவை நாடவில்லை. தொண்டைதான் வறண்டுவிட்டது. முதலில் தண்ணீர்தான் அவனுக்குத் தேவை.

“உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே வந்துவிடும். சொன்ன வேலையைப் பார்”. பிவாவுக்கு உணவும், தண்ணீரும் கொண்டுவர சைக்கிளை எடுத்து வேகமாய்க் கிளம்பினார்.

இவனுக்கு கொரோனா தொற்று இருக்குமோ…இவனை சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியாது. மற்றொரு சைக்கிள்காரர் நினைத்துக்கொண்டார். பிவா அவர் பின்னால் தள்ளாடியபடி நடந்து சென்றான்.

கோவாவிலிருந்து புறப்பட்ட பிவா, நடை பயணத்தின் போது பல்வேறு மனிதர்கள் உடன் வந்தார்கள். தூக்கமிழந்து, நடை தளர்ந்து, பசியோடு நடந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இவனுக்கு கூட்டாளி ஆவார்களா? புலம் பெயர்ந்து பிழைப்பு தேடிப் போன ஒவ்வொருவரும் வீடு போய்ச் சேர வேண்டும் என்ற வேட்கையோடு திரும்பி நடந்து செல்கிறார்கள். பிவா கையிலிருக்கும் பணத்தை லாரி டிரைவரிடம் கொடுத்து இரண்டு வண்டியில் மாறி மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறான்.

சீக்கிரம் வீட்டிற்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. கோவாவிலிருந்து கிளம்பி பத்து நாட்களாயிற்று. கோலாப்பூருக்கும், சோலாப்பூருக்கும் இடையில்தான் தற்போது இருக்கிறான். ஊரை நெருங்கிவிட்ட குதுகலம் வந்தது. கையில் பணம் இருந்தால் இந்நேரம் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். லாரி டிரைவரிடம் பணம் கொடுத்தால் வண்டியில் சரக்குகளோடு சரக்குகளாக ஏற்றி குறிப்பிட்ட தூரத்தில் இறக்கி விட்டுவிடுகிறார்கள். அவன் சொந்த ஊரான நான்டெட் இங்கிருந்து சில மணி நேர பயணம் என்றாலும் காசில்லாமல் எப்படி ஊர் போய்ச் சேர முடியும்?

அப்போது பிரேதம் இருந்த இடத்திலிருந்து அரைக் கிலோ மீட்டருக்கு அப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு தெரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். எங்கே தன்னைக் கூப்பிட்டு: விடுவார்களோ என பயந்தான். இப்போது இந்த ஊர்க்காரர்களைப் பயன்படுத்தித்தான் நமது ஊருக்குப் போக வேண்டும். அவர்கள் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் எல்லோரும் இவன் பார்வையிலிருந்து கடந்து போனார்கள். அவர்கள் ஏதாவது இவனிடம் கேட்டால் பதில் சொல்லும் தெம்பு இல்லை. சைக்கிள்காரர் கூடவே சென்றுவிட்டான்.

அருகில் வந்தபின்தான் அது பெண் பிணம் என்று தெரியவந்தது. ஐந்தாறு கிராமத்து ஆட்கள் பிணம் கிடந்த மரத்தடியிலி;ருந்து சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தார்கள். பிரேதத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடிக் கலைகிற கூட்டம் போல் ஒரு தகவலும் பெற முடியவில்லை. பிரேதம் யாரென்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு பிணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் கள்ள மௌனமாக இருந்தார்.

ஒரு பிணத்தை யாருடையது என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? ஒரு பெண் உயிரோடு இருந்தால் தாயாக, ஒருவரின் மனைவியாக, சகோதரியாக இருக்க முடியும். ஆனால் அவள் இறந்து விட்டாள். அவள் யாருக்குச் சொந்தமானவள்? முடிவில்லாத விவாதமாகத் தொடர்கிறது.

இந்தப் பிணத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால், பாலின்றி பட்டினியால் மடிந்த அவளுடைய குழந்தையை மூன்று நாட்களுக்கு முன் சாலையோரம் புதைத்துவிட்டு வந்ததைச் சொல்லியிருப்பாள். இறந்த குழந்தையை சாலையோரத்தில் கிடத்திவிட்டு வா என்று அவளுடைய கணவன் வற்புறுத்தி அழைத்தான். தாயுள்ளம் கேட்கவில்லை. அவள் வர மறுத்த போது, இவர்களை விட்டு விட்டு அவன் சென்றுவிட்டான். பட்டினியாலும், தாகத்தாலும் மூன்று நாட்களாக நடந்து நடந்து குழந்தை இறந்த ஏக்கத்தோடு இவ்விடத்தில் அவள் உயிர் பிரிந்தி;ருக்கிறது,

பிவா பிரேதத்தின் அருகில் சென்று சுற்று முற்றும் பார்த்தான். சைக்கிள்காரர், கிராமத்து ஆட்களுடன் நெருக்கமாக நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

“இறந்தவள் என்ன சாதியோ, மதமோ தெரியவில்லை. அவர்கள் வழக்கத்தில் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா?”

“எரித்தால் அதிகம் செலவாகும். பேசாமல் புதைத்துவிடுவதுதான் சரியானது” என்றார் ஒருவர்.

“புதைப்பதென்றால் எங்கே குழி தோண்டுவது? நமது ஊர் மண்ணில் இவளை புதைக்கக் கூடாது. ஊர் எல்லையைத் தாண்டி தாழ்வான பகுதியில்தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்றார் மற்றவர்.

புதைக்கிறவனுக்குக் கூலி கொடுக்க, வந்தவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்கள். ஒருவர் மிச்ச ரூபாயைப் போட்டு நூறு ரூபாயாக ஆக்கினார். சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் வாங்க ஊருக்குள் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. இங்கே இருப்பவர்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பிவாவை சத்தமாக அழைத்து வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, பாதுபாப்பாக பத்தடிக்கு அப்பால் தள்ளி நின்றுகொண்டார்கள்.

பிணத்தைத் தாழ்வான பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஊர்க்காரர்கள் பிணத்தைத் தூக்க உதவிக்கு வர மாட்டார்கள். என்ன செய்வது? எப்படியாவது கொண்டுபோக வேண்டும். வயிறு வேறு பிசைந்து கொண்டிருந்தது. விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும். சட்டென்று முடிவெடுத்தான். குனிந்து பிணத்தின் தோளுக்கடியில் கைகளைக் கொடுத்து இழுத்துச் சென்றான். முகத்தைப் பார்க்கவில்லை. பிணம் பயங்கரமாக கனத்தது. ஆனால் அவன் அடைந்த துயரத்தின் முன் இந்த பிரேதத்தின் கனம் சிறியதுதான்.

திடீரென்று அவனுக்கு தோன்றியது. ‘இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இழுத்துச் செல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் பிறந்து, வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக் கொள்பவர்களுக்கு கண்ணியமான முறையில் வழியனுப்பி வைப்பதே சிறந்த மனித நேயமாகும்’.

மீண்டும் குனிந்து பிணத்தின் பின் கழுத்தின் கீழும், முழங்கால்களுக்குக் கீழும் கைகளை வைத்து தூக்கினான். அவன் உடம்பின் எடையை விட பிணத்தின் கனம் அதிகமாக இருந்தது. கண்கள் இருண்டன. பின் நிதானித்து முழு பலத்தையும் திரட்டி தூக்கி நடந்தான்.

புதைக்கும் இடம் வரை பிணத்தைத் தூக்கி வந்ததால் மேல் மூச்சு வாங்கியது. வேகமாக சுவாசித்தான். நாய்கள் வேகமாக ஓடிவந்து மூச்சு வாங்கி இளைப்பது போல் தஸ் புஸ் என்று காற்று மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் வெளியேறியது. கீழே பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது. ஊர்க்காரர்கள் ஏற்கனவே குழி தோண்டி வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை குழி வெட்டும் கடினமான வேலை இல்லாமல் போனது. ஆனால் ஊர்க்காரர்கள் இவன் கடப்பாறை, மண்வெட்டியைத் தொட்டால் அதன் மூலம் கொரோனா தொற்று ஊருக்குள் பரவிவிடும் என்ற அச்சத்தில் தான் உள்ளுர்காரர்களை வைத்து புதை குழி தோண்டியிருக்கிறார்கள். ஊரின் ஒதுக்கத்தில் செல்லாத காசுகளை சேமிக்கும் உண்டியலாக இருக்கும் சுடுகாட்டில் கூட அந்தப் பிணத்தைப் புதைக்க ஊர்க்காரர்கள் விரும்பவில்லை.

“பிணத்தைத் தூக்கி உள்ளே போடு…”

தூரத்திலிருந்து கத்தினார்கள்.

பிவா அவ்வாறு செய்யவில்லை. பிரேதத்தைத் தூக்கி குனிந்து மெதுவாக உள்ளே இறக்கி படுக்க வைத்தான். அவன் மகள் இறந்தபோது இருக்கிற கண்ணீரெல்லாம் முழுவதுமாக வெளியேறி வற்றிவிட்டது. மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆசுவாசம் அழுகை மட்டுமே. அது கண்ணில் சுரந்துகொண்டிருக்கும் வரை வாழ்வில் எந்த சோகத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். இப்போது சிந்துவதற்கு கண்களில் நீர் இல்லை. தொண்டையில் கட்டி உருவாகி முழுவதும் அடைத்துவிட்டது போல் உணர்ந்தான். வாயெல்லாம் உலர்ந்து, உதடுகள் வெளுத்துவிட்டன. அடுத்த சாவு நானாகத்தான் இருக்கும். அவன் நினைத்துக்கொண்டான்.

“மண்ணைத் தள்ளி குழியை மூடு…”

மீண்டும் சத்தம் கொடுத்தார்கள். அவர்கள் போதும் என்று சொல்லுகிற வரை மண்ணை அள்ளி போட்டுக்கொண்டே இருந்தான். குழியளவிற்கு மேடாக்கி கல்லறை போல் ஆக்கினான்.

“சரிப்பா…வேலை முடிந்துவிட்டது. நாங்கள் போகிறோம்”.

காகிதத்தில் சுற்றப்பட்ட இரண்டு சப்பாத்திகளையும், தண்ணீர் பாட்டிலையும் கீழே வைத்தார்கள். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிடாமல் இருக்க அதன் மீது சிறு கல்லைத் தூக்கி வைத்தார்கள். நூறு ரூபாய் இதிலே இருக்கிறது எடுத்துக்கொள்.

வந்தவர்கள் அனைவரும் முகக் கவசங்களை சரி செய்துகொண்டார்கள். மிகப் பெரிய வேலையை மிக எளிதாக முடித்துவிட்ட திருப்தியில் சமூக இடைவெளிவிட்டு ஊருக்குள் திரும்பிப் போனார்கள்.

பிவா பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தான். காகிதத்தை பிரித்த போது, அதில் தடித்த இரண்டு சப்பாத்தியும், பு+ண்டு சட்னியும் இருந்தன. சட்னியை சிறிது எடுத்து நாவில் தடவினான். வாயில் எச்சில் ஊறியது. கரகரப்பான வாசனை மூக்கைத் துளைத்தது. செரிமான உறுப்புகளெல்லாம் இயங்காததினால் அவனுக்கு பசியெல்லாம் இல்லை. சப்பாத்திகளை காகிதத்தில் சுருட்டி பேன்ட் பைக்குள் திணித்து, ரூபாய் நோட்டுக்களை எண்ணி சட்டைப் பைக்குள் வைத்தான்.

புலம்பெயர்ந்து போய் வேலை செய்து வாங்கிய சம்பளத்தையும், தற்போது இந்த வேலைக்குக் கிடைத்திருக்கும் கூலியையும் ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைத்தான். கடைசியாக புதை மேட்டின் மீது பாதங்களால் சிறிது மண்ணைத் தள்ளிவிட்டான்.

‘எனக்கு இது மாதிரி மரணம் வந்தால், நடந்து வரும் வழியில் எனது குடும்பத்தின் மூன்று உயிர்கள் ஒவ்வொருவராக பலியானதை, ஊரிலுள்ள அம்மாவும், அண்ணனும் எப்படி தெரிந்து கொள்வார்கள்? எனது உயிர் பிரியும் போது, அது எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் நிகழ வேண்டு’மென்று நினைத்தான்.

கையில் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வந்தான். சூரியன் தனது நெருப்புக் கோளத்திலிருந்து வெப்பத்தை பூமியின் மீது இறக்கிக்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை உக்கிரமான வெயிலை உள்வாங்கி அதை அப்படியே வெளியிட்டது. வானத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவனுடைய உடம்பின் தோலுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.

சாலையில் நடந்தான். சட்டைப் பையில் உள்ள நூறு ரூபாய் அவனுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்தது. எதிர்காலத்தை நோக்கி வாழும் மனிதனின் இயல்புதான் இக்கட்டான சூழலிருந்து அவன் மீள உதவுகிறது.

இந்த நூறு ரூபாயை எந்த லாரிக்காரரிடம் கொடுத்தாலும் ஊரில்கொண்டுபோய் இறக்கி விட்டுவிடுவார். வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்.

நன்றி: இண்டியன் லிட்டரேச்சர்- 322
கொங்கணி மூலம் : தாமோதர் மௌசோ
ஆங்கிலம் வழி, தமிழில்: மாதா

Athu Yarudaiya Pretham Shortstory By Dhamothar Mowsa அது யாருடைய பிரேதம்? சிறுகதை - தாமோதர் மௌசோ

மூலக் கதை ஆசிரியர் தாமோதர் மௌசோ அவர்களைப் பற்றி…..
தாமோதர் மௌசோ கொங்கணி மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளர். அடிப்படையில் சிறுகதைகள் அதிகம் படைப்பவர் என்றாலும், சிறுகதைகளும், நாவல்களும் அவருடைய படைப்புக் களமாக உள்ளது. இதுவரை அவர் கொங்கணி மொழியில் பதினேழு நூல்களும், ஆங்கிலத்தில் ஒரு நூலும் வெளியிட்டுள்ளார். மிக ஆழமான இலக்கிய விமர்சகரான இவரது நூல்கள் மராத்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன. “ கர்மெலின்” என்ற தமது முதல் நாவலுக்கு “சாகித்ய அகாதமி” விருது பெற்றவர்.

வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் பெற்றோர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் அமர்த்தப்படும் கோவா மாநிலப் பெண்களது பாடுகளையும், இன்னல்களையும் வடித்திருந்த அந்த நாவல் பதின்மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியங்கள் கூடப் பேசாத அந்தக் கருப்பொருளைத் தமது நாவல் பேசியது என்று சொல்லும் மௌசோ, கொங்கணி இலக்கிய வரலாற்றில் கத்தோலிக்க சமூகம் பற்றிய முதல் பதிவும் இது தான் என்று சொல்கிறார். “சுனாமி சிமோன்” என்ற நாவலுக்கு” வி.வி. பை புரஸ்கர்;” விருது வழங்கப்பட்டது. கோவா அரசின் கலாச்சார விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு ஒன்றிய அரசு, இலக்கியத்தில் மிக உயர்ந்த விருதான “ஞான பீட” விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

Athu Yarudaiya Pretham Shortstory By Dhamothar Mowsa அது யாருடைய பிரேதம்? சிறுகதை - தாமோதர் மௌசோ

மொழிபெயர்ப்பாளர் மாதா எனும் மா தங்கராசு அவர்களைப் பற்றி ….
பள்ளி இறுதிக் கல்வி வரை மட்டுமே படிக்க முடிந்த எளிய நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த மா தங்கராசு அவர்கள், அயல் மொழி இலக்கியங்களை வளமான தமிழில் மொழி பெயர்த்து வருபவர், இது வரை 21 மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மாதா என்ற இவரது புனைபெயரில் வெளியாகியுள்ளன. பல்வேறு விவாதப் பொருள்கள் மீதான 32 கட்டுரைகளும் படைத்துள்ள இந்த உற்சாகமிக்க 63 வயதுக்காரர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர். சமூக செயல்பாட்டாளர்.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு



Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.

கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.

அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.

உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.

தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.

Communal virus that expelled the corona virus Article By Brinda Karat in tamil translated by T. Chandraguru கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.

https://www.ndtv.com/opinion/are-muslim-girls-excluded-from-beti-bachao-beti-padhao-2760357
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

Kuzhandhaimaiyai Nerunguvom Book By Vizhiyan Bookreview By K. Thamizhselvan நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) - கு.செந்தமிழ் செல்வன்

நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) – கு.செந்தமிழ் செல்வன்




நூல்: குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்)
ஆசிரியர்: விழியன் 
வெளியீடு :  Books for Children
விலை: ரூ 45
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“கொரோனா காலம்” தந்த தழும்புகளைத் தடவிப் பார்த்தும் விம்மிக் கொண்டும்தான் நாட்கள் நகர்கிறது

அதன் விளைவுகள் ஏராளம். பலரின் வாழ்க்கைகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.. எதில் அதிகப் பின்னடைவு ?

வாழ்வாதரத்திலா, ? உடல் ஆரோக்கியத்திலா?, பொருளாதாரத்திலா, குழந்தைகளின் கல்வியிலா ?, கலாச்சாரத்திலா?

நிச்சயமாக ஈடு செய்ய இயலாத விளைவுகள் அனைத்திலும்தான்.

ஆனாலும்,, வளரும் குழந்தகளுக்கான இழப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. அதனை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே சொல்லலாம். கற்றதையும் மறந்த கல்விச்சூழல் ஒன்றே  நம்மைப் பதற வைக்கிறது..

குழந்தைகளின் இரண்டாண்டு வீடுகளில் முடக்கம் பெற்றோர்களுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்தது. இது ஒரு சவாலாக ஏற்றவர்களுக்குத்தான் சவால்..

சவாலை ஏற்ற பெற்றோர்களை  உற்சாகமூட்டி ஓட வைக்கும் புத்தகம்தான் விழியனின் “குழந்தைமையை நெருங்குவோம்”

தனது சொந்த அனுபவத்தினை குழைத்து  ஒரு எழுத்தளராகவும் வரைந்துள்ளதால் இந்தப் புத்தகத்தில் உயிரும் இருக்கிறது. உன்னதமும் இருக்கிறது.

எவ்வளவு செலவானாலும் பீஸ் கட்டி பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டால் தனது கடமை முடிந்தது என கருதிய பெற்றோர்களுக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் இருந்தது பல புதிய அனுபவங்களைத் தந்தது. குழந்தகளுடன் நெருங்கி உறவாடவும் உரையாடவும் வாய்ப்பளித்தது .

ஒரு நல்ல ஆசிரியராகவும் அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.. இது எப்போதும்    பெற்றோராக செய்ய வேண்டிய கடமைதான். ஆனாலும், கொரானா கால வீட்டடங்கு சூழல் அவர்களுக்கு தெளிவுபடுத்தியது. நிர்பந்தப்படுத்தியது.

“உங்கள் குழந்தை சரியில்லை என நினைத்தால் உங்களை சரி செய்ய  வேண்டியிருக்கிறது என்று பொருள்:” பெலூன்ஸ்கி.

அத்தகைய பெற்றோர்களுக்கான வழிகாட்டி புத்தகமாக  “ குழந்தமையை நெருங்குவோம்” வந்துள்ளது. கொரோனா முடிந்தாலும் தொடர்ந்தாலும் குழந்தை வளர்ப்புக்கான இந்தப் புரிதல்கள் அவசியம்.

  • நவீன உலகில் தொலைகாட்சி, மடி கணினி,  கைபேசி இவைகளை குழந்தைகள் தொடலாமா கூடாதா?  வீட்டடங்கில் குழந்தைகள் இவைகளைத் தொடாமல் எப்படி நகரும் நாட்கள்?. எப்படி நடைபெறும் ஆன் லைன் வகுப்புக்கள்? “தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் சென்று நுழைந்து விட்டால் அது அவர்களை இழுத்துச் சாப்பிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கிறது”என்கிறார் விழியன். சரி, அதற்காகத் தொலைக்க்காட்சியை நிராகரித்துவிட முடியுமா? புதிய தொழில் நுட்பத்தை ஓரம் கட்டிவிட முடியுமா? இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
  • கதை சொல்வது இயல்பாக நடைபெற்ற நாட்கள் உண்டு. ஏராளமான் கதைகள் செவி வழியாகத்தான் கடத்தப் பட்டு வந்துள்ளன. . “கதைகளைக் கேட்க இயல்பாகவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அந்த மகிழ்ச்சி கொடுக்கும் குரல் இயல்பாக நெருக்கமாகிறது. நமது வேகமான வாழ்க்கைச் சுழற்சியினை இலகுவாக்கும்.” “கதையின் குரலில்” இதனை கேட்கலாம்.
  • “குடும்ப சபை நடத்துவோம்” எனவும் அழைக்கிறார். திட்டமிடவும் விவரங்களுடன் யோசிக்கவும் இந்த குடும்ப சபை தனக்கு உதவியதை பதிவிடுகிறார், “குழந்தைகளும் பெற்றோர் மீது விமரிசனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் ஒரு வகையில் ஜனநாயக நாட்டில் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இவை” என்கிறார்
  • “மென் தருணங்கள் மலரச் செய்வோம்” என்ற கட்டுரையில் குழந்தைகளோடு சேர்ந்து ரசிக்கும் இன்ப சூழலைத் தேடுங்கள் என்கிறார். அதுதான் நம்மை குழந்தைகளிடம் நெருங்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும்.

“இன்றைய அவசர உலகிற்கு அவசியம் தேவை மனிதத் தருணங்களே ;  என்ற ஹாலோ வெல் வார்த்தகைகள் நினைவு கூறத்தக்கது

  • நிறைய உரையாடவும் வேண்டும் பெரிய காதும் வேண்டும் என்பதும் முரண்பட்டவைகளா? உரையாடல் என்பது அடுத்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ள பயன்படுத்தும் அற்புதமான ஆயுதம். குழந்தகளைப் பேச வைத்து அவர்களது பார்வையில் உருவாகும் உலகை நாம் தரிசிக்க அவசியம் பொறுமையும் காதும் தேவை. நாம் சொல்வதை கேட்பார்கள் என்ற நிலையிருந்தால் பாலியல் சீண்டல்களைக்கூட பெற்றோர்களிடம் பகிர்வார்கள்.
  • 48 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து விடலாம். ஆனால், தேவை இந்த புத்தகம் முன் வைக்கும்  கருத்துகள்  மீது விவாதமும் தெளிவும். இதனை குடும்ப மாக வாசித்து விவாதிக்க வேண்டும். அதுவே குடும்ப சபையின் முதல் அமர்வாக இருக்கலாம்.
  • குழந்தைகளை முதலில் நெருங்குவோம். குழந்தமையைப் பற்றிய நமது புரிதல்களை சரி செய்து கொள்வோம்.ஒவ்வொரு பெற்றோர்களின் அனுபவங்களும் ஒரு புத்தகமே.
  • அதற்கான வழிமுறைகளையும் கைகொள்ளும் ஆயுதங்கள்தான் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது..
  • குழந்தைகளை நெருங்குவதே  குழந்தைமையை நெருங்க வழி.

கு.செந்தமிழ் செல்வன், மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Kalasakkara Payanam ShortStory By Shanthi Saravanan காலச் சக்கர பயணம் சிறுகதை - சாந்தி சரவணன்

காலச் சக்கர பயணம் சிறுகதை – சாந்தி சரவணன்




உலகமே ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறது. இருட்டி கிடக்கும் வானத்தில் மின்னல் அடிப்பது  போல் ஊரடங்கு விலக்கு  சில நேரங்களில் அளிக்கப்படுகிறது  பல நாட்களாக வெறிச்சோடிப் போய் இருந்த சாலைகள்  ஒரு மனிதனை  கண்டாலும் மகிழ்ச்சி  வெள்ளத்தில் தத்தளிக்கின்றன சாலைகள் மட்டுமல்ல இன்று நடைப்பயணம் மேற்கொண்ட எழிலிசை மன நிலையும் அவ்வாறே இருந்தது பல நாட்கள் கழித்து வெளி உலகத்திற்கு நடை பயிற்சிக்கு  வந்தவள் சாலையில் ஏதோ ஒன்று தன் நடைபாதையில் மின்னிய  வண்ணம் கிடந்தது. அதன் அருகே சென்று பார்த்தாள்.  ஆம் காலச் சக்கரம்  கருவி (Time travel machine) அவள் அந்த கருவியைப் பற்றி ஏற்கனவே புத்தகத்தில் படித்து இருக்கிறாள்.

இந்த காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பா இது ஏன் எனது கண்களில் பட்டது என வியந்த படி அக்கருவியை  தன் அறைக்குள் கொண்டு வந்து பத்திரமாக பூட்டி வைத்தாள்.  அதிசிய கண்டுபிடிப்பு இப்போது தன்னிடம்.  ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. 

மாலை அலுவலகம் முடிந்து வந்தவுடன் அதனை எடுத்து ஆராய்ச்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அவசரமாக அலுவலகத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு கிளம்பினாள்.

அம்மா அம்மா டைம் ஆகுது.  டிப்பன் ரெடியா மா?   என கேட்ட வண்ணம் எழிலிசை பூஜை அறைக்குள் சென்று எல்லா சாமிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள். 

அப்பா இராமானுஜம் இந்து நாளிதழ் படித்து கொண்டு இருந்தார். ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர்.  அவர்கள் குடியிருக்கும் திருப்பத்தூரில் அரசு பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார்.  ஒரே மகள்.

அப்பா குட் மார்னிங்…. “

*குட் மார்னிங் எழில்கிளம்பிட்டியா மா... ஆபிஸ் வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்குமா.……. “

*ஒகே பா... “

ஆன்லைன் வேலை செய்ய பழகி விட்டதால் சற்று கடினமாக உள்ளது.ஆனால் பழகி விடும்.. “

அம்மாஅம்மா.டைம் ஆகுது…. மா”

இதோ வந்துட்டேன் மா.…. என அம்மா சரஸ்வதி  ஒரு கையில் தோசை தட்டோடு மறு கையில் டிபன் பாக்ஸோடு வந்தார்.. “

அம்மா  தோசை வேண்டாமா.சாப்பாடு  மட்டும் தானே கட்ட  சொன்னேன் என செல்லமாக

என் செல்லம் இல்ல... இந்த இரண்டு வாய் வாங்கிட்டு போ... அம்மா ஊட்டி விடுகிறேன் என்றாள்.

அந்த அன்பு கட்டளையை மீறி அவளால் செல்ல இயலவில்லை... “

சரி.. என  தோசையை  சாப்பிட.அம்மா தேங்காய் சட்னி சூப்பர்... “

இராமானுசர் உடனே  உங்க அம்மா எப்போதும் சூப்பர் தான்.…. என்று சொல்ல.

போதும் போதும் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான்.என்றார் வெட்கத்தோடே.. 

சரி சரி கிளம்பு.  பார்த்து பத்திரமாக போய் வா... என அப்பாவும் அம்மாவும் வாசல் வரை வந்து மகளை வழி அனுப்பி வைத்தனர்..

 அன்று முழுவதும் எனோ  அவளுக்கு  அலுவலகத்தில் நாட்டமே இல்லை கூகுள் சர்ச் முன்னே அமர்ந்து ராஜராஜசோழன் ஆட்சி ஆண்டு எந்த வருடம் தஞ்சை பெரியகோயில் கட்டிட அமைப்பு எப்போது தொடங்கியது என அனைத்து தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு வேகமாக தன் வீட்டை அடைந்தாள். 

கணினியில் எப்படி அந்த கால சக்கரத்தை பயன்படுத்துவது என முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டாள்.   

அவள் விரும்பிய வண்ணம் இராஜ இராஜ சோழன் காலத்திற்கு பயணிக்க  கருவியின் இயக்கத்தில் பதிவு செய்து பயணிக்க தொடங்கினாள்

ஏதும் அறியாமல் சுற்றி முற்றும் பார்த்தவள் திடீரென தஞ்சை பெரிய கோயிலின் வாசலில் அமர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ந்தார்

2021 ஜனத்தொகை  1020 ஆண்டுகள் பின்நோக்கி இருந்த ஜனத்தொகை ஒரு வேற்றிடத்தை  உணர முடிந்தது.  கருப்பு வெள்ளை புகைப்படத்தில்  பின்புலத்தில்  மட்டுமே கலர் என்பது போல இயற்கை வளங்கள் பச்சைபசலன  கண்னை  பறித்தது

அழகாபுரி  என்பது தஞ்சாவூரின் பெயர். சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும் .

தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இராஜராஜனின் மெய்க் கீர்த்தியை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன “திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே  யுரிமை புண்டமை…… 

 என மெய்கீர்த்தியோடு கோயில் கல்வெட்டு பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன.”  

எழிலிசை கல்வெட்டு எழுத்துகளை சமீபத்தில் தான் கற்றுக் கொண்டாள்.  தமிழி எழுத்துகள் படிக்க துவங்கினாள்

தஞ்சை மாநகரின் பெரிய கோவிலைக் கட்டிய பெருமை முதலாம் ராஜராஜசோழன் தான்.   எழிலிசை  அங்கு செய்திகளை சேகரித்து கொண்ட வண்ணம் இருந்தாள்.

இக்கோவிலுக்கு மூன்று வாசல்கள் உருவாக்க திட்டம் வரையரைத்து கொண்டு இருந்தார்கள். 

சிற்பங்கள் சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைய வேண்டும் என இராஜ இராஜ சோழன் கட்டளையிட்டு கொண்டு இருந்தார். 

செய்திகளில் வரலாற்று ஆவணங்களில் பார்க்கும் அரசனை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி செயலற்று நிற்கிறாள் எழிலிசை. மேலும் அவர் கட்டளை பிரபித்து கொண்டே இருந்தார். 

108 வித நாட்டியக் கலை உள்ளது  என குறிப்புள்ளது. அவற்றை எல்லாம் செதுக்க வேண்டும் என சிற்பிகளுக்கு அமைச்சர்கள் வாயிலாக கட்டளை இடப்பட்டது

கோபுரத்தின் மேல் தங்கத் தகடுகளைப் போர்த்தி கட்டமைக்கவும் உத்தரவு பிறபித்தான் சிற்ப கலை மட்டுமே அன்றி ஒவியம் கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என கட்டளைகள் பரந்த வண்ணம் இருந்தது.

திட்டமிடலில் சிறந்து விளங்கினான் இராஜ இராஜ சோழன். வருமானத்தில் கோவிலுக்கு செலவு போக எஞ்சிய பணத்தில் ஒரு பகுதி கல்விக்காகவும், ஒரு பகுதி மருத்துவத்திற்காகவும்  கட்டளைகள் இயற்றப்பட்டது. 

எழிலிசை  இந்த திட்டம் நமது திட்டம் தானா? இன்று ஆஸ்திரேலியாவை பார்த்து நாம் இந்த திட்டத்தை கண்டு வியக்கிறோம். ஆனால் 1012 ஆண்டுகளுக்கு முன்பே இராஜ இராஜ சோழன் கடைப்பிடித்த  அரசு திட்டம்.   வருங்கால அமைச்சர்கள் தான் அதை மாற்றி இருட்டு அடைப்பு செய்து உள்ளனர் என புரிந்து கொண்டாள் எழிலிசை.

அதுமட்டுமின்றி தனது சமயத்தை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவன் கட்டாயப் படுத்தவில்லை.  எல்லா மதத்தினரயும் நேசிக்கும் குணம் கொண்டு இருந்தான்

ஆச்சரியம் தரும் கூடிய செய்தி என்னவென்றால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. 

கோவில் கட்டும் பணியாளருக்கு நீர் மோர் கொடுத்து  கொண்டு இருந்தனர் பெண்கள். 

கல் சக்கரம், அலங்கார கல் ஜன்னல் போன்றவை 1011ஆண்டுக்கு முன்பே  தமிழனின் திறமைகளை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது

இராஜ இராஜ சோழன் என்ன ஒரு ஆளுமை. இந்த மாபெரும் ஆளுமையின் வழிகாட்டலில் தானே இன்றும் தஞ்சை கோயில் பிரமாண்டமாக நம் கண் முன்னே நிற்கிறது என நினைத்தபடி தஞ்சை கோயிலின் கட்டிட பணிகளை பார்த்த வண்ணம் இருக்க, அவளின் கைபேசி அடிக்க கால சக்கரத்தின் மேல் விழுந்தது.  அதன் காலம்  இன்றைய தேதியில்   பதிவு செய்ய அவள் அவளின் வீட்டில் இருந்தாள்.  

அம்மாவின் கதவு தட்டும் சத்தம், “எழிலிசை…… என்னம்மா செய்ய…. வெளியே  வா.….. காபி சாப்பிட, ”  என அழைத்து கொண்டு இருந்தாள். 

எழிலிசை கால சக்கர இயந்திரத்தை பத்திரமாக உள்ளே வைத்து விட்டு நாளை மீண்டும் பயணத்தை துவங்கலாம் என காபி அருந்த வெளியே வந்தாள்.

Nambikkai ShortStory By Shanthi Saravanan. நம்பிக்கை குறுங்கதை - சாந்தி சரவணன்

நம்பிக்கை குறுங்கதை – சாந்தி சரவணன்




அண்ணாநகர் கோல்டன் ஜூப்ளி, பால்கனியில் மாஸ்க்கோடு ஒரு கையில் காபி மற்றோரு கையில் ‌அன்றைய நாளிதழ் பார்த்துக்கொண்டு இருந்தாள் நித்யா.

நாளிதழின் எந்த பக்கம் திருப்பினாலும் கொரானா செய்திகள் தான் நிரம்பியிருந்தது. நாளிதழ் ஒரு கண்ணும், வெறிச்சோடி போயிருந்த அடுக்கங்களின் வழித்தடத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். அந்த மயான அமைதியை இனிய ‌மழலையரின் உரையாடல் அவளின் கவனத்தை ஈர்த்தது.

“டேய் சாய் என்னடா செய்ற”, என்று யாழிசை W பிளாக் இரண்டாம் மாடி பால்கனி கம்பிகளின் மேல் நின்றுக்கொண்டு மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே கேட்க.

“நானும் ‌தம்பியும் கார் விளையாட்டு விளையாடுகிறோம்” என்றான் சாய், ‌ Y பிளாக் பால்கனி கம்பிகளின் மேல் நின்றபடி.

“என்ன காருட?”

“ஹாட்வில்ஸ்” -.

“காட்டு”, என‌ ஆர்வமாக ஜன்னலின் வழியாக கண்களை விரித்து பார்த்தாள் யாழிசை.

சாய் ஒரு கையில் பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு ஒரு கையால் ரெட் கலர் காரை கம்பியின் வழியே வெளியே நீட்டி. “தெரியுதா… ரெட் கலர்” என்றான்

பக்கத்தில் அவன் தம்பி ராமுவும் என்னது “ஆரஞ்சுகலர் கார்” என‌ கத்தினான்.

நல்லாயிருக்கு டா

ஸ்கூலுக்கு காரில் போலாமா

ஓ போகலாமே!

ஆனால் இப்போதான் ஸ்கூலே இல்லையே!

சரி கொரோனா லாக் டவுன் போயிடும். அப்போ நம்ம போலாம்

கொரோனா எப்போ போகும்

“சிக்கிரமா போயிடும். காய்ச்சல் வந்த ஒன் வீக்ல போதுயில்ல அது மாதிரி”

“அப்படியா!”

“ஆமாம். அப்போ போலாம், . சரியா.”

“சரிடா”

“ஜன்னல்களில் மழலைகளை சிறை வைத்துவிட்ட இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது.

ஒய்யாமல் கொரோனா அச்சத்தை விதைத்து கொண்டேயிருக்கும் ஊடகங்கள், நாளிதழ்களை விட நம்பிக்கையுட்டும் இந்த மழலையரின் உரையாடல் ‌கேட்பதே நலம் ‌என நாளிதழை மடித்து வைத்துவிட்டு மழலையின் மொழியை ரசிக்க துவங்கினாள் நித்யா.

New plan to save the earth Article by Sajeev Kumar புவியைக் காக்க புதிய திட்டம் - சஜீவ் குமார்

புவியைக் காக்க புதிய திட்டம் – சஜீவ் குமார்




பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை பத்திரிக்கையாளரிடம் கேட்டார்,”நீங்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி கேட்கிறீர்கள், ஆனால் முதலாளித்துவத்தின் வெற்றியை உங்களால் கூற இயலுமா?”.

ஏற்கனவே நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த முதலாளித்துவம் இன்று கோவிட் பெருந்தொற்று காரணம் மேலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. உலகில் உள்ள மாந்தர்களில் 237 கோடி பேர் உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர். இவர்கள் வளர்ச்சி இல்லாத நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர்.(கட்டுரையாளர்)

நிலைமை இப்படி இருக்க உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அக்டோபர் 2021 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்காமலேயே போனது. அதில் இனம், சாதி, பாலினம் ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் முகமூடி அவிழ்த்தல் என்ற உப தலைப்பில் கூறப்பட்டுள்ளது மிகுந்த கவனத்திற்குரியது. இன்று சர்வதேச வறுமைக்கோடு என்பதைவிட (அதாவது ஒருநாள் 1.90 அமேரிக்க டாலர் வருவாய்) இந்த பல்பரிமாண வறுமை அளவீடு என்பது துல்லியமானது.

உடல் நலம் (ஊட்டச்சத்து, சிசு மரணம்), கல்வி (பள்ளி செல்லும் காலம், பள்ளி வருகை), வாழ்க்கைத் தரம் (சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்து) ஆகிய 3 அச்சுகளில் 10 குறிகாட்டிகள் மூலம் பல்பரிமாண வறுமை அளவிடப்படுகிறது. 109 நாடுகளில் 590 கோடி மக்களின் வாழ்வியல் சூழலிலிருந்து பல்பரிமாண வறுமை பற்றிய ஆய்வை இந்த குழு மேற்கொண்டது. அதில் அவர்கள் கண்டறிந்தது உலகில் 130 கோடி பேர் (ஐந்தில் ஒருவர்) பல்பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.

* அதில் 64.4  கோடி அதாவது ஏறக்குறைய பாதி பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
* அதில் 85% பேர் சகாரா கீழ்மை (sub-Sahara) ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
* 100 கோடி பேர் சுவாசக் கோளாறு உண்டாக்கும் விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கின்றனர், சுகாதாரமற்ற கழிப்பிடம் மற்றும் தரமற்ற வீடுகளிளை பயன்படுத்துகின்றனர்.
* 56.8 கோடி பேர் குடிநீருக்காக 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டியுள்ளது.
* பல்பரிமாண வறுமை கொண்ட 78.8 கோடி பேர் உள்ள குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராக இருக்கின்றனர்.
* இத்தகைய வறுமையில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட  66% பேர் வாழும் குடும்பங்களில் ஒருவர் கூட குறைந்தது 6 வருடங்கள் கல்விச்சாலை செல்லாதவர்களாக உள்ளனர்.
* 67.8 கோடி பேருக்கு மின்சார வசதி இல்லை.
* 55 கோடி பேருக்கு  வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பொறி, விலங்கு பூட்டிய வண்டி, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற எட்டு வகை சொத்தில் ஏழும் இல்லாதவர்களாக உள்ளனர்.

அறுதி எண்ணிக்கை பார்க்கும்போது UNDP அறிக்கையில் உள்ளது குறைவாக தோன்றலாம். உதாரணம் உலக வங்கி 2019-ல் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் உலக மக்கள் தொகையில் 90% பேருக்கு மின்சார வசதி உள்ளது. (அதாவது அன்றைய மக்கட்தொகை படி 76.7 கோடி பேருக்கு மின் வசதி இல்லை-கட்டுரையாளர்). அதேபோல 2020-ல் நடந்த ஆய்வில் 350 கோடி பேருக்கு மின் வசதி இல்லை என்கிறது. ஆனால் UNDP அறிக்கையோ 67.8 கோடி பேருக்கு மட்டுமே மின் வசதி இல்லை என்று சொல்கிறது. அறுதி எண்ணிக்கை குறைவு என்றாலும் UNDP அறிக்கை தரும் செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது, அது என்னவெனில், நாள் தோறும் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவரும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல் முறையாக UNDP ஏற்றத்தாழ்வுகள் நுட்பமான விஷயங்களில் கவனத்தை குவித்து -இனம், சாதி படிநிலைகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சமத்துவமற்ற சமூக அடுக்குகள், மரபுவழி வந்த பண்டைய பழமைவாத பாரம்பரியம் போன்ற மனித சுயமரியாதையை தாக்குதலுக்கு உள்ளாக்கும் மோசமான விஷயங்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. 41 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பல்பரிமாண வறுமை என்பது சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது என்று UNDP அறிக்கை கூறுகிறது. உதாரணமாக இந்தியாவில் பட்டியல் சாதி/ பட்டியல் இன மக்களை வறுமை மற்றும் பாகுபாடு அதிகமாக பாதிக்கிறது, அது அவர்களின் ஏழ்மையை மேலும் பூதாகரமாக்குகிறது.

பல்பரிமாண வறுமைக்கு உள்ளாகும் 6-ல் 5 பேர் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 2010 புள்ளிவிவரப்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ செலவு காரணமாக 6.3 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர் (அதாவது ஒரு நொடிக்கு 2  இந்தியர்). பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கூடியிருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான தகவுகள் சேகரிப்பது கடினமானதாக உள்ளது. பட்டியல் சாதி பட்டியல் இன மக்கள் பெரும்பாலும் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ளதால் பெருந்தொற்று இச்சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற வருடம் இலத்தின் அமேரிக்கா நாடுகளின் பொலிவாரியன் கூட்டமைப்பு மற்றும் மக்களின் வர்த்தக ஒப்பந்தம் (ALBA- TCP) ஆகியவற்றின் பொதுச்செயலாளர் சாச்சா லோரண்டியின் வேண்டுகோளுக்கிணங்க, முக்கண்டம் (Tricontinental) சமூக ஆய்வு  நிறுவனம் மற்றும் காரகாசின்(வெனிசுலா) சைமன் போலிவார் நிறுவனம்  மற்றும் உலகளாவிய 26 ஆய்வு நிறுவனங்கள் உதவியுடன் சமகால நெருக்கடிகளைப் பற்றி சர்வதேச கலந்துரையாடலை துவங்கப்பட்டது. அதன் விளைவுதான் “புவியை காக்க ஒரு திட்டம்”.

இரண்டு வகையான உரைகள், ஒன்று,  உலக பொருளாதார  மன்றம் முதல் அனைவர்நலம் உள்ளடக்கிய முதலாளித்துவ சபை வரை உள்ள பிற்போக்கு தாராளவாத அறிவு ஜிவிகள், மற்றொன்று, தொழிற்சங்க கோரிக்கைகள், இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் உரைகளை கூர்மையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னதில் இருந்து எடுத்த தகவல்கள் முன்னதின் குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவியது. உதாரணம், பழைமைவாத, தாராளவாத உரைகள் பெருந்தொற்று காலத்தில்  முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த வளர்ந்த நாடுகளின் வங்கிகள் 16 டிரில்லியன் ( 16 லட்சம் கோடி) அமேரிக்க டாலர்களை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடாமல் நிதி துறை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் காப்பாற்ற பயன்படுத்தியுள்ளதை கண்டுகொள்வதில்லை. இந்த நிதி மிகச்சிறப்பான பொது சுகாதாரத்துக்காகவோ அல்லது படிம எரிபொருளுக்கு மாற்றான மாசு அற்ற பசுமை ஆற்றல்களை உருவாக்கும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

இந்த திட்டம் ‘ஜனநாயகமும் உலக அமைப்பும்’ என்பதில் துவங்கி “டிஜிட்டல் உலகம்” வரை 12 முக்கிய அம்சங்களை விவாதிக்கிறது. அதில் கல்வி பற்றிய பகுதியின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளது.

  1. பொதுப்பள்ளி மூலம் கல்வி தனியார்மயமாவதையும், கல்வி சரக்காக மாறுவதையும் தடுத்தல்.
  2. கல்வியாளர்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் அமர்ந்துதல்.
  3. அடித்தட்டு மக்களை பயிற்சி மூலம் ஆசிரியர்களாக உத்திரவாதப்படுத்துதல்.
  4. மின்சார இணைப்பு மற்றும் எண்மின் (digital) இடைவெளிகளை நிரப்புதல்.
  5. பொதுத்துறை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அதிவேக இணைய வசதிகளை உருவாக்குதல்.
  6. பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வியின் அனைத்து கூறுகள் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு உருவாக்குதல்.
  7. மாணவர்கள் உயர்கல்விகளில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க வழிகள் உருவாக்குதல்.
  8. கல்வியை வாழ்நாள் முழுதும் பெறவேண்டிய வாய்ப்பை வாழ்க்கையின் அனைத்து நிலையில் உள்ள மனிதர்களும் பெற ஏற்பாடு செய்தல். அதன் மூலம் கல்வி என்பது வேலைவாய்ப்பு பெறுவதற்கு என்பது மாறி அது அறிவு மற்றும் சமூகத்தின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் சமூகக் கட்டுமானத்துக்கு உறுதுணையாவதாக இருக்கவேண்டும்.
  9. அனைத்து வயதுள்ள தொழிலாளர்களும் அவரவர் துறையில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் கல்விக்கு மானியம் அளித்தல்.
  10. உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வியும் அவரவர் பேசு மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை மொழிபெயர்ப்பு மூலம் பெறுவதற்கு அரசாங்கம் உத்திரவாதப்படுத்துதல்.
  11. தொழில், விவசாயம் மற்றும் சேவை துறைக்கு தேவைப்படும் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிலையங்களை நிறுவுதல்.

 “புவியைக் காக்கும் திட்டம்” என்பது  1945ல் ஐ.நா. சாசனம் ஏற்படுத்திய கோட்பாடு காரணமாக, இதுவரை 193 நாடுகள் கையெழுத்திட்ட, அனைத்து நாடுகளும் கட்டுப்படவேண்டிய நிபந்தனையும் கொண்டதன் அடிப்படையில் உருவானதாகும். இந்த திட்டம் உருவானதன் நோக்கம் இதை விவாதப்பொருளாக்கி விரிவாக்க வேண்டும் என்பதே. இந்த திட்டம் நிகழ்காலத்தை விமர்சிப்பது மட்டுமன்றி எதிர்கால சமூகத்தை நிகழ்காலத்தில் கட்டமைபதற்கான முயற்சியும் ஆகும்.

(தோழர் விஜய் பிரசாத் டிரைகாண்டினண்டல் தளத்தில் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)