பருவ கால மாற்றம் -பறவை- உயிரினங்கள் |Seasonal change -Birds-creatures

தொடர் : 49 “சமகால சுற்றுசூழல் சவால்கள்” – முனைவர். பா. ராம் மனோகர்

பருவ கால மாற்றம்!பறவை, உயிரினங்கள் தடம் (தடு )மாற்றம்! உலக வெப்பமயம், எதிர் பாராத மழை, புயல், வெள்ளம், போன்ற பருவ கால மாற்றங்கள், சமீப காலத்தில் நம்பூமியில், தொடர்ந்து பல பாதிப்புகளை, ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளை நாம் கண்டு வருகிறோம்!.…
டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும் கட்டுரை – பொ. இராஜமாணிக்கம்

டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும் கட்டுரை – பொ. இராஜமாணிக்கம்



டார்வின் தினம் : பிப்ரவரி 12

மனிதன் குரங்கிலிருந்து வந்தானா…. வாழ்க்கைக்கான போராட்டமும் தக்கன பிழைத்தலும் டார்வின் சொன்னாரா…. தகுதி உள்ளன மட்டும் பிழைப்பது மனித சமூகத்திற்கும் உரியதா….

1. மனிதப் பரிணாம வளர்ச்சி 

60 லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித இனம் பிரிந்து வளர்ந்தது. 25 லட்சம் வருடங்களுக்கு முன் ஆஸ்ட்ரலோபித்திகஸ் என்ற நமது மூதாதையர் கிழக்கு ஆப்ரிக்காவான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெக்டஸ் என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகளை உருவாக்கி இருக்கிறது. ஹோமோ எரெக்டஸ் 20 லட்சம் வருடங்கள் வாழ்ந்துதிருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஹோமோ எரெக்டஸில் இருந்து தான் நியான்டர்தால், ஜாவா மனிதன், பீகிங் மனிதன், புளோரஸ் என்ற லில்லிபுட் மனிதர்கள் ( 3அடி மனிதன், 25 கிலோ) சமீபத்திய டெனிசொவியன். இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.

மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆப்ரிக்காவில் பரிணாமம் தொடரந்தது. ஹோமோ எர்காஸ்ட்டர், ஹோமோ சேப்பியன்ஸ் என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது லட்சம் வருடத்தில் இருந்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரைபல்வேறு மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. எப்படி கரடிகளில் பல வகைகள் வாழ்வது போல் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2 லட்சம் வருடத்தில் இருந்து வருகிறான்.

சுமார் எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் கல் கருவிகளில் இருந்து துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம் சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்களோடு வாழந்து கொண்டிருக்கிறான்.

2. டார்வின் பரிணாமக் கொள்கை

டார்வின்(டார்வின் 1809-1882) பரிணாமக் கொள்கை இயற்கைத் தேர்வு வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் மூலம் 1859ல் உலகத்திற்குத் தெரிய வந்தது. உயிர் பரிணாம அறிவியலில் மரபணு மாற்றம் (mutation) நேர்கோட்டுப் பரிணாமம்(orthogenisis) உருவான குணங்ளைக் கடத்துதல் ( acquired characters inheritance) , இயற்கைத் தேர்வு (Natural Selection) என்ற நான்கில் டார்வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டே சிறந்து விளங்குகிறது. டார்வின் கூறியது குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிறையவே தெரிந்து கொள்வீர்கள். இது வரையிலும் கூட பாடங்கள் மூலமும் பல வழிகள் மூலமும் அறிந்து இருக்கலாம். டார்வின் கூறியது பல வழிகளில் தவறாகவும புரிந்து கொள்ளப்பட்டுள்ளதையும் நம்மிடம் பார்க்கலாம்.

அவர் கூறியதில் வாழ்வதற்கான போராட்டம் என்ற பதமும் தக்கன பிழைத்தல் என்பதும் அவருடையது அல்ல. முன்னது மக்கள் தொகை குறித்து மால்தூஸ் கூறியது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இயற்கையால் நோய், பஞ்சம் பிற பேரிடர்கள் மூலம் ஏற்படும் போராட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனித குல முயற்சியால் நோய் பஞ்சம் இயற்கைப் பேரிடர் ஆகியனவற்றில் இருந்து காப்பற்றப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டுள்ளது.. இதனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது வறுமை கல்லாமை சுகாதாரமின்மை போன்றவைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று பல காலங்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த சுதந்திர தன உரையில் இந்தியப் பிரதமர் சிறிய குடும்பம் கொண்டவர்கள் தான் உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்கள் எனறு அரசியல் ஆக்கியுள்ளார்.

தக்கன பிழைத்தல் என்பது ஹெர்பட் ஸ்பென்சர் கூறியது. டார்வின் தனது ஐந்தாவது பதிப்பில் தக்கன பிழைத்தல் என்பது பொருத்தமாக இருப்பதாக் கருதி அதைப் பயன்படுத்தினார். இதை மனிதப் பரிணாமத்திற்கு (Descent of Man 1871 ) கையாண்டுள்ளார்.

டாரவின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது.

டார்வின் கொள்கை என்பது வரலாற்றுத் தன்மையை உள்ளடக்கியது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள், வழிமுறைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. உற்று நோக்குதல் ,ஒப்பிடுதல் , வகைப்படுத்துதல் என்ற அறிவியல் வழிமுறைகள் இதில் கையாளப்பட்டுள்ளது. அது நாள் வரை உயிரினங்கள் கடவுளின் சட்டங்களால் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பல தகவமைப்புகள் உருவானதெனக் கருதி வந்தனர். ஆனால் டார்வின் அபார சக்திகளினால் படைக்கப்படவில்லை எனக் கூறி கடவுளை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்.

உயிரினங்கள் ஒவ்வொரு வகையாக இறுக்கமாகப் படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டை மறுக்கிறார். அதாவது முக்கோணம் சதுரம் செவ்வகம் என அறுதி செய்யப்பட்டவை அல்ல. சிலர் கூறுவது போல மனித இனம் ஆப்ரிக்கன் ஆசியன் வெள்ளைக்காரன் என ஒவ்வொரு வகையானவன் இல்லை. தற்போதைய 700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களே. உயிரினங்கள் திட்டமிடப்பட்டு உருவானதில்லை ( predetermined) காலஓட்டத்தில் நுண்ணிய அளவில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக பல்வேறு உறுப்புமண்டலங்கள் ( Digestive system) காலஓட்டத்தில் மாற்றம் கொண்டுள்ளதைக் காணலாம். எந்தத் திட்டமில்லாமல் அரிய வாய்ப்புமிக்கதையே இயற்கை தேர்வு செய்து வருகிறது. உயிரியலின் பரிணாமத்திற்கென கெடுபிடியான கோட்பாடுகள் கிடையாது (பால்சிபிகேசன் கோட்பாடு செல்லாது)

டார்வின் மனித இனம் பிரைமேட்ஸ் வகையைச் சார்ந்தது என்றும் சிம்பானசி கொரில்லா போன்ற குரங்குகள் போல உடலமைப்புக் கொண்டதென்றும் இதன் மூலம் ஆப்ரிக்காவே மனித இனத்திற்கு முன்னோடிகள் வாழ்ந்த இடம் எனக் கருதினார். ஆப்ரிக்காவில் 60 லட்சம் வருடம் முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மனித முன்னோடிகளின் தொல்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே டார்வின் கூற்று உண்மையாகிறது.

மனிதப் பரிணாமம் என்பது தனிச் சிறப்பானதல்ல என்கிறார். பிற உயிரினங்கள் எவ்வாறு பரிணாமம் வழியில் வந்ததோ அதே போன்று தான் மனிதன் பரிணாமும். தத்துவஞானிகளும் மத குருமார்களும் மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன் எனக் கூறுவதை இவர் மறுத்தார். ஏனென்றால் வாலில்லா குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இதை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் எளிய சிந்தனையில் பார்க்கலாம்.

மனித சமுதாயம் பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு பொதுநலப் பண்பும் ( Atruism) ஒத்திசைவான கூட்டுறவும் ( Harmonious cooperation) தான் காரணம். பரிணாமத்தில் இயற்கை தேர்வு என்பது தனி உயிரினத்தின் மீதல்ல. அந்த இனத்தின் குழுவாகும். எனவே மனித இனத்தின் வாழ்க்கை என்பது பொதுநலப் பண்பாலும் ஒத்திசைவான கூட்டுறவாலும் இயற்கையால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்ததால் மனித குலம் முன்னேறி இருக்கிறது. இது தற்செயல் நிகழ்வல்ல ஒரு தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்லும் இயற்கையின் செயல் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. பரிணாமம் என்பது திட்டமிடாததும் அவ்வப்போதைய வாய்ப்புகளே பரிணாமத்தின் இலக்காகும்.

3. சமூக வளர்ச்சி

மனித சமுதாய வளர்ச்சி என்பது ஹெகேல் போன்ற அறிஞர்களின் பார்வையில் மாற்றம் மேலும் மாற்றம், முன்னேற்றம் என்பதாகும். இதனால் மார்க்ஸ் போன்றோர் அவரின் சீடர்களாக இருந்தனர். ஆனால் மாற்றத்திற்கான காரணத்தை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவனிடம் தோன்றும் தெய்வீக சிந்தனை, மதம் என முடித்துக் கொண்டார். ஆனால் மார்க்ஸ் மனிதன் தான் மதத்தை உருவாக்கினார். மனிதனே உலகம் மனிதனே அரசு மனிதனே சமூகம் என்று முன் வைத்தார். மாற்றமும் முன்னேற்றமும் தெய்வீகமாகவோ ஊகத்தினாலோ வருவதில்லை.மாற்றம் என்பது மனிதகுலம் பெறும் திறன்களினாலும் அத் திறன்களை உருவாக்கும் அவர்கள் வாழும் சமூகமே காரணம் என்றார்.

மனிதனுக்கான சிந்தனை மாறும் உலகத்தினோடேயே உருவாகிறது. மாற்றத்திற்கான பின்னணியும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. மாற்றம் என்பது அவன் வாழுகின்ற வாழ்க்கையிலிருந்தே வருகிறது. மானுட விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் இருந்து வருகிறது. மனித குல விடுதலை என்பது அன்பினால் வருவதில்லை உழைப்பாளர்களின் உற்பத்தி முறையில் உருவாக்காப்படும் பொருளாதார பரிமாற்றத்தில் வருகிறது. மனித இதயத்தின் மாற்றத்தால் அல்ல. இப்படித்தான் பண்டைய சமூகத்தில் இருந்து இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை சமுதாய வளர்ச்சி நடைபெற்று வருகிறது.

மனித சமுதாய வளர்ச்சியில் பல கோளாரான கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். அதில் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் 1864ல் சமூக டார்வினிசம் என்ற கோட்பாட்டைப் பரப்பினார். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தினை உருவாக்கியவர் இவரே. சூழலுக்கேற்ற தகவமைப்புக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.இதை மனதில் வைத்துக் கொண்டு சொத்தை குமிக்கும் திறமையும் வழிமுறையும் பரம்பரையாகச் செல்கிறதென்கிறது இந்தக் கோட்பாடு. மேலும் இவர் ஒரு படி போய் தொழிலாளர்கள் ஏழைகளுக்கு உதவிடு்ம் அரசின் சட்டங்களை எதிர்க்கிறார். இந்தச் சட்டங்கள் தகுதியற்றவர்களை ஆதரித்து இந்த சமூகம் முன்னேறுவதை தடுப்பதகக் கூறுகிறார். இந்த தகுதியற்றவர்களை இயற்கையை மீறி நீண்ட நாளாக வாழ அனுமதிக்கிறது என்கிறார். வில்லியம் கிரஹாம் சம்மர் என்பவர் இன்னும் தடாலடியாக சொத்துக்கும் சமூக அந்தஸ்த்துக்கும் தனி நபர்களிடையே ஏற்படும் போட்டி திறனற்றவர்களையும் அறமற்றவர்களையும் வெளியேற்றும் என்கிறார். தனி நபர் சொத்துக்குவிப்பது என்பது அறமற்ற செயல் என இவர் அறியவில்லை.

மற்றொருவர் பிரான்சிஸ் ஹால்ட்டன் என்பார் மனித இனத்தை மேம்படுத்த அதனிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களை நீக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். சமூக நல அமைப்புகள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான அமைப்புகள் தரம் குறைந்த மனித இனத்தை காப்பாற்றுகின்றன என குற்றம் சாட்டுகிறார். இதனையொட்டி 1930களில் 32 அமெரிக்க மாகாணங்கள் யூஜெனிக்ஸ் சட்டம் இயற்றி 60000க்கும் மேற்பட்டோரை அழித்திருக்கின்றனர்.

பிரிதொருவர் ஹிட்லரும் இதே வழியில் இனச் சுத்தம் என்ற பெயரில் ஆரியரல்லாத யூதர்கள் ரோமா என்ன ஜிப்சிகள் போலந்துக்காரர்கள் சோவியத்துகளை லட்சக் கணக்கில் கொன்று குவித்தான். குறிப்பாக ஜிப்சி இனத்தவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்திருநதும் அதிலும் தூய தன்மையைக் கண்டறிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களின் மூதாதையர்களின் தகவலைத் திரட்டி தீர்த்துக் கட்டினான். தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறப்பிடத்தையும் அவர்களது பிறந்த தேதியையும் தகவலாகத் திரட்டச் சொல்வது. இதனால் தான் எதிர்க்க வேண்டியதயிருக்கிறது.

4. தற்போது என்ன செய்ய வேண்டும்

தற்போதுள்ள வலதுசாரி சூழ்நிலை ( மதம் , பிற்போக்குத் தன்மை , தேசீயவாதம் ) உலகெங்கும் வளர்ந்து வருகிறது. இதன் பிரதிபலிப்பாக பல் வேறு நாடுகளில் வலதுசாரி அமைப்புகள் அரசினைப் பிடித்துள்ளன. இந்தியாவும் இதில் அடங்கும். ஏற்கனவே மத அடிப்படையிலான அரசுகள் பல நாடுகளில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, பிற..

வலதுசாரி அமைப்புகளின் எழுச்சிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் தற்போதைய நவீன தாராளமயமாக்கல். 90க்குப் பின் முதலாளித்துவம் மிகப் பெரிய தோல்வி அதிர்ச்சியில் இருப்பதால் அதன் விளைவாக உலகம் முழுவதும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதலாளித்துவ சொத்துக் குவியல் சிலரிடமும் சொத்தில்லாமல் வறுமையில் பெரும்பான்மையினரும் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மக்களிடம் தேசீயவாதத்தையும் இனவாதத்தையும் பிரச்சாரமாக்கி வலதுசாரி அமைப்புகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ஆளும் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகள் மக்களை மேலும் துயரத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் வீழ்வதும் அதுவே நமது நாட்டில் மதவாத அரசியலுக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் போலி அறிவியல் மூலம் மக்களை மரபணு ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் வலதுசாரி போலி அறிவியலாளர்கள் செய்து வருகின்றனர். மத வெறியை ஒரு புறமும் தாராளமய பொருளாதாரத்தை மறுபுறமும் எதிர்த்தாக வேண்டும் இதுவே மக்களின் சிந்தனையை பிற்போக்கிற்கு இழுத்துச் செல்கிறது. இதனை சரி செய்ய டார்வின் கோட்பாட்டினை அறிந்து கொள்வதம் சரியாகப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

கருத்துதவி….
செபியன்ஸ் நூல்

எர்னஸ் மேயரின் கருத்தடிப்படையில் வெளி வந்த கட்டுரை
டாக்டர் சபயா சாட்டர்ஜியின் எங்கல்ஸ் நூல்

பொ. இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர் , மக்கள் அறிவியல் கூட்டமைப்பு

கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்! – கு.செந்தமிழ் செல்வன்

கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்! – கு.செந்தமிழ் செல்வன்




காட்டுயிர் என்றால் இயற்கையாக உருவாகி தன்னிச்சையாக வாழும் உயிரினங்கள் என அர்த்தம். அவை, விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மரங்கள் என எதுவாகவும் இருக்கலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சற்று உற்று நோக்குவதுதான்.

* வெண் மான்கள் வேகமாக ஓடும் என்று தெரியும். ஆனால், ஆபத்து என்றால் மூன்று மீட்டர் உயரத்துக்கு எம்பி 80 கி.மீ வேகத்திற்கு ஓடும் என்று அறிவோமா?

* பூனை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதற்கு பிடித்த உணவு குப்பைமேனி கீரை என்று அறிவோமா? சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ குணம் கொண்டது குப்பைமேனி கீரை என்பதை மனிதர்கள் தெரிந்து கொண்டதே பூனையின் மூலமாகத்தான்.

* “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்பதை அறிந்த நாம் எறும்பிலிருந்து நாம் கற்றதை அறிவோமா? எறும்புகள் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றின் உணவுகளை பூஞ்சைத் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கின்றன. இந்த வேதிப் பொருளே தற்போது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

நம்மைச் சுற்றி காட்டுயிர் – சு. தியடோர் பாஸ்கரன் – தமிழில்: ஆதி வள்ளியப்பன்இப்படி நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கி சுவாரஸ்யமாக அழைத்துச் செல்கிறது ”நம்மைச் சுற்றி காட்டுயிர்” புத்தகம். புகழ்பெற்ற சூழலியல் எழுத்தாளர் சு. தியோடர் பாஸ்கரன் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை தமிழில் தந்துள்ளவர் ஆதி வள்ளியப்பன். குக்கூ குழந்தைகள் அமைப்புடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2012 -ல் முதல் பதிப்பு கண்டது இப்போது நான்காவது பதிப்பாக வந்துள்ளது.

பறவைகளின் காதல் வாழ்க்கை

இந்நூல் பறவைகளை ரசிக்கவும் கற்றுத் தருகிறது. நமது தோட்டத்தை உற்று நோக்கினாலே நிறைய காட்டுயிர்களை காண முடியும். வீட்டுத் தோட்டம் இல்லாதவர்களும் சந்தோஷமாக வானத்தினைப் பாருங்கள். பறவைகளைப் பார்ப்பதுடன் அதனை என்ன பறவை என்று அடையாளம் காணவும் கற்றுக் கொள்ளுங்கள் என்கிற இந்நூல். மேலும் இப்புத்தகத்தில் தவறவிடக் கூடாது சில அம்சங்கள் இதோ:

* காட்டுயிர் இயக்குனர் தாமரைக் கோழிகள் குறித்து “மிதக்கும் வீடுகள் ” என படம் எடுத்திருந்தார். இந்தத் தாமரைக் கோழிகள் குளிர்காலத்தில் தனது இனப் பெருக்கக் கால உருமாற்றத்தைப் பெற்றிருக்குமாம். பெண் பறவை, பல ஆண்களுடன் இணை சேர்ந்து ஒரே நேரத்தில் பல முட்டைகளை வெவ்வேறு கூடுகளில் இடக் கூடியது. இதனால், அந்தந்த கூட்டுக்குரிய ஆண் பறவைகள் அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன.

* காயமடைந்த இரைக்கொல்லிப் பறவைகளுக்கு அமெரிக்காவில் உள்ள கரோலினா ராப்டர் சென்டர் புனர் வாழ்வு தருகிறது. இந்தியாவிலும் அத்தகைய மையங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

* பூவுலகைக் காக்க முயல்வோரை ஊக்குவிப்பதற்காக கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நோபல் பரிசாக கருதப்படும் இதனை இந்தியாவில் நால்வர் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது.

நூலாசிரியர் விவரிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஏற்கெனவே, மிக மோசமாக சீரழிக்கப்பட்டுவிட்ட இயற்கை வளத்தையும் முடக்கப்பட்டுவிட்ட சுற்றுச்சூழலையும் இனி மேல் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதை நாம் அனைவரும் கரம் கோர்த்து முடிவு செய்தாக வேண்டும். இந்தப் புத்தகம் அந்த முடிவெடுக்க நிச்சயம் நம்மை உந்தித் தள்ளும்.

கட்டுரையாளர், கு.செந்தமிழ் செல்வன்
தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர், வேலூர்.

நன்றி: வெற்றி நூலகம்

நூல் : நம்மைச் சுற்றி காட்டுயிர்
ஆசிரியர் : சு. தியோடர் பாஸ்கரன்
தமிழில் : ஆதி வள்ளியப்பன்

விலை : ரூ.₹40/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




போதி மாதா
****************
ஒரு முழுமையை
எப்படிஉன்னால் கொடுக்க
முடிந்தது;
ஒன்பதே மாதங்களில்?

எத்தனை ஆண்டுகள்
இன்னும்
திரிந்தே கிடக்கிறது
முழுமையடையாமல்
வாழ்க்கை!

ஒரு
உயிரின் முழுமையை விடவா
வாழ்வின் முழுமை பெரியது?

உயிர் கொடுத்து
உடல் கொடுத்து
அதற்குள்ளே
இயக்கங்களனைத்தையும்
கொடுத்து….

இந்த மண்ணில்
இடம் பிடித்துக் கொடுத்தும்
முழுமைக்கு வழி தெரியாமல்
முழித்துக் கொண்டிருக்கிறேன்….

மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்துகொள்
அம்மா உன் வயிற்றில்!
வாழ்க்கையில்எப்படி
முழுமை பெறுவதென
அங்குதான் எனக்கு
ஞானம் கிடைக்கும்!

நீ
மீண்டும் ஒருமுறை
என்னை சுமந்து
பெற்றெடு அம்மா….

பிறக்கும்போதே
புத்தனாகப் பிறப்பேன் நான்!

நம்பிக்கை
*************
இந்த உலகம்
எப்படியிருக்கும்?

இந்த வினா
எப்போதும் அவர் மனதில்
தோன்றியே இருக்காது!

தன்னைப்
பெற்றவர் எப்படி இருப்பர்?
கருப்பா? சிவப்பா?
அறிந்து கொள்ள
ஆர்வப்பட்டிருக்க மாட்டார்!

தன்னை நேசிக்கும்
நண்பர்கள்
தன்னை விமர்சிக்கும்
நண்பர்கள்
எப்படி இருப்பர்?
என்ற சிந்தனைகள்
எப்போதும் எழுந்திருக்கவும்
வாய்ப்பில்லை!

நடக்கும் பாதை
கடக்கும் மனிதர்
குரைக்கும் நாய்கள்
சுடுகின்ற வெயில்
நிழல் தரும் மரம்
யாதொன்றைப் பற்றியும்
சிந்தித்திருக்க மாட்டார்!

படைத்தக் கடவுள் மேல்
கோபம் கொண்டு
ஏசியதோ…. பேசியதோ…
இல்லை!

சாதாரண மனிதர்ப் போலவே
இந்தச் சாதாரண மனிதரும்
சாமியை நம்புகின்றார்;
வணங்குகின்றார்!

வெளியில் வரவும்
வித்தைகள் கற்கவும்
கல்வியில் உயரவும்
வேலைகள் செய்யவும்
காசு பணம் ஈட்டவும்
கல்யாணம் புரியவும்
குழந்தைப் பெற்றுக்
கொஞ்சவும்…

படைத்தக் கடவுளை
பார்வையுள்ளவன் மட்டும்
பார்த்து விட்டானோ?

பார்வை உள்ளவனுக்கும்
பார்வை இல்லாதவனுக்கும்
கடவுள் என்பவன்
ஒரே உருவம்தான்!

தன்னுடையப் பார்வையை
இறைவன் பறித்து விட்டானே
என்று…..
பார்வையற்ற எந்த
என் நண்பரும்
மூளையில் அமர்ந்து
முக்காடு போட்டு
ஒப்பாரி வைத்து
வாழ்வதில்லை!

அவருடைய….
எல்லாமும்
தன்னால் முடியும்
என்ற நம்பிக்கை மட்டுமே…
அதற்குப் பெயர்தான்
தன்னம்பிக்கை!

அவள் விருப்பம்
********************
இந்த
மனிதப்பிறவிதான்
மாநிலத்தில்
மதிகெட்டப் பிறவி!

மதியுள்ளப் பிறவிகள்
மற்ற உயிரினங்கள்தான்!

அதனதன் வழியில்
அதனதன் போக்கில்
அதனதன் வாழ்க்கை!

துன்பப்படுவதேயில்லை
மற்ற உயிரினங்கள்!

துயர் தொடும்போது
விடுபட முயன்று…
ஒன்று வெற்றி பெறும்;
இல்லையென்றால்
மரணித்துப்போகும்!

வஞ்சகத்தை
மனதில் தாங்கி…
வாழ்க்கை முழுதும்
வாழ்வதில்லை மிருகம்!

வாழ்க்கையை
எளிமையாக
எடுத்துக்கொள்ளும்
இயல்புப் பிறவி
பிற உயிரினங்கள்!

இந்த மனிதப்பிறவிதான்
மமதைக் கொண்டப் பிறவி!
அடுத்தவரைப்பற்றியே
ஆராயுமே தவிர…
தன்னிலை உணரா தரங்கெட்டப் பிறவி!

உணர்வுகளை
விருப்பங்களை விடுதலையை
புரிந்து கொள்ளாத
புவியின் அசிங்கம்
இந்த மனிதப் பிறவி!

திரு நங்கைகள் விஷயத்தில்
இன்னும்…
திருந்தாதப் பிறவி
இந்த மனிதப்பிறவி!

அவள் விருப்பம்
அவள் சுதந்திரம்
அவள் வாழ்க்கை
அவர் பிறப்பு!

திரு நங்கையாக
திருமதி நங்கையாக
திருவாளர் நங்கையாக
திருமிகு நங்கையாக
அவள் வாழ்க்கை…
அவள் சுதந்திரம்!

அங்கீகரிக்கத்
தெரியவில்லையானால்
அடங்கிக்கிட….
அவள் வாழ்க்கையை
அவள் வாழட்டும்!

தைரியம் கொண்ட
திறமை நங்கையாக
திரு நங்கை!
********

சரிங்க…
வீரம் பேசுங்கள்
ஆண்டப் பெருமை பேசுங்கள்
மூத்தக்குடி என்று
மார் தட்டுங்கள்….
தமிழர் எல்லோருக்கும்
பெருமைதான்!

தமிழர் இனம்தானே நாம்?
தனிமைப்படுத்தியது யார்?
தனித்தனிக் குழுவாய்….

ஒரு குழு சிங்கமென்றும்
ஒரு குழு சிறுத்தையென்றும்
ஒரு குழு புலியென்றும்
ஒரு குழு புழுவென்றும்
வாழ்கின்றோமே….
வலிக்கவில்லையா?

ஒரே மொழி
ஒரே உருவம்
ஒரே வாழ்வின் முறை
எப்படி…  எப்படி…
நீ பெரியவன்?
அவன் சிறியவன்?

மொழியும் ஒன்று
முறை வைத்து
வாழும் முறையும் ஒன்று
உழைக்கும் முறையும் ஒன்று
உணவும் ஒன்றுதான்!

மீனும் நண்டும்
ஆடும் மாடும்
மாமிசம்தானே?
இதிலெது மட்டம்?
மட்டம் என்றால்
அனைத்தும் மட்டம்!

தகுதியென்றும்
தரமென்றும்
தந்திரச் சொற்களில்
மயங்கிக் கிடப்போர்
தன்மானத் தமிழராக
இருக்க முடியாது!

மானம்
மனிதனின் கொள்கை;
தன்மானம்
தமிழனின் தனியுடைமை!
தமிழருக்குள் என்னத் தகுதி?

வா எடை போடுவோம்…..
உன் செந்நீரும் என் செந்நீரும்
உன் கண்ணீரும் என் கண்ணீரும்
வேறுபாட்டால் சூழ்ச்சிக்கார்களின்
விதிப்படி வாழ்ந்து விட்டுப் போவோம்….

இல்லையானால்
தமிழராய் வாழ்வோம்!

ஏய்ப்போரை அடையாளம் காண்போம்;
இமயம் தொட்டத் தமிழ்க்குடியைக் காப்போம்!