என் பெயர் ராஜா – வாசிப்பு அனுபவம் – சு.டார்வின், நான்காம் வகுப்பு
நாங்க சென்னைக்கு, புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தப்ப வாங்குன புத்தகம் என் பெயர் ராஜா.. அந்தக் கதை தான் இது.
நான் ஒரு கோம்பை நாய். எங்க அம்மா பெயர் ராணி. என் அம்மா ஒரே சமயத்தில் ஐந்து குட்டிகள் ஈன்றாள். அதில் முதல் குட்டி நான் தான். என் பெயர் ராஜா. நான் மூன்று மாத குட்டி. ஆனால் ஒன்று, என்ன ஆனாலும் என் தங்கச்சி மீது தான் அம்மா ரொம்ப பாசமாக இருப்பாள். ஒரு நாள் என் அம்மா ராணி உடைய எஜமான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் தம்பிகள் மூன்று பேரையும் தூக்கிப் போயி விட்டார். என் அம்மாவிடம் கேட்ட போது, அவர்களை விற்பனை செய்ய போவதாக சொன்னாள். எனக்கு விற்பனை என்றால் என்ன என்று தெரியாது. தாயாரிடம் கேட்டேன். அதாவது மகனே, விற்பனை என்றால் இப்போது நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்வது என்று கூறினாள். விற்பனைக்கு என்று சந்தை இருக்கும். அங்கே காய்கறி, மீன், கறி என்று நிறைய இருக்கும். அங்கே தான் என்னையும் என் எஜமான் வாங்கி வந்தார். அங்கே தான் உன் மூன்று தம்பிகளையும் விற்பனை செய்யப் போகிறார்கள் என்று அம்மா சொன்னாள்.
அடுத்து எங்க அம்மா சொன்ன மாதிரியே என்னையும் ஒருவர் வாங்கிட்டுப் போயிட்டார். அவங்க வீட்டில் அவருடைய பொண்ணும் அவருடைய வீட்டுக்கார அம்மாவும் இருந்தாங்க. கொஞ்ச நாளில் அதே வீட்டுக்கு என் தம்பியும் வந்து விட்டான். கொஞ்ச நாளில் நாங்கள் பெரிதாகி விட்டோம். எங்க எஜமான் வேட்டைக்குப் போவார். அவர் போகும் போது நாங்களும் கூட போயி வேட்டையாடிவிட்டு வருவோம். ஒரு நாள் எங்க எஜமான் ஒரு மரத்தில் குரங்குகள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஜீப்பை நிப்பாட்டினோம். அங்கே கழுதைப் புலிகள் விளையாடிக் கொண்டிருந்தன. மெதுவாக நடந்து வேட்டையாடச் சென்றோம். ஆனால் அந்த கழுதைப் புலி இரண்டும் என் மீது பாய்ந்து நகத்தை வைத்து பரண்டி வைத்து விட்டன. ஆனாலும் என் பின்னங்காலை இழுத்து இழுத்துச் சென்று அதைக் கடித்து குடலைப் பிடுங்கி விட்டேன்.
என் தம்பி டாமி, என் எஜமானைப் பார்த்து ஒரு மிருகம் தாக்க வந்த போது என் தம்பி டாமி தான் போய் தாக்கி அந்த மிருகம் செத்து, என் தம்பியும் செத்து விட்டான். ஆனால் என் எஜமான் அங்கிருந்து போய்ட்டார். பயம் இருந்தால் அவர் ஏன் வேட்டைக்கு வர வேண்டும். என் பின்னங்காலை நொண்டி நொண்டி வீட்டிற்கு வந்துட்டேன். முகப்பு கேட் பூட்டி இருந்தது. அதனால் நான் வெளியவே தூங்கிட்டேன். காலையில் முகப்பு கேட்டைத் துறந்தாள் என் எஜமானின் மனைவி. நான் கேட்டுக்கு நேரா படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போ ராஜா என்று கூவினார். என் எஜமான் ராஜா சாகப் போறான் என்று சொன்னார். ஆனால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கனவில் என் தம்பி வந்து, நிய்யும் செத்துடு அண்ணா என்று சொன்னான்..
புரியாத வார்த்தைகள் : இந்தக் கதையில் இருந்த துஷ்ட ஜந்து, புதல்வி, காரை போட்ட வாசல், சொல்கையிலேயே, பிணைந்து, பறித்து வாகாய், அதட்டல் போடுவார், மாறுகையில், நிகழ்த்துவேன், கவிந்து விட்ட, பிதற்றி, முழுகீட்டாத்தான், போசியில், முன்னறிவிப்புமின்றி, ஊத்தை, ஓலம், கிலுவை, விசையை, கிஞ்சிக் காட்டியது, அமளி பண்ணி, வெங்கச்சாங் கற்கள், உதாசீனப்படுத்தி, சமிக்ஞை, எள்ளும் கொள்ளும், திராணியற்று, ஊடுவாடி..
கருத்து : உயிரினங்களை கொடுமைப் படுத்தக் கூடாது. உங்களை யாராவது கொடுமைப் படுத்தினால் போலீசுக்கு சொல்லிடலாம். ஆனால் வாயில்லா ஜீவன் யாரிடம் சொல்லும். அதனால் வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்தாதீர்கள். வேட்டையாடாதீர்கள்..
சு.டார்வின்
சமகால நடப்புகளில் மார்க்சியம் – 10 – என்.குணசேகரன்
டார்வின் மீதான வெறுப்பு ஏன் ?
அறிவியலுக்கு ஒவ்வாத, பகுத்தறிவை முடமாக்குகிற பாடத்திட்டங்களை புகுத்துவதும்,அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிற பாடங்களை அகற்றுவதும் ஒன்றிய அரசின் இந்துத்துவா நிரல். இந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது,தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் குழுமம் (என்சிஇஆர்டி) பல பாடங்களை நீக்கியுள்ளது.அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் டார்வினது பரிணாம வளர்ச்சி கோட்பாடு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை நீக்குவதைக் கண்டித்து,1,800 விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பரிணாமம் பற்றிய அத்தியாயத்தை அகற்றுவது விஞ்ஞான பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் கொள்கைகளுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.இதனை நீக்குவதால் மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்படிப்பட்ட புரிதல் ஏற்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.இளம் தலைமுறை உலகத்தைப் பற்றியும் இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் பற்றியும் அறிந்து கொள்வதை தடுக்க வேண்டும்;இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் அனைத்தும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்ற கண்ணோட்டத்துடன் அறிவுத் தேடலை இளம் தலைமுறை கைவிட வேண்டும்.இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.இது மூடநம்பிக்கைகள் நிறைந்த, வளர்ச்சி குன்றிய ஒரு சமூகமாக எதிர்கால இந்தியா உருமாறுவதற்கு இட்டுச் செல்லும்.
டார்வின் எதிர்ப்பாளராகத் தமிழக ஆளுநர்
டார்வின் பாடம் நீக்கப்பட்டது திடீரென்று நிகழ்ந்தது அல்ல. ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சத்திய பால் சிங் டார்வின் கோட்பாடுகள் தவறானவை என்று விமர்சித்து வந்தார்.டார்வின் எதிர்ப்பாளர் வரிசையில் தமிழக ஆளுநரும் உண்டு.
தமிழக ஆளுநர் மார்க்சியத்தை அவதூறு செய்து பேசிய அதே உரையில் டார்வின் கோட்பாடுகளும் இந்தியாவை சீரழித்து விட்டதாக பேசினார்.”ஒருவர் பிழைக்க வேண்டுமானால் வலுவாக இருக்க வேண்டும்; கபடத்தனமாகவும், தந்திரமாகவும் இருக்க வேண்டும்” என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் பேசினார்.வலியது வாழும், தக்கனத் தப்பி பிழைக்கும் என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் பலவீனமானவர்களும், ஏழைகளும் வாழத் தகுதியற்றவர்கள் என்பது டார்வின் கருத்து என ஆளுநர் பேசினார். பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு உள்ளிட்ட டார்வின் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியுள்ளார்.
உண்மையில் தக்கனத் தப்பி பிழைக்கும் என்ற சொற்றொடர் டார்வின் சொன்னது அல்ல. டார்வின் கோட்பாட்டை மாற்றி அமைத்து ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவரால் சொல்லப்பட்ட கருத்து. இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப்பெருக்கம் செய்திட வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பது டார்வின் கருத்து.
ஆனால் இதைத் திருத்தி சொத்தைக் குவிக்கிற திறமையும் வழிமுறையும் பரம்பரையாக தொடர்கிறது என்று கூறி இதில் தகுதி உடையவர்கள் சொத்து உடையவர்களாக இருப்பது நியதி என்கிற வகையில் ஸ்பென்சர் கூறினார். இந்த சொற்றொடரை டார்வின் பெயரால் எடுத்துக் கூறி டார்வின் தத்துவமும் இந்தியாவை சிதைத்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார்.
டார்வினின் கருத்துக்கள் மிகப் புரட்சிகரமானவை.இயற்கைக்கு ஒரு வரலாறு உண்டு. உயிரினங்கள் உயிர் வாழ்வதும் ,மாற்றத்திற்கு உள்ளாவதும் ,பிறகு மறைந்து போவதும் இடையறாமல் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுபோக்குகள். டார்வினின் இந்த கருத்துக்கள் மார்க்சிய சோசியலிச சிந்தனைக்கு உரமூட்டுகிற கருத்துக்கள். உயிரினம் பிறந்து,வாழ்ந்து, வளர்ந்து,மறைவது போன்றே முதலாளித்துவ வரலாறும் உள்ளது.
இரண்டு சிந்தனைகள்
( தொடரும்)
டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும் கட்டுரை – பொ. இராஜமாணிக்கம்
டார்வின் தினம் : பிப்ரவரி 12
மனிதன் குரங்கிலிருந்து வந்தானா…. வாழ்க்கைக்கான போராட்டமும் தக்கன பிழைத்தலும் டார்வின் சொன்னாரா…. தகுதி உள்ளன மட்டும் பிழைப்பது மனித சமூகத்திற்கும் உரியதா….
1. மனிதப் பரிணாம வளர்ச்சி
60 லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித இனம் பிரிந்து வளர்ந்தது. 25 லட்சம் வருடங்களுக்கு முன் ஆஸ்ட்ரலோபித்திகஸ் என்ற நமது மூதாதையர் கிழக்கு ஆப்ரிக்காவான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெக்டஸ் என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகளை உருவாக்கி இருக்கிறது. ஹோமோ எரெக்டஸ் 20 லட்சம் வருடங்கள் வாழ்ந்துதிருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஹோமோ எரெக்டஸில் இருந்து தான் நியான்டர்தால், ஜாவா மனிதன், பீகிங் மனிதன், புளோரஸ் என்ற லில்லிபுட் மனிதர்கள் ( 3அடி மனிதன், 25 கிலோ) சமீபத்திய டெனிசொவியன். இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.
மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆப்ரிக்காவில் பரிணாமம் தொடரந்தது. ஹோமோ எர்காஸ்ட்டர், ஹோமோ சேப்பியன்ஸ் என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது லட்சம் வருடத்தில் இருந்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரைபல்வேறு மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. எப்படி கரடிகளில் பல வகைகள் வாழ்வது போல் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2 லட்சம் வருடத்தில் இருந்து வருகிறான்.
சுமார் எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் கல் கருவிகளில் இருந்து துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம் சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்களோடு வாழந்து கொண்டிருக்கிறான்.
2. டார்வின் பரிணாமக் கொள்கை
டார்வின்(டார்வின் 1809-1882) பரிணாமக் கொள்கை இயற்கைத் தேர்வு வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் மூலம் 1859ல் உலகத்திற்குத் தெரிய வந்தது. உயிர் பரிணாம அறிவியலில் மரபணு மாற்றம் (mutation) நேர்கோட்டுப் பரிணாமம்(orthogenisis) உருவான குணங்ளைக் கடத்துதல் ( acquired characters inheritance) , இயற்கைத் தேர்வு (Natural Selection) என்ற நான்கில் டார்வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டே சிறந்து விளங்குகிறது. டார்வின் கூறியது குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிறையவே தெரிந்து கொள்வீர்கள். இது வரையிலும் கூட பாடங்கள் மூலமும் பல வழிகள் மூலமும் அறிந்து இருக்கலாம். டார்வின் கூறியது பல வழிகளில் தவறாகவும புரிந்து கொள்ளப்பட்டுள்ளதையும் நம்மிடம் பார்க்கலாம்.
அவர் கூறியதில் வாழ்வதற்கான போராட்டம் என்ற பதமும் தக்கன பிழைத்தல் என்பதும் அவருடையது அல்ல. முன்னது மக்கள் தொகை குறித்து மால்தூஸ் கூறியது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இயற்கையால் நோய், பஞ்சம் பிற பேரிடர்கள் மூலம் ஏற்படும் போராட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனித குல முயற்சியால் நோய் பஞ்சம் இயற்கைப் பேரிடர் ஆகியனவற்றில் இருந்து காப்பற்றப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டுள்ளது.. இதனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது வறுமை கல்லாமை சுகாதாரமின்மை போன்றவைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று பல காலங்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த சுதந்திர தன உரையில் இந்தியப் பிரதமர் சிறிய குடும்பம் கொண்டவர்கள் தான் உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்கள் எனறு அரசியல் ஆக்கியுள்ளார்.
தக்கன பிழைத்தல் என்பது ஹெர்பட் ஸ்பென்சர் கூறியது. டார்வின் தனது ஐந்தாவது பதிப்பில் தக்கன பிழைத்தல் என்பது பொருத்தமாக இருப்பதாக் கருதி அதைப் பயன்படுத்தினார். இதை மனிதப் பரிணாமத்திற்கு (Descent of Man 1871 ) கையாண்டுள்ளார்.
டாரவின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது.
டார்வின் கொள்கை என்பது வரலாற்றுத் தன்மையை உள்ளடக்கியது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள், வழிமுறைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. உற்று நோக்குதல் ,ஒப்பிடுதல் , வகைப்படுத்துதல் என்ற அறிவியல் வழிமுறைகள் இதில் கையாளப்பட்டுள்ளது. அது நாள் வரை உயிரினங்கள் கடவுளின் சட்டங்களால் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பல தகவமைப்புகள் உருவானதெனக் கருதி வந்தனர். ஆனால் டார்வின் அபார சக்திகளினால் படைக்கப்படவில்லை எனக் கூறி கடவுளை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்.
உயிரினங்கள் ஒவ்வொரு வகையாக இறுக்கமாகப் படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டை மறுக்கிறார். அதாவது முக்கோணம் சதுரம் செவ்வகம் என அறுதி செய்யப்பட்டவை அல்ல. சிலர் கூறுவது போல மனித இனம் ஆப்ரிக்கன் ஆசியன் வெள்ளைக்காரன் என ஒவ்வொரு வகையானவன் இல்லை. தற்போதைய 700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களே. உயிரினங்கள் திட்டமிடப்பட்டு உருவானதில்லை ( predetermined) காலஓட்டத்தில் நுண்ணிய அளவில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக பல்வேறு உறுப்புமண்டலங்கள் ( Digestive system) காலஓட்டத்தில் மாற்றம் கொண்டுள்ளதைக் காணலாம். எந்தத் திட்டமில்லாமல் அரிய வாய்ப்புமிக்கதையே இயற்கை தேர்வு செய்து வருகிறது. உயிரியலின் பரிணாமத்திற்கென கெடுபிடியான கோட்பாடுகள் கிடையாது (பால்சிபிகேசன் கோட்பாடு செல்லாது)
டார்வின் மனித இனம் பிரைமேட்ஸ் வகையைச் சார்ந்தது என்றும் சிம்பானசி கொரில்லா போன்ற குரங்குகள் போல உடலமைப்புக் கொண்டதென்றும் இதன் மூலம் ஆப்ரிக்காவே மனித இனத்திற்கு முன்னோடிகள் வாழ்ந்த இடம் எனக் கருதினார். ஆப்ரிக்காவில் 60 லட்சம் வருடம் முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மனித முன்னோடிகளின் தொல்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே டார்வின் கூற்று உண்மையாகிறது.
மனிதப் பரிணாமம் என்பது தனிச் சிறப்பானதல்ல என்கிறார். பிற உயிரினங்கள் எவ்வாறு பரிணாமம் வழியில் வந்ததோ அதே போன்று தான் மனிதன் பரிணாமும். தத்துவஞானிகளும் மத குருமார்களும் மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன் எனக் கூறுவதை இவர் மறுத்தார். ஏனென்றால் வாலில்லா குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இதை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் எளிய சிந்தனையில் பார்க்கலாம்.
மனித சமுதாயம் பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு பொதுநலப் பண்பும் ( Atruism) ஒத்திசைவான கூட்டுறவும் ( Harmonious cooperation) தான் காரணம். பரிணாமத்தில் இயற்கை தேர்வு என்பது தனி உயிரினத்தின் மீதல்ல. அந்த இனத்தின் குழுவாகும். எனவே மனித இனத்தின் வாழ்க்கை என்பது பொதுநலப் பண்பாலும் ஒத்திசைவான கூட்டுறவாலும் இயற்கையால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்ததால் மனித குலம் முன்னேறி இருக்கிறது. இது தற்செயல் நிகழ்வல்ல ஒரு தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்லும் இயற்கையின் செயல் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. பரிணாமம் என்பது திட்டமிடாததும் அவ்வப்போதைய வாய்ப்புகளே பரிணாமத்தின் இலக்காகும்.
3. சமூக வளர்ச்சி
மனித சமுதாய வளர்ச்சி என்பது ஹெகேல் போன்ற அறிஞர்களின் பார்வையில் மாற்றம் மேலும் மாற்றம், முன்னேற்றம் என்பதாகும். இதனால் மார்க்ஸ் போன்றோர் அவரின் சீடர்களாக இருந்தனர். ஆனால் மாற்றத்திற்கான காரணத்தை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவனிடம் தோன்றும் தெய்வீக சிந்தனை, மதம் என முடித்துக் கொண்டார். ஆனால் மார்க்ஸ் மனிதன் தான் மதத்தை உருவாக்கினார். மனிதனே உலகம் மனிதனே அரசு மனிதனே சமூகம் என்று முன் வைத்தார். மாற்றமும் முன்னேற்றமும் தெய்வீகமாகவோ ஊகத்தினாலோ வருவதில்லை.மாற்றம் என்பது மனிதகுலம் பெறும் திறன்களினாலும் அத் திறன்களை உருவாக்கும் அவர்கள் வாழும் சமூகமே காரணம் என்றார்.
மனிதனுக்கான சிந்தனை மாறும் உலகத்தினோடேயே உருவாகிறது. மாற்றத்திற்கான பின்னணியும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. மாற்றம் என்பது அவன் வாழுகின்ற வாழ்க்கையிலிருந்தே வருகிறது. மானுட விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் இருந்து வருகிறது. மனித குல விடுதலை என்பது அன்பினால் வருவதில்லை உழைப்பாளர்களின் உற்பத்தி முறையில் உருவாக்காப்படும் பொருளாதார பரிமாற்றத்தில் வருகிறது. மனித இதயத்தின் மாற்றத்தால் அல்ல. இப்படித்தான் பண்டைய சமூகத்தில் இருந்து இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை சமுதாய வளர்ச்சி நடைபெற்று வருகிறது.
மனித சமுதாய வளர்ச்சியில் பல கோளாரான கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். அதில் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் 1864ல் சமூக டார்வினிசம் என்ற கோட்பாட்டைப் பரப்பினார். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தினை உருவாக்கியவர் இவரே. சூழலுக்கேற்ற தகவமைப்புக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.இதை மனதில் வைத்துக் கொண்டு சொத்தை குமிக்கும் திறமையும் வழிமுறையும் பரம்பரையாகச் செல்கிறதென்கிறது இந்தக் கோட்பாடு. மேலும் இவர் ஒரு படி போய் தொழிலாளர்கள் ஏழைகளுக்கு உதவிடு்ம் அரசின் சட்டங்களை எதிர்க்கிறார். இந்தச் சட்டங்கள் தகுதியற்றவர்களை ஆதரித்து இந்த சமூகம் முன்னேறுவதை தடுப்பதகக் கூறுகிறார். இந்த தகுதியற்றவர்களை இயற்கையை மீறி நீண்ட நாளாக வாழ அனுமதிக்கிறது என்கிறார். வில்லியம் கிரஹாம் சம்மர் என்பவர் இன்னும் தடாலடியாக சொத்துக்கும் சமூக அந்தஸ்த்துக்கும் தனி நபர்களிடையே ஏற்படும் போட்டி திறனற்றவர்களையும் அறமற்றவர்களையும் வெளியேற்றும் என்கிறார். தனி நபர் சொத்துக்குவிப்பது என்பது அறமற்ற செயல் என இவர் அறியவில்லை.
மற்றொருவர் பிரான்சிஸ் ஹால்ட்டன் என்பார் மனித இனத்தை மேம்படுத்த அதனிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களை நீக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். சமூக நல அமைப்புகள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான அமைப்புகள் தரம் குறைந்த மனித இனத்தை காப்பாற்றுகின்றன என குற்றம் சாட்டுகிறார். இதனையொட்டி 1930களில் 32 அமெரிக்க மாகாணங்கள் யூஜெனிக்ஸ் சட்டம் இயற்றி 60000க்கும் மேற்பட்டோரை அழித்திருக்கின்றனர்.
பிரிதொருவர் ஹிட்லரும் இதே வழியில் இனச் சுத்தம் என்ற பெயரில் ஆரியரல்லாத யூதர்கள் ரோமா என்ன ஜிப்சிகள் போலந்துக்காரர்கள் சோவியத்துகளை லட்சக் கணக்கில் கொன்று குவித்தான். குறிப்பாக ஜிப்சி இனத்தவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்திருநதும் அதிலும் தூய தன்மையைக் கண்டறிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களின் மூதாதையர்களின் தகவலைத் திரட்டி தீர்த்துக் கட்டினான். தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறப்பிடத்தையும் அவர்களது பிறந்த தேதியையும் தகவலாகத் திரட்டச் சொல்வது. இதனால் தான் எதிர்க்க வேண்டியதயிருக்கிறது.
4. தற்போது என்ன செய்ய வேண்டும்
தற்போதுள்ள வலதுசாரி சூழ்நிலை ( மதம் , பிற்போக்குத் தன்மை , தேசீயவாதம் ) உலகெங்கும் வளர்ந்து வருகிறது. இதன் பிரதிபலிப்பாக பல் வேறு நாடுகளில் வலதுசாரி அமைப்புகள் அரசினைப் பிடித்துள்ளன. இந்தியாவும் இதில் அடங்கும். ஏற்கனவே மத அடிப்படையிலான அரசுகள் பல நாடுகளில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, பிற..
வலதுசாரி அமைப்புகளின் எழுச்சிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் தற்போதைய நவீன தாராளமயமாக்கல். 90க்குப் பின் முதலாளித்துவம் மிகப் பெரிய தோல்வி அதிர்ச்சியில் இருப்பதால் அதன் விளைவாக உலகம் முழுவதும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதலாளித்துவ சொத்துக் குவியல் சிலரிடமும் சொத்தில்லாமல் வறுமையில் பெரும்பான்மையினரும் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மக்களிடம் தேசீயவாதத்தையும் இனவாதத்தையும் பிரச்சாரமாக்கி வலதுசாரி அமைப்புகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் ஆளும் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகள் மக்களை மேலும் துயரத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் வீழ்வதும் அதுவே நமது நாட்டில் மதவாத அரசியலுக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் போலி அறிவியல் மூலம் மக்களை மரபணு ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் வலதுசாரி போலி அறிவியலாளர்கள் செய்து வருகின்றனர். மத வெறியை ஒரு புறமும் தாராளமய பொருளாதாரத்தை மறுபுறமும் எதிர்த்தாக வேண்டும் இதுவே மக்களின் சிந்தனையை பிற்போக்கிற்கு இழுத்துச் செல்கிறது. இதனை சரி செய்ய டார்வின் கோட்பாட்டினை அறிந்து கொள்வதம் சரியாகப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
கருத்துதவி….
செபியன்ஸ் நூல்
எர்னஸ் மேயரின் கருத்தடிப்படையில் வெளி வந்த கட்டுரை
டாக்டர் சபயா சாட்டர்ஜியின் எங்கல்ஸ் நூல்
பொ. இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர் , மக்கள் அறிவியல் கூட்டமைப்பு