வெ.நரேஷ் – கவிதைகள்

வெ.நரேஷ் – கவிதைகள்




* பால் குடித்த ஞாபகத்தில்
விரல் சூப்புகின்றன
பெற்றோரை இழந்த குழந்தைகள்.

* ஆழ்துளைக் கிணற்றில்
மாட்டிக்கொண்ட குழந்தைக்கு
இது ஜன்னல்கள் இல்லா வீடு என்பது தெரியாது.

* தொப்புள் கொடி அறுத்தாலும்
தொலைதூரத்தில் சத்தம்
அம்மா என்ற சொல்
தொலைப்பேசியில்

* நீ பிறக்கும் போது நானழுதேன்
நான் இறக்கும் போது நீ அழுதாய்
இரண்டும் உமக்குத் தெரியாதே (தாய்)

* ஆலயத்திற்கு வெளியே
பாலுக்கு ஏங்கும் குழந்தை
ஆலையத்தினுல் அபிஷேகம்
அமைதியாய் கிடக்கும் ஆண்டவன்.

* இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விடும்
அன்பான அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று.

-வெ. நரேஷ்