ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி

ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி




ஆதிகாலத்துல மனுசன் ஆடை அணிந்தது கிடையாது. உடையில்லாம தான் காடுகள்ல சுத்தி திரிஞ்சான். அதுல ஆண் பெண் பேதம்ங்குறது கிடையாது. யாருமே உடையணிஞ்சது இல்ல… அடுத்து ஒவ்வொரு நாகரீக மாற்றத்தின் போதும் உடை நவீனத்துவம் பெற்றுகிட்டே வருது.இலை, தழை அணிஞ்சு திரியுறான்… அடுத்து தான் துணி நெய்ய கண்டுபிடிக்கான்… துண்டு துணியை மேலையும் கீழயும் சுத்தினது தான் முதல் ஆடை வடிவமைப்பு… இப்படித்தான் உடை நாகரீகம் படிப்படியா வந்துட்டே இருந்தது….

உடைங்குறது நமக்கு மிக நெருக்கமானது … அது கொடுக்கும் பார்வை தான் இங்க நம்மோட வெளிப்பாடு. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்றத கேட்ருக்கோம்… தெருல நடந்து போகுறப்ப ஆடையில்லாம ஒருத்தர பார்த்தா நமக்கு தோன்ற முதல் எண்ணம் அவர் மனபிறழ்சி உள்ளவரா இருக்கக்கூடும்ங்குறது தான்….. இல்ல பிச்சைகாரரா இருப்பாங்களோன்னு தான் நினைப்போம்…. உடைங்குறது உடலை மறைக்கவும், சுற்றுசூழல் மாற்றத்துலயிருந்து நம்ம பாதுகாக்கவுங்குற நிலை மாறி உடைதான் நம் உடல் மொழியாகவே பார்க்கப்படுது.

உடைக்குக்குறது இங்க சாதி,மதம் வெளிப்படுத்தும் அங்கீகாரம் … கபாலி படத்துல ஒரு வசனம் வரும் காந்தி ஏன் கதர் அணிந்தார்ன்னும், அம்பேத்கர் ஏன் கோட்டுபோட்டார்ன்னும் காரணம் இருக்குன்னு.. அதற்கு பின் பெரிய அரசியலே இருக்கு…..

இத்தனை அரசியல் பின்புலம் இருக்குறப்ப பெண்களோட உடை மட்டும் ஆண்களுக்கு கிளர்ச்சி தந்தே ஆகணும்ங்குற நோக்கத்துலயே இங்க வடிவமைக்கப்படுது. ஆடை அணியாத போது பெண்களோட உடல் அடிமைப்படுத்தபடல… ஆடைகளுக்கு பின் மனிதநாகரீகத்துல மதம் புகுத்தப்படுது… அது எப்படி பெண்களின் மாதவிடாய் தீட்டுன்னு ஒதுக்குச்சோ அதே போல பெண்களோட உடலையும் அருவறுப்பாய்,அவமானமாய் சித்தரிக்கத்தொடங்குது….

இந்த உடைதிணிப்பை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய சூழல்ல இருக்கோம்…. ஒரு பெண் சேலை உடுத்திருக்கப்போ இடையோ, மார்போ உடை விலகி தெரிஞ்சாலும் அது கண்ணியமான உடைன்னு சொல்ற நாம …. ஒரு பேண்ட், டாப் போட்ருக்கப்போ கைய தூக்கும் போது வெளிதெரியுற இடுப்பு அந்த உடையை கவர்ச்சியா காட்டுதுன்னு சொல்றோம்.‌‌ ஒரு சுடிதார்க்கு சால் போடலைனாலே துப்பட்டா போடுங்க தோழின்னு சொல்ற அளவு பெண்களோட உடை கொச்சைப்படுத்தப்படுது… இங்க கொச்சைப்படுத்தப்படுறது பெண்ணோட உடையில்ல உடல்…..

ஆண்,பெண் உடலீரப்புங்குறது இயற்கை.. ஆனால் பெண்களுக்கான உடையமைப்பு இப்ப பெரும்பாலும் உடலீர்ப்புக்காக பயன்படுத்தப்படும் சாதனமாதான் பெண்களோட உடலை பயன்படுத்துது….

சமீபத்துல ஒரு பெண்கள் உடையகத்துக்கு போனேன்…. நான் அங்க பார்த்த உடைல 75% சதவீதத்துக்கும் மேல உள்ள பெண்கள் அணியுற டாப்ஸ், சுடி எல்லாமே ,மார்பு பகுதிக்கு தனியா ஒரு பகுதியும் கீழ்பாத்தை தனியா பிரிக்கும் மாதிரியான வடிவமைப்பு…. மார்பு பகுதி எல்லா பெண்ணுக்கும் இருக்கும்… ஆனால் அதை ஏன் எடுப்பா காட்டி தனியா‌ பார்ட்டீசன் கொடுத்து பிரிக்கனும்…. ஆண்கள் யாரும் அப்படி தனியா பிரிக்குற மாதிரி உடையணிந்து பார்த்துருக்கோமா….

ஏன் மார்பை அப்படி காட்டணும்….75% க்கு மேல உடை அப்படித்தான்…. ஏன்னு கேட்டப்ப ட்ரெண்டுன்னு சொன்னாங்க… ட்ரெண்ட் வரும் … ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி… ஆனால் ஆடை தேர்ந்தெடுப்புல கொஞ்சம் கவனம் வைங்க மக்கா…. நமக்கு மட்டும் இல்ல நம்ம குழந்தைகளுக்கும்…. எடுப்பா காட்டி அழகு பார்க்க நம்ம உடல் சாதனம் இல்ல…..

நவீனம், உடை சுதந்திரம்ங்குறது வேற….  காலசூழலுக்கு ஏற்ப உடை மாறும்… ஆனால் இங்க பெண் உடைசுதந்திரம்ங்குறது ஆண் எதை பார்க்கணும்ங்குறத பொறுத்து அமைய கூடாது….

பெண் உடைசுதந்திரம்ங்குறத பத்தி பெரியார் அழகா சொல்லிருப்பார்….”எது உனக்கு உடுக்க ஏதுவா இருக்கோ அதை உடுத்து…. ஆண்கள் மேல்சட்டையும், பேண்ட்டும் போடுறப்போ கண்ணியமா தெரியுதா அதே போல உனக்கு எது இலகுவோ அதை கண்ணியமா உடுத்துன்னு”

பெண்கள் உடலை முழுசா மூடியிருக்கனும்னு சொல்றதும் …. எது வெளிதெரியணும், எது எடுப்பா காட்டனும்னு பெண்களை போகபொருளாய் காட்டுறதும், அலங்கார கருத்தாக்கங்கள் தான்…

நாகரீகம்ங்குறது அதிகாரத்தின் கட்டமைப்புங்குற மார்க்ஸ் கூற்றை நினைவில் வைங்க. அடிமைத்தனம் வேற வேற வடிவுல வருதே தவிர அடிமைத்தனம் அப்படியே தான் இருக்கு. பொண்ணுங்க நம்ம நமக்கான உணர்வு, சுதந்திரம், உடைன்னு நமக்கானத சிந்திக்க தவறுறப்ப அதை ஆண் கைல எடுக்காங்க. நமக்கானது நம்மளோட சுயதேர்வா இல்ல திணிக்கப்பட்டதான்னு நாம தான் முடிவு பண்ணணும்.

ஆடை அரசியல் அதிலும் பெண் ஆடை அரசியல் அதிகம் இங்க…. எதை நாம் தேர்வு செய்யணும்ங்குறது நம்ம கைல…. எல்லாருக்கும் இருக்குற அதே மார்புதான் நமக்கும் என்ன பாலூட்டிங்குறதால அதன் வளர்ச்சி அதிகம். அதை எடுப்பா காட்டி தான் தீரணும்ங்குற அவசியமில்லை….‌ பெண் ஆடை சுதந்திரம் வேற….. இரண்டையும் குழப்பாம கண்ணியமான ஆடை தேர்வை எடுப்போம்.

-மணிமாதவி