maainthazinthathu poetry written by jaleela musammil கவிதை: மாய்ந்தழிந்தது - ஜலீலா முஸம்மில்

கவிதை: மாய்ந்தழிந்தது – ஜலீலா முஸம்மில்

ஒரு மெல்லிய இசையைப் புதிதாகக் கேட்டுப் பிடித்துப்போவது போல இருந்தது நம் முதல் சந்திப்பு! நேசம் என்பது ஒற்றைச் சொல்... ஆனால், அது வியாபித்துக் கிடப்பது பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்! பவனிவரும் பால்வீதிகளிலும்! நதி இறுகிக் கல்லாகும்... கல் கரைந்து கலந்து நதியாகும்...…
kavithai: enniniya - dr.jaleelamusammil கவிதை: என்னினிய....-Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: என்னினிய….-Dr ஜலீலா முஸம்மில்

இரண்டாம் தடவையும் என்னைப் பார்க்க மாட்டீர்கள் அதே தேன் நிரம்பிய குடுவையல்ல நான் உணர்வுகளின் உக்கிரத்தை துப்பி வழித்து எறிந்து விட்டே மீண்டும் வந்திருக்கிறேன் என்னுள் உடைந்த சிதிலங்களை சித்திரமாக்கி வைத்திருக்கிறேன் நீங்கள் பார்த்துச்சிரிக்க சேதங்கள் இங்கே இல்லை பதங்கமாகிய போர்வாளின்…
கொஞ்சம் புத்தனாக  கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

கொஞ்சம் புத்தனாக கவிதை – Dr ஜலீலா முஸம்மில்



மௌன வேதாளம்
பெயர் சூட்டப்படாத
கோப முருங்கை மீதேறி
மீண்டும்
அமர்ந்து கொண்டு
தனது
சித்தாந்தத்தைக்
கற்பித்துக் கொண்டிருந்தது.
இருளிலும்
வெயிலிலும்
கல்லிலும்
முள்ளிலும்
கடந்து வந்ததை
கழற்றிப் போட்டு விட்டு
பகலின் மறுபரிணாமமாம்
இரவிலே
அதன் மௌனநீலத்தை
முந்தானையாக்கி
முகத்தை மறைத்திருக்க
எல்லையற்ற வானம் போல்
துன்பந்தழுவிய பசியில்
ஓடிக்கொண்டிருந்தேன்
எதிர்த்திசையில்
நேசக் கனிவும்
அதில்
கனியும் அமைதியும்
தேடித் தோற்று
துளி கூட மிச்சமில்லாததை
நம்ப மறுத்து
இரவோடு இரவாக
இருண்டு விட்ட
வார்த்தைகளோடு
சமுத்திரத்தின் அடியாழத்தில்
மடியும் சகதியாகிறேன்
நெஞ்சப்புண் இப்போது
கொஞ்சம் புத்தனாக
மாறுகிறது!