Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Era. Kalaiyarasi நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - இரா.கலையரசி

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – இரா.கலையரசி

நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

மழலை மொழி பேசும் முத்துக்கள்.முன்னுரையில் “அய் சூப்பரு”னு தொடங்கிய ஐயா மாடசாமியின் எழுத்துகளை அடி ஒற்றி, ஒத்தி எடுத்தாற் போல விரிகிறது மழலை பிரவாகம்.

தோட்டத்துல ஒளிந்து இருக்கும் கொரானாவை கண்டுபிடிக்க முடியல புகழால்.வெளி ஆட்களை பார்த்தால் வெட்கி மறையும் குட்டியா இவ்வளவு பேசுகிறாள்?

திண்டுக்கல் மீட்டிங் போய் தாமதமா
வரும் அப்பா, டார்வினை தூங்க வைத்து விடுகிறார். நம்ம அப்பாவும் நினைவுக்கு வந்து போறாரு.

விஜய் ஸ்டிக்கர சுவத்துல ஒட்டவா? விஜய்யே வாத்தியாரு தான். இதுல கூட பாரு மாஸ்டருன்னு தான் எழுதி இருக்கு.

இதுக்கு பதில் இருக்கா??

ஏ !அழகான அம்மாவே
பார்கக மாட்டியா?

ஏ !மீசைக்கார அப்பாவே என்னைய
பார்க்க மாட்டியா?

செமல்ல.

வட்டமா உக்காந்து இருக்கோமுன்னு சொல்ல தெரியாமல்
அப்பா இங்க!
அண்ணன் இங்க!
அம்மா இங்க!
நானு இங்க.!

வட்டம் வரவில்லை என்றால் என்ன?
வார்த்தை வட்டம் அடிக்கிறதே!

அப்பா அண்ணணுக்கு
புண்ணு வந்திருச்சு.
அண்ணனை பார்த்துக்க சொன்னேன்ல.
ஆமாம்பா
அண்ணன் சைக்கிள்ல இருந்து
விழும் போது பார்த்துக்கு தான்பா
இருந்தேன்.

ஹா.ஹா.ஹா.

என்னா ஒரு வில்லத்தனம்.

அப்பா ஒரு எறும்பு கதை சொல்ல போறேன்.

இங்க உக்காந்து சொல்லவா?

அங்க உக்காந்து சொல்லவா?

அங்க. சொல்லவா?

கடைசி வரை சொல்லாத கதை அழகு.

புகழ், டார்வின் கீர்த்தி என எல்லாருமே
கதாசிரியர்கள்.மழலை நம் வகுப்பறையில் நிறைந்து இருக்கிறது.

முன் பருவ மழலை வகுப்புகளில் ஏராளம் உலவுகிறது.திருத்த. முயற்சிக்காதீர்கள்
என்பதை திட்டவட்டமாக கூறி இருப்பது அழகு.

மழை சாரலாய் மனதை சாளரத்தில்
சாய்த்துக் கொள்ள செய்கிறது மழலை மொழி.

மிக துல்லியமாக ஆய்வு நடத்திய ஆய்வாளர் சுந்தருக்கு வாழ்த்துகள்.

இதோ இன்று மாணவர்களிடம் அறிமுகம் செய்தேன்.

அவர்கள் மொழி அல்லவா. ?

பல நூல்களுக்கான முன்னுரை.
டுஜக் டுஜக்.

நம் அனைவரின் மனதில் பசக் பசக்..

பேரன்பும் வாழ்த்துகளும் சுந்தர்.

Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Senthilvel நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - செந்தில் வேல்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – செந்தில் வேல்




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

குழந்தைகளின் மொழியில், இயல்பான நடையில் அவர்களின் உரையாடல் நடையிலேயே வந்திருக்கும் அற்புதமான ஒரு நூல் டுஜக்.. டுஜக்..!

குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் தான். பெற்றோர் மட்டுமில்லை குழந்தைகளின் உடன் பிறந்தோரும் உறவினர் வீட்டுக் குழந்தைகளும் கூட அவ்வப்போது ஆசிரியர்களாக மாறி விடுவதை உணர்த்தும் பதிவுகள் இவை..

“ஒன்.. டூ.. திரி கற்றுக் கொள்வது..
வணக்கம் பிரண்ட்ஸ் என்று பேசி யூடியூப் வீடியோ எடுப்பது போன்றவை..”

கேள்விகளால் துளைத்தெடுப்பது குழந்தைகளின் இயல்பு. சில நேரங்களில் நமக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு திண்டாட வேண்டி இருக்கும்..

“அம்மா பேரோடு ஆரம்பிச்சு.. தாத்தா பேரோட நிக்காம இந்த இல பேரு.. ஆடு பேரு.. மாடு பேரு… என கேள்விகள் நீளும் போது நம்மிடம் பதில்கள் இல்லை… அதே போல லவ் பேர்ட்ஸ்ல எது ஆண், எது பெண் என்று தெரிந்த நமக்கு அது எப்போ முட்டை போடும்னு கேட்டா சொல்லத் தெரியல..”

குழந்தைகள் மட்டுமே தன்னைப் போலவே பிற உயிர்களையும் நேசிப்பர் என்பதற்கு உதாரணமாக இருக்கும் உரையாடல்கள் இவை..
“பூனைக்கும் சேத்து பால் வாங்குப்பா..”
“செடிக்கு எப்படிப்பா மாஸ்க் போடுவாங்க..”

கட்டுக்கடங்காத கற்பனைக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள் என்பதை உணர்த்தும் பதிவுகள் இவை..
“பாம்பு வானத்துல பறந்து வந்துச்சுப்பா..”
“நச்சத்திரத்த கூப்ட்டுக்கு வந்துட்டேமப்பா..”

“நாங்க தான் உங்க லெவலுக்கு வரணுமா…”
“அப்பா தூங்குறப்ப அடி வெளுத்து விட்ருவேன்..”
“அம்மா தான் சமைக்கணுமா, அப்பா சமைக்கட்டும்..”
என்பவை குழந்தைகள் மனதில் பட்டதை சொல்பவர்கள், செய்பவர்கள் என்பதற்கு உதாரணம்..

கூப்பிட்டா திரும்பல அப்படின்னா குழந்தைகள் மொழியில்
“ஏ அழகான அம்மாவே..
ஏ மீசக்கார அப்பாவே..!” என்பவை மழலை கொஞ்சும் அழகிய வரிகள்.. அதே போல அப்பத்தா செத்தா ஒப்புச் சொல்லி அழுவேன் என்பது குழந்தைக்கே உரிய பாசத்தை உணர்த்துகிறது..

பிறந்த நாளுக்கு வரைந்த படத்தில் சின்சான் மட்டும் ஏண்டா ஒளிஞசு இருக்கான் என்று கேட்டதற்கு அவன் கேக்கு வெட்டுறதுக்கு முன்னாடியே எடுத்து தின்னுட்டான் என்று சொல்வது குட்டி இளவரசன் கதையில் பெட்டிக்குள் ஆடு இருக்கு என்று சொல்வதை நினைவூட்டுகிறது..

இளம் குழந்தைகளின் பெற்றோராய் இருப்பவர்களும் இருந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் கொஞ்சல்களை, கெஞ்சல்களை, குறும்புகளை, விசும்பல்களை, அன்பை, பாசத்தை நினைத்து நினைத்து ரசிக்க செய்யும் பதிவுகள் நிரம்பிய நூல் : டுஜக்.. டுஜக்.. : ஒரு அப்பாவின் டைரி..!

Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Sa Ka Muthukannan நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - சக.முத்துக்கண்ணன்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – சக.முத்துக்கண்ணன்




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

கவிதைக்கென்ன இலக்கணம்? மண்ணாங்கட்டி இலக்கணம்! எதையும் மீறுவதும், உடைத்துப் பார்ப்பதும் தானே நவீனம். மழலைச் சொற்களை விடப் பெரிதா கவி?

இலக்கியத்தில் மட்டுமல்ல. உலகில் வரையறுக்கப்பட்ட எந்தவொன்றும் குறிப்பிட்ட காலம் வரைதான். அப்புறம் ஊறி உப்பிச் சிதறிவிடும். அப்படி செய்து வைத்திருக்கும் விதிகளை, சடங்குகளை உடைத்து காட்டுகிறது சுந்தரின் எழுத்து.

குழந்தைகளோடு குழந்தையாக உடன் கிடந்து களித்த அப்பாவின் அனுபவங்கள் தான் நூல் முழுக்க. அப்பா ஆசிரியராகவும் இருப்பதால் நமக்கு இன்னும் நெருக்கமாகி விடுகிறது. ஒரு ஆசிரியராக நாம் கற்க இதில் இடமிருக்கிறது.

இசைக்குறிப்புகள் போல குழந்தைகளின் குரல்களை அப்படியே தந்திருக்கிறார்.

இத்தனை மெல்லோசைகளுக்கும் ஊடாக ஆண் என்கிற கூறு குழந்தைகளுக்குள் மெல்ல முளைப்பதை நுண்மையாக உணரமுடிகிறதே..! அதுவேறொன்றுமில்லை நம் மரபுதான். தமிழ்ச்செல்வன் தோழர் சொல்வதைப் போல ‘என்னயறிமலேயே என் ஆண் மனோபாவம் வெளிப்பட்டிருக்கலாம்’.

டார்வினின் மொழி சில இடங்களில் ஓங்கி நிற்கின்றது. புகழ்மதி அதற்குள் அடங்குகிறாள். அப்பாதான் திருத்தி எழுதியிருக்க கூடும். ‘அடப் போடா லூசு’ என மகள் எகிறியடிக்க. ‘மறுத்துப் பேசு மகளே’ என சுந்தர் மெல்ல தூண்டுகிறார்.

ஊரடங்கு காலம் ஆயிரமாயிரம் துயர நினைவுகளைக் கொண்டிருந்தாலும், சுந்தருக்கு படைப்பு மனதை தந்திருக்கிறது. என்ன செய்ய வீட்டுக்குள் கால்கள் அடங்கி உக்காரும் போதுதான் ஒரு களச் செயல்பாட்டாளனுக்கு இன்னொரு கண் திறக்கிறது. வாரம் ஒரு நாளைக்கூட ஒதுக்க முடியாமல் ஒடும் தோழர்களே!.. இக்கவிச்சொற்கள் உங்கள் குழந்தைகளின் குரல்களாக நின்று உங்களை எச்சரிக்கின்றன. அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்; கேள்விகளுக்கு காது கொடுங்கள்;

றெக்கை முளைத்து பறக்கும் கேள்விகள் – பக்கந்தோறும் நின்று பாடமெடுக்கின்றன நமக்கு. இந்த வகையில் எனக்கு ஒரு ஐ ஓப்பனராக சுந்தர் இருக்கிறார். சுந்தரோடு ஒப்பிடும் போது நான் எனது மகள் வெண்பாவிடம் உரையாடிது ரொம்பக் கம்மி.

சுந்தர் அடுக்கி எழுதிய சொற்கள் யாவும்…ஒளிப்புள்ளிகளாகத் தெரியும் சின்னச் சின்ன துவாரங்கள். நாம் தான் நெருக்கத்தில் கண்ணை வைத்துப் பார்க்க வேண்டும். எனக்கு அச்சிறு துவாரத்தின் வழி பெரிய வானம் தெரிகிறது.

தினசரி நாம் பார்க்கும் அதே வானம்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய நட்சத்திரங்களை இந்நூலில் வரைந்து வைத்திருக்கிறார் சுந்தர். எத்தனை நட்சத்திரங்கள்? எத்தனை ஜொலி ஜொலிப்புகள்?

வாழ்த்துகள் சுந்தர். தொடர்ந்து எழுதுங்க.

Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By I Muralitharan நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - ஐ.முரளிதரன்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – ஐ.முரளிதரன்




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

வீடுகளுக்குள் இருக்கும் குழந்தைகளின் உலகத்தை கண்டுகொள்ளாத சூழலில் அவற்றை கவனித்து நமக்குக் கைகளில் தந்திருக்கிறார் எழுத்தாளர். தேனி சுந்தர் அவர்கள். உள்ளே படிக்கப் படிக்க சிறுவயதில் நான் செய்த குறும்புகள், வீம்புகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. மிக முக்கியமாக ஒரு சம்பவத்தை குழந்தைகள் சொல்கிற போது “நேத்து நாளைக்கு ” என்று படிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி பொங்கி வருகிறது. இரசிக்கக்கூடிய பிழைகள், திருத்த மனசு வராத வார்த்தைகள் எல்லாம் குழந்தைகளிடம் இருக்கிறது. அப்படி இருப்பது தானே குழந்தைமை.!

பெரும்பாலும் சிறுகதைகளில் நம்மை குழந்தையின் உலகத்திற்கு அழைத்துச் சென்றவர் கு.அழகிரிசாமி அவர்கள். அதுவும் அன்பளிப்பு கதை முழுவதும் ஒரு வீட்டிற்குள் நடக்கிறது.. குழந்தைகளின் களேபரங்களை மிக சிறப்பாக காட்டியிருப்பார். நம்மைச் சுற்றிலும் குழந்தைகள் விளையாடுவது போன்ற ஒரு உணர்வினை அதில் இருக்கும். அந்த உணர்வினை நான் டுஜக் டுஜக் படிக்கும் போது உணர முடிந்தது.

“ஒனக்கு தெரியுமா பாப்பா
நீ இந்த வயித்துல தான் இருந்த? ”
“அப்ப அண்ணன் அப்பா வயித்துல இருந்தானா?”
என்ன ஒரு தர்க்கமான கேள்வி பெண் வயித்துல இருந்து பொன்னு வந்தா. அப்ப ஆம்பளை வயித்துல இருந்து தான பையன் வரனும். உண்மையாவே அப்டி ஒரு சம்பவம் நடந்தா இந்த ஆம்பளைங்க ஆணவம் கொஞ்சமாச்சும் குறையுமில்ல. சூப்பர் கேள்வி பாப்பா.

அப்பா திண்டுக்கல் மீட்டிங் போனத தெரிஞ்சுக “எப்ப வருவாருனு கேட்குற கேள்வி அப்பா மேல இருக்க பாசத்தையும் அப்புறம் அவரு லேட்டாவே வரட்டும்னு சொல்றதுல ” வந்தா அத எழுதுனியா இத எழுதினியானு கேட்பாருனு அதுக்குள்ள நான் தூங்கிருவேனு” சொல்லும் போது அப்பாவை பிடிக்கும் ஆனா வாத்தியார் அப்பாவை தான் பிடிக்குறதுல்ல என்பதை புரிய வைக்கிறாப்ல நம்ம டார்வின் தம்பி.

“தீவாளிக்கு சீனி வேட்டு போடுற மாதிரி உப்பு வேட்டு போடுவமாப்பா?”
புலல்[புகழ்] பாப்பா கேள்வி கரெக்ட்டு தான சீனி இருந்தா உப்பு இருக்கனும்ல நம்மை அறியாமல் சிரிப்பு வருது.

“அம்மா..
நீ எனக்கு தான அம்மா..
என் பக்கம் திரும்பிக்க..
என் மேல மட்டும் கை போடு..
எனக்கு மட்டும்
தட்டிக் குடி னு சொல்லி “ அண்ணன வெறுப்பேத்துறது எவ்வளவு அழகு.. அப்புறம் “அண்ணன் பக்கம் திரும்புமா னு விட்டுக் கொடுக்குறதும் எவ்வளவு அழகு!” குழந்தைகளின் உணர்வுகளை குறிப்புகளாக நமக்கு இந்த டுஜக் டுஜக் கொடுக்குது. அவசியம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் .

Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Amutha நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - அமுதா

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – அமுதா




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்:
thamizhbook.com

டுஜக்.. டுஜக்… படிச்சு முடிச்சுட்டேன்…என் வாசிப்பனுபவத்தை சொல்லியே ஆகணும் …

வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் புகழ்மதி என் கைய பிடிச்சு “வா அத்தைன்னு” அவ உலகத்துக்கு கூட்டிட்டு போயிடுறா.

அந்த உலகத்துகுள்ள போன கொஞ்ச நேரத்தில் அவளின் அன்பு அற்புதம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது. நம்மை மயக்கி ஏதோ மாயை செய்கிறது.

அவளின் கொஞ்சும் மழலை மொழியில் நம்மை மறந்து சிரித்துகொண்டிருக்கும் போதே… ரியாலிட்டி ன்னு சொல்லி வெளியில கூட்டிட்டு வந்துட்டார் சுந்தர் சார்.
இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட இருந்திருக்கலாம்….

குழந்தைகள் உலகம் எவ்ளோ அழகானது என்பதை ஒவ்வொரு வரியிலும் ரசிக்க முடிந்தது. பக்கத்திற்கு பக்கம் மகிழ்ச்சியையும்… நெகிழ்ச்சியையும் கொட்டிவைத்துள்ளார் சுந்தர் சார்.

பணியின் நிமித்தம் நான் வெளி ஊருக்கு சென்று விட என் இரண்டு பிள்ளைகளையும் அம்மா தான் வளர்த்தாங்க. அதனால குழந்தைகளோட கவித்துவமான உரையாடலை நான் அனுபவித்ததே இல்லை. அந்த குறை இன்று நீங்கியது போல உணர்ந்தேன். வாழ்க்கையில் எவ்ளோ அற்புதமான விசயத்தை வேலையின் பின் ஓடி இழந்துள்ளேன் என்று நினைக்க நினைக்க ஏக்கமாய் இருந்தது.

சின்சான், ஹீமாவரி, மிர்ச்சி, நொகாரா, இந்தப் பேர்லாம் இன்னும் ரேசன் கார்டுல தான் சேர்க்கல… இதை வாசிக்கும் போது சின்சானா வாழ்ந்துகிட்டுருக்குற என் மகன் தான் நினைவுக்கு வந்தான். சீப்பு கூட சிவப்பு கலரில் கேப்பான் ஏண்டா ன்னா “என் தல சின்சான் க்கு சிவப்பு கலர் தான் புடிக்கும்”ன்னு சொல்லுவான்..

“போப்பா லூசப்பா…
நானு இன்னும் பெரியபிள்ளையே ஆகல…
நானு பாப்பா…”

“வேணாம்ப்பா…
நான் எடுத்தெடுத்து
தருவனாம்.
நீ போட்டுட்டு போட்டுட்டு
ஒடி வருவியாம்….!”

“செடிக்லாம் எப்டிப்பா
மாஸ்க் போடுவாங்க…??”

“அப்ப…
அண்ணன்
அப்பா வயித்துல
இருந்தானா….??”

இதெல்லாம் நான் மறுபடி மறுபடி வாசிச்ச வரிகள். மனசு சோர்வா இருக்கும் போது இதை வாசிச்சு பாருங்க…

புகழ் மயில் இறகில் மருந்து போட்டுவிடுவா… அவ்ளோ இதமா இருக்கும்… எழுந்து இன்னும் வேகமா ஓடலாம்.

புகழ்மதியை உடனே பார்க்கணும் போல ஆசையா இருக்கு . எந்த வேலை செய்துகொன்டிருந்தாலும் அனிச்சையாக டுஜக்… டுஜக்.. ன்னு சொல்லிட்டே இருக்கேன்