Posted inPoetry
வெ.நரேஷ் கவிதைகள்
1) முந்தான முடிச்சி ஒன்னு
மும்முரமா போகுது
முட்டாக்கு போட்டுக்கிட்டு
முன்னும் பின்னும் பாக்குது
நட்டநடு ராத்திரியில்
நாலாபுரம் தேடுது
அங்கம் ருசி கேட்டுத்தான
அங்கும் இங்கும் அலையுது
கற்பை மட்டும் களவாடி
கணாமப் போனது
பாவி புள்ள பாவி புள்ள
நீ
பொறந்ததுதான் சாபமா?
கற்பை மட்டும் களவாடி
அவன்
போனதுதான் நியாயமா?
**********
2) என்னை மிகவும் பிடிக்கும் என்றாய்
நான் வரும் பொழுது ரசிப்போம் என்றாய்
என் சத்தம் கேட்டு மகிழ்வேன் என்றாய்
என்னைப் பற்றிக் கவிதையாய் வர்ணித்தாய்
ஆனால் ஏனோ நான் உன்னைத் தேடி வந்தவுடன்
எதிரியாகவே பார்க்கிறாய்
இப்படிக்கு அடை மழை
*********
3) நெருங்கிய உறவாக இருந்தாலும்
தூரத்து உறவாக இருந்தாலும்
வாழ்த்து மடல் போல்
முடிகிறது
ஆழ்ந்த இரங்கலும் கூட !
– வெ. நரேஷ்