பணவீக்கம் : உழைக்கும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் – தமிழில் : ச.வீரமணி

பணவீக்கம் : உழைக்கும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் – தமிழில் : ச.வீரமணி



நாடு, பணவீக்கச் சூழலில் சிக்கியிருப்பதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் நாளும் உயர்ந்துகொண்டிருப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க விகிதம் 7.8 விழுக்காடு அளவிற்கு இருந்தது. கடந்த எட்டாண்டுகளில் இதுவே மிகவும் அதிகபட்ச அளவாகும். உணவுப் பொருள்களின் பணவீக்கமும் 8.38 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதுவும் கடந்த 17 மாதங்களில் அதிகபட்ச அளவாகும். இதே போன்றே மொத்த விலைவாசிக் குறியீட்டெண் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 15.08 விழுக்காடாக உயர்ந்தது. இதுவும் நடப்புத் தொடரில் உச்சபட்ச அளவாகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் சாமானிய மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குக் கூறுவது என்ன? இவற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், கோதுமை, காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கிறது என்றே அர்த்தமாகும். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், பெயரளவுக்கே உண்ண முடியும் என்றே அர்த்தமாகும். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வாங்கித்தர இயலாது என்பதும், குறைந்தபட்சம் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருள்களை வாங்க முடியாது என்பதுமேயாகும். வட இந்தியர்களின் பிரதான உணவாக விளங்கும் கோதுமை மாவு (atta) விலை, கடந்த ஓராண்டில் மட்டும் (2021 மே முதல் 2022 மே வரை) 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. பாலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு மேலும், சமையல் எண்ணெய்களின் விலைகள் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு மேலும், காய்கறிகளின் விலைகள் பல மடங்கும் உயர்ந்திருக்கின்றன.

பணவீக்கம் என்பதன் அர்த்தம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதாகும். வீதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள், சிறிய அளவில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். இது சிறிய மற்றும் நுண்ணிய வர்த்தகப்பிரிவினரையும் பாதித்திருக்கிறது.

பணவீக்கச் சுழலில் விலைவாசி உயர்வுக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவது எரிபொருள்களின் விலை உயர்வாகும். ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீது வரிகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. உக்ரேன் யுத்தம் துவங்குவதற்கு முன்னரே இவற்றின் விலைகள் உயர்ந்துவிட்டன. உக்ரேன் யுத்தம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

பெட்ரோல் மீதான வரியில் 96 விழுக்காடும், டீசல் மீதான வரியில் 94 விழுக்காடும் செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் வரி என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும்விட மிகவும் குரூரமான விலை உயர்வு என்பது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வாகும். சாமானிய குடும்பத்தினருக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 431 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது 76 விழுக்காடு உயர்வாகும். வணிகரீதியாக வழங்கப்படும் 19 கிலோ கிராமுக்கான சிலிண்டரின் விலை இப்போது 2,397 ரூபாயாகும். அதாவது 126 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பணவீக்கம் தொடர்பாக மோடி அரசாங்கம் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் அலட்சியமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்கான சில்லரைப் பணவீக்கம் தொடர்பான விவரங்கள் வெளியான அன்றைய தினமே, நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், இது பணக்காரர்களைப் பாதிப்பதோடு ஒப்பிடும்போது ஏழைகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் பணவீக்கத்தின் தாக்கம் உயர் வருமானம் பெறுபவர்களைப் பாதித்த அளவிற்கு, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைப் பாதிக்கவில்லை என்றே கிடைத்திருக்கும் சாட்சியங்கள் காட்டுகின்றன,” என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் முடிவில், நுகர்வு செலவினமானது மக்கள் தொகையில் உயர்நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும், மத்திய நிலையில் உள்ளவர்களில் 60 விழுக்காட்டினருக்கும், அடித்தட்டு நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை இவ்வாறு முடிவுக்கு வந்திருப்பதில் உள்ள போலித்தனத்தை ஓர் அம்சத்திலிருந்து தெளிவாக உணர முடியும். மாதாந்திர பொருளாதார அறிக்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு நுகர்வு வர்க்கங்களுக்கிடையேயும் பணவீக்கத்தின் பாதிப்பு விகிதம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மிகவும் புத்திசாலித்தனமாக மழுப்பியிருக்கிறது.

பணவீக்கம் பணக்காரர்களையே அதிக அளவில் பாதித்திருக்கிறது என்று கூறப்படும் சிந்தனையை நீக்கிட வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஊதியம் பெறுவோரையும், குறைந்த சேமிப்பு உள்ளவர்களையும் நேரடியாகத் தாக்குகிறது. குறிப்பாக உணவுப் பணவீக்கம் அவ்வப்போது உணவுப் பொருள்களை வாங்குபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. பணக்காரர்களும், உயர் மத்திய வர்க்கத்தினரும் தங்களுடைய நிதி மேலாண்மை மற்றும் பங்குச்சந்தைகள் மூலமாக வருமானங்களுக்கு வேலைகட்டிடமுடியும். அதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெரிய அளவில் பாதுகாத்திட முடியும்.

பணவீக்கம் பொதுவாக வருமானத்தை ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மாற்றுவதற்கே இட்டுச்செல்கிறது. ஏனெனில் ஏழைகள் தங்கள் உண்மையான வருமானத்தில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கு, பணக்காரர்களுக்கு இருப்பது போன்று எவ்விதமான வாய்ப்பும் கிடையாது. கார்ப்பரேட்டுகள் சந்தையின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் பணவீக்கத்தால் ஏற்படும் உயர் இடுபொருள் செலவினங்களின் சுமையை எளிதாக நுகர்வோருக்கு மாற்றிவிடுவார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் லாப விகிதத்தில் இழப்பு ஏற்படாது தக்க வைத்துக்கொள்வார்கள். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, சேமிப்பாளர்களின் உண்மையான வட்டி வருவாயும் வீழ்ச்சி அடைகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்துவிதமான சர்சார்ஜ் வரிகளையும் ரத்து செய்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. இது ஒன்றுதான் பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திட வழியாகும். மேலும் அவர்கள், அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், குறிப்பாக சமையல் எண்ணெய்கள் மற்றும் தான்யங்களை பொது விநியோக முறையில் அளிப்பதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். மேலும் கோவிட் பெருந்தொற்று ஈராண்டு காலமாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.

விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தணிப்பதற்கும் இந்நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதுவே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் முன்னுரிமை நிகழ்ச்சிநிரலாக மாற வேண்டும். இதன் அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் வரும் மே 25-31 தேதிகளுக்கிடையே இக்கோரிக்கைகள் மீது போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக இத்தகைய போராட்டங்களும் இயக்கங்களும் நாடு முழுதும் பரப்பப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

(மே 18, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா.சந்திரகுரு



There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியக் குடியரசு இப்போது சரிவைக் காணத் தொடங்கியிருக்கும் போதிலும், நாகரீகமான மற்றும் அவ்வளவாக நாகரீகமற்ற வட்டாரங்களின் உரையாடல்களில் இருந்து வெளிவருகின்ற ஒரேயொரு பல்லவி நலிந்து போயிருக்கின்ற ஜனநாயகத்திற்கான உறுதியான அறிகுறியாகவே இருக்கின்றது. அந்தப் பல்லவி பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடியின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் வரும் போதெல்லாம் அவர்களுக்கான ‘மாற்று எதுவுமில்லை’ என்பதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மோடியின் கவசத்தில் ஓட்டைகள் விழுந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்ற சிலர் மாநில அளவிலே ஒரு சில தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக நிச்சயம் போராடவே செய்யும் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனாலும் அதைப் பின்தொடர்ந்து ‘ஆனாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று என்று எதுவுமில்லை’ என்ற பல்லவி உடனடியாக வந்து விடுகிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா

பிளவிற்கான விதைகளை விதைத்து, விஷம் தோய்ந்த வெறுப்பு பேச்சுகளுக்குப் பாதுகாப்பு அளித்து, குடிமைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தி, வெறுப்பின் ஆவேசத்தை பிரதமர் கட்டவிழ்த்து விடுகிறார்’ என்பதாக அந்த உரையாடல் இருக்கின்றது. அதுவே அவரைத் தகுதி நீக்கம் செய்யப் போதுமானது. ஆனாலும் உடனடியாக அந்த உரையாடலை ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

பாராளுமன்றத்தின் தரையை முத்தமிட்ட பிரதமர் நம்மிடம் இருந்தார். அந்த முத்தம் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான மரண முத்தமாக மாறியது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

வலுவான தேசப் பாதுகாப்பிற்கான உறுதியை நமக்கு வழங்கிய பிரதமர் இருந்தார். ஆனால் அவரால் எல்லைப் பகுதியில் இழப்பு, நமது நில எல்லைக்குள்ளாகப் பிணைக்கப்பட்டது, இருமுனைப் போருக்கான வாய்ப்புகள் போன்றவையே விளைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சீனா குறித்து ஒரு கேள்வி கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று தேசம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

பலமான உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு உறுதியளித்த பிரதமர் இருந்தார். அந்த இலக்கு உண்மையில் எட்டப்பட்டுள்ளது. தொண்டு மிஷனரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இப்போது வேட்டையாடப்பட்டு வருவதால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிந்திருப்பவர்கள் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்லக் கூடாதா?

எல்லை மாநிலங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த பிரதமர் இருந்தார். பத்தாண்டுகளுக்கு அப்புறம் முதன்முறையாக பஞ்சாபில் வன்முறை தலைகாட்டியிருப்பதை அரசாங்கமே ஒப்புதல் அளித்துச் சொல்கிறது. வடகிழக்கில் அமைதிக்கான ஆதாயங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. காஷ்மீரில் அதிகரித்து வரும் அந்நியமும், அடக்குமுறையும் தொடர்கின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

பங்குச்சந்தைகளை உயரச் செய்த பிரதமர் இருந்தார். கடந்த இருபதாண்டுகளில் இருந்துள்ள மற்ற அரசாங்கங்களைப் போல அவரது அரசாங்கமும் ஓரிரு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. உண்மையாகச் சொல்வதென்றால் மக்கள்தொகையில் முதல் பத்து சதவிகிதம் பேர் இந்த ஆட்சியால் ஒருவேளை செழித்திருக்கலாம். ஆனால் நம்மிடம் 2003-2009 காலகட்டத்தில் இருந்த எட்டு சதவீத வளர்ச்சி விகிதம் இப்போது இல்லை. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வறுமை நிலைகளில் இருந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவமின்மை, பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. சுமாரான அளவிலேயே ஏற்றுமதிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணவீக்கம் 1991க்குப் பிறகு மிக அதிகபட்சமாக – இந்த நவம்பரில் 14.3 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது. ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகும், அவையெல்லாம் முந்தைய அரசாங்கத்தின் அல்லது அமெரிக்க மத்திய வங்கியின் தவறுகள் என்றே சொல்லப்பட்டு வருகின்றன. ‘உண்மையில் மாற்று எதுவுமில்லைதானே!’

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

ஊழலைக் குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இருந்தார். மூலதனச் செறிவு அதிகரித்திருந்தாலும், கட்சிகளின் தேர்தல் நிதியை நிர்வகிக்கும் விதிமுறைகள் பின்னடைவைக் கண்டுள்ள போதிலும், சரியான சித்தாந்தத்திற்கு முன்பாகத் தலை வணங்கி நிற்கும் வரை மற்றவர்களின் மூலதனத்தைக் காட்டிலும் ஒரு சில மூலதனம் மட்டுமே பெரிது என்ற சமிக்ஞையைத் தெரிவிக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே ஊழல் குறைந்திருக்கலாம் என்றாலும், அதைக் காண்பதற்கோ அல்லது அதைப் பற்றி பேசுவதற்கோ நம்மை அனுமதிக்காத அளவிற்கு மிகத் திறமையாக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான், ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

அந்தப் பல்லவி இவ்வாறாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற கருத்து தொடர்கிறது. தார்மீக, ஆன்மீக மறுமலர்ச்சிக்குப் பதிலாக இருண்ட, மோசமான வகுப்புவாத தூண்டுதல்களே ஹிந்து மதத்தின் பெயரால் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’.

அதிகாரப்பூர்வ வட்டங்களை மறந்து விட்டுப் பாருங்கள். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பரந்த கௌரவம், அதன் கலாச்சாரம், அதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டன. ஆனால் நிறுவனம் சார்ந்து இருக்கின்ற ரிப்பன்ட்ராப்களால் இந்த உலகை வேறுவிதமாக நம்ப வைக்க முடிகின்றது. உங்களுடைய மக்களை எந்த அளவிற்கு அதிகமாகத் தாக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உலகளாவிய உங்கள் பங்கு அதிகமாக உயரும் என்று நமது தலைவரை அவர்கள் நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையாகவே ‘மாற்று எதுவுமில்லை’.

அனைவரைப் பற்றியும் துப்பறிந்து, அனைவரையும் அச்சுறுத்தி, தகவல் ஒழுங்கைக் கட்டுப்படுத்தி மிகவும் பாதுகாப்பாக நாம் இருப்பதாக நம் அனைவரையும் அரசு உணர வைத்திருக்கிறது. ஆனால்… ஆனால்… ஆனால் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

மற்ற பல்லவிகளைப் போலவே ‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவியும் கட்டுடைக்கப்பட வேண்டும். குடிமக்களில் சிலர் பலன்களைப் பெற்றிருக்கலாம் அல்லது திட்டங்களின் பயனாளிகளாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் இந்த அரசாங்கம் செயல்திறன் கொண்டது என்று கூறுவதை நம்புவதற்கு அதன் உண்மையான சாதனைகள் போதாமையுடனே இருக்கின்றன. சில பகுதிகளில் வெற்றிகளை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்தியக் குடியரசு எதிர்கொண்டிருக்கும் அடிப்படை நெருக்கடிகளுக்கு முன்பாக அந்த வெற்றி மங்கிப் போகிறது.

‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவிக்கு எதிர்க்கட்சிகளின் நடத்தையே உதவி வருகிறது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை உதறி விட்டு காங்கிரஸால் வெளியே வர முடியவில்லை. எதிர்கட்சிகள் வசமிருக்கின்ற பல மாநில அரசுகளால் நிறுவன நன்னடத்தைக்கான மாதிரிகளாக அல்லது தாராளவாத, ஜனநாயக விழுமியங்களின் கொள்கைரீதியான பாதுகாவலர்களாக இருக்க முடியவில்லை. ஒருபுறம், இந்திய குடியரசு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சொல்ல விருப்பமுடையவையாக இருக்கின்ற எதிர்க்கட்சிகள் மறுபுறத்தில் குடியரசிற்கு இருத்தலியல் நெருக்கடி இருப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்பவையாக இருக்கவில்லை. அந்த இருமைதான் எதிர்கட்சிகளை அதிகம் காயப்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குடியரசைப் பாதுகாக்கின்ற நோக்கத்திற்காக ஒன்றுபடவில்லை. அவற்றின் உணர்வுகள் அனைத்தும் அவர்களுக்குள்ளான சண்டைகளிலேயே செலவிடப்பட்டு விடுகின்றன. நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருபவர்கள் புதுமுகங்கள் வெளிவர அனுமதிப்பதில்லை.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

இவையனைத்தையும் ஒப்புக் கொண்டாலும், ‘மாற்று எதுவுமில்லை’ என்கின்ற எண்ணம் உண்மையில் மிகவும் அபத்தமாகவே இருக்கிறது. கூட்டணி அரசியலுக்கான சாத்தியம், சீர்திருத்தங்களின் சிக்கல்கள், இந்த நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் நுட்பமான பின்னல் இழைகள் என்று சமீபகால வரலாறு குறித்து இருந்து வருகின்ற மகத்தான மறதியாலேயே இதுபோன்ற ‘மாற்று எதுவுமில்லை’ என்ற சிந்தனை முன்வருகிறது. மாற்றாக வேறொன்றுமில்லை என்றால் ஆழ்ந்த வகுப்புவாதம், அடக்குமுறை இரண்டையும் எதிர்கொண்டிருக்கிற ஒரு ஜனநாயகத்தில், அரசியல் போட்டியும், அதிகாரத்தைக் குறைப்பதும் தானே மாற்றாக இருக்க முடியும். குறைவான அதிகாரம், அதிக போட்டி போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு எதிர்க்கட்சியும் முழுமையாக நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை.

ஆக ‘மாற்று எதுவுமில்லை’ என்று பரவலாக இருந்து வருகின்ற பல்லவியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பல்லவி மூன்று விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம்: இந்திய மேல்தட்டினரை போலியான களத்திற்குள் சிக்க வைத்திருக்கின்ற அரசியல் அழகியலானது இருக்கின்ற ஆபத்துகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நாயக வழிபாட்டின் அடிப்படையில் சிந்தனைகளை இடைநிறுத்தி எதையும் எளிமைப்படுத்துவதற்கான விருப்பம் இருந்து வருகிறது. அல்லது ஒருவேளை இவ்வாறு ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது ‘வகுப்புவாத விஷம், எதேச்சாதிகார அடக்குமுறை குறித்து எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’ என்று கூறுவதற்கான வித்தியாசமான வழியிலான உரையாடலாகக்கூட இருக்கலாம்.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

தற்போதைய போக்கு பேரழிவை நோக்கிச் செல்வதாக இருந்து வருகின்ற நிலையிலே, ‘மாற்று எதுவுமில்லை’ என்று கூறுபவர்கள் அதன் மூலமாக இப்போது இருக்கின்ற யதார்த்தத்தை விவரிப்பவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தில் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது அந்த ஜனநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதையே குறிக்கும் என்பதால், ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்பவர்கள் ‘ஜனநாயகத்தை நாங்கள் வெறுக்கிறோம்’ என்றே நேரடியாகச் சொல்லிக் கொள்ளலாம்.

https://indianexpress.com/article/opinion/columns/narendra-modi-alternative-bjp-opposition-7695387/
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு: ஒரு நூற்றாண்டின் ஒப்பாய்வு



சுருக்கம்

சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் நாட்டின் முக்கிய தரவுகோல்களாகும். சமூக மேம்பாடு அடைய, சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கல்வி, சுகாதரம், வேலைவாய்ப்பு போன்றவற்றினைச் சமஅளவில் அனுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும். இவற்றை நாம் “சமூக நீதி” என்கிறோம். பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாட்டைத் தவிர்த்து அடைய முடியாது. இந்தியா பல்வேறு இன, மத, மொழி குழுக்களை உடையது. இக்குழுக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. சமூகச் சீர்திருத்தங்களால் இவ்ஏற்றத்தாழ்வினைக் குறைக்க முடியும். இந்தியாவில் புத்தர் தொடங்கி, இன்றுவரை சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இச்சீர்திருத்தங்களை அரசியல் வழியாகக் கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்நாடு சமத்துவம், சமூக நீதியின் உரைவிடமாகும். வள்ளலார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகளை நடைமுறைப்படுத்த கடந்த ஒரு நூற்றாண்டாக 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கி, தற்போது உள்ள திராவிடக் கட்சி ஆட்சி வரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் பல முயற்சிகளை எடுத்துள்ளன. அதன் பயன் தமிழ்நாடு இந்திய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சமூக-பொருளாதார நிலைகளில் இனம் காணப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் கடந்த ஒரு நுற்றாண்டாகத் தமிழ்நாட்டை ஆண்ட மூன்று கட்சிகளின் (நீதிக் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சி) ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக்கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளி விவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ்வாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

முன்னுரை

உலகில் உள்ள சமூகக் குழுக்கள் பலவேறு நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பெரும்சவால்களை எதிர்கொண்டன. வலிமையான சமூகக் குழுக்கள் மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவற்றை அழித்தொழிக்கும் செயலையும் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் செய்துகொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூதாயம் தங்களின் உரிமைகளைப் பெற, சிலர் தலைமையின் விழித்தெழுந்து வெகுகாலம் போராடவேண்டியுள்ளது. சமுதாயத்தில் காலம்காலமாகக் காணப்படும் ஆண்டான் அடிமையினையும், சமுதாயத்தில் புரையோடி இருந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அறிஞர் பலர் விதைத்துச் சென்றுள்ளனர். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்களில் புத்தர் தொடங்கி, இன்று வரை பலர் உண்டு. மனித மேம்பாடு சமூகச் சீத்திருத்தங்களினால் தான் அடைய முடியும் என்று கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் கண்கூடாக அறிந்திருக்கிறோம்.

இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் இருந்தாலும் அவர்களில் மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயண குரு, தந்தை பெரியார் போன்றோரால் சமுதாயத்தின் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்களின் உரிமைகளைப் பெறப் பெரும் பங்காற்றியவர்களாவார்கள். இவர்களின் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல்தளங்களில் நாளடைவில் உள்வாங்கிக்கொண்டு நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. சமூதாயம் மேம்படும்போது அதன் சஙகலித்தொடராக பொருளாதாரநிலை மேம்படத்; தொடங்கும். இதனால் வறுமை ஒழியும், சமத்துவம் ஊண்றத் தொடங்கும். இந்தியாவில் குறிப்பிட்ட சில (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா) மாநிலங்கள் சமூக-பொருளாதார தளங்களில் உயர்நத்து நின்று உள்ளடக்கிய வளர்ச்சியின் வழியில் பயனிக்கிறது.

இந்தியாவில் உள்ள மநிலங்களில் தமிழ்நாடு சமூக-பொருளாதார தளத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பல வழிகளில் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. இடஒதுக்கீடு, ஆண்-பெண் சமத்துவம், கல்வி அறிவு, அளவான குடும்பம், இருமொழிக்கொள்கை என்ற சமூக நிலையிலும் வேளாண்மை, தொழில் துறை மேம்பாடு என்ற பொருளாதாரத் தளத்திலும் இந்தியாவிலேயே முன்னேடியான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் 4 விழுக்காடு நிலப் பங்கினைப் பெற்றுள்ளது ஆனால் 5.96 விழுக்காடு மக்களைப் பெற்றுள்ளது. பொருளாதார நிலையில் தமிழ் நாடு ஒட்டுமொத்தத் தேசிய வருமானத்திற்கு 8.59 விழுக்காடு பங்கினை அளித்து இரண்டாவது இடத்தை மார்ச்சு 2021இல் வகிக்கிறது (https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php). பத்தாண்டுகளுக்கு (2000-01ல்) முன்பு இது 7.62 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது (Shanmugam 2012). இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை, கடந்த 100 ஆண்டுகளாக ஆண்ட அரசியல் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. சமூகச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் இராமலிங்க அடிகளார், பெரியார், அண்ணா, கலைஞர் முதலியோர். இதன் விளைவு தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில்  இல்லாத வகையில் சக மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய நிலையும், சாதிய அடையாளங்களைப் பெயருக்குப் பின்னால் துறந்த நிலையும் இன்று காண முடிகிறது. மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகளைச் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகளே ஆகும்.

அவ்வகையில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் தளங்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் அவை நீதிக் கட்சிக் காலம், இந்திய தேசிய காங்கிரஸ் காலம், திராவிடக் கழகங்களின் (திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) காலம் எனலாம். திராவிடக் கட்சிகளின் ஆணி வேராகத் திகழ்வது நீதிக் கட்சியாகும். இக்கட்சியின் ஆளுகை தொடங்கப்பட்டு (சட்டமன்றம் 17.12.1920 தொடங்கப்பட்டது இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீதிக் கட்சி முன்னெடுத்த செயல்பாடுகளை திராவிடக் கட்சிகள் ஏற்றது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் ஏற்று அதே வழியில் சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதன் வெளிப்பாடு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்சசி, தொழில் நுட்ப மேம்பாடு எனப் பல தளங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் இக்கட்டுறையின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டை ஆண்ட இம்மூன்று கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக் கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளிவிவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ் ஆய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள்

சென்னை மாகாணம் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் மொழிவாரிய மாநிங்கள் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்றது. நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு புதிய சென்னை மாகாணம் உருவானது. மாநிலத்தின் சிலபகுதிகள் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி பொன்ற மாநிலங்களுக்குச் சென்றது (Perumalswamy 1985). சென்னை மாகாணம் என்று இருந்ததை, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்ச்சியில் அமர்நததும் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் 14 ஜனவரி 1969 முதல் நடைமுறைக்கு வந்தது.

அட்டவணை 1: தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளும் முதலமைச்சர்களும்

கட்சிகள்

ஆண்டு

முதலமைச்சர்கள்

நீதிக் கட்சி

1920 முதல் 1937 முடிய

ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனங்கல் அரசர், பி.சுப்பராயன், பி. முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கராவ், பி.டி.ராஜன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

1937 முதல் 1967 முடிய

சி.ராஜகோபாலாச்சாரி, டங்குத்துரி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, கு.காமராஜ், எம்.பக்தவச்சலம்,

திராவிடக்
கட்சிகள்

1967 முதல் 2021 தற்போது வரை

சி.என்..அண்ணாதுரை, எம்.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்

ஆதாரம்: Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

நீதிக்கட்சி 17.12.1920 முதல் 14.07.1937 வரை 17 ஆண்டுகள் அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது. இதில் திரு.ஏ.சுப்ராயலு ரெட்டியார் தொடங்கி திரு. குமார வெங்கட்ட ரெட்டி நாயுடு வரை 7 முதலமைச்சர்கள் (தொடக்கத்தில் மாநிலப் பிரதமர் என அழைக்கப்பட்டனர்) ஆட்சி செலுத்தினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 14.07.1937 முதல் 06.03.1967 முதல் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது. இதில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி தொடங்கி, திரு. எம். பக்தவச்சலம் முடிய 6 முதலமைச்சர்கள் ஆட்ச்சி செய்தார்கள். திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு. காமராஜ் போன்ற திறன்மிக்க முதலமைச்சர்கள் இவர்களில் அடங்குவர்.

திராவிடக் கழகக் கட்சிகள் 06.03.1967 முதல் தற்போது வரை 54 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை தொடங்கி, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதலமைச்சராக இக்காலக்கட்டங்களில் ஆட்சியிலிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தொடர்கிறார். 1921 முதல் தற்போது வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

இக்காலகட்டங்களில் பல புகழ்மிக்க வல்லவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் கோலாச்சியவர்கள் பலர் அவர்களில் முக்கியமானவர்கள் எ. ராமசாமி முதலியார், எ. லட்சுமணசாமி முதலியார், சத்திய மூர்த்தி, சி.பி. ராமசாமி ஐயர், பி.டி. ராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கிருஷ்ணய்யர், சி.சுப்பரமணியம், ஆர்.வெங்கட்டராமன், கே.வினாயகம், இராமசாமி படையாச்சியார், வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், என்.சங்கரய்யா, நல்லக்கண்ணு, ஆர்.உமாநாத், குமரி ஆனந்தன், துரைமுருகன் இவர்களின் சட்டமன்றச் செயல்பாடுகள் தமிழக மேம்பாட்டிற்குப் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

சமூக மேம்பாடு – கல்வி, சுகாதாரம்

தமிழ்நாட்டில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3 விழுக்காடு பங்குகொண்ட சில முன்னேறிய வகுப்பினர் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் இதர பிரிவினர் பெருமளவிற்குக் கல்வி-வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர் அல்லாத கல்வி பெற்றவர்கள் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, பி.டி.தியாகராய செட்டியாரால் ‘தென்இந்திய நல உரிமைக் கூட்டமைப்பு’ 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இது பின்னால் ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது (Mohan Ram 1974). அன்றைய நிலையில் மக்கள் தொகையில் 3.2 விழுக்காடாக மட்டுமே இருந்த பிராமணர்கள், மொத்தமான 130 உதவி ஆட்சியாளர்களில் 77 பேர் இருந்தனர், அதாவது 55 விழுக்காடு ஆகும். இதுபோன்றே நீதித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் உயர்பதவிகளில் இவர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. 1920ல் சென்னை மாகாணத்தில் ஆட்சியினைப் பிடித்த நீதிக்கட்சி, தொடக்கக் கல்வி பெறுவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம் மெட்ராஸில் (ஆயிரம் விளக்கு பகுதியில்) 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, மாணவர்களுக்கான உறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டது, 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடக்கக் கல்வி கட்டாயம் என்றானது. இதனால் பெருமளவிற்குத் தொடக்கக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன, உயர்கல்வி பெறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் இயற்றப்பட்டது, ஆந்திரா பல்கலைக்கழகம் (1929ஆம் ஆண்டு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (1926ஆம் ஆண்டு) போன்றவை தொடங்கப்பட்டன. வேலைவாய்பில் பிராமணர் அல்லாதோர் பயனடையும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடு 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவு நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் 1921 மற்றும் 1941ஆம் ஆண்டுகளுக்கிடையே இரண்டுமடங்கு அதிகரித்தது. வேலைவாய்ப்பினை அனைத்துப் பிரிவினரும் பெற இந்தியாவிலேயே முதன்முதலாக அரசு தேர்வாணைக்குழு 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது (ஜெயராமன் 2021).

அடுத்து வந்த காங்கிரஸ் அதிக அளவில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் முதன்முதலாகத் தனிஒதுக்கீடு 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்து எழுந்தது. அதற்குத் தலைவணங்கிய ஒன்றி அரசு, 1950ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுப் பிற்படுத்தப்பட்டோரும் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளியினை அமைக்கத் திட்டமிட்டார். மதிய உணவுத்திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி பயில வழிவகை செய்தார். இதனால் 1951ஆம் ஆண்டு 16037 எண்ணிகையிலான ஆரம்பப் பள்ளிகள் 1967ஆம் ஆண்டு 33529 பள்ளிகளாக உயர்ந்தன. இதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1951ஆம் ஆண்டு 1852 மில்லியனிலிருந்து 1961ஆம் ஆண்டு 3558 மில்லியனாக உயர்தது. 1969ஆண்டு கணக்கின்படி 30663 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது இதனால் 18.32 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இலவசச் சீருடைத் திட்டம் இக்காலகட்டங்களில் தான் தொடங்கப்பட்டது. இது போன்றே உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

அட்டவணை 2: தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் கல்வியறிவும்.

ஆண்டு

மக்கள்தொகை (மில்லியன்)

கல்வியறிவு (%)

கல்வியறிவு வீதத்தின் மாற்றம்

1921

21.63

7.60

நீதிக் கட்சி

+  6.70 %

1931

23.47

11.30

1941

26.27

14.30

1951

30.12

20.00

இந்திய தேசிய காங்கிரஸ்

+  25.43 %

1961

33.69

31.47

1971

41.20

45.43

1981

48.14

54.39

திராவிடக் கட்சிகள்

         +  34.90 %

1991

55.86

62.66

2001

62.40

73.45

2011

72.15

80.33

ஆதாரம்: Government of India,  various  Population Census, Director of Census of India

1956-57ஆம் ஆண்டு 3 பல்கலைக் கழகங்கள், 56 கலைக்கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்) செயல்பட்டு வந்தன இதில் 42000 மாணவர்கள் பயின்றனர். 1968-69ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பயில வழிசெய்யப்பட்டது. 23 ஜனவரி 1968 முதல் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது இதன்படி தாய்மொழியுடன் ஆங்கிலம் அல்லது இந்திய மொழி அல்லாத ஒன்றைப் படிக்க வழிவகை செய்தது. இது தமிழகம் முழவதும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போரட்டங்கள் வெடித்தது. அன்றை ஒன்றிய அரசு இந்தி திணிப்பினைப் கைவிட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியானதால் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் தழிழர்கள் செல்லவும், அறிவினைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. இதன் விளைவு இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழர்கள் உலஅளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கில இணைப்பு மொழி தமிழர்களின் போராட்டத்தால் பெறப்பட்டதால் தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க உதவியது. இதனால் இன்று உலகில் பல நாடுகளிலும் இந்தியர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றனர்

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் சமூக உரிமை, நீதி மற்றும் மேம்பாடு; தலையானதாக இருந்து வருகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 69 விழுக்காடு முறையை நடைமுறைபடுத்தினர். நாட்டிலேயே முதல் முதலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் சரியான பங்கினைப் பெறமுடியாமல் போன சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்குத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக்காலங்களில் சமூக நீதியினை வலுவாக நிலைநாட்டியுள்ளது. மேலும்; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் நடைமுறைபடுத்த அழுத்தம் தரப்பட்டு 1992இல் நடைமுறைபடுத்தப்பட்டது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்கள் (இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவுத் திட்டம், இலவசப் பேருந்து பயணம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கட்டணச் சலுகைகள்) நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. 2017-18ஆம் ஆண்டின்படி உயர் கல்வி நிறுவனங்களின் (பொதுக் கல்வி) எண்ணிக்கை 1535ம், தொழில் நுட்பக் கல்லூரிகள் 580ம், தொடக்க, இடைநிலை கல்வி நிறுவனங்கள் 45161ம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 8312ம் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. (GoTN 2020). இந்தியாவில் அதிக அளவு கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் 50 விழுக்காடு அளவிற்கு உள்ளனர், தொடக்கக் கல்வியில் முழு அளவிலான மாணவர் சேர்க்கை, படிப்பைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படும் அளவு மிகக் குறைவாகவும் உள்ளது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை பெரிய அளவில் இயற்கை வளங்கள் இல்லை, ஆனால் மனிதவளம் அதிக அளவில் உள்ளது. கல்வி அறிவு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தற்போது தமிழ்நாடு திகழ்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் கல்வி நிலையினை அளவிட முடியும். அவ்வகையில் நீதிக் கட்சி காலத்தில் கல்விஅறிவு பெற்றவர்கள் அளவு 1921ஆம் ஆண்டு 7.6 விழுக்காடாக இருந்து 1941ஆம் ஆண்டு 14.30 விழுக்காடாக அதிகரித்தது, அதாவது 6.7 விழுக்காடு கூடுதலானது (அதாவது ஒரு 10 ஆண்டுக்குச் சராசரியாக 3.35 விழுக்காடு உயர்ந்துள்ளது). இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது 25.43 விழுக்காடு கூடுதலாக அதிகரித்து, 1971ஆம் ஆண்டு 45.43 விழுக்காடாக உயர்ந்தது (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சராசரியாக 8.47 விழுக்காடு உயர்ந்துள்ளது) மேலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இது 34.9 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடுதலாக அதிகரித்து. 2011ஆம் ஆண்டின்படி 80.33 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சாராசரியாக 8.72 விழுக்காடு உயர்ந்துள்ளது).

சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வது சுகாதாரமாகும். இவற்றின் வெளிப்பாடடை பல காரணிகளைக்கொண்டு (பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், கருவுறுதல் வீதம், பாதுகாப்பான மகப்பேறு வீதம்) அளவிட முடிந்தாளும் ஆயுள் எதிர்பார்ப்பு என்பது மூலம் அளவிடுவது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைக் காரணியாகக் கொள்ளமுடியும். இதன் பொருள் ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் ஆயுள் நீடிப்புடன் வாழமுடியும் என்பதாகும். இது, முழக்க சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பினைப் பொறுத்தது. நீதிக் கட்சிக் காலத்தில் ஆண்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு 1911-21ஆம் ஆண்டில் 19.75ஆண்டுகள் என்றிருந்தது. 1931-41ஆம் ஆண்டில் 36.22 ஆண்டுகளாக உயர்ந்தது இதுபோலவே, பெண்களின் வயது இவ்வாண்டுகளில் 24.33லிருந்து 36.17 ஆண்டுகளாக உயர்நதது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1941-51 மற்றும் 1961-71ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாக 16.47 ஆண்டுகள் ஆண்களுக்கும் 11.94 ஆண்டுகள் பெண்களுக்கும் அதிகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் 1961-71 மற்றும் 2013-17ஆம் ஆண்டுகளுக்கிடையே 22.4 ஆண்டுகள் ஆண்களுக்கும் 27.2 ஆண்டுகள் பெண்களுக்கும் கூடுதலாக ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதாவது 2013-17ஆம் ஆண்டுக் கணக்கின்படி 69..90 ஆண்டுகள் ஆணகளுக்கும் 73.70 ஆண்டுகள் பெண்களுக்கும் ஆயள் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு பெருமளவிற்கு ஆண்களைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்பபு, சுகாதாரப் பாதுகாப்பு. சுயதொழில் செய்ய உதவி, பெண்கள் சுய உதவிக் குழக்கள், பெண்குழந்தைகளைப் பாதுகாப்பது போன்ற சில முக்கிய திட்டங்கள் திராவிடக் கழகங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிடலாம். இது மட்டுமல்லாமல் சுகாதாரக் கட்டமைப்பை பெருமளவிற்கு வலுபடுத்தியதையும் குறிப்பிடலாம்.

அட்டவணை 2: தமிழ் நாட்டில் ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்)

ஆண்டு

ஆண்கள்

பெண்கள்

ஆண்கள்-மாற்றம்

பெண்கள்-மாற்றம்

1911-1921

19.75

24.23

நீதிக் கட்சிக் காலம்

16.47

நீதிக் கட்சிக் காலம்

11.94

1921-1931

28.71

30.94

1931-1941

36.22

36.17

1941-1951

35.03

37.23

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

11.28

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

10.33

1951-1961

41.09

39.24

1961-1971

47.50

46.50

1971-1981

52.50

51.90

திராவிடக் கட்சிகள் காலம்

22.40

திராவிடக் கட்சிகள் காலம்

27.20

1981-1991

57.40

58.50

1991-2001

63.80

66.70

2001-2011

67.60

71.40

2013-2017

69.90

73.70

Source: GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai .

நீதிக் கட்சிக் காலத்தில் நோய்த் தடுப்பு மற்றும் தொற்று நோயினைக் கட்டுப்படுத்த முதன்முதலாகப் பொது சுகாதாரத்துறை 1923ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு மாநிலத் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் (நுஅpடழலநநள’ ளுவயவந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn) கொண்டுவரப்பட்டது. 1966ஆம் ஆண்டு குடும்ப நலத்துறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1966ஆம் ஆண்டு 1249 அரசு சுகாதார மையங்களாக இருந்து 2017-18ஆம் ஆண்டு 11137 ஆக உயர்ந்துள்ளது (GoTN 2020). இதுபோலவே 1968ல் 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலை தற்போது 25 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் பெண்கல்வி, சமத்துவம் போன்றவற்றில் தமிழ்நாடு சிறப்பாக முன்னிலையில் உள்ளதற்கு அரசின் திட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், மகிளிருக்கென அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்றவை திராவிடக் கட்சிகளின் முக்கிய சமூகநலத் திட்டங்களாகும். இதன் விளைவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கருவுறுதல் வீதம் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவாக ஒரு தாய்க்கு 1.6 குழந்தைகள் என்று பதிவாகியுள்ளது, மருத்துவமனைகளில் சென்று தாய்மார்கள் பாதுகாப்புடன் குழந்தை பிரசவிக்கும் அளவு 99 விழுக்காடு ஆகும் (இந்திய அளவில் 78.9 விழுக்காடு), குழந்தை இறப்பு வீதம் 1000ம் குழந்தைகளுக்கு 21 (இந்திய அளவில் 42) எனப் பல நிலைகளில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் இயல்பாகவே எந்த உந்துதலும் இல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையினைத் தற்போது காணமுடிகிறது.

ஆட்டவணை 3: தமிழ்நாட்டின் சுகாதரா பாதுகாப்பின் வெளிப்பர்டு

குறியீடுகள்

அலகு

ஸ்ரீஆண்டு

1951

1971

2017

பிறப்பு வீதம் (CBR)

1000 மக்களுக்கு

19.1

(40.8)

31.4 (36.9)

14.9 (20.2)

,இறப்பு வீதம் (CDR)

1000 மக்களுக்கு

17.1 (25.1)

14.4 (14.9)

6.7

(6.3)

மொத்த கருவுருதல் வீதம் (TFR)

ஒரு பெண்ணிற்காகச் சாராசரி குழந்தை

NA

3.9

(5.2)

1.6

(2.4)

பேறுகால இறப்பு வீதம்

1 லட்சத்திற்கு

1050*

(1000)

450

(800)

63

(122)

பாதுகாப்பான மகப்பேறு

(Institutional Delivary)

விழுக்காடு

NA

82.8

(38.6)

99

(78.9)

குழந்தைகள் இறப்பு வீதம்

1000 குழந்தைகளுக்கு

120

(186.7)

113 (129)

21

(42)

Note: * 1965 as reference period; NA- Not Available

Source: Velappan 1986;  GoTN, Statistical Handbook 2019 and World Bank (https://data.worldbank.org).

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகள்

தொழில் துறையினை மேம்படுத்த, நீதிக் கட்சி ஆட்சியில் மாநிலத் தொழில் உதவிச் சட்டம் 1922ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்துஸ்த்தான் போட்டோ தொழிற்சாலை (உதகமண்டலம்), பல்நோக்கு மின்சாரம் தயாரித்தல், கல்பாக்கம் அனல் மின் நிலையம், சக்கரை ஆலைகள், நூற்பாலைகள், திருச்சி பாரத் கனரக மின் உற்பத்திபாக நிறுவனம்;, 22 தொழிற்பேட்டைகள் (கிண்டி, அம்பத்தூர், ஓசூர், திருச்சி, இராணிப்பேட்டை, விருதுநகர் உட்பட) தொடங்கப்பட்டன. கோயம்புத்தூரில் காட்டன் மற்றும் சர்க்கரைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கு மின்மோட்டார் பயன்படுத்துவது போன்றவை நடைமுறைபடுத்தப்பட்டன. இதன் விளைவு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அன்றைய நிலையில் மூன்றாம் இடத்தில் தொழில் துறை உற்பத்தியில் அங்கம் வகித்தது (Velappan 1986)..

வேளாண்மை வளர்ச்சிக்காகப் பவானி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிரு~;ணகிரி, பரம்பிக்குளம், வீடூர் போன்ற நீhத்;தேக்கங்கள் காங்கிரஸ் ஆட்ச்சியில் கட்டப்பட்டன. ஜமின்தார் ஒழிப்புச் சட்டம் நிரைவேற்றப்பட்டு 20 மில்லியன் குத்தகைதாரர்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், தமிழ்நாடு சிறுதொழில் கழகம், தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், என ஏராளமாகத் தொடங்கப்பட்டன. வேளாண்மையினை மேம்படுத்த இலவச மின்சாரம், நமக்கு நாமே, குடிமறாமரத்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம், உழவர் சந்தைகள் என வேளாண்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்ச்சிக் காலத்தில் 58.01 லட்சம் எக்டர் நிகர சாகுபடி பரப்பாக 1950-51இல் இருந்தது திராவிடக் கட்சிகளின் காலமான 2017-18இல் 46.38 லட்சம் எக்டராகக் குறைந்துள்ளது ஆனால் வேளாண்சாரா நிலப்பயன்பாடு 1961-61இல் 12.95 லட்சம் எக்டராக இருந்தது 2017-18இல் 22.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 1950-51இல் மொத்தப் பயிரிடும் பரப்பில் 50.9 விழுக்காடு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றது 2017-18இல் 57 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதோபோல் 1955-56இல் உணவு தானிய உற்பத்தி 40.88 லட்சம் டன்னாக இருந்தது 2017-18இல் 107.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. திராவிடக் கழகங்கள் ஆட்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாகப் பணப்பயிர் அதிகப் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண்சார் தொழில்களான பஞ்சாலை தொழிற்சாலைகள், சர்கரை ஆலைகள் அதிக அளவில் பல தமிழ்நாட்டின்; பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. 1960-61இல் 3000 சிறு தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில் 2017-18இல் 23.6 லட்சம் சிறு, நடுத்தரத் தொழில்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன்வழியாக அதிக அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் ஏற்றுமதியும் நடைபெறுகிறது (Perumalsamy, 1985; GoTN 2020).

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்பதில் தமிழ்நாடு முன்ணனியில் உள்ளதைத் தற்போதும் காண முடிகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையானது. உலகப் புகழ்பெற்ற ஹ_ண்டாய், ஃபோர்ட், ரெனோல்டு, பி.எம்.டபில்யு, அசோக் லைலேண்டு, டி.வி.எஸ் என மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை ‘இந்தியாவின் டெட்ராயிட்’ என அழைக்கப்படுகிறது.

இன்று இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் 11 விழுக்காடும், தொழில் நிறுவனங்களில் 17 விழுக்காடும், தொழில் துறை வேலைவாய்ப்பில் 16 விழுக்காடும், அந்நிய நேரடி முதலீட்டில் 6 விழுக்காடு பங்குகளைத் தற்போது பெற்றுள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டில் முன்னியில் இருப்பதற்கு மற்றொரு காரணம் இயற்கையாகவே நீண்ட கடற்கரையைப் (1076 கி.மீ) பெற்றுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் 3 (சென்னை, தூத்க்குடி, எண்ணூர்) தமிழ்நாட்டில் உள்ளது, பன்னாட்டு விமான நிலையங்கள் 4 உள்ளது. சாலை-இரயில் போக்குவரத்து நாட்டின் பல பகுதிகளையும் நேரடியான இணைப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதையும் குறிப்படலாம். இன்று திருப்பூர் (பின்னலாடை), சென்னை (வாகன உற்பத்தி), கோயம்புத்தூர் (மோட்டர் உற்பத்தி), மதுரை (வாகன உதிரி பாகங்கள்), திருச்சி (வேளாண்சார் மதிப்புக் கூட்டல் உற்பத்தி), சிவகாசி (பட்டாசு) போன்ற நகரங்கள் உலக அளவில் தொழில் துறைகளில் குறிப்பிடும் இடத்தை பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் நகரமயமாதலில் முதன்மையானதாகும் (49 விழுக்காடு அளவில் மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்). இதனால் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அதிக அளவில் ஒட்டுமொத்த மாநிலப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இயற்கைவள ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனால் மனிதவள ஆதாரங்கள் அதிகம் குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் பின்பற்றும் இருமொழிக்கொள்கையின் விளைவு, தொழில் நுட்ப மேம்பாட்டில் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்குகிறது. உலக அளவிலும் பல வல்லுநர்களை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியான சேவைத்துறையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டெட், வங்கித்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவம், காப்பீடு, சுற்றுலா, போன்றவற்றின்; தலைசிறந்து விளங்குகிறது. சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவத்திற்கான மையமாகத் திகழ்கிறது.

துறைவாரியான மேம்பாடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

வரைபடம் 1: தமிழ்நாட்டின் துறைவரியான பங்களிப்பு- 1960-61 மற்றும் 2017-18 ஒப்பீடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

ஆதாரம்: Tamil Nadu An Economic Appraisal and Tamil Nadu Statistical Hand Book 2019.

பொருளாதார மேம்பாட்டினைத் துறைவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கழகங்களின் ஆட்சிகளை ஒப்பிடும் போது வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையின் ஒட்டுமொத்த மாநில மொத்த வருவாயில் 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாகப் பங்களிப்பு இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலமான 2017-18ஆம் ஆண்டு உள்ள ஆண்டுகளில் 12 விழுக்காடு பங்களிப்பாகக் குறைந்துள்ளது (இந்திய அளவில் தற்போது 15.3 விழுக்காடு), தொழில் துறையினை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 விழுக்காட்டிலிருந்த பங்களிப்பு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 36 விழுக்காடாக இதே காலகட்டங்களில் அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 30.5 விழுக்காடு), இதுபோன்று சேவைத்துறை 31 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 54.2 விழுக்காடு) (Rajkumar et al, EPW, 12.07.2021). காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1960-61ல் ரூ.330ஆக இருந்த தலா வருமானம் 1970-71ஆம் ஆண்டு ரூ. 581ஆக அதிகரித்தது. இது தற்போது ரூ.138805 என 2018-19ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மொத்த மாநில வருவாயில் தலா வருமானம் 1960-61 மற்றும் 1970-71ல் 5.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருமடங்காக 11.82 விழுக்காடாக 1980-81 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அட்டவணை 4: தமிழ்நாட்டின் தலா வருமானப் போக்கு (நிலையான விலையில்)

ஆண்டு

தலா வருமானம் (ரூ.)

சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் (%)

1960-61

      330

இந்திய தேசிய காங்கிரசு காலம் 5.81

1970-71

      581

1980-81

    1269

திராவிடக் கட்சிகளின் காலம் 11.82

1990-91

    2275

2000-01

    53507

2010-11

    78473

2018-19

  138805

ஆதாரம்: Compailed from various Tamil Nadu Statistical Hand Book, published by Government of Tamil Nadu.

வறுமை ஒழிப்பு

ஒட்டுமொத்தப் பார்வையில் நீதிக் கட்சியானது பல்வேறு எதிர்புகளுக்கிடையே சமூகச் சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகப் பல திட்டங்களைக் குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தித் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு அடிகோலியது. அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தினையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக-பொருளாதார தளங்களின் தங்களின் சித்தாந்தை நடைமுறைபடுத்தியது, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என அனைத்திலும் தடம்பதித்துள்ளது. இதன் விளைவு இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் அதிகஅளவில் குறைத்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் 1957-58ஆம் ஆண்டு 67.8 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டு 15.80 விழுக்காடாகக் குறைந்துள்ளது அதாவது 1973-74 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் வறுமை 41.63 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. நகர்புறங்களில் 1973-74இல் 49.4 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளனர் இது 2011-12ஆம் ஆண்டு 6.50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது, உணவுப் பாதுகாப்பு (குறிப்பாக மதிய உணவுதிட்டம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து), முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களைத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்தியதைக் குறிப்பிடலாம். இவற்றின் ஒட்டு மொத்த விளைவு கிராம-நகர, ஆண்-பெண், வட்டாரங்களுக்கிடையேவும்,  சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வின் இடைவெளி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

அட்டவணை 5: தமிழ்நாட்டில் வறுமை வீதம் (விழுக்காடு)

ஆண்டு

கிராமப்புறம்

நகர்புறம்

மொத்தம்

% குறைந்து

1957-58

67.8

1963-64

52.0

1973-74

57.4

49.4

54.6

1977-78

57.7

48.7

54.8

0.15

1983-84

54.0

47.0

51.7

3.13

1987-88

45.8

38.6

43.4

8.27

1993-94

32.5

39.8

35.0

8.36

1999-00

20.6

22.1

21.1

13.9

2004-05

22.8

22.2

22.5

-1.40

2011-12

15.8

6.5

11.2

11.30

1973-74 & 2011-12 , இடையே குறைநத அளவு

41.6

42.9

43.4

ஆதாரம்: Shanmugam, 2012 and  C.Rangarajan 2014.

முடிவுரை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின் நிலையினை மதிப்பிடுவது சரியாக இருக்காது சமூகக் கூறுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று பல பொருளியல் அறிஞர்கள் அன்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே சமூக, பொருளாதாரம் உள்ளடக்கிய கூறுகளான கல்வி, சுகாதாரம், தலாவருமானம் ஆகியவற்றின் வெளிப்பாடான மனிதவள மேம்மபாட்டுக் குறியீட்டை ஐக்கிய நாடுகளின் சபை 1990ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியிட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டெண்ணில் தமிழ்நாடு 1981இல் 0.343 புள்ளியில் இருந்தது 2019ஆம் ஆண்டு 0.709 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய மாநிங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தமிழ்நாடு சமூக-பொருளாதார நிலைகளில் முன்னேடியாக இருப்பதற்குக் காரணம் சமூகச் நீதி, சமூகச் சீர்திருத்தங்கள் எனத் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படுவதே ஆகும். இதன் விளைவு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் தமிழ்நாடு பயணித்துக்கொண்டுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு பல நிலைகளில் ஒரு மாதிரிமாநிலமாக தற்போது இருப்பதற்குக் காரணம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல் வழியாக அவற்றை நடைமுறைப் படுத்தியதே ஆகும். இவை ஒருபுறம் இருந்தாலும் இந்தியவிற்கே முன்னேடியாக மதிய உணவுத் திட்டம், இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பொதுவிநியோகம், அனைவருக்குமான கல்வி, சுகாதாரம் திகழ்ந்தாலும் பல உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக்கொண்ட நிலையினைத் தற்போது காண முடிகிறது. முக்கியமாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு முழுமையாகக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. நோபல் பரிசுபெற்ற பேரா. அமர்த்தியா சென் தன்னுடைய புத்தமான Development as Freedom என்பதில் தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘சுகாதாரப் பாதுகாப்பின் வெளிப்பாட்டினில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ளது’ என்கிறார். An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் தமிழ்நாடு சமூக மேம்பாட்டில் உயர்ந்து இருப்பதால் வறுமை ஒழிப்பு, சமத்துவம் போன்றவற்றில் இந்திய அளவில் உயர்ந்து நிற்கின்ற மாநிலம் என்கிறார்.

முக்கிய சொற்கள்: சமூக-பொருளாதாரம், சமூக நீதி, சுகாதாரம், கல்வி, வறுமை
————————-

முனைவர் பு. அன்பழகன்
இணைப்பேராசிரியர், பொருளியல் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை-5

 

முந்தைய  பொருளாதார கட்டுரைகளை படிக்க கிளிக் செய்க: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

பொருளாதார கட்டுரை 3: வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

பொருளாதார கட்டுரை 4: கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 5: இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 6: பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்

References

Balasubramanian T and K Ayyanar (2020): “Socio-Economic Treands in Tamil Nadu After Independence,” Aegaeum, Vol.8, No.14, pp 1621-1630.

Business Standard (2016): “Tamil Nadu lost due to Bifurcation of Madras: Ramadoss”, 31.10.2016, https://www.business-standard.com/article/news-ians/tamil-nadu-lost-due-to-bifurcation-of-madras-ramadoss-116103101264_1.html\

GoI (2005),”Tamil Development Report,” Planning Commission, Government of India, New Delhi.

GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai

Government of Tamil Nadu (2003): “Tamil Nadu Human Development Report,” New Delhi, Social Science Press.

https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php

Mohan Ram (1974): “Ramaswami Naicker and the Dravidan Movement,” Economic and Political Weekly, Vol.9, No.6/8, pp.217-224.

ஜேயராமன், கோவி (2021): “ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,” பெண்ணைப் பதிப்பகம், கடலூர்.

Pallavi Roy (2011): “Tamil Nadu: Growth in the Time of Clientelism,” Working Paper, SOAS-AFD Research Project, Paris (http://eprints.soas.ac.uk/22131/).

Permalsamy S (1985): “Economic Development of Tamil Nadu,” S.Chand & Company Ltd., New Delhi.

Perumal C A and V K Padmanabhan (1987): “Political Alliances in Tamil Nadu,” The Indian Journal of Political Science, Vol 48, No 4, pp 618-624.

Rajaraman K R (1970): “Tamil Nadu State Administration Report 1968-69,” Government of Tamil Nadu.

Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

Rangarajan C (2014): “Report of the Expert Group to Review the Methodology for measurement of Poverty,” Planning Commission, Government of India.

Shanmugam, K.R (2012): “Monitorable Indicators and Performance: Tamil Nadu,” Madras School of Economics, Chennai.

Thamari Manalan (2018): “Role of Justice Party in Tamil Nadu Politics,” JETIR, Vol.5. Issue 5.

Velappan (1986): “Ecnomic Development of Tamil Nadu,” Emeral Publisher, Madras.

William Joe, Suresh Sharma, Jyotsna Sharma, Y Manasa Shanta, Mala Ramanathan, Udaya Shankar Mishra and B.Subha Sri (2015): “Maternal Mortality in India: A Review of Trends and Patterns,” IEG Working Paper No. 353.

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

தமிழ்நாடு மாநில நிதி நிலைமை : வெள்ளை அறிக்கையும் பட்ஜெட்டும் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா



மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்திமுக அரசு அமைந்த உடன் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் அரசாங்க நிதி குறித்த உண்மையான நிலைமையை சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களும் புரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று பொதுவெளியில் அரசால் வைக்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியானது மாநில பட்ஜெட்டைஆகஸ்ட் 13 அன்று சட்டமன்றத்தில் தாக்கல்செய்வதற்கு முன்பாக ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய விவரங்கள்

நிதியமைச்சரின் அந்த வெள்ளை அறிக்கை 2006-07 மற்றும் 2020-2021க்கு இடையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமையின் போக்குகளை ஆராய்வதாக இருந்தது. குறிப்பிடப்பட்ட அந்தக் காலகட்டத்தில் 2006 முதல் 2011வரையிலும் திமுக ஆட்சியில் இருந்தது.2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தது. 2011 முதல் 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறையும் வரையில் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். மாநில நிதி மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த வெள்ளை அறிக்கையில் 2006-2011 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2011-2021 காலகட்டத்தில் மாநிலஅரசின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் வருவாய் வரவுகள் (மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஒன்றிய அரசிலிருந்து கிடைக்கும் நிதி மற்றும் மாநில அரசின் வரி அல்லாத வருவாய் ஆகியவற்றால் ஆனது) மற்றும் வருவாய் செலவுகளுக்கு (சொத்துகளை உருவாக்காத செலவுகள்) இடையிலான வித்தியாசமாக இருக்கின்ற வருவாய் பற்றாக்குறை முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) அடிப்படையிலும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே வந்திருப்பதாக இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013-14இல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.18 சதவிகிதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2019-20இல் 1.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் ஆண்டான 2020-21இல் அந்தப் பற்றாக்குறை 3.16 சதவிகிதமாக மேலும் அதிகரித்தது. இந்த எண்களின் அடிப்படையில் தமிழ்நாடு நீடித்திட முடியாத நிதி நிலைமையில் இருப்பதாக வெள்ளை அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

கேள்விக்கு உள்ளாக்கப்படாதது

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்த அளவுகளை முன்னிலைப்படுத்தி அதே முடிவையே வெள்ளை அறிக்கை எட்டியிருக்கிறது. இருந்த போதிலும் தேசிய அளவில் உள்ள நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் தர்க்கம், அந்தச் சட்டம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் இருக்க வேண்டிய நிதி பற்றாக்குறையின் அளவு குறித்து முன்வைக்கின்ற கட்டுப்பாடுகள் இந்த வெள்ளை அறிக்கையில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கடன் வாங்குவதன் மூலம் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிலும் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் வேகமாக அதிகரித்திருப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. 2006-07, 2010-11க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கக் கடனுக்கு இருந்த விகிதம் நிலையாக இருந்தது. அதாவது 2006-07இல் இருந்த 18.37 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 2010-11இல் 16.68 சதவிகிதம் என்று குறைந்தது. 2011-12 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்திலும் அந்த விகிதம் நிலையாகவே இருந்தது. 2011-12 இல் 15.36 சதவிகிதம் என்று குறைவாகவும், 2015-16இல் 17.94 சதவிகிதம் என்று அதிகமாகவும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 2016-17இல் 20.83 சதவிகிதம், 2020-21க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 24.98 சதவிகிதம், கடந்த பிப்ரவரியில் முந்தைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22க்கான இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 26.69 சதவிகிதம் என்று அது அதிகரித்துள்ளது.

வருவாய் வரவு குறைவு

2008-09இல் 13.35 சதவிகிதமாக இருந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநில அரசின் வருவாய் வரவு 2015-16இல் 11 சதவிகிதத்திற்கு கீழே சரிந்தது. அது 2020-21இல் 8.70 சதவிகிதம் என்ற அளவிற்கு மேலும் குறைந்து விட்டது. 2016-2021 காலகட்டத்தில் சராசரியாக அது பத்துசதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநிலத்தின் சொந்த வரிவருவாய் (SOTR) 2013-14ல் 8.4 சதவிகிதத்தில் இருந்து 2019-20இல் 5.8 சதவிகிதம்,2020-21இல் 5.4 சதவிகிதம் என்று குறைந்துள்ளதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வரி அல்லாத வருவாயும் குறைந்திருப்பதை வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் 1.02 சதவிகிதம் என்றிருந்த அந்தவிகிதம் 2011 மற்றும் 2016க்கு இடையில் 0.81 சதவிகிதம் எனவும், 2016 மற்றும் 2021க்குஇடையில் 0.71 சதவிகிதம் என்றும் குறைந்தது.

மாநில வருவாயின் மற்றொரு முக்கிய ஆதாரமாக மத்திய வரிகளில் இருந்து கிடைக்கின்ற மாநிலத்திற்கான பங்கு இருக்கிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கிட்டத்தட்ட 1.95 சதவிகிதமாக இருந்த அந்த மாநிலப் பங்கு 1.67 சதவிகிதமாக குறைந்துள்ளது. வருவாய் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2006 முதல் 2021 வரையிலான ஒட்டுமொத்த காலத்திற்கும் ஆண்டிற்கு 12.71 சதவிகிதம் என்றிருந்த வருவாய் செலவினங்களின் வளர்ச்சி விகிதம் வருவாய் வரவில் இருந்த 9.92 சதவிகித வளர்ச்சியை விடக் கூடுதலாகவே இருந்துள்ளது. விளைவாக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வருவாய் பற்றாக்குறையின் விகிதம் அதிகரித்தது.

செஸ், கூடுதல் கட்டண விகிதம் அதிகரிப்பு

இந்திய அரசால் விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதது என்பதை வெள்ளை அறிக்கை மிகச் சரியாகவே சுட்டிக் காட்டுகிறது. 2011-12இல் 10.4சதவிகிதமாக இருந்த செஸ் மற்றும் கூடுதல்கட்டண விகிதம் 2019-20-க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 20.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவையாகும். தமிழ்நாட்டுக்கான மத்திய பங்களிப்பில் மானிய உதவியின் பங்கு அதிகரித்து வருவதையும், அது நிதி மற்றும் கொள்கை குறித்து மாநில அரசின் தன்னாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்முறையாக இருப்பதுகுறித்தும் வெள்ளை அறிக்கை கவனத்தைஈர்க்கிறது. மாநில அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை ஒன்றிய அரசு செலுத்தத் தவறியிருப்பது பற்றியும் வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

2008-09இல் ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் பற்றி உள்ள குறிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச காரணிகளும் கூட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. ‘தேசிய அளவில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியது. அவசர அவசரமாக ஜிஎஸ்டியை ஏற்றுக் கொண்டதால் அந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்தது…’ என்று மிகச்சரியாக வெள்ளை அறிக்கை கூறுகிறது என்றாலும் அது அதிக ஆதாரங்களை வழங்கிடாமல் ‘நிதி ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்தின் போதாமை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, இந்தியாவின் பிற பணக்கார மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது பொருளாதார மற்றும் வளர்ச்சிவீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது’ என்று முடிகிறது. மேலும் ‘இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தரவுகளில் இருந்து நமது தற்போதைய குறிப்பாககடந்த ஏழு ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை சரியான நிர்வாகத்தின் போதாமையின் விளைவாகவே இருப்பது தெளிவாகிறது’ என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
புதிய தாராளமய அழுத்தங்களை எதிர்க்க வேண்டும்

‘இனிமேலும் வழக்கம் போல் நம்மால் தொடர முடியாது, கடன் மற்றும் வட்டி செலவுகளை அதிகரிக்கும் மோசமான சுழற்சியிலிருந்து நாம் வெளியேற வேண்டுமானால் அடிப்படையில் நமது அணுகுமுறை மாற வேண்டும். மறுபுறத்தில் இது ஒரு தலைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவும் உள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்’ என்று வெள்ளை அறிக்கை அறிவிக்கின்றது.

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

வெள்ளை அறிக்கையில் உள்ள இந்த அறிவிப்பு மிக எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். பெருநிறுவன ஊடகங்களிடம் அதிரடியான புதிய தாராளவாத சீர்திருத்தங்களுக்கான அழைப்பு இந்த வெள்ளை அறிக்கையில் இருப்பதாக முன்னிறுத்துகின்ற ஒருங்கிணைந்த முயற்சி இருந்தது. அவர்களுடைய பல்லவி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாநில நிதி நிலைமை குறித்து கிடைக்கக்கூடிய தகவல்களை ஒருங்கிணைப்பதில் வெள்ளை அறிக்கை பயனுள்ள பணியைச் செய்திருக்கிறது. வெளிப்படைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு, தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து பொது விவாதத்தை ஊக்குவிப்பதில் அதற்கிருக்கும் விருப்பம் போன்றவை உண்மையில் பாராட்டத்தக்கவையாகும். இருந்தபோதிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவான, திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்காமல் இந்த வெள்ளை அறிக்கை தவிர்த்திருப்பதை எவராலும் உணர முடியும். நிதி அடிப்படைவாதமும், நிதி பற்றாக்குறையைக் குறைப்பதற்கான புதிய தாராள மனப்பான்மையும் அதில் இருப்பதாகவே தெரிகிறது.இந்த வெள்ளை அறிக்கை நிதிபொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் குறித்து விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.

மாநில அரசுகளின் நிதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒன்றியஅரசின் நகர்வுகள் மீது கூர்மையான விமர்சனத்தை அறிக்கை முன்வைக்கவில்லை. ஒன்றிய அரசின் இது போன்ற சில நகர்வுகளை மாற்றியமைக்கும் வகையில் மாநில நிதியை மேம்படுத்துவதில் ஒத்த எண்ணம் கொண்ட மாநில அரசுகளுடனான கூட்டுநடவடிக்கைகளுக்கான திறன், சாத்தியக்கூறுகள் போன்றவற்றை இந்த அறிக்கை முன்னிறுத்திடவில்லை. மாநில, ஒன்றியஅரசுகளால் பெருநிறுவனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஏராளமான சலுகைகளை மதிப்பீடு செய்கின்ற பொறுப்பை வெள்ளை அறிக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெருநிறுவனங்களின் அனுமானிக்கப்பட்ட மற்றும் உண்மையான மதிப்பு, அவற்றின் முதலீடுகளுக்காகஅளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் நிச்சயமாக மாநில நிதி நிலைமை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கின்றன!

எதிர்வினை பற்றி…

கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஊழலை ஒழிப்பது, தூய்மையான நிர்வாகம், போதுமான தொழில்நுட்பம், சந்தைப்படுத்தலுக்கான உதவிகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாநில பொதுத்துறையில் இழப்பை உருவாக்கி வருகின்ற தொழிற்சாலைகளை மீட்டெடுப்பதற்கான சாத்தியம் இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. வெள்ளை அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் சில சிக்கல்களைக் கையாளும் போது கலப்பு மானியக் கொள்கை மற்றும் சமூக நோக்கங்களைக் கருத்தில் கொண்டு வணிக லாபத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களை மதிப்பீடு செய்யமுடியாது என்பதை அங்கீகரிப்பது என்பவைகுறித்து மாநில அரசு மேற்கொள்ளப் போகும் எதிர்வினை பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் கடன் மற்றும் வருவாய்பற்றாக்குறை குறித்த பிரச்சனைகள் பரந்தகண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

வெள்ளை அறிக்கையில் உள்ள எண்களைப் பார்க்கும் ஒருவர் 2020-2021க்கான புள்ளிவிவரங்கள் மட்டுமே (குறைந்த அளவில் 2019-20க்கான எண்கள்) முந்தைய ஆண்டுகளுக்கான எண்களுடன் பொருந்தவில்லை என்பதைக் காண முடியும். நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின்அடிப்படையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான விகிதத்தை தனித்துப் பார்க்க முடியாது. நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் பொதுச் செலவுகளுக்கு பணக்காரர்களிடமிருந்து வளங்கள் திரட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வளத்தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தங்களுடைய ஊதியம் மற்றும் வருமானமாகப் பெற்று வருகின்ற உழைக்கும் மக்கள் கணிசமான மறைமுக வரிகளைச் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நிதி உறவுகளின் தன்மையால் மாநில அரசுகள் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களாலேயே அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற யதார்த்தங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றாலும் கண்டிப்பாக சரணடைந்து விடத் தேவையில்லை. நியாயமற்ற, சமமற்ற விநியோகத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் பணியையும் மறந்து விடக் கூடாது!

தமிழ்நாடு பட்ஜெட்

பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13 அன்று மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அது நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கு இருப்பதைத் தக்க வைத்துக் கொள்கின்ற நடவடிக்கையாகவே இருந்தது. வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும் என்ற கடுமையான புதிய தாராளவாத கோரிக்கைகளுக்கு அடிபணியாதது, அனைத்து சமூகநல நடவடிக்கைகளுக்கும் எதிரானதாக உள்ள தாராளவாத சாப வார்த்தையான ‘ஜனரஞ்சகத்திற்கு’ முற்றுப்புள்ளி வைத்திருப்பது என்று அது குறிப்பிடத்தக்க பட்ஜெட்டாகவே இருக்கிறது. பெட்ரோல் மீதான மாநில வரிகளைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலையைலிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்திருப்பது பட்ஜெட்டின் மிகவும் முக்கியமான அம்சமாகும். நிதிச் சிக்கல்களை அரசு எதிர்கொண்டு வரும் நிலைமையில் இது மிகவும் தைரியமான நடவடிக்கையாகும். இந்தநடவடிக்கை மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். முக்கியமான பிரச்சனையில் ஒன்றிய அரசை அது பின்னுக்குத் தள்ளும்.இதற்கு அப்பால் வெள்ளை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளை ஆராயும்சில குழுக்களை உருவாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பாதி ஆண்டிற்கானதாக இருக்கின்ற இந்தவரவு செலவுத் திட்டத்தில் இன்னும் கூடுதலாகச் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிச்சயம் நிதியமைச்சர் உணர்ந்திருக்க மாட்டார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக தனியாக முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் நெல், கரும்பிற்கான குறைந்தபட்ச ஆதார விலையில் அறிவிக்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான அதிகரிப்பு, அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்கான பல பரிந்துரைகள் கவனிக்கப்படாமை ஏமாற்றத்தையே அளிக்கின்றன. கிராமப்புறப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு ஆதரவான எந்தவொரு குறிப்பு அல்லது நடவடிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமே அளிக்கின்றது.

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா
பீப்பிள்ஸ் டெமாக்ரசி 2021 ஆகஸ்ட் 22
தமிழில்: தா.சந்திரகுரு

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்



இந்திய மாநிலங்களில் வேளாண்மைக்காக தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிற மாநிலங்களில் கர்நாடாக, ஆந்திர பிரதேசம் ஆகும். தற்போது இந்த ஆண்டு தமிழ்நாடு இப்பட்டியலில் இணைகிறது. வேளாண்மை மனிதர்களின் தொன்மையான தொழிலாகும். தொழில் வளாச்சியினால் வேளாண்மை பின்னுக்கு தள்ளப்பட்டு அதனைச் சார்ந்து வாழ்கிற பெருமளவிலான மக்கள் துயர்களுக்கு ஆளாகிவருகின்றனர். வேளாண் விளைபொருட்கள் அனைத்துமே நுகர்வினை நிறைவு செய்யக்கூடியது, எப்போதுமே அதன் தேவைகள் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கும். அண்மைக்காலமாக இத்துறை பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. எனவே இவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு தொழில்துறையில் முனனேறிய மாநிலங்களில் ஒன்று, துறைவாரியாகப் பார்த்தால் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 2017-18ஆம் ஆண்டில் வேளாண்மை 12 விழுக்காடு (இந்திய அளவில் 17விழுக்காடு) பங்ளிப்புடன் மூன்றாம் நிலையில் உள்ளது. ஆனால் 28.7 விழுக்காடு மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர். இந்திய அளவில் இது 43.7 விழுக்காடாகும் (PLFS 2019-20).

தமிழ்நாடு மக்கள் தொகை அளவில் இந்தியாவின் 6வது பெரிய மாநிலமாகும். 1953-54ஆம் ஆண்டில் 61.5 லட்சம் வேளாண் நிலஉடமையாளர்களாக இருந்தவர்கள். 2015-16ஆம் ஆண்டு 79.38 லட்சமாக அதிகரித்துள்ளனர். ஆனால் இவர்களின் நிலஉடமை பரப்பு இவ்வாண்டுகளில் 66.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 59.71 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. வேளாண் நில உடைமையாளர்களில் குறு, சிறு விவசாயிகள் பெரும் பங்கினை வகிக்கின்றனர். 1950-53இல் 51.4 விழுக்காடாக இருந்த குறு, சிறு விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டு 73.43ஆக அதிகரித்துள்ளனர். குறிப்பாக குறு விவசாயிகள் (1 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்கள்) 19.26 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளனர். அதே சமயம் நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் அதிக அளவில் குறைந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்போது நிலபிரிவுக்கு உட்படுவதாகும். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1950களில் 43.52 விழுக்காடு (56.38 லட்சம் ஹெக்டேர்) வேளாண் சாகுபடி பரப்பாக இருந்தது 2019-20இல் 36.35 விழுக்காடாக (47.38 லட்சம் ஹெக்டேர்) குறைந்துள்ளது. அதாவது 3.86 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இது இந்திய அளவில் ஒப்பிடும்போது நிகர சாகுபடி பரப்பு சுமார் 9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்த சாகுபடி பரப்பும் தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் குறைந்துள்ளது. ஆனால் வேளாண்சாரா நிலப் பயண்பாடு மொத்த நிலபரப்பில் 1950களில் 9.80 விழுக்காடாக இருந்தது 2019-20இல் 20.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது அதாவது 10 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வேளாண் விவசாயக் குடும்பங்களின் வருமானம் 2016-17ஆம் ஆண்டின்படி ரூ.9775 ஆகும் இது இந்திய அளவில் ரூ.8931 (NABARD – All India Rural Financial Inclusion Survey 2016-17).

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்நாட்டில் வேளாண்மையின் முக்கியத்துவம் குறைந்து பெருமளவிற்கு வோளண்சாரா தொழில்கள் பெருகியுள்ளது என்பது அறியப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வேளாண் சாகுபடி பருவ மழையினை சார்ந்துள்ளது. வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழையினால் பெருமளவிற்கு பயன்பெருகிறது. மழை பல ஆண்டுகளில் தேவைக்கு குறைவாக உள்ளதால் கிணற்று பாசனத்தை நம்பி வாழவேண்டிய நிலைக்கு உள்ளாகிறது. 2019-20ஆம் ஆண்டின்படி கிணற்றுப் பாசனம் 62.48 விழுக்காட்டு அளவிற்கு நீர்பாசன பங்கினைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அரசு எடுத்து முயற்சி காரணமாக வேளாண் நீர்பாசன பரப்பு சற்றே அதிகரித்துள்ளது. 1960-61இல் 32.35 லட்சம் ஹெக்டேராக இருந்த நீர்பாசன வேளாண் நிலபரப்பு 2019-20இல் 34.10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் அன்மைக் காலமாக வேளாண் இடுபொருட்களின் விலைகள் குறிப்பாக தொழிலாளர் கூலி, வேளாண் இயந்திரங்கள் வாடகை, விதை, உரங்கள் விலைகள் கடுமையாக அதிகரித்ததால் வேளாண்மையிலிருந்து திரும்பப் பெரும் வருமானம் குறைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை அனைத்து வேளாண் விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்தி பெருட்களுக்கும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்திக்கின்றனர். மேலும் வேளாண் பொருட்களை சந்தைப் படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 26 வேளாண் சந்தை கமிட்டியின் கீழ் 282 முறைப்படுத்தப்பட்ட வேளாண் சந்தைகள் இயங்குகிறது ஆனால் இங்கு கொண்டு செல்லப்படும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை அளிப்பதில்லை. அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் மையங்களில் மட்டுமே இவ்விலை உறுதி செய்யப்படுகிறது. எனவே வேளாண் விவசாயிகளின் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில் பாரபட்சம் நிலவுகிறது. மின்-சந்தை இணைப்பினை ஒழுங்கு முறை வேளாண்மை விற்பனைக் கூடம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதன் பயன் சென்றடையவில்லை. இதனால் வேளாண்மை ஒரு லாபகரமாக தொழிலாக இல்லை என்பதால் அதிக அளவிலான வேளாண் விவசாயிகள் வேளாண்சார தொழிலினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த தொழில்களின் பங்களிப்பு 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாக இருந்தது 2017-18ஆம் ஆண்டு 12 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த சரிந்துவரும் நிலையினை போக்கவும் வேளாண்துறை எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கவும் இத்துறைக்கென தனியான நிதிநிலை அறிக்கை தேவை என்பதை உணர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையினை முதல் முறையாக தற்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam
முதல்வர் ஸ்டாலின் உடன் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

நீர்வளத்தினை வளர்த்தெடுப்பது, சரிந்துவரும் சாகுபடிபரப்பினை அதிகரித்தல், வேளாண்பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, வேளாண்மையிலிருந்து வேளியேறுபவர்களை தடுப்பது, இளைஞர்களை அதிக அளவில் வேளாண்சார் தொழில்களில் ஈர்ப்பது, லாபமுடைய தொழிலாக வேளாண்மையினை மாற்றுவது போன்றவைகளை முன்னிருத்தி தமிழ்நாட்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடையும் தருனத்தில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த நிதிநிலை அறிக்கையினை வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்துள்ளார். இவ்வேளாண்மை நிதிநிலை அறிக்கை 16 வேளாண் மேம்பாட்டு திட்டங்களை (கிராம அளவிலான வேளாண் தொகுப்பு திட்டம், மானவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, சிறு குறு விவசாய ஒருங்கினைப்பு கூட்டுப்பண்ணை, ஒருங்கினைந்த பண்ணை மூலம்வேளாண் வருவாயினை உயர்த்துதல், செட்டுநீர் தெளிப்பு நீர் பாசனத்தை விரிவு படுத்துதல், பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை பரவலாக்குதல், வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம், விவசாயிகளை வேளாண் வணிகராக்குதல், வேளாண் தொழில்நுட்ப மேம்பாடு, வேளாண்மை இயந்திரமயமாக்கல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டல், பாதுகாக்கப்பட்ட சூழலில் மலர், காய்கறி உற்பத்தி, குறு தானியங்கள், காய்கறி பழங்களுக்கு உகந்த விலை) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை நடைமுறைபடுத்த ரூ.34220.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முதன்மை நோக்கம் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர்செய்து நிகரசாகுபடி பரப்பினை உயர்த்துதல், தரிசு நிலங்களை பயிரிடும் நிலங்களாக மாற்றுதல், இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குதல், குறுகியகால சிறுதானியப் பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, கீரை வகைகளை பயிர்செய்ய நடவடிக்கை எடுத்தல். உணவு தானியம், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களை விளைவித்து இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் வரும் காலங்களில் இடம்பெறச் செய்தலாகும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்சசியினை உருவாக்க அனைத்து துறைககளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால் ஒட்டுமொத்த கிராமங்களும் வளர்ச்சியடைந்து தன்னிறைவினைப் பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வெரு ஆண்டும் ஐந்தில் ஒரு கிராமப் பஞ்சாயத்தை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பினை 75 விழுக்காடாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் 19.3 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளது இதில் 11.75 லட்சம் தரிசு நிலங்களை நீர்வள ஆதராங்களை (குறிப்பாக நுண்ணீர் பாசனம்) பெருக்கி சூரிய சக்தி பயன்படுத்தி பம்பு செட்டுகள் அமைத்தல் போன்றவைகள் மூலமாக சாகுபடிக்கு உகந்ததாக மாற்றப்பட உள்ளது. நீர் செல்லும் கால்வாய் வழித்தடங்களை தூர்வார ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்த உள்ளது. முதலமைச்சரின் மானவாரி நில மேம்பாட்டு இயக்கம் தொகுப்பாக 3 லட்சம் ஹெக்டேர் மானவாரி நிலங்களில் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன்படி பண்ணை குட்டைகள் அமைத்தல். உழவிற்கு வாடகை இயந்திரங்களை வழங்கவும், சத்து மிகுந்த சிறுதானிய பயறு வகைகளை சாகுபடி செய்ய வழிவகை செய்ய உள்ளது. இதற்கான விதை, உரங்கள், மானிய விலையில் வழங்கப்படும், மேலும் பயன் தரும் மரங்கள் வளர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

இத்திட்டம் ரூ.146.64 லட்சம் மதிப்பீட்டில் நடைமுறைபடுத்தப்படுகிறது. இதனால் 3 லட்சம் மானவாரி விவசாயிகள் பயன் பெறுவர். சிறு தானிய இயக்கம் ரூ.12.44 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, தினை, சாமை பயிரிடும் பரப்பினை அதிகரிக்க நுண்ணீர் பாசனம், நீர் சேகரிப்பு கட்டமைப்பின் கொள்ளளவை அதிகப்படுத்துதல், பண்ணைக் குட்டைகள் போன்ற நீர்பாசன வசதிகள் உருவாக்கப்படுகிறது. மேலும் சூரிய பம்ப்செட்டுகள் அமைக்கவும், மின்மோட்டார் பம்ப்கள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் வேளாண்மை தொழிலில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுகிற நிலையில் அவர்களை வேளாண் தொழிலில் ஈடுபட வைக்க பல்வேறு வேளாண்சார்புடைய பயிர்சிகள் ரூ.2.68 லட்சம் செலவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. மேலும் ஊரக இளைஞர்கள் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டு அவர்களை வேளாண் பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்கபடுகிறது. வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நெல் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு தற்போது ஒன்றிய அரசு நடைமுறை படுத்தியுள்ள நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் சன்ன ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.70லிருந்து ரூ.100 ஆகவும், சாதராண ரகத்திற்கு ரூ.50லிருந்து ரூ.75ஆகவும் கொள்முதலில் உயர்த்தி வழங்கபட உள்ளது. இதன்படி சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060ம் சாதாரண ரகத்திற்கு ரூ.2015ம் கிடைக்கும். இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்அடைவார்கள். மேலும் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 கோடியில் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விதைப் பண்ணைகளில் இந்த நெல் ரகங்களின் விதைகளை 200 ஏக்கரில் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கரும்பு உற்பத்தியை மேம்படுத்த புதிய உயர் ரக கரும்பு சாகுபடியை அறிமுகப்படுத்துதல். கரும்பு பயிரிடும் விவசாயகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.150 அளிக்கப்பட உள்ளது. பணம் தரும் பயிர் உற்பத்தி திட்டத்தின் வழியாக அதிக மகசூல் கொடுக்கும் பயறு வகைகளான உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயிர்கள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பொதுவிநியோக கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam
பனை மரம் பல்வேறு பயன்களை மக்களுக்கும் இந்த பூமிக்கும் அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பனைமரங்கள் வெட்டப்படுவதும், அழிக்கப்டுபடுவதும் தொடர்கிறது. எனவே இதனை பாதுகாக்க பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும். 1 லட்சம் பனங்;கன்றுகளையும் முழு மானியத்துடன் அளிக்கப்பட உள்ளது. பனைமரத்தின் மதிப்பு கூட்டல் பொருட்களை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக பனைவெல்லம் பொதுவிநியோக கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இனி பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற்றாக வேண்டும். கூட்டுப் பண்ணையத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு 1100 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து விவசாயிகளின் மேம்பாட்டை உறுதிசெய்யப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு, காயகறி தோட்டம் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் இதன் மூலம் 1.10 லட்சம் விவசாயிகள் பயன் பெருவார்கள்.

இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல், மண்வளம், மனிதர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுப்பதற்காக ரூ.33.3 கோடியில் நடைமுறைபடுத்தப்படுவதாகும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த இயற்கை வேளாண்மைகென்று தனிபிரிவு தொடங்கப்பட உள்ளது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் வேளாண் இயற்கை ஆராய்ச்சி மையம் ரூ.3 கோடி செலவில் நிறுவப்படுகிறது. வேளாண் காப்பீட்டிற்கு ரூ.2327 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, உழவர் சந்தைகள் 10 மாவட்டங்களில் புதிதாக உருவாக்கபட ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மஞ்ள் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் தொடங்கப்படும். நடமாடும் காய்கறி கடைகள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் போன்ற நகரங்களில் ரூ.2 லட்சம் மானிய உதவியுடன் துவக்கப்படும். நீலகிரியில் ஒருங்கிணைந்த கிராமப்புற வேளாண் சந்தை ரூ.2 கோடி மதிப்பில நிறுவப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை கல்லூரி தொடங்கபடும். முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்குதல், மிளகு பதப்படுத்த மையம் ஏற்படுத்துதல். கடலூரில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டும் மையம் போன்ற அறிவிப்புகள் பெருளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேளாண்மை சம வளர்ச்சியினை எட்ட வழிவகை செய்துள்ளது.

விவசாயிகள், வேளாண் தொழிலாளாகள் ஆகியோர் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் என்ற நம்பிக்கை வேளாண் நிதிநிலை அறிக்கையில் உள்ளது. அதேசமயம் பெருகிவரும் வேளாண் உள்ளீட்டு செலவுகளை (கூலி, விதை, உரம், பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரகளின் வாடகை) கட்டுப்படுத்த அல்லது அவற்றை குறைபதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் வெளிப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தினை வேளாண்மை தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் உள்ளீட்டுச் செலவுகள் குறையும். உழவு காலங்களில் டிராக்டர், அறுவடைகாலங்களில் அறுவடை இயந்திரங்களின் பற்றாக்குறையினால் விவசாயிகள் அதிக அளவிற்கு வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது இதனை கட்டுப்படுத்த அரசு இவற்றுக்கான வாடகையினை நிர்ணயிக்கவேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக நெல்லின் மதிப்புகூட்டு பொருளான அரிசி அரசு இலவசமாக பொதுவிநியோக கடைகள் மூலமாக அளிப்பதால் அதற்கான சந்தைதேவை குறைவாக உள்ளது. இதனால் வேளாண் விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு போதுமான விலை வெளிச்சந்தைகளில் கிடைப்பதில்லை. இதனை ஈடுசெய்ய குறைந்த பட்ச ஆதார விலை ஒன்றிய அரசு அவ்வப்போது உயர்த்தி அளித்துவந்தாலும் இது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்நாடு அரசு நடத்தும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை சந்தையில் இந்த விலையினை உறுதிசெய்யப்படுவதில்லை என்பது வருத்தமான செய்தியாகும். எனவே அனைத்து விவசாயிகளும் பயன் பெற குறைந்தபட்ச ஆதார விலையினை சட்டமாக்கி நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மேலும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடங்களின்; கட்டமைப்பினை வலுபடுத்த வேண்டும். சிறய அளவில் உள்ள நிலஉடைமைகளை ஒன்றினைத்து அவற்றை ஒன்றிணைந்த பயிர் செய்யும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும் இதனால் இந்த நிலகள் தரிசு நிலங்களாக மாறாமல் தடுக்கப்படும். வேளாண்சார் தொழிற்பேட்டைகளை அந்த அந்த பகுதிகளில் விளையும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற தொழில்களை தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோரும் உருவாக்கப்படவேண்டும். இதனால் வேளாண்மையும் தொழில் உற்பத்தியும் பெருகும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். முதல் வேளாண் நிதி அறிக்கை தமிழ்நாட்டின் வேளாண் மேம்பாட்டிற்கான முதல் அடியினை எடுத்து வைத்துள்ளது, இது ஒரு நல்லதொரு தொடக்கம் வருகின்ற ஆண்டுகளில் இது மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
ஊழந்தும் உழவே தலை”

திருக்குறள்: 1031- குடியியல்.

Child labour in India; Covid-19 pandemic Economical Article by Prof P. Anbalagan. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும்

பேரா. பு. அன்பழகன் குழந்தைகள் நாட்டின் செல்வமாகும் அவர்களின் கல்வி, நலம், சுற்றுப்புற சூழல்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா போன்ற…
Covid-19 Second Wave: Challenges and Precautionary Measures - Prof. C. Sivakkolundu. Book Day Branch of Bharathi Puthakalayam.

COVID-19 சவால்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பேரா. சி. சிவக்கொழுந்து அறிமுகம் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவின் மக்களுக்கு பெரும் அழிவையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 இன் சவால்கள் மற்றும் புத்துயிர் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள், உணவு பற்றாக்குறை, உள்நாட்டு பிரச்சினைகள், கல்வியின்…
Economic Article 4: Covid -19 Epidemic and Indian Rural Public Health Infrastructure - Prof. P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேளாண்மையையும் அதைச்சார்ந்த தொழிலையும் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் பெருமளவில் அரசினால் வழங்கப்பட்டுவருகிறது. சமூக மேம்பாடு என்பது சுகாதாரத்தை தவிர்த்து அடையமுடியாது. சமூக…
Economic Article Of Anesthesia for devotion to forget the tax burden: A historical perspective by Prof. Ma. Sivakumar

வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் கிபி 1003ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதலாம் ராஜராஜ சோழன் கட்டியுள்ளார். இந்தப் பெரிய கோவிலைப்பற்றி பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதன் கட்டிடக்கலை…