Egandham Poem By Va Su Vasantha வ.சு.வசந்தாவின் ஏகாந்தம் கவிதை

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா




பாதையில் கிடந்த முள்
பதம் பார்த்தது எந்தன் காலை!
பக்குவமாய் அதை எடுத்து
பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன்.

நித்திரையில் கண்டது
நிஜத்தில் அரங்கேறியது.
நேரம் காலம் பார்க்காமல்
நெடுந்தொலைவு நடந்து சென்றேன்.

எங்கே செல்வதென ஏதும் தெரியவில்லை!
எண்ணி எண்ணி மாய்ந்து விட்டேன்.
ஏழை துயர் தீர வில்லை.

கந்தல் ஆடையுடன்
கால் போன போக்கினிலே
காலமெல்லாம் நடந்திடுவேன்.
சொன்ன சொல்லை
நான் மறவேன்!

சொந்த பந்தம் ஏதுமில்லை;
சொத்து சுகம் எனக்கு வேண்டாம்.
தொந்தரவு செய்து என்னை
தொல்லைப் படுத்த வேண்டாம்!

மனத்தால் அழுகின்றேன்
பெற்றதை வெறுக்கின்றேன்!
பேதமில்லாமல்
பெருவாழ்வு வாழ்ந்து விட்டேன்.

சாதி மதம் பார்க்காமல்
சகோதரனாய் இருந்து விட்டேன்!
இப்படியே என் வாழ்வு
என்றைக்கும் தொடர்ந்துவரும்