Posted inPoetry
நடை வண்டி காபி கவிதை – கண்ணன்
நடை வண்டி காபி
*************************
தற்போது தள்ளுவண்டி
‘டீ காபி டீ காபி’
கூவி விற்கிறது
குழந்தை
காற்றில் கைமாறும்
காகிதம்
‘காபி சரியில்லை
என் காசைக் கொடுங்க’
அடுத்த கணமே
திரும்ப வந்தது காசு
குழந்தையின் தராசுமுள்
எப்போதும்
சாய்வதேயில்லை