காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி) karl marx puduyugathin valigatti

இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதிய “காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி)” நூல் அறிமுகம்

மார்க்சை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கேள்விக்கும் விடை அளிக்கிற எளிமையான புத்தகம் தான் 'காரல்மார்க்ஸ்-புதுயுகத்தின் வழிகாட்டி' எழுதியவர் இ.எம்.எஸ்.  மூலதனம் குழுவில் இணைந்து மூலதனம் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எந்த புத்தகத்தை வாசிக்கலாம்…
இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்

இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்



இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும்!

(புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை முன்வைத்து)

‘மாடல்’ அல்லது ‘முன்மாதிரி மாநிலம்’ என்ற சொல்லாடல் இந்திய அரசியலுக்கு புதிதல்ல. முதலில் ‘குஜராத் மாடல்’ என்ற புனைவுக் கதை, இந்திய மக்களிடையே முதலாளித்துவ ஊடகங்களால் பரவலாக விதைக்கப்பட்டது. அதன் களத்திலேயே, 2014 ஆம் ஆண்டு ‘மோடி பிம்பத்தின்’ பிரம்மாண்ட வெற்றி அறுவடை செய்யப்பட்டதை அறிவோம். அப்போதே கூட நாட்டின் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகளும், ‘ஜிடிபி’ எண்களா? ‘எழுத்தறிவு மற்றும் மக்கள் நல்வாழ்வு குறியீட்டு’ எண்களா? எது முன்மாதிரிக்கான அடித்தளம் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மிகச் சிறு மாநிலத்தில் அமைந்திருந்த இடது முன்னணியின் ஆட்சியை சுட்டிக்காட்டி, இதுதான் இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்மாதிரி என்ற அந்தக் குரல், வெகுமக்களை உரிய காலத்தில் சென்று சேராதது, சோகமே.

அதன் பின், ‘மாடல்’ பற்றிய பிம்பங்கள் உடையத் தொடங்கின. மிகச் சாதுர்யமாக, தங்களின் கதையாடலை ‘வகுப்புவாத – தேசிய வெறியை” சுற்றியதாக மாற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள், பெருமுதலாளிகளோடு கூட்டினை வலுப்படுத்தி, ஊடகங்களின் பெரும் பலத்தோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இப்போது ‘மாடல்’ பற்றிய கேள்விகள் எதிர் தளத்தில் இருந்துதான் வலுவாக எழுகின்றன. ஆர்.எஸ்.எஸ்/பாஜக கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும், பொருளாதார இறையாண்மையையும் அடித்து நொறுக்கி வருகிறது. எனவே, இந்த போக்கிற்கு மாற்றான முன்மாதிரிகளை பேசுவது காலத்தின் கட்டாயம்.

வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்கு, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைக்க வேண்டும். அதைத்தான் ‘இடதுசாரி மாடல்’ என்று குறிப்பிடுகிறோம்.

இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி, ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாராளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஒரு ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடம் எழுகிறது.

“புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு” என்ற இந்த ஆவணம் அந்த கேள்விகளை தெளிவாக்குகிறது. பதட்டத்தை சீராக்குகிறது. இந்த செயல்திட்டம், எர்ணாகுளத்தில் நடந்த சி.பி.ஐ(எம்) மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

முதல் கொள்கைத் தலையீடு 1939:

இந்திய விடுதலைக்கு முன்பே, மதராஸ் மாகாண அரசாங்கம் அமைத்த குத்தகை விசாரணைக் குழுவிடம் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஒரு மாற்று அறிக்கையை முன்வைக்கிறார். அப்போது கேரளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளே நிறைவடைந்திருந்தது. குத்தகை ஏற்பாட்டில் உள்ளார்ந்து நிலவுகிற சுரண்டல் நடைமுறைகளை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ அமைப்பை ஒழித்தால்தான் சமுதாய வளர்ச்சி சாத்தியம் என்று அறுதியிட்டு கூறியது. உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றது. இவ்வாறு, அது பழைய சுரண்டல் முறைகளுக்கு முடிவுகட்டச் சொன்னது.

இந்திய விடுதலைக்கு பின், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்காக களத்திலும், கொள்கை அளவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம்.

1957 ஆம் ஆண்டில், உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி உருவானது. இந்த வெற்றியைப் பற்றிய தேவையற்ற பெருமிதங்கள் கட்சிக்கு இருக்கவில்லை. முதலமைச்சராக தேர்வான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ‘இப்போதுள்ள சூழ்நிலையில், உழைக்கும் மக்களுடையதும், ஏழை மக்களுடையதுமான நலவாழ்வுக்கான திட்டங்களை அமலாக்கி செயல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் நோக்கம்’ என்றார். ஆம், இந்திய ஆட்சியின் வர்க்கத்தன்மை மாறவில்லை, குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மாநில ஆட்சியைத்தான் கட்சி வழிநடத்தியது. எனவே, மாநில ஆட்சிக்கு உள்ள வரம்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருவது அவசியம் என்றார் அவர். அதுபோலவே, கேரளத்தில் சுதந்திர இந்தியா கண்ட முதல் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை, வர்க்க ஆட்சியையும், வரம்புகளையும் தெளிவாக்கியது.

நிலச் சீர்திருத்தம், கல்வி, மக்கள் நலவாழ்வு போன்று பல்வேறு துறைகளில் கேரளம் மேற்கொண்டுள்ள சாதனைகளை நாம் அறிவோம். இந்தக் கட்டுரையில் அவைகளை மீண்டும் கூறப்போவதில்லை. மாறாக, அந்த சாதனைகளுக்கு திசைகாட்டும் கொள்கைகளின் தடத்தையே பின் தொடரவுள்ளோம்.

மாற்றுக் கொள்கைக்கு வாய்ப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இதுபோன்ற மாநில ஆட்சிகளை நடத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுள்ளது. “மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, அவைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைக்கும் வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்திக்கொள்ளும்” என்பதுடன், உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டவும் உதவியாக இருக்கும் என்கிறது. அதே சமயத்தில் ‘நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான தீர்வுகளைப் பெற்றிட முடியாது’ என்ற எச்சரிக்கையும் வெளிப்படுத்துகிறது.

ஒன்றிய அரசாங்கம், திட்டமிடலை முற்றாக கைவிட்டுவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ஐந்தாண்டு திட்டங்களோ, திட்ட ஆணையமோ இனி கிடையாது. ஆனால், கேரள அரசாங்கம் மட்டும், வளர்ச்சிக்கான திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அது, மக்களுக்கு நல்ல பலனையும் வழங்கி வருகிறது. இதற்கான விதை 1967 எல்.டி.எப் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டது ஆகும். அப்போதைய ஒன்றிய அரசாங்கம் ஐந்தாண்டு திட்டத்தை கைவிட்டு, ‘திட்ட விடுப்பு’ என்ற பாதையில் பயணித்தபோது, கேரள மாநிலத்தில் மாற்று கொள்கைக்கான வரைவுச் சட்டகம் முன்மொழியப்பட்டது. அது பொருளாதார திட்டமிடலின் அவசியத்தை எடுத்துக்காட்டியது. இத்தகைய மாற்றுக் கொள்கைகளே ‘இடதுசாரி மாடலின்’ அடித்தளம் ஆகும்.

1980, 1987, 1996 ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்தது. இந்த சமயங்களிலெல்லாம் இடதுசாரிகள் முன்னெடுத்த நலத்திட்டங்களை, அடுத்து வருகிற யுடிஎப் ஆட்சி பின்னுக்குத் தள்ளியது. எனவே, ஆட்சியில் போராட்டம், ஆட்சியில் இல்லாத காலங்களில் மக்கள் நல நடவடிக்கைகளை காத்திடும் களப் போராட்டங்கள் என்று அயர்வில்லாமல் கட்சி செயல்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் காரணமாகவும், ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் தாக்குதல் காரணமாகவும், கேரள மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1990 களில், உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் வேகமெடுத்தன. ‘நவதாராளமயம்’ என்பது வெறும் சொல் அல்ல, அது பல்வேறு கட்டுப்பாடுகளையும், செயல் திட்டங்களையும் தன்னகத்தே கொண்ட ‘புதிய உலக ஒழுங்காக’ அமைந்தது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இந்த சூழலை ஆய்வு செய்திட 1994 ஆம் ஆண்டில் ஏ.கே.ஜி ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பில் சர்வதேச விவாதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கேரளாவை பற்றியும் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுவந்த பல்வேறு அறிஞர்கள் அதில் பங்கேற்று விவாதித்தார்கள். தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கூறினார், “நாம் சந்தித்துவரும் தீவிர பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தை திருப்பும் விதத்தில், கேரளத்தின் சாதனைகளைப் பற்றிய விதந்தோதல்கள் வேண்டாம். பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் இந்தியாவின் பிற மாநிலங்களை விடவும் பின் தங்கியுள்ளோம். நெருக்கடிக்கான தீர்வினை தாமதிக்க முடியாது. வேலைவாய்ப்பிலும், உற்பத்தியிலும் பின் தங்கிய நிலைமையை நாம் புறந்தள்ளினால் அது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்”

இந்த மாநாட்டின் விவாதங்கள் பலன் கொடுத்தன. 1996 ஆம் ஆண்டில் ‘மக்கள் திட்ட முன்னெடுப்பு’ வந்தது. 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. திட்டமிடலிலும், வளர்ச்சிப் பணிகளிலும் மக்களின் பங்கேற்பை இது அதிகப்படுத்தியது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட சர்வதேச மாநாடுகள் கேரளத்தின் வளர்ச்சி பிரச்சனைகளை பல்வேறு கோணங்களிலும் விவாதித்தன. மாற்று திட்டங்களை உருவாக்கின. 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், பிரபாத் பட்நாயக் கூறினார், “அரசின் வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே செல்வது தற்செயல் அல்ல, நவ-தாராளமயத்தின் அடிப்படையான வெளிப்பாடு இது. இவ்விசயத்தில் கேரளம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார்.

பெரு முதலாளிகளுடைய மூலதனத்தை தமது மாநிலத்தில் ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்குள் நடக்கும் போட்டியும் அதன் விளைவுகளும் ‘அதிகாரக் குலைவினை’ ஏற்படுத்துகின்றன. நமக்கு தேவை அதிகார பரவலாக்கமே. நவதாராளமய சூழலிலும் அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்று கட்சி விவாதித்தது. ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது பற்றியும், நேரடி அன்னிய முதலீடுகள் பற்றியும் தெளிவை தருவதாக இந்த விவாதங்கள் அமைந்தன.

அடுத்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதில் இந்த விவாதங்கள் பங்காற்றின.

மீண்டும் விஜயன் அரசாங்கம்:

கேரள மாநிலத்தின் வரலாற்றில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த பின்னணியில்தான், எர்ணாகுளத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், கேரளத்திற்கான தொலைநோக்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

‘பல்வேறு வர்க்கங்களின் பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்து, உள்ளார்ந்த சமூக நீதிப் பார்வையுடன்’ கேரள மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் அமைய வேண்டும். ‘நவீன அறிவார்ந்த சமூகத்தை’ அமைப்பதற்காக, அறிவியலையும் நுட்பன்களையும் பயன்படுத்திட வேண்டும், அனைத்து சமூக தளங்களிலும் உற்பத்தி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். திறன் அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் உற்பத்தி உயரவேண்டும் என்கிறது ‘புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு ஆவணம்’.

அதாவது, கேரளத்தின் தொழிலாளர்கள் அதி நவீன இயந்திரங்களை இயக்கிடும் திறனுடன், புதிய தொழில்நுட்ப அறிவுடன் செயல்படும் அடித்தளத்தை வலுவாக அமைக்கும்போதுதான். வாழ்க்கைத் தரம் உயரும். உற்பத்தி அதிகரிப்பதுடன், விநியோகத்தை சமநீதி அடிப்படையில் மேற்கொள்ள முடியும் என்று ஆவணம் தெளிவாக்குகிறது.

முன்பே குறிப்பிட்டதைப் போல, நாட்டில் பொருளாதார திட்டமிடல் முற்றாக கைவிடப்பட்ட காலத்தில், கேரள மாநிலம் மட்டுமே திட்டமிடல் நடவடிக்கைகளை கைவிடவில்லை. இப்போதும் 14 வது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதுடன், ஆண்டு திட்டங்களும் தயாராகின்றன. நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிலவும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளில் எட்ட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்திருக்கிறார்கள்.

வளங்களும், வாய்ப்பும்

இதையெல்லாம் செய்வதென்றால் மாநிலத்திற்கு நிதி அவசியம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும், நவதாராளமய கொள்கைகளின் சட்டகத்திற்கு உட்பட்டுமே அதனை மேற்கொள்ள முடியுமா?. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மேலும் குறையும் சூழலே உள்ளது. இந்த சூழலை எதிர்கொண்டு ‘இடது மாடலை’ முன்னெடுப்பது, வர்க்கப் போராட்ட தெளிவோடே நடத்தப்பட முடியும். இந்த போராட்டத்தில் வெகுமக்களையும் தொடர்ந்து ஈடுபடுத்திட வேண்டும்.

இந்த ஆவணத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பற்றி குறிப்பிடப்படும் பகுதி மிக முக்கியமானதாகும். ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், திறம்பட செயல்படுத்தும் அவசியத்தை மக்களிடமும், அதன் ஊழியர்களிடமும் இந்த ஆவணம் முன்வைக்கிறது. மேலும் பொதுத்துறையில் புதிய புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் அதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற திசையை இந்த ஆவணம் காட்டுகிறது. இது நவதாராளமய விதிகளுக்கு முற்றிலும் முரணான ‘இடதுசாரி மாடலின்’ தனித்துவம் ஆகும்.

அதே போல, சிறு/குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், உள்ளாட்சிகள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுவதுடன், பாரம்பறிய தொழில்களில் நவீன முன்னேற்றங்களை புகுத்துவதன் அவசியத்தையும் தெளிவாக்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியத்தை தெளிவாக்கும் இந்த ஆவணம், மிகவும் சவாலான, நுட்பமான பணிகளை இந்த திசையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வழிகாட்டுகிறது.

புவி வெப்பமாதல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளல்
உள்ளாட்சி அமைப்புகளில் பொது வெளிகளை உருவாக்குதல்
ஊழல் நடைமுறைகளுக்கு முடிவுகட்ட சமூக தணிக்கை வழிமுறைகளை உருவாக்குதல்
போன்ற முன்மொழிவுகள், கேரளத்தின் சமூக வாழ்வில் பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் ‘இடதுசாரி’ வெளிப்பாடுகள் ஆகும்.
உதாரணமாக, கேரளத்தில் தற்போதுள்ள உள்ளாட்சிகளில் 40 சதவீதத்திற்கும் மேல் எதிர்க் கட்சிகளின் நிர்வாகத்தில் உள்ளதையும், நிதி செலவினங்களை மேற்கொள்வதில் உள்ளாட்சிகளுக்கு உள்ள சுதந்திரத்தையும் இதனோடு இணைத்து நோக்கினால், நம்மால் மேற்சொன்ன முன்மொழிவுகளின் தாக்கத்தை உணர்ந்திட முடியும்.

கட்சியும் அரசாங்கமும்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, கேரளத்தின் ஆட்சியை வழிநடத்துகிறது. அதே சமயத்தில் அரசாங்கம் என்பது அனைவருக்குமானது. அனைவரையும் உள்ளடக்கி நடக்க வேண்டியது. இந்த சூழலில், கட்சி தனது பாத்திரத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆவணம் தெளிவாக்குகிறது.

கட்சியின் தொலைநோக்கிற்கு உகந்ததாக அரசின் கொள்கைகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது, எச்சரிக்கை உணர்வுடன் பரிசீலித்து உறுதி செய்திட வேண்டும்.
அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதுடன், வெகுமக்கள் ஆதரவுடனே திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை கட்சியே உறுதி செய்திட வேண்டும்.
பொதுத்துறைகளை திறன் வாய்ந்த வகையில் இயக்கும் கடமையை தொழிற்சங்கங்களும் கவனத்தில் கொள்வதுடன், கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறப்பான சேவைகளை உறுதி செய்வதில் ஊழியர் சங்கங்களும் கவனம் செலுத்திட வேண்டும்.

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு வரம்பிடும் ஒன்றிய அரசின் போக்குகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவது கட்சியின் கடமை என்பதை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

உலகமே, நவதாராளமயம் உருவாக்கிய இடியாப்பச் சிக்கலில் சிக்குண்டிருக்கும் சூழலில் ‘இடதுசாரி’ அரசாங்கங்கள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்து வருகின்றன. இந்த பொறியினை விசிறி, மேலும் சுடர் விடச் செய்யும் ஆவணமே இந்த சிறு பிரசுரமாகும். ‘இடதுசாரி மாடல்’ என்பது, இப்போது ஒரு மாநிலத்தின் களத்தில் வார்த்தெடுக்கப்படும் போதிலும் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மாற்றுப்பாதையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய மக்களின் நலவாழ்வினை பாதுகாத்திட சாத்தியமான, நடைமுறைக்கு உகந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதே அதன் தொலைநோக்கு. இந்த முயற்சி, அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.

– இரா.சிந்தன்

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்

1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

 

1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள்  62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.

பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.

கவனமான மதிப்பீடுகள்

  1. தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
  2. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
  3. இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால்  பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
  4. கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
  5. விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
  6. இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.

ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.

5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.

முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.

‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.

இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”

‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில்  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.

ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.

உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.

இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய  மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.

ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Avadi Socialim Image Credit: Frontline

எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.

நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.

அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Theprint

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.

இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.

மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.

ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Thewire

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

நூல் அறிமுகம்: மார்க்ஸ் பார்வையில் இந்தியா – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்

நூல் அறிமுகம்: மார்க்ஸ் பார்வையில் இந்தியா – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்

புத்தகம் : மார்க்ஸ் பார்வையில் இந்தியா ஆசிரியர் : இஎம்எஸ்.நம்பூதிரிபாட், தமிழில் இந்திரன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : 20 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/markas-parvaiyil-indiya-8861/ கம்யூனிசமா? அது வெளிநாட்டு சரக்காயிற்றே!? இந்தியாவிலெல்லாம் எடுபடாது!? யாரப்பா அந்த மார்க்ஸ்? அவருக்கென்ன தெரியும்…
நூல் அறிமுகம்: இந்திய வரலாறு – ஒரு மார்க்சியப் பார்வை | பி.எஸ்.சந்திரபாபு

நூல் அறிமுகம்: இந்திய வரலாறு – ஒரு மார்க்சியப் பார்வை | பி.எஸ்.சந்திரபாபு

நூல்: இந்திய வரலாறு ஆசிரியர்: இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ₹110.00 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/india-varalaru-41/ திருக்குறளைப் பற்றி குறிப்பிடும் போது “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்’’ என்று சொல்லப்படுகிறது. அதுபோல் சுமார் ஐயாயிரம் ஆண்டு…
எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

நூல் - வேதங்களின் நாடு ஆசிரியர் - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பக்கம் 64 விலை. 40 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vethankalin-nada-7861/ ஆரியர்களே இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் அதுவே சிறந்த கலாச்சாரமென, வரலாற்றை திருத்தி…
மார்க்ஸ், ஆசியபாணி உற்பத்தி முறைபாடு  மற்றும் இந்திய வரலாறு – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (தமிழில்: எஸ்.நாராயணன்)

மார்க்ஸ், ஆசியபாணி உற்பத்தி முறைபாடு மற்றும் இந்திய வரலாறு – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (தமிழில்: எஸ்.நாராயணன்)

  முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாதார அமைப்புகள் (Pre Capitalist Economic Formations) என்ற மார்க்சின் குறிப்புகளின் தொகுப்பு நூல் புகழ் பெற்ற மார்க்சிய வரலாற்று அறிஞர் எரிக் ஹோப்ஸ்பாவ்ம் அவர்களின் நீண்ட முன்னுரையோடு வந்துள்ளது(1965). அந்த நூல் குறித்து தோழர். ஈ.எம்.எஸ்…
நூல் அறிமுகம்: இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு” – குரு

நூல் அறிமுகம்: இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு” – குரு

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு. ➖➖➖➖➖➖➖➖ ............................................. ஆசிரியர் : இ.எம்.எஸ்.. ...........நம்பூதிரிபாட்.......... ............................................. ---------------------------------------- வாழ்க்கையில் ஒரு முறையேனும்......., ---------------------------------------- வாழ்க்கையில் ஒருமுறை வீட்டை கட்டி பார்க்க வேண்டும்...! ஒரு முறை, யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டும். வாழ்க்கையில்…