thodar 26: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

ஆறிப் போய்விட்டதா, ஆற்றல் திறன் குறியீடு, அளவீடு முறைகள்!!? அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, நமதுவாழிட சூழல் மாற்றம் மிக நவீனமயம் ஆகி, மின்சார ஆற்றல் பயன்பாடு, வெவ்வேறு கோணங்களில் அதிக தேவையாகிவிட்டது. குறிப்பாக கட்டிடத் துறையில் மூன்றில் ஒரு…
சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




‘நானெனும் பொய்’ 
***********************
பிரபஞ்சம் முழுதும்…
எனக்கானதென்றே உணர்ந்தேன்…
என் செயல் அனைத்தும்
வண்ணமடித்தே…பிறர் கண்ணில்
பதிய வைத்தேன்…

எனக்கான வலி பொறுக்காது…
கதறிய அழுகையில்…அன்பைத் தேடி சுழன்றேனே…
சுழன்ற சுழற்சியில்…
பேரன்பின் வடிவங்கள்…
பின்னலாய் என் வாழ்வை
பிணைந்திருக்க செய்தேன்…

பொருள் தேடி அலைகின்றேன்…
புகழ் தேடி அலைகின்றேன்…
புதிதாய் வாங்கிய…
புத்தகப்பையில்…புது சொந்தம்
படரப் பார்க்கிறேன்…

காலத்தின் அருமையாய்…அற்புத செயல்கள் பல செய்த பின்னும்
சில அற்பமான செய்கையில்
என் குற்றம் உணர்கின்றேன்…

வருங்காலம் பெரிதாய் எண்ணி
நிகழ்காலம் மறக்கச் செய்கின்றேன்…
நின்ற பொழுதின் நிழலாய்…
நிஜங்களின் துறவை அறிகின்றேன்…

பிறர் செய்யும் குற்றங்கள்…
என் புன்னகையிலேயே கடக்கிறேன்…

புதிய குற்றச்சாட்டை…
தூக்கிச் சுமக்கும் கூன் முதுகை நானும் இங்கே தவிர்க்கின்றேன்…

தோழனாய் தோள் கொடுக்கும்
உறவின் உண்மை அறிய மறைமுக சோதனை நடத்துகிறேன்…

காலக்கடிகாரம் கையில்
கிடைத்த போதும்…
எக்காலம் பெரிதென குழம்புகிறேன்…

என் குழப்பத்தீர்வை…குயவனின்
மண்பானையாக ஆக்குகிறேன்…
அப்பானையில் குளிர்ந்த நீர் ஊற்றிப்பருக ஆசை நானும் கொள்கிறேன்…

குளிர்ந்த நீரும் சுடுநீர் ஆகி சுடுகிறதே…
அச்சூட்டில் என் சுயநலம்…
எண்ணெய் போல் மிதக்கச் செய்கிறதே…
மிதந்த கனவில்…என்னைத் தேடி
அலைகின்றேன்…

நான் சேர்த்த சொத்தும்…பணமும்
யாரோ அனுபவிக்கப் பார்க்கின்றேன்…
கந்தலாடையில் ஒதுக்கப்பட்ட
வாழ்க்கை போல உணர்கின்றேன்…

என்ன வாழ்க்கை இதுவென்றே…
ஓடி ஓடி…உழைத்தேனோ…
என் ஓய்வின் தனிமை…
என்னைத் தின்ன…நானே
விருந்தைப் படைப்பித்தேன்…

இல்லா…கடவுளை இருப்பதாய்
எண்ணி…இறைவா உன்னை
சரணடைந்தேன்…
என் வேண்டுதல் உணர்ந்த
கடவுளும் இங்கே…காலதூதனை
அனுப்பிவிட்டான்…

உயிராய்…உறவாய் இருந்தவர்
எல்லாம் ஓரமாய் நின்று
பார்த்திடவே…என் உயிரை
அழைத்திட்ட சங்கு சத்தமும்
என் உயிரை கொஞ்சம் எழுப்பிடுதே…

காலன் வென்ற செய்தியை…
வேதனையாய் எண்ணிய மனம்
காலன் கைப்பிடித்துக் கிளம்பியதே…
அப்போது உணர்ந்த நொடி…
எல்லாமும் இங்கே…பொய் தானோ…!!!
நானும் இங்கே பொய்தானோ…!!!
என் மெய்யும் இங்கே பொய்தானோ…!!!

‘மனிதம்’
**********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்க வாழுறேன்…

ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…

போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…

மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…

என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கண்ணம் உரசி கிடக்குதே…

உணர்வால உறவான நாம…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பை சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…

மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…

ஆறுதலாய்
***************
ஏமாற்றத்தின் உச்சம்…
யாரையும் பார்க்க விருப்பமில்லை…
எனக்குள் நானே…தொலைகிறேன்…
என் முகம் புதைத்தே…என்னுள்
என்னைக் காண்கிறேன்…

எத்தனை… எத்தனை…
முகங்கள் பார்த்த பின்னும்…
ஏமாற்றத்தின் வலிக்கு மட்டும்
இங்கே குறைச்சலில்லை…
வலியல்ல இது வடு…என்றே

வந்தமர்ந்து அறிவுரை கூறுபவர்களுக்கு
ஒன்றும் புரிவதில்லை…இது
புதிதும் அல்ல அவர்களுக்கு…

யாரோ ஒருவரின் சாயலில்
என் வலிக்கு ஆறுதல் தேட
விரும்பவில்லை…என்னுள் தேடுகிறேன்
எனக்கான ஆறுதலை…

‘வலிமை’
***********
வீடு தாண்டி வெளியே
வரும் ஓர் இடம்…
என் வலிமையெலாம்
சோதிக்க…பிடித்த இடம்…

நான் வரும் போதே…அவளும்
வெத்துக்குடத்தை…வேகமா
தூக்கிட்டு ஓடி வந்துடுவா…

மனசெல்லாம்…வார்த்தையாக்கும்
இந்த இடம்…மனம் விட்டு பேசிய
பின்னும்…நாளைக்கு சந்திக்கும்
நேரத்தை வந்தவுடன் சொல்லிடுவா…

தண்ணீரால நிரப்பிய குடமும்…
கண்ணீரால் நிரம்பிய விழிகளும்…
பேசிய மொழியை நாள் பூரா சிந்தித்தாலும்…மௌன மொழியில்
வீட்டுக்குள்ள சுமக்கும் நேரம்…

விடிவு காலம் வராதோனு…
ஏக்கப்பார்வையில் பார்க்கும் போதே…

மறுநாளும் விடிஞ்சிருச்சி…தண்ணீர்
பிடிக்க போகலையானு…குரலொன்று
செவி கேட்க…இதோ கிளம்பிட்டேனு
போய் வாரேன்…என் வலிமையை
கொஞ்சம் சோதிச்சுப்பார்க்க…

‘அப்பா…’
************
உறவுகள் ஆயிரம்… இருந்தாலும்
அப்பப்பா…அப்பா உன் முகம் பார்க்க
என் விழி இரண்டும் காத்துக்கிடக்குமே…

ராத்திரி வேலை முடிஞ்சு லேட்டா நீ வந்தாலும்
தூங்கிய என் விழிகள் இரசிக்கும் உன் முகம்
காரணமின்றி… என் இரசனை விரும்பிக்கிடக்குமே…

எனக்கான தேவைகள் நிறைவேற்றியே…
நின் வாழ்க்கை சக்கரம் சுழலுதே…
அதில் நம் காலமும் விரும்பி நகருதே…

பசிக்கு…ருசியும்…
ருசிக்கு…பசியும்…நீ உண்டு பார்த்ததில்லை…
அப்பப்போ நீ நிற்கும் டீக்கடை வாசலில்
நின் சொர்க்கம் டீயில் முடியுதானு நினைச்சேன்…

நான் உயர ஏணியா இருந்து ஏத்தி விட்டு இரசிச்ச…
பல சறுக்கல்களையும்…சருகா மிதிச்சு
கடந்து போக பாதையா வழிகாட்டி என்னோடு நடந்த…

நான் நடக்கும் பாதையில பட்டுக்கம்பளம் விரிச்ச…
ஆனா உன் பாதத்திற்கு செருப்பு கூட
இல்லாமலே நடந்த…

மனம் விட்டு நீங்கள் பேசி நான் பார்த்ததில்லை…
ஆனா உன் மனசுக்குள்ள உள்ள வார்த்தை
மௌன மொழியின் செயலாவே
நான் பார்த்து வளர்ந்தேன்…

சாப்பிட்டியானு தொடங்கும் உரையாடலுக்காக…
கைபேசியும் காத்து தினமும் கெடக்கும்…
இந்த காத்திருப்பின் இரகசியத்தை…ஒருநாளும் நாம
தவறவிட்டதில்லை…

உன் அன்பை சொல்ல வார்த்தை இங்க இல்ல…
எப்போதும் நீ மட்டுமே…போதும் என்பதில்
என் அன்பை சொல்லி வைப்பேன்…
நின் உறவோடு என் வாழ்வை புதைத்து
நானும் வாழ்வேன்…

– சக்தி ராணி

Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனா

உழைப்பாளி கல்லீரல் – பேரா.சோ.மோகனா




Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாஎன்னைத் தெரியுமா?
கல்லீரல் என்றால் ஏதோ சாப்பிட என்று எப்போதும் சாப்பாடு நினைவாகவே இருக்க வேண்டாம். சாப்பாட்டுடன் தொடர்புடைய நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். ஓர் ஆச்சரியமான உறுப்பு என்றும் கூட கூறலாம். ஏன் தெரியுமா? “எம்பேரு கல்லிரல்பா.! நா.. ஒனக்காக முக்கியமா 500 வேலை செய்யறேன்பா. நா அதே செய்யாட்டி நீ போயிடுவே..! அத்தோட கொசுறா சும்மா 35 , 000பணிகள் ஒன் தேவைக்கு ஏத்தாப்பல செய்யறேன்பா..!” இப்படிதான் கல்லீரலைக்கேட்டால் சொல்லும்.

நான் யார் ..நான் யார் ? மாயாவி
நம்ம கல்லீரல் பயங்கரமான உழைப்பாளி, சுமார் 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறது. இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் கல்லீரலின் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காதவகையில் அனாயசமானது. ஆமாப்பா, இதன் 80 % சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல். அதுபோலவே, 80 % வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனா

உடலின் பெரிய உறுப்பு
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போதான். இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது. வலது பகுதி, இடது பக்கத்தைவிடப் பெரியது. கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள். அதாவது 1400 கிராம்..! அதற்காக கல்லீரல் இடத்தில் மூளையையும், மூளை உள்ள இடத்தில் கல்லீரலையும் வைக்க முடியாது.

உடலின் ஆற்றல் களன் நானே !
நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிற்சாலையும் இதுதான். ஆமாப்பா..! நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும், தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார்தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப்பதும் கல்லீரலில்தான். உடலின் அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம் செய்வதும் இவர்தான்.

நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது நீங்கள் ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல் தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.

அபாயம் அகற்றும் ஆபத்பாதவன்! உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன் இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல், உடனடியாக வெளியேற்றுவது கல்லீரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும், விஷம் குடித்தாலும் அவற்றை வெளியே அனுப்பும் வேலையைச் செய்வது இவர்தான். நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற உதவுகிறது. கல்லீரல் மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்காவிட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாகொழுப்பு சீரணம் நம்மாலே
அண்ணாச்சி, நமக்கெல்லாம் வறுத்தது, பொரித்தது, சிப்ஸ், உருளை வறுவல் என்றுதான் பிடிக்கும். அனைத்து உணவுப் பொருளையும் நல்லா, நெறைய எண்ணெய் ஊற்றி, சும்மா மொறு மொறுன்னு வறுத்து சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்ற ரகம் நாம.! ஆனா நீங்க என்ன எண்ணெய் பொருள் சாப்பிட்டாலும் சரி, இந்த பெரீய்ய தலீவன் கல்லீரல் இல்லாட்டி ஒண்ணும் ஆவாதுங்கோ..! ஆமாம், எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது இவர்தான். இதிலுள்ள பித்தப்பையின் சுரப்பி நீரான, பித்தநீர்தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்பவர்.

மஞ்சள் காமாலை;
அதனால்தான், மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக, பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை, என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது. ஆனா நாம என்ன செய்வோம் தெரியுமா? நாட்டு வைத்தியரிடம் சென்று, மருந்தை வாங்கி, அதனை நல்ல கெட்டியான ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடுவோம். நல்ல நாட்டுக்கோழி கறி வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவோம். அத்தோடு, கல்லீரலுக்கு நல்ல வெடிகுண்டு வேட்டு வைப்போம்.

வைட்டமீன்களின் சேமிப்புகளன்:
கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித்தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E & k யின் சேமிப்பு கிடங்கும் இதுதான். அது மட்டுமில்ல நண்பா, உங்களுக்கு ரொம்ப கொழுப்பு இருக்கிறதா? கோபித்துக் கொள்ளாதீர்கள்..! கொலஸ்டிராலைத்தான் சொல்கிறேன். அதன் உற்பத்திக்களனும் இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாகல்லீரல் பாதுகாப்பு
கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப்பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். இதனைக் கண்டறிவது எளிதே.! சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று, மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல் உருவாக வழி வகுக்கும்.

பாதிக்கப் பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் கூட புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய இந்தியாவில் ரூ 10-12 லட்சம் ஆகிறது. ஆனால்அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சரியாக கவனித்தால் 89% பபேர் ஓராண்டு வரையிலும், 75% பேர் 5ஆண்டுகள் வரையிலும் காப்பாற்றப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் புதிய கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 10,00,000. உலகில் ஆண்டுதோறும் 35 மில்லியன் மக்கள் கல்லீரல். நோயினால் இறந்து போகின்றனர். இந்தியாவில் இறப்பை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள் பட்டியலில் கல்லீரல் நோய் உள்ளது.

இப்போது கல்லீரல் புற்றுநோயும் உயிர்குடிப்பான் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் இப்போது இது அதிகம் வருகிறது என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

▪ 1997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது.
▪ அப்பல்லோ மருத்துவ மனையில் மட்டுமே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 க்கு மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
▪ அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25,000.
▪ இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு: 2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009: 2048. இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர்..?