பொங்கலோ பொங்கல் கவிதை – இறைமொழி

பொங்கலோ பொங்கல் கவிதை – இறைமொழி




பச்சரிசி பாகு சேர்த்து
பசுநெய்யோடு முந்திரியும்
வெந்து பொங்கியது
கரும்போடு இனித்தது அங்கு நாவும்.

இருப்பது தெருவோரம்
இதற்கெல்லாம் ஏது நாதி
அரசாணையிலும் இல்லை
எங்களுக்கு இலவசம்

சன்னல் பல வைத்து
கிடைத்தது ஆடை
சிக்கென சிலருக்கு
புதுவருட புத்தாடையின் கொடையில்

பொங்கும் மகிழ்ச்சியில் பொங்கலோ பொங்கல்
கூவியது பல குரல்கள்
கண்கள் தாண்டி பொங்குமா
பொங்கல் எங்களுக்கும்?

– இறைமொழி