கால்பந்து முதலாளித்துவம் கட்டுரை – அ.பாக்கியம்

கால்பந்து முதலாளித்துவம் கட்டுரை – அ.பாக்கியம்




உலக மக்களின் கால்பந்தாட்டம் படிப்படியாக பணக்காரர்களால் திருடப்பட்டு, வணிகமயமாக்கப்பட்டு, தற்போது பங்குச்சந்தையின் சூதாட்டமாக சுழலத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களின் உயர் அடுக்கு (elite clubs) உரிமையாளர்கள் ஐரோப்பிய சூப்பர் லீக் (European super league) என்ற ஒரு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு ஐரோப்பிய லீக் அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட கழகம் (UEAF) அமைப்பும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பை தெரிவிக்கும் இந்த அமைப்புகள் புனிதமான அமைப்புகள் அல்ல. இவையும் கால்பந்தாட்டத்தை வணிக மயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டது தான். தற்போது ஐரோப்பிய கால்பந்தாட்டம் கழகங்கள் முதலாளித்தவ சுரண்டலின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருவது தான் இந்த ஐரோப்பியன் சூப்பர் லீக் (ESL) போட்டியின் அம்சமாகும்.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாவது ஆண்டில் அதாவது 1990 க்கு பிறகு, ஐரோப்பிய கால்பந்தாட்ட துறையில் குணாம்ச ரீதியில் மாற்றம் ஏற்பட்டது. கால்பந்தாட்டத்தை முதலீடு செய்வதற்கான ஒரு இடமாகவும் சொத்துக்கள் சேர்ப்பதற்கான தளமாகவும் இந்த மாற்றம் உருவானது.

மார்கரெட் தாட்சரின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பொதுத் துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்கி இங்கிலாந்தை தடையற்ற சந்தையை ஏற்றுக்கொள்ளச் செய்தது.

1992 ல் இங்கிலாந்தில் பிரீமியர்ஷிப்பின் லீப் என்ற பெயரில் போட்டி நடத்துவதற்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் இங்கிலாந்தில் உள்ள ஒரு கால்பந்தாட்டத் தொடர் போட்டியாகும். இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் உலக தொலைக்காட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரூபர்ட் முர்டோக்கின் BSkyB ஐ தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கையாளுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே போட்டி நடத்துவதற்கான நிபந்தனியாகவும் உருவாக்கப்பட்டது.

ஒருபுறம் இந்த நடவடிக்கை உயர்மட்டத்தில் பெரும் பணப் பாய்ச்சலை உருவாக்கியது. மறுபுறம், வருமானத்தின் அடிப்படையில் பிரீமியர் லீக் மற்றும் கால்பந்து லீக்கிற்கு இடையே ஒரு தீவிர ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது. அதாவது பிரிமியர் லீக் பண பலத்துடன் நடத்துவதும் இதர கால்பந்தாட்ட லீக் வசதியற்ற நிலையில் இருப்பதுமாக மாறியது. பல கிளப்புகள் பங்குச் சந்தையில் மிதக்க இந்த பிரீமியர் லீக் போட்டியை பயன்படுத்திகொண்டன.

கால்பந்தாட்டத்தை வணிகமயமாக்களின் முதல் அம்சமாக விளையாட்டு அரங்கில் டிகெட்டுகள் விற்பது மட்டும்தான் இருந்தது.

உலகளாவிய வலைதள அமைப்பின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி மாறிய பிறகு தொலைக்காட்சி உரிமைகள் கால்பந்தாட்டத்தின் பிரதான வணிக மையமாக மாறியது. கால்பந்தாட்ட பொருளாதாரம் உருவானது.

அடுத்ததாக தலைசிறந்த வீரர்கள், மேலாளர்கள், பயிற்சியாளர்கள், போன்றவர்களை ஈர்ப்பதுடன், பணக்கார பில்லியனர்களையும் இந்த லீக்கில் முதலீடு செய்ய தூண்டுகிறது.

எனவே விளையாட்டின் வெற்றி அடிப்படையில் பணத்தை கொண்டு தீர்மானிப்பதற்கு வழி வகுத்தது.
மேலும் இது பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், சிறிய கிளப்புகள் அவர்களுடன் போட்டியிட முடியாத அளவிற்கும் பரவலான சமத்துவமின்மைக்கு அடித்தளம் அமைத்தது

பிரீமியர் லீகின் இந்த நிலைமை கடந்த மூன்று தசாப்தங்களாக மாறாமலேயே தொடர்கிறது.பணம் தீர்மானிக்கும் இடத்திற்கு வந்து விட்டதால் கீழ்கண்ட கிளப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.

மான்செஸ்டர் யுனைடெட், அர்செனல், செல்சியா,மான்செஸ்டர் சிட்டி (சமீபத்தில் லிவர்பூலும்) போன்ற பணக்கார கிளப்புகளும் விதிவிலக்காக பிளாக்பர்ன் ரோவர்ஸ், (1995) லெய்செஸ்டர் சிட்டி (2016) போன்ற கிளப்புகள் லீக் பட்டங்களை தங்களுக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்ளக்கூடிய முறையில் செயல்படுகின்றன.

இதேபோன்று எலைட் லீக் போட்டிகளான செரியா ஏ, லா லிகா மற்றும் பன்டெஸ்லிகா மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் (ஐரோப்பாவின் சிறந்த போட்டி) ஆகியவை இதே போன்ற பணம் படைத்த கிளப்புகள் மட்டுமே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.

எனவே, கால்பந்தாட்ட வெற்றி என்பது கிளப்களின் வாங்கும் சக்திக்கு ஒத்ததாகிறது. பணம் படைத்த கிளப்புகள் வெற்றி பெற முடியும் மற்றவர்கள் அருகிலேவர முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

இத்தகைய நம்பிக்கைக்குரிய வருவாய் ஈட்டும் தொழில் வளர்ச்சியுடன் பெருநிறுவன முதலீட்டாளர்கள் கிளப்புகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள், பங்குகளை வாங்குகிறார்கள் அல்லது எலைட் ஐரோப்பிய லீக்குகளில் பங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்க விளையாட்டு உரிமையாளர்கள் கிளேசர்ஸ் (தம்பா பே புக்கனேயர்ஸ்), ஜில்லட் (மாண்ட்ரீல் கனடியன்ஸ்) & ஹிக்ஸ் (டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்), ஜே.டபிள்யூ. ஹென்றி (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), தாமஸ் டி பெனெடெட்டோ (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), எரிக் தோஹிர் (டிசி யுனைடெட்) ஆகியோர் முறையே மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், ஏஎஸ் ரோமா மற்றும் இன்டர்நேஷனல் போன்ற புகழ்பெற்ற பாரம்பரிய கிளப்புகளின் உரிமையாளர்களாக, பங்குதாரர்களாக மாறி ஆங்கிலேய மற்றும் இத்தாலிய கால்பந்தாட்ட கிளப்புகளின் உரிமையாளர்களாக உருவெடுத்தனர்.

ஒரு பொருளை எங்கிருந்தும் வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் சந்தை சரக்காக கால்பந்தாட்டத்தை முதலாளித்துவம் மாற்றிவிட்டது.

மறுபுறம், ரஷ்யாவின் ரோமன் அப்ரமோவிச், எண்ணெய் வளம் கொண்ட அரபு உரிமையாளர் ஷேக் மன்சூர், கத்தார் முதலீட்டு ஆணையம், செல்சியா, மான்செஸ்டர் சிட்டி, PSG ஆகியவற்றின் வெற்றியின் வரலாற்றை தீர்மானிக்கிறது. இவற்றின் முதலீடு செய்திருக்கிறார்கள்.

Fly Emirates (Arsenal) மற்றும் Qatar Foundation (Barcelona) Audi (Bayern Munchen) போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் மூலமாக விளையாட்டின் வெற்றி, தோல்வியில் முதலீடு செய்கிறார்கள்.

இதுபோன்ற வணிகமய முதலீட்டை மையமாக வைத்துள்ள கால்பந்தாட்ட போட்டிகள் பாரம்பரியமான உழைப்பாளி மக்கள் விளையாடக் கூடிய கால்பந்தாட்ட கலாச்சாரத்தை முறித்து விடுகிறது.

இந்த இந்த முதலீடு சார்ந்த பணமயமாக்கல் மூலமாக கால்பந்தாட்டத்தின் ஸ்டேடியம் டிக்கெட்கள் விற்பது உரிமையாளர்களின் முதல் கவலையாக இப்போது இருப்பதில்லை. அவர்களின் சந்தை தயாரிப்புகளை விற்பது நுகர்வோர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உலகளாவிய ஈர்ப்பை உருவாக்குவது இவர்களின் பிரதான வேலையாக மாறிவிடுகிறது.

கால்பந்தாட்ட வீரர்களை ஒரு சந்தை பொருளாக மாற்றுகிறார்கள். அதேநேரத்தில் முதலீட்டாளர்களுக்கான நுகர்வோர் சந்தை தளத்தை உருவாக்குகிறார்கள்.

1990 களில் சராசரி ஐரோப்பிய உயரடுக்கு கால்பந்து வீரர்களுக்கும், சராசரி வீரர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதம் வேகமாக மாறத் தொடங்கியது.1990 ல், கால்பந்தாட்டம் உலகளாவிய கவரேஜுக்கு முன்பாக ஊதிய விகிதம் 5:1 ஆக இருந்தது.

உலகளாவிய கவரேஜ் கிடைத்த பிறகு 2010 ல் 48:1 என்ற அளவில் ஊதிய விகிதம் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
வீரர்கள் தங்கள் பிராண்ட்கள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உடல் உறுப்புகளுடன் கிட்டத்தட்ட பண்டம் போன்ற உருவங்களாக மாறுகிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கால்பந்தாட்ட வீரர்களை ஐரோப்பிய கிளப்புகள் இறக்குமதி செய்கிறது. இதற்காக முகவர்கள் அமைப்புகள் செயல்படுகிறது அவர்கள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். மறுபுறம், உலகளாவிய கவரேஜ் மூலமாக ஜெர்சிகள்,பிற தயாரிப்புகளை விற்பதற்கான சந்தைகளை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள். ரசிகர் கிளப்புகளை உருவாக்குவதற்கு நிதி உதவி செய்து உருவாக்கி வியாபாரமாக மாற்றுகிறார்கள்.

ஐரோப்பிய உயரடுக்கு கிளப்புகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த கால்பந்தாட்ட சந்தைகள் ஐரோப்பிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. கால்பந்தாட்ட முதலாளித்துவம் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கால்பந்தாட்டத்தில் உருவாக்கி உள்ளது.
விளையாட்டை பணம் கட்டுப்படுத்துவதால், பெருமையாகக் கூறும் போட்டித்தன்மை என்று அழைக்கப்படுவது வெறும் வெற்று வார்த்தைகளாக மாறிவிடுகிறது.

இருப்பினும், சிறிய அணிகளின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோய்விடவில்லை. விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடிய 90 நிமிடங்களில் பலம் வாய்ந்த அணிகளை சவால் விடுகின்ற செயல்களை சிறிய, வசதியற்ற அணிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது மேலும் கால்பந்தாட்டத்தில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐரோப்பிய சூப்பர் லீக்(ESL)போட்டி நடத்துவதற்கு முன்மொழிந்து உள்ளது. இந்தப் போட்டியில் 15 உயர் அடுக்கு அணிகள் மட்டுமே பங்கேற்கும். போட்டிகளில் போட்டித் திறன் வாய்ந்த அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்ற எல்லைகளை உருவாக்குகிறது. பெரிய அணிகள் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிட முடியும். முதலீட்டாளர்கள் இதிலிருந்து பெரிய லாபத்தை எடுக்க முடியும் என்ற நோக்கத்திற்காக இப்படிப்பட்ட ஒரு லீக் போட்டியை தேர்வு செய்துள்ளனர்.

மக்களின் கால்பந்தாட்டத்தை, கூட்டுணர்வு அமைதி ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய உணர்வு மிக்க விளையாட்டை செல்வம் சேர்க்கும் வெறித்தனமான விளையாட்டாக மாற்றுகிறது இந்த கால்பந்தாட்ட முதலாளித்துவம்.

ஏப்ரல் 2021 ல் ஐரோப்பிய சூப்பர் லீக்கின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் சில நாடுகள் உலக கால்பந்து சம்மேளனம், ஐரோப்பிய சம்மேளனம் உட்பட கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். கால்பந்தாட்டத்தை உயரடுக்கு விளையாட்டாக மாற்றும் செயல் என்று தெரிவித்தனர்.

தற்போது உள்ள முழு ஐரோப்பிய லீக் அமைப்பிலும், UEAF உட்பட போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு சிறிய அணிகள் உட்பட முறையான வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஒரு வகையான வாய்ப்புகள் உள்ளது. ஐரோப்பிய சூப்பர் லீக் (ESL) அந்த வாய்ப்புகளை பறிக்கிறது. சந்தையில் ஏகபோக உரிமை பெற எலைட் கிளப்புகளின் இந்த முயற்சி தொடர்ந்து மேலோங்கி வருகிறது.

இந்த முதலாளித்துவ போக்குகள் உழைப்பாளி வர்க்க மக்களிடமிருந்து விளையாட்டை பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறது.

அ.பாக்கியம்.

மேலும் வாசிக்க…
கால்பந்துபோட்டியும் இனவெறியும்..https://bakkiam.blogspot.com/2023/01/blog-post.html
மொராக்கோ முன்னேறுமா? ஆப்பிரிக்க கால்பந்தாட்டம் ஒரு பார்வை.
https://bakkiam.blogspot.com/2022/12/blog-post_42.html

விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா

விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா




” சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது”. 

இந்தியா ஆங்கிலேயர் வசம்…

  வாஸ்கோடகாமா  1498 ம் ஆண்டில் கடல் வழியே இந்தியாவுக்கு வந்தார் . இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது டச்சு மற்றும் ஆங்கிலேய வாணிக முகாம்களை  சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.  1619 ம்ஆண்டில் பிரெஞ்சுகாரர்களும்  பின்னர்  வந்தனர். அவர்களிடையே  நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவுக்கு  வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர். எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களிடம்  இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில்,  இந்த நூற்றாண்டில் இழந்தனர். 

  விடுதலைப்போரில் பெண்கள் 

  தமிழகத்தில் 17ம்நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலேயக் கம்பெனியின் ஆதிக்கம்  படிப்படியாக அதிகரித்தது.  19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில்    சில பகுதிகளைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டில் இந்தியா  விடுதலை பெறும் வரை, தமிழகம் ஆங்கிலேயரின் ஆட்சியின்வசமே இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் வெளியேற, ஆண்கள் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பெண்களும் இணைந்தே  போராடினர். போராடி சிறைக்கும் சென்றனர்.தமிழகப் பெண்களும் போராடி சிறைக் கொட்டடியில் வாழ்ந்தனர்.  ஆனால் அவர்களை பற்றிய பதிவு இந்திய வரலாற்றில் மிகக் குறைவாகவே உள்ளது .

இந்தியன் திரைப்படம் -மதுரைக்கார சொர்ணத்தம்மாள் 

  இயக்குநர் சங்கரின் “இந்தியன்” திரைப்படத்தில் ஒரு காட்சி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யா (நடிகை) உள்ளிட்ட சில பெண்களை ஆங்கிலேய போலீசார் கைது செய்து, அவர்களின் ஆடைகளைக் குறைத்து ஊருக்கு வெளியே இருட்டான பகுதியில் விடுவார்கள்.  திரையில் படம் பார்ப்பவர்களை பதறவைத்தக் காட்சி . ஆனால் இந்த காட்சியின் ஒரிஜினல் ஹீரோயின் மதுரைகார  சொர்ணத்தம்மாள் என்பது  மதுரைவாசிகளுக்குக்கூட தெரியாது. சொர்ணத்தம்மாளை  அவர்கள் அறிந்திருக்க வில்லைஎன்பதே உண்மை.

காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம். 

  மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்தின்போது  துணிச்சலின்  சிகரமாக திகழ்ந்தனர்.  சொர்ணத்தம்மாள் அந்நிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ம் ஆண்டு  காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார். இதன் மூலம், அவரது வேண்டுகோளான, “செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார் மதுரைக்கார சொர்ணத்தம்மாள்.. ஒவ்வொரு நாளும் கைது செய்யப்படுதும், பின்னர்  ஜெயிலில் வைக்கப்படுவதும்,பின்  விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக, தொடர் நடவடிக்கையாக  இருந்தது.

    ஆண்களுக்கு நிகராகப் போராடிய சொர்ணத்தம்மாள் 

  நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆண்களுக்கு நிகராக அதிகமாக போராடியவர் திருமிகு சொர்ணத்தம்மாள். இவர் போராட்டத்தின்போது, அடி உதையோடு பெண் என்பதால் அதிகமான அவமானங்களையும் சந்தித்தார். போலீசார் லத்தியால் அடித்ததால் அவரின் செவிமடல் கிழிந்தது; காது கேட்கும் திறனை இழந்தது.  நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழகத்தின் விடுதலைப் போராளிகளில் மதுரைக்கார சொர்ணத்தம்மாவும் ஒருவர்.  இவர் மதுரையில் கைத்தறி நெசவுத்தொழில் செய்தவர் .

    யார் இந்த சொர்ணத்தம்மாள் 

 மதுரை கடச்சனேந்தலில் வாழ்ந்தவர் சொர்ணத்தம்மாள் . விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறைவாசம், சித்ரவதை ஆகியவற்றை சொர்ணத்தம்மாளும் அனுபவித்தவர்.  சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என்.சேஷ பாகவதரின் மனைவிதான்,சொர்ணத்தம்மாள். சேஷபாகவதர் உறுதிமிக்க தேசியவாதி.  இவரது கோஷமும், வீர முழக்கமும் கம்பீரம் நிறைந்ததாகும்.  சேஷபாகவதர் 1930ம் ஆண்டு நடந்த கள்ளுக்கடை மறியலிலும், 1940ம் ஆண்டு நிகழ்ந்த அந்நிய துணி பகிஷ்கரிப்பிலும், 1941ம் ஆண்டு நடைபெற்ற தனி நபர் சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்று சிறையில் வாடி வதங்கி, வேதனை நிறைந்த  வாழ்க்கையை  அனுபவித்தவர்.  1942 ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். அவர் கைத்தறி நெசவுக் கம்பெனியில் வேலைபார்த்தார்.   சொர்ணத்தம்மாள், தன் கணவர் பணி புரியும் கம்பெனியில் தானும் வேலை பார்த்ததோடு,கணவரின்  சுதந்திர போராட்ட உணர்வு சொர்ணத்தம்மாளையும் தீயாய் பற்றியது. சுதந்திர உணர்வு  தொற்றிக்கொண்டது. சொர்ணத்தம்மாளும் சுதந்திரப் போராட்ட ஜோதியில் கலந்தார். அப்பொழுது அவருக்கு வயது 26 மட்டுமே.  

வந்தே மாதரம் குரலும் , கைதான சொர்ணத்தம்மாளும்

நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா காந்தி எடுத்த கடைசி ஆயுதம தான்  “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். இது தொடங்கிய உடனேயே  இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பற்றிக்கொண்டு பரவியது . 1942-ம் ஆண்டில்,  தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.  1930-களில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் மிகப்பெரிய சமூக, கல்வி, ஜாதி மற்றும்  பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் தினசரி கூலி வேலை செய்யும் சாதாரண குடும்பம். அப்போதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலே போலீசார் லத்தியைக் கொண்டு சுழற்றி அடித்து துவைப்பார்கள்  வந்தேமாதரம் என்று முணுமுணுத்தால்  லத்தியால் அடித்து துவைத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று விடுவார்கள். 1930ம் ஆண்டு முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்திற்குச் சென்றார் சொர்ணத்தம்மாள். வந்தேமாதரம் எனக் கோஷமிட்டார். இவர் குரல் அங்கு வந்திருந்த கூட்டம் முழுமைக்கும் உச்சஸ்தாயியில் கேட்டது. கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை, போலீசார் கோபம் கொண்டு  கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர்.  

சொர்ணத்தம்மாளின் தொடர் சிறை வாழ்க்கை 

 சிறைவாழ்க்கை முடிந்து, பின்னர்   விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் சேஷ பாகவதர்  ஜோடி, மீண்டும் 1940ம் ஆண்டில்,  அந்நிய துணை பகிஷ்கரிப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை காவல்துறையினர்  மீண்டும் கைது செய்து  ஒரு மாதம் சிறையில் அடைத்தனர்.  மூன்றாவது முறையாக  சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மதுரையில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு ஆறு மாதம் மேலும் அதிக சிறைத் தண்டனைக்காக  மாற்றப்பட்டார்.   “இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும். அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும். காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு” என்ற வெளிப்படையான, வீரமிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும்  நிறைந்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மீண்டும் தயாரானார் மறியலுக்கு. 

“தியாகி சொர்ணத்தம்மாளுக்கு தான் அணியும் கதர் சேலை என்பது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். அதை விடுதலை இந்தியாவின் கொடியாக மதித்தார். அதை அவர் பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். அதை அவமதிப்பதன் மூலம் சொர்ணத்தம்மாளை அடக்கிவிடலாம் என போலீசார் கருதினர்..அதன் பின்னரே அவர்மீது போலீஸ் தாக்குதல் 

    நடந்த இந்த தகவல்களை அவரே தனது வாக்குமூலமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1997ல்), ஒரு பத்திரிகை  பேட்டியில் தனது சுதந்திரப்போராட்ட வாழ்க்கை குறித்து சொர்ணத்தம்மாள் கூறினார்.. 

அவர் என்னைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போய் வந்தார். அப்படி நான்கு முறை அவர் ஜெயிலுக்குப் போனார். நீங்கள் மட்டும் போகிறீர்கள். நான் ஜெயிலுக்குப் போகவேண்டாமா எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னையும் அழைத்துக் கொண்டு போராட்டத்துக்குப் போனார். அந்த காலத்தில் “வந்தே மாதரம்” என்று சொன்னால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள்.

 நாங்கள் அப்போது மதுரை சௌராஷ்டிரா ஹைஸ்கூல் பின்புறம் உள்ள வாலண்டியர் சந்தில் குடியிருந்தோம். மறியலுக்குப் போனபோது அவரையும் என்னையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு விட்டுவிட்டார்கள். மீண்டும் மறியல் செய்தோம். மீண்டும் கைது செய்து மதுரை ஜெயிலில் ஒரு மாதம் அடைத்து விட்டார்கள். அவரும் நானும் மாறி மாறி சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போனோம்.

 மூன்றாவது முறையாக மறியல் செய்தபோது என்னை கைது செய்து வேலூர் சிறையில் ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தனர். நான்காவது முறையாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் மறியல் செய்தபோது தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி என்னை கைது செய்து ஒன்றாம் நம்பர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்தார். சிறிது நேரத்தில் லட்சுமி பாய் அம்மாவையும் கைது செய்து கொண்டு வந்தனர்.

 தீச்சட்டி கோவிந்தன் என் கதர் சேலையைச் சுட்டிக்காட்டி “யார் வாங்கிக் கொடுத்தது?” உன்னை யார் மறியல் செய்யச் சொன்னது ” எனக் கேட்டார். “யாரும் சொல்லல்ல. வெள்ளைக்காரன் நம்ம நாட்டைவிட்டு வெளியேறவேண்டும். நமக்கு விடுதலை வேண்டும்” என்று சொன்னேன். தடியால் அடித்தார். இரவு 11 மணி வரை போலீஸ்காரர்கள் என்னை அடித்தனர்.

உண்மையைச் சொல் உனக்கு சோறு போடுகிறோம்..” என்றனர். “உங்கள் சாப்பாடு வேண்டாம் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும்..” என்றேன். நீ கட்டியிருக்கிற சேலையைக் கொடு எனச் சொல்லி அடித்தனர். தடியால் என் காதில் அடித்தபோது காது மடல் கிழிந்து ரத்தம் வந்தது. அன்றிலிருந்து எனக்கு காது சரியாகக் கேட்காது..

காவல்துறை அடியால் காது கிழிந்த சொர்ணத்தம்மாள் 

   ஒவ்வொரு சிறை விடுதலைக்குப் பின்னும், மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும் சொர்ணத்தம்மாளைச் சமாளிக்க போலீஸ் நிர்வாகம் ரொம்பவே திணறியது. பெண் கைதி என்பதால் கைது, விசாரணை, சிறை என ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான வசதியை ஏற்படுத்தி தரவேண்டிய நிலையில் இருந்ததால், போலீஸ் சொர்ணத்தம்மாளை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது காவல்துறை நிர்வாகம். அப்படி ஒரு முறை சொர்ணத்தம்மாள் கைதான பின்னர்,  இவரையும் இவருடன் போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமிபாய் அம்மையாரையும் மதுரை – விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேசனுக்கு, தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி மூலம் அழைத்து வந்தனர். சற்று வேகமான விடுதலைக் கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை நோக்கி, போலீசார், “உன்னை மறியலில் ஈடுபடுத்தும் தலைவர் யார்? “என்று  கேட்டு அடித்துத் துவைத்தனர். காலையிலிருந்து இரவு 10 மணி வரை தடியால், செருப்பால், பெல்ட்டால், கையால், காலால் என எவ்வித பாகுபாடும் இன்றி உடலின் எல்லா இடங்களிலும் போலீசார் அடித்துக் கொண்டேயிருந்தனர். எதற்கும் துளியும் அசரவில்லை சொர்ணத்தம்மாள். ஒரு கட்டத்தில் பெரிய தடியால் காதிலும் முகத்திலும் அடிக்க ஆரம்பித்தனர் போலீசார். வலி தாங்க மடியாமல் கதறினார் சொர்ணத்தம்மாள். அப்போதும் உண்மையை போலீசிடம் சொல்லவில்லை. ஆனால் போலீசாரின் அடியால்,  அவரின்  காது ஜவ்வு கிழிந்தது. அன்றிலிருந்து சொர்ணத்தம்மாளுக்கு ஒரு காது செவிடாகிப் போனது. 

சேலை உருவப்பட்ட சொர்ணத்தம்மாளும், லட்சுமிபாயும், 

மற்றொரு முறை மறியல நடத்தியதால், சொர்ணத்தம்மாளையும் லட்சுமியம்மாளையும் காவல் நிலையத்திற்கு அடித்து இழுத்துவந்தனர்.    மறியலைக் கைவிட மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னதால்,,சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் இருவரையும்  உடுத்தியிருந்த கைத்தறி சேலைகளை உருவி கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக்கினர் ஒரு கட்டத்தில் சேலையை பிடித்து இழுத்தனர். சொர்ணத்தம்மாள் அதைத் தடுத்ததோடு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை பெல்ட்டாலும், லத்தியாலும் செருப்பாலும் அடித்தார்கள். அவர் அடிதாங்காமல் விழுந்ததும், அவர்  அணிந்திருந்த கதர் சேலையை அவிழ்த்துவிட்டு நீளம் குறைந்த, ஆளுக்கொரு தாவணி போன்ற குட்டை  சேலையை இருவரிடமும் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.  அதனால் உடலை முழுமையாக மறைக்கமுடியாது. குட்டை சேலை, அதை கட்டிக்கச் சொல்லி, பின்  சொர்ணத்தம்மாளையும்,லட்சுமி பாயையும் ஒரு காவல்துறை லாரியின் ஏற்றினர். லாரியில் டிரைவர் உட்பட பதிமூன்று காவல்காரர்கள் அதில் இருந்தனர். ஜெயிலில் அடைக்கப்போகிறோம் எனச் சொல்லியே சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஜெயிலுக்குப் போகவில்லை. போலீஸ் லாரி   பல சந்துகள்பொந்துகள் மற்றும் இருட்டான பகுதி வழியாகச் சென்றது. பயம் மற்றும் துக்கம் தாங்காமல் லட்சுமிபாய் அழுதார். சொர்ணத்தம்மாளும் பயத்தில் உறைந்து போயிருந்தார்..லாரி போய் கொண்டே இருந்தது.

நடுக்காட்டில், நடுஇரவில் இறக்கிவிடப்பட்ட விடுதலைப் போராளிகள் 

லாரியின் டிரைவர், காவல்காரர் ஒருவரிடம் “எங்க நிறுத்துவது” என்று கேட்கிறார். அதற்கு அவர் இன்னும் 15  மைல் போகட்டும் என்று சொன்னபோது நேரம் இரவு மணி ஒன்று. ஒரு காட்டுக்குள் லாரி சென்றது. அங்கேயே லாரியை போலீஸ்கார்கள் நிறுத்தினர்; நிறுத்தி சொர்ணத்தம்மாளையும், லட்சுமியம்மாளையும், இரு பெண்களையும், பெண்கள் என்றும் கூட பார்க்காமல், நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில்  இறக்கி விடுகிறார்கள் காவல்துறையினர். அப்போது ஒரு காவல்காரர் சொர்ணத்தம்மாளிடம், “சுயராஜ்யம் வேண்டும் சுயராஜ்யம் வேண்டும் எனக் கேட்டீர்களே .. இந்த பாதை வழியாக போ.. சுயராஜ்யம் கிடைக்கும்,” என்று கூறி  இரண்டு பெண்களையும் இறக்கிவிட்டு, “ஊரை விட்டு ஓடிப்போய் எங்காவது பிழைத்துக் கொள்ளுங்கள்” எனக் கிண்டலடித்தார். மீண்டும் மதுரை எல்லைக்குள் வந்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் எச்சரித்தும் அனுப்பினர். அதற்கும் சொர்ணத்தம்மாள்,கொஞ்சமும் பயமின்றி  “சுதந்திரத்துக்காக எந்தப் பாதையில் போகவேண்டும் என்று என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போங்கள். உங்கள் வேலை முடிந்தது..” என்றார். அதற்கும் கூட லத்தியால் செமத்தியாக அடி வாங்கினார் சொர்ணத்தம்மாள். காவலர்கள் அவர்களை நடுராத்திரில் அநாதரவான இடத்தில் விட்டுவிட்டு புறப்பட்டு விட்டனர். 

காப்பாற்றப்பட்ட சொர்ணத்தம்மாள் &லட்சுமிபாய் 

பின்னர் மனதில் சிறிதும் பயமின்றி, அரைகுறை ஆடையுடன் சொர்ணத்தம்மாள் , லட்சுமிபாயம்மாள் இருவரும் இருட்டில் நடக்க ஆரம்பித்தனர். அருகில் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை; வீடுகளும் இல்லை. கும்மிருட்டு. சுமார் ஒரு மைல்(1.6 கி.மீ) தூரம் சென்றதும், ஒரு  பையனும் இரண்டு பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்தனர். அவர்கள் சொர்ணத்தம்மாளிடம், ” எங்கே போகிறீர்கள்?” என்று  கேட்டார்கள்.சொர்ணத்தம்மாள், இந்த காட்டுக்கு வந்த கதையை, விடுதலைப் போராட்டத்தால், தான் போலீசிடம் பட்ட அவலத்தை, கொடுமையைச் சொன்னார்கள். அதன் பின்னர், அவர்கள் சொர்ணத்தம்மாளையும், லட்சுமிபாயையும், ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்று, சாப்பிடச் சொன்னார்கள்..  படுக்கத் தலையணையும் பாயும்  கொடுத்தார்கள். சொர்ணத்தம்மாளும் லட்சுமிபாயும் எதனையும் வாங்கவில்லை ; அவர்களிடம்  ஒன்றும் வேண்டாம் எனக் கூறிவிட்டோம். “எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று பின்னாளில் சொர்ணத்தம்மாள் சொன்னார்.  இருவரையும் ஏற்றி வந்த லாரி டிரைவர் கொஞசம் கருணை உள்ளம் கொண்டவர். அதனால் அவர், சொர்ணத்தம்மாளையும், லட்சுமி பாயையும் இறக்கிவிட்ட விஷயத்தை,  மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்கனித் தேவரிடம் போய் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் முத்துக்கனித் தேவர், அவர் கட்சிக்காரர்கள் சிலரோடு, இரவோடு இரவாக அந்த காட்டுக்கு வந்து, சொர்ணத்தம்மாளையும்,லட்சுமிபாயையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் மதுரை கீழ்பாலத்தில் இறங்கி வைகை ஆற்றில் குளித்துவிட்டு புதிய சேலையைக் கட்டிக்கொண்டனர்.  அங்கிருந்து குதிரை வண்டியில் மதுரை புதுமண்டபத்திற்கு உடன் வந்தவர்கள் கூட்டிச் சென்றார்கள். அங்கு போட்டோகடை வைத்திருந்த ராமலிங்கம் என்பவர் அவர்களுக்கு  சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். அவரும் சுதந்திரப்போராட்ட தியாகி. பிறகு நடந்தது குறித்த விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. .

சொர்ணத்தம்மாள் வாக்குமூலம் 

“போலீசார் இப்படி என்னை அவமானப்படுத்திய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் அதிகரித்தது. மேடையில் காந்தி பாட்டு பாடுவேன். ஒரு முறை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காந்திஜி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தொண்டர்களை மேடைக்கு வருமாறு காந்திஜி சொன்னார். நான் மேடைக்குப் போய் காந்திஜி காலைத் தொட்டு கும்பிட்டேன். காந்திஜி பதறிப்போய்என்னை ஏன் தொட்டுக் கும்பிடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்?” எனக் கேட்டார்” என்று பழைய தனது நினைவுகளை  ஒரு பேட்டியின்போது  பகிர்ந்து கொண்டார் சொர்ணத்தம்மாள்.. 

இந்திய சுதந்திர பொன் விழா மலரில் 

  இந்திய சுதந்திரப் பொன்விழா  மலரில்  1997 ம்ஆண்டு, தினசரி தீக்கதிர் வெளியிட்ட கட்டுரையில், சொர்ணத்தம்மாள் அவரது  பேட்டியில் “பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம்” என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டுமா என்று ஒரு வேளை மத்திய அரசில் ஆளுபவர்கள் கேட்டிருந்தால் கூட இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பாரதத்தாயின் செல்ல  மகள் சொர்ணத்தாயம்மாள்.  அவரின் இறப்பு எங்கே, எப்படி நிகழ்ந்தது என்ற தகவல் கூட நமக்குப் பதிவாக வில்லை;தெரியவில்லை. இப்படித்தான் இருக்கிறது நிறைய விடுதலைப் போராளிப் பெண்களின் நிலை .. 



 

 

 

– பேரா.சோ.மோகனா

தொடர் 29: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 29: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



பிரெஞ்சு சினிமா – 2
விட்டல்ராவ்

ஐரோப்பிய சினிமாவின் கதை சங்கதியை கிரேக்க புராணக் கதைகளும் ரோமானிய அரசியல் விசயங்களும் மற்றும் பைபிள், ஷேக்ஸ்பியர்களும் அவ்வப்போது நேரடியாகவும், நிழலாகவும் பாதித்து வருபவை ஃபிரெஞ்சு திரைப்படக் கலைஞர் ழான் காக்டோ JEAN CACTEAJJ வின் படங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமானவை. ஆர்.ஃபியஸ் மற்றும் எ டெஸ்டமெண்ட் ஆஃப் ஆர்ஃபியஸ் (Orphee, A Testament of Orpheus) என்பவை. அதே சமயம் ஒரு தேவதைக் கதையையும் திரைப்படமாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த பார்வையில் காக்டோவின் படங்கள் அவ்வளவும் தேவதைக் கதைக் காட்சி சித்தரிப்புக்களாகவே தோன்றுகின்றன. ழான் காக்டோ தன்னை ஒரு போதும், ஒரு திரைப்படக்காரன் என்று சொல்லிக் கொண்டதேயில்லை. மாறாக, ஒரு கவிஞன் என்றுதான் அவர் கருதி வந்தவர். தன் வாழ்நாள் கலைக்காரியங்களில் திரைப்படமெடுப்பதையும் பல கலை வடிவங்களில் ஒன்றாக அவர் வைத்திருந்தார். இருப்பினும் அவர் திரைப்படங்கள் ஃபண்டஸி Fantacy தேவதைக் கதைகள் என்பனவற்றையே புதிய வடிவில் புதிய மொழியில் காட்சிப் படுத்தியிருந்தது புதுமையும் மலர்ச்சியும் வியப்புமிக்கதுமானவை. அவரது திரைப்படங்கள் எண்ணிக்கையில் குறைந்தவை என்றாலும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதத்தில் கனவுமயமாய்த் தோன்றுபவை. 1946-ல் காக்டோ இயக்கிய, LABELLE ET LA $ ETE (Beauty and the Beast) மிகச் சிறந்த படமாய்ப் பேசப்படுவது அழகியும் மிருகமும் படம் வயது வந்த சிந்தனை முதிர்ச்சி பெற்றவர்களுக்கான தேவதைக்கதையைக் கொண்டது தேவதைக் கதைகள் இங்கிலாந்திலும் ரஸ்யாவிலும் மிகச் சிறந்த குழந்தைப் படங்களாய் எடுக்கப்பட்டு 90களில் தூர்தர்ஷனில் தொடர்ந்து ஒளிப்பரப்பியது நினைவிலிருக்கலாம். அந்த வகையில் இதே கதையை இருமுறை படமாய்ப் பார்த்தேன். Beauty and the Beast திரைப்படம் காக்டோவின் இரண்டாவது ஆக்கம், 2-வது உலகப் போரின்போது ஜெர்மன் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு திரைப்பட ஆக்கம் மீண்டும் அதன் பெருமைக்குரிய இடத்தையடைவதில் காக்டோவை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர் சினிமா ரசிகர்கள். பிரான்சின் கலாபிமானிகளால் அழகியும் மிருகமும் அதை முன்னெடுக்கக்கூடுமென கருதப்பட்டது.

அதே சமயம், மறுபுறம், பொதுமக்களின் ரசனையிலிருந்து காக்டோ தூரம் விலகி மேல் தட்டு ரசிகர்களுக்கான சினிமாக்காரன் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார். இதைக் கருத்தில் கொண்டு மேல்தட்டு கீழ்தட்டு கலாரசிகர்களும் கண்டு ரசித்திடும்படி காக்டோ பல நூற்றாண்டுப் பழங்கதையான அழகியும் மிருகமும் எனும் (Fair Tale) தேவதைக் கதையைப் படமாக்கினார். அழகி ஒருத்தியின் தந்தையை உடலெங்கும் உரோமம் முளைத்து சூழ்ந்த மிருகம் ஒன்று காட்டிலுள்ள தன் கோட்டையில் சிறை வைக்க, அழகி தன் தந்தைக்குப் பதிலாக தன்னை பணயம் வைத்து, அவருக்குப் பதிலாக தன்னை சிறையில் வைக்குமாறு கேட்க, மிருகமோ அவள் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. மிருகத்தின் அன்பு மனம் அழகிக்குப் புரிகிறது.

எனவே ஒப்புக் கொள்ளுகிறாள். காக்டோ இந்த பழங்கதையை தனது கலைபூர்வ மனத்துடிப்புக்கு வடிகாலாக பார்க்கிறார். நேரான இக்கதையை அவர் வெட்டி ஓட்டுகிறார். ஒரு வியத்தகு மாய மாளிகையுள் இருவரையும் நடமாட விடுகிறார் காக்டோ. மாயக் காட்சி காட்சிகளால் நாம் நாஜி ஆக்கிரமிப்பால் பிரெஞ்சு கலை கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை நாம் உணருகிறோம். இமைக்கவும் தவறுகிறோம். இந்த காட்சியாடல்கள் ஒவ்வொரு சட்டத்தையும் ஒளிப்பதிவாளர் ஹென்றி அலிகானின் Henri Alikan காமிரா மாய வித்தைப் புரிந்திருக்கிறது.

இந்தக் காட்சிகளில் அழகி சும்மா நடந்துபோகவில்லை. மிதந்து செல்லுவதாய் நாம் பார்க்கும் வகையில் காமிரா விந்தையூட்டுகிறது. மெழுகு வர்த்திகள் வழக்கமாய் அவற்றுக்கான தாங்கியில் இல்லாமல் சுவர்களில் பதிந்த மனிதக் கைகளில் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. முகம் பார்க்கும் நிலைக் கண்ணாடிகள் நீர்த்தடாகமாய் மாறும் விந்தை. விளக்கொளிகள் தம் போக்கில் எரிவதும் அணைவதுமாய் இருக்கின்றன. சிலைகள் உயிர் பெறுகின்றன. கனவு எனும் ஃபிராய்டின் தத்துவத்தை, காக்டோ இந்தக் காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார். மிருகம் கடைசியில் சாபம் நீங்கி அழகிய இளவரசனாக உருமாற இருவரும் மனமகிழ்ச்சியோடு வாழ்வதாக கதையும் திரைப்படமும் முடிகிறது.

மிருக ரூபத்தில் நடிக்கும் அன்றைய பிரெஞ்சு நடிகர் ழான் மரியா JEAN MARAIS அற்புதமாகச் செய்திருக்கிறார். இப்படத்தைப் பார்த்த அன்றைய புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கிரேடா கார்போ, என் மிருகத்தையே எனக்குத் திரும்பக் கொடுங்கள் என்று கூறியது படத்துக்கும் நடிகரின் நடிப்புக்குமான புகழாரமாய் கொள்ளப்பட்டது.

ழான் காக்டோ கிரேக்கப் பழங்கதை, ஆர்ஃபியஸ் Orpheus என்பதைக் கொண்டு 1950ல் Orphee என்ற திரைப்படத்தை எடுத்து இயக்கினார். இப்படங்களை 70களின் தொடக்கத்தில் சென்னை பிரெஞ்சு கலாச்சார மைய திரையரங்கில் பார்த்தேன். காக்டோ நன்கறியப்பட்ட கவிஞர். இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான ஆர்ஃபியஸ் 40களிலிருந்த ஒரு கவிஞனாக காக்டோவின் திரைக்கதை அமைகிறது. இவன் மீது பொறாமைக் கொண்ட ஒருவன். இவன் அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள்காரர்களாக சாலையில் இடித்துத் தள்ளப்பட்டு மரணிக்கிறான். அப்போது அங்கு தோன்றும் மரண தேவதை இளவரசிபோல தோன்றவும், கவிஞன் ஆர்ஃபியஸ் மயங்குகிறான். ஆனால் ஆர்ஃபியஸால் கைவிடப்பட்ட அவனது மனைவி யூரிடைஸ் Eurydice திடிரென இறக்கவும், அவன் பாதாள லோகத்தை அடைந்து தன் மனைவியை மீிட்டுக் கொண்டுவரப் போகிறான். இந்தப் படத்தின் நகர்வுகள் உயர்ந்த கவித்துவ கற்பனை வடிவங்களாய்த் தோன்றுமாறு நிக்கோலஸ் ஹேயர் Nicolas Hayer என்ற ஒளிப்பதிவாளரின் காமிரா விந்தை புரிந்திருக்கிறது. ஆனாலும் குழப்பம் சூழ்ந்த அனுபவமாகிறது.

ஆர்ஃபி படத்தின் தொடர்போல ழான் காக்டோ 1959ல் The Testament of Orpheus என்றதொரு ஃபண்டஸி படத்தை, ரோலண்டு போண்டாய்ஜோ என்ற Roland Pontoizeau திறமையான ஒளிப்பதிவாளரின் அற்புத, காமிரா கோணங்கள் மற்றும் தந்திரக் காட்சிகளைக் கொண்டு தயாரித்து வெளியிட்டார். மேற்கூறிய திரைப்படங்களில் இயக்குனர் ழான் காக்டோவே முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃபண்டஸி- மாய உலகு என்பதால் நிஜமான காலத்துக்கும் யதார்த்த நிலைக்கும் வெளியிலிருந்து நிகழ்வதால் ஒரு கவிஞனின் அனுபவங்களாலான காட்சிக் கூறலுமான படம் இது. ஆர்.பி.யைவிட டெஸ்டமெண்டு ஆஃப் ஆர்ஃபியஸ் பல படிகளில் சிறப்பாக வந்திருக்கிறது. கவிஞன் பழைய கிரேக்க நீதி தேவதையான ஹியூடபைஸ் Heutebise என்ற நடுத்தர வயது பெண்ணுக்கு முன்பாக பல்லாஸ் அதீனாவின் மாளிகையில் நிறுத்தப்படுகிறான். நீதிபதிகளில் ஒரு ஆணும் நீதிதேவதையும் கவிஞன் ஆர்ஃபியஸை மாறி மாறி கேள்விகள் கேட்கின்றனர். கேள்விகளும் பதில்களும் அற்புதமானவை. அவை யாவும் நவீன கவிதைகளுக்கும் சமகால கவிஞர்களுக்கும் (குறிப்பாக எஸ்ரா பெளண்ட் நெரூடா, யெவ்குஷெங்கோ, பிரமிள் தர்மு சிவராம் சரிபோகும்படியாய் தோன்றுபவை. சர்வதேச இலக்கிய சூழலிலும் மலையாள கலையிலக்கிய வெளியிலும் கம்பீர ஆக்ருதியுடன் வெளிவந்த விமர்சகர் எம்.கோவிந்தன், இவர் நோக்குக் குத்தி (Scare Crow) என்ற நீண்ட கவிதையை எழுதினார். அதையே கவிதை நடை மாறாது தம் மகன் மணவேந்திரநாத் நடிக்க திரைப்படமாக்கினார். கவிதைத் திரைப்படம் அது. காக்டோவின் படம் கவிதையைக் காட்சி நகர்வுகளாய் பிம்பங்களைக் கொண்டு பார்த்த அனுபவபூர்வமானது. ஆர்.பியின் வளர்ப்பு மகன் செகஸ்ட் GeGeste செகஸ்ட் தன் தந்தைக்கு கொடுத்த செம்பருத்தி மலரைக் குறித்த கேள்வி கேட்கப்படுகிறது. கவிஞனின் பதில்கள் விரிவடைகையில் திரைப்பட ஆக்கமும் கவிதைப் புனைவும் கேள்விக்குள்ளாகின்றன. அப்பாவித்தனமும் குற்றமாக சுமத்தப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின் ஆர்ஃபியஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதீனா எனும் கிரேக்க தேவதையிடம் அனுப்பப்படுகிறான். அவள் வீசும் ஈட்டி கவிஞனின் நெஞ்சில் பாய்ந்து இறக்கிறான். இடையில் கவிஞன் ஜிப்ஸிகளை, ஒரு மகத்தான திரைச்சீலையை பார்க்கிறான். இறுதியில் கிரேக்க நாடகமேதை சோஃபக்ளீஸ் எழுதிய ஈடிபஸ் நாடக பாத்திரமான ஈடிபஸ் தன் தாயை உடலுறவு கொண்ட பின் குற்றத்தை உணர்ந்து கண்களைக் குத்திக் கொண்டு குருடனாய் நடந்து போவதோடு படம் முடிகிறது. ழான் காக்டோவின் குரல் ஆரம்பத்தில் கேட்கும்போது அவர் நம்மிடம் கூறுகிறார்.

தான் காணும் கனவையும், படம் பார்க்கும் ஜனங்கள் காணும் கனவையும் இணைந்தே பார்க்கும்படி திரைப்பட இயக்குனரால் செய்ய முடியும். அதே சமயம் பொய்யான மாயக் காட்சிகளை உண்மையும் யதார்த்தமானதாயும் செய்து காட்ட இயலும். எனது திரைப்படம் வெறும் ஒரு ஆடை அவிழ்க்கும் காட்சியே இங்கு என் உடலை களைந்துவிட்டு எனது ஆத்மாவை நான் காட்டுகிறேன். என்கிறார் காக்டோ. அவரே ஆர்ஃபியஸாக நடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்பட மேதை லூயி புனுவெலை (Luis Bunuel) அறிந்தவரை, உயர்ந்த சர்ரியலிஸ திரைப்படங்களையும் அவற்றினூடாக சமூக நடப்பியல் அங்கதங்கள் மற்றும் மத ரீதியான பைத்தியக்காரத்தனத்துக்கான எள்ளல்களை வெளியிட்டவர் என அறியப்படுபவர்.

சரீ ரியலிஸம் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கவனிக்கிறது. காதலையும் காமத்தையும் புகழ்ந்து போற்றுகிறது. 1919ல் தன் அறையில் ஆந்த்ரே பிரதான் Andre Breton ஒரு ஜன்னல் புறமாய் உட்கார்நதிருந்தவ், ஜன்னலால் ஒரு மனிதன் இரண்டு பாகங்களாய்த் துண்டாகி நிற்பது போன்று தோற்ற உணர்வையடைந்தார். இந்த புதிய பார்வை உணர்வு விளைவாக கலையிலக்கியத்தில் ஒரு புதிய பாணி சர்ரியலிஸம் என்று அழைக்கப்பட்டது. ஆந்த்ரெ பிரதான் நரம்பியல் மருத்துவர் ஒருவரின் கீழ் மாணவராய் கொஞ்சகாலம் இருந்த சமயம் உளவியல் அறிஞர் சிக்மண்டு ப்ராய்டின் தானியங்கிக் கோட்பாட்டால் Automatism ஈர்க்கப்பட்டார். பிரதோன், ஃப்ராய்டு வழியில், நோயாளிகள் தங்களைப் பற்றி தாங்களே விளக்கிக் கூறுமாறு செய்து அதன்படி சிகிச்சை மேற்கொண்டார். பிரதோன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். காலப் போக்கில் அக்கட்சியின் இறுக்கமான கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதை சக சர்ரியலிஸ்டுகள் விரும்பவில்லை என்பதால் அவர்களை இயக்கத்திலிருந்து வெளியேற சொன்னார். தொடர்ந்து, நாவல் என்ற உருவக் கூற்றை கடுமையாக எதிர்த்த சரீரிய லிஸ்டான பிரதோன் தானே “நாடியா Nadja என்ற நாவலை எழுதி வெளியிட்டது நகைப்பான ஒரு முரணாக ஆனது. இதைத் தொடர்ந்து லூயி புனுவெல் செய்த திரைப்படங்கள் சிகரத்தைத் தொட்டன.

மார்க்ஸின் பிரக்ஞையை அரசியல் கட்சியாக கட்டும் கம்யூனிஸ்டு அரசியல்வாதிகளின் பிரக்ஞைகளுடைய விட மேன்மை மிக்கதும் முற்றிலும் வேறானது என்றும் மூல தத்துவமான மார்க்ஸிசத்தை கொண்டாடி விமர்சனம் வைத்தனர் சரீரியலிஸ்டுகள். விரைவிலேயே இரு இயக்கங்களுக்கும் ஒட்டாத தன்மை நிலவியபோது சர்வதேச கலாச்சாரப் பாதுகாப்பு காங்கிரஸில் பேசப்பட்டது. இதையடுத்து சரீரியலிஸ்டுகளுக்கும் அரசியல் ரீதியான ஆசார கம்யூனிஸ்டுகளுக்குமாயிருந்த மெல்லிய உறவு இழை முற்றிலுமாக அறுந்து போனது.

ரியலிஸம் எனும் யதார்த்தத்துக்கு, Sur என்ற பிரெஞ்சு சொல் மேலே, அப்பால் சேர்கையில் யதார்த்தத்துக்கு அப்பால் Surreallism என்றாகிறது. மிகச் சிறந்த சரீரியலிஸ ஓவியர் சால்வெடார்டாலி. ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிரான்சில் குடியேறிய ரஷ்ய யூத ஓவியரான மார்க் சகல் மற்றொரு உலகப் புகழ் பெற்ற சரீரியலிச ஓவியர், என்னை பிரெஞ்சு சினிமாவைப் பார்க்க ஊக்கப்படுத்தி பிரெஞ்சு கலாச்சார மையத்தின் திரைப்படச் சங்கத்தில் உறுப்பினராக்கிய பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வெ.ராமின் அண்ணன் காலஞ்சென்ற வெ. ஜெயராமன் எனது சக ஓவியர் என்பதோடு மிகச் சிறந்த சர்ரியலிஸ ஓவியருமாவார். லூயிபுனுவெல், சால்வெடார் டாலி, பாப்லோ பிக்காசோ போலவே ஸ்பெயின் தேசத்தவர். அத்தேசத்தின் தென்பகுதியின் பெயர் அந்தாலு. (Andalu), 1928–ல் அந்தாலுசியன் நாய் (Un Chien Andalou= An Andalusian Dog) என்ற மெளனப் படத்தை சர்ரியலிஸ ஓவியர் சால் வெடார் டாலியுடன் சேர்ந்து இருவருமாய் எழுதிய கதையை இருவரும் நடித்து தயாரித்து இயக்கினார். இப்படமே புனுவெலுக்கு முதல் முயற்சி. இது காரிமிருந்து வந்த நமது திரைப்பட வரலாற்று பிரக்ஞைக்குள் தூக்கி வாரிப்போட்ட காட்சி ஒன்று. குளோஸ் அப் காட்சியில் மனித முகம் அதன் இடது கண் விழியை பிளேடால் வெட்டுகிறது என்ன இது.

மத நிறுவனங்கள், சமூகத்தின் பிற இறுக்கமான ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவை மனிதனின் இயல்பாக எழும் அசைகள், விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த பெரும் தடையாக இருந்து அதன் விளைவாக வக்கிரங்கள் எழுகின்றன என்று இப்படம் சொல்லுகிறது. இதையே இவருக்கு முன்பாகவும் பலர் சொல்லியிருக்கிறார்கள், என்றாலும் திரைப்படமென்ற காட்சி ரூப சாதனத்தின் மூலம் அதை வெளிப்படுத்த புனுவெல் கையாண்ட உத்திதான் அதை முதன்மையாக்குகிறது. இது ஒரு குறும்பட விரிசையில் வைக்கப்பட்டாலும் திரைப்பட வரலாற்றில் முதல் சர்ரியலிஸ சினிமா என்று கருதப்படுகிறது. கண் விழியை பிளேடு ஒன்று குறுக்காக வெட்டுவதான காட்சி எதன் குறியீடு? விளக்கங்கள் நிறைய வைக்கப்பட்டன. முழு நில வொன்றை நாம் பார்க்கும்போது, கரிய மேகம் ஒன்று அதை மறைக்கும் கொடுமையை இது குறிப்பதாக ஒரு விளக்கம்.

ஒரு சமயம், பால்கனி ஒன்றில் இரவு நேரத்தில் ஒருவன் பிளேடு ஒன்றை கூர்மையாக்கும் காட்சி. அந்த மனிதன் ஜன்னல் வழியாக முழு நிலவைக் கண்டு ஆனந்திக்கையில் ஒரு கரிய மேகம் நிலவை நோக்கி மெல்ல நகர்கிறது. ஒரு பெண்ணின் அகல விரிந்த கண்களோடான முகம். பிளேடின் கூறிய நுனி கண்ணருகே வருகிறது. ஒரு சிறிய மேகம் நிலவின் முன் நகர்ந்து அதை மறுக்கிறது. கண் முன் பிளேடு நகர்ந்து கண்ணைக் கீறிப் பிளக்கிறது. ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு- அதன் சாத்தியக் கூறுகள் பிளக்கப்படும் கொடுமையாக இது கொள்ளப்படுகிறது. சினிமாவில் லூயி புனுவெல் என்ற வித்தியாசமான படைப்பாளி உதித்து விட்டதை அறிவித்து விட்டது இத்திரைப்படம்.

புனுவெல், Fever Rises in Elpao எனும் படத்தை மெக்சிகோ சூழலில் 1959-ல் செய்தார். இப்படம் அவரது முத்திரையாக சர்ரியலிஸ கூறுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. என்றாலும் கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டதொரு அரசியல் படம். எல்பவோ ஒரு சிறு தீவு. அதன் அதிபரான மெக்சிகோவின் உபஜனாதிபதி சற்று உளநிலை சமன்பாடற்ற கோபக்காரர். மனைவி மீது சதா சந்தேகம் கொண்டலைபவர். பாலுணர்வு மிக்க அழகிய நடுத்தர வயதுக்காரியான அவர் மனைவிக்கும், அவரது அந்தரங்க செயலாளருக்கும் கள்ள உறவு இருந்து வருவதை உப ஜனாதிபதி தீவிரமாக சந்தேகிக்கிறார்.

செயலாளருக்கு எப்படியும்தானே உபஜனாதிபதியாக வேண்டும் எனும் அதிகார ஆசை வரவும் உபஜனாதிபதியின் மனைவியும் தன் கள்ளக் காதலியுமானவனைத் தூண்டுகிறான். தன் சுதந்திரமான காதல் காமக் களியாட்டத்துக்கு தடையாக நிற்கும் கணவனை அவர் அரசாங்க நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ஆளை வைத்து சுட்டுக் கொன்றுவிட அந்தப் பழி தீவிரவாதிகள் மீது விழச் செய்கிறாள். மெக்சிகோ தலை நகரிலிருந்து எல்பவோ உப தலைவரின் செயலாளரை உப ஜனாதிபதியாக்கிவிட்டுப் போகிறார். தீவிரவாதிகளின் பலம் அதிகாரிகையில் கள்ளக் காதலி உப ஜனாதிபதியுடன் மெக்சிகோவுக்கு தப்பியோடிவிட துரிதப்படுத்துகிறாள். விமான நிலையம் கண்காணிப்புக்கும் பாதுகாப்புக்கும் கொண்டுவரப்படுகிறது. அவளை முன்னால் காரில் விமான நிலையத்துக்கு ஓடி விடும்படியும், தான் பின்னால் வருவதாயும் உபஜனாதிபதி ஏற்பாடு செய்கிறான். அந்த ஏற்பாட்டில் அவளையும் ஒழித்துவிட திட்டமிடுகிறான். கார் ஏர்போட்டே நெருங்கவும், கேட் சாத்தப்பட்டு அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறி காரை செலுத்த முற்படுகையில் கார் காவலர்களால் சுடப்பட்டு, சுவரில் மோதி தீப்பிடித்து எரிய அவளும் மாண்டுபோகிறாள். இது புனுவெலைவிட மேலும் சிறப்பாக எடுக்கக்கூடிய இயக்குனர்கள் உண்டுதான் என்றாலும்அவரது முத்திரை என்று சிலவற்றை இப்படத்தில் அரிதாக சில காட்சிகளில் காணமுடிகிறது.

1958-ல் புனுவெல் மெக்சிகோவில் இயக்கிய நாஸரின் குறிப்பிடத்தக்க படம். கிறிஸ்து பிறந்த இடம் நாஸரெத். அதனால் அவரை நஸரேயன் என்று அழைப்பதுண்டு. நாஸரின் படத்தில் நஸரியோ எனும் கிறிஸ்தவ பாதிரியாரின் மையப் பாத்திரத்தினூடே கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை மையமாய்க் கொண்டது கதை. அவரைச் சுற்றி மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அண்டாரா எனும் விலை மாது, அவள் மேல் தீரா ஆசை கொண்ட குள்ள மனிதன் உஜோ. காதலனால் கைவிடப்பட்ட அழகிய இளம் பெண் பீட்ரைஸ். அவள் காதலன் பிண்டோ, நாஸரின் விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் செயல்பாடுகள் வழியே அவரைப் போலவே வாழ முயற்சிக்கிறார். ஒரு நாள் அவரது வேலைக்காரியே அவரது பணம், உடை இதர பொருள்கள் யாவற்றையும் திருடிக் கொண்டு ஓடிவிடுகிறாள். ஏழைகள், திருடர்கள், விபச்சாரிகள் என்று மோசமான சூழலிலிருக்கிறார் பாதிரியார் அவரது ஏழ்மை, அப்பாவித்தனம் கண்டு காசு தர்மம் செய்து விட்டுப் போகிறார்கள். அந்தக் காசையும் ஏழைகளுக்கு அவர் கொடுத்துவிட்டு உணவுக்கும் பிறரை எதிர்பார்க்கிறார். அண்டாரா எனும் விபச்சாரி சக விபச்சாரியோடான சண்டையில் பலமாக காயப்பட்டதுடன் எதிரியைக் கொன்று விடுகிறாள். போலீசிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவாலயத்துள் நுழைந்து நாஸரிடனிடம் அடைக்கலம் கேட்கிறான். அவரும் மனமிரங்கி அவளுக்குப் புகலிடம் அளிப்பதோடு மருத்துவமும் பார்த்து குணப்படுத்துகிறார்.தேவாலயத்துக்குள் போலிசு நுழைய முடியாது. பீட்ரைஸின் காதலன் பிண்ட்டோ அவளை கிடாசிவிட்டுப் போய்விடவும் திக்கற்ற அவள் பாதிரியாரிடம் சேர்கிறாள். பாதிரியார் நாஸரினுக்கும் பெண்களுக்கும் தகாத உறவு இருப்பதாக ஊரெல்லாம் கசமுசா குசுகுசு. இது மதமேலிடத்துக்கு தெரியவரவும் நாஸரின் பாதிரியார் பதவியை இழக்க நேரிடுகிறது. நாஸரின் தேவாலயத்தை விட்டு சாதாரண பிஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீரஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீட்ரைஸும் கூட வருகின்றனர். அவர் எவ்வளவு தடுத்தும் வருகின்றனர். பெண்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நாஸரின் காட்டும் பரிவைக் காதலாகவும் நம்பி இருவருக்குள்ளும் பொறாமையும் ஏற்படுகிறது. நாஸரின் குறைந்த கூலிக்கும் ஒப்புக் கொண்டு கூலி வேலையில் சேருகையில், மற்ற கூலிகள், அதை எதிர்க்கவும் வேலையுமிழந்து திரிகிறார்.

அவ்வூரிலுள்ள அனாதைக்குள்ளன் உஜோ அண்டோரா பேரில் அபரிதமான பிரேமை கொள்ளுகிறான். ஊரில் பிளேக் நோய் பரவி மக்கள் மரணமுறுகையில், ஒரு நோயாளிப் பெண்ணை இறைவனிடம் பிரார்த்து பிழைக்கச் செய்கிறார் நாஸரின். அவரை தெய்வாம்ஸமாய் எண்ணி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டுகின்றனர். அவர்களைத் தேடி வரும் போலீசு பாதிரியாரை விட்டு விட்டு பெண்களைக் கைது செய்கிறது. அந்த சமயம் அங்கு வரும் பிண்ட்டோ தன் காதலி பீட்ரைஸை விடுவித்து அழைத்துப் போக, கொலைக் குற்றத்துக்காக அண்டாராவை மட்டும் கொண்டு ஓடுகிறான். கத்தோலிக்கப் புரோகிதர் ஒருவரின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மைமிக்க வாழ்க்கையைச் சொல்லும் இப்படம் கான் திரைப்பட விழா விருதும் கத்தோலிக்கத் திருச்சபை விருதும் பெற்றது.

லூயி புனுவெல் ஸ்பெயினில் காலந்தா (GALANDA) எனும் ஊரில் 1900ல் பிறந்தவர். சர் ரியலிஸ ஓரியர் சால் வெடார் டாலியையும் நாடகாசிரியர் ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா (Federico Garcialorca) வையும் சந்திக்கும் வரை கிறிஸ்தவ மதப் பிரிவான ஜெசூட் மத காரியத்துக்கான படிப்பை படித்தவர். பிற இம்மூவரும் இணைந்து செய்த முதல் சர் ரியலிஸ திரைப்படம் அண்டோலேசியன் நாய், ஓராண்டு கழித்து, ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது புனுவெல் அமெரிக்காவுக்கும் அங்கிருந்து மெக்ஸிகோவுக்கும் இறுதியாக 1955ல் பிரான்சுக்கும் மாறிக் கொண்டார். இவரது படங்கள் கான் திரைப்பட விழாக்களிலும், வெனிஸ் பட விழாக்களிலும் வெவ்வேறு விருதுகள் பெற்றவை. லூயி புனுவெல் 1983-ல் காலமானார்.

ஜோசப் கெஸ்ஸெல் Joseph Kessel) என்பவரின் புகழ் பெற்ற நாவலைக் கொண்டு 1967ல் புனுவெல் இயக்கிய ஜனரஞ்சகமான திரைப்படம் பெல்டி ஜோர் Belle De Jour நல்ல வசதி மிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அதே சூழலிலுள்ள அழகியொருத்தி தன் டாக்டர் கணவனுக்குத் தெரியாமல் பணம் – உடல் இச்சை நிமித்தம் விபச்சாரத்தில் ஈடுபடும் செவரின் Severine என்பவளைப் பற்றிய படம் பெல்டி ஜோர். புனுவெல் தம் படத்தை சிறிதும் தயங்காது இது ‘‘ப்ளூ ஃபிலிம்’’ என்று சொன்னதோடு, இப்படம் கற்புத்தன மான பாலுறவு விசயத்தை கண்டறியும் Chaste Eroticism) வகைமையது என்றார். செவரினின் கணவன் அழகிய இளம் டாக்டர் பீர் Pierre டாக்டர் மருத்துவமனைக்குப் போய்விட்டு மாலையில் வீடு திரும்புமுன் செவரின் திரும்பிவிடுவாள். செவரின் திடச் சித்தமுள்ள குடும்பப் பெண். கணவனின் பணக்கார நண்பன் அவளுக்குப் பண ஆசைகாட்டி பாரிஸிலுள்ள அதி உயர்ந்த விபச்சார விடுதியில் இணைந்து பகல் நேர விபச்சாரியாக தொழில் செய்ய வைக்கிறான் அங்கே ஒரு நாள் மோசமான திருடன். கொலைகார இளைஞனிடம் சிக்கி மனமும் பறிகொடுக்கிறாள். அவனோ இரவுக்கும் அவளை அழைக்க, செவரின் மறுக்கிறாள். செவரின் விபச்சாரத் தொழிலுக்கென தன் பெயரை ‘‘பெல் டி ஜோர்’’ என்று எல்லோருக்கும் சொல்லி வருவாள். விடுதி சொந்தக்காரி உட்பட யாருக்குமே தன் பெயரை தொலைப்பேசி எண்ணை, இருப்பிடத்தை தருவதேயில்லை. இரவு மட்டுமே வர மறுக்கும் அவள் இறுதியில் மனசாட்சி வாட்ட தொழிலுக்கு கும்பிடு போட்டுவிட்டு விடுதிக்காரியிடம் விடை பெற்று வருகிறாள். அதே சமயம் அவளைப் பின் தொடர்ந்து காரில் வந்த ரெளடி அவளது இருப்பிடம், பெயர், கணவன் எல்லா விவரமும் அறிந்து வீட்டுக்குள்ளும் வந்து அவளை வற்புறுத்துகிறான். கணவனின் புகைப்படத்தைப் பார்க்கிறான். தன் சுதந்திரமான சுகவாழ்வுக்கு குறுக்கே இருக்கும் டாக்டர் பீரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடுகையில் போலீசாரால் சுடப்பட்டு இறந்துபோகிறான்.

இந்தப் படத்தில் ‘‘செக்ஸ்’’ காட்சி எதையுமே வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பல காட்சிகள் கனவுகளாகவும் கவித்துவத்தோடும் வந்து போகின்றன. புனுவெல் நம்மை கனவு நிலைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் போய் போய் வர இழுத்தடிக்கிறார். கச்சா வீர்னியின் (Sach vierny) காமிரா அப்பழுக்கற்ற காட்சி சட்டகங்களை நகர்த்துகிறது. வெனிஸ் திரைப்பட விழா 1968ல் சிறந்த படமென்ற விருது பெல் டி ஜோருக்கு கிடைத்தது.

1972ல் லூயி புனுவெல், ‘‘பூர்ஸ்வாவின் நளினமான கவர்ச்சி The Discreet charm of the Bourgeoisie)’’ என்ற நகைச்சுவை இழையோடும் அற்புதமான சர்ரியலிஸ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். நல்ல சமூக அங்கதம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஏராளமாக பகல் உணவு, இரவு உணவு விருந்துகள் வீடுகளிலும் விடுதிகளிலுமாய் இடம் பெறுவதும் துரித கதியில் அது முழுமை பெறாமல் பாதியிலோ கடைசியிலோ தோல்வியில் முடிவது எதிர்பாராத நிகழ்வுகள். மிகவும் ரசிக்கத் தக்க காட்சியாடல்கள். சிந்தனை மேலிட்ட பகற்கனவுகளும், சிறு உறக்கம் மேலிட்ட கனவுகளுமாய் விபரீதமான நிஜம்போன்ற சித்தரிப்புகள் சர்ரியலிஸ வழியில் படமாக்கப்பட்ட நிகழ்வு ஓட்டங்கள்.

இராச்சாப்பாடு (Dinner) என்பது ஐரோப்பிய நாடுகளில் சமூகத்தின் உயர்மட்ட குடிகள் தங்கள் உண்ணும் கலையை ருசியை, அதன் போது கடைபிடிக்கும் உயர்ந்த பண்பாட்டை, தங்கள் பணம் பகட்டு கையிருப்பு செல்வாக்கையெல்லாம் காட்டிக் கொள்ள ஒன்று கூடும் சமய சந்தர்ப்பமாய் நிலவி வருகிறது. இம்மக்களின் வாழ்வில் டின்னர் எனும் விசயம் மற்றெல்லாவற்றையும் விடவும் உற்சாகமிக்க கெளரவமிக்க கனவான் தனத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று தேவாலய பிஷப். சிறு வயதில் தன் வீட்டுத் தோட்டக்காரன் வேலை செய்வதைக் கவனித்து தோட்ட வேலை யாவும் கற்று கைவரப்பட்ட பிசப், யார் வீட்டில் தோட்டத்தைக் கண்டுவிட்டாலும் தன் பிஷப் அங்கியை கழட்டி விட்டு தோட்ட வேலையில் இறங்கிவிடுவார்.

அந்த மூன்று ஜோடிகளும் டின்னருக்குத் தயாராகையில், நுழையும் தோட்டக்கார உடையிலுள்ள பிஷப்பை வெளியேற்றுகிறார்கள். அவர் போய் உடைமாற்றிக் கொண்டு பிஷப்பாக வரவும் அவரை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். படத்திற்கான பல்வேறு சுவரொட்டிகளில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஓவியர் ரெனிமாக்ரிட் (Rene Magritte) என்பவர் தீட்டித் தந்த ஓவிய சுவரொட்டி விஷேசமானது. நீண்ட கருப்புநிற காலுரையில் பெண்ணின் கால்கள், அதற்கு மேலே லிப்ஸ்டிக் பூசிய தடித்த பெண் உதடுகள் உணவைக் கண்டதும் எடுத்து லபக் அதற்கு மேலே பெளலர் ரக தொப்பி. ஆறு பேரில் 3 ஜோடிகள் ஒருவர் தென்னமெரிக்க நாட்டின் மிராண்டா குடியரசின் (கற்பனை) பிரான்சுக்கான அம்பாசிடர். அவருக்கு ரகசியமான போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு. போதைப் பொருள் கடத்தலிலும் கில்லாடி. அதனால் ராணுவம், போலீசு, என்ற பயமும் எந்நேரமுமுண்டு. கூடவே தன்னைத் தீர்த்துக்கட்ட தீவிரவாதிகள் பின் தொடர்வதை நம்பி நடுங்குபவர். இவ்வாறாக எதிர்பார்த்து பயமுறும் நிகழ்வுகள் உண்மையிலேயே நடப்பதாய் காட்சிபடுத்தப்பட்டு உடனடியாக அவ்வாறில்லாத யதார்த்த நிலைக்கு காட்சி மாறிக் கொள்ளும். அம்பாசிடர் சுடப்பட்டு இறப்பதும் பிறகு கனவாக அது மாறி, கலைந்து எழுவதுமாய்…

ஆறுபேரும் ஒரு பெரிய எஸ்டேட்டுக்கு காரில் இரவு வந்து மாளிகையுள் நுழைகிறார்கள். அன்றிரவு அங்கு டின்னருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே படத்தின் தொடக்கக் காட்சி. அவர்களை வியப்போடு எதிர்கொள்ளும் வீட்டு எஜமானி, ‘‘இந்த நேரத்தில் என்ன இப்படி?’’ என கேட்கிறாள். வீட்டினர்க்கையில் அணியும் சாதாரண நைட்டிஸில் அவள் இருக்கிறாள் வந்திருப்பவர்கள் அம்பாசிடர் தலைமையில் டின்னருக்கான டிப்டாப் உடையில்!

‘‘இன்றைக்கு எங்களை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கீங்களே?’’

‘‘அது நாளைக்குத்தானே?’’

‘‘இல்லையில்லை, உறுதியாகத் தெரியும், இன்றுதான். உங்கள் கணவர் எங்கே? அவர்தான் என்னிடம் கூறியது’’

“அவர், அவரது கம்பெனி உயர்மட்ட அதிகாரிகளுக்கான டின்னருக்கு போயிருக்கிறார்.

“சரி நாங்கள் புறப்படுகிறோம். ஒன்று செய்யலாம், இந்தப் பகுதியில் ஒரு உணவு விடுதியுண்டு. சாப்பிட்டிருக்கிறேன், பரவாயில்லை. அங்கே டின்னருக்கு நீங்களும் வரலாம்.

“உடை மாற்றிக் கொள்ளவில்லை

“பரவாயில்லை, உள்ளூர்தானே

எல்லோரும் அந்த ஓட்டலுக்குப் போனால், குடிக்க தண்ணீர் தவிர எதுவுமே அங்கில்லை. உள்ளே எ்ட்டிப் பார்த்தால் சவப் பெட்டியில் ஓட்டல் உரிமையாளரின் உடல். சுற்றி ஓட்டல் சிப்பந்திகளும் உறவினர்களும், ஆக, இந்தப் படத்தில் போதை மருந்து கடத்தும் ஒரு நாட்டின் உயர் அதிகாரி, அதை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் ராணுவம், போதை மருந்தை அபரிதமாய் உட்கொண்டதாலேயே அமெரிக்க ராணுவத்தினரில் 3500 பேர் வியட்நாம் போரில் மாண்டதாய் ஒருவசனம் விருந்தின்போது இப்படத்தில் வருமாறு புனுவெல் வைத்திருக்கிறார் இது போன்றும், ஓட்டல் உரிமையாளர் மரணம் போன்ற நிஜமும் கனவுமான காட்சிமாறுதல்களின் நகர்வுகள் வாயிலாக ஓர் அறுவர் கொண்ட அதி பணக்கார ஆண் பெண்கள் தங்கள் டின்னர் வைபவத்தை கொண்டாடி அனுபவிக்க முடியாவண்ணம் அற்புதமாந நெருக்கடிகளைச் செய்கிறார் லூயி புனுவெல், இந்திப் படத்துக்காக அவ்வாண்டின் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது புனுவெலுக்குக் கிடைத்தது.

ஒரு முறை சென்னை சஃபையர் தியேட்டர் வளாகத்தில் ப்ளூடயமண்டு தியேட்டரில் ஒரு பிரெஞ்சு திரைப்படம் ஆங்கில உபதலைப்புகளோடு திரையிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியூட்டும்படியான அதி விரு விருப்பான பிரெஞ்சு அரசியல் படம் அது Z Z என்பது கிரேக்க மொழியின் உயிரெழுத்துக்களில் கடைசி உயிரெழுத்து. இதை “ழ்ஜீ என்று தோராயமாக உச்சரிக்கிறார்கள். 1963-ல் கிரேக்க நாட்டில் இடதுசாரி சார்பான கிரேக்க ஜனநாயக ஆட்சி, நடந்த சமயம். உலக அமைதியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்த இடது சாரி பேராசிரியரும், சட்டசபை உறுப்பினருமான கிரிகோரியஸ் லாம்பராகிஸ் (Gregoreos lambrakis என்பவர் சலோனிகாவில் Salonika 1963ல் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து கிரேக்க ஜனநாயக ஆட்சி கவிழ்கிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு லம்பராகிவிசயத்தை Z என்ர நாவலாக எழுதினார் வாசிலி வாசிலி கோஸ் Vasily Vasily cos) எனும் கிரேக்க நாவலாசிரியர். அந்நாவலை அடிப்படையாகக் கொண்டு Z திரைப்படம் கோஸ்டா. காவ்ராஸ் இயக்கத்தில் 1969ல் மிகச் சிறந்த பிரெஞ்சு அரசியல் சினிமாவாகியது. ‘‘ஜ்ழீ’’ பிரெஞ்சில் எடுக்கப்பட்டாலும் அதில் நடித்தவர்களும் பெரும்பாலும் பிரெஞ்சு நடிகர்களே என்றாலும் அதை இயக்கியவர் கிரேக்கரான கோஸ்டா காவ்ரா. கிரேக்க கோஸ்டா காவ்ரா பிரான்சுக்கு புலம் பெயர்ந்து பிரெஞ்சு படங்களை இயக்கியவர் நாவலிலும் படத்திலும் லிபரல் அரசியல்வாதி யுவஸ் மோன்டாண்டு Yves Montand என்பவர் உலக அமைதி குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையின்போது நாட்டின் இராணுவ அமைப்பு முழுவதையும் கவிழ்க்கும் முயற்சியில் அதிகார மையத்தில் ஊழல் பேர் வழிகள் பெருகிப் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகிறது. அற்புதமானதும் துரிதகதியிலுமான காட்சி சட்டகங்கள் மாறுவதும் மிகக் கூர்மையான ஒளிப்பதிவுக்கான காமிரா கையாளலும் இயக்குனரின் கூரிய அரசியல் பிரக்ஞையும் படத்தைப் பார்க்கையில் சில்லிட வைக்கிறது.

“Z பொறுக்க முடியாதளவு உணர்ச்சி வயப்படுத்துகிறது. மிகுந்த பதட்ட நிலையை ரசிகர்களின் ரசனை தளத்தில் பரவி டச் செய்யவல்ல அரசியல் சித்திரம் என்று விமர்சனம் செய்தார் பிரபல சினிமா விமர்சகர் பாலின் கேயெல், (Pauline Kael) இத்திரைப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ள ழான். லூயி ட்ரிண்டிக்னண்ட் (Jean Louis TrintGnant) விசாரணை மாஜிஸ்டிரேட்டாகவும், கொலையுண்ட மோண்டாண்டின் மனைவியாக நடிக்கும் கிரேக்க நடிகை இரின் பாபாசும் (Irene Papas) மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார்கள். இரின் பாப்பாசின் அற்புத நடிப்பை கிரேக்க திரைப்படம், (Zorba the Greek- லும் பார்க்கலாம். படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ராவுல் கெளடார்ட் செய்திருக்கிறார்.

கோஸ்டா காவ்ரா பம்பாயில் நடந்த 15-வது மும்பை திரைப்பட விழாவில் வருகை தந்து சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

கோஸ்டா காவ்ரா 1981ல் தனது முதல் ஆங்கிலம் பேசும் அமெரிக்க திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். 1973ல் உலகம் மறக்க முடியாத அரசியல் கலவரமும் சதியும் கொலையும் உள்ளிட்ட ஆண்டு. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் இடது சாரி அதிபராயிருந்த அழண்டே அமெரிக்க சதியாக சிஐஏயின் கை வண்ணத்திலான படுகொலையில் மரணமுறுகிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்பதுபோல் அமெரிக்க வலது சாரி வார இதழ் ‘‘டைம்’’ தனது அவ்வார அட்டைப் படத்தை அழண்டேயின் பெரிய படத்தைப் போட்டு அது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் தலையிலிருந்து ரத்தம் வடியும் கோலத்தில் கொல்லாஜ் ஓவிய புகைப்பட கலப்பாக போட்டு, அவ்வாரத்திய தலையங்கமாய் அழண்டேயின் படுகொலையை சிலியின் ஆட்சி கவிழ்ப்பையெல்லாம் எழுதியிருந்ததை உலக வாசக அன்பர்கள் அறியக்கூடும்.

அழண்டேயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கலவரம் பரவுகையில் இருள் கவியும் சமயம் ஓர் அமெரிக்க நகரில் மக்கள் குழப்பத்தில சிக்கி அலைபாய்கின்றனர். தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள், மற்ற பொது ஜனம் என்று சகலவித பயணிகளையும் ஏற்றிச் செல்ல பஸ்களும் டாக்சிகளும் மறுத்துவிட்டு நிற்கின்றன அல்லது காலியாக பயணிகளை ஏற்றாமல் போகின்றன. குழப்பத்திலும் கலாட்டாவிலும் மாட்டிக் கொண்ட பாதசாரிகள் பயத்தில் பதுங்கிக் கொள்ள புகலிடம் கேட்டு கெஞ்சுகின்றனர். மாலைப் பதிப்பான செய்தித்தாள்களுக்கு பஞ்சமாகிறது. ஒரு நில நடுக்கம்கூட இந்தளவு மக்களை பதறியோட வைக்காது, எனும் படிக்கு தெரிந்தும் தெரியாத புரிந்தும் புரியாதபடியான கலவரம் குழப்பம். உலகம் ஏதோ ஒரு பயங்கர முடிவுக்கு வந்தாற்போன்று புனையப்பட்ட அறிவியல் நாடகம்போல தோன்றக் கூடும். இது உலகின் சிறந்த அரசியல் சினிமாக்காரர்களில் ஒருவரும் பிரெஞ்சு அரசியல் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனருமான கோஸ்டா காவ்ராவின் Missing எனும் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள். மேற்கத்திய நாடுகளின் பக்கபலத்தோடு ஏற்பட்ட சிலி நாட்டு ராணுவ புரட்சியும் கம்யூனிஸ்டு அதிபர் அழண்டேயின் படுகொலையும் சோவியத் யூனியன் ஹங்கரி- செக்கோஸ்லாவியா- கொலம்பியா கூட்டுத் தயாரிப்பான ‘‘சென்டார்ஸ்’’ Centaurs எனும் திரைப்படமும் மிக முக்கிய அரசியல் படமாகும். மிஸ்ஸிங்கில் காணாமற்போவது- ஓர் இளம் அமெரிக்க இடதுசாரி ஆதரவு எழுத்தாளன், அவனது தந்தையும் இளம் மனைவியும் மனம் பதறி போலீசில் தரும் புகார் ஏற்கப்படுவதில்லை. அவர்களது பரிதவிப்பும் நிராதரவும் அலைபாய்ந்த அலைச்சலும் படத்தின் பதட்ட நிலையை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லுபவை. காணாமற்போனவன் திரும்பி வருவதேயில்லை. அவனுடைய தந்தையாக புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஜாக் லெம்மானும் Jack Lemmon இளம் மனைவியாக சிஸ்ஸி ஸ்பேசெக்கும் (Sissi Spacek) மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி




நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
விலை : ரூ. 140/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றவருமான நமது அருமைத்தோழர் சா.சுப்பாராவ் அவர்கள் தன்னுடைய மகளும், மருமகனும் வேலை காரணமாக ஓராண்டு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் பொழுது, நமது எழுத்தாளருக்கு வெளிநாடு செல்ல அழைப்பு வந்து புறப்பட்டுச் சென்றார். அப்படி அவர் சென்ற பொழுது ரோட்டர்டாமில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை கண்டுணர்ந்தார். அவர் பார்த்தது மட்டுமல்லாமல் நம்மிடமும் பகிர்ந்தும் கொள்கிறார். ஆஹா என்ன அற்புதமான பயண அனுபவம்!

35 ஆண்டு காலமாக ஆங்கில புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பாவை, அது எந்த முக்கியமான நகரமாக இருந்தாலும் அதை களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவர் மனதில் வந்து போனதாக நம்மிடையே பகிர்கிறார். அவர் பார்த்த சில இடங்களைப் பற்றி உங்களோடு…

ஐரோப்பாவில் தன் மகள் வாழும் நெதர்லாந்து ரோட்டர்டாமில் ஆசிரியர் தன் பயணத்தை தொடங்குகிறார். மக்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படை இரண்டு மணி நேரத்தில் 86 ஆயிரம் மக்களை கொன்றொழித்த கொடுமையான வரலாற்றை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்நகரம் மீண்டும் புத்துணர்ச்சியோடு நிர்மாணிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ‘கியூப் வீடு’ என்று யூட்யூபில் பதிந்தால் அருமையான வீடுகளை நாம் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் அங்க மருந்து கடைகளே இல்லையாம்! மருத்துவமனை கூட அரசு மருத்துவமனை மட்டுமே. நம்ம ஊர்ல தலைவலிக்கு, காய்ச்சலுக்கு என ஓடிப்போய் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் அங்கே கிடையாதுங்க. எதுக்கெடுத்தாலும் அங்கு ஆஸ்பத்திரிக்கு ஓடற நிலைமையும் இல்லை. சளி, ஜலதோஷம் அப்படின்னு மருத்துவமனைக்கு போனா ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சரியாயிடும் போயிட்டு வாங்க’ என்று மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்களாம். இன்னும் நிறைய இருக்குங்க. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கிற கிண்டர்டையக். அப்பப்பா நிறைய இருக்கு. இதையெல்லாம் எழுதி முடிக்க நான் ஒரு புத்தகம் தனியாக போடணும் போல.

அடுத்ததாக வான்கோ வாழ்ந்து துன்புற்ற இடமான ஹேக் அதாங்க சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் ஆசிரியர் செல்கிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை. அருமையான அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கேயும் ஒரு மரம். நம்ம கந்தசாமி படத்தில் வருவது போல துண்டு சீட்டுகள் அட்டைகள் தொங்குகின்றன. நம்ம ஆசிரியரும் ‘உலகினை அழித்துவிடும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என்றும் வேண்டும் சமாதானம்’ எழுதி மரத்தில் கட்டி வைத்தார். அந்த மரத்தில் தமிழில் எழுதிய ஒரே ஒருத்தர் அவர் நம்ம தோழராத்தான் இருக்கும். அடுத்ததாக உலகை வலம் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆம் காரல் மார்க்ஸ் பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவர் வந்து சேர்ந்த இடம் தான் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸலஸ். ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! என்று எழுதிய மாமேதையின் இடத்தை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சசுவான் ரெஸ்டாரண்ட் இடம் இப்போது ஒரு தனியார் உணவு விடுதியாக மாற்றப்பட்டதால் அங்கே மார்க்ஸ் இருந்த அடையாளமாய் அன்னப்பறவை சிலையைக் கண்டு ஆனந்தமாகி அந்த விடுதியின் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மக்களின் வரலாற்றை யாரேனும் ஒருவர் புதுப்பிப்பார் என்கிற உணர்வு ஏற்பட்டது தோழர்களே. இப்படியாக வான்கோ மற்றும் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை சலிப்பில்லாமல் மிகவும் அருமையாக தரவுகளை வாரி வழங்கியபடியே பயணம் செய்கிறார். வான்கோவின் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய வாழ்வும் மிகவும் துயரம் நிறைந்தது. தன்னுடைய சகோதரன் அனுப்பும் தொகை மட்டுமே வான்கோவுக்கு உயிர்நாடி. அப்படி துன்பப்பட்டவர்தான் உலக அதிசயங்களை அள்ளி வழங்கினார்.

அடுத்ததாக பாரிசுக்கு பயணம் செய்கிறார். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அந்த நகரத்தை பற்றிய ஒரு நூலை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார். அப்படித்தான் ஈபிள் டவருக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போரில் ‘பாரிஸ் என்னும் நகரமே இருக்கக்கூடாது அதை அழித்து விடு’ என்று ஹிட்லர் கூறியபோது, கோல்டிஸ்ட் அப்படி செய்யாமல் விட்டு விடுகிறார் என்கிற செய்தி வியப்பைத் தருகிறது.

கோபுரத்தின் உச்சிக்கு கூட உணவு பொருள் எடுத்து செல்லலாம் என்பது வியப்பை தருகிறது. நம்மூர்ல இதெல்லாம் எப்போது சாத்தியமோ. நாஜிக்களிடமிருந்து பாரிஸை காப்பாற்றுவதற்காக 18 முதல் 50 வயது வரையிலான அத்தனை பேரும் நாட்டர்டாம் தேவாலயம் முன்பு கூடி போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றிய காட்சியை லாரி காலின்ஸூம், டொமினிக் லாப்பியரும் அவ்வளவு நுணுக்கமாக விவரித்த விஷயத்தை நம் ஆசிரியர் மிக அழகாக குறிப்பிடுகிறார்.

அடுத்து லூவர் அருங்காட்சியகத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த ஒரு நாவல் டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ மோனலிசா பற்றிய நூல். என்ன ஒரு எழுத்தாளர் எப்படித்தான் இதெல்லாம் படிச்சிருக்காரோ தெரியல. அப்பப்பா அருங்காட்சியகத்தை பாக்கணும்னா பயங்கர பிரம்மாண்டம்! மூன்று ஈபில் டவர் கோபுரங்கள் ஒன்றாக படுக்க வைத்திருக்கும் அளவு தூரம் 46,000 கலைப் பொக்கிஷம். மோனலிசா பற்றிய செய்திகள் நிறைய தெரிஞ்சிக்கலாம். மோனலிசா ஓவியம் ஆயிரத்து பதினொன்றில் திருடு போய் இருக்கு. அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்கு, அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்காங்க. இரண்டாம் உலகப் போரின் போது அந்த மோனலிசா ஓவியத்தை காப்பாற்றுவதற்கு பல திட்டம் போட்டிருக்கிறார்கள். 10 லட்சம் மணல் மூட்டை கட்டி காப்பாற்றியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. டான் பிரவுன் ஓவியங்கள் அனைத்தும் 95 லாரிகளில் வெளியூருக்கு அனுப்பி இருக்கிறார்கள். மோனலிசா மட்டும் அங்கேயே தனியே ஒரு ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். 1939 லிருந்து 1945 வரைக்கும் லூவர் அருங்காட்சியகத்தில் காப்பாற்றுவதற்கு அவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள்.

அவர் போன இடத்தை எல்லாத்தையும் குறிப்பிடலாம் என்றால் அவர் மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கண்டிப்பா யாரும் படிக்க மாட்டீங்க. அதனால அவர் எழுதிய இந்நூலில் முழுவதும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் நெதர்லாந்து ‘ஆஸ்ட்விட்ச் சர்வைவல் இன் ஆப் சுவிட்ச்’ என்கிற கொடுமையை பற்றிய எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது கண்கலங்காமல் யாராலும் படிக்க முடியாது. முகாமில் காலையில் ஆட்களைக் எண்ணுவார்கள். ஒருவர் குறைந்தால் கூட பத்து பேரை சுட்டுக் கொள்வார்கள். முகாமில் கைதிகளே யாராவது தப்பித்து போனாலும் மற்றவர்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். கொடுமைகள் ஏராளம். சாகப்போகிற ஒருவர் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்ள வேண்டும். குழி வெட்டிய பின்பு குழியின் மூளையில் நிற்க வேண்டும். நாஜி துப்பாக்கியால் சுடுவான் அப்படியே குழிக்குள் விழ வேண்டும் தள்ளுவதற்கு வேலை மிச்சமாம்.
பசிக்கு சூப்பு கொடுப்பானுங்க. அத குடிச்ச பின்னாடி தெரியும் அது இறந்தவர்களுடைய உறுப்புதான் அதில் கிடக்கிறது என்று. குடித்தவர்கள் அப்படியே வாந்தி எடுப்பார்கள். எவ்வளவு கொடுமையான நாஜிக்கள். சோவியத் வீரர்கள் வந்து காப்பாற்றும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளையும் நூல்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.

இறுதியாக ஆம்ஸ்டர்டாம் செல்கிறார் ஆசிரியர். ‘ஆசிரியர் குடும்பத்தோட வா செல்கிறார்?’ என்று கேலியாக பேச்சு வரும். ஏனெனில் அங்கு இரவு விடுதி புகழ் பெற்றது. ஆனால் நமது ஆசிரியரோ பார்க்கச் சென்றது வேறு ஒன்றை. ஆம் வான்கோ, ஆன் பிராங்க் நடந்த, உலாவிய ஆம்ஸ்டர்டாம் வீதியில் தான் பேராசிரியரும் நடந்தார். மிகப்பெரிய அருங்காட்சியகம்! அப்பப்பா மிகவும் பிரமிப்பான அருங்காட்சியகம்! வான்கோவினுடைய கையெழுத்து கடிதத்தைக் கண்ட ஆசிரியர் மொழி தெரியாவிட்டாலும் கண்கலங்கினார். ஆன் ஃபிராங்க் குடும்பம் நாஜி படையினரிடம் இருந்து தப்பிக்க தன் அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு புத்தக அலமாரிக்கு பின்புறம் ரகசியமாக சிறு வீடு கட்டி மறைவாக வாழ்ந்து வந்தனர். சிலரின் நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாகினர். ஆன் பிராங்க் சிறையில் கொடும் நோயில் இறந்துவிட, அவர் தந்தையார் மட்டும் பிழைக்க பிறகு ஆன் அவர்கள் இளம் வயதில் நாஜி கொடுமைகளை தனது டைரியில் எழுதி வைத்த குறிப்புகளை கொண்டு அவற்றை நூலாக வெளியிட்டார். சிறிய வயதில் மிகவும் அபாரமான திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் ஆன். அப்படி அவர்கள் வாழ்ந்த இந்த மறைவான இடம் தான் தற்போது அருங்காட்சியமாக உள்ளது. பார்வையிட வருபவர்கள் அந்த அலமாரியை விலக்கி உள்ளே சென்று பார்ப்பது போன்று பழைய நடைமுறையில் இன்னும் இருப்பது சிறப்பு.

அப்பப்பா ஆசிரியரின் வாசிப்பு எவ்வளவு தூரம் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆனால் மனிதராகப் பிறந்தவர்கள் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல் ஊர்சுற்றிப் புராணமாக நாம் உலகை வலம் வர வேண்டும். நிறைய பொக்கிஷங்களை கொண்டுள்ள பூமியின் ஓவியத்தைக் கண்டு உணர்வதற்காக அவசியம் உலகை வலம் வர வேண்டும். அதற்கு வாசிப்பு மிக மிக அவசியம். அப்படி உலகை வாசித்து நமக்கு அளித்த எழுத்தாளர் தோழர் சா. சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

நான் உங்களிடம் சொன்னது தம்மாத்தூண்டு. ஆனால் அறிய தகவல் களஞ்சியங்கள், புகைப்படக் காட்சிகள் இந்நூலில் நிறைய கொட்டிக்கிறது!
வாசியுங்கள் தோழர்களே!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின்  சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்



நூல்: சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர்: ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 140
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பயணம் என்ன செய்யும் மாற்றத்தை நம்முள் நிகழ்த்தும். நேற்று தான் தோழர். சுப்பாராவ் எழுதிய ” சில இடங்களும் சில புத்தகங்கள் ” என்ற நூலை படித்து முடித்தேன். சிறு வயது முதலே ஐரோப்பிய நாடுகள் மீது ஓரு அதீத ஈர்ப்பு. அதற்கு காரணம் ஐரோப்பியர்கள் கலை,இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றிய வர்கள் என்பதாலோ என்னவோ. எங்கள் உறவினர்களில் சிலர் பிரான்ஸ் இருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது எல்லாம் ஓரு முறை ஐரோப்பிய நாடுகள் சென்று அப்படி என்ன இருக்கும் என்று நினைத்து உண்டு. அதன் பின் பணி நிமித்தமாவது மட்டுமாட்சி போகலாம் என்று நினைத்தேன. அதற்கு பின் நான் எடுத்த படித்து வேலை பார்த்தது  வேறு  எதுவோ…பாரிஸ்  மேற்கத்திய ஆடை வடிவ உலகத்தின் ஜாம்பவான். ஆகையால் பேஷன் துறையை எடுக்க  வேண்டும் என்று நினைத்தேன். இங்கு பாண்டிச்சேரியில் பலர் இரட்டை குடியுரிமை உள்ள குடும்பங்கள் உள்ளது. ஏன் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கும் கூட இரட்டை குடியுரிமை உள்ளது என்பதே பின் நாட்களில் தான் தெரியும். பிரான்ஸ் பற்றி கேட்க கூடவே ஓட்டிக்கொண்டது போன்று வரும்  அதன் இலக்கியமும், அழகியலும், சுதந்திரமான நாடு என்றும். ஆகையால் நிறைய பிரஞ்சு படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் மிட்நைட் இன் பாரிஸ், ரோடு டு பாரிஸ், விவி டடூர், பிரஞ்சு கிஸ் போன்ற படங்களின் வழி ரசித்து இருக்கிறேன்.அதே போன்று இலக்கியங்களிலும் கலையும்  கைதேர்ந்த கலைஞர்ள்  நிரம்பிய  ஊர், ஈபிள்

கோபுரம்,,  ஷேக்ஸ்பியர் புத்தக கடை,  மார்கஸ் வாழ்ந்த Rue Vanue,, venice ,, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை  பிறந்த இடம் இவையெல்லாம் ஒரு பக்கம். மற்றொரு  பக்கம் அவர்களின் வாழ்க்கை சௌகரியம.இவற்றை எல்லாம் டேவிட் லேபோ எழுதிய நூலான The Sweet Life in Paris ஓரு  பகுதியை   உணர முடிகிறது. ஆனால் நம்  ஊராகாரர்  நாம் பார்க்கும் பார்வையில் எழுதுவது ஆலாதி சுகம் தான். அதிலும் புளியோதரையுடன் உங்களுடனே நானும் கூடவே  ஈபிள் டவர், காலோஷியம்,பைசா கோபுரம் வந்து கடைசியாக வால்காவின் ஓவியத்தை ரசித்துப், அனா பிரங்கின் துயரத்தையும்  அறிய முடிந்தது. புத்தகத்தில் வரும் புத்தகத்தை எல்லாம் படிக்க முடியவில்லை யென்றாலும் சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன் படிக்கலாம் என்று. அடுத்த முறை ஓரு வேலை போக வாய்ப்பு இருப்பின் நான் போனவற்றையும் சேர்த்து பேசலாம் தோழர்.  உங்களின் இப்புத்தகத்திற்கு என் நன்றியும் அன்பும்