இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும்,  பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்




நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-93 முதல் 1996-97) நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும், உற்பத்தித் திறன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அதிகரிக்கவும், பசுமைப் புரட்சி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும்வறண்ட நிலப் பரப்பில் வேளாண்மைச் சாகுபடியினைச் செய்யவும், எண்ணெய்வித்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்யவும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற வறுமைக்கான முக்கியக் காரணம் விவசாயிகளிடையே நிலமற்றத் தன்மையாகும் என்றும் எனவே நிலச் சீர்திருத்தத்தை வேகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நிலவும் வலுவற்ற உள்கட்டமைப்பே அவற்றின் பின்தங்கிய நிலைக்கான காரணமாகக் கருதப்பட்டு அவற்றை மேம்படுத்த 1995-96ல் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை (NABARD) உருவாக்கியது. இதன்படி கிராமப்புறக் கட்டமைப்பினை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மைத் துறைக்குக் கடன் வழங்கியது (Chnandra Shekhar Prasad 2009).

நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்த உத்தியில் ஒன்றானதாக வேளாண் உற்பத்தி பொருட்களின் கொள்முதல்  விலையினை உயர்த்தியதாகும்இது உழவர்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியினை  அதிகரிக்க ஊக்கப்படுத்தியதுவேளாண் உற்பத்தி பொருட்கள் தங்கு தடையின்றி வணிகப் போக்கிற்கு வழிவகைச் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான  ஒதுக்கீட்டில் தளர்வு செய்யப்பட்டது.

விவசாயக் கடன்களை திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுஇவற்றின் விளைவால் பெரிய விவசாயிகள் அதிக அளவிற்கு பயனடைந்து லாபம் ஈட்டினர்.  1991-92ல் வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக 2 விழுக்காடு இருந்தது  1993-94ல் 4.9 விழுக்காடாக அதிகரித்ததுவேளாண் பொருட்கள் ஏற்றுமதியானது ரூ.700 கோடியாக 1990-91ல் இருந்தது ரூ.10840 கோடியாக 1993-94ஆக அதிகரித்தது. அதேசமயம் வேளாண்மையின் மீதான முதலீட்டில் தேக்க நிலை காணப்பட்டது.

முதல் கட்டப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கிராமங்களை நோக்கிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார்இதன்படி வேளாண் இடுபொருட்களான மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது. 1991-92ல் இம்மூன்று இடுபொருட்களின் மானியமானது ரூ. 122.6 பில்லியன் ஆகும் (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 விழுக்காடு) இது 1995-96ல் ரூ.279.4 பில்லியனாக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.62 விழுக்காடு ஆகும்).  இம்மூன்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பாதி அளவிற்கு மின்சாரத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1970ல்  நாட்டில் 35 விழுக்காடு கிராமங்களும், 1990ல் 90 விழுக்காடு கிராமங்களும் மின்சார வசதியினைப் பெற்றது (தற்போது 100 விழுக்காடு கிராமங்கள் மின்சார இணைப்பு பெற்றுள்ளது). இதன் விளைவு வேளாண்மையில் மின்சாரப் பம்ப் செட்டுகள் பயன்பாடு; அதிகரித்தது. அதுவரை பயன்பாட்டிலிருந்த கால்வாய் பாசனம், குழாய் நீர்ப் பாசன முறைக்கு மாற்றமடைந்ததுஇதனால் விவசாயத்தில் விரிவாக்கம் அதிகமாக நடைபெற்றது. அதேசமயம் மின்சார பம்ப் செட்டுகளின் அதிக பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்பட்டதுபீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட  பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நெல் பயிர் செய்யும் பகுதிகள் பயன்பெற்று உற்பத்தி பெருகியதுவேளாண் உற்பத்தி உயர்ந்ததால்    இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 1970களுக்கும் 1990களுக்கும் இடையில் 2லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினை கண்டது. இதனால் பஞ்ச காலங்களில் உணவு இறக்குமதி தவிர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவால் 1980களில் வறுமை குறைய தொடங்கியது. குறிப்பாக 1990களில் வறுமை பெருமளவிற்கானதாகக் குறைந்தது. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகளின் வருமான இழப்பையும், கடன் அதிகரிப்பையும் எதிர் கொண்டனர்குறு, சிறு விவசாயிகள் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் சாகுபடி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் பெருமளவிற்கு வேளாண் பணிகளைத் தவிற்று வேளாண் சாராத் தொழில்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவு பெரிய முதலாளிகள், மனை வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் கைகளில் விளைநிலங்கள் மாறின. விளைநிலங்கள் பெருமளவிற்குச் சாகுபடியற்ற நிலங்களாக மாறத் தொடங்கியது. நிகர விளைநிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியது.

அரசு பஞ்ச காலங்களில் புதிய உத்தியினைக் கையாண்டு உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததுபன்னாட்டு அளவில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற இயலும். அவ்வப்போது உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும் போது உள்;ர் விலைக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைச் செய்வதால் பெரும் இழப்பினைச் சந்திக்க வேண்டியுள்ளது. உலக வர்த்தக மையத்தின் உருகுவே சுற்றின்படி விவசாய பொருட்களின் சுங்க வரியினைக் குறைத்ததால் வெளிநாடுகளுடன் காய்கறி, பழம், அதிக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் வரத்து அதிகமாகி உள்;ர் வேளாண் விளைபொருட்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனால் இந்திய விவசாயிகள் அதிக பாதிப்பினை அன்மைக் காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டு அளவில் அதிக தேவையினை உடைய பாசுமதி அரசிசோயபீன்ஸ், மலர்கள், பழங்கள் போன்றவை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைப்பதால் பல விவசாயிகள் பரம்பரைச் சாகுபடி பயிர்களிலிருந்து புதிய வகை பயிர்களுக்கு மாற்றினர் (Tirthankar Roy 2020).

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வேளாண்மையின் முக்கியப் பிரச்சனையாக நீர்ப்பாசன பற்றாக்குறை, அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் தண்ணீர் உவப்பு தன்மையினை அடைந்ததுஇந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் இருந்ததுஇவற்றால் 6 முதல் 13 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததுவிவசாயிகளின் கடன் தேவையினை அரசு முழு அளவிற்கு நிவர்த்தி செய்யும் நிலையினை அடையவில்லைகடனுக்கான மானியம் அதிக அளவிலிருந்தது இதனால் ஆண்டுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண்மையின் மீது திணிக்கப்பட்டது (India Today 1995).

புதிய பொருளாதார சீர்திருத்தங்களினால் முதலீடு, தொழில், வேளாண்மைபணித் துறைகள் ஆகியவற்றில் நேர்மறை வளர்ச்சியினைக் காண முடிந்ததுவேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97 ஆண்டுகளுக்கிடையே சராசரியாக ஆண்டுக்கு 3 விழுக்காட்டுக்கு மேல் வளர்ச்சியடைந்தது ஆனால் இது தொழில் மற்றும் பணித்துறையினை ஒப்பிடும்போது குறைவான அளவிற்கே இருந்தது.  1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் கிராமப்புற வறுமை 1992-93ல் அதிகமாக இருந்ததுஇதற்கு முக்கியக் காரணம் இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சமாகும். 1993-1998க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் சமூகச்செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது. இதனால் வேளாண் கூலி 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்ததுஇதே ஆண்டில் 6.3 மில்லியன் மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது. பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது 1996ல்விழுக்காடாக்க குறைந்தது. உணவு தானிய மானியமானது 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.4 பில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35  பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் உபரியானது என அறிவிக்கப்பட்டது. இதில்மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதுஇதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலான கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1995ல் இந்தியாவில் 69875 கிராமப்புற பால் கூட்டுறவு செயல்பட்டதில் 8.9 மில்லியன் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். இதில் 60 விழுக்காடு விவசாயிகள் குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள். ‘வெண்மைப் புரட்சி என்ற பால் உற்பத்தியினை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. இத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது (Bipan Chandra et al 2008). வறுமையை ஒழிக்க 1997ல் தகுதியுடையவர்களுக்கான பொது விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை விளைபொருட்களின் கொள்முதல் அதிகரித்தது

அட்டவணை: இந்திய வேளாண்மையின் போக்கு

வேளாண்மை தரவுகளின் விவரங்கள் 1990-91 1995-96
இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் வேளாண்மையினை மொத்த மதிப்புக் கூட்டல் (விழுக்காடு) 35.13 30.61
நிகரச் சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) 143.00 142.20
மொத்த சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) 185.74 187.47
உணவு தானிய உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) 68.83 64.55
எண்ணெய் வித்துக்கள் (மில்லியன் ஹேக்டேர்) 13.00 13.85
பருப்பு வகைகள் உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) 13.28 11.88
உணவு தானிய ஏற்றுமதி (ஆயிரம் டன்னில்) 666.60 5636.29

Source: Akina Venkateswarlu (2021): “Polititical Economy of Agricultural Development in India: Policies, Achievements and Concerns,” Aakar Books, Delhi.

அட்டவணை: வேளாண் சாகுபடியின் பரப்பளவு, உற்பத்திஉற்பத்திறனின் போக்கு (விழுக்காட்டில் ஆண்டுக்கான வளர்ச்சி😉

விளைபொருட்கள் பரப்பளவு உற்பத்தி உற்பத்தித் திறன்
1980

களில்

1990

களில்

1980

களில்

1990

களில்

1980

களில்

1990

களில்

அனைத்துப் பயிர்களும் 0.1 0.4 3.2 2.2 2.6 1.4
உணவு தானியங்கள் -0.2 -0.1 2.9 1.8 2.7 1.4
உணவல்லா பயிர்கள் 1.1 1.5 3.8 3.3 2.3 1.4
நெல் 0.3 0.5 3.6 1.9 3.2 1.3
கோதுமை 0.5 1.7 3.6 3.1 3.1 1.6
சிறு தானியங்கள் -1.4 -1.8 0.4 0.2 1.7 2.0
பருப்பு வகைகள் -0.1 -0.2 1.5 1.0 1.6 1.7
எண்ணெய் வித்துக்கள் 2.4 0.8 5.5 3.4 2.9 2.6
கரும்பு 1.5 1.8 2.7 2.5 1.2 0.7
பருத்தி -1.3 3.3 2.8 1.7 4.1 -2.0

ource: Uma Kapila et al (2003): “Indian Economy Since Independance,”Academic Foundation, New Delhi. 

1950-51 மற்றும் 1994-95ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த சாகுபடி பரப்பானது 132 மில்லியன்  ஹெக்டேரிலிருந்து 188 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட விதையானது 1950-51ல் மிகவும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது 1996-97ல் 70 லட்சம் குவிண்டாலாக அதிகரித்தது. உரப் பயன்பாடு இக்கால கட்டத்தில் மிகக் குறைவாக 6900 டன்னிலிருந்து இது 14 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உரம் ஒரு ஏக்கருக்கு 1950-51ல் மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது 1996-97ல் 77 கிலோவாக அதிகரித்தது. பூச்சிக் கொல்லியானது 2400  டன்னாக இருந்தது 59000 டன்னாக இதே காலகட்டங்களில் அதிகரித்தது. வேளாண்மைக்கான மின்சாரப் பயன்பாடானது 1980-81ல் 15200 மில்லியன் கிலோ வாட்டாக இருந்தது 1995-96ல் 85736 மில்லியன் கிலோ வாட்டாக அதிகரித்தது. 1990-91ல் மொத்த வேளாண்மையின் உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஏற்றுமதிப் பங்கானது 4.5 விழுக்காடாக இருந்தது 1995-96ல் 8 விழுக்காடாக அதிகரித்தது (Rao et al 2003).

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்ததை நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகள் அதிகராம் பெறும் 73 (ஏப்ரல் 24, 1993ல்) மற்றும் 74வது சட்டம் (ஜூன் 1, 1993ல்) கொண்டுவரப்பட்டதுஇதன்வழியாக கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது.  நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 1988ல் தொடங்கப்பட்ட வேளாண் சூழலியல் வட்டாரத் திட்டமானது முன்னுரிமை நோக்கில் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளைச் செய்தது.

நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.2 விழுக்காடாக இருந்தது இது ராஜீவ் காந்தி (5.7 விழுக்காடு) மற்றும் இந்திரா காந்தி (1980-84 கால கட்டத்தில் 5.5 விழுக்காடுஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருந்தது (Montek S Ahluwalia 2018). 1990களில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்ததால் வறுமையின் அளவு குறைந்ததுஅதே சமயம் ஏழைகள் கிராமங்களில் அதிக  எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு பெருமளவிற்கு நகர்ப்புறங்களுக்குச்  சாதகமாக இருந்தது. 1990களில் வேளாண்மை வளர்ச்சியானது மிகவும் குறைவான அளவிற்கே இருந்ததுவேளாண் பயிர் சாகுபடியில் பெரும் மாற்றத்தைக் கண்டது. ஏற்றுமதி வழியாக அதிக லாபம் பெரும் நோக்கில் பழ வகைகள், காய்கறி, பூக்கள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். மற்ற பயிர் வகைகளின் சந்தைப் படுத்துதலின் கட்டமைப்பானது (குறிப்பாக மின்சாரம், சேமிப்பு கிடங்கு, சாலை போன்றவை) வலுவாக இல்லாததால்  குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற இயலவில்லை.

உணவு ஆதாரம் அரசின் கையிருப்பில் (Buffer stock) 40 முதல் 50 மில்லியன் டன் இருப்பிலிருந்ததுஇது மக்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை. பொதுவிநியோக முறையில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது எளிதாகச் சென்றடைந்ததுபொது விநியோக முறையில் நடைமுறைப்படுத்துதலில் ஊழல் தலைவிரித்தாடியது. கள்ள வாணிபம் வழியாகப் பொதுவிநியோக உணவு தானியங்கள் விற்கப்பட்டன. 20 விழுக்காடு உணவு தானியம் தகுதியான நபர்களுக்குச் சென்றடையவில்லை. பசியும், குறை ஊட்டச்சத்தும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரமாகவே இருந்ததுமழைபொழிவு இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டு  இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் காணப்பட்டது.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுத் துவக்க (1995 முதல்) உறுப்பினராக்கியது. இதன்படி வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது (இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த காப்பு வரி மற்றும் வணிகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன்படி உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வேளாண்மைக்கு அளித்துவந்த மானியத்தை 10 விழுக்காட்டுக்குக் கீழ் குறைக்க வேண்டும்,  ஒவ்வொரு நாடும் 3லிருந்து 5 விழுக்காடு நாட்டின் மொத்த வேளாண் பொருட்களின் நுகர்ச்சியின் அளவில் இறக்குமதி செய்ய வேண்டும், பொது விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதித்து உண்மையாக வறுமையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேளாண் ஒப்பந்தத்தில் பசுமைப் பெட்டி (Green Box) மற்றும் நீலப் பெட்டி (Blue Box) என்பதைச் சேர்த்துக்கொண்டதுபசுமைப் பெட்டி என்பது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகும். நீலப் பெட்டி என்பது வருமான ஆதரவு மற்றும் கால்நடைகள் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் பொருட்களின் மீது கட்டப்பாடுகளை விதித்ததுஇவையனைத்தும் ஜனநாயக முறையில் இல்லாமல் உலக வர்த்தக அமைப்பு கடைப்பிடித்தவையாகும்.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் வழியாக வேளாண்மையினைப் பொருத்த அளவில் சறுக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது. வளரும் நாடுகளில் வேளாண்மையின் முன்னேற்றத்திற்கு பல செயல்பாடுகளைச் செய்து வந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அதன் சட்டதிட்டங்களை  நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. வேளாண்மைக்கான நிலம் மற்றும் நீர் தவிற்று, விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி காப்புரிமை பெறப்பட்டதுஇதனால் காப்புரிமை வைத்திருந்த நிறுவனங்கள் இதன் விலைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதுபல வளரும் நாடுகளின் வேளாண் பொருட்கள் பன்னாட்டு நிறுவனத்தினால் காப்புரிமை பெறப்பட்டதுஇவற்றைச் சாதாரண விவசாயிகள் (சிறு, குறு விவசாயிகள்) பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே இந்திய விவசாயிகள்; அறுவடையில் பெறப்படும் விளைச்சலின் ஒரு பகுதி தானியத்தை தங்களின் அடுத்த போக சாகுபடிக்காக  விதையினை எடுத்தும் பயன்படுத்தும் முறை புழக்கத்திலிருந்து வந்தது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட காப்புரிமை பெறப்பட்ட நிறுவனங்களில் இருந்து விதைகளைப்  பெற்றுத்தான் பயன்படுத்த முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட காப்புரிமையும், சந்தைப்படுத்தும் முறையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி மூன்று முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து. அதன்படி 1) சந்தை அணுகல்: அளவுக் கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படும் சுங்கக் கட்டணத்தை குறைப்பது. 2) உள்நாட்டு ஆதரவு: குறிப்பிட்ட சில உற்பத்தி பொருட்களுக்கு மற்றும் உற்பத்தி சாராத பொருட்களுக்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 13.3 விழுக்காடு குறைத்தல். 3) ஏற்றுமதி மானியம்: 2005க்குள் மதிப்பின் அடிப்படையில் 24 விழுக்காடு மானியத்தை குறைத்தல் மற்றும் 14 விழுக்காடு பொருட்கள் அளவின் அடிப்படையில் குறைத்தல் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய வேளாண்மைக்கு பெரும் வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பசுமை பெட்டி மற்றும் நீலப் பெட்டி என்ற காரணிகளைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்ததுஇதனால் இந்திய வேளாண்மையானது அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றி கட்டுப்பாடற்ற வர்த்தக நடைமுறையினால் வேளாண் பொருட்களின் விலை குறைந்தது (பன்னாட்டுச் சந்தையில்).  இதன் விளைவு இந்தியாவில் பன்னாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய வேளாண் பொருட்களின் விலையினைவிடக் குறைவாகச் சந்தையில் கிடைத்தது. பன்னாட்டுச் சந்தையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ள பொருட்களை இந்திய விவசாயிகள் பயிரிட அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் பெரும்பாலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர்ஆனால் குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தத்தால் மொத்த அளவில் விவசாயிகள் அதிக இழப்பினைச் சந்தித்தனர். இதனால் வேளாண்மையிலிருந்து சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பெருமளவிற்கு வெளியேறத் தொடங்கினர்.

1991-92ஆம் ஆண்டைப் பொருத்த அளவில் 1990-91ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காணப்பட்டது. எனவே அரசு இவற்றைச் சரிசெய்யும் முயற்சியிலிருந்தது. பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் கணிசமாகக் குறைந்தது. இதற்கு அடிப்படையாகப் பகுதி அளவில் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்வியும், தொழில் வளர்ச்சி குறைந்ததுமாகும். மூன்றில்ஒருபங்கு மக்கள் வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தும், அதன் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றில்ஒருபங்கினை மட்டுமே அளித்தது. வேளாண்மை வளர்ச்சிக்கு முதலீடு, குத்தகைச் சீர்திருத்தம்விவசாய கடன் அளிப்பை அதிகரித்தல், சரியான வேளாண் விலைக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்துதல் போன்றவை கட்டாயத் தேவைகளாக இருந்ததுவிவசாய இடுபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையினால் இடுபொருட்களின் விலை அதிகரித்தது. அதே சமயம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார வளர்ச்சி வங்கிகள் பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு போதுமான கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனை பெற்றதால் கடன் சுமை அதிகரித்தது. அதே சமயம் அரசு 1992-93 வேளாண் விளைபொருட்களுக்குக் கணிசமான அளவிற்கு ஆதார விலையினை அறிவித்தது. 1993-94ல் தடையற்ற வர்த்தக நடைமுறையின் விளைவு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியதுவேளாண் சார் தொழில்கள் பெருகத் தொடங்கியது. 1993-94ல் வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-95ல் பருவமழை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்ததால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது குறிப்பாக உணவு உற்பத்தியானது 185 மில்லியன் டன்னை எட்டியது. 1995-96ல் வேளாண்மை உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது. அரசு பொதுவிநியோக முறையின் வழியாக உணவு தானியங்கள் வழங்க அதிகமாகக் கொள்முதல் செய்ய தொடங்கியதால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வேளாண்மையில் லாபம் பார்க்க தொடங்கினர். இது  வேளாண் சாகுபடியினை அதிகரிக்க உதவியது. ஆனால் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 40 விழுக்காடு பயிரிடும் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன  வசதியினைப் பெற்றிருந்ததுபெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவினைச் சார்ந்திருந்தனர்நகர்ப்புறங்களில் தண்ணீர் பயன்பாடு பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் விவசாய நீர் ஆதாரங்கள் பறிபோனது. வறட்சி, பஞ்சம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, கடன் பொறியில் வீழ்ந்தது போன்ற நிலைகளினால் விவசாய தற்கொலைகள் அதிகரித்தது. 1995-2005ஆம் ஆண்டுகளுக்கிடையே 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் அதிக அளவிற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பினைச் சந்தித்தனர், எனவே இவர்கள் கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், அதிக கூலி பெறவும் புலம் பெயர்ந்தனர். இதனால் குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. வேளாண் சாராத் தொழில்கள் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் சாரா வருமானம் கிராமப்புறக் குடும்பங்களில் முக்கியப் பங்கினை எடுத்துக்கொண்டது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக உருவாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்திய வேளாண் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 14 விழுக்காடு அளவிற்கே இருந்தது. வேளாண் சாரா பொருட்களின் மீதான தாராளமய நிலையும், வேளாண்மை பொருட்களின் மீது குறைந்த நிலையிலும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இந்திய இறக்குமதிக்கு அதிக மதிப்புடைய பொருட்களின் மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. 1980களிலும், 1990களிலும் இந்திய வேளாண்மைக்கான ஏற்றுமதி சார்ந்த நிலை காணப்படவில்லை. இக் காலகட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள்  வேளாண் பொருட்களின் மீது விதிக்கப்பட்டதுவேளாண் ஏற்றுமதிக் கொள்கையால்  1994 முதல் தொடர்ந்து வேளாண் ஏற்றுமதி அதிகரித்தது. இக் கொள்கையால் பல சீர்திருத்தங்கள் (பொருட்களின்  வர்த்தகத்துக்கு  ஏற்ப  எண்ணிக்கையை குறைத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டைத் தளர்வு செய்தல், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையினை ஒழித்தல் மற்றும் ஏற்றுமதிக் கடன் இருப்பை அதிகரித்தல்நடைமுறைப்படுத்தப்பட்டதுஉலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களை வளர்ந்த நாடுகள்  வகுத்தது இதனால் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் அமைந்தது. இந்திய வேளாண்மையின் மீதான மானியத்தை குறைந்தது என்பது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தந்தது. வேளாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் வேளாண்மை ஆராய்ச்சி கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான அரசின் ஆதரவு நிலைப்பாடு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. வேளாண் தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, வேளாண்மையில் லாபம் பார்க்கும் பயிர் வகைகள் (பழம், காய்கறி, பூக்கள்பயிரிட தொடங்கினர். இதனால் தனியார் முதலீடு வேளாண்மையில்அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையில் பொதுத் துறை முதலீடு மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1986-90ல் 7.92 விழுக்காடாக இருந்தது 1991-95ல் 7.26 விழுக்காடாகக் குறைந்தது (Narasimha Reddy et al 2009). வேளாண்மையில் அரசின் முதலீடுகள் குறையத் தொடங்கியது, வேளாண்மையின் நிலைமையினை பெரும் சிக்கலான நிலைக்குக் கொண்டு சென்றது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் முன்பு எப்போதும் கண்டிராதப் பொருளாதார வளர்ச்சி (ஆண்டுக்கு 5.5 விழுக்காடு), வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட்டது. 1987ல் ஏற்பட்ட பஞ்சத்தை எவ்வித தோய்வின்றி கையாண்டது, சட்டப்பூர்வமற்ற அயல் நாட்டு பணப் பரிவர்த்தனையினை தடுத்தது என அனைத்து அம்சங்களிலும் சாதகமான நிலை நிலவினாலும் ஊழல் வெளிப்பாடு இருந்தது. இதனை எதிர்த்து வி.பி.சிங், தொழிற் சங்கங்கள், விவசாயிகள், சர்வோதைய மற்றும் காங்கிரஸில் மாற்று நிலைகொண்டவர்களின் ஒத்துழைப்புடன் போராடினார். அதிகார வர்க்கத்தினரின் ஊழல் கீழ்மட்டத்தில் பரவி இருந்தது. அன்றாடம் அனைத்துத் தரப்பினரையும் இது பாதித்திருந்தது. ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான ஆரிப் முகமது கான், உறவினர் அருண் நேரு, வி.சி.சுக்லா, சத்யபால் மாலிக் ஆகியோருடன் ஒன்றிணைந்து வி.பி.சிங் ஜனமோர்ச்சா என்ற இயக்கத்தை 2 அக்டோபர் 1987ல் துவக்கினார். 1988ல் நடந்த அலகாபாத் பாராளுமன்ற இடைத் தேர்தலில் வலதுசாரி இயக்கங்கள், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவுடன் வி.பி.சிங் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி தலைவர்களுடன் ஒன்றிணைந்து 11 அக்டோபர் 1988ல் ஜனதா தளம் துவக்கப்பட்டது அதில் வி.பி. சிங்கின் ஜனமோர்ச்சா இயக்கத்தை இணைத்துக்கொண்டார். 7 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணி என்ற அமைப்பினை 6 ஆகஸ்ட் 1988ல் ஏற்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் தனிக் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தேசிய முன்னணி 146 இடங்களிலும், பாஜக 86 இடங்களிலும், வலதுசாரிகள் 52 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து வி.பி.சிங் தலைமையில் 2.12.1989ல் ஆட்சி அமைக்கப்பட்டது. வி.பி.சிங் இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பிரதம மந்திரியாவார்.

7.8.1990ல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பினை அளிக்க 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் பாஜக, வலதுசாரிகள், சில அமைச்சரவை சாகக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவானது வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்டல் விடுத்தது. வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டம் கடுமையாக இருந்தது. இப்போராட்டங்கள் மேல் ஜாதி வர்க்கத்தினரால் தூண்டிவிடப்பட்டது என அறியப்படுகிறது. பெரும்பாலான இப் பிற்பட்டமக்கள் நிலச் சீர்திருத்தம் மற்றும் பசுமைப் புரட்சியின் நன்மைகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 1.10.1990ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்துவதை உச்ச நீதி மன்றம் நிறுத்திவைத்தது. இதனிடையே பாஜகவின் தலைவரான எல்.கே.அத்வானி 25.9.1990ல் சோமநாத்திலிருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். இது பீகார் மாநிலம் சமஸ்திபூர் சென்றடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து பாஜகவானது வி.பி.சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் ஜனதா தளத்தின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகருக்கு ஆதரவாக மாறியதால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் 7.11.1990ல் ஆட்சி அமைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலமே நீடித்த சந்திரசேகர் அரசு 5.3.1991ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது.

இக்கால கட்டத்தில் அரசின் செலவுகள் பல மடங்கு அதிகரித்தது ஆனால் அரசு மற்றும் பொதுத்துறை சேமிப்பானது தொடர்ந்து குறைந்துவந்தது. இதன் விளைவு அரசின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது (1979-80ல் நிதிப் பற்றாக் குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7 விழுக்காடாக இருந்தது 1991ல் 10.4 விழுக்காடாக அதிகரித்தது). இதனை எதிர்கொள்ள அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கியது. இதனால் அரசின் முதலீட்டிற்கும் பொது சேமிப்பிற்குமான இடைவெளி அதிகமானது (1980-81ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடாக இருந்தது 1989-90ல் 9 விழுக்காடாக அதிகரித்தது). நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பினால் செலுத்துநிலை இருப்பில் எதிர்மறை விளைவுகள் உண்டாகியது. செலுத்து நிலை இருப்பின் பற்றாக்குறையானது 3.5 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.8 விழுக்காடு) 1987-88ல் இருந்தது 1990-91ல் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.5 விழுக்காட்டு). 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த பொருளாதாரத்தில் முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் உள்ள இடைவெளியானது ஆண்டுக்கு சராசரியாக 2.5 விழுக்காடு அதிகரித்தது. 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு 5.5 விழுக்காடு வளர்ச்சியினைக் கண்டது. குறிப்பாக தொழில் துறையானது 7 விழுக்காடாக இருந்தது. ஆனால் சேமிப்பானது முதலீட்டை மேம்படுத்த உதவவில்லை இதனால் அதிகக் கடன் வாங்கி செலவிட செய்தனர். இதனால் நிதிநிலை மேலும் மோசமடைந்தது. செலுத்து நிலை இருப்பில் பாதக போக்கு காணப்பட்டது. 1980களின் இறுதியில் கடன் அளவு அதிகமாக்க காணப்பட்டது. உள்நாட்டுக் கடன் 1974-75ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.8 விழுக்காடாக இருந்தது 1984-85ல் 45.7 விழுக்காடாகவும், 1989-90ல் 54.6 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. வெளிநாட்டுக் கடன் 1980-81ல் 23.5 பில்லின் டாலராக இருந்தது 1985-86ல் 37.3 பில்லியன் டாலராகவும், 1990-91ல் 83.8 பில்லின் டாலராகவும் அதிகரித்தது. இதன் விளைவு இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1980-81ல் 5.85 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 4.1 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது மேலும் 1990-91ல் 2.24 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்தக் கையிருப்பானது அடுத்து வந்த ஒருமாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதற்கிடையே 1990ல் ஈராக்-குவைத் போரினால் பெட்ரோல் விலை அதிகரித்தது. இதனால் மேலும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. பன்னாட்டுக் கடன் தர மதிப்பீடு இந்தியாவின் மீதிருந்தது வேகமாகக் குறைந்தது இதனால் வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பெரும் சவால்கள் காணப்பட்டது. இதற்கிடையே அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புகளைத் திரும்பப் பெறத்தொடங்கினர். இந்த நிலையினை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 20 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து யூனியன் வங்கியிடம் ஜூலை 1991ல் அடகு வைத்து அந்நியச் செலாவணியினை பெற்று நடப்பு நிலையினை சரிசெய்தது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுப் பண நிதியத்திடம் இந்தியக் கடன் பெற்றது. இவ்வாறு இந்தியாவின் வெளிநாட்டு, உள்நாட்டு கடன்கள் அதிகரித்தது.

இந்தியாவின் பெரும் சவாலாக செலுத்துநிலை இருப்பில் ஏற்பட்ட பாதகமான நிலையினால் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து அதிகரித்தால் (1980-81ல் 20.6 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 64.4 பில்லியன் டாலராக அதிகரித்தது) இதற்குச் செலுத்தவேண்டிய வட்டி அதிகமானது. அரசின் வருவாய் இதற்காகத் திருப்பிவிடப்பட்டது எனவே நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்த 1 ஏப்ரல் 1990ல் புதிய இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையினை அறிவித்தது. இதன்படி இந்திய ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் (எரிபொருள்) நுகர்ச்சியானது 8 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் பெட்ரோல் இறக்குமதி அதிகரித்தது, அந்நியச் செலாவணி செலவு அதிகரித்தது.

வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றபோது விலைவாசி அதிக அளவில் காணப்பட்டது. எனவே இதனைக் கட்டுப்படுத்த முக்கிய நுகர்வுப் பொருட்களின் அளிப்பினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உணவு தானிய விலையினை கட்டுப்படுத்த அரசு உணவு தானியக் கையிருப்பினைப் போதுமான அளவில் அதிகரிக்க உணவு கொள்முதலை மேற்கொள்ள முன்னுரிமை அளித்தது. இதனால் உணவு தானியக் கையிருப்பு (ஒன்றிய தொகுப்பு) 11.67 மில்லியன் டன்னாக அதிகரித்தது (கடந்த ஆண்டில் இது 8.34 மில்லியன் டன்னாக இருந்தது). அரசு, ஏழை மக்கள் விலை உயர்வினால் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்க பொது விநியோக முறை மூலமாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வழங்கியது. இதுபோல் வெளிச்சந்தை நடவடிக்கையில் தலையிட்டு முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியது.

1980களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சத்தை இந்தியா எந்த நாடுகளின் உதவியுமின்றி எளிதாக எதிர்கொண்டது. காரணம் 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்லாமல் அரசின் உணவு தானிய இருப்பை அதிகரித்து கொண்டது. 1990களில் உணவு உற்பத்தி வளர்ச்சியானது (3 விழுக்காடு) மக்கள் தொகை வளர்சியினைவிட (2.1 விழுக்காடு) அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப் புரட்சியின் விளைவாக 1967-68 மற்றும் 1989-90ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 80 விழுக்காடு அதிகரித்திருந்தது, உற்பத்தி திறனானது ஆண்டுக்கு 2.5 விழுக்காடு அதிகரித்தது. இதன் விளைவு உபரியான உணவு உற்பத்தியினைச் சந்தைப் படுத்துதல் அதிகரித்துக் காணப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவினால் பெருமளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் (உணவு தானிய சாகுடி பரப்பானது 1980-81க்கும் 1989-90க்கு மிடையே கடந்த பத்தாண்டுகளில் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும் உணவு உற்பத்தியானது 2.81 விழுக்காடு அதிகரித்திருந்து), இது அனைத்து பகுதியிலும் சீரான நிலையில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் கூலிகள், அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பசுமைப் புரட்சியானது சிவப்பு புரட்சியாக பல இடங்களில் உருவெடுத்தது. இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்ததன் விளைவு நிலம் துண்டாடப்பட்டு சராசரி நிலக் கைப்பற்று அளவானது குறைந்து வந்தது (1970-71ல் 2.28 ஹேக்டேராக இருந்தது 1990-91ல் 1.57 ஹேக்டேராகக் குறைந்தது). மேலும் மொத்த விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் (இரண்டு ஹேக்டேருக்கு கீழ்) பங்கு அதிகரித்தது. இதன் அடிப்படையில் ஏழை விவசாயிகள் பயன்பெறத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிறு விவசாயிகள் வளர்ச்சி முகமை திட்டம், குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் விளைவு 1960களில் 20 மில்லியன் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 1988-89ல் 850 மனித வேலை நாட்கள் உருவாகியிருந்தது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீண்டகாலமாகக் காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் சச்சரவு தொடர்ந்து வந்தது. 1990-91ல் இப் பிரச்சனை இரு மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் சர்ச்சை உருவாகியது. இதனைத் தீர்க்க வி.பி.சிங் அரசானது காவிரி சர்ச்சை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங்கின் அரசு வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது. இந்தியப் பொருளாதாரம் 1980களில் சராசரியாக 5 விழுக்காடு வளர்த்திருந்தாலும் நீடித்த வேலையின்மை 1983ல் 8 மில்லியான இருந்தது 1987-88ல் 12 மில்லியனாக அதிகரித்தது. இத்துடன் குறை வேலையின்மை (under employment) அதிக அளவில் காணப்பட்டது. எனவே வி.பி.சிங் அரசானது மதிப்புடைய வேலைவாய்ப்பினை உருவாக்க ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்தை நாடு முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த போதுமான நிதி இல்லாததால், வேலையின்மை அதிகமாக இருந்த கிராமப்புற வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தியது.

அட்டவணை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் 

துறைகள்   1967-68 முதல் 1980-81வரை 1981-82 முதல் 1990-91வரை
வேளாண்மைத் துறை 3.3 3.5
தொழில் துறை 4.1 7.1
பணித் துறை 4.3 6.8
மொத்த உள்நாட்டு உற்பத்தி 

(காரணிகளின் விலையில்)

3.8 5.6
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் 1.5 3.4

Source: Illa Patnaik (2006): “India: Ecnomic Growth, 1950-2000,” Indian Council for Research on International Relations, New Delhi. 

வேளாண்மையில் வேகமான வளர்ச்சியினை அடைய பல்வேறு உத்திகள் கையாளப்பட்டது. இந்தியாவில் நீர்ப்பாசன வசதியினைப் பெற்ற பகுதிகளில் ஈர்க்கத்தக்க அளவில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தது. ஆனால் மழைப்பொழிவினைச் சார்ந்தும், பகுதியான அளவில் வறண்ட விளைநில பரப்பில் குறைவான உற்பத்தித் திறன் காணப்பட்டது. எனவே இப்பகுதிகளில், உற்பத்தித் திறனை அதிகரிக்க நீர்ப்பாசன, நிலமேம்பாட்டு, மண் மற்றும் ஈரப்பதத்தை மாற்றியமைக்க அதிக அளவிற்கு முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்துடன் வேளாண்மையில் பன்முகத் தன்மையினை உருவாக்கவும், வேளாண் சார் தொழில்களை உருவாக்கவும் முனைந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை நகர்ப்புறங்களுடன் இணைத்துச் சிறப்பான சந்தைப் படுத்துதலை உறுதி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தியத் தொழில் கொள்கை 1956 போல் வேளாண்மைக்கான சிறப்பான கொள்கையினை வகுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வி.பி.சிங் அரசு வெளியிட்டது. வேளாண்மையினை மேம்படுத்த ‘வேளாண்மை கொள்கை நிருணயம்’ கொண்டுவரப்பட்டது. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு அரசின் நிதி ஆதாரங்களிலிருந்து 50 விழுக்காடு செலவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 1989-90வது திட்ட கால ஒதுக்கீடானது 44 விழுக்காடாக இருந்தது 1990-91வது திட்ட காலத்தில் 49 விழுக்காடாக அதிகரித்தது. ஏழை விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் தொடர்ந்து கடனால் பாதிக்கப்பட்டும், அதனைத் திரும்பச் செலுத்த இயலாமலும், குறைவான வருவாயினை ஈட்டிக்கொண்டு இருந்ததாலும் காலம் காலமாக வறுமையின் பிடியில் சிக்கித் தவிர்ப்பதை உணர்ந்து 2, அக்டோபர் 1989ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்களின் கடனை ரூ.1000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு போலவே மாநில அரசுகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரூ.4000 கோடி உர மானியம் அளிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிக்க உற்பத்தி செலவினைக் கணக்கிடும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி வேளாண் தொழிலாளர் (குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு உட்பட) செலவு, குறைந்தபட்ச கூலி அல்லது பெயரளவுக் கூலி இதில் எது அதிகபட்சமோ அதனைக் கணக்கில் கொண்டது. விவசாயிகளின் வேளாண் சாகுபடி செய்தலின் மேலாண்மைக்கான மதிப்பீடு கணக்கில் கொள்ளப்பட்டது. வேளாண் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதற்கும் அரசு அறிவிக்கின்ற விலைக்கும் உள்ள செலவு வேறுபாட்டில் உள்ளீட்டுச் செலவின் உயர்வினைக் கொள்முதல் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையில் சரிசெய்து கொள்ளும் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டைப் பாதுகாக்கக் கிராமப்புற மேம்பாட்டின் அவசியத்தை உறுதி செய்தது. இது போன்று இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் சுயவேலைவாய்பினைப் பெருக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில் வேளாண் சார் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டது. வேளாண்மையில் சரியான தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த முறைசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்திய வேளாண்மை வளர்ச்சி 7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆண்டுக்கு 4.1 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது இது 6வது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (6 விழுக்காடு) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மழைபொழிவு சிறப்பாக இருந்தால் உணவு உற்பத்தியானது 1989-90ல் 171.04 மில்லியன் டன்னாக இருந்தது 1990-91ல் 176.39 மில்லியன் டன்னாக அதிகரித்தது. நெல், கோதுமை, பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெல் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது, சிறப்பு உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் தேசிய பயறு வளர்ச்சி திட்டம் 1990-91ல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசின் எண்ணெய் வித்துகள் தொழில்நுட்ப இயக்கம் (1986ல் தொடங்கப்பட்டது) தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியானது 1988-90ல் 18 மில்லியன் டன்னாக இருந்தது 1989-90ல் 16.8 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 1990-91ல் நல்ல மழை பொழிவு இருந்ததால் உரப் பயன்பாடு 12.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது (1988-90ல் 11.7 மில்லியன் டன்னாக இருந்தது) இதுபோல் வேளாண் கடன் 1990-91ல் ரூ.13240 கோடியாக இருந்தது 1989-90ல் ரூ.13022 கோடியாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்க ஜவஹர் ரோஜ்கர் யோஜனா 1989ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது (Chandra Shekhar Prasad 2009).

வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போர. மது தண்டவதே 1990-91ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் போது வேளாண்மைக்கான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். உர மானியத்திற்கு ரூ.950 கோடியும், உணவு மானியத்திற்கு ரூ.276 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதுபோல் வறுமையை ஒழிக்க வரவு செலவு திட்டத்தில் 30 விழுக்காடு ஒதுக்கப்பட்டது (கடந்த ஆண்டு இது 23 விழுக்காடாக இருந்தது). வேளாண்மைத் துறைக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.3115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேளாண்மைக்கான முன்னுரிமைத் தருவதாக அறிவித்த அரசு பூச்சிக் கொள்ளி மருந்து இறக்குமதிக்கான வரியினைக் குறைத்தது.

1980களின் இடையில் இந்தியப் பொருளாதாரம் முதல் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன்படி புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் புகுத்தப்பட்டது, வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. ஆனால் குழப்பமான அரசியல் நிலையினாலும், பொது விலைமட்ட உயர்வினாலும் இச்சீர்திருத்தங்கள் பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. மேலும் இச்சீர்திருத்தங்கள் தொழில் துறை சார்பானதாக இருந்ததால் வேளாண்மைக்கான முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. இக்கால கட்டத்திலிருந்து இந்திய வேளாண்மைத் துறையானது பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாம் கட்டமாகப் பொருளாதாரச் சீர்திருத்தமானது 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இது இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சியில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. இந்தியப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி நிலையிலிருந்து சந்தை சார்ந்த தொடர் வளர்ச்சிக்கு மாற்றமடைந்தது. இதன் விளைவு மக்களின் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது, வட்டார ஏற்றத் தாழ்வுகள் உருவானது, கிராமப்புறங்களில் வேளாண்மை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் வேளாண் சாரா தொழில்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையினைச் சார்ந்திருந்தவர்கள் குறிப்பாக சுயமாகப் பயிர் செய்பவர்கள் குறைந்தனர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்தனர். வேளாண்மை சாத்தியமற்றதாக விவசாயிகள் கருதத் தொடங்கினர். இதனை அடுத்துத் தொடர்ந்து வேளாண்மை பெருமளவிற்குச் சரியும் போக்கு உருவானது.

– பேரா.பு. அன்பழகன்

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு கட்டுரை – அ.பாக்கியம்

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு கட்டுரை – அ.பாக்கியம்




சீனாவின் வளர்ச்சி மாதிரியை மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யாது, மற்ற நாடுகளிலிருந்து மாதிரிகளை இறக்குமதி செய்யாது; மற்ற நாடுகள் தங்கள் மாதிரிகளை சீனா மீது திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்; ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கலுக்கு அதன் சொந்த வழியை ஆராய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சன் யெலி கூறினார்.

சீன நவீனமயமாக்கல் என்பது அமைதியான வளர்ச்சியின் நவீனமயமாக்கலாகும். நாங்கள் போர், காலனித்துவம் மற்றும் கொள்ளை போன்ற பழைய பாதையில் நடக்கவில்லை. ஆனால் அமைதி, வளர்ச்சி மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் நடந்து கொள்கிறோம்,” என்று சன் கூறினார், ஒவ்வொரு நாடும் அமைதியான வளர்ச்சி மாதிரியை தொடர முடியும் என்று சீனா நம்புகிறது.

உலகம் கோவிட்-19, பொருளாதார மந்தநிலை மற்றும் மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. வளர்ந்து வரும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில், சீனா உலகத்துடனான தனது உறவுகளை மேம்படுத்தி வருகிறது.

“மனிதகுலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட தயாராக உள்ளனர்” என்று ஜி கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய மொத்த நாடுகளின் எண்ணிக்கை172 லிருந்து 181 ஆக அதிகரித்துள்ளது.

“நாங்கள் 113 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளோம்.உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி, உலகளாவிய கூட்டாண்மை வலையமைப்பை ஏற்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐந்து கண்டங்களில் உள்ள 69 நாடுகளுக்கு 42 முறை விஜயம் செய்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை உள்நாட்டில் சந்தித்து சீனாவின் கூட்டாண்மைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.

சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) ஒரு சர்வதேச பொது முன்முயற்சியாகவும், உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான தளமாகவும் மாறியுள்ளது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, ஜூலை 2022 இறுதிக்குள், சீனா 149 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் 200க்கும் மேற்பட்ட BRI ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு முன்வைத்த Global Development Initiative (GDI) ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் ஏற்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு செப்டம்பர் 21, 2021 அன்று ஐநா பொதுச் சபையில் மெய்நிகர் உரையில் சீன அதிபர் ஜி முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ஜி தனது அறிக்கையில் உறுதியளித்தது போல், “நாம் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற வேண்டும் மற்றும் மிகவும் வலுவான, பசுமையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை தொடர வேண்டும்.”

நிலையான வளர்ச்சிக்கான ஐநா சபையால் முன்மொழியாக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்த உதவும் முதன்மை முயற்சியாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சிக்கான முயற்சி என்ற திட்டம் உதவி செய்யும். முன்னுரிமைப் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு, COVID-19 தடுப்பூசிகள், வளர்ச்சிக்கான நிதி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மேம்பாடு, தொழில்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.

GDI ஆரம்பம் முதல் சர்வதேச சமூகத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறது. 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. அதே நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோர் ஜனவரி 2022 இல் ஐநாவில் சீனாவால் தொடங்கப்பட்ட GDI நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

சீனாவும், சர்வதேச பங்காளிகளும் இணைந்து விவசாயம், கல்வி, கோவிட்-19 எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பிற்காக நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பர் 21, 2022 அன்று, நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை அமர்வை ஒட்டி நடைபெற்ற GDI நண்பர்கள் குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேலும் ஏழு நடைமுறை நடவடிக்கைகளை அறிவித்து வெளியிட்டார். GDI திட்டக் குழுவின் முதல் பட்டியல், 50 உறுதியான ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் 1000 மேலும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்படுகின்றன.

– அ.பாக்கியம்