நட்பு சிறுகதை – நிரஞ்சனன்

நட்பு சிறுகதை – நிரஞ்சனன்




அவன் பெயர் சிவா, திருமண வயது. மென்பொருள் பொறியியல் வேலை செய்கிறான்….. கலகலவென இருக்க மாட்டான், சட்டுன்னு யாரிடமும் பேசி விட மாட்டான், தேவை என்னவோ அதுக்கு மட்டும் தான்….. தன் FB உள்டப்பியுள் கூட அப்படித்தான், இவனிடம் பழகுபவர்களும் இவன் இப்படித்தான் என ஒரு எல்லையோடு இருந்து விடுவார்கள், இவன் அந்த எல்லைக்குள் தான் இருப்பான்.

இவனுக்கு ஒரு பெயரின் மீது ஈர்ப்பு, தன் முகப்புத்தக கணக்கில் அந்த பெயர் கொண்ட நபர்களை மட்டுமே அதிகம் சேர்த்து இருப்பான், வயதோ பாலினமோ பற்றிய, கவலை இல்லை. அதில் ஒரு கணக்கின் மீது ஈர்ப்பு, காலையில் முழிப்பது முதல் இரவில் இமை மூடவது வரை அனைத்தும் சொல்லி விடுவான், எதிர்பக்கமும் இவன் சொல்லுவதை கேட்டுக்கொண்டே இருப்பார்.

சில நேரம் சிரிப்பு, விவாதம் அறிவுரை என சென்றுக் கொண்டே இருக்கும். சிவா தன்னை பற்றிய விசயங்கள் அனைத்தும் கூறுவான் ஆன அவர்களை பற்றி எதுவும் கேட்க மாட்டான், அவர்களா சொன்னால் கேட்டுக் கொள்வான். இருப்பினும் அவரைப் பற்றி அவர் எதுவும் சொன்னது இல்லை, இவனும் கேட்பதில்லை.

பேசியது கிடையாது, எழுத்து மெசேஜ் மட்டுமே, ஆடியோ, இமேஜ் கூட கிடையாது…. இவன் அனுப்புவான் அவளிடம் இருந்து எதுவும் வராது….அது உசார் என்றும் கொள்ளலாம்….. ஆன சிவா எல்லை மீறவே மாட்டேன், அவர் திரும்ப திரும்ப உள்டப்பி வருவதில் இருந்து தெரிந்து கொண்டான், நம் எல்லையில் தான் நாம் இருக்கிறோம் என…..

அலுவலக பணி விசயமா வெளியூர் செல்ல அலுவலகம் நிர்பந்திக்க இவனும் கிளம்ப, எப்படி போகிறான் டிக்கெட் நம்பர் என எல்லாம் சொல்ல, எதிரில் இருப்பவரும் பார்த்து போ என கூற….. இவனும் கிளம்பி ரயில் நிலையம் வந்து தன் தொடர்வண்டி தேடி தன் இருக்கையில் அமர, ஏதோ ஒரு உள்ளுணர்வு, தன்னை தேடி யாரோ வாரங்க என்ற எண்ணம்…..

வண்டி விட்டு வெளியே வந்தான், அப்பெட்டியின் பயணிகள் பட்டியல் ஓட்டி இருந்தது, கவனித்தான்…. அதில் இவன் உள்டப்பியில் பேசும் பெயரும் இருந்தது சிறு மாற்றத்துடன்…… ஒரு வேளை அவரா இருக்குமோ என சந்தேகம் வர, தன் இருப்பை உள்டப்பி வழியா அந்த கணக்குக்கு அனுப்பினான்…..

பதில் இல்ல, பார்க்கவும் இல்ல….. வேர யாராவது இருக்கும், பல பேருக்கு ஒரு போல் பெயர் இருக்குதே, நம்ம கணக்குல கூட நெறய பேர் இருக்காங்க என தன்னை தேற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து ஜன்னல் பார்த்தவன், பார்த்தபடியே இருந்தான்.

அருகில் யார் அமர்கிரார்கள் என்பதை கூட கவனிக்க வில்லை, வண்டி கிளம்பியது, தென்றலின் வருடல் என வேடிக்கை பார்த்தவனை ஒரு கை உலுக்கியது, யாரடா என திரும்பினாள்,… அதுவரையில் மொபைல் எடுப்பதை தவிர்த்து இருந்தான்…..

ஒரு பெண், அவ்ளோ கலர் கிடையாது ஆனால் முக லச்சணம்,….. என்ன என்றான்? பின் பக்கம் கை நீட்டினாள்…..

பின்னாடி டிக்கெட் பரிசோதகர், தன் டிக்கெட் தேடி காண்பித்தான், எங்க போற என்றார் , பதில் அவளிடம்….

கேன்டீன் ஆள் வந்தார், சாப்பாடு ஆர்டர் என்றான்? அவள் ஆர்டர் கொடுத்தாள் இவனுக்கும் சேர்த்து, விழித்துக் கொண்டு இருந்தான்…

எதுக்கு எனக்கு சேர்த்து நீங்க சொல்லுறீங்க கேட்க வந்தவன், நீங்க அவங்களா என யோசித்த போது அலைபேசி சிணுங்க, இதை பார்க்காமல் விட்டு விட்டோமே என அழைப்பை முடிந்ததும் உள்டப்பி, வரிசையா தகவல் என் தங்கை வருகிறாள் நீ போகும் ரெயிலில், உன் பெட்டி தான், உன் பெயர் சொல்லி இருக்கேன்….. பார்த்துக் கொள் என…..

அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது, நம்மோட நம் தோழியின் சகோதரி என…..

பின் பேச்சு ஆரம்பிக்க, அவள் பேச தொடங்கினால், எங்க ஊர் இது, நாங்க எல்லாம் யார்….நான் , எங்க ஊர்க்கு வீட்டுக்கு தான் போகிறேன்….. என் அக்கா தான் அவள், அவள் ஒரு விபத்து அப்புறம் தன் செவி/பேச்சு திறன் இழந்து விட்டாள், அதில் இருந்து மீழ நாங்க பார்க்காத மெடிசின் இல்ல….. ஆன இப்போ கொஞ்ச நாள அவளின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டோம்….

என்னிடம் மட்டுமே கூறுவாள், தாய் தந்தைக்கு அவள் மாறியதே மகிழ்ச்சி…. நீங்க அவளை பார்த்தது இல்லலா, காண்பிக்க வா என்றாள்….. இவன் வேண்டாம் என மறுத்து விட்டான்…..

இவளுக்கு சிறு நெருடல், அக்காவின் நிலை தெரிந்தவுடன் கழட்டி விட பார்க்கிறான் போல, இவனை போய் அக்கா பெருமை அடிக்கிறாளே….. இந்த ஆண் ஜென்மங்கள் இப்படித் தான் என நொந்து கொண்டாள்…..

பிரயாணம் முடியும் முன், முந்தைய நிலையத்தில் இவன் இறங்கி விட்டான், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டான்…. போன போறான் என்று இவளும் இருந்து விட்டாள்….. அக்காவிடம் இருந்து ஒரு மெசேஜ் “come soon….an excitement waiting for you ….. ” அக்காவின் சந்தோசமான மெசேஜ் அச்சூழ்நிலையை மாற்றியது…. என்னவா இருக்கும் என கூட யோசிக்க வில்லை அவள்…..

வழக்கம் போல தன் வீடு போக, அங்கே வீட்டில்…. நடுவில் இவன், பக்கதில் அக்கா, அம்மா, அப்பா எதிரில் தம்பி என வீடு ஒரே சந்தோச மழை….. பல வருடம் கழித்து அனைவரின் முகத்தில் பார்த்த சந்தோசம்….

இவளுக்கு அப்போ தான் புரிந்தது, இவன் முன்னாடியே இறங்கியது தனக்கு முன் இங்கு வருவதற்கு என்று…….இவளின் பதில் ஆனந்தக் கண்ணீராக மட்டுமே இருந்தது….

நல்ல நட்பும் நல்ல எண்ணமும், நல்லவை தான் செய்யும், என்றென்றும்.

நிரஞ்சனன்

Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74 – சுகந்தி நாடார்



என்ன மாதிரியான விழிப்புணர்வு?

சிறந்த  கல்வியின் அடிப்படை உன்னதமான கல்வி வளங்களும் மனிதநேயம் வளர்க்கும் ஆசிரியர்களும். இவை இரண்டும் உருவாக தகவல்தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

விழிப்புணர்வின் அடுத்தப்பக்கம் நமது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள். இணையதளம் என்பதை virtual என்று கூடக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படி என்றால் 

carried out, accessed, or stored by means of a computer, especially over a network என்று Oxford ஆங்கில அகராதி கூறுகின்றது. இதையே தமிழில் நடைமுறையில் மெய்யான , செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க என்று அகராதி கூறுகின்றது. அதே virtual என்ற சொல்லை கணினிக் கலைச்சொல்லாக பார்க்கும் போது மெய்நிகர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். மெய்நிகர் என்றுதான் கூறுகின்றோமேத் தவிர மெய் என்று சொல்வதில்லை. மெய்க்கு நிகரான ஒன்று மெய்யாகி விட முடியுமா? இதையே தான் Oxford ஆங்கில அகராதியும் not physically existing as such but made by software to appear to do so என்று இன்னோரு விளக்கமும் அளிக்கின்றது. தமிழில் மாயம், மறைமுகம் கற்பனை என்று கூட இச்சொல்லுக்கு பொருள் இருக்கின்றது. இந்த அடிப்படையைக்கூட உணராமல் நாம் இணையத்தில் வரும் தகவல்களை நம்பிச் செயலாற்றிக் கொன்டு இருக்கின்றோம்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி நார்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற இரஷ்ய பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய ஏற்புறையில் இன்றைய செய்திகள் குறித்த கவலையைத் தெரிவித்து உள்ளனர். அதிலும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ராப்ளர் என்ற செய்தி தளத்தின் முதன்மை மேலாண்மை அலுவலர் மரியா ரேசா சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைக் குறித்த தன் கவலையைத் தெரிவித்தார். இன்றைய சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாக குறித்துப் பேசிய அவர் “ செய்தியாளர்களின் இன்னோரு பக்கமாக இருக்கும் தொழில்நுட்பத் தளங்கள், பொய் என்ற கிருமிகள் மூலம் நமது சிந்தனையை ஆக்கிரமித்து, நம்மை ஒருவரை ஒருவரோடு மோத வைத்து மக்களின் மனதில் பயன் கோபம் ஆத்திரம் என்ற விஷ உணர்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். இந்த விஷமச் செய்திகள் நம் உலகத்தை ஒரு அலங்கோலமாக மாற்றி வருகின்றது. தங்களுடைய இலாபத்திற்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு எதிராக உண்மையான செய்திகளைப் பரப்ப செய்தியாளர்கள் மிகவும் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். சமூக வலைதளங்களில் நடக்கும் வன்முறை இன்று உலகில் நாம் அனைவரும் அனுபவிக்கும் உண்மையான வன்முறை என்று அவர் சொல்கிறார்.

இன்று உலகில் வலம்வரும் செய்திகளில் பெரும்பான்மையான பங்கு முகநூல் வழியாகத் தான் பகிரப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்களா அல்லது வர்த்தகங்களா என்ற விவரம் முகநூல் நிறுவனத்திற்கு அன்றி வேறு யாருக்கும் தெரியாது. இந்தப் பயனாளர்கள் இடும் செய்திகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதும் முகநூலுக்குத் தான் தெரியும். 2021ம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் தேதி வெளிவந்த அறிக்கையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா (meta) கொடுத்துள்ள அறிக்கையில் பல தனியார் அவதானிப்பு (surveillance) நிறுவனங்கள் ஏறத்தாழ 50000 பயனர்களை தாக்கி அவர்களிடமிருந்து விவரங்களை எடுத்து அதை வைத்து உளவு நடத்தி இருப்பதாக அறிவிக்கைத் தெரிவித்து உள்ளது.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?டிசம்பர் 3ம் தேதி வந்த Reuters செய்தித்தளத்தில் வந்த செய்தியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அரசியல் செய்தித் தளம் 2020ம் அமெரிக்கத் தேர்தல் பற்றிய பொய்யான செய்திகள், புரளிகளை உண்மை செய்தியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இது முகநூல் நிறுவனத்திற்குத் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் செய்திதளத்தைக் கண்டித்த போதும் இந்தத் தளத்திலிருந்துவரும் பொய்யான செய்திகளை முகநூல் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிகிறது.

நவம்பர் ஒன்பதாம் தேதி முகநூல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளிவரும் ஒவ்வொரு 10,000 பதிவுகளில் பயனாளர்களை அச்சுறுத்தியும் கோபப்படுத்தியும் மன உளைச்சல் கொடுத்தும் தொந்தரவு கூட பதிவுகள் 14 அல்லது 15 முறை வருகின்றன என்று கூறுகின்றது. இவ்வாறு தவறு இழைக்கும் பயனர்களின் கணக்கை முடக்கியும், அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுத்தும் வருகிறது முகநூல்.

முகநூல் கொடுக்கும் தண்டனைகளில் முக்கியமானது இம்மாதிரி பதிவுகளைப் பற்றி எச்சரிக்கையை மற்றப் பயனர்களுக்குக் கொடுப்பதும். அப்பதிவுகளை பயனர்கள் பார்க்காதவாறு கீழே தள்ளுவதுமே தவிர இந்தச் செய்திகளை முழுமையாக அவர்களின் தளத்திலிருந்து எடுப்பதில்லை. அப்படியானால் நாம் மின்னியியல் வழி நுகரும் செய்திகளில் எது உண்மையானது? எது பொய்யானது? எது நிகழ்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தபடுகிறது? எது நம் உணர்வுகளைத் தூண்டி செயல்பட வைக்கிறது.

ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கும்?

முகநூலில் வரும் எதிர்மறை செய்திகள் இன்று இணையத்தில் வரும் செய்திகளில் ஒரு எடுத்துக்காட்டுத்தான். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இணையத்தில் வரும் செய்திகள் எப்படிப்பட்டவை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை நம்பி இருக்கும் செய்தியாளர்களை நாம் குறை சொல்லமுடியாது. ஒரு செய்தியை எப்படி எவ்வாறு சேகரிப்பது என்ற அடிப்படையில் அல்லவா மாற்றம் கொண்டு வரவேண்டும்? அந்த மாற்றம் கல்வியாலும் கல்வியாளர்களாலும் தான் வரும்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
நோபல்பரிசு பெற்ற மரியா ரேசா அவர்களின் கருத்து சரிதானே? இன்றைய முன்ணனி இணைய நிறுவனங்கள் ஒரு பதிப்பகத்தைப் போலத்தானே செயல்படுகின்றன?

சில நாட்களுக்கு முன்னால் வலையோளியாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சொன்ன கருத்துக்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை இரத்து செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உயர்திரு நீதியரசர் ஜீ.ஆர் ஸ்வாமிநாதன் அவர்கள் தன் தீர்ப்புரையில்கூட “எந்த ஒரு வலையோளியாளரோ அல்லது பொதுநல செய்திகளைப் பற்றி கருத்துரைக்கும் சமூகவலைதள பிரபலங்களோ இந்திய அரசு சாசனம் Article 19 (1) (a) படி ஊடகங்களும் செய்தியாளர்களும் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்று கூறுகிறார்.
Essential requirements for internet classroom 74th Series - Suganthi Nadar. Book Day. What kind of awareness? என்ன மாதிரியான விழிப்புணர்வு?
இவ்வாறு மக்கள் நுகரும் அனைத்து செய்திகளிலும் கலப்படம் இருந்தால் என்ன செய்வது? கலப்பட செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும், உண்மையானச் செய்திகளை எவ்வாறு கொடுப்பது? கொடுக்கும் செய்திகள் மனிதஉரிமைகள் மீறா வண்ணம் எப்படி அமையவேண்டும் என்று சொல்வதும் கற்றுக் கொடுப்பதும் கல்வி தானே? இன்றையக் கல்வி அப்படிப்பட்ட ஒரு கருவியாக மாணவர்களுக்குப் பயன்படுகின்றதா? இல்லைதானே?

பசி எவ்வாறு ஒரு காலத்தில் போக்ககூடிய ஒரு பிணியாகப் படுத்தபட்டதோ? எப்படி மின்சாரப் பற்றாக்குறை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியத் தேவையாக முதன்மைப் படுத்தப்பட்டதோ அது போல கல்வி முறையில் மாற்றம் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது. கல்விப் புரட்சியில் நம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா நிலைகளிலும் தன்னிறைவு அடையலாம்.

செய்தித்தாள், வானோலி தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளை நாம் வடிகட்டி எடுத்துப் புரிந்துகொள்ள சற்றேனும் கால அவகாசம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் கணினி வழி தகவல் தொழில்நுட்பத்தின் அகோர வடிவமாக, நம்மை வந்து அடையும் இந்த செய்தித் துணுக்குகளின் தாக்கத்தை எவ்வாறு  நேர்மறையாக மாற்ற  முடியும்?  என்ன செய்யலாம்?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69 – சுகந்தி நாடார்



கல்வியின் எதிர்காலம் கணினியா?

ஒரு புதியக் கருத்து நமக்குச் சொல்லப்படுகின்றது என்றால், அது நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு கருத்தாக இருந்தாலோ அல்லது நம் அனுபவத்தில் உணர்ந்து இருந்தாலோ தான் நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே கருத்து நமக்கு ஏதோ ஒரு வகையில் முன்பே அறிமுகமாகி இருக்கவில்லை என்னும் போது, அந்தக் கருத்தை சட்டென்று புரிந்து கொள்வது ஒருவருக்கு இயலாத காரியம்.

அது போலத் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி, நம் எதிர்காலம் மாறிக் கொண்டு வருகிறது மரம் என்று சொல்லும்போது நம்மால் உடனே புரிந்து கொள்ளும் அளவு, நம் எதிர்காலக் கல்வியின் நிலை கணினிகளால் நிர்னயிக்கப்படும் வரையறை செய்யும் போது அது ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒரு ஆசிரியரின் அனுபவத்தை ஒரு கணினியால் எப்படிப் பிரதிபலிக்க முடியும்? நம் முன் இருக்கும் மாணவர்களின் உணர்வுகளையும் முக மாற்றங்களையும் எவ்வாறு ஒரு கணினி கண்டு கொள்ளும்? மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி எவ்வாறு கற்பிக்கும்? சிறு குழந்தைகள் கணினி மூலம் கற்றால் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? என்று பல பதில் தெரியாத கேள்விகள் ஒவ்வோரு ஆசிரியருக்குள்ளும் எழும்பி நம்மைக் குழப்பமைடையச் செய்கிறது.Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு கருத்தை நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்துடன் இணைத்துப் பார்க்கும் போது ஓரளவு சொல்லப்படும் கருத்தின் பொருண்மையைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குக் கிடைக்கின்றது. எதிர்காலம் கணினிகளால் ஆளப்படும் என்று சொல்லும் போது, அது ஒரு புரியாதக் கருத்தாக இருந்தாலும் எதிர்காலத்தில் முக்கியமான ஒரு தொழில்நுட்பங்களாக செயற்கை அறிவுத் திறன், தானியங்கி வாகனங்கள், புதிப்பிக்கப்படகூடிய எரிசக்திகள், பாளச்சங்கிலித் தொழில்நுட்பம், சாமர்த்திய ஆடை அணிகலன்கள் என்று தொழில்நுட்பங்களை நம் வாழ்வாதரத்தின் அடிப்படையில் சொல்லும் போது ஓரளவு தெளிவான பொருண்மையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஏன் என்றால் இவற்றில் ஏறக்குறைய எல்லா வழிகளிலும் நாம் தொழில்நுட்பத்தை அனுபவித்துப் பார்த்து இருக்கின்றோம்.Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?மேற்ச்சொன்ன தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை தரவுகளும் இத்தரவுகளை தந்திரமாகவும் திறமையாகவும் கையாளக் கூடிய கணித கணக்கீட்டு முறைகள் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதும் ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் நிச்சயமாக இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் உறுதி இட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று முன்னணியில் இருக்கும் சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு எந்த நேரமும் ஒவ்வோரு வினாடியும் விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் நமக்கு அப்படித் தோன்றுகின்றதா?

இல்லை உண்மையிலேயே கணினி தான் நம் எதிர்காலம்? நமது வாழ்வாதாரம் வேலை உடல் மனநலம் பொருளாதாரம் பாதுகாப்பு இயற்கை வளங்கள் பேராபத்துகள் அனைத்துமே கணினியை சார்ந்தோ அல்லது கணினியின் கட்டளையாலோ தான் நடக்குமா? முக்கியமாகக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் எத்தனையோ கேள்விகள் குழப்பங்கள்.

இன்று நாம் பலவித பாடப்பொருண்மைகளாகப் பிரித்துப்படிக்கும் அனைத்துமே தரவுகளால் நிர்ணையிக்கப்பட்ட பாடங்களாக அமைந்து விடுமா? எந்த ஒருப் பாடப்பொருண்மையிலும் தொழில்துறை விற்பனர்கள் என்வரை அடையாளம் காணவே முடியாதா? நாம் கண்டு பேசி இருக்காத ஒருவரின் சமூக வலைதளங்களின் பதிவுகள் அவரை விற்பனராகக் காட்டினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா?Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

நமது கருத்துக்கள் மிக எளிதாகப் பரவ சமூக வலைதளங்கள் நிச்சயமாக உதவுகின்றன இன்றைய சமூக வலைதளங்களின் முக்கிய வேலை அவர்களது சேவையை நாம் 24 மணிநேரமும் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அதனால் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலும் நம் கவனத்தை எந்நேரமும் அவர்கள் கொடுக்கும் விஷயங்களிலுமே நம்மை வைத்து இருக்க உதவுகின்றனர். நாம் இவர்களது சேவையை எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதை வைத்து, அவர்களின் கணினிக் கணக்கீடுகள் நம் தேவையை ஊகித்து அதற்குத் தகுந்த செய்திகளை நமக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் பற்றியத் தகவலை நாம் விரும்பினாலது போன்ற விஷயங்களைத் தான் முகநூல் நிறுவனம் காட்டும். அதே நேரத்தில் எனது பெயர் பற்றி பலநேரங்களில் சமூக வலைதளத்தில் விவாதம் நடக்குமேயானால், அது போன்ற, மக்களைப் பிரித்தாளக்கூடிய விஷயங்களையே முகநூல் காட்டும்.
Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் செய்திகளில் முகநூல் முன்ணனி வகிக்கிறது என்றும், துவேஷதத்தைத் தூண்டும் செய்திகளால் இந்நிறுவனம் இலாபம் அடைந்து வருகிறது என்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் பல ஆவணங்களின் சாட்சிகளுடன் அந்நிறுவனத்தின் மேல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். மக்கள் உணச்சி வயப்படக்கூடிய செய்திகளின் மூலம் மக்களை தங்கள் தளத்திற்குச் சுண்டி இழுத்துக் கொண்டுகிறது இச்சமூக வலைதளம். இவ் வலைதளத்தின் இன்னோரு பகுதியான Instagram வழி பெண் குழந்தைகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விவரம் தெரிந்த போதும் இந்நிறுவனம் அதைப்பற்றி ஒரு சமூக அக்கறையின்றி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் அமெரிக்கப் பத்திரிக்கையான Wall street Journal அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பயனாளிகள் தங்கள் குழுக்கள் மூலமாக பொருள் ஈட்டும் வகைக்கான வழிகளைச் செய்து வருகின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

நவம்பர் மாதம் 9ம் தேதி இந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஒருவர் தங்கள் தளத்தை 10000 முறை பார்வையிட்டால் அதில் குறைந்தது 15 முறையாவது அடாவடித்தனமான செய்திகளும், ஒருவரைத் துன்புறுத்தும் செய்திகளும் வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளது. Instagramல் குறைந்தது 5 முறையாவது இப்படிப்பட்டச் செய்திகள் வந்துள்ளன என்று இந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது. ஏற்கெனவே புலனத்தில் நம்மைப் பந்தாடும் பொய்ச்செய்திகளைபற்றிய அனுபவமும் நமக்கு இருக்கின்றது.

நம் தேடுபொறிகளோ நமது உலாவிவழி நமது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளம்பரங்களை நாம் தேடும் இணையப்பக்கத்தின் முகப்பில் போடுகின்றன. நமது இருப்பிடத் தகவலை நாம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நமது கணினியின் இணைய நெறிமுறை முகவரி கொன்டு அதற்குத் தகுந்த விவரங்களைக் கொடுக்கின்றது. இதனால் இப்பக்கங்கள் ஒரு விளம்பரப் பலகையைப் போலத் தோன்றுகின்றன. நாம் தேடுபொறிகள் கொடுக்கும் விஷயத்தை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்வதால் விளம்பரத்திற்கும் உண்மையான விஷயத்திற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சென்ற வாரம் எங்களது பயணம் பற்றி சந்தேகங்கள் கேட்க ஒரு விமான நிறுவனத்தின் நுகர்வோர் உதவி எண்ணை தேடுபொறியில் தேடினோம். கிடைத்த எண்ணை அழைத்து அரை மணிநேரம் பேசிய பின், அவர் பணம் வசூலிக்க முற்படும் போதுதான் இது சரியான எண் தானா என்ற சந்தேகமே தோன்றியது.

அந்த அளவிற்கு நம்பகமான வகையில் செய்திகளும் மற்ற விவரங்களும் நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மைத் தாக்கவரும் செய்திகள் உண்மையானவையா? அல்லது பொய்யானவையா? அல்லது கற்பனையில் ஜோடிக்கப்பட்டதா என்று நாம் புரிந்து கொள்ளவே ஒரு பட்டப்படிப்புப் படிக்க வேண்டும் போல.

நம்மை நோக்கி வரும் தகவல்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடிய விஷயத்தைத் தருகின்றதோ இல்லையோ நம் வாழ்க்கை முறையில் சிறிது விஷத்தை விட்டுசெல்கிறது என்பதே உண்மை. நம் வாழ்வில் மட்டுமல்ல நம் வாழ்வாதாரத்திலும் பொய்ச்செய்திகளாளும் புரளிகளாலும் விஷம் சேர்க்கப்படுகின்றது என்று அறியாவண்ணம் கவனக்குறைவையும் கவனச்சிதறல்களையும் நம்முடைய அன்றாட செயலின் அங்கமாகி உள்ளது, கவனக்குறைவும் கவனச் சிதறல்களும் நம்மை இந்த நிறுவனங்களுக்கு அடிமையாக்கி வைத்து இருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

இந்த சமூக வலைதளங்கள் மக்களுக்கு அதிகமான தகவல்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வழிவகுப்பது போன்று இருந்தாலும் , முழுக்க முழுக்க இவை பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டவை. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றோம்.A picture containing text Description automatically generatedஒரு தொலைக் காட்ச்சியிலோ அல்லது வானோலியிலோ ஏன் திரைப்படத்திலோ நாம் நமது நேரத்தைச் செலவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை நடைமுறைக்கும் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் வேறுபடுத்திப் பார்க்க நம்மால் முடிந்தது. ஆனால் இந்தக் கணினியுகத்தில் அப்படி யோசிக்க விடாமல் சமூக வலைதளங்கள் விளம்பரங்களைத் தகவல்களாக நம் முன்னே காட்டிக்கொண்டே இருக்கின்றன. காதுக்குள் சொய் சொய்ங் என்று சுற்றி வரும் தேனீக் கூட்டத்தைப் போல் தகவல் தொழில்நுட்பம் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கின்றது.

வரலாறு என்பது கூட கணினித் தரவுகளின் அடிப்படையில் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய காலம் வரும். இன்று இலக்கியங்களும் காலம் காலம் தொட்டு வரும் பழக்கங்களும் பல நாடுகளில் உலகமயமாகுதல் உலக வர்த்தகம் காரணமாக சற்றே உருமாறி மேற்கத்தியக் கலாச்சாரமும் , கிழக்குக் கலாச்சாரமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை உலகெங்கிலும் இயற்கையாகிவிட்டது. ஒவ்வோரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து இன்று நம்முடைய வாழ்வில் இரண்டாம்பட்ச அல்லது மூன்றாம்பட்ச இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இதே நிலையில் போனால் கணினிவழி வரும் செய்திகளை நம்பியே பாடங்களும் அதன் வழிமுறைகளும் உருவாக்கப்படும் நிலை கூட வரலாம். முழுக்க முழுக்க கணினி வழிபடிப்பித்தல் மட்டுமே நடக்கக் கூடும். Moodle canvas போன்ற கல்வி மேலாண்மைத் தளங்கள் இணையவழித் தொழில்நுட்பங்களைக் கொண்டு பலவிதமானத் தேர்வுகளை நடத்த வழி வகை செய்துள்ளன. வீத்தேர்வுகளால் ஆசிரியரும் மாணவரும் நேரில் சந்திக்க வேண்டியத் தேவையே இல்லாமல் போகின்றது.

இன்று இணையப்பக்கங்களில் நுகர்வோருக்கு உதவியாக பல கணினிகளே அடிப்படைக் கேள்விகள் பலவற்றிக்கு பதில் சொல்லும்படி அமைக்கப்படுள்ளன. அச்சுக்காகிதங்களால் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் முதல் பலவகைக் கலைகள் இன்று கணினி மயமாக்கபப்ட்டுவிட்டன. பள்ளியில் பாடங்கள் மட்டுமன்றி ஒருவர் தன் வாழ்க்கையில் எதைக் கற்றுக் கொள்ள விழைந்தாலும் ஆதை இணையம் வழி செய்கின்றோம்.

ஆக இயந்திர மனிதர்களே ஆசிரியர்களாகக் கூட இருக்கலாம். மனிதர்களோடு இணைந்து இன்று இயந்திர மனிதர்கள் வேலை செய்வது போய் அவர்களே ஒரு குடும்பமாக ஒரு சமுதாயமாக உருவாகலாம். இவை எல்லாம் ஒரு கற்பனையின் வடிவங்களாக இருந்தாலும் கணினியையே நம்பி இருக்கக்கூடிய தலைமுறைகள் வளர வளர இயந்திரங்கள் ஆக்கிரமித்த ஒரு உலகம் அமையலாம். உயிரற்ற கணினியின் நிழலில் மனிதர்கள் வாழ வேண்டிய காலமும் வருமோ?
Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில் தொழிலாளர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் பலநாடுகளிலிருந்து மக்கள் குடியேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டது. ஆனால் இந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவைச் சார்ந்துள்ள பல நாடுகள் தங்களுடைய பிரஜைகளை தங்கள் நாட்டிலேயே வேலை பார்த்துக் கொள்ள பல வசதிகள் செய்துள்ளன. தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு பதிலாக அமெரிக்கத் தொழிற்சாலைகளை தங்கள் நாட்டிலேயே அமைத்துக் கொடுக்கவும் அரசுகள் ஆயத்தமாய் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் விலை உயர்வு அதிகமாகி உள்ளது. பேரிடர் காலத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்கள் முதற்கொன்டு அனைத்துக் நுகர்வோர் பொருட்களும் மின்சார, வாயு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் பொருட்களின் அலிப்பை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இயந்திர மனிதர்களை நாட வேண்டிய அவசியத்தில் உள்ளன.

இந்த பேரிடர் காலத்திற்குப் பிறகு அமெரிக்க நிறுவனங்கள் பல தொழிலாளர்கள் கிடைக்காமல் இயந்திரங்களை தங்கள் தொழிற்சாலையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பல வாகனத் தொழிற்சாலைகளில் இராட்சத இயந்திரங்கள் வாகனங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகனத் தயாரிப்பில் தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் பல வேலைகளை இன்று கணினிகள் தான் செய்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Acieta என்ற நிறுவனம் பலதரப்பட்ட இயந்திரங்களை மனித வேலை செய்யும் படிக்கு உருவாக்கியும் பல நிறுவனங்களுக்கு விற்றும் வருகின்றனர். எந்த ஒரு தொழில்நிறுவனத்தின் பல்வேறு வேலைகளைச் செய்யத் தகுந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் விற்பனையாகியுள்ளது என்று இந்நிறுவனம் கூறுகின்றது.

தென் கொரிய நாட்டில் விண்ணில் பறக்கும் வாடகைக் கார்கள் UAM (urban air mobility service) கொண்ட ஒரு தொழில்நுட்பத்தை தென் கொரிய போக்குவரத்து வல்லுனர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்நாட்டின் சியோல் நகரத்திலிருந்து நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு விரைந்து செல்ல இந்த விண் வாடகைக்கார்கள் பயன்படுத்தப்படும் என்றும் 2025குள் இவை பயன்பாட்டில் வர செய்யவேண்டிய அனைத்து வேலைகளும் முடிந்து இருக்கும் என்றும் தெரிகிறது. இவை இன்றைய நகரப் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு தானியங்கி வாகனமாகவோ அல்லது, ஓட்டுனர் வைத்தோ இயங்க முடியும் என்றுத் தெரிகிறது. இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் உலங்கூர்தியைப் போல இயங்கும் இந்த வாகனம் பொதுமக்களின் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. பிரபல வானூரிதி தயாரிப்பு நிறுவனமான airbuனைது குறித்து பல ஆராய்ச்சிகளையுன் செயல்பாடுகளையும் செய்து வருகின்றது.

இதையெல்லாம் பார்க்கும் போது கணினிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்றுமே தொழில்நுட்பத்திலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் தங்களை முன்னோடியாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களால் உலகின் மற்ற பாகங்களை அதே வேகத்தோடும் சீராகவும் அடைய முடிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடிப்படையில் கணினித் தொழில்நுட்பம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது என்பதைத் தாண்டி பல நாடுகள் விதவிதமாக பிரச்சனைகளை இந்தக் கணினியுகத்தில் சந்தித்து வருகின்றது.

பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போல தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு உலகில் மலிந்து இருக்கின்றது என்கிறது ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரபூர்வமான அறிக்கை. 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி வெளிவந்த அறிக்கை கூறுவதாவது, ஆசியா, பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளில் 52% மக்களுக்கு இணைய வசதியே இல்லை என்பது தான். அதாவாது தங்கள் பணி சம்பந்தமாக நகரங்களில் வேலை செய்து வந்த போது அவர்களுக்குக் கிடைத்த இணையவசதி பேரிடர் காரணமாகத் தங்கள் பணியிடத்தை விட்டு தங்களின் கிராமங்களூக்குச் செல்லும்போது அவர்களுக்கு கிடைக்க வழியில்லாமல் போனது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை, இதை விட UNICEF தரும் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் என்னவென்றால் மூன்றில் ஒரு குழந்தைக்கு இணைய வழி கல்விக் கிடைக்காமல் போய்விட்டது என்பது தான். அதுவும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கல்விக் கற்கத் தேவையான தொழில்நுட்பப் பற்றாக்குறை என்றால் இன்னோரு பக்கம் குடும்பச் சூழ்நிலை.

நம் ஆசிரியர்களில் பலருக்கு இது அனுபவமாகக் கூட இருக்கலாம். வீட்டில் படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை, வறுமை காரணமாக வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை இவை குழந்தைகளை அவர்களின் ஆரம்ப நடுநிலைக்கல்வி மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி ஆனால் கல்வி என்பது ஒரு குழந்தைக்கு இல்லையேல் ?

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (அதிகாரம்:கல்வி குறள் எண்:393)

பொருளாதாரத் தட்டுப்பாட்டால் கல்வி கிடைக்காத து ஒரு நிலை என்றால் தொழில்நுட்ப பற்றாக்குறைகள் ஒரு பக்கம் கல்வியை காணாமல் போகச்செய்கின்றன, கல்வி இல்லாத எதிர்கால சந்ததி எப்படி இருக்கும்.? நம் குழந்தைகளின் எதிர்காலமே கல்வியின் அடிப்படையில் தான் என்று எண்னிய பெற்றோர்களின் தியாகத்தில் வளர்ந்த பிள்ளைகள் நாம். நாமும் அப்படித்தான் நம் குழந்தைகளின் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.

உலகின் ஒரு பக்கத்தில் சாமர்த்திய நகரங்கள் மொதுமக்கள் பயன்படுத்த வான்வழி வாகனங்கள், இணைய விளையாட்டுத்தளங்கள் தனியார் விண்கலங்கள் என்று இருக்க மற்றோரு புறம் பசி பட்டினியோடு சேர்ந்து பண்பாட்டை கலாச்சாரத்தைத் தொலைத்த சந்ததியினரும் இருந்தால் எப்படி இருக்கும். தொழில்நுட்பத்திலேயே உருண்டு பிரண்டு வாழ்பவர்கள் நாகரீகமானவர்களாகவும், தொழில்நுட்பப் பற்றாக்குறையினால் வாய்ப்பிழந்து இருப்பவர்கள் நாகரிகம் அற்ற பழங்குடிகளாகவும் கருதப்படுவார்களா?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 -(எண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

Do social media like Facebook interfere in political discussions? Article in tamil translated by Era Ramanan முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா தமிழில் இரா. இரமணன்

முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா? – தமிழில்: இரா. இரமணன்



தலையிடுவது மட்டுமல்ல அதிலும் சில அரசியல் சக்திகள் பக்கமாகவும் சில அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு மேற்கு ஆசியாவில் காசா போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது ‘அல்அக்சா’ (#Al Aqsa)) என்கிற ஹேஷ்டேகை இன்ஸ்டாகிராம் -அதன் உரிமையாளர் முகநூல் – தடை செய்தது. ‘அல்அக்சா’ என்பது ஜெருசலம் நகரிலுள்ள மசூதி. இஸ்லாமியர்களின் புனித தலம். அதை ‘அல் அக்சா தியாகிகள் படை‘ என்கிற தீவிரவாத அமைப்பு என தவறாக தங்களுடைய அல்கோரிதம் புரிந்து கொண்டதால் நீக்கியதாகக் கூறி மன்னிப்பு கேட்டது.
அரபு மொழி பேசுபவர்களுக்கு இது முகநூலின் மற்றுமொரு அரசியல் அடக்குமுறையே. இது போன்று பல முறை நடந்துள்ளது. முகநூலில் சர்வ சாதரணமாக புழங்கும் மொழிகளில் அரபியும் ஒன்று. இது போல் தவறு நடந்துவிட்டதாக முகநூல் அடிக்கடி வெளிப்படையான மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆனால் இது அவ்வளவு அப்பாவித்தனமான தவறு அல்ல என்கிறது முகநூலின் முன்னாள் ஊழியரும் எச்சரிக்கை மணி அடிப்பவராக மாறியுள்ளவருமான பிரான்சிஸ் ஹேகன் வெளியிட்டுள்ள ஆவணங்கள்.. இது அதன் கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடு என்கிறார். இது போன்ற தவறுகளின் ஆழத்தை பல ஆண்டுகளாகப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்வதற்கு முகநூல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது அரபி மொழியில் மட்டும் நடக்கவில்லை. அந்த நிறுவனம் இது போன்ற மோதல் நடக்கும் பல பகுதிகளில் அந்த மொழி மற்றும் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் நடுவர்களை போதுமான அளவு நியமிப்பதில்லை. அதன் செயலியும் செயற்கை நுண்ணறிவு கொண்டு பல்வேறு மொழிகளில் பதிவிடப்படும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கவில்லை. இதனால் அங்கெல்லாம் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளும் தீவிரவாத பிரச்சாரங்களும் பெருகுகின்றன.

முகநூலின் இரட்டை வேடத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தானிலும் மியான்மரிலும் இந்த ஓட்டைகள், மக்களை தூண்டிவிடும் பதிவுகள் ஏராளமாக பதிவிடுவதற்கு அனுமதிக்கும் அதே வேளையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் பொதுவான வார்த்தைகளைக் கூட ஒட்டு மொத்தமாக தடை செய்து சாதாரண பேச்சுகளையும் நசுக்குகிறது.

உலகின் எல்லோருடைய அரசியல் கருத்துகளையும் தான் ஒரு நாள் இடையீடு செய்வோம் என்ற நோக்கத்துடன் முகநூல் செயலி அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று அதனுடைய அரசியல் முக்கியத்துவத்திற்கும் அதன் வசம் உள்ள வள ஆதாரங்களுக்கும் ஏற்ப பதிவுகளை ஆய்வு செய்யும் நடுவர்களை நியமிக்க ஏன் அது போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது என்கிறார் மத்திய கிழக்கு எண்ணியல் நிறுவன இயக்குனர் எலிசா கேம்பெல்.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை குறிவைக்கும் வெறுப்பு பதிவுகளை பரப்புவதை தான் தடுக்கவில்லை என தன் உள் ஆவணங்களில் முகநூல் ஒத்துக்கொண்டுள்ளது.

இந்தியாவிலும் ஒரு வலதுசாரி இந்துத்துவ தேசியவாத குழு முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயப் பிராந்தியை கிளப்பக் கூடிய பதிவுகளை வெளியிடுவதை தடை செய்யலாமா என்று அதன் ஊழியர்கள் விவாதித்ததாக இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

26.10.2021 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் செய்தியிலிருந்து.

பாஜகவிற்கு எதிராக இருந்த 44 பக்கங்களில் 14 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நீக்கியது – ஸ்க்ரோல். இன் இணைய இதழ் (தமிழில்:தா.சந்திரகுரு)

பாஜகவிற்கு எதிராக இருந்த 44 பக்கங்களில் 14 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நீக்கியது – ஸ்க்ரோல். இன் இணைய இதழ் (தமிழில்:தா.சந்திரகுரு)

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, 2019 ஜனவரியில், ‘எதிர்பார்க்கப்பட்ட தரங்களை மீறுவதாக’ இருப்பதாகவும், ‘உண்மைகளுக்கு ஏற்ப இல்லை’ என்ற வகையில் பதிவுகளை அந்த பக்கங்கள் கொண்டிருந்தன என்றும் குறிப்பிட்டு தனக்கு எதிரான 44 பக்கங்களின் பட்டியலை ஃபேஸ்புக் இந்தியாவிடம் பாரதிய ஜனதா கட்சி…
மோடி அரசாங்கத்தின் நலன்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவுடன் கொண்டிருக்கும் நெருக்கம்  – குணால் புரோஹித் (தமிழில்:தா.சந்திரகுரு)

மோடி அரசாங்கத்தின் நலன்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவுடன் கொண்டிருக்கும் நெருக்கம்  – குணால் புரோஹித் (தமிழில்:தா.சந்திரகுரு)

இந்திய ஆளும் கட்சி கொண்டிருக்கும் வெறுப்புணர்வைத் தடுப்பதை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தடுத்தார் என்று கிடைத்த தகவல்களுக்குப் பிறகு நாங்கள் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம் பாஜகவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளை எடுத்ததுடன், அரசாங்கத்துடனான வணிக…