Kanneer Paatu Kavithai By Vasathadheepan கண்ணீர் பாட்டு கவிதை - வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு கவிதை – வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு
********************
பெண்ணின் தினத்தில்
கர்ப்பிணி பலி
கண்ணில் குருதி ஊற்றெடுக்கிறது
ஆணின் அதிகாரத்தின் திமிர் நறுக்கப்பட வேண்டியது
பெண் இன்றி ஆண் இல்லை
ஆண் இன்றி பெண் இல்லை
இருவரின்றி வாழ்வு இல்லை
பெயர் பெற்றவர்கள் இறந்தால்
நாடே துக்கப்படும்
பெயரற்றவர்கள் மறைந்தால்
சிறு சலனம் கூட எழாது
எவரையும் எதையும் எதற்க்கும்
மரணம் பொருட்படுத்தாது.
ஓரமாகவே செல்கிறேன்
ஒதுங்கி ஒதுங்கி விலகுகிறேன்
முட்டிமோத கனவுகள் ஓடி வருகின்றன.
காலார நடந்து செல்ல முடியவில்லை
ஆற அமர யோசிக்க முடியவில்லை
பதட்டமாகவே பொழுது கழிகிறது
உண்மை உன் முன்
குற்றுயிராய் கிடக்கிறது
கண்மூடி கடந்து போகிறாய்
இடி உன்னைத் தேடுகிறது
ஏழு சுரங்கள்
எண்ணமுடியா ராகங்கள்
சின்னஞ் சிறு இதயத்தில்
ஆயிரம் பாட்டுகள்.

கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும்
நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன்
உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம்
குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி
மனிதம் உருவழிந்து போயிற்று

புள்ளினங்கள் மடிந்து போயின
குழந்தையின் அலறலும்
ஆந்தையின் அலறலும் நடுநிசியைக் கிழித்தன
மனிதனின் இருப்பின் நிலை கேள்வியானதோ
கேவலத்தின் உச்சம் ஆக மனிதன் ஆனானோ?
அவலங்களின் மொத்த வடிவமே அகிலந்தானோ?

தீச் செயல்கள் படையெடுக்க தீய்ந்தது மானிடந்தானோ ?
அரசும் மக்களும் எதிர் எதிர் பாதைகளில் பயணித்தல் கொடுமையன்றோ?
சிவப்புக் குருதிநதிகள் தெருக்களில் ஓடுகின்றன
உவப்பு வாழ்க்கை எங்கோ ஓடிவிட்டது
மேகங்கள் பொழியும் மழை கண்ணீராய் மாறிவிட்டது

இந்நிலை எந்நாளும் என்றால்
உயிர்கள் இல்லா உலகே
நிதர்சனமாகும்
தீப்பந்தங்களின் கொடூரத்தால் குழந்தைகள் மடிந்து போகும்
துப்பாக்கி ஓசைகள் நாட்டின் இசையாகும் அவலம் அரங்கேறும்
அய்யகோ அய்யகோ மானுடம் இங்கே அழிந்தம்மா

*************************************************
மேகத் திரைக்கு பின்னால் இரு சந்திரன்கள்
ஒன்று சிவன் தலையில்
இன்னொன்று வானத்தில

கைலாயத்தின் பொற்கிரணங்கள்
வெண்பனி மலையில் பணியை சாரல் நதியாக்குகின்றன
மேகலையின் இடை நெகிழ்ச்சியில்
அன்பு ஊற்றெடுக்கிறது

எங்கிருந்தோ வரும் சூலாயுதம்
கைலாயத்தின் பள்ளத்தாக்கை
ஊடுருவிச் செல்கிறது
சிவப்புக் குருதி பொங்கி வழிகிறது

நந்தவனத்தின் பூ வாசனை
உலகத்தை வாசமாக்குகிறது
நீல நிற ஆகாயம் விண்மீன்களை பார்த்து
கண்சிமிட்ட சொல்ல

அவை தப்பாது
அப்பணி தனை
செய்கின்றன
அகிலத்தில் ஆனந்த லீலா விநோதங்கள்
அதிசயப் பூக்களாய் பூக்கின்றன

Ezhuthal Nagarthu Ennathai Uyarthu Poem By Karkavi எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை - கார்கவி

எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை – கார்கவி




ஊற்றோடு ஊற்றாக மை ஊற்றப் பழகு..!
செல்லும் இடமெல்லாம்
நம்பிக்கை கொண்டு செல்லப் பழகு..!
உயிர் மெய் உனதாக்கு..!
உலகமே நமக்கென பறைசாற்று..!
ஏணியை வானுக்குப் போடு…!

எட்டாத நிலை வந்தால் எழுதுகோல் எடு…!
உலகத்தை ஒருகையில் ஏந்து..!
உண்மையை சாட்டையாக்கு…!
தளர்வுகளில் ஆசை ஊற்று…!
தயங்காமல் கடல் செய்…!

தற்குறி என கூறலாகாதே…!
தட்டிக் கொடுப்போரிடம் முதுகுடன் கண் கொடு…!
வானுக்கு மை நிரப்பு..!
சின்னதொரு நம்பிக்கை வை..!
நாளை உன் வாசல் வர வை….!

ஆணுக்கு பெண் தேடு..!
பெண்ணுக்கு ஆண் தேடு..!
இரண்டிலும் நீள் உண்மை தேடு…!
கடலுக்குள் முத்தை தேடு..!
கடைசியாக ஒரு சொட்டு நீர் விடு..!

அண்டத்தில் புது பூமி தேடு…!
அங்குலம் நிறைந்த கைரேகை தேடு..!
அணு அளவு அணிசேர்..!
எவனாளாலும் வெற்றியை கொள்..!
அகிலம் நிறைந்த வெற்றி காண்..!

ஏணி ஏறி நடைபோடு
எழுத்தால் நகர்த்து-உன்
எண்ணத்தை உயர்த்து…!

Kala puvan's Poems கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்




சமர் பறவைகள்
•••••••••••••••••••••••••
சிறகுகளின் மடிப்புகளில்
சமர் குறிப்புகளை வைத்திருக்கும்
பறவைகள் தினம் தினம் பறக்கின்றன
தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும்
தமது வாழ்க்கைப் போராட்டத்தை மறு விழியிலும்
சுமந்து வைராக்கியத்தை இலக்காக
ஒற்றைச் சிறகிலும் தூக்கிப் பறக்கிறது
நேற்றின் மகிழ்ச்சியையும்
இன்றைய அவலங்களையும்
நாளைய எதிர்பார்ப்புக்களையும்
தனது குஞ்சுகளுக்கு உணவுடன் ஊட்டுகிறது
சமர் பற்றிய புரிதலை
தமது குஞ்சுகளுக்குக்
கூடுகளிலேயே அறியப்படுத்துகிறது
அச்சத்தின் எச்சங்களை
தமது கழுத்தில் சுமந்து கொண்டு
தூரங்களைப் பறந்து கடக்கின்றன
இப்படித்தான் பறவைகள்
தங்கள் வானங்களில்
வாழ்க்கையை நடத்துகின்றன….
ஆமென்

நிழல்
•••••••••
என்னிலிருந்து என் முன் நீளும்
என்னிலிருந்து என்னுள் இறங்கும்
என்னிலிருந்து என் பின் தொடரும்
ஆதவனுக்கும் நிழலுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்
நிழலுக்கு உயிர் தருபவன் ஆதவன்
இரவு நேர நிழல்கள் விளக்குகளாலும்
மெல்லிய விளக்குகொளியாலும் ஏற்படுவன
விளக்கின் கண்ணாடியில் அமரும் சிறு கொசுவின் நிழல்
சுவரில் பூதாகரமாய்த் தெரியும்
நம்மைப் பயமுறுத்தும்
இரவு நிழலைக் கண்டு பயப்படாத குழந்தைகளும்
பெண்களும் அபூர்வம்
எப்படியிருந்தாலும் நாமும் நிழலும்
ஒன்றுடன் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்து கிடப்பவர்களே
நானின்றி நிழலில்லை
நிழலின்றி நானில்லை
ஆமென்

காத்திருப்பு
••••••••••••••••••
என் கனவுகளின் மீது நிஜங்களை நீ வரைகிறாய்
முகையவிழும் மலர்க் காடுகளில் வசந்தம் வந்து வீசிப்போயிற்று
பேரன்பின் உதிர்தல் பற்றி நீயறிவாயா ?
இரவுகள் உதயமாகின்றன
பகல்கள் நீளங்களை அளக்கின்றன
அது பெருங்கடல்
ஆழத்தில் உறைகிறது

நிறங்களை
வண்ணத்துப்பூச்சிகள் வர்ணஜால வண்ணங்களாய்
மாற்றுகின்றன
அவை என்
கண்ணுக்குள் நுழைத்து என் கனவுக்குள் புகுகின்றன
நாம் இருவரும் மெளனங்களை மொழியாக்கி பேசிக்கொண்டிருக்கிறோம்
நீலோற்ப மலர்கள் வண்டினங்களின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன
நம்மைப்போல……….
ஆமென்