தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய அரிய நூல் – ஜி.ராமகிருஷ்ணன்

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய அரிய நூல் – ஜி.ராமகிருஷ்ணன்




“நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதை தீர்மானிப்பதுதான் ஒரு புரட்சியின் முக்கியமான அம்சம். இதற்காக ஒவ்வொரு வர்க்கத்தினுடைய சமூக பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்’’ இந்த வார்த்தைகள் மாவோ எழுதியவை. 1926 ஆம் ஆண்டு ‘‘சீன சமூகத்தில் வர்க்கங்களை பற்றிய ஆய்வு’’ என்ற ஆய்வுக் கட்டுரையில் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ரஷ்யாவில் விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி’ குறித்து 1899 ஆம் ஆண்டு லெனின் எழுதிய நூல் ரஷ்யாவில் கிராமப்புற மக்களை திரட்ட வழிவகுத்தது. மார்க்சியவாதிகளாகிய நாம் சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம், மனித குல விடுதலைக்காக உழைக்கிறோம். எனவே, நம்முடைய அன்றாட செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கே நம்முடைய நண்பர்கள் யார்; எதிரிகள் யார் என தீர்மானிப்பது அவசியம். மக்கள் ஜனநாயக புரட்சிக்காக திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் விரிவாக விளக்குகிறது. இத்தகைய வர்க்கங்களை திரட்டுவதற்காகவே இடதுஜனநாயக அணி என்ற முழக்கத்தை கட்சி முன்வைத்துள்ளது.

1937 ஆம் ஆண்டு அன்றைய பிராந்திய அரசு (சென்னை ராஜதானி) கேரளத்தில் மலபார் பகுதியில் குத்தகை விவசாயிகள் பிரச்சனை பற்றி ஆய்வு செய்திட அமைத்த குழுவில் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் இடம் பெற்றிருந்தார். அக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு தனது மாற்றுக் கருத்தை தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் குழுவிடம் சமர்ப்பித்தார். கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களுடைய உபரி நிலங்களை நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்வதன் மூலமே கிராமப்புற வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் காண முடியும் என தனது குறிப்பில் வலியுறுத்தினார். 1957 ஆம் ஆண்டு அவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றி அமலாக்கினார். இந்தியாவில் விவசாய வர்க்கங்கள் பற்றி ஆய்வு செய்திட இப்போதும் இஎம்எஸ் குறிப்பு முன்னுதாரணமாக திகழ்கிறது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு தோழர் சுந்தரய்யா முன்முயற்சியில் ஆந்திராவில் தெனாலி வட்டத்தில் அனந்தவரம் மற்றும் குண்டூர் மாவட்டம், குண்டூர் வட்டத்தில் கசா என இரண்டு கிராமங்களை தேர்வு செய்து இந்த கிராமங்களில் விவசாய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை செய்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நூலாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனுபவம்

தமிழ்நாட்டின் அனுபவத்திலும் இத்தகைய ஆய்வுகள் முக்கியமான இடம் பெற்றுள்ளன. அதில் ‘‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’’ என்ற தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய நூல் மிகவும் முக்கியமானதாகும். 1947 ஆம் ஆண்டு சீனிவாசராவ் எழுதிய இந்நூல் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழுவால் வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு துவங்கி பாரதி புத்தகாலயம் இதுவரை இந்நூலை மூன்று பதிப்புகள் வெளியிட்டுள்ளது. 1947க்குப் பிறகு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழத்தஞ்சையில் (திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) விவசாயத்திலும், விவசாய வர்க்க நிலைமைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், சீனிவாசராவ் எழுதிய இந்த ஆய்வு நூல் விவசாய வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்மாதிரியாகவும் இன்றைய சூழலை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டியாகவும் அமையும். 1947-ஆம் ஆண்டில் அன்றைய அரசு, காவல்துறை, ஊடகம் ஆகியன பற்றியும், நிலச்சுவான்தார்கள், குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட விவசாய வர்க்கங்கள் பற்றியும் ஆய்வு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் பெரிய நிலச்சுவான்தார்களின் நிலக்குவியல் பற்றியும், கோவில்களுக்கு, மடங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு இவர்களே அறங்காவலர்களாக இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களின் சமூக, பொருளாதார ஆதிக்கத்தை கீழ்க்கண்டவாறு தோழர் சீனிவாசராவ் விளக்கியிருக்கிறார். ‘‘பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு எஜமானர்களாக விளங்கும் மடங்கள் பல இருக்கின்றன. மிராசுதார்களில் பலர் லேவாதேவிக்காரர்கள். வட்டிக்கு வட்டி, கடும்வட்டி வாங்கி பணம் குவிப்பதில் கெட்டிக்கார புள்ளிகள். கிராமக் கமிட்டிகளிலும், கோவாப்பரேட்டிவ் சொஸைட்டிகளிலும் இவர்களே அடைந்து கொண்டு தம்மிஷ்டம் போல் அவற்றை ஆட்டுவிக்கிறார்கள். நெல் விற்பனை சம்மேளனமும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. இவர்களில் பலருக்கு முழுசாக அநேக கிராமங்கள் சொந்தம்’’ ‘‘…இவர்கள் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் இருக்கவே இருக்கிறார்கள்’’.

பண்ணையாட்கள் பற்றி…

‘‘பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே. இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால் அரை மரக்கால் நெல்தான்’… ‘‘…முடிவாக சொல்லப்போனால் ஜெயில்களில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, தஞ்சை ஜில்லா விவசாயிகள் உண்ணும் உணவை விட பல மடங்கு மேலானது’’. மேலும், பண்ணையாட்கள் குரூரமான தீண்டாமைக் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

குத்தகை விவசாயிகள் பற்றி…

‘‘ஆதி திராவிட பண்ணையாட்களின் நிலைமைதான் இப்படி; மிராசுதார்களிடமிருந்து நிலத்தை வாங்கி வாரத்திற்கும் குத்தகைக்கும் உழுகிற ஜாதி ஹிந்து விவசாயிகளுடைய நிலைமையாவது சுபீட்சமாயிருக்கிறதா? கிடையாது. இந்த ஜில்லாவில் வாரத்திற்கு உழுபவர்கள், விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்குதான் பெற்று வருகிறார்கள்’’.

சிறு மிராசுதார்கள் பற்றி…

‘‘ஒன்று முதல் பத்து ஏக்கர் வரை தமக்கு சொந்தமாக கொண்ட சிறு மிராசுதார்களாவது நல்லபடி இருக்கிறார்களா? இவர்களுடைய பேரில் பட்டா இருந்தாலும், உண்மையில் இவர்களும் இந்த பெரும் நிலப்பிரபுக்களின் பொருளாதார பிடிக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’’.

ஏழை விவசாயிகள் பற்றி…

‘‘ஏழை விவசாயிகள் இந்த மிராசுதார்களிடம் ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறார்கள். விதைப்புக் காலத்தில் மிராசுதார்களிடம் தானியமாக கடன் வாங்குவார்கள் விவசாயிகள். அறுவடைக் காலம் வந்தவுடன், தான் கொடுத்ததைவிட மூன்று மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டுபோவார் மிராசுதார்’’.

ஊடகங்கள் பற்றி…

‘‘விவசாயிகளை அடக்க வேண்டும், விவசாய சங்கங்களை நசுக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிற மிராசுதார்கள் என்ன கடிதமெழுதினாலும் சரி, உடனுக்குடன் அவற்றை, நாலு பத்தி தலைப்புக் கொடுத்து கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துவிடுகின்றன தேசியப் பத்திரிக்கைகள். அதே சமயத்தில், மிராசுதார்களின் பொய்ப் பிரச்சாரத்தை மறுத்து கிசான் சபைத் தலைவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ அறிக்கை விடுத்தால், அவைகளை வெளியுலகுக்கு தெரியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகின்றன அதே பத்திரிக்கைகள்’’. அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறை பற்றியும் நிலச்சுவான்தார்களின் பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட ஆதிக்கம் பற்றியும் விளக்கிய தோழர் சீனிவாசராவ் விவசாய சங்கத்தின் தேவையை குறித்து கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்: ‘‘மிராசுதார்களின் இத்தகைய மனித தன்மையற்ற சுரண்டலையும், பயங்கரச் செயல்களையும் எதிர்ப்பதற்காகவே 1943 ஆண்டு தஞ்சை ஜில்லாவில் கிசான் சபை ஏற்படுத்தப்பட்டது. கிசான் சபா இயக்கத்தின் முன்னணி வீரர்களாக கம்யூனிஸ்ட்டுகள் விளங்கினார்கள் என்பதில் ஆச்சரியப்படத்தக்க தொன்றுமில்லை’’.

வீரமிக்க போராட்டம்

கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் நடத்திய வீரமிக்க போராட்டத்தினால் கீழத்தஞ்சையில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை கொடுமையும் ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய வர்க்க போராட்டத்தினால் இதுபோன்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டு வரும் சூழலில் இன்றைய நிலைமைக்கேற்றவாறு முழக்கங்களை உருவாக்கி போராட வேண்டிய தேவை உள்ளது. 1947-ஆம் ஆண்டு தோழர் பி.சீனிவாசராவ் எழுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வெளியிட்ட ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற நூலை நாம் இப்போது மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளூரில் இதுபோன்ற ஆய்வுப் பார்வையை வகுத்துக் கொண்டு செயல்பட இந்த மறுவாசிப்பு சிறந்த பயிற்சியாக அமைந்திடும்.

நூல் : தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
ஆசிரியர் : பி.சீனிவாசராவ்,
விலை : ரூ.₹20/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நன்றி: தீக்கதிர்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்




அரசியலும் பொருளாதாரமும் நெருங்கிய தொடர்புடையது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் பொருளாதார அடிப்படைக்கும் மேற்கட்டுமானம் (அரசியல் மற்றும் சட்டம்) ஆகியவற்றுக்கும் இடையே இயங்கியல் தொடர்புகளைப் பற்றி விளக்கினார்கள். அரசியல்-பொருளாதார அடிப்படையில் உற்பத்தியின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காணப்படுகிறது என்று குறிப்பிட்டனர். லெனின், அரசியலானது பொருளாதாரத்தைவிட முன்னுரிமை அளிக்கத்தக்கது என்றும் இது குறிப்பாக சமூக போராட்டத்திற்கானது என்கிறார். தொன்மை அரசியல்-பொருளியல் அறிஞர்களின் கருத்துப்படி, அரசியல்-பொருளாதாரமானது முதலாளித்துவப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான பொறுப்புகளை உடையதாகும் என்கின்றனர். நவீன அரசியல்-பொருளாதாரமானது சமுதாயத்தில் தலையீடு செய்வதாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய புத்தகமான “A Contribution to the Critique of Political Economy” என்பதில் அரசியல்-பொருளாதாரம் என்பது நாட்டின் மக்கள்தொகை, மக்களிடையே குழுக்களின் பகுப்பு, நகரம், நாடு, ஆண்டு உற்பத்தி, நுகர்வு, விலை போன்றவற்றுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். அரசியல் (மேற்கட்டுமானம்) மற்றும் பொருளாதாரம் (அடிப்படை) என்பது சூழ்நிலைக்கு ஏற்றதாக உள்ளது. மார்க்சிய நிலைப்பாடானது, நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய விவசாயக் கட்டமைப்பின் மாற்றம் விவசாயப் பிரச்சினையின் தீர்வு மூலம் நிகழ்கிறது என்கிறார். தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் விவசாயம் எந்த வெளிப்புறத் தூண்டுதலையும் பெறவில்லை விவசாயத்தில் தோன்றிய வெளிப்புறத் தூண்டுதல்களால் தூண்டுதல்கள் மற்றும் தொழில்துறையில் சார்பு தலைகீழாக மாறியது. மேற்கட்டுமானமும், அடிப்படையும் முரண்பாடு உடையது என்று மா சே துங் குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொருத்த அளவில் பிரதன் என்பவர் அரசியல்-பொருளாதாரம் என்பது சமுதாயத்திற்கு ஆற்றலைப் பகிர்ந்தளிப்பது என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் வாணிப நோக்கிற்காக நுழைந்து பின்னால் அது அரசியல் சார்ந்த நிலைப்பாட்டில் பயணித்து பொருளாதார வளத்தைச் சுரண்டியது. இதில் வேளாண்மைத்துறையானது முதன்மை பாதிப்பை எதிர்கொண்டது. இடைத்தரகர்களை உருவாக்கி உழவர்களிடமிருந்து கட்டாய வரிவசூல் செய்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு விவசாயிகளின் எழுச்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பொருளாதார உத்திகளைப் பின்பற்றுவதில் அரசியல் முக்கியப் பங்கினை ஆற்றியது. நேருவின் ஆட்சிக் காலம் தொடங்கி இந்திரா காந்தியின் முதல் கட்ட ஆட்சிக் காலம் முடிய மூடிய பொருளாதார முறை பின்பற்றப்பட்டது. இந்திரா காந்தியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலம் தொடங்கி மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் முடியச் சந்தைப் பொருளாதார முறைப் பின்பற்றப்பட்டது. மோடியின் ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனம் சார்ந்த பொருளாதார உத்திகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மூடிய பொருளாதார முறையில் உள்நாட்டு அளவில் பல்வேறு சீர்திருத்தங்கள் இந்தியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலை போக்கப்பட்டு தற்சார்பினை அடைய முடிந்தது. நாட்டை பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்காகப் பொதுத்துறைச் சார்பு உத்திகள் முன்னெடுக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் நடவடிக்கையினால் இந்தியாவின் வர்த்தக நிலை, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது. இதனால் நுகர்வோர் பெரும் பயனை அடைந்தனர், பொருளாதார வளர்ச்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. ஆனால் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது. பெருநிறுவனச் சார்பு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள், குறு, சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், கிராமப்புற மக்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1949ல் வேளாண்மைக்கான ஜெ.சி.குமரப்பா குழுவானது இடைத்தரகர்களை ஒழிப்பது, குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, கூட்டுறவு வேளாண்மை போன்றவற்றைப் பரிந்துரை செய்தது. இதில் இடைத்தரகர்கள் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிற்று அரசியல் காரணங்களால் நிலஉச்சவரம்பு, குத்தகைச் சீர்திருத்தம் போன்றவை இன்றுவரை முழுமைக்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பஞ்சம், பட்டினி, வறுமை, அதிக இறப்பு போன்றவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த நிலை சுதந்திரம் அடைந்த பிறகும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு உடனடித் தீர்வாக உணவு இறக்குமதி செய்தார். நீண்ட கால அடிப்படையில் உணவுப் பற்றாக் குறையைப் போக்க பல்வேறு செயல் திட்டங்களைச் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை எட்டியது. ஆனால் இது வேளாண்மையில் ஏற்றத் தாழ்வுகளை (வட்டாரம் மற்றும் விவசாயிகளிடையே) அதிகரித்தது.

நில உச்சவரம்பு சட்டத்தின்படி (நில உச்சவரம்புச் சட்டம் 1961) உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அவற்றை நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் விளைவு நிலமற்ற கிராமப்புறக் குடும்பங்கள் மொத்த அளவில் 1953-54ல் 23.09 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 7.41 விழுக்காடாகக் குறைந்தது. ஆனால் உபரி நிலங்கள் கையகப்படுத்துவது மிகவும் குறைவாகவே இருந்தது. இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யாதா நில உடைமையாளர்கள் மொத்தத்தில் 4.99 விழுக்காடாக இருந்தது 24.36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குத்தகை சீர்திருத்தம் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றும், வாடகையின் அளவும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் நடைமுறைப் படுத்தியது. இதனால் 1953-54ல் மொத்த சாகுபடிப் பரப்பில் குத்தகைச் சாகுபடிப் பரப்பானது 20.34 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 11.30 விழுக்காடாகக் குறைந்தது. நில உச்சவரம்பும், குத்தகை சீர்திருத்தமும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டு நாட்டின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றத் தொடங்கியது. இது தொடர்ந்து அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. மக்கள் தொகை 1951 முதல் 1981வரை அதிகமாக அதிகரித்தது இதனால் பல்வேறு பயன்பாட்டுக்காக நிலத்தின் தேவையும் அதிகரித்தது. 1991க்குப்பின் புதியப் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறையினால் உள்கட்டமைப்பினை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் நிலம் மாற்றுப் பயன்பாட்டிற்குப் (குடியிருப்பு, பல்வேறு உள்கட்டமைப்புகள்) பயன்படுத்தப்பட்டது இதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது தொடர் நிகழ்வாகிப் போனது. சாகுபடி செய்யத் தகுதி வாய்ந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றியது. நிகர சாகுபடி பரப்பு குறையத் தொடங்கியது. இதனால் 1953-54ல் சராசரி நிலக் கையிருப்பு 1.95 ஹெக்டேராக இருந்தது 2013-14ல் 0.59 ஹெக்டேராகக் குறைந்ததுள்ளது.

உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், கடன் பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தருதல் ஆகியன பசுமைப் புரட்சியின் முக்கிய உத்திகளாக இருந்தன. இவற்றை 1980-90வரையில் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தியது (முதல் கட்ட காலத்தில் உணவு தானியத்திற்கானதாகவும், இரண்டாவது கட்ட காலத்தில் பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்திக்கானதாவும் மூன்றாவது கட்ட காலத்தில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்திக்கானதாகவும் இருந்தது) இதன் விளைவு உணவுப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்தது. பசுமைப் புரட்சியினால் வேளாண்மை மீதான பொதுச் செலவுகள் துவக்கத்தில் அதிகரித்தது, விவசாயிகளுக்கு இடுபொருட்களுக்கான மானியம் வழங்கப்பட்டது, வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேளாண்மை மூலம் பெரும் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது. எதிர் விளைவுகளாக மண்வளம் குறைந்தது, புதிய வகைப் பூச்சிகள் உருவாகி வேளாண் பயிர்களைத் தாக்கியது, நீர் இறைப்பிற்கு மின் மோட்டார்களின் பயன்பாடு அதிகரித்ததால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டது, பசுமைப் புரட்சி உத்திகளைப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளால் அணுக முடியாமல் இருந்தது, வோளண்மையில் முதலாளித்துவம் பெருக்கமடைந்தது, வேளாண் இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து, வேளாண் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் முறைசார நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் பெற்று கடன் பொறியில் வீழ்ந்தனர், இதனால் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்தது.

1980களில் இரண்டாவது பாதியில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உணவல்லா வேளாண் விளைபொருட்களின் தேவை பன்னாட்டு அளவில் அதிகமானதால் வருமான நோக்கின் அடிப்படையில்; உணவல்லா சாகுபடியை நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் பாரம்பரிய வேளாண்மை சாகுபடி குறையத் தொடங்கி நவீன வேளாண்மை அதிகரித்தது. வேளாண் வர்த்தக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வேளாண் பொருட்கள் தங்குதடையின்றி வரத் தொடங்கியது. தொழில்நுட்ப இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பிற்கு இது உறுதுணையாக இருந்தது. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தியும் அதிகரித்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலங்களில் பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்கெடுப்பினை உறுதிசெய்யவும் அயல் நாட்டு வர்த்தக நிலையை மேம்படுத்தவும் வேளாண்மைத் துறையில் பலவேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். ஆனால் பன்னாட்டு அளவில் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்தங்கிய நிலையில் இருந்ததால், வளர்ந்த மற்றும் இந்தியா போன்றே சில வளரும் நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையே இருந்தது. மேலும் அரசானது வேளாண் துறைக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டும் தொழில்துறை, சேவைத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடுகள் குறைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பானது தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது வந்தது.

1995ல் இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தபின் அதன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய அங்கமாக இருந்தது. வேளாண் மானியம் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்கவேண்டும், வேளாண் வர்த்தகத் தடைகளைக் களைவது, நாட்டின் மொத்த நுகர்வில் 3 – 5 விழுக்காடு பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, பொதுவிநியோகம் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தித்தது. பச்சை அறை (Green Box) மற்றும் நீல அறை (Blue Box) போன்றவற்றில் வளர்ந்த நாடுகள் மட்டுமே இடம்பெற்று, சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய நிலையினை அளவுகோலாக்க வைத்து வர்த்தக பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தியதால் இந்தியாவின் துணி, தோல் போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளது. மிகவும் வேண்டிய நாடு (Most Favoured Nation) என்ற அடிப்படையில் பாகுபாடு, இந்தியப் பாரம்பரிய வேளாண் மற்றும் தாவர உற்பத்தி பொருட்கள் பன்னாட்டு பெருநிறுவனங்களால் காப்புரிமையைப் பெற முயன்றது போன்றவை உலக வர்த்தக அமைப்பினால் இந்தியா எதிர்கொண்ட முக்கியச் சவால்களாக இருந்தது. அதேசமயம் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்குப் பின் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் உணவு நுகர்வுப் பழக்கத்தில் பெரும் மாறுதலுக்குள்ளானது. இதனால் பருப்பு மற்றும் தாவர எண்ணெய்யின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்காததால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்து. வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலாளர்கள் வோளண் சாரத் தொழிலில் ஒப்பீட்டு அளவில் அதிக கூலி அல்லது ஊதியம் கிடைத்ததால் பெருமளவிற்கு அதிலிருந்து விடுபட்டு மாற்று வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் அரசு கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இது பெருமளவிற்குக் கிராமப்புறப் பருவகால வேலையின்மையைக் குறைப்பதற்கு உதவியது. இவ் வேலைவாய்ப்பினால் கிராமப்புற மக்களின் வேளாண் சாரா வருமானம் அதிகரித்து, உணவல்லா நுகர்வுத் தேவையானது உயர்ந்தது. மொத்த நுகர்ச்சி செலவில் உணவல்லாச் செலவினத்தின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மை இந்தியப் பொருளாதாரத்திற்கு அளித்து வந்த பங்களிப்பு வெகுவாகக் குறைந்தது அதேசமயம் பெருமளவிற்கு ஆண் விவசாயிகள் வோளண்சாரத் தொழிலை நோக்கிச் சென்ற அளவிற்குப் பெண் விவசாயிகள் செல்லாததால் வேளாண் தொழிலில் ஈடுபட்ட பட்டவர்கள் பெருமளவிற்குக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தியா உலக வர்த்தக அமைப்பினால் பெற்ற நன்மையைவிட எதிர்மறையே ஓங்கி இருக்கிறது. 2005ல் உலகமயமாக்கலின் நீட்சியாக இந்தியா ஏற்றுமதியைப் பெருக்கும் நோக்கில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இதற்காகப் பெருமளவிற்கான வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு விவசாயிகள் நிலமற்றவர்களாக மாற்றமடைந்தனர்.

மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாதல், தொழில் மயமாதல், உள்கட்டமைப்பு உருவாக்கப்படுதல் போன்ற காரணங்களினால் இந்தியாவில் நீர்நிலைகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வேளாண்மைச் சாகுபடிக்குப் பயன்பாட்டிலிருந்த பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகமாக நீர் (பயன்படுத்துவது) செறிவுடைய பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்வதாலும், மின்மோட்டார் பயன்பாடு அதிகமாக உள்ளதாலும், குழாய்க் கிணற்றுப் பாசனம் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இந்தியா உலகிலேயே அதிக வறண்ட நிலப்பரப்பை உடைய நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனவே தொழில்நுட்பப் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு விவசாயிகள் பயிர்செய்ய மானிய அடிப்படையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இம் முறை இந்தியாவில் பாரம்பரிய சாகுபடி முறையிலிருந்து எளிதாக விவசாயிகள் விடுபட முடியாதல் இது தகுந்த வெற்றியடையவில்லை. தற்போது இந்தியா வறட்சியை தாக்குப்பிடிக்கும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது 2023ஆம் ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கது. இந்தியா உலக அளவில் குறைஊட்டசத்துடன் வாழும் மக்களில் முதன்மை இடத்தில் உள்ளது. சிறுதானியங்கள் வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். இந்தியாவின் அதிக சாகுபடி பரப்பானது ஆண்டில் பெரும் பகுதி வறண்ட நிலையை உடையது. உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 12 மில்லியன் மெட்டிரிக் டன் சிறுதானிய உற்பத்தி நடைபெறுகிறது. இந்திய சுற்றுச் சூழல், நீர்வள ஆதாரம் குறைதல், நுகர்வு மாற்றமடைந்திருப்பது போன்ற நிலைகளை முன்னிறுத்தி அரசு சிறுதானிய உற்பத்திக்காக மேலும் முன்னுரிமையை அளிக்க வேண்டும்.

இந்தியா பசுமைப் புரட்சி மற்றும் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டபின் அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றைச் சாகுபடி செய்ய ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவு சுற்றுப்புறச் சூழல் மற்றும் நுகர்வோர் நலன் பாதிப்படைந்துள்ளது. எனவே அரசு இயற்கை வேளாண்மையினை நோக்கிய பார்வையை முன்னெடுத்துள்ளது. ஆனால் அரசு இதற்கான ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவிற்கு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரங்கள் வேளாண்மையில் அதிக அளவிற்குப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஒருபுறம் நேர்மறையாக நோக்க முடியும் காரணம் வேளாண்மை தகுந்த நேரத்தில் பயிர் சாகுபடிசெய்யத் துவங்குவது முதல் அறுவடை செய்வது வரை இதற்கான முக்கியத்துவம் காணப்படுகிறது. அதே சமயம் இதனால் இந்தியாவில் அதிக அளவில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்து வரும் விவசாயக் கூலிகளின் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண் சாரா வேலைகளுக்கு அதிகமாகச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்நிலையைப் பொறுத்தவரையில் வேளாண் சார்புத் தொழிலில் தேவைக்கு அதிகமான விவசாயிகள் வேலைக்கான பங்கேற்பு வீணாகுவது குறைக்கப்படுகிறது. அதே சமயம் வேளாண் சாராத் தொழிலை நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போதுமான வாய்ப்புக்கள் உள்ளுரில் கிடைக்காததால் நகரங்களை நோக்கிச் செல்லுகின்றனர். இதனால் நகரமயமாக்கல் ஏற்பட்டு விளைநிலங்கள் மனைத் தொழிலுக்காகவும், தொழிற்சாலைகளுக்கும், உள்கட்டமைப்பிற்கும், மடைமாற்றம் ஏற்பட்டு நிகர பயிரிடும் பரப்பு குறையத் தொடங்குகிறது.

வேளாண்மையின் முக்கிய இடுபொருட்களாக இயந்திரங்கள் பயன்பாடு உள்ளதால் சிறு குறு விவசாயிகளால் இதனைச் சொந்தமாகப் பெற இயலாத நிலை காணப்படுகிறது. தனியார் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வேளாண் இடுபொருட்களின் செலவு அதிகரிக்கிறது. இது போன்றே இதர இடுபொருட்களின் விலைகள் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதைகள்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ் அதிகரிக்கின்ற இடுபொருட்களின் செலவிற்கு ஏற்பத் திரும்பு வீதம் விளைபொருட்களுக்குக் கிடைக்கப் பெறாததால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். இதன் எதிரொலியாக விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்த அரசு விவசாயிகளை ஊக்குவித்துவந்தாலும் கடந்த காலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்துள்ளதால் இதன் மூலம் பெறப்படும் எருவின் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இது போல் மரங்கள் வழியாகப் பெறப்படும் தழை உரம், பசுந்தாள் உரம் போன்றவற்றிலும் பல்வேறு காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அரசு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை முன்னெடுப்பது அவசியமாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் இரண்டு பத்தாண்டுகளில் தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் வேளாண்மைக்கான கடன் வழங்கப்பட்டது. ஆனாலும் நிதி நிறுவனங்கள் வேளாண்மைக்கான கடன் மொத்தக் கடனில் சிறிய அளவே பங்கினைப் பெற்றிருந்தது. நிறுவனம்;சாராக் கடன் வழியாக விவசாயிகள் பெருமளவிற்கு அதிக வட்டியில் கடன்பெற்று வந்ததால் விவசாயிகளைக் கடன் பொறியில் சிக்கவைத்தது. இதன் அடிப்படையில் இந்திரா காந்தி இரண்டு கட்டங்களாக வங்கிகளைத் தேசிய மயமாக்கி வேளாண்மைக்கானக் கடன் வழங்குவதை முன்னுரிமை என்று அறிவித்தார். இத்துடன் கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கி, கூட்டுறவு வங்கி போன்றவற்றின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. 1991க்குப்பின் நரசிமம் குழுவின் பரிந்துரையின்படி வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1988ல் தாராளக் கடன் முறையும், 2009-10ல் மிகக் குறைவாக 4 விழுக்காடு வட்டிக்கு வேளாண் கடனும் வழங்கப்பட்டது. தகுந்த காலத்தில் பெறப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயக் கடனின் வட்டி பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு நடைமுறையில் வந்தபின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை ரகங்கள் பயிரிடுவதன் வழியாக வேளாண் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை எதிர்கொள்ள விவசாயிகள் அதிக கடன் பெற வேண்டிய நிலை உருவானது. 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகள் அதிக அளவில் காணப்படுகிறது இதற்கு முக்கியக் காரணங்களில் முதன்மையானதாக வேளாண் கடன் பளு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019க்குப்பின் விவசாயிகள் வேளாண் பணிகளைத் துவக்குவதற்காகக் கடனாக இல்லாமல் மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் சிறு, குறு விவசாயிகளுக்குப் பணமாக வழங்கி வருகிறது. இவ்வாறு பல்வேறு வேளாண்மைக்கான கடன் அளிப்பு முறைகளில் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்டாலும் தற்போதும் வேளாண்மைக்கான கடனானது நிறுவனம் சாரா வழியாக மூன்றில் ஒரு பங்கு பெறப்படுகிறது இது 1951ல் 7.2 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையினைப் போக்க அரசு வேளாண்மையைத் தொழிலை லாபகரமானதாக உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

வேளாண்மை உற்பத்தியில் உபரியை விவசாயிகள் விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர். வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்துதலின் வழியாகப் பெறப்படும் வருமானமானது விவசாயக் குடும்ப வருமானத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக வேளாண் உற்பத்தியை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. இதனால் இடைத் தரகர்களின் சுரண்டல்கள் கட்டுப்படுத்தவும், உரிய விலை கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் பெருமளவிற்கு முறைப்படுத்தா விற்பனை அமைப்புகள் வழியாகவே அதிகமாக விளைபொருட்களைத் தற்போதும் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் இடைத்தரகர்கள், வணிகர்கள், முகவர்கள், உள்ளிட்டோர் பயனடைகின்றனர். ஆனால் விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறது. வேளாண் மண்டிகள் போதுமான அளவில் இல்லாததும், கிராமங்களுக்கானப் போக்குவரத்து இன்மையாலும், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முன்பணமாக வணிகர்களிடம் பெறுவதாலும், சேமிப்பு கிடங்கு வசதியின்மையாலும், விவசாயிகளுக்குச் சந்தைகளைப் பற்றிய தெளிவின்மையாலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைப் போக்க அடுத்த தலைமுறைக்கான சந்தை சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC மாதிரிச் சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவது, ஒப்பந்தச் சாகுபடி முறையை மேற்கொள்வது, தனியார் மற்றும் கூட்டுறவுச் சந்தைகளை நிறுவுதல், சிறப்புச் சந்தைகளை உருவாக்குவது, தனியார்-பொது பங்கேற்புடன் சந்தைகளை மேம்படுத்துவது, தரம் பிரித்தல் மற்றும் தரப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. 2016ல் நிதி அயோக்கினால் மாதிரிச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து ந- e-NAM 2016ல் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC கள் இத்துடன் இணைக்கப்பட்டு விவசாயிகள் தங்களின் பொருட்களை நாடுமுழுவதும் அதிக விலைக்கு விற்பனைச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2020ல் இந்திய அரசானது மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அதன்வழியாக விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அதிக விலைக்கு இந்தியாவின் எப்பகுதியிலும் விற்பனை செய்ய வழி வகுத்தது. ஆனால் இச்சட்டத்தால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயனடைவது சாத்தியமற்றது என்ற அடிப்படையில் இச்சட்டங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இக் கடுமையான எதிர்ப்பினால் அரசு இச் சட்டங்களை விலக்கிக்கொண்டது. இந்திய விவசாயிகள் பெருமளவிற்கு APMC மண்டிகளில் தங்களின் விளைபொருட்களை விற்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே அரசு அதிக அளவிற்கான மண்டிகளை உருவாக்கித் தருவதும், அம் மண்டிகளில் அனைத்துவிதமான கட்டமைப்பினை உறுதி செய்வதும், இதில் ஏறப்படும் ஊழல்களைத் தடுப்பதும், வேளாண் பொருட்களுக்கு அரசு அறிவிக்கின்ற விலையினைக் கிடைக்க வழிவகை செய்வதும், கிடங்குகளை உருவாக்குவதும் முக்கியத் தீர்வாக அமையும். இத்துடன் அறுவடைக் காலங்களில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை உருவாக்கித் தருவதுடன் உடனுக்கு உடன் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்வதும் தலையாயக் கடமையாக இருக்கும்.

அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது என்ற அறிவிப்பை 2016ல் வெளியிட்டு 2022ல் இதனை அடைய காலநிருணயம் செய்தது ஆனால் 2016ல் ரூ.8000 ஆக இருந்த வருமானம் 2022ல் ரூ.12400 என்ற அளவை மட்டுமே அடைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படைக் காரணம் விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சந்தையில் தகுந்த விலை கிடைக்காததாகும். குறைந்த பட்ச ஆதார விலையானது 23 விளைபொருட்களுக்கு மட்டுமே தகுதி உடையதாக உள்ளது. இதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. குறைந்த பட்ச ஆதார விலை நிருணயம் செய்வதிலும் தேசிய விவசாயிகள் குழு அறிக்கையின் அடிப்படையில் பின்பற்றவில்லை. இதற்கு மாற்றாக அரசு பன்னாட்டுப் பெரிய நிறுவனங்களைக் களம் இறக்கி விவசாயத்தை ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்ய முயற்சி செய்கிறது. அரசு குறைந்த பட்ச ஆதார விலைக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க முயல்கிறது. இதனால் இந்தியாவில் பெருமளவிற்குச் சாகுபடி செய்யும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்க அரசு குறைந்த பட்ச ஆதார விலையை அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளும் பயனடையவும் சட்டப்பூர்வமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனைச் சாக்குப் போக்கு காட்டி காலம் தாழ்த்துவது என்பது விவசாயிகளுக்கான சமூகநீதியைப் புறந்தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசி, பட்டினி அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் வறுமையின் தாக்கம் பெரும் எண்ணிக்கையில் இருந்தது (1951-51ல் 47.4 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வறுமையில் இருந்தனர் இது 1966-67ல் 64.30 விழுக்காடாக அதிகரித்தது). உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டது. உணவு தானியத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. எனவே ஒரு நிரந்தரத் தீர்வாகப் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. 1980களின் இரண்டாம் காலகட்டத்தில் இந்த நிலையிலிருந்து இந்தியா மீளத் தொடங்கியது, 1990களில் உணவு உற்பத்தியில் தன்நிறைவு என்ற நிலையினை அடைந்தது. இதனால் வறுமை பெருமளவிற்குக் குறைந்தது (1993-94ல் கிராமப்புற வறுமை 36.66 விழுக்காடாக இருந்தது 2011-12ல் 25.7 விழுக்காடாகக் குறைந்தது). 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெருமளவிற்கு தொழில்துறையினையும், சேவைத் துறையினையும் நோக்கியதாக இருந்ததால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது. 1995ல் உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலை பன்னாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. பொது விநியோக முறையில் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே சமயம் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் மாற்றமடைந்தது. இதனால் இந்திய விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்த பெருமளவிற்கான மக்களிடையே வறுமை அதிகமாக இருந்தது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் (2013ல்) கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக அனைவருக்குமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதியளிப்பாக இருந்தது. இந்த அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்கள் தங்களின் உணவு தானியப் பொருட்களின் இருப்பினை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உணவுக் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் முக்கியமானது இக்கொள்முதல் வியாபாரிகள் வழியாக முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது பின்னால் இது நேரடியாகவே அரசு கொள்முதல் நிலையங்களை அறுவடைக் காலங்களில் திறந்து உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கியது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனைச் செய்வதால் அரசு கொள்முதல் விலை கிடைக்கப்பெற்று (இது குறைந்தபட்ச ஆதார விலையைவிடச் சற்றே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது) பயன் அடைந்தனர். ஆனால் இம்முறையில் மிகக் குறைவான விவசாயிகளே பயன் அடைந்து வருகின்றனர் (அதிலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் அதிகப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அரசுக் கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பதும், குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போது முதன்மையான நடவடிக்கையாக இருத்தல் அவசியமாகிறது.

நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் நிலைத் துறையானது (தொழில் துறை உள்ளிட்டவை) 1950-51ல் 16.59 விழுக்காடுப் பங்களிப்பினை அளித்து வந்தது 2020-21ல் 26.98 விழுக்காடாகவும், சேவைத்துறையானது இவ்வாண்டுகளில் 25.74 விழுக்காடாக இருந்தது 54.27 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது ஆனால் முதன்மைத் துறையானது (வேளாண்மை உள்ளிட்டவை) இவ்வாண்டுகளில் 57.67 விழுக்காட்டிலிருந்து 21.82 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண்மைத் துறையில் வேலை பங்கேற்பு ஆற்றலானது 1961ல் 72.50 விழுக்காடாக இருந்தது 2011ல் 57.41 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத்துறை பங்களிப்பு பெருமளவிற்குக் குறைந்திருந்தாலும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக தற்போதும் வேளாண் துறை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பருவகால வேலையின்மை, குறைவான வருமானம், வறுமை போன்ற அறைகூவல்களைத் தற்போது இத் துறையினைச் சார்ந்து வாழ்பவர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே அரசு ஆண்டு முழுவதும் விவசாயிகள் வேலைவாய்ப்பினை பெறும்வகையில் வேளாண் வழியாகவே அந்தந்தப் பகுதிகளில் பெறக்கூடிய விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண் சார் தொழில்களை வட்டார அளவில் உருவாக்கித் தொடர் வேலைவாய்ப்பை அளிப்பது முக்கியமானதாகும். இதனால் வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை மேம்படும் விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.

சமனற்ற நிலப் பகிர்வு, நிலம் துண்டாடப்படுதல், சிறிய அளவிலான நிலக் கைப்பற்று, வேறுபட்ட குத்தகை முறை, என்ற பிரச்சனைகள் வேளாண்மையில் பெருமளவிற்குக் காணப்படுகிறது. உழுபவருக்கு நிலம் சொந்தம் என்ற முயற்சி முழுமை பெறவில்லை. கூட்டுறவு வேளாண்மை முயற்சியும் தோல்வியினை தழுவியுள்ளது. அன்மைக் காலமாக விவசாயிகள் காலநிலை மாற்றத்தினால் பருவம் தவறி மழை பொழிவு, கடுமையான வெப்பக் காற்று, புயல், வெள்ளம், போன்றவற்றால் பெரிதும் பாதிக்கின்றனர். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்புப்படி (International Food Policy Resarch Institute) காலநிலை மாற்றத்தின் விளைவால் இந்தியாவில் உணவு உற்பத்தியானது 2030ல் 16 விழுக்காடு குறையும் இதனால் பசித்திருப்போர் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது. எனவே அரசு இவற்றை எதிர்கொள்ளக் காலநிலைக்கு ஏற்றப் பயிர்களைச் சாகுபடி செய்யவும், வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்க உலர் இயந்திரங்கள், உடனடியாக விளைபொருட்களை விளைநிலங்களின் பகுதிகளிலே கொள்முதல் செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடியில் ஏற்படும் தோல்விகளுக்குத் தகுந்த இழப்பீடு, நீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தல், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது இதனால் வேளாண்மை உணவு தானியப் பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவும், அதனைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் மாற்றமடைந்தது. தற்போதைய நிலையில் பன்னாட்டு அளவில் உணவு தானிய விளைபொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதும், வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்த அதிகரிப்பதும், உலகளாவிய அரசியல் சூழல் நிர்ப்பந்தங்கள் போன்ற நிலையினால் இந்திய வேளாண்மை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் விளைபொருட்களுக்கான சட்டப்பூர்வமான விலை உறுதியும், வேளாண்மைக்கான மானியங்கள் தொடர்ந்து அளிப்பது. வேளாண் சாகுபடியில் தேவைக்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்குவதும் தற்போது முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இச் செயல்பாட்டிற் கு அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கியமானதாக இருக்கிறது. இந்திய வேளாண்மை என்பது வாணிபம் சார்ந்தது மட்டுமல்ல வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாட்டுச் சார்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

(முற்றும்)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 என்ற தொடரை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் வாசகர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி – முனைவர் பு.அன்பழகன்

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி




நூல் : இறுதிச் சொட்டு
ஆசிரியர் : விஜிலா தேரிராஜன்
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கதைகள் எப்போது தோன்றியது என்று ஆராய்ந்தோமேயானால் கற்கால மனிதன் தான் கண்டுக் களித்த தன்னை பெரிதும் பாதித்த தான் கடந்துச்சென்ற அனைத்தையும் குகைப்பாறைகளில் ஓவியங்களாகச் சித்தரித்து வைத்தான். கதைகளின் தோற்றம் என்பது மனிதகுலம் இந்த பேரண்டத்தில் ஜனனம் எடுத்துக் கொஞ்சமுமாகத் தமது சிந்தனைச் செறிவையும் அறிவாற்றலையும் பெருக்கத் துவங்கிய கணம் முதல் பிறந்தது என்பதே உண்மை.மெல்ல பரிணமித்த இலக்கிய கலாச்சாரம் மனித அறிவைப் பெருக்கிக் கூடுதலாக தமது எண்ணச் செரிவுகளை மனதின் தூண்டலில் தோன்றிய அனைத்தையும் முன்பை விட மேம்பட்ட வகைமையில் உருவங்களாக, கல்வெட்டுகளாக, ஓவியங்களாக, சிற்பங்களாக, வரி கோடுகளாகத் தமது உணர்வுகளை, வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களை படிமங்களாக வடித்து வைத்தான். அப்படியான கல்வெட்டுக் கதம்பங்களே பிற்காலத்தில் கற்கால மனித குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்ய பேருதவியாக இருந்தது.

தொடர்ந்த காலங்கள் மொழிகளின் தோற்றம் நமது மூதாதையர் பேச்சு மொழி வழக்கில் ஆகச்சிறந்த கதைச் சொல்லிகளாக அறிவு ஜீவிகளாகச் சொல்லாடல்களின் வழியாக பாடல்கள் மூலம் என மக்கள் மொழியாக மண்ணின் களஞ்சியமாகக் கதைகள் உருப்பெற்றன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன. போக, சங்க கால இலக்கியங்கள் மனிதர்தம் வாழ்க்கையை உள்வாங்கிப் படைக்கப்பட்ட கதைகளைக் களங்களாகச் சுமந்து நின்றது. இலக்கியம் என்பதே மனிதவாழ்க்கையை உள்ளடக்கிய எழுத்துக்களின் சாரம் தானே.. பரிணாமங்களின் வளர்ச்சியும் கூட…இப்படியான பரிணாமங்களைப் பரிமாணங்களாகக் கடத்திய நமது மூதாதையர் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு வாய்வழிக் கதைகளாக்கி ஆவணப்படுத்தினர். ஆகச்சிறந்த புலவர் பெருமக்களின் செய்யுட்பாடல்கள், இலக்கியப்புனைவுகள், இதிகாசங்கள், நெடும் கதைகள், வரலாறுகள், சரித்திர சம்பவங்கள் என இன்றும் சங்க கால இலக்கியம் வாகை சூடு நிற்கிறது.

தொடர்ந்த எழுத்து யுகங்கள் புனைவிலக்கியம் அபுனைவிலக்கியம் என இருவகைகளைத் தமக்குள் கொண்டுச் சமகால யதார்த்த நிகழ்வுகளின் பயணங்களின் பிரதிகளாகப் படிமங்களாகச் சாதாரண மக்கள் பேசும் மொழிகளின் புழக்கத்தில் இலக்கியத்தில் நவீனத்துவம் கலந்துப் படைப்புலகில் இன்றுவரை நூற்றாண்டுகளைக் கடந்து பல்வேறு படைப்புகளின் முகங்களை தமக்குள் ஏந்தி நிற்கிறது.

இப்படியான படைப்பூக்கங்கள் கதையுலகில் தான் எத்தனை… நூறைத் தொட்ட கதைச்சொல்லிகள் எழுத்து வழக்கிலும் மொழிப் புலனிலும் வட்டார நில மாந்தர்களின் உடன்குடி நாவிலும் பூத்த வண்ணம் உள்ளனர். படைப்புகளின் ஆகச்சிறந்தத் தோன்றலான மனிதன் மட்டுமே இப்படியான கதைச் சொல்லியாக உயர்ந்து நிற்கிறான் மொழிவளமையின் சிறப்பில்.

உயிர்ப்பது, உறவு கொள்வது, வாழ்ந்துக் களிப்பது, உறவாடி ஓய்வது, இடம் பெயர்வது என்ற பிற உயிர்களிடத்திலிருந்துத் தனித்துப் பயணித்த மனிதன் மட்டுமே தன்னை அசைத்த இசைய வைத்த ஒவ்வொன்றையும் இலக்கியத்துடன் இணைத்துப் பார்த்தான். தன்முன் எதிர் நீளும் பாதைகளைக் கருவாக வடிவமைத்து அதைச் செப்பபனிட்டுப் பல கோணங்களில் படைப்புலகிற்கு வழங்கிப் பெருமைப் சேர்த்தான்.

இந்த உலகம் தான் எத்தனை எத்தனை மனித மாயங்களை தனக்குள் உள்ளொடுக்கியுள்ளது. எத்தனை வாழ்க்கைப்பாடுகளை விழுங்கி நிற்கிறது. எத்தனை மனிதர்களின் நிறங்களை அறியும் சாட்சிகளாகத் தோன்றி நிற்கிறது. சங்க கால இலக்கியத்தின் பெருவாரி புலவர்களும் மேதாவிகளும் கதாசிரியர்களாக ஏடுகளில் களைக்கட்டுகின்றனர்.

பிற்காலத் தமிழிலக்கியச் சிறுகதைகளில் நவீனத்துவம் நிரம்பிய கதைதாரிகள் அநேகர். வா.வே.சு ஐயா, கீ.ரா, கோணங்கி, தமிழ்ச்செல்வன், சூடாமணி என நீளும் வரிசைகள் தமது சிவந்தக் கரங்களைத் தமிழ் மண்ணில் ஆழ விதைத்து வளமாக்கிய கொடிகள் தான் தாராளம். அவற்றிலிருந்து முளைத்த செடிகளாகவும், விருட்சங்களாகவும் பூத்துக் குலுங்கிய கதைப்பூக்கள் தான் ஆயிரமாயிரம்.

சமபாலின எழுத்தாளுமைகளைக் கொண்ட இலக்கியவுலகமாகத் தமிழிலக்கியம் உச்சம் தொட்டுள்ளது. இவர்களின் மற்றுமொரு வெளிச்சமாகப் பெண் எழுத்தாளர்களில் போற்றலுக்குரிய ஆசிரியராக விஜிலா தேரிராஜன் அவர்கள் தமது விரிந்தச்சிறகைக் கதையுலகில் பறக்கச் சிறக்கச் செய்துள்ளார். சமகாலப் பாதிப்புகளையும் புரட்டிப்போட்ட சமூகப் பிளவுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக அவலங்களையும், அசைத்து மட்டும் விடாமல் ஆட்டி வைத்தத் தருணங்களையும், வாழ்க்கை என்பது வெறும் கடத்தலல்ல அன்றாட வாழ்வின் சாதாரணம், தேடி எடுக்கப்பட்ட கருக்களின் மனிதாபிமானங்களில் விதைகள், மையக்கருத்துக்களின் உருவங்கள் என்பதை விஜிலா அவர்கள் தமதிந்த “இறுதிச்சொட்டு” என்கிற சிறுகதைத் தொகுப்பின் வழியே துலங்கி நிற்கின்றார்..

கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பாத தூரம் கடந்தவை. கதைக்காரன் ஒரு சுமைத்தாங்கியாக, முடிவுற்ற அழிந்துப் போன மண்ணை விட்டு மறைந்து மருவிய சம்பவங்களை வரலாறுகளை புனைவாகக் கற்பனைகளின் அதீதத்தில் பாத்திரங்கள் ஊடாக வழங்கி நிற்பதவன் மட்டுமன்று . கதைக்களங்களைச் சமகால அன்றாடங்களைக் கடந்து போகும் யதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ ஒரு வீதியில் எப்போதோ ஒரு பாதையில் பாதிப்பை ஏற்படுத்திய மாற்றத்தைக்குட்பட்ட கருச்சுளைகளை உதிரி பாகங்களாகக் கொட்டி கிடந்தவற்றைச் சீரமைத்து அதிலிருந்து தேவையின் பொருட்டு வடிகட்டி அவற்றில் வடிவியலைக் கோர்த்துப் புனைவுக் கூட்டி மொழிப் புலமைச் ஏற்றி கொஞ்சமுமாக துள்ளல் சேர்த்து எள்ளல் சற்றே தூக்கலாகத் தூவி நடையில் மெல்லிய நளினத்தை மெருகேற்றி, கதைகளத்திற்கேற்ப உடன்குடி வட்டார வாசனையோடு பேச்சு வழக்கிலும் உறவு முறையிலும் வாயார விளித்தலிலும் நிலத்தின் அடையாளங்களிலும் ஓங்கிப் பிடித்து உருவான கதைத் துகள்களாகத் தோழர் விஜிலா அவர்களின் இறுதிச்சொட்டு நம்மை சொட்டு சொட்டாக நனைய வைத்து குளிருட்டுகிறது.

21 வாழ்க்கை நிறங்களைப் பரிணத்து நிற்கும் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மாறுபட்ட வர்ணங்களின் ஓவியங்கள்..
அட . ஆமா..
இது பற்றி யாரும் பேசவே இல்லையே..
இது இதேதான்..
நேற்று கூட நான் இதைப்பற்றி நினைத்தேன்..
இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. ஆனால் இன்றோ வேறு மாதிரி..
சமூகம் எப்போது திருந்துமோ… போன்ற பாமர சமூகத்தினரின் நாளொன்றின் ஆதங்க மொழிகளை ஒலித்துப் பேசுகிறது கதை ஒன்றும்.
தொகுப்பில் அனைத்து சமூகம் சார்ந்த தரப்புகள் ஊடாடிக் கிடக்க என்னை வெகுவாக சில கதைகள் வியக்க வைத்தன. அதில் இறுதிச் சொட்டு, மண்குதிரை,பட்டுமனம்,
ரௌத்திரம் பழகு,வன்மம் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

பிள்ளைகளின் வலிகளை அவருக்கே உரித்தான பிரத்யேகப் பிராயத் திமிர்களைச் சுட்டித்தனங்களை நையாண்டிகளைக் காண்பிக்கும் விதமாக, புறத்தில் மழலையின் நெருடலில் தமது மகிழ்வைக் கொண்டாடினாலும் ஒவ்வொரு பிள்ளையின் திரைக்குப் பின்னால் என்பது ஒரு மறைக்கப்பட்ட வதை நிறைந்த இருட்டறை,இருண்ட முகங்கள் என்பதையும் உணர்த்திக் செல்கிறது நூல். அவற்றையெல்லாம் மறைக்கவே பள்ளியில் இயல்பாகத் தம்மை வெளிப்படுத்தும் அத்தனை பிரயத்தனங்களையும் தேடி நிற்கின்றனர் பிள்ளைகள். அப்படியான பிள்ளைகளின் துயர் நிறைந்த மற்றொரு முகங்களைக் கண்டறிந்து ஒரு ஆசிரியராகப் மாணாக்கர்களின் உளவியல் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தப் படைப்புகளாகச் சிலகதைகள் திகழ்ந்தது சிறப்பு.

சமுதாயத்தை வெகுவாக உலுக்கி வரும் சமகால வக்கிரமான பாலர் வன்புணர்வுக் கொடுமையை எதிர்க்கிறது ‘மருளாடி’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த கதையான “மண்குதிரை” சிறுகதை. வளரிளம் மொட்டுக்களின் மீதான வன்புணர்வு ஏற்கவே முடியாத குரூரம். பிள்ளைகளின் மனதில் ஆழப்புதைந்துக் கிடக்கும் இரணம். அந்த வலியைத் தாயாக ஆசிரியராக உணர்ந்துக் கதைத்துள்ளார் விஜிலா அவர்கள். சற்றே சிந்தித்தோமேயானால் நம் சமூகம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் முன் வளாகக் கட்டமைப்பு, ஒழுங்குமுறை, கற்பிக்கும் திறன், தேர்ந்த ஆசிரியர் கொண்ட நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் பெற்றோர்களின் கல்விசார் தேடுதல் அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய சமூக சூழல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறியுள்ளது. பல நூற்றாண்டு முந்தைய குருகுல காலத்தில் கல்வித் தரம் உயர்ந்து நின்றது. தற்போது அச்சுறுத்தி வரும் பிள்ளைகள் சார்ந்த வன்முறைகள் ஆசிரியர் என்ற புனிதத்தை, கற்பித்தல் என்கிற மாண்பை இழந்து நிற்பதுமே பெற்றோர் பள்ளிக் கல்வியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கேற்றார்ப் போல சங்கரன் சார் போன்ற வக்ரபுத்தி ஆண் ஆசிரியர்கள் பிள்ளைகளின் மீது நிகழ்த்தும் பாலியல் வக்கிரம் சுதா போன்ற நல்லாசிரியர் மேலிடத்தில் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் பள்ளியின் நற்பெயர் தொடர்ந்திருக்க, பெண் பிள்ளைகளின் உடல் சார்ந்த அலட்சியப் போக்கு பாலியல் ரீதியான அவர்களின் இப்படியான துன்பங்களை அசட்டை செய்து வருவதைச் சுட்டிக் காட்டி வன்மையாகக் கண்டிக்கிறது கதை. பாலர் வன்புணர்வுக் குரூரங்கள் அநேக எழுத்தாளுமைகள் தமது படைப்புகள் வழியே சாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்த போதிலும் ஒரு பெண் ஆசிரியராக விஜிலா அவர்கள் இப்பிரச்சனையை சமூகத்தில் கொண்டுச் சேர்க்கக் கதையாக்கியுள்ளது சிறப்பு..

பள்ளிஆசிரியர் என்பவர் எப்போதும் கடுமையாகவும் பிள்ளைகளை அடிமைப்படுத்தும் மனப்பான்மைக் கொண்டவராக இருக்க வேண்டி பெரும் மெனக்கிடுவர். இப்படியான ஆசிரியர்களின் முன் அனுமானமான சுய கணிப்புகளை மூடநம்பிக்கைகளைத் தீவிரமாகப் பேசுகிறது “தீதும் நன்றும்” கதை. உடற்பயிற்சி ஆசிரியர் என்பவர் கூடுதலாகவே உடல் மொழியிலும் மொழிக் கண்டிப்பிலும் விறைப்பாய் இருப்பர் என்பது பொத்தாம் பொசிலித்தனமான சமூகப் பார்வை. ஒருவித மேம்போக்கு மனோபாவத்தை ஆசிரியர் மத்தியில் இவ்வாறாக நிறுவியுள்ளது. ஆசிரியர்கள் எப்போதும் கண்டிப்பாகவே இருக்க வேண்டும் என்கிற காலம் தொட்டுப் புரையோடிக் கிடக்கும் ஆசிரியர் மாணாக்கர் வெறுப்புறவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது கதை. ஆசிரியர்களின் இப்படியான சுயமதிப்பீடு, மாணவர்களைக் கைக்குள் அடக்கிக் கட்டிப் போட வேண்டும், தமக்குக்கீழ் அடங்கியே இருக்க வேண்டும், மீறிய மாணவனை ஒழுக்கம் தவறியவனாக சித்தரித்து ஒருவித வெறுப்புணர்வைப் பிற ஆசிரியர்கள் மத்தியில் உண்டுப் பண்ணுவது, அவனுக்குள் ஒரு காழ்புணர்ச்சியை ஏற்படுத்தி பிற மாணவர் மத்தியில் அவமானப்படுத்தும் ஒரு சில ஆசிரியர்களின் போக்கைப் சமூகவெளியில் விரியப்படுத்துகிறார் விஜிலா அவர்கள். எப்போதும் மாணாக்கர் தவறானவரும் அல்லர் அதேபோல் மாணாக்கர் மீதான ஆசிரியர்களின் சுய கணிப்புகளும் எப்போதுமே சரியாகவே இருந்து விடுவதுமில்லை என்பதற்கு உடற்பயிற்சி ஆசிரியர் கண்ணனுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் பாஸ்கரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரின் மெல்லிய அதிர்வைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது கதை.

பிள்ளைகளின் கனவுகள் என்பவை நினைவுகளின் நனவுகள். பிள்ளைமையின் குதூகலத்தோடுப் பேசுகிறது “வண்ணக்கனவு” சிறுகதை.

ஆம்…. பெரியவர்களுக்கே குறிக்கோள் இலட்சியமெல்லாம். பிள்ளைகளைப் பொருத்தவரை அவர்களுக்கான நிகழ்கால இனிமைத் ததும்பும் வண்ணக் கனவுகளே மகிழ்கூட்டும் கொண்டாட்டங்களே எதிர்கால இலக்கு. நிறைவேறுவதும் கடந்துப் போவதும் அவரவர் இயல்பு வாழ்க்கையின் கணக்கு. அதையும் தாண்டி சின்னத்துரை போன்றச் சுட்டித் தனமான சாதாரண மனநிலைக் கொண்ட பிள்ளைகள் பெரும்பாலும் எதையும் வேடிக்கையோடும் கேளிக்கையோடுமே அனைத்தையும் அணுகுவர். வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கொஞ்சும் மாண்புடையவர்.எதையும் எளிதில் மறந்துவிடும் மறைத்துவிடும் இயல்பைக் கொண்ட தூய மனம் பிள்ளை மனம் என்பதையே ஆசிரியராக மழலைகளின் அனுபவங்களை வண்ணமயமான நிறம் கூட்டிக் கதை முழுதும் சின்னத்துரை வழியாக திரைக்காணல்களின் ஒவ்வோரு துணுக்குகளையும் திரைப்பாடல்களையும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு ஒலிக்கச் செய்துக் காட்சிப்படுத்தியுள்ளது ஆசிரியரின் திரைப்பட ஆர்வத்தையும் பிள்ளைகளுடனான வகுப்பறை அனுபவத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக தாய்மைத் ததும்பும் ஒரு ஆசிரியரின் பிற உயிர்களிடத்தில் ஏற்படும் மானசீக அன்பைக் வெளிகாட்டும் படைப்பொன்றை உள்ளொடுக்கியுள்ளது தொகுப்பு. தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே உரித்தான தனித்த குணம். உலகின் அனைத்து ஜீவராசிகள் மீதும் ஏற்படும் என்பதற்கு “பட்டுமனம்” நாயகி கோமதி எடுத்துக்காட்டு. குருவிகள் அடுக்களையில் கட்டிய கூட்டிலிருந்து அவற்றின் எச்சம் பட்டு அடுக்களை மேடை நிதம் கறைப்பட, பள்ளி விடுப்பில் தமது பிள்ளையைப் பார்க்கத் தாய்வீடுச் செல்லும் கோமதி, தமது இல்லாமையின் போது குருவிகள் அடுக்களை வாராதிருக்க வென்டிலேட்டர் வழியே அட்டை வைத்து அடைக்கிறாள். ஊருக்குப் போக பேருந்து நிலையம் காத்திருக்கும் அவள் ஆவென்று குருவிக்குஞ்சு போல் தம் பிள்ளை வாயைத் திறந்து உணவு கேட்கும் நினைவு வரவே குருவிகள் அடுக்களைக்குள் நுழைந்து தமது குஞ்சுகளுக்கு உணவளிக்க முடியாதவாறு அடைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வு உறுத்த வீடு நோக்கிப் பயணப்படுத்தியது கோமதியின் தாய்மை. தாய்மனம் பட்டு மனம் என்பதை உணர்த்தியே தாய்மையின் தாகத்தில் மனதை வருடி செல்கிறது கல்கி இதழில் வெளி வந்த இந்தக்கதை. இன்றைய நவீன உபகரணங்களால் மருத்துவ சமூகம் ஏற்படுத்தும் மனரீதியான அழுத்தத்தை உளைச்சலை பயத்தை உளவியல் ரீதியாக படும் அவஸ்தையை “மாதவம்” கதை எடுத்தியம்புகிறது. சாதாரண தொந்தரவுக்காக மருத்துவமனைச் சென்று அல்லப்பட்டு அவஸ்வதைப்பட்டு உறக்கமின்றி குடும்பத்தின் நிம்மதியைப் பறிகொடுத்து என‌ எத்தனை பாடுகள், இறுதியாக ஒன்றுமே இல்லை என்கிற மருத்துவரின் ஒற்றை வார்த்தை மொழிய மனம் நிம்மதி பாராட்ட அமைதி கொண்டு வெளியேறுகிறாள் மருத்துவமனை விடுத்து தேவிகா . அசலில் மருத்துவமனை சென்று ஒன்றுமற்று ஒன்றுமேயில்லை என்று திரும்பி வருவதென்பது ஒரு மகா தவம் தான் இன்றைய மனித சமூகத்திற்கு.அதிலும் பெண்களின் நிலை அதோகதி. கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்றே சாதாரண தொந்தரவுகளைக் கூட நோய்மையின் நோயாக மாற்றிவிடும் ஆங்கில மருத்துவத்தின் வண்டவாளத்தைத் தண்டவாளமாக்குகிறது கதை.

அரசாங்க மின்துறை அலுவலகத்தில் நிகழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களுக்கெதிரான கையூட்டை வெளிப்படுத்துகிறது அடுத்தக் கதை. விவசாயக் குடிகளை நஷ்டப்படுத்தும் கிராம மின்துறை வாரியத்தின் பாரபட்ச நடவடிக்கைகளை அதிகாரதுஷ் பிரயோகத்தை எடுத்துக்காட்டும் கதை சற்றும் வெட்கமேயின்றி மேல்தட்டு மக்களின் கைக்கூலிகளாகும் இப்படியான அரசு ஊழியர்களைச் சமூகவெளிக்குத் தர தரவென இழுத்து வந்து நிற்கச் செய்கிறது “இலவசம்” கதை.ஏழை குடிகளிடமும் அதே மேல்கூலிக்காக பாராமுகம் காட்டும் இவர்களின் கீழ்த்தர போக்கு பிற நேர்மையான அரசுஊழியர்களையும் தலைகுனிய செய்கிறது.

பெண் எழுத்தாளரின் தொகுப்பாயிற்றே பெண்மைக்கான முக்கியத்துவம் வழங்குவதே படைப்பைச் சிறக்கச் செய்யும் என்பதற்கான விடிவெள்ளியாகப் பெண்ணினத்தின் சமகாலப் பிரச்சனைகளைக் கொண்டு விசேஷமாகப் பல படைப்புகளை உள்ளடக்கியுள்ளது தொகுப்பு.

காலந்தொட்டுப் புரையோடிக் கிடக்கும் பெண்களுக்கெதிராக நிகழும் அநீதிகளில் ஒன்று ஆணாதிக்க அடக்கு முறை. தொகுப்பு இப்படியான ஆதிக்கத்திமிரை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக “புதைக்குழி”. கதை. ஆண்களின் அட்டகாசங்களாகப் போதை களியாட்டம் பெண்களின் அல்லாட்டமாக நாளொன்றின் திண்டாட்டம். நிதம் சிந்தனையிலும் செயலிலும் மொழியிலும் உயிருடன் சித்திரவதிக்கும் இந்திய தேசத்தின் ஏனைய குடிமகன்களில் ஒருவனான கந்தசாமி‌ கதாபாத்திரம். போதையின் தீவிரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படும் அரக்கனாக, மகளா மனைவியா என்கின்றப் பாகுபாடு கூட அறிந்திராத அவனின் போதை மயக்கம் அசுர தனத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும். சில ஆண்களின் இப்படியான மட்டமான போதைமைப் போக்கு ஒருநாள் சமூகத்தையே கொன்றொழிக்கும் என்பதே நிதர்சனம்.

“போதையின் உச்சத்தில் இருட்டு இரவில் கந்தசாமியின் கைகள் நீண்டுத் தடவிய போது தங்கம் தன்னருகே படுத்திருந்த பார்வதியை தடாலென தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அந்த இரவுக்குப்பின் பார்வதியும் முத்துவும் முத்தாயி கிழவியிடம் தான் படுத்துறங்கினார்கள்.”

தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரின் வரிகள் விதியை விளக்கி நிற்கிறது துலக்க வழியின்றி…
“அம்மா என்ன பெத்ததும் செத்துப் போச்சாம்.அப்பா பட்டச்சாராயம் குடிச்சே ஈரல் வெந்து செத்துட்டாரு. அண்ணே கூடத்தான் இருந்தேன். அண்ணனும் கட்டிட வேலை பாக்கும் போது போதையிலே மூணாவது மாடியிலிருந்து தவறி விழுந்து செத்துப் போச்சு. அத்தாச்சி சொந்தக்காரவுங்க தான் இவரு..
“இப்படி தலைமுறை தலைமுறையா தண்ணியடிச்சா விளங்குமா?”

பெண் பூதேவி போன்றவள் பொறுமையின் சிகரம் என்றெல்லாம் கொண்டாட்ட வார்த்தைகளை அடுக்கிப் பெண்களை அடக்கி மிதிக்கும் மேம்போக்கு மனோபாவம் கணவன்மார்களிடத்தில் ஆதிகாலம் முதலே ஆக்கிரமித்துத் தான் வருகிறது‌. பெண் பொறுமை தாண்டினால் பூதேவி ஸ்ரீதேவி அல்ல காளிதேவியாகி கணவனை துவம்சம் செய்யத் தயங்க மாட்டாள் தூர தள்ளி வைக்கவும் சுணங்க மாட்டாள் என்பதற்கு “சவால்” கதை ஒரு சவாலாக அமைகிறது. பொன்னக்கா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் முத்துசாமி போன்ற ஆணவச்செருக்குக் கொண்ட கணவன்மார்களைத் துரத்தித் தள்ளி வைத்துத் தமது சொந்தக் காலில் வாழ்ந்து முடித்துக் காட்ட வேண்டும் என்ற துணிச்சலுடன் முன்வரும் பெண்களை அடையாளங்காட்டி கோழைகளாய் பயந்து ஆண்களை சார்ந்தே வாழும் பெண்களுக்கு தைரியத்தையூட்டும் வகையில் பொன்னக்கா பாத்திரம் விசேஷம். ஆசிரியரின் பெண்களுக்கான வலிமையை கூட்டும் விதமாகக் கதை. பெண்களை எப்போதும் தமக்கான கிளர்ச்சிப் பொருளாகவே பாவிக்கும் ஆண் வக்கிர புத்தியை வெளிச்ப்படுத்துகிறது “ரௌத்திரம் பழகு”கதை. பெண்களைத் தமக்கான போதையாகப் பிரயோகிக்கும் ஆண் மடமை சிந்தனைக் கொண்ட சமூகம்,கனகா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் அவர்கள் புறம் வீசும் சொல்லம்புகளின் தீக்கணைகளாக ஆணாதிக்கத்தைப் பொசுக்கியே ஆங்காரத்தை நொறுக்கியே நிற்கிறது பாத்திரம். பெண்களை வதைக்கும் ஆண்களை எதிர்க்க ரௌத்திரம் பழக வேண்டிய நிலை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதை பறைசாற்றும் படைப்பாக ஆசிரியரின் இந்த கதைத் திகழ்கிறது.

சிரித்துப் பேசும் பெண்களைத் தவறான முறையில் அணுகும் ஆண்களின் கேடு கெட்ட சிந்தனையை சமாதி கட்டும் விதமாக செம்மலர் இதழில் வெளிவந்த “வன்மம்” கதை. கதையின் நாயகி முத்து தமது இயல்பான பேச்சையும் யதார்த்தமாகப் பழகும் முறையையும் தவறாகச் சித்தரித்துத் தப்பான பிடிமானம் கொண்டு அவளை நெருங்க நினைக்கும் அவளின் அக்கா புருஷனின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி உடைத்துத் துரத்தி விடுகிறாள் முத்து.
சமூகத்தில் இப்படியான துணிச்சல் மிக்க பெண்களையும் அடையாளம் காட்டத் தவறவில்லை ஆசிரியரின் தொகுப்பு.

வன்மம் சிறுகதை போல “ரத்தத்தின் ரத்தம்” சிறுகதையும் ஆண்களின் விரலிடுக்குகளில் நசுங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கொத்தடிமை வேதனையை கொப்பளிக்கச் செய்கிறது. ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்ற குடும்ப அந்தஸ்தனாக பெரியவரும் அவரை வழிமொழியும் மற்றுமொரு ஆதிக்கத் தொடர் சங்கிலியாக மகன் சுந்தர் பேரன் சுரேந்திரன்.இது போதிக்கப்பட்டதல்ல குருதியிலேயே ஊட்டி வளர்த்து இன்று ஊற்றாக ஊறிப்போன ஆண் என்கின்ற மேலாதிக்க எண்ணம். இந்த எண்ணம் வளர ஆண்கள் மட்டுமல்ல சுயவிரும்பிகளாக அடங்கிப் போகும் அடிமை மனநிலைக் கொண்ட பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை கதை. பெண்கள் நிமிராது ஆண்களின் ஆதிக்க உணர்வுத் தாழாது என்பதற்கு..
“என்னடி ரொம்ப வாய் நீளுது பொட்டைக் கழுதை அறைஞ்சேனா….” என்று கையில் இருந்த பனையோலை மட்டையைத் தங்கை மீது வீசியெறிந்தான் சுரேந்திரன்…
இந்தப் பரம்பரை அடிமை சாசனத்தைத் தகர்த்தெறியும் பெண் தலைமுறை இனி துவங்க வேண்டும் இல்லையேல் புதியதொரு மாற்றுவழிமுறைத் துலங்க வேண்டும்..

பெண்களின் உளவியல் நுண்ணுணர்வை மன இறுக்கத்தை பேசும் கதையாகக் “கட்டாய கடிவாளம்” சிறுகதை. பெண்களின் புதைக்கப்பட்ட உணர்வுகளை நுட்பமான அவதானிப்புடன் துல்லியமாக வடித்துள்ளார் ஆசிரியர் விஜிலா. எதையும் எளிதில் வெளிப்படுத்தத் தயங்கும் இயல்பு கொண்டவர் பெண்கள். என்பதற்கு வசுமதி தியாகு மீதான தமது காதலை இறுதிவரை வெளிப்படுத்தத் தயக்கம் கொள்கிறாள். தியாகுவின் திருமண நடந்தேறுகிறது.கட்டாய இறுக்கத்தின் கடிவாளத்தைத் தானே போட்டுக் கொள்கிறாள் வசுமதி. பெண் சார்ந்த உளவியலின் நுண்ணுணர்வை அதி நுட்பமாக ஆராய்கிறது கட்டாய கடிவாளம்.

பெண்களின் உடல் சார்ந்த அவஸ்தையை அந்தரங்க பிரச்சனைகளைப் பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்க வழியற்ற நிலை உடல் சார்ந்த ஒழுக்கசீலத்தின் கட்டாயத் திணிப்பு என அல்லாடும் பெண்களின் அவலத்தை அவர்களிடத்திலிருந்தே சொட்டுச் சொட்டாக மொழிகிறது “இறுதிச் சொட்டு.”பொதுவெளியில், பிரயாணத்தின் போது என பெண்கள் படும் அவஸ்தைகள் ஆண்கள் போல இயல்பாக எவ்விடத்திலும் சிறுநீர் கழிக்கவியலா தருணங்கள் உடல் உபாதைகள் ஆடைகள் சரிசெய்யவியலாத பரிதாபம் என பெண்களின் தவிப்புகள் அவரிடத்திலிருந்தே பேசுகிறது கதை. இது கதையாக மட்டுமே வாசித்துக் கடத்தி விடுவதல்ல, ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள் காலம் தொட்டு புழுங்கிக் கிடக்கும் உளக்குமுறலை உடலியல்பை வெளிப்படுத்தவியலாத தருணங்களின் கையாலாகாதத்தனத்தை மன அங்கலாய்ப்பைப் பெண்களின் உணர்வு சார்ந்த உடல் சார்ந்த குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் படைப்பின் குரல்.

காலம் காலமாக நமது சமூகத்தில் ஸ்திரமாக இருப்பது பெண்களின் தாயகம் மற்றும் புக்ககம் இரண்டிற்கும் இடையேயான குடும்ப உறவுப் பாலம். இதில் சர்ச்சைகளும் பூசல்களும் என்பவை இயல்பு. விட்டுக் கொடுத்தலும் துடைத்துச் செல்வதுமே இயைபு என்பதை அப்போது நமது முன்னோர் வாழ்ந்துக் காட்டி நிரூபித்துள்ளனர் இன்றைய குடும்பங்களில் புக்கத்தாரும் சரி புது மகளும் சரி நீயா நானா என்கிற போட்டி மனப்பான்மையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றம் கூறியும் குறை பேசியும் வாழ்ந்து வரும் சமூகமாக இன்றைய மாமியார் மருமகள் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.மறுத்தலும் மறுத்தலித்தலுமே ஓங்கி நிற்பதைக் கதைக்கிறது “ஆரஞ்சு பழங்களும் ஹார்லிக்ஸ் பாட்டிலும்” கதை. பெண்களும் தமது பெற்றோரைக் கவனிப்பது போல புக்கத்தாரையும் போற்ற வேண்டும் என்பதே கதை நமக்கு உணர்த்துகிறது.அதே சமயம் மகளைப் போலவே மருமகளையும் கொண்டாட வேண்டும் பெற்றோர்.அப்போதே குடும்பம் என்கின்ற சமூகம் சமன்படும் என்பதே கதையின் தாத்பரியம்.

சுற்றங்களின் அருமையை சுட்டிக்காட்டுமொரு படைப்பாக அடுத்த கதை.
சுற்றத்தாரின் உரிமை மிகுந்த உள்ளார்ந்த அன்பை உதவும் கரங்களைப் புடம் போட்டுக் காட்டும் படைப்பாகத் “தவறிய கணிப்பு” கதை. குடும்ப உறவு என்பது ஒரு புறம் இருந்தாலும் உதவி என்ற அழைத்தக் குரலுக்கு உடன் ஓடோடி வருவது நம் அக்கம் பக்கத்து உறவுகளே. ஆனால் இன்றைய நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மத்தியில் வாழ்பவர் தமது இல்லத்தைத் திராபகக் கதவுகளைக் கொண்டு அடைத்துத் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது தமக்கொவ்வாததாகக் கண்டும் காணாமலும் வாழ்ந்து வருவதே இன்றைய நகர வாழ்க்கை என்னும் நரக வாழ்க்கை என்பதைத் திட்டவட்டபாக விளக்குகிறது கதை.அதற்கான காரணியாகக் கதை முன்வைப்பது சடகோபன் போன்ற மனிதர்களின் முன் முடிவுகளும் சுற்றத்தைப் பற்றிய தவறான கணிப்புகளுமே. அதே வேளை கவிதா போன்ற சுற்றத்தினருடனான நல்லிணக்கம் கொண்ட உறவுகளும் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை ஆசிரியர். உதவி என்ற எதிர்வீட்டுக் குரல் ஒலிக்க ஓடிச் சென்று உதவிய மாண்பைக் கொண்ட பாத்திரமாக கவிதாவின் பாத்திரம் நம் அன்றாட வாழ்வின் தரிசனம். நித்தம் நாம் பழகும் சாதாரண பக்கத்து வீடு எதிர்வீட்டு மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது கதை. உண்மையில் இந்தக் கதை ஒவ்வொரு நகர்புறவாசிகள் அன்றாடம் எதிர்கொள்ளூம் அனுபவ செறிவே.

தொகுப்பில் பெருவாரியான கதைகள் வாசக ஈர்ப்பை சமூகத்திற்கான பாடத்தை சமகாலப் பிரச்சனையைப் பேசும் படைப்புகளாக இருப்பினும் ஒரு சில படைப்புகளின் இறுதிக்காட்சிகள் மற்றும் இடையில் கருவின் நகர்தல் சற்றே ஒப்புமையின்றி இருப்பதாக எனக்கு தோன்றியது.அதில் குறிப்பிடும்படியாக “அமுதா ஒரு..” கதை சிறு பிள்ளையாய் அமுதா பிராயகுதூகலத்தில் கொண்டாடியும் மகிழ்ந்தும் அதேசமயம் முதிர்ந்த மனநிலைக் கொண்ட பெண்பிள்ளையாகப் பெற்ற மகளையே பெண்டாள நினைக்கும் தகப்பனின் கீழ்தரச் செயலில் உடைந்துப் போகிறாள் எதிர்த்தும் போராடுகிறாள். தகப்பனின் எல்லை மீறிய மொழியிலும் செயலிலும் தற்கொலை வரை தமது எண்ணத்தில் அடர்த்தியாக நின்று சாதித்தும் விடுகிறாள். ஆனால் இறுதியில் தகப்பனின் அட்டூழியங்களை நீண்ட மனபோராட்டங்களுக்குப் பின் போலீஸிடம் வெளிப்படுத்திவிட்டு மரணிக்கிறாள். அமுதாவின் வாக்குமூலத்தை ஏற்க முடியாமல் ஆத்திரப்படும் அவளது தாய், அமுதாவின் இறப்பிற்கு பின் அவளைத் தூற்றுவதாகக் கதையைச் சித்தரித்துள்ளது சற்றே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சிறுபிள்ளையாக அமுதாவின் முதிர்ச்சியைப் பாராட்டிய ஆசிரியர் பழைய சடங்குகளில் ஊறிய பெண்ணாகக் கணவனின் கேடுகெட்ட செயலை ஆமோதிக்கும் விதமாக அவளது தாயின் கதாபாத்திரம் கதைக்கு உவப்பானதாக இல்லை என்பதே எனது கருத்து. இறுதியில் அமுதாவின் மரணத்திற்குப் பிறகு அவளை சபிக்கும் தாயாக அமுதாவின் அம்மாவைக் காட்டியுள்ளது ஒரு தாய்மையை இழிவுபடுத்தும் விதமாகத் தெரிகிறது.

அடுத்ததாக “ஏலம்” கதை புனைவுக்காக மாறுபட்ட கண்ணோட்டத்தில் வாசகர் ஏற்புடையதாக இருந்தாலும் ஆசிரியப்பணியைக் களங்கப்படுத்தும் விதமாக ஏலம் விடுவதாகப் புனைந்துள்ளது கதையின் தொய்வைச் சற்றே வெளிப்படுத்துகிறது. ஊழல் எங்கு நடந்தாலும் எதிர்குரல் முதலில் ஒரு எழுத்தாளனிடத்திலிருந்தே ஒலிக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் இந்தப் போக்கை எதிர்க்காமல் கதையை முடிந்திருந்தது அத்துனை இதமாக இல்லை‌.நான் அறிந்த வரை ஆசிரியர் பணி பணத்தை முன்வைத்து ஏலம் விடுவதாக கேள்விப்பட்டதில்லை. கல்வி திறமை அறிவு பிள்ளைகளுடனான இணக்கம் பிள்ளைகளின் உளவியலை நேர்த்தியாகக் கையாள்வது இதுவே ஆசிரியர் பணிக்கான தகுதி என்பதே சரியான முறை. புனைவுக்காகக் கூட இப்படியாக ஆசிரியசமூகத்தை இழிவுப்படுத்தும் விதத்தில் படைப்பாக்காயுள்ளது நெருடலை ஏற்படுத்துகிறது. அப்படியே ஏதோவொரு மூலையில் அப்படியாக இயங்கும் அரசுசார்புப் பள்ளிகள் இவ்வாறாகச் செயல்பட்டாலும் அதைப் பொதுவெளியில் இலக்கியப்பரப்பில் வெளியிடுவது பிற அரசு சார்புப் பள்ளிகளுக்கு ஒத்திசைவாக இருந்துவிடக்கூடும். இயல்பான குற்றமாகத் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வர்.தொடர்ந்து இவ்வாறான இழிவு காரியங்களைச் சற்றும் குற்றவுணர்வின்றி மேத்தகு ஆசிரியப் பணியை ஏலம் விடும் பணியைத் தொடர்வர் என்பது என் புரிதல். ஆசிரியர் இலக்கணத்தையே மாற்றுவது போன்ற இறுதிப் பார்வை சற்றே ஏமாற்றத்தை வழங்குகிறது‌.

காதல் திருமணம் என்றால் இன்றும் குடும்பத்தில் வெறுப்பு ஆட்சியமனைகள் உதிர்த்த வண்ணமிருப்பர் பெற்றோர். விழைமேவிய பெண்ணையோ ஆணையோ பிள்ளைகள் மணக்க தமது விருப்பத்தை முன்வைக்கும் தருணம் பெற்றோர் முட்டுக்கட்டையாக முன் நிற்பர். எதிர்ப்பலைகள் ஓயாது வீசிக்கொண்டிருக்கும். வெகு நேரம் வெறும் அதிர்வுகளாக.. கணநேரம் எளிதான சண்டை சச்சரவுகள் என தொடர்ந்து பரிணமிக்கும் இப்பிரச்சனை பல சமயங்களில் குடும்பத்தில் உயிரைக் கூட காவு வாங்கும் என்பதையே தங்கம்மா கதாபாத்திரம் உயிர்த்துறந்து சொல்லிவிட்டு செல்கிறது “ஆத்தா சீருண்டு” கதையில். மகனின் ஆசையைப் மறுத்தலிக்கும் தங்கம்மா மகள்களுக்கான உவப்பான தாயாக இருக்கிறாள். தமது தாலிக் கொடியின் ஒரு பிரிவில் மகள்களுக்காகத் தங்க வளையல்களைச் செய்த தங்கம்மா மகனை பற்றிய சிறு பட்சாதாபமுமின்றி முற்றிலுமாக ஒதுக்கி வைத்தது தாய்மையில் ஒருவித பாரபட்ச மனோபாவத்தை வெளிப்படுவதாகக் காட்டுகிறது. சமூகத்தில் தாய்மையை இவ்வாறாக சித்தரிப்ப

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும்,  வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும், வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரிதான வளர்ச்சியினைக் காண முடிந்தது, அடுத்த கால் நூற்றாண்டில் 3லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினையும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் 6 விழுக்காடு வளர்ச்சியினையும் கண்டது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்க நிலையில் தொடர்ந்து விரைவான விரைவான வளர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் அத்துடன் சமுதாயத்தில் சமனின்மை என்ற நிலையும் காணப்பட்டது. 1980க்கு முன்பு அரசியல் மற்றும் கொள்கைகள் வாணிபச் சார்பு, வளர்ச்சிச் சார்பு என்ற இரண்டிற்கும் எதிரானதாக இருந்தது. ஆனால் 1980க்கு பின் வளர்ச்சிச் சார்பு மற்றும் வாணிபம் சார்பு நிலைக்கு ஆதரவான அரசியலும், கொள்கைகளும் உருவானது. 1990களில் சந்தைச் சார்பு நிலையினைப் பின்பற்றிய இந்தியா பன்னாட்டுப் பொருளாதாரத் தளங்களில் தடம் பதிக்கத் தொடங்கியது. வாணிபச் சார்பின் உத்திகள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவானது ஆனால் சந்தத்தைச் சார்பு உத்திகள் நுகர்வோர்களுக்கான ஆதரவான நிலையுடையது. சந்தை சார்பு உத்திகள் போட்டியினை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கும். இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியும் உள்நாட்டு வாணிபம் மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் இதன் விளைவுகள் அரசியல் பெருக்கத்தினால் வட்டார மற்றும் வகுப்புச் சமனின்மை அதிகரித்தது, மொழிசார் தேசியத்தின் தாக்கம் குறைந்தது, அரசியல் காரணங்களினால் நலன் சார் அணுகுமுறைகள் உருவாகியது.

இந்தியாவில் தனிக் கட்சி ஆதிக்கம் முடிவுற்று கூட்டணி ஆட்சிகள் ஒன்றி அரசியல் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (ஐ.மு.கூட்டணி), பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (தே.ஜ.கூட்டணி) போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ஐ.மு.கூட்டணி 218 இடங்களிலும், தே.ஜ.கூட்டணி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐ.மு.கூட்டணியானது மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. இக் கூட்டணி 2004 முதல் 2009 முடிய ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2009ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 262ல் ஐ.மு.கூட்டணியும், 159ல் தே.ஜ.கூட்டணியும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இக் கூட்டணி ஆட்சி முழுமையாக பத்து ஆண்டுகள் மே 2009 முதல் மே 2014வரை நீடித்திருந்தது. பல மாநிலக் கட்சிகள் ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 7 – 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல், முதலீட்டைப் பெருக்குவது, வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கூலியினை அளித்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தை உருவாக்குவது, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவது போன்றவை இடம் பெற்றிருந்தது (GoI 2004).

ஐ.மு.கூட்டணி அரசின் ஜனரஞ்சக திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், சீர்திருத்தங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியது மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியது போன்றவற்றைக் குறிப்பிடலாம் (Maitreesh Ghatak et al 2014). அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம், விலை உயர்வு, இந்தியப் பணம் வலுவிழந்தது, நிதிப் பற்றாக்குறை போன்றவை ஐ.மு.கூட்டணி அரசில் காணப்பட்டது. மார்ச் 7, 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும்போது, இரண்டாவது பசுமையை புரட்சியானது பழம், காய்கறிகளின் உற்பத்தியினைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதற்காகத் தோட்டக்கலை இயக்கம் (mission) உருவாக்கப்பட்டு நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள், கருவுற்ற தாய்மார்கள் பயனடையும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் இந்தியத் திட்டக் குழுவினால் வடிவமைக்கப்பட்தைக் குறிப்பிட்டார். இரண்டாவது பசுமைப் புரட்சியானது, பொது-தனியார்-பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது என்றார். இதன்படி 1) நீர் ஆதாரப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உணவு உற்பத்தியை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பது, 2) அறுவடைக்கும் பிந்தைய நிலைகளில் வீணாகும் விளைபொருட்களின் அளவினைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, பன்னாட்டு அளவில் விவசாயிகள் வேளாண் வாணிபத்தில் பங்கேற்பை ஊக்குவிப்பது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா உலக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டது.

ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டது. அவை, 1) பொருளாதார அறைகூவல்கள் 2) அரசியல் அறைகூவல்கள் ஆகும். பொருளாதார அறைகூவல்களைப் பொருத்த அளவில் உள்கட்டமைப்புகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துதலின்போது பெரும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது. உயர் பொருளாதார வளர்ச்சியானது திறனுடைய தொழிலாளர்களின் தேவையினை அதிகரித்தது. ஆனால் அடிப்படையில் இந்தியாவால் குறைந்த திறனுடையவர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.மு.கூட்டணி அரசானது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. ஏழைகளுக்கான திட்டமாக இது இருந்தாலும் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியாகக் காங்கிரஸில் இரட்டைத் தலைமை காணப்பட்டது. பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கை வேரூன்றி இருந்தது. காங்கிரஸ் தலைமுறை, வாரிசு அரசியல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ரீதியாகச் செயல்பாடுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தோய்வு காணப்பட்டது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2004-05ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 2005-06ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், மருத்துவத் தாவரங்கள், வாசனைப் பொருள் உற்பத்தித் தாவரங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2005-06ல் ஒன்றிய அரசின் உதவியுடன் வேளாண் சீர்திருத்த விரிவாக்கத்திற்கு மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது. 2005-06ல் வேளாண்மைக்கான நடைமுறை ஆராய்ச்சி முன்னோடித் திட்டத்திற்கான தேசிய நிதி உருவாக்கப்பட்டது. இத்துடன் இதே ஆண்டில் தேசிய வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தை படுத்துதலுக்கு 2003 வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2006ல் பாரத் நிர்மாண் என்ற கால வரம்பு (2005 – 2009) திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டம், பிராதான மந்திரி கிராம சாலை திட்டம், விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், ராஜீவ் காந்தி கிராம மின் இணைப்பு திட்டம், கிராம பொது தொலைப்பேசி போன்றவற்றை உள்ளடக்கி ஒரு குடையின் (பாரத் நிர்மாண்) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் ஆதாரம். வெள்ள மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு திட்டம் மார்ச் 2005ல் தொடங்கப்பட்டது. நீர்த் தேக்கம் பழுது பார்த்தல், மறுசீரமைப்பது, நீர்த் தேக்கத்தை மீண்டும் பெறுவது போன்றவை இந்தியாவில் 16 மாவட்டங்களில் 700 நீர்த் தேக்கங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டது. இதனால் 20000 ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்தது (GoI 2005).

இந்திய விவசாயிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, தனிநபர், உறவினர்கள்;, முகவர்கள், வண்டிக்காரர்கள், வியாபாரிகள் போன்ற ஆதாரங்களின் வழியாக அதிக அளவிற்குக் கடன் பெற்று வேளாண் சாகுபடி செய்பவர்களாக இருக்கின்றனர். 1951-61ல் கிராமப்புறக் கடனில் 75 விழுக்காடு முறைசாரா வழியாக அதிக வட்டிக்கு வண்டிக்காரர்களிடம் பெற்றிருந்தனர். இதனைப் போக்க 1969, 1980ல் இந்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. இதன் விளைவு 1991ல் இவ்வகைக் கடன் 25 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்தது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபின் முறைசார் (நிறுவனக் கடன்) திடீரென வீழ்ச்சியடைந்தது. 1992ல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையான வேளாண்மைக்கு “இலக்கின் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குதல்” பரிந்துரைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக வட்டிக்கு முறைசாரா வழியாக மீண்டும் கடன் பெறத் தொடங்கினர். அரசு அளித்த வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அவர்களின் சாகுபடி செலவை எதிர்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமாகக் கடன் பெறத் தொடங்கினர். எனவே, ஐ.மு.கூட்டணி அரசானது 2004-05 முதல் 2007-08 முடிய வேளாண் கடன் வழங்கலை இரட்டிப்பு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வேளாண் குடிகளில் கடன்பட்டோர் 48.6 விழுக்காடாக இருந்தது 2013ல் 51.9 விழுக்காடாக அதிகரித்தது. இக் கடன் நிலை மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாட்டுடன் காணப்பட்டது. கடன்பட்ட விவசாயிகளின் பங்கானது உச்ச அளவாக ஆந்திரப் பிரதேசத்தில் 93 விழுக்காடாகும். தேசிய அளவில் வேளாண் குடிகளில் கடன் பெற்றோரில் 60 விழுக்காட்டினர் நிறுவனம் சார் கடனாளிகள் ஆவார்கள். விவசாயப் பணிகள் மேற்கொள்ளக் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்க 1998ல் கிசான் கிரெடிட் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது உள்ளடக்கிய நிதி முறையினைப் பின்பற்றியதால் ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2013ல்) விவசாயிகளுக்கு 392 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது. இவர்கள் பெறும் கடனைச் சரியான தவணைக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டால் பூஜ்ய வட்டி என்று அறிவிக்கப்பட்டது. அரசின் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 2003ல் வேளாண் குடிகளின் சராசரிக் கடன் ரூ.12885லிருந்து 2013ல் ரூ.47000ஆக அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 375 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது (Sher Singh Sangwan 2015).

2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்களின் கடன் ரூ.6000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். தேசிய விவசாயக் கொள்கை செப்டம்பர் 2007ல் தேசிய விவசாயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2007-08ல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவர் விரிவாக்கத் திட்டம் 300 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது. இதன்படி வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கோதுமை, நெல், பருப்பு உற்பத்தியை 10 மில்லியன் டன், 8 மில்லியன் டன், 2 மில்லியன் டன் என்று முறையே 11வது திட்ட கால முடிவிற்குள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மே 2005ல் தொடங்கப்பட்டது. இதன்படி தோட்டக்கலை வட்டார அணுகுமுறையின் அடிப்படையில் உற்பத்தியினை அதிகரிப்பது, ஊட்டச்சத்து உறுதியினை சாத்தியமாக்குவது, வேளாண் குடிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 2005ல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு உதவி செய்தது. மார்ச் 2006ல் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 3.4 லட்சம் ஹெக்டேர் பயனடைந்தது. அக்டோபர் 2006ல் தேசிய மூங்கில் இயக்கம் தொடங்கப்பட்டது இதன்படி மூங்கில் உற்பத்தியினை விளைவித்து வேலைவாய்ப்பை உருவாக்க முனைந்தது. 1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து டிசம்பர் 2006 முதல் புதிய வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீர்த் தேக்கங்கள் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் திட்டம் 2005ல் ரூ.300 கோடியில் தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆகஸ்ட் 2007ல் வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க ரூ.2500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான தொழில்நுட்ப இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் விளைச்சல் விரைவான அதிகரிப்பை அடைந்தது. ஆனால் 1990களில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமையல் எண்ணெய் அதிகமாக இறக்குமதியானது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகள் இழப்பினை எதிர்கொண்டனர், சாகுபடி செய்யும் விளைநிலப் பரப்பும் குறையத் தொடங்கியது. மீண்டும் 2001ல் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்கள் மீது வரி விதித்ததால் சமையல் எண்ணெய் விலை உயர்வடைந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் எண்ணெய்வித்துக்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். 2010-11ல் இறக்குமதிக்கான சமையல் எண்ணெய் மீது வரிவிதித்தது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தது.

Source: Government of India (2016): Indian Public Finance Statistics 2015-2016,” Ministry of Finance, Department of Economic Affairs, Economic Division.

Source: GBGA (2013) “How has the Dice Rolled: Response to Union Budget 2013-14,” Centre for Budget and Governanace accountability, New Delhi, www.cbgaindia.org.

ஐ.மு.கூட்டணி அரசானது கிராமப்புற மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய சமுதாய உதவி திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை கிராமப்புற மேம்பாட்டிற்கு மன்மோகன் சிங் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது (Amit Basole 2017). ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் 2007ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த கொண்டுவரப்பட்டது. இதற்கான ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விதை, உரம், தோட்டக்கலை, வேளானமை இயந்திரமயமாக்கல், வேளாண் விரிவாக்கம், பயிர்ச் சாகுபடி, சந்தைப் படுத்துதல், பரிசோதனை ஆய்வகம், நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, நீர்த் தேக்கம் மற்றும் கூட்டுறவு போன்றவற்றின் மீதான மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடர் வேலை என்பது இயலாத நிலையினை உணர்ந்து தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் செப்டம்பர் 2005ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் பிப்ரவரி 2, 2006ல் நாட்டில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் ரூ.11300 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009ல் இத்திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறத்தில் திறன் குன்றிய உழைப்பாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பினை அளிப்பதை நோக்கமாக்க கொண்டது. இத் திட்டத்தினால் கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்தக் குறிப்பாக நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இத் திட்டத்தில் சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா திட்டமும், உணவுக்கு வேலைத் திட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் இத் திட்டம் 330 மாவட்டங்களிலும், 2008-09ல் 596 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வழியாக ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் 2006-07ல் 90.5 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டது. 2009-10ல் இது 283.6 கோடியாகவும், 2013-14ல் இது 220.4 கோடியாகவும் அதிகரித்தது (Ashok Pankaj 2017). இத்திட்டத்தைக் கிராமப்புற பஞ்சாயத்துகள் வழியான நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசானது 2004ல் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைத் துவக்கி கிராமப்புற மேம்பாட்டிற்கும் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது (GBGA 2009). கால்நடைகள் வேளாண்மை வளர்ச்சிக்கும், கிராமப்புற வருமான பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதால் 2013-14ல் தேசிய கால்நடை இயக்கம் ரூ.307 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2014ல் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், காளான், பூக்கள், நறுமணப் பொருட்கள், மரங்கள் போன்றவை வளர்ப்பதாகும். இதன்படி 11வது திட்டக் காலத்தில் இவற்றை பயிரிட 23.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. 2012ல் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் சர்க்கரை துறை முறைப்படுத்துதல் அறிக்கையின்படி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமானது, சர்க்கரையைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகும். 2010-11ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த ரூ.400 கோடி 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2012-13ல் ரூ.1000 கோடியாக அதிகரித்தது (GoI 2013).

விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமப்புற கடன் நிலைக்கான வல்லுநர் குழு 2006ல் அமைக்கப்பட்டது.

இக்குழு ஜூலை 2007ல் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதில் அளவுக்கு அதிகமான மக்கள் வேளாண்மையினைச் சார்ந்திருக்கின்றனர், கிராமப்புறம் தொடர்ந்து பெருமளவிற்கு பன்முகமடையாமல் உள்ளது, தலா வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கடன் இருப்பில் பற்றாக்குறை, வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடு போதுமான அளவிற்கு இல்லாமல் உள்ளது, குறைவான தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்திருப்பது போன்ற அறைகூவல்களை இந்திய வேளாண்மை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரதம மந்திரி தொகுப்பை நாட்டில் 31 மாவட்டங்களில் ரூ.28000 கோடிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தியது (GoI 2007). 2007-08ல் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டமான ஆம் ஆத்மி பீமா யோஜனா தொடங்கப்பட்டது. வேளாண் துறையின் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2009ல் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, 2010-11ல் சில மாநிலங்களில் வறட்சி, 2012-13ல் தாமதமான பருவ மழை போன்ற நிலை நிலவியது. அதே சமயம் எப்போதும் இல்லாத அளவாக 2011-12ல் உணவு தானியம் 259.32 மில்லியன் டன் உற்பத்தியானது. எட்டாவது திட்ட காலத்தில் வேளாண் வளர்ச்சி சராசரியாக 4.8 விழுக்காடும், 9வது திட்டத்தில் 2.5 விழுக்காடும், 10வது திட்டத்தில் 2.4 விழுக்காடும், 11வது திட்ட காலத்தில் 3.6 விழுக்காடும் இருந்தது (GoI 2013) எனவே நீடித்த வேளாண் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 12வது திட்டக் காலத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு வேளாண் வளர்ச்சியினை உறுதிசெய்ய முடிவெடுத்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஐ.மு.கூட்டணி ஆட்சி முடிவுற்றதால் இதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறைக்குப் பிந்தைய காலங்களில் பல முதன்மைப் பயிர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களில் அதிகரித்திருந்தது. ஆனால் 2001 – 2010ஆம் ஆண்டுகளுக்கிடையே பருப்பு மற்றும் பருத்தியின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்தது. நெல், சர்க்கரை, கோதுமை உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களுடன் ஒப்பிடும்போது 1990களில் அதிகரித்திருந்தது. பருத்தி உற்பத்தி 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிக வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் பி.டி.பருத்தி ரக தொழில்நுட்பமாகும். ஆனால் இதனைச் சாகுபடி செய்ய அதிக செலவும், இடரும் இருந்ததால் 2010-11 மற்றும் 2015-16ல் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித் திறன் குறைந்தது.

அட்டவணை: வேளாண்மை செயல்பாடுகள் (விழுக்காடு)

விவரங்கள்1981-82 முதல் 1989-90 வரை1990-91 முதல் 1999-00 வரை2000-01 முதல் 2009-10 வரை2010-11 முதல் 2013-14 வரை
வேளாண் வளர்ச்சி 2.92.82.42.1
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி4.75.36.83.7
மொத்த நீர்பாசன பரப்பு வளரச்சி2.072.281.111.36
உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி2.81.791.030.66

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வேளாண்மையின் போக்கு

விவரங்கள்2003-042004-052005-062006-072007-082008-092009-102010-112011-122012-132013-14
உண்மை வேளாண் வளர்ச்சி9.00.25.14.25.80.11.07.73.61.83.7
ஜிடிபி-க்கு வேளாண்மையின் பங்கு20.319.018.317.416.815.814.714.514.113.713.9
வேளாண்யின் மூலதன ஆக்கம் (ஜிடிபி-யில் மூ)2.12.12.22.22.32.72.62.32.4NANA
உணவு தானிய உற்பத்தி (மி.ட)213198209217231236218245259255266
தலா உணவு தானிய இருப்பு (கிராம்)438463422445443436444437454450401
குறைந்த பட்ச ஆரவு விலை(ரூ)

நெல் (சாதாரணம்)

கோதுமை

550

630

560

540

570

700

620

850

745

1000

900

1080

1000

1000

1000

1170

1080

1285

1250

1350

NA

NA

Source: GoI (2017): “Economic Survey 2016-17,” Ministry of Finance, Government of India. 

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பீடு

ஆண்டு சராசரிதேஜகூ (1998-04)ஐமுகூ-I (2004-09)ஐமுகூ-II (2009-13)ஐமுகூ

(2004-13)

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி  (%)5.98.07.07.6
பொதுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%)5.46.110.48.1
உணவுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%)4.27.011.69.0
நிதிப்பற்றாக்குறை (ஜிடிபி யில் % ஆண்டுக்கு)5.53.95.54.6
அந்நியச் செலாவணி  வரத்து (பில்லியன் டாலர்)2.8515.4416.1920.22
வேளாண்மைக்கான விவசாயக் கடன் வளரச்சி (%)135.97140.93132.90*307.81*
உணவு தானிய உற்பத்தி (%)202218244229.6

குறிப்பு: * 2011-12 வரை

Source: Maitreesh Ghatak, Parikshit Ghosh, Ashok Kotwal (2014): “Growth in the Time of UPA – Myths and reality,” Economic and Political Weekly, Vol 49 (16), pp 34-43 and 

http://www.rgics.org/sites/default/files/Facts-NDA-UPA.pdf.

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

ஒப்பீட்டு அளவில் பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5.9 விழுக்காடாக இருந்தது, ஐ.மு.கூட்டணி ஆட்சியின் முதல் காலகட்டத்தில் 8.0 விழுக்காடாகவும், இரண்டாவது காலகட்டத்தில் 7.0 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தமாக 7.6 விழுக்காடாகவும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியைவிட ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி ஆண்டான 2012-13ல் பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் குறைந்தது. தொழில் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியானது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் தே.ஜ.கூட்டணியின் ஆட்சியைவிட செயல்பாடுகள் சிறந்து காணப்பட்டது. ஆனால் உணவு பணவீக்கம், தே.ஜ.கூட்டணி அரசியைவிட (4.2 விழுக்காடு) ஐ.மு.கூட்டணி அரசில் (9.0 விழுக்காடு) அதிகமாக இருந்தது. ஆனால் அந்நியச் நேரடி முதலீடானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் ரூ.2.35 பில்லியன் டாலராக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 20.22 பில்லியன் டாலராக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியமானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 1.6 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது 2.6 விழுக்காடாக அதிகரித்தது. இதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 50 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 61 விழுக்காடாக அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி அரசு பதவி ஏற்றபோது வேளாண்மை மீதான பொது-தனியார்-பங்கேற்பு முதலீடானது 2003-04ல் 20:80ஆக இருந்தது 24:76 என்று 2013-14ல் மாற்றம் அடைந்தது. மொத்த வேளாண்மைக்கான முதலீட்டில் பொதுத்துறை 20 முதல் 25 விழுக்காடு என்ற வீச்சில் 2003-04 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே இருந்தது. நீர்ப்பாசனமும் உணவு உற்பத்தியும் நேர்மறைத் தொடர்புடையது. 1980ல் நீர்பாசனப் பரப்பளவு அதிகமாக அதிகரித்திருந்தது ஆனால் 1990களில் இது குறைவான அளவிற்கே உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை முதலீடு நீர்ப்பாசனத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததாகும். மொத்த உற்பத்தியில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு 2005-06ல் 0.8 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2013-04ல் இது 0.6 விழுக்காடாகக் குறைந்தது. இது போல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு 1998-99ல் ஜி.டி.பியில் 0.44 விழுக்காடாக இருந்தது 2011-12ல் இது 0.32 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டுகளில் வேளாண் விரிவாக்கத்திற்கு 0.15 விழுக்காடாக இருந்தது 0.05 விழுக்காடாகக் குறைந்தது (Shantanu De Roy 2017).

உணவு விலையானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் மெதுவாக அதிகரித்தது ஆனால் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது வேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது ஐ.மு.கூட்டணி காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 2005-06 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே நெல்லுக்கு 11.3 விழுக்காடும், கோதுமைக்கு 10.1 விழுக்காடும், கரும்புக்கு 12.9 விழுக்காடும், பருத்திக்கு 9.2 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டது (Krishnasamy et al 2015). மேலும் இக் காலகட்டத்தில் 650 லட்சத்திற்கு மேல் விவசாயிகள் கடன் பெற்றனர். உணவிற்கான மானியம் மூன்று மடங்கு அதிகரித்தது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 35 கிலோ உணவு தானியம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணியில் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. இரண்டு லட்சம் கி.மீட்டருக்குமேல் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டது. வறுமையானது ஆண்டுக்கு 2 விழுக்காடு குறைந்தது (Govardhana Naidu 2016). ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் வேளாண் வருமானம் 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே 5.36 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக வேளாண் சாகுபடியாளர்களின் வருமானம் 7.29 விழுக்காடு இதே காலகட்டத்தில் அதிகரித்திருந்தது (Ramesh Chand et al 2015).

ஐ.மு.கூட்டணி அரசில் எரிசக்தி உருவாக்கம், சாலைக் கட்டமைப்பு, ரயில் கட்டமைப்பு, கனிம வளங்களை எடுத்தல், தொலைத் தொடர்பு விரிவாக்கம் போன்ற முக்கியக் கட்டமைப்பின் மீது முதலீடுகள் செய்யப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பதியல் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 4.76 விழுக்காடாக தே.ஜ.கூட்டணியில் இறுதி காலமான 2003-04ல் இருந்தது 2008-09ல் 7.32 விழுக்காடாகவும், 2010-11ல் 8.4 விழுக்காடாகவும் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 7-8 விழுக்காடு அளவிலிருந்தது ஆனால் இது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக அளவிலான வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், பழங்குடியினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவானது. அதே நேரம், ஏழைகள் பெருமளவிற்குக் குறைந்தனர். 1993-94 மற்றும் 2004-05ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 0.74 விழுக்காடு ஏழ்மை குறைந்தது ஆனால் இது 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 2.18 விழுக்காடு ஏழைகள் குறைந்தனர், குறிப்பாக இது கிராமப்புறங்களில் 0.75 விழுக்காடு மற்றும் 2.32 விழுக்காடு என்று முறையே குறைந்தது குறிப்பிடத்தக்கது (Maitreesh Chatak et al 2014).

பொருளாதார சீர்திருத்தமானது வேளாண்மையில் சிறிய அளவில் பயிர் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பெரிதும் பாதித்து. கிராமப்புற உள்கட்டமைப்பு மீது பொதுத்துறை முதலீடு குறைந்தது, குறிப்பாக நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் குறைந்தது போன்றவை வேளாண் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தது. 2011-12ல் வேளாண்மையை 59 விழுக்காடு ஆண் உழைப்பாளர்களும், 75 விழுக்காடு பெண் உழைப்பாளர்களும் சார்ந்திருந்தனர். உயர் பொருளாதார வளர்ச்சி கிராமப்புற வறுமையைக் குறைக்கக் கூடியதாகும். வேளாண் வளர்ச்சி 2விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை அதிகரித்து இத்துடன் பொருளாதாரமும் 9 விழுக்காடு அதிகரித்தால் வேளாண் சார் துறைக்கும் வேளாண் சாரத் துறைக்கும் உள்ள வருமான இடைவெளியினை குறைக்கும் என்று திட்டக்குழு (2006ல்) கணித்துள்ளது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1981-82 முதல் 1989-90க்கும் 2010-11 முதல் 2013-14க்குமிமையே அதிக அளவில் குறைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியப் பயிர்கள் சீர்திருத்தக் காலங்களுக்குப்பின் பொதுவாகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது (Shantanu De Roy 2017).

இந்தியப் பொருளாதாரத்தை பொருத்த அளவில் வேளாண்மையினை உள்ளடக்கிய முதன்மைத் துறையானது மற்ற இரு துறைகளான தொழில் மற்றும் சேவையைவிட மிகவும் பின்தங்கியதாகவும், அதிக பாதிப்பினை உடையதாகவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதே சமயம் வேளாண்மை சார் வேiவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் திடமான முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேளாண் குடிகள் 70 விழுக்காட்டினர் போதுமான வருமானமின்றி வாழ்ந்து வருகின்றனர். வேளாண் சாராத துறையானது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் வேளாண் சார் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் 2005ல் வேளாண் சாரா வேலைவாய்ப்பு 27 விழுக்காடாக இருந்தது 2010ல் 32 விழுக்காடாகவும், 2015ல் 42 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண்மை மூலம் போதுமான வருமானம் ஈட்ட முடியாதல் 52 விழுக்காடு வேளாண் குடிகள் கடனாளிகளாக உள்ளனர். இவர்கள் சராசரியாக ரூ.47000 கடனை உடையவர்களாக உள்ளனர். தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி 76.9 விழுக்காடு கிராமப்புற குடிகள் மாதம் ரூ.10000 வருமானம் பெறுகின்றனர். 90 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடிகள் குறிப்பாக விவசாயிகள், கைவினைஞர்கள் அரசின் குறைந்தபட்ச கூலியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி வேளாண்மை மூலம் பெறும் வருமானம் 2003ல் ரூ.1060 ஆக இருந்தது 2013ல் ரூ.3844 ஆக அதிகரித்தது. இந்தியாவில் தற்போது 30 விழுக்காடு வேளாண் குடிகள் வண்டிக்காரர்கள், வணிகர்களிடம் கடன் பெற்றுள்ளனர் (Amit Basole 2017). இந்தியாவின் வேளாண்மையின் வழியாக பெரும் வருமானமானது 2004-05ல் ரூ.434160 கோடியாக இருந்தது 2011-12ல் ரூ.1144363 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் வேளாண் சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 9.27 கோடியிலிருந்து 7.82 கோடியாகவும், வேளாண் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை 16.61 கோடியிலிருந்து 16.62 கோடியாகவும் இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது (Ramesh Chand et al 2015).

மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பணவீக்கம், பன்னாட்டு நிதி சிக்கல், எரிபொருள் விலை ஏற்றம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிக வட்டி வீதத்தினால் முதலீட்டில் பின்னடைவு, ஊழல் போன்ற நிகழ்வுகள் காணப்பட்டது. அதே சமயம் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதார இயக்கம், தகவல் அறியும் சட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. (Anil Padmanabhan 2014). இந்திப் பொருளாதாரம் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரித்தது, பொருளாதார கட்டுப்பாடு இல்லாமல் தடையற்றதாக இருந்தது, வறுமை துல்லியமாக்கக் குறையத் தொடங்கியது, உள்கட்டமைப்புகள் அதிக வேகமெடுத்தது போன்றவை பல்வேறு தளங்களில் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றது (Maitreesh Ghatak et al 2014). ஒப்பீட்டு அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து பேரியல் பொருளாதார நிலைகளில் சிறந்ததாக இருந்தது.

1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக திறனை அடைவது என்ற இரட்டை இலக்கைக் கொண்டதாக இருந்தது. இதனைக் கட்டுப்பாடற்ற சந்தை வழியாக அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உற்பத்தித் திறன் அதிகமானது. 1991ல் பொருளாதாரச் சீர்திருத்தின பிந்தைய நிலைகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்தது. 2003-04க்கு பிந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் 10 விழுக்காட்டிற்குச் சற்றே குறைவான வளர்ச்சியினை கண்டது. ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் இந்த உயர் வளர்ச்சியினை முடிவிற்குக் கொண்டுவந்தது. இதனால் நீடித்த தொழிற் கொள்கை, வர்த்தகக் கொள்கை போன்றவை உற்பத்தித் துறையினைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சேவைத் துறை விரைந்த வளர்ச்சியினை பெற்றது. வேளாண் துறையினைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதுமட்டுமல்ல மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய தலா கையிருப்பானது குறைந்தது. இதற்கான காரணம், தாராளமயமாக்கப்பட்ட சந்தை மற்றும் தொழில், சேவைத் துறைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பதாகும்.

இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு உரியப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு, கிணறு போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகின்றனர். இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியானது நவீனத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் தொடர்புடையது. இதனை அதிக அளவில் உள்ள குறு, சிறு விவசாயிகளால் மேற்கொள்ளாதது வேளாண்மையின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அன்மைக் காலமாக பல்வேறு காரணங்களினால் மண் வளம் நிறைந்த பகுதியில்கூட உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. வேளாண்மை மீதான பொதுத் துறை முதலீடு குறைந்து காணப்படுவது போன்றவை வேளாண் துறையின் செயல்பாடுகளில் பிற்போக்கான நிலை உள்ளதற்கான காரணங்களாகக் கண்டறியப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் கட்ட ஆட்சியில் சிறப்பான பல அம்சங்கள் வேளாண்மையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது அதன் வளரச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னெடுப்பு குறைவாகவே இருந்தது. அளவுக்கு அதிக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கவனம் செலுத்தப்பட்டதால், வேளாண் விளைநிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான வாட்டர்லூ வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 12 தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (அடல் பிஹாரி வாஜ்பாய்) வேளாண்மைக்கான கிராமப்புற உள்கட்டமைப்பும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 12 தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (அடல் பிஹாரி வாஜ்பாய்) வேளாண்மைக்கான கிராமப்புற உள்கட்டமைப்பும் – பேரா.பு.அன்பழகன்




பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு, மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப் படுத்தப்பட்டது போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கிடையே 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனித்து 161 இடங்களில் வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மே 16,1996ல் பதவி ஏற்றது ஆனால் அரசுக்குப் போதுமான எம்.பிகளின் ஆதரவு இல்லை என்பதால் மே 31,1996ல் ஆட்சியினை இழந்தது. இவர் மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் பிரதமராக இருந்துள்ளார். அடுத்து பிரதமராகப் பதவி ஏற்ற எச்.டி.தேவ களொடா, ஐ.கே.குஜரால் ஆட்சிகள் அரசியல் நெருக்கடியினால் குறுகிய காலமே நீடித்தது. மீண்டும் 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 182 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது (காங்கிரஸ் 147 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). தெலுங்கு தேசம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க), திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அ.இ.அ.தி.மு.க தன்னுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதால் ஏப்ரல் 1998ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய், மார்ச் 1998 முதல் ஏப்ரல் 17,1999முடிய 13 மாதங்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இதன் பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயன்றும் தோல்வியடைந்ததால் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் செப்டம்பர்-அக்டோபர் 1999ல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி 296 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வாஜ்பாய் தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு அதற்குத் தலைமையேற்று பிரதமராக அக்டோபர் 13, 1999 முதல் மே 2004வரை பதவி வகித்தார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்தபோது முழு காலத்தையும் நிறைவு செய்தார் மேலும் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் முழு கால அளவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (Biban Chandra 2000).

வாஜ்பாய் ஆட்சி பெரும் சவால்களின் காலமாகும். ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளின் வேறுபட்ட கொள்கைகள், மற்றொரு பக்கம் வலதுசாரிகளின் கடும் நெருக்கடி என்று ஆட்சிக் காலம் முழுக்க பயணித்தார். 1999ல் இந்து ராஷ்டிரா அமைத்திடவும், ராமர் கோவில் கட்டவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அணு குண்டு சோதனை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தள்ளிப் போடப்பட்டதை வாஜ்பாய் அரசானது மே 1998ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் உடனுக்குடன் மூன்று முறை சோதனையை நடத்தியது. இது இந்தியாவிற்குள் பெரிய அளவிற்கு வரவேற்பினைப் பெற்ற அதேவேலையில் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து பாக்கிஸ்தானும் அணு குண்டு சோதனையினை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு வாஜ்பாய் இருநாடுகளுக்கிடையே பேருந்து போக்குவரத்தை 1999ல் துவக்கிவைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். இந்தியாவின் கார்கில் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் இந்தியா-பாக்கிஸ்தான் கார்கில் போர் உண்டானது. நூற்றுக் கணக்கான இந்தியப் படைவீரர்கள் இதில் வீர மரணம் அடைந்தனர். இந்தியா கடுமையாகப் போர்புரிந்ததாலும், பன்னாட்டு அழுத்தத்தின் காரணமாகவும் பாக்கிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க இதனைக் கையாண்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது (Biban Chandra 2000).

டிசம்பர் 1999ல் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு இந்தியப் பயணிகள் விமானம் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து 179 பயணிகள், 11 விமான ஊழியர்களுடன் தீவிரவாதிகள் கடத்தினர். 36 போராளிகளை விடுவிக்க நிபந்தனை முன்வைக்கப்பட்டது. கடைசியில் மூன்று முக்கியப் போராளிகளை விடுவித்து பயணிகளை மீட்டனர். அமைதியை ஏற்படுத்த ஆக்ரா பேச்சுவார்த்தை ஜூலை 2001ல் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷ்ரப்பிற்கும் இடையே நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் இரட்டை கோபுரங்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதி தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட அணு ஆயுத சோதனையின்போது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது (Biban Chandra 2000).

1999 மற்றும் 2000ல் இரு பெரும் புயல், 2001ல் குஜராத்தில் நில நடுக்கம், 2001ல் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல், 2002-2003ல் கடுமையான பஞ்சம், 2002ல் குஜராத்தில் வன்முறையினால் படுகொலைகள் வரை நடந்தது. 2001ல் தெஹல்கா என்ற ஊடகம் பல்வேறு அரசியல் (பா.ஜ.க உட்பட), உயர் பாதுகாப்பு அலுவலர்களின் ஊழல் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 2001ல் இந்திய யூனிட் டிரஸ்ட் ஊழல் நடைபெற்றது. இதனால் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பினை இழந்தனர். இதற்குப் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் பெட்ரோல் நிலையங்கள், எரிவாயவு முகவர், மண்ணெண்ணெய் வியாபாரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போன்றவை தொடர்ந்து வாஜ்பாய் அரசை அச்சுறுத்தி வந்தன. மாநிலச் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று வந்தன.

2003ல் எரிபொருள் நெருக்கடி சவாலை வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது எதிர் கொண்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து துணிவுடன் மேலும் பல சீர்திருத்தங்களை (புதுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்) நடைமுறைபடுத்தினார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 1999ல் 4.7 விழுக்காடு என்றிருந்த பணவீக்கம் 2004ல் 3.8 விழுக்காடாக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1999ல் 6.7 விழுக்காடாக இருந்தது 2004ல் 8 விழுக்காடாக அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான இருப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது போன்ற சாதகமான போக்கும் காணப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டமானது வறுமை ஒழிப்பு, வேலையின்மையினைப் போக்குதல் ஆகியவற்றை வேளாண் வளர்ச்சியினை முடுக்கிவிடுவதன் வழியாக அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே வேளாண் வளர்ச்சி ஆண்டுக்கு 4.5 விழுக்காடு என்ற இலக்கினை முன்னிறுத்தியது. உணவு தானியம், எண்ணெய் வித்துக்கள், சர்க்கரை, போன்றவை 1980களில் வளர்ச்சியின் அளவில் ஒப்பிடும்போது 1990களில் குறைந்து காணப்பட்டது. ஆனால் பழவகைகள், காய்கறிகள் போன்றவை வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. இந்தியாவில் வேளாண்மையானது வட்டார ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான கிழக்கு உத்திரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்றவை அதிக வளங்கள் உள்ள பகுதியாகும். ஆனால் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் (utapped) இருந்தது. உண்மையில் இந்த பகுதி சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நாட்டின் 50 விழுக்காடு உணவு உற்பத்தியினைப் பெற்றிருக்க முடியும். எனவே ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது. வேளாண்மையில் சில அறைகூவல்கள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. அதில் குறிப்பாக மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட விளைநிலங்கள் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வந்தது, குத்தகைகுப் பயிரிடுபவர்கள் பற்றிய சரியான விவரங்கள் பெறப்படுவதில்லை, குத்தகை தாரர்கள் அதிக அளவில் விளைபொருட்களை நில உடைமையாளர்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறை புழக்கத்திலிருந்தது, விளை நிலப்பரப்புகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறது, நிறுவனக் கடன் முறை மிகவும் பலவீனமாக இருந்தது, பல்வேறு காரணங்களினால் மண்ணின் தன்மை குறைந்து காணப்பட்டது, நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இது போன்ற நிலைமையினை மாற்றி அமைத்து வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க வாஜ்பாய் அரசு முயன்றது. இதற்காக வேளாண் உள்கட்டமைப்பினை உருவாக்குவது, குளிர்பதன கிடங்குகளைக் கட்டமைப்பது, ரயில், துறைமுகம், தகவல் தொடர்பினை வலுப்படுத்துதல், கிராமப்புறச் சாலை இணைப்பினை ஏற்படுத்தித் தருதல் பொன்றவை வாஜ்பாய் அரசு முன்னெடுத்த முக்கிய முயற்சிகள் ஆகும் (Chandra Shekhar Prasad 2009).

1980களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதிவரை அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் வேளாண் துறை தகுந்த பலனைப் பெற இயலவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரையில் எந்த ஒரு பெரிய சீர்திருத்தங்களும் வேளாண்மைக்காகத் தனிப்பட்டுச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1990களின் பிற்பகுதியில் வேளாண்மையினை நோக்கிய சிறப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமானது, உர விலையினைப் பகுதி அளவில் கட்டுப்பாட்டை நீக்குதல், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் தடைகளைக் களைவது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கட்டுப்பாட்டில் தளர்வு செய்தல், முக்கிய வாணிபப் பயிர்களின் முன்னோக்கிய வர்த்தகத்தை நடைமுறைப்படுத்துதல், இலக்கின் அடிப்படையில் பொது விநியோக முறையினை நடைமுறைப்படுத்துதல், கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை உண்டாக்குதல், வர்த்தக அளவுக் கட்டுப்பாட்டிற்குப் பதில் வரிகளை விதிப்பது போன்றவை ஆகும் (Malrika Singh 2017).

விவசாயிகள் இயற்கைச் சீற்றங்களினால் வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டு இழப்பினைச் சந்திக்கின்றனர். இதனைப்போக்க ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1985 தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme) என்பது 1999-2000ல்; தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 1999-2000லிருந்து 2015-16ஆம் ஆண்டுவரை 2691 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் (https://agricoop.nic.in). 2002-03ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் இந்திய வேளாண்மைக் காப்பீட்டு வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடங்கப்படுவதை அறிவித்தார். அதுவரை வேளாண்மைக்கான காப்பீட்டுத் திட்டங்களை இந்தியப் பொது காப்பீட்டுக் கழகம் நடைமுறை படுத்திவந்தது. இந்த புதிய அறிவிப்பினால் அனைத்து வேளாண் காப்பீட்டுத் திட்டங்களையும் இது நடைமுறைப்படுத்துகிறது.

வாஜ்பாய் அரசானது 2000ல் தேசிய வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியதுஇதன்படி,

  1. வேளாண்ஆராய்ச்சிமனித வள மேம்பாடுஅறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல்தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது.
  2. வேளாண்வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிக்கச் செய்தல்.
  3. நாட்டின்பல்வேறு பகுதிகளுக்கு வேளாண் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கானக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததை நீக்குதல்.
  4. விவசாயிகளின்மேம்பாட்டிற்கு வேளாண்மைக்கு வெளியே முறைப்படுத்துதல் மற்றும் வரி வசூல் செய்யும் முறைக்குச் சரியான அளவீடுகளை உருவாக்குதல்.
  5. வேளாண்வளர்ச்சிக்கான அடிப்படையான கிராமப்புற மின்சாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
  6. விவசாயக்கடன் தகுந்த நேரத்திலும்போதுமான அளவிலும் விவசாயிகளுக்குக் கிடைக்கக் கிராமப்புறங்களில் நிதி நிறுவன முறையினை கட்டமைப்பது போன்றவையாகும்.

2000-01ல் வேளாண்மைக்கான பேரியல் மேலாண்மை திட்டம் (Macro Management of Agriculture Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதன்மை நோக்கமாக உணவு தானியம் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகும். இத் திட்டம் 17 கூறுகளை உள்ளடக்கியது. இதன்படி ஒருங்கிணைந்த தானிய மேம்பாட்டுத் திட்டம் நெல், கோதுமை, சிறுதானியங்கள் விளைவிக்கும் பகுதிகளில் மேற்கொள்வது, சிறப்புச் சணல் மேம்பாட்டுத் திட்டம், சரியான கரும்பு சாகுபடி செய்யும் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் சமமான உரம் பயன்படுத்துதல், சிறு விவசாயிகள் வேளாண் இயந்திரப் பயன்பாட்டிற்கு உட்படுத்துதல், வானம் பார்த்த விளைநிலங்களில் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம், விதை உற்பத்தி, மண் வளப் பாதுகாப்பு, கலர்-உவர்ப்பு நிலங்களை மேம்படுத்துதல், நிலப் பயன்பாட்டுக் கழகம், நலிந்தவர்களுக்குக் கடன் வழங்கக் கூட்டுறவு, கூட்டுறவு மூலம் பெண்களுக்குக் கடன் உதவி, வேளாண் கடன் நிலைப்பு நிதி, ஆதிதிராவிடர்-பழங்குடியினர்களுக்குச் சிறப்புத் திட்டம் போன்றவை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய விதைக் கொள்கை 2002: வேளாண்மையில் விதை ஒரு முக்கிய இடுபொருளாகும். தரமான விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் இன்று வேளாண்மையில் தன்னிறைவினை அடைந்துள்ளோம். 1950ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது பசுமைப் புரட்சியின் விளைவால் மேம்படுத்தப்பட்ட, அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் 200 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது. எனவே உணவு உற்பத்தியினை எதிர்காலத்தில் சிறந்த அளவிற்கு அடையவும், புதிய உணவு தானிய வகைகளை உருவாக்கவும் தேசிய விதைக் கொள்கை 2002 நடைமுறைப்படுத்தப்பட்டது (https://seednet.gov.in/).

2004ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்சாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு  (National Commission on Farmersஅமைக்கப்பட்டது.  இக்குழுவானது விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய  ஆலோசனைகளை டிசம்பர் 2005 முதல் அக்டோபர் 2006வரையில் ஐந்து முறை  அறிக்கையினை அரசுக்கு அளித்ததுஇதன்படி,

  1. நிலம்நீர்கால்நடைகள்மற்றும் உயிரிய வளங்கள் (Bioresourcesகுறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
  2. விவசாயிகளின்நண்பன் என்ற அடிப்படையில் சாகுபடி விரிவாக்கம்பயிற்சி மற்றும் அறிவாற்றல்இணைப்புகடன் மற்றும் காப்பீடு போன்ற சேவைகளை வழங்குதல்.
  3. வேளாண்விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்தல்.
  4. இடுபொருட்கள்மற்றும் விநியோகச் சேவைகள் அளித்தல்.
  5. வேளாண்பல்கலைக் கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்.
  6. வேளாண்மையைப்பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருதல்.
  7. தேசியஉணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக் குழு அமைத்தல்.
  8. அனைவருக்குமானப்பொதுவிநியோக முறை.
  9. இந்தியவர்த்தக  அமைப்பை நிறுவுதல்.
  10. வேளாண்மைச்செலவு மற்றும் விலைக் குழுவை தன் அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி அமைத்தல்.
  11. வேளாண்விளைபொருட்களுக்கு அதன் செலவிலிருந்து கூடுதலாகக் குறைந்தது 50 விழுக்காடு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தருவது.
  12. கிராமப்புறவேளாண் சார் வாழ்வாதார முயற்சியினைத் தொடங்குவது.

இந்த அறிக்கையினை மாநிலங்களுடன் விவாதித்து அரசு தேசிய விவசாயக் கொள்கை 2007க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது.

 வேளாண்மைக்கு மிக முக்கியமானது வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்துதல் ஆகும். இதற்காக வாஜ்பாய் அரசானது வேளாண் சந்தைத் தகவல் வலைப்பின்னல் (Agricultural Marketing Information Network – AGMARKNET) என்ற திட்டம் 2000ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வேளாண் சந்தைகளுடன் இணைப்பினை ஏற்படுத்துவது, இந்திய இணையவழிப் பொருட்கள் பரிமாற்றத்துடன் இணைப்பினை ஏற்படுத்தி, தேசியத் தகவல் மையத்தின் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிப்பது, புதிய அறைகூவல்கள் பற்றி விவசாயிகளுக்குப் புத்தாக்கம் செய்வது, வேளாண் சந்தையைத் திறம்படச் செயல்பட வைப்பது, சந்தை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வேளாண் தொடர்பான திட்டங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது போன்றவை ஆகும் (www.indiafilings.com/learn/agmarknet/).

தேசிய இயற்கை வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (National Project on Organic Farming) பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இயற்கை வேளாண்மையினை மேம்படுத்தத் தொழில்நுட்பத் திறனை உருவாக்குவது, அறிவியல் அறிவினை வளர்த்தெடுப்பது, தடைகளைக் கண்டு அவற்றைக் கடந்து வருவது போன்ற நிலைகளில் உதவுவதற்காக அமைக்கப்பட்டது. இதற்காக பத்தாவது திட்டக் காலத்தில் ரூ.57.04 கோடியும் பதினோராவது திட்டக் காலத்தில் ரூ.101 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1998-99ல் கிசான் கடன் அட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன்படி விவசாயிகளுக்கு நீக்குப் போக்குடன் கடன் அளிக்கவும், செலவு-திறனுடைய முறையில் வழங்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. இதனை வணிக வங்கிகள், கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மத்தியக் கூட்டுறவு சொசைட்டி, பொன்றவை வழியாகக் கடன் அளிக்க வசதியை ஏற்படுத்தித் தந்தது. இதன்படி 1989-99ல் 7.84 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது இது 2001-02ல் 93.4 லட்சமாக அதிகரித்தது. சிறு, குறு விவசாயிகள் பயன்பெறவும், மத்திய மாநில அரசுகள் 1997-98ல் சோதனை அடிப்படையில் பயிர்க் காப்பீட்டு என்ற புதிய திட்டம் 8 மாநிலங்களில் உள்ள 24 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 1999-2000ல் இந்த திட்டம் புதிய வடிவமாகத் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனவரி 21, 2004ல் விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்கவும், வழிகாட்டவும் விவசாயிகள் தொலைப்பேசி மையங்கள் அனைத்து வாரநாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்க அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. மே 18, 2001ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு முதன் முதலில் அவர்களின் சமூகப் பாதுகாப்பையும், நலனையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயத் தொழிலாளர் பீமா யோஜனா (Khethihar Mazdoor Bima Yojana) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேளாண் விளைபொருட்களில் அழுகக்கூடியது (காய்கறிகள், பூக்கள்), அழுகாமல் குறிப்பிட்ட காலம் வரை பயன்பாட்டுக்கு உடையது (தானியம், பருப்பு வகைகள்) என்று பிரிக்கலாம். வருடத்தில் சில சாகுபடிக் காலங்களில் இவை மிதமிஞ்சிய அளவில் உற்பத்தியாகி அளிப்பு அதிகரிப்பதால் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்று பெரும் இழப்பினை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே இதனைப் போக்க 2001-02ல் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்கு திட்டம் (Gramin Bhandaran Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி தனிநபர், நிறுவனங்கள், உழவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், மற்றும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கிராமப்புறங்களில் வேளாண் சேமிப்புக் கிடங்குகள் கட்டவோ அல்லது சீரமைக்கவோ அரசு நிதி அளிக்கிறது. இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாகுவதை தவிர்க முடியும் (Saumitra Mohan 2017).

வாஜ்பாயின் முக்கியப் பொருளாதாரச் சாதனைகளாகத் தங்க நாற்கரச் சாலை, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டம், அரசு தொழில் மற்றும் வாணிப நிலைகளில் முதலீடு விலகல் (disinvestment), நிதிப் பற்றாக்குறையினைக் குறைக்க நிதி பொறுப்புச் சட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan போன்றவை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்தும் கிராமப்புறங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான முக்கியக் கரணம் முதன்மைச் சாலைகளுடன் கிராமங்கள் இணைப்பினைப் பெற்றிருக்கவில்லை என்பதாகும். எனவே 2000ல் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் இணைப்பு திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி அனைத்துக் காலநிலையினைத் தாங்கக்கூடிய கிராமப்புறச் சாலை இணைப்பினை 1000 பேர் வசிக்கக்கூடிய சமதளக் குடியிருப்புப் பகுதிகளிலும் (பின்னால் 500 நபர்கள் என்று 2007ல் மாற்றி அமைக்கப்பட்டது), மலை மற்றும் வனப் பகுதிகளில்; 500 நபர்கள் வசிக்கக்கூடியக் குடியிருப்புகளுக்கு (பின்னால் 250 நபர்கள் என்று 2007ல் மாற்றியமைக்கப்பட்டது) சாலை இணைப்பினை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வேளாண் உற்பத்தி பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்குக் கொண்டுசெல்லவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டது (Saumitra Mohan 2017). தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் வழியாக 1997-2002ஆம் ஆண்டுகளுக்கிடையே 23814 கி.மீ நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை கூடுதலானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 60 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2002ல் இந்தியா பெரும் வறட்சியினை சந்தித்தது. இதற்குக் காரணம் இயல்பான மழையைவிட 19 விழுக்காட்டுக்குக் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகும். இதனால் 38 மில்லியன் டன் உணவு உற்பத்தி குறைந்தது (Amitabh Tiwari 2021).

1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்தின் கீழ் 2002ல் விரைவு செயலாற்றும் திட்டம் துவக்கப்பட்டது. 2003-04ஆம் ஆண்டு முடிய 18 நீர்ப்பாசன திட்டங்களுக்குக் கடன் அளிக்கப்பட்டது. பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம் (Command Area Development and Water Management Programme) மறுசீரமைக்கப்பட்டு ஏப்ரல் 2004ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி 133 நீர்ப்பாசன திட்டங்கள் இதன் மூலம் பயன் பெற்றது. விவசாயிகளுக்கானக் கடன் அளவு 1999-2000ல் ரூ.46268 கோடியாக இருந்தது 2004-05ல் ரூ.85686 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 1998-99ல் தொடங்கப்பட்ட விவசாயக் கடன் அட்டை திட்டம் டிசம்பர் 2004 முடிய 435 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு ரூ.111459 கோடி கடன் கொடுக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்படி 1999-00ல் ரபி பருவத்திலிருந்து 2004 காரீப் பருவம் முடிய 5.89 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர். இத்துடன் 2003-04ல் முன்னோட்ட அடிப்படையில் விவசாயிகள் வருமானக் காப்பீடு திட்டத்தினால் (Farm Income Insurance Scheme) 2004 காரீப் பருவத்தில் 2.22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். இதுபோல் விதை உற்பத்தி மற்றும் பகிர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

விவசாயிகள் அதிக உரங்கள் பயன்படுத்தக் குறைந்த விலையில் மானியத்துடன் வழங்க அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. உர மானியம் 2000-01ல் ரூ.13800 கோடி வழங்கப்பட்டது இது 2003-04ல் ரூ.11847 கோடியாகக் குறைந்தது. வேளாண்மையை இயந்திரமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன்படி இயந்திரமயமாக்கல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் பங்கானது 1971-72ல் 40 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 84 விழுக்காடாக அதிகரித்தது. 1999-2000க்கும் 2003-04க்கும் இடையில் 11.17 லட்சம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது, இது ஆண்டுக்குச் சராசரியாக 223333 விற்பனை அளவாக இருந்தது. இதுபோல் விசைக் கலப்பைகள் (power tillers) இதே காலகட்டத்தில் 68034 விற்பனையானது, இது ஆண்டுக்குச் சராசரியாக 13606 விற்பனையானது. அதேசமயம், வேளாண்மையின் மீதான பொதுத்துறை முதலீடுகள் குறைந்து வந்தது. 1990களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான மூலதன ஆக்கமானது 1.92 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 1.3 விழுக்காடாகக் குறைந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் பங்கானது 2002-03ல் 12.8 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 11.8 விழுக்காடாகக் குறைந்தது. எனவே வேளாண் ஏற்றுமதியினை ஊக்குவிக்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2004-2009ல் வேளாண்மைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்படி சிறப்பு வேளாண் உற்பத்தி திட்டம் (Vishesh Krishi Upaj Yojana) தொடங்கப்பட்டு பழவகைகள், காய்கறிகள், பூக்கள், சிறிய வகைக் காடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இத்துடன் வேளாண் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற அதே வேலையில் சில வகைப் பொருட்களை (சமையல் எண்ணெய், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், பருப்பு வகைகள்) இறக்குமதி செய்கிறது. இதன்படி மொத்த இறக்குமதியில் சராசரியாக ஆண்டுக்கு 4.6 விழுக்காடு வேளாண் பொருட்கள் பங்கெடுத்துக்கொள்கிறது.

அட்டவணை: வாஜ்பாய் ஆட்சியில் இந்திய வேளாண் உற்பத்தி

வேளாண் உற்பத்தி1998-992003-04
பரப்பு (மில்லியன் ஹெக்டேர்)உற்பத்தி (மில்லியன் டன்)உற்பத்தி திறன் (கி/ஹெ)பரப்பு (மில்லியன் ஹெக்டேர்)உற்பத்தி (மில்லியன் டன்)உற்பத்தி திறன் (கி/ஹெ)
நெல்44.8086.08192142.4188.282051
கோதுமை27.5271.29259026.6272.112707
எண்ணெய் வித்துக்கள்26.2324.7594423.4425.291072
சர்க்கரை4.05288.72712034.00237.3159119
பருப்பு வகைகள்23.514.9163424.4514.94623
சிறுதானியங்கள்29.3431.34106830.7638.121228
அனைத்து உணவு தானியங்கள்125.17203.611627124.24213.461707
தலா உணவு (தானியங்கள் + பருப்புகள்)447.0 கிராம்462.7 கிராம்

Source: Government of India (2005, 2007): “Economic Survey2004-05 & 2006-07,” Ministry of Finance, Government of India. 

அட்டவணை: இந்தியப் பொருளாதாரப் போக்கு (விழுக்காட்டில்)

காரணிகள்1950-19641965-791980-19901991-20041980-2004
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி3.72.95.85.65.7
தொழில் வளர்ச்சி7.43.86.55.86.1
வேளாண் வளர்ச்சி3.12.33.93.03.4
மொத்த முதலீட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம்131822.822.322.5

Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005,”Economic Political Weekly, 41, (14).

Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005 Part II: The 1990s and Beyond,”Economic Political Weekly, 41, (15).

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திப் பொருளாதாரம் உச்ச அளவான 8 விழுக்காடு வளர்ச்சியினைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. அதே சமயம் பணவீக்கம் 4 விழுக்காட்டுக்குக் குறைவான அளவிலும், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாகவும் இருந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதமானது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் 3.2 விழுக்காடும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் 4.7 விழுக்காடும், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 விழுக்காடுமாக இருந்தது. இது 2003-04ஆம் ஆண்டு 9.6 விழுக்காடாக அதிகரித்தது.

இந்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணமாக்கத் திகழ்கிறது. 1970-71ல் இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 59 விழுக்காடாக இருந்தது, 1977-78ல் 51.3 விழுக்காடாகவும், 1983ல் 44.5 விழுக்காடாகவும், 1993-94ல் 36 விழுக்காடாகவும், 1999-2000ல் 26.1 விழுக்காடாகவும், 2004.05ல் 22.1 விழுக்காடாகவும் குறைந்தது. ஆனால் தற்போதும் உலக அளவில் வறுமையின் கீழ் வாழ்பவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக பங்கினை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தேவைக்கு அதிகமான தொழிலாளர் ஆற்றல் வேளாண்மையினைச் சார்த்திருப்பதாகும். வட்டார நிலையில் பார்த்தால் வறுமையில் வாழ்பவர்களில் பெரும் பங்கினைக் கிராமப்புறங்கள் பகிர்ந்துகொள்கிறது. குறிப்பாக விவசாயிகள் பாதிக்குமேல் வறுமையில் வாழ்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர்கள் அதிகமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. 1970களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வறுமையை ஒழிப்பதில் சிறப்பான பலனை அளிதது. எனவே 2000களின் இடையில் இத்திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்து மட்டுமல்ல உலக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னனி நாடாகவும் உள்ளது. இருந்தும் அதிக அளவிலான மக்கள் உணவின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்காக உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி குறைந்த விலையில் உணவு தானியம் பொது விநியோக முறையின் மூலமாக வழங்கப்பட்டது. இதனால் 800 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். வேளாண்மையில் முக்கிய உற்பத்தியாகப் பருத்தி திகழ்கிறது. 1950-51ல் தலா துணியின் அளவு 9 மீட்டராக இருந்தது 2002-03ல் 31.4 மீட்டராக அதிகரித்தது. பல மாநிலங்கள் ஏழை மக்களுக்கு இலவச துணி அளிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. இது போன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வறுமை, பாக்கிஸ்தானிலிருந்து அதிக அளவில் அகதிகள் வருகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. இதனால் வீடற்றவர்கள் பெருமளவிற்கு காணப்பட்டனர். இத்துடன் கிராமங்களில் பெருமளவிற்கு மண்-குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இதனைப் போக்க அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டங்களைப் பல்வேறு பெயர்களில் அவ்வப்போது நடைமுறைப்படுத்தியது. இதன் விளைவு வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 0.15 விழுக்காடு மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கத் தொடர்ந்து அரசு பல்வேறு உத்திகளை இன்றும் கடைப்பிடித்து வருகிறது.

டியாகோ மயோரானோ (2014) என்பவருடைய ஆய்வுக் கட்டுரையில், கிராமப்புற பொருளாதாரம் மோசமான பாதிப்பினை அடைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். அதன்படி 1) விவசாயிகள் கடன் பெறுவது மிகவும் கடினமாகிக் கொண்டுவந்தது, 2) பன்னாட்டுப் போட்டியிலிருந்து விவசாயிகளை போதுமான அளவிற்குப் பாதுகாக்கப்படாதது, 3) பொதுத் துறை முதலீடு வேளாண்மை மீது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது போன்றவை ஆகும். இவை அனைத்தும் வேளாண் துறையின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்கிறார். இந்த பாதிப்பினால் 1995-2011ஆம் ஆண்டுகளுக்கிடையே 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 1980களில் வேளாண்மைக்கு அளித்த முக்கியத்துவம் ஒப்பீட்டு அளவில் 1990களில் அளிக்கப்படவில்லை. குறிப்பாக மொத்த முதலீட்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதலீட்டு விகிதமானது தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1980ல் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 1989ல் 19 விழுக்காடாகக் குறைந்தது, 2008ல் 18 விழுக்காடாக மேலும் குறைந்தது. ஆனால் இந்த முதலீட்டு இடைவெளியைத் தனியார் மற்றும் பொது-தனியார்-கூட்டேற்பு (PPP) வழியாக நிறைவடையச் செய்தது. இதுபோல் மொத்த முதலீட்டு ஆக்கத்தில் வேளாண்மையின் மொத்த முதலீட்டு ஆக்கமானது 1980ல் 16.1 விழுக்காடாக இருந்தது 1999ல் 11.5 விழுக்காடாகவும், 2005ல் 7.3 விழுக்காடாகவும் குறைந்தது (Diego Maiorano 2014).

உணவு மற்றும் உரங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் 1980 மற்றும் 2004க்குமிடையே மாறுபட்டு இருந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் உரத்திற்கான தலா மானியம் 600 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவிற்கான தலா மானியம் 202 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1990களில் உரத்திற்கான தலா மானியமானது 160 விழுக்காடும், உணவிற்கான தலா மானியம் 308 விழுக்காடும் அதிகரித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உரத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அளவு 0.40 விழுக்காடாக 1980ல் இருந்தது. 1989ல் 1.11 விழுக்காடாக இது அதிகரித்தது. இதுபோல் உணவிற்கு இதே காலகட்டங்களில் 0.53 விழுக்காட்டிலிருந்து 0.9 விழுக்காடாக அதிகரித்தது. இந்திய உணவுக் கழகம் நெல் மற்றும் கோதுமைக்கானக் கொள்முதல் விலையானது 1980களில் குறைந்திருந்தது ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டது (Diego Maiorano 2014). பொதுவாகப் புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதில் வேளாண்மைக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகள் (சாலைகள், சேமிப்புக் கிடங்குகள்) வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு கிராமப்புற மேம்பாடு, வேளாண் வளர்ச்சி போன்றவற்றில் நேர்மறை விளைவுகள் தோன்றியது. ஆனால் இதனைத் தக்கவைக்க அடுத்து வரும் காலங்களிலும் வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இருந்தது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்




1996ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினைக் கண்டது. பாஜகவிற்கு 191 இடங்களும், காங்கிரஸ் கட்சி 140 இடங்களும், ஜனதா தளம் 46 இடங்களும், இடதுசாரிகளுக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்ததால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது ஆனால் அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் 13 நாட்கள் மட்டுமே வாஜ்பாய் பிரதம மந்திரியாக நீடித்தார். இதனை அடுத்து 13 கட்சிகளின் கூட்டுடன் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததன் அடிப்படையில் இந்தியாவின் 11வது பிரதம மந்திரியாக எச்.டி.தேவ கௌடா ஜூன் 1, 1996ல் பதவி ஏற்றார்.

அன்றிலிருந்து ஏப்ரல் 21,1997 வரை 324 நாட்கள் இவர் பிரதமர் பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற சீதாராம் கேசரி அரசியல் காரணங்களுக்காகத் தேவ கௌடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனை அடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் ஐ.கே.குஜரால் பிரதமரானர். காங்கிரஸ் கட்சி இவருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இவருடைய ஆட்சி பிப்ரவரி 1998வரையில் நீடித்தது (Amitab Tiwari 2016). மொத்தமாக ஐக்கிய முன்னணி அரசானது 17 மாதம் 21 நாட்கள் ஆட்சியில் இருந்தது.

தேவ கௌடா தன்னை ஒரு சாதாரண விவசாயி என அழைத்துக் கொண்டவர். 1991ல் பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கான மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனை எதிர்த்து தேவ கௌடா “நான் ஒரு விவசாயி, உழவன் மகன், இதை நான் அனுமதிக்க மாட்டேன், நான் தர்ணாவில் அமர்வேன், நான் இந்த நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியே செல்ல மாட்டேன், இதை விளம்பரத்துக்காக நான் அப்படிச் சொல்ல வில்லை” என்றார். தேவ கௌடா தன்னுடைய வாழ்நாளை விவசாயிகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1996-97ல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கானதாக இருந்தது. பின்னால் அவர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு பஞ்சாப் விவசாயிகள் அம்மாநிலத்தில் பயன்படுத்திய புதிய தரமான நெல் விதை ரகத்திற்குத் தேவ கௌடா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்த ரகம் பத்தாண்டுகளுக்கு மேலாக மிகவும் அறியப்பட்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விவசாயிகளின் தலைவராக அறியப்படும் மகேந்திர சிங் திகாயத், தேவ கௌடாவை தென்னிந்தியாவின் சவுதிரி சரண் சிங் என்று அழைத்தார் (Outlook web dest, 12.12.2021).

1991ல் புதிய பொருளாதாரக் கொள்கையானது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது ஆனால் 1996ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படத் தொடங்கியது. 1996-97ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 5 விழுக்காடாகக் குறைந்தது. 1998-99ல் ஏற்றுமதி வளர்ச்சியானது எதிர்மறையாக இருந்தது. தொழில் வளர்ச்சியும் குறைத் தொடங்கியது. வெளிநாட்டு மூலதனங்களான அந்நிய நேரடி முதலீடு மற்றும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளின் வரத்து அதிக அளவில் குறையத் தொடங்கியது. இது 1998-99ல் எதிர்மறையாகவும் இருந்தது. முதன்மை பற்றாக்குறையானது (Primary deficit) 1996-97ல் 0.6 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 1.3 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 1997ல் கிழக்கு ஆசியா நாடுகளின் ஏற்பட்ட பங்கு முதலீடு தொடர்பான நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதே நேரம் இந்தியாவுடன் வர்த்தக உறவுடன் இருந்த நாடுகளான ரஷ்யா, பிரேசிலும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவந்தது, இது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியினை உருவாக்கியது. 1998ல் உலகப் பொருளாதார வளர்ச்சியும் குறையத் தொடங்கியது. இவை அனைத்தும் பகுதி அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தியது. 1991ல் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் பின்னிலையில் இருந்தது. இதன்பொருட்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தின் விளைவுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இடர்பாடுகள் தோன்றியது. எனவேதான் அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அரசியலில் நிலையற்ற தன்மை, சந்தர்ப்பவாத கூட்டாட்சி, அரசின் இரட்டை நிலைப்பாடு (சுதேசி, புதிய பொருளாதார சீர்திருத்தம்) ஆகியன 1990களின் கடைசி காலகட்டங்களில் பொருளாதாரச் சரிவிற்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அதே சமயம் புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொடர் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், சுயச்சார்பு, வறுமை ஒழிப்பு போன்ற தளங்களில் சிறப்பான வெளிப்பாட்டைக் காண முடிந்தது. இந்தியா அதுவரை கடைபிடித்து வந்த சோசியலிச கொள்கையானது கைவிடப்பட்டு புதியதான உலகமயமாக்கல் என்பதை இந்தியா உள்வாங்கிக்கொள்ளத் தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் சுயச்சார்பு, தொழில் வளர்ச்சிக்கு இறக்குமதி மானியம் தேவைப்பட்டது ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையினால் மூலதனம், தொழில்நுட்பங்களும் தருவிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியாவில் உள்ள கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையினைப் பொறுத்தவரையில் தேவை என்பதை உணர்ந்தன (Bipian Chandra et al 2008).

பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்த இடதுசாரி கட்சிகள் அடுத்து ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் தனியார் மயமாக்கலைக் கடுமையாக எதிர்த்தனர், மானியங்களைக் குறைப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த சதுரானன் மிஸ்ரா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்) அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தபோது மின்சார துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையினைப் பின்பற்றி மாநில மின்சாரக் கழகங்களை வலுப்படுத்த வேண்டுமென்றார். ஐக்கிய முன்னணி அரசானது இறக்குமதியினை தாராளமயமாக்கியது. இதன்படி படிப்படியாகத் தடை செய்யப்பட்ட இறக்குமதியினைச் சிறப்பு இறக்குமதி பட்டியலுக்குக் கொண்டுசென்றது பின்னர் அதனைத் தடையற்ற இறக்குமதி பிரிவில் சேர்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பின் நிலக்கரி மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டு முற்றுரிமை நிலையிலிருந்ததை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஐக்கிய முன்னணி அரசானது உலக வரத்தக அமைப்புக் கூட்டம் பிப்ரவரி 1997ல் ஜனிவாவில் நடந்ததில் கலந்துகொண்டு தொலைத்தொடர்பு உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தகவல் தொழில்நுட்பம் உலகமயமாக்கலுக்கு உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவை அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அதில் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழிலாளர் நிலை தொடர்பாக இந்தியா பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் நடைமுறையினை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு நிலையினை நிராகரித்தது (Singh 2001).

மன்மோகன் சிங் 1991ல் தன்னுடைய முதல் நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தபோது இந்தியப் பொருளாதாரம் மிகவும் தீவிர பொருளாதார நெருக்கடியினை (அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றியிருந்தது, செலுத்து நிலை இருப்பில் மோசமான நிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கடும் சரிவு, தொழில் துறை வீழ்ச்சி, உச்ச அளவில் பணவீக்கம், இந்தியா மீது பன்னாட்டு நிதிச் சந்தையில் நம்பிக்கை இழந்த நிலை) சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம். ஆனால் 1996ல் ஒட்டு மொத்த பேரியல் பொருளாதார நிலைமை சிறப்பான இருந்த நிலையில் (பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு, தொழில் துறை வளர்ச்சி 12 விழுக்காடு, பணவீக்கம் 4.5 விழுக்காடு, அந்நியச் செலாவணி கையிருப்பு 17 மில்லியன் டாலருக்கு மேல்) அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது முதல் நிதி நிலை அறிக்கையினைச் சமர்ப்பித்தார். இதில் முக்கியமானது மன்மோகன் சிங்கிக்குப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ப.சிதம்பரம் பங்கேற்றிருந்த அரசானது 13 கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத நிலையிருந்தது.

1996-97ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையானது நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பொருளாதாரச் சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டும், பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கங்கள் 1) பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடுக்கிவிடப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது, 2) குறைந்தபட்ச சேவைகளை வழங்கி வறுமையை ஒழிப்பது, 3) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைகளைக் காண்பது, 4) நிதி மற்றும் பேரியல் பொருளாதார நிலைப்பாட்டை உருவாக்குவது, 5) உள்கட்டமைப்பின் மீது முதலீடு செய்வது, 6) மனித மூலதன வளர்ச்சியினை மேம்படுத்துவது, 7) செலுத்து நிலை இருப்பினை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது போன்றவை ஆகும்.

வேளாண்மை முன்னேற்றத்திற்காகச் சிறப்பு நடவடிக்கையினை எடுக்க நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது முதலில் ரூ.500 கோடியும், பின்பு ரூ.1000 கோடியாகவும் செலுத்தப்பட்ட மூலதனம் அளித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இது ரூ.2000 கோடியாக அதிகரிக்க உத்தேசித்தது, கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு ரூ.2500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவாக நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. பெரிய நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. குறிப்பாகப் பெரிய விவசாயிகள் பயன்பெறும் விதமாக டிராக்டர், எந்திரக் கலப்பை (பவர் டில்லர்) போன்றவற்றை வாங்க நேரடி மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிற்று உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் ரூ.5000 கோடியில் உருவாக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, சாலை போன்றவற்றைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது (Bakul H Dhalakia 1996).

ஐக்கிய முன்னணி பல கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி 100 விழுக்காடு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குதல், ஆரம்பச் சுகாதார மைய வசதியினை ஏற்படுத்தித் தருதல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை உறுதி செய்தல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல் போன்றவை ஆகும். இதற்காக ரூ.2466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1997-98ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பாராளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் போது, 1995-96ல் வேளாண்மையின் வளர்ச்சியானது 0.1 விழுக்காடாக இருந்தது, 1996-97ல் 3.7 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியதாகக் குறிப்பிட்டார். உணவு தானிய உற்பத்தியானது 191 மில்லியன் டன் அதிகரித்ததாகவும் ஆனால் மின்சாரத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றும், ஏற்றுமதியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டது. வறுமையை ஒழிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், பிரதம மந்திரி அடிப்படைக் குறைந்தபட்ச சேவை திட்டத்திற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதுபோல் நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கங்கா கல்யாண் யோஜனா என்ற திட்டமானது நிலத்தடி நீர் மற்றும் சமதளப் பகுதிகளின் நீரைத் திறம்படப் பயன்படுத்த மானியமும், கடனும் வழங்கப்பட்டது. இது போன்றே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் வழியாக வேளாண்மை மற்றும் வேளாண் சார் தொழில்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிக அளவில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி சிறப்பாகச் செயல்படுத்த முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியினை வலுப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. உணவு தானியங்கள், சர்க்கரைக்கு மானியம் அதிகரிக்கப்பட்டது மொத்தத்தில் இந்த நிதி ஆண்டிற்கான செயல் திட்டங்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது (Government of India 1997). 1996-97ல் உரத்துக்கான மானியம் ரூ.6093 கோடியாக இருந்தது 1997-98ல் ரூ.10026 கோடியாக அதிகரித்தது (Government of India 1999). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான இடுபொருட்களின் விழுக்காட்டு அளவு 1996-97ல் 8.9 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 9.0 விழுக்காடாக அதிகரித்தது. இது ஒரு ஹெக்டேருக்கு ரூ.497.3 லிருந்து ரூ.509.4ஆக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (Shovan Ray 2007).

1997-98ல் வேளாண் உற்பத்தி 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது ஆனால் 1998-99ல் இது 3.9 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டில் உணவு தானிய உற்பத்தியானது 192.26 மில்லியன் டன்னாக இருந்தது 203.61 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உற்பத்தித் திறனானது ஒரு ஹெக்டேருக்கு 1552 கிலோவாக இருந்தது 1627 கிலோவாக அதிகரித்தது. நெல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, சிறு தானியங்கள் போன்றவை உற்பத்தியில் நேர்மறை வளர்ச்சியடைந்தது (Shovan Ray 2007). இக்கால கட்டத்தில் இந்தியாவில் பருவ மழை சாதகமான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1995-96ல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண்மைத் துறையின் பங்கு 19.8 விழுக்காடாக இருந்தது 1996-97ல் 20.4 விழுக்காடாக அதிகரித்தது, 1998-99ல் 18.8 விழுக்காடாகவும் குறைந்தது. 1950களில் உணவு தானிய உற்பத்தியானது ஆண்டுக்கு 3.22 விழுக்காடாக இருந்து 1960களில் ஆண்டுக்கு 1.72 விழுக்காடாகவும், 1970களில் ஆண்டுக்கு 3.08 விழுக்காடாகவும், 1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடாகவும், 1990களில் 1.7 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது (Government of India 1999).

1990களின் மத்தியில் வேளாண் வளர்ச்சி சரியத் தொடங்கியது (1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு என்றிருந்தது 1990களில் 2.7 விழுக்காடாகக் குறைந்தது). 1992-1997ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 4.7 விழுக்காடு என்ற சராசரி வேளாண் வளர்ச்சி இருந்தது ஆனால் இது 1997-2001ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 1.2 விழுக்காடு என்ற அளவில் இருந்தது (Shankar Achary et al 2003). இதனால் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்த வேளாண் குடிகள் அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டனர். வேளாண் சார் துறைகளான கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, போன்றவை மீதும் பாதிப்பினை உண்டாக்கியது. இதற்கு முக்கியக் காரணம் நீர்ப்பாசனம், வெள்ளத் தடுப்பு, ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், போன்றவை மீதான அரசின் முதலீடுகள் குறைந்ததாகும். பொதுத் துறை முதலீடு வேளாண்மையில் 1970கள் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது ஆனால் 1980களில் இது குறையத் தொடங்கியது. பொதுத் துறை முதலீடு உண்மை நிலையில் 1980-81ல் ரூ.1793 கோடியாக இருந்தது 1990-91வட ரூ.1154 கோடியாகவும், 1996-97ல் இது ரூ.1132 கோடியாகவும் குறைந்தது. ஆனால் தனியார்த் துறை முதலீடு வேளாண் துறை மீது அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது (Government of India 1999). வேளாண் வர்த்தகத்தில் தாராளமயமாக்கப்பட்டதின் விளைவு பன்னாட்டுச் சந்தையில் அதிகம் தேவையான வேளாண் விளைபொருட்கள் பயிரிடப்பட்டன. இதன் விளைவு அதிக அளவிற்கான வேளாண் உற்பத்தியினால் பன்னாட்டுச் சந்தையில் இப்பொருட்களின் விலையில் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டது. இந்தியா வர்த்தக கட்டுப்பாட்டை நீக்கியது, சுங்க வரியினைக் குறைத்தது. 1990களின் இடையில் பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்கள் விலை குறைந்தது போன்ற நிலைகளினால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்தித்தனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரச் சீரதிருத்ததிற்குப் பிந்தைய காலங்களில் குறைவான வேளாண் வளர்ச்சியினை அடைந்தது. வேளாண் வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியினை அடைந்திருந்தபோதும் அதற்கு ஈடாக வேளாண் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் ஆற்றல் (Labour force) குறையவில்லை இது ஒரு முக்கிய முரண்பாடாகக் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவால் அடைந்த உயர் பொருளாதார வளர்ச்சியானது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரவில்லை எனவே வேளாண்மையிலிருந்து அதிகமாக வேளாண்மையில் சுய-தொழில் ஈடுபட்டிருந்தவர்களும், தொழிலாளர்களும் வெளியேறினார்கள். குறைவான வேளாண் உற்பத்தித் திறன், குறைந்த அளவிலான வேளாண் விளைபொருட்களின் விலை, வேளாண் பொருட்களின் தேவையில் வீழ்ச்சி, வேளாண்மைக்கு வெளியே தேவையான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தராத நிலை, இவை அனைத்தும் வேளாண்மை 1990களின் கடைசி காலகட்டத்தில் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சனைகளாகும். நீர்ப்பாசனம் மீது பொதுத் துறையின் முதலீடு குறைந்து வந்தது. 1980களுக்கும் 1990களுக்கும் இடையே நீர்ப்பாசன சாகுபடி பரப்பானது ஆண்டுக்கு 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்தது. ஆனால் இது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுபோல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது. நிறுவனம் சார் அளிப்பும் குறைந்து வந்தது. இதன் பங்கு மொத்த நிறுவனம் சார் கடனில் ஆண்டுக்கு 10-11 விழுக்காடு மட்டுமே இருந்தது. பெரும்பான்மையான விவசாயிகள் முறைசார ஆதாரங்கள் வழியாகக் கடன் பெற்றிருந்தனர், இதற்கு 30 விழுக்காட்டுக்குமேல் வட்டியாகச் செலுத்திவந்தனர். தொடர்ந்து வேளாண்மையில் லாமற்ற தன்மை, வேளாண்மை வணிகமயமாதல், அதிகரித்த கடன் சுமை போன்ற காரணங்களினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருந்தது (Narasimha Reddy et al 2009).

அட்டவணை: ஒப்பீட்டு அளவிலான துறைவாரியான செயல்திறன் (விழுக்காடு)

துறைகள்

ஆண்டு வளர்ச்சி வீதம்

பொருளாதார பங்களிப்பு

1981-1990

1991-1999

1980

1990

1999

வேளாண்மை

3.6

3.0

39.7

32.2

25.2

தொழில் துறை

7.1

5.6

23.7

27.2

26.7

சேவைத் துறை

6.7

7.8

36.6

40.6

48.1

Source: Shankar Achary et al 2003.

அட்டவணைவேளாண் உற்பத்திஉற்பத்தித் திறன் வளர்ச்சி (விழுக்காட்டில் ஆண்டுக்கு)

உற்பத்திஉற்பத்திஉற்பத்தி திறன்
1980-81முதல் 1989-90வரை1990-91முதல் 2000-01வரை1980-81முதல் 1989-90வரை1990-91முதல் 2000-01வரை
உணவு தானியங்கள்2.851.662.741.34
உணவல்லா விளைபொருட்கள்3.771.862.310.59
அனைத்து விளைபொருட்கள்3.191.732.561.02

Source: Shankar Achary et al 2003


1980களின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ 1990களில் அமைந்த ஆட்சிகளே காணமாக இருந்தது. இவ்வாட்சிகள் சிறுபான்மை அரசாகவும், கூட்டணி அரசாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட சித்தாந்தங்களின் கூட்டாக இவ்வாட்சிகள் இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது எடுக்கப்பட்ட உத்திகள் பெருமளவிற்குக் கருத்தொற்றுமையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது (Singh 2001).

ஜி.எஸ்.பல்லா மற்றும் குர்மாயில் சிங்கின் ஆய்வுக் கட்டுரையில் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவானது 1990-93 முதல் 2003-06ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் வளர்ச்சியானது அதிக அளவில் வீழ்ச்சியடைந்தது. இக்கால கட்டங்களில் ஆண்டுக்கு 1.74 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி இருந்தது இது 1980-83 முதல் 1990-93ஆம் ஆண்டுகளுக்கிடையே பதிவான வளர்ச்சியைவிட (ஆண்டுக்கு 3.37 விழுக்காடு) மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைக்கான முக்கியக் காரணம் கிராமப்புற உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, வேளாண் ஆராய்ச்சி மீதான முதலீடுகள் குறைந்தது எனச் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய விளைவாகச் சாகுபடி செய்யும் பயிர்களில் மாற்றம் ஏற்பட்டது. உணவு தானியச் சாகுபடியிலிருந்து விலகி உணவல்லா பயிர்களை (குறிப்பாக மதிப்பு மிக்க பயிர்கள்) நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவற்றின் உற்பத்தித் திறன் வளர்ச்சியானது அதிக அளவிற்குக் குறைந்தது. தனியார் நிறுவனங்கள் வேளாண்மையில் ஊடுருவி உணவல்லா விளைபொருட்களை விளைவிக்க நிதி வழங்கியது. இதனால் பெருமளவிற்கான விவசாயிகள் வேளாண் சாகுபடி பயிர் வகைகளில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களில் பெருமளவிற்குப் பெரிய, நடுத்தர விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990-93ல் உணவு தானிய உற்பத்தியானது மொத்தப் பயிரிடும் பரப்பில் 73 விழுக்காடாக இருந்தது 2003-06ல் 68.9 விழுக்காடாகக் குறைந்தது. உணவு தானிய உற்பத்தியானது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 52.7 விழுக்காடாக இருந்தது 49.6 விழுக்காடாக இக்கால கட்டத்தில் குறைந்தது (Bhalla et al 2009). முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சார்பானதாக இருந்தது. வேளாண்மைக்கான மானியங்கள் குறைக்கப்பட்டது, தடையற்ற வர்த்தகம் போன்றவை அதிகமாக வேளாண்மையைப் பாதித்தது. எனவே ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் வேளாண்மையினை முன்னிறுத்தி இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் (இடுபொருட்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை, வறண்ட சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் பசுமைப் புரட்சி விரிவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல்) தொடங்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற போக்கினாலும், அழுத்தங்களினாலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினாலும் வேளாண்துறையின் வளர்ச்சியினை பெருமளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியது. பொதுவாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் வேளாண்மையின் போக்குச் சரியத் தொடங்கியது.

– பேரா.பு.அன்பழகன்

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்




தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் தொடங்கி நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்தகு படைப்பு கண்ணிகளில் எழுத்தாளர் மீனா சுந்தரும் சேருகிறார்.

பழநியில் உள்ள கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் மீனா சுந்தரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “புலன் கடவுள் “ . கீழத்தஞ்சையில் பிறந்த கதாசிரியர் ,பழநியில் பேராசிரியராக இருக்கிறார் . புலம்பெயர்வு இவரது கதைகளிலும் எதிரொலிக்கிறது .பேராசிரியராக இருப்பினும் இத்தொகுப்பிலுள்ள இவரது படைப்புகள் பெரும்பாலானவை தமிழகத்துக்குள்ளே பிழைப்புக்காக புலம்பெயர்ந்த அடித்தட்டு மக்களைச் சுற்றியே அமைந்துள்ளதை உணரமுடிகிறது..

‘செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை ‘ எனும் கதை , அலுவலகத்தில் நிலவும் , லஞ்ச ஊழல் சூழலின் முடைநாற்றத்தை எடுத்துரைத்து காறி உமிழச் செய்கிறார். இக்கதையை வாசிப்பவர் எவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவாராயின் அவரது மூக்கிலும் மலம் நாற்றத்தை உணர்ந்து ஒதுங்குவார். அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. ஆனால் மஞ்சள்கொன்றைப் பூவைப் பார்க்கும்போதும் இந்தக் கதையை நினைவுக்கு வரும் ஆபத்துமுண்டு.

‘ பெருகும் வாதையின் துயரநிழல் ‘எனும் இரண்டாவது கதை தாயையும், தங்கையையும் ஸ்கூட்டர் விபத்தில் இழந்த சிறுவனின் எதிர்வினையும், அதன் விளைவாய் தந்தை படும் வாதையையும் , வாசக நெஞ்சுருக எடுத்துரைக்கிறார்.. அடுத்துவரும் , ‘மிதவை’ கிராமத்துப் பண்ணையார், கிராமத்து பொதுக்குளத்தை ஆக்கிரமித்து செய்யும் அக்கிரமத்திற்கு எதிராகப் போராடும் முதிய விவசாயியின் கதை.கீழத் தஞ்சையின் ஈரம் மணக்கிறது. ‘நியதி ‘ கதை, கொய்யாப்பழம் விற்கும் முதிய தம்பதி, அனாதைக் குழந்தைகளைத் வளர்த்து படிக்க வைத்து மேம்படுத்தும் சீலத்தையும் , அவர்கள் இருவரும் கொய்யாபழம் விற்கும் நியதியையும் சொல்கிறது. வாசக மனம் ஆயக்குடி கொய்யப்பழத்தைப் போல இனித்து மணக்கிறது.

இக்கதையைப் போலவே பழநி நகரப்பேருந்து நிலையத்தைக் களமாக வைத்து இயங்கும் இன்னொருகதை ‘ சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று…’ செருப்புத் தைக்கும் தொழிலாளி, தனது மகனைப் படிக்க வைத்து தனது பால்ய நண்பனைப் போல பெரிய அதிகாரியாக உயர்த்தவேண்டும் என்ற லட்சிய ஆவேசத்தில் தனது நண்பனின் நினைவாக இருக்கிறார். ஆனால் சென்னையிலிருந்து வரும் உயரதிகாரியான நண்பன் .பால்யத்தில் உதவிய தன்னையே மதிக்காமல் உதாசினப்படுத்துவதும் அல்லாமல் குடியும் கூத்துமாய் இருக்கிறார். தடமாறிய நண்பனைக் கண்டு சினந்தெழும் வீராவேசம் தான் கதை. ஒடுக்கப்பட்டவரெல்லாம் மனத்தால் ஒடுங்கியவரல்ல என்று சுருக்கென்று சொல்லும் கதை.

‘ உயிர்வேலி’, ‘ நெகிழ் நிலச்சுனை ‘ போன்ற கதைகள் கிராமாந்திர தாய்மார்களின் தாய்மையை இருவேறு கோணங்களில் உருக்கமாகச் சொல்லும் கதைகள். இதேபோல, ‘தீய்மெய் ‘, ‘பாத்தியம் ‘ என்ற இருகதைகளும் தந்தை பாசத்தையும், அர்ப்பணிப்பையும் இரு மாறுபட்ட கோணங்களில் வாசகமனம் நெகிழ எடுத்துரைப்பன . ‘தவிப்பின் மலர்கள் ‘ கதையும் தந்தை மகனுக்கிடையே நிகழும் பாசப்போராட்டத்தை நாகசுரக் கலைஞர் குடும்பத்தைக் களமாகக் கொண்டு சொல்வது. நாகசுரக் கலைஞர் , நாகசுரம் வாசிக்கும்போது அவரது மெய்ப்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மீனாசுந்தர்.

‘புலன் கடவுள் ‘கதை, தேநீரை ரசனையோடு அருந்தும் இளைஞனின் அனுபவத்தை அவனுக்கு அமையும் முரண்பட்ட குடும்பச் சூழலை மெல்லிய நகைச்சுவை மிளிர சுவையாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ’தருணம்’ கதை ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது பெற்றோரின் துயரங்களை நெகிழ்வாய் வாசகமனதுக்கு இடம்பெயர்க்கும் கதை.

கதாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் , செய்யுள் வழக்கு, நாடகவழக்கு, உலக வழக்கு என்று சொல்லும்முறை அறிந்தவர் . அவற்றை கதைச்சொல்லும் நடையில் அங்கிங்கெனாதபடி கலந்திருக்கிறார் . காவியத் தன்மையான வர்ணிப்புகளோடு கதைகளைத் தொடங்கினாலும், வாசிப்பை இடறாமல் கதைநிகழ்வுகளை அடுக்கி வாசிப்பை இயல்பாக நகரச் செய்கிறார். கவித்துவமான கதைத் தலைப்புகள் கதையின் உயிர்ப்பான முதன்மை பாத்திரங்களுக்கு முரண் நிலையிலிருந்து அணுகச் செய்கின்றன.இதற்கு ‘மாமிச வெப்பம் ‘ போன்ற கதைகளைச் சுட்டலாம்.

கதையில் சொல்லப்படும் உவமைகளும் ,படிமங்களும் கூட முரண் அழகோடு மிளிர்கிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் , ‘வராக பேரரசன் படைசூழ ஆட்சி செய்வதாகச் சொல்கிறார்.’ கண்ணகி அவிழ்த்த கூந்தலாக விரிந்து நீண்டு செல்கிறது முத்துப்பேட்டை சாலை,’என்கிறார் . ‘கிராமத்து தெருக்கள் மண்புழுக்களாக உழண்டு கிடக்கின்றன ’ ; ‘அதிர்ச்சியின் சவ்வூடுபரவல் ‘ இப்படி நீண்ட பட்டியலிடலாம். எனினும் கதையின் உணர்ச்சிவேகம் குறையாமல் நகர்த்துகிறார் கதைசொல்லி.

மீனாசுந்தர் கல்லூரி பேராசிரியர் என்பதால் , இவர் இன்னும் சிறப்பான கதைகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தர வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை இக்கதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.

– ஜனநேசன்

நூல் : புலன் கடவுள் “ – சிறுகதை
ஆசிரியர் : மீனா சுந்தர்
விலை : ரூ.₹190/-
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – ஜனநேசன்

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – ஜனநேசன்




நூல் : இறுதிச் சொட்டு
ஆசிரியர் : விஜிலா தேரிராஜன்
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எனது சிறுவயதில் கடுங்காய்ச்சல் உற்ற பொழுதில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , நோய்மையை மறக்க அம்மாவிடம் கதை கேட்டு நச்சரிப்பேன். அம்மா தனக்குத் தெரிந்த கதைகளை, பார்த்த சினிமாக்களை சொல்லுவாள். நலம் எய்தும்வரை ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த உறவாடலில் தன்னிடமுள்ள கதைகள் தீர்ந்ததும் மறுபடியும் சொன்னதைச் சொல்லுவாள். இதைத்தான் முந்தியே சொல்லிட்டல வேற சொல்லும்மா என்று அடம்பிடிப்பேன்.

அம்மா, “வேறெந்த கதையச் சொல்ல? பிறந்த கதையையா, வளர்ந்த கதையையா, வாக்கப்பட்ட கதையையா “ என்று கேட்கும்; அறியா பருவமது, “எதாவது சொல்லுமா “ என்பேன். அம்மா தன் கதையை உருக்கமாக மெல்லிய குரலில் சொல்லிக்கிட்டே நெஞ்சில் தட்ட உறங்கிப்போவேன். இப்படி அம்மாவிடமும், பாட்டி, தாத்தாவிடமும் கேட்ட கதைகள் சொல்லும் முறையே என்னை படைப்பாளியாக்கியது. பெண்களின் சிரமங்களை, மாண்புகளை எழுதவைத்தது. இவ்வாறே தனது சித்திமார்களிடம் கதைகள் கேட்டதும், வாசித்ததும் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்திருக்கிறார் விஜிலா தேரிராஜன்.

அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி தற்போது அருப்புக்கோட்டையில் குடும்பத்தினரோடு வசிக்கும் விஜிலா எழுதிய முதல் கதைத்தொகுப்பு “இறுதிச்சொட்டு “ . இத்தொகுப்பில் 21 கதைகளில் ஆறு கதைகளில் பள்ளிக்கூடங்களில் நிலவும் சூழல்களைக் கதைகளாக்கியுள்ளார். பள்ளிகளின் நிர்வாகச்சூழல்கள், பெண் ஆசிரியர்களின் சிரமப்பாடுகள், ஆண் ஆசிரியர்களின் அகம்பாவப் போக்குகள், பலம், பலவீனனங்கள்; பள்ளி மாணவ,மாணவிகளின் இயல்புகள், அவர்களின் வயசுக்கேற்ற உளவியல் பாங்குகள், பெற்றோரின் நிலைப்பாடுகள் இவை அனைத்தையும் எதார்த்தம் பிறழாமல் உணர்வோட்டத்தோடு விஜிலா கதைகளாக்கியுள்ளார். இக்கதைகளில் “மண்குதிரை”,
“அமுதா ஒரு…” ”தீதும் நன்றும் “ “வண்ணக்கனவு ” போன்றவை குறிப்பிடத்தக்கவை.”ஏலம்” கதை அரசு உதவிபெறும் தனியார்ப்பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர் பணியிடத்தை ஏலம் விட்டு சம்பாதிப்பதைச் சொல்கிறது.

இன்னும் சிலகதைகள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி சொல்பவை. இவற்றில் தாய்மையின் மாண்பைப் பற்றி சொல்லும் “பட்டுமனம்” அருமையானது. மனதை நெகிழ்விப்பது. இதேபோல் “மாதவம் “ பெண்களுக்கு வரும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வைக் கச்சிதமாக உணர்த்துவது. ஆண் மைய்ய சமூகத்தில் குடிகார கணவன்களிடம் சிக்கி உழலும் பெண்கள் படும் பாடுகளை “சவால்” “ரத்தத்தின் ரத்தம் “ போன்ற கதைகளில் மனதில் தைக்கும் வகையில் பகிர்கிறார் ஆசிரியர். பணியிடத்தில் அத்துமீறும் ஆண்களை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் “ரௌத்திரம் பழகு “கதை குறிப்பிடத்தக்கது. சிறுநீர் கழிக்கக் கூட பெண் படும் அல்லல்களை உணர்த்தும் “இறுதிச்சொட்டு “ கதை மனதை உறுத்துவது. “இலவச மின்சாரம் விவசாயத்துக்குக் கிடைக்கும் என்று கைவசமுள்ள பொருளை இழக்கும் சிறுவிவசாயியின் அவலம் .! இப்படி இன்றைய வாழ்வியல் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதார்த்தம் பிறழாமல், பனையும், பதனியும், தேரிமண்ணும் மணக்க, வாசிக்க ஏதுவான சரளமான நடையில் தூத்துக்குடி மாவட்ட புழங்கு மொழியில் விஜிலா எழுதியுள்ளார். இக்கதைகளை வாசிப்பவர் எவரும் , விஜிலாவின் முதல் தொகுப்புக்கான கதையா என்று வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன. இவை தமிழ்ச்சிறுகதை உலகிற்கு நல்லதோர் வரவாக வரவேற்று வாசிக்கவும் தூண்டுகிறது. இத்தொகுப்பிற்குத் தோழர் தமிழ்ச்செல்வன் வழங்கிய அணிந்துரையும்,, தோழர் உதயசங்கரின் பின்னுரையும் மேற்கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன. இத்தொகுப்பை பாரதி புத்தகாலயம் சிறப்பாக வடிவமைத்து நமக்கு விருந்தாக்கியுள்ளது.

– ஜனநேசன்

நிலையாமை நினைவுகள்! சிறுகதை – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

நிலையாமை நினைவுகள்! சிறுகதை – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி




பரமசிவத்துக்கு பழைய நினைவுகள் கண் முன் நிழலாடின!

மகள் வழிப்பேரன் வந்து “தாத்தா விளையாட வாரீங்களா?” எனக்கேட்ட போது “பாட்டியக்கூட்டிட்டு போ”என பதிலுரைத்தவர், கண் முன்னே இருந்த புத்தகங்களை புரட்டிப்பார்த்தார். மனம் அதில் நிலைக்க மறுத்தது. அப்போது தொலைக்காட்சியில் ‘தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காலமானார், பிரதமரை முதல்வர் சந்தித்தார், அ.தி.மு.க பன்னீர் பக்கம் சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து பழனிச்சாமி தரப்பு மேல் முறையீடு’ என பல செய்திகள் ஓடியதில் ‘நெல்லை கண்ணன் இறப்பு செய்தி’ மட்டும் பரமசிவத்தை வெகுவாக பாதித்திருந்தது!

‘பல்கலைக்கழகம் போல் பல விசயங்களை ஒரே நேரத்தில் தமது பேச்சாற்றலால் சொன்னவர் தற்போது இல்லை. தமக்கும் ஒரு நாள் இந்த நிலை வரத்தான் போகிறது’ என மனது உறுதிப்படுத்திய போது, தாம் இது வரை ஆசைப்பட்ட , பேராசைப்பட்ட விசயங்களிலிருந்த நாட்டம் மனதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அல்லாமல் படீரென ஒலகம் பஞ்சு வெடித்துப்பறப்பது போல் பறந்து சென்று மறைந்து விட்டதை உணர முடிந்தது.

ஆறு பத்து வயதைத் தாண்டி சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரில் உறவுகள் சூழ முடித்து ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன!

விவசாயி மகனாக இருந்தாலும் படித்து முடித்து அரசு வேலையை லஞ்சம் கொடுக்காமல் பெற்று, விடுமுறையே எடுக்காமல், கை சுத்தமாகப் பணியாற்றி, உடன் பணியாற்றியவர்களின் துன்பம் போக்க ஊதியம் வாங்கியவுடன் பாதியைக் கரைத்து, “நீங்க உருப்பட மாட்டீங்க” என கத்தும் மனைவி பேச்சைப் பொறுத்துக்கொண்டு காபி போட்டுக் கொடுத்து சமாதானப்படுத்திக் காதலை வளர்த்து, உடன் பிறப்புகளுக்குத் தாய் மகிழும் படி சீர், சிறப்பு செய்து, தனக்குப் பிறந்த ஒரே பெண்ணைப் படிக்க வைத்து திருமணம் செய்துவைத்து பிரசவ செலவைத் தாமே ஏற்று,பேரனைப்பார்த்த பூரணத்துடன் உறவுகளோடு இணக்கமாக வாழ்ந்தாலும், மனித வாழ்வின் நிலையாமையை எண்ணி அவ்வப்போது மனம் உடைந்து சோகமாகி விடும் பழக்கத்துக்கு சிலர் குடிக்கு அடிமையாவது போல் ஆகிவிடுவது வாடிக்கையாகி விட்டது.

“ஏங்க என் பெரிய பெரியப்பா பேரன் மாரடப்புல போயிட்டானாம். சின்ன வயசுதான். இன்னும் கண்ணாலங்கூட ஆகல. என்ன கருமமோ தெரியல. கொரோனா, கோழி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்னு ஜனங்கள நோயி பாடா படுத்தறப்ப சின்ன வயசுல சரியா தூக்கமில்லாம கண்ட, கண்ட கடைகள்ல கண்டதத் தின்றதால இப்படியாகுது. நானும் நம்ம பொண்ணு சுருதியும் ஒரெட்டு ஸ்கூட்டர்லயே போயி பாத்துட்டு வந்திடறோம். நாம போயி காப்பாத்தப்போறதில்ல. ஏதோ இருக்கற கட்டைகளுக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டு வாரோம். நீங்க பேரன் சஞ்சய பாத்துக்கங்க.பால் அடுப்புக்கிட்டவே பாத்திரத்துல இருக்குது. காபி போட்டு குடிங்க. உங்களுக்குத்தான் எழவூட்டுக்கு வந்தா ஒரு வாரம் பேச்சே வராதே” என ஒரே மூச்சில் பேசி விட்டுச் சென்ற மனைவி பரிமளத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்!

விளையாடப் போன பேரன் வீடு வரவே, தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதித்து விட்டுத் தனது அறைக்குள் சென்று இரண்டு தலையணைகளை ஒன்றாக வைத்து, அதில் முற்றிலும் படுக்காதவாறு உட்கார்ந்தவாறே தலை சாய்த்துக்கொண்டார்!

சிறு வயது அனுபவ பதிவுகள் திடீரென விழித்துக்கொண்டன!

சிறுவயதில் தந்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த நாலடியார் புத்தகம் படித்த போது ‘பூக்கள் அனைத்துமே காய்ப்பதில்லை. காய்க்கும் காய்கள் அனைத்துமே பழுத்த பின்பே உதிர்வதில்லை. பெரிய காற்றடித்தால் பிஞ்சும் உதிரக்கூடும்’ எனும் நிலையாமை பற்றி சமண முனிவர்களின் கருத்துக்கள் பரமசிவத்தை பாதித்திருந்தன. அதே சமயம் உண்மை நிலையை உணர வைத்தன!

ஒரு முறை தினமும் தன் தந்தையை சந்திக்க வரும் பக்கத்து தோட்டத்து நண்பர் இறந்து விட, அவரைத் தம் தோட்டத்தருகே உள்ள மயானத்தில் எரிப்பதைப் பார்த்தவர் அடுத்த தீட்டு கழிக்கும் நாளில் சூடடக்க , பாத்தி கட்டி அன்னு வெதைச்சு அன்னறுக்கும் கறுப்பு எனும் சடங்கில் கலந்து கொண்ட போது சாம்பலைக் கையிலெடுத்து “இவ்வளவு தானா?” என தந்தையிடம் காட்ட, தந்தை அதிர்ந்து போனார்.

பெண்களையும்,குழந்தைகளையும் சுடுகாட்டுக்கு வர அனுமதிக்காத நம் முன்னோர்களின் செயல்களைப் புரிந்து கொண்டவராய், அடுத்த நொடியே மகனை அழைத்துக்கொண்டு வீடு சென்று விட்டார் தந்தை நல்ல சிவம்.

“வாழ்க்கை நிலையில்லைங்கறது தெரிஞ்சா தப்பு பண்ணத் தோணாதுங்கறது நல்லதுதான்.அதுக்காக பத்து வயசுல எழுபது வயசுக்காரங்களுக்கு இருக்கற எண்ணம் வந்தா இல்லற வாழ்க்கை இனிக்காது. நீ முதல்ல உம்பட வயசுள்ளவங்களோட பழகு. ஒவ்வொரு நாளையும் சந்தோசமா கடத்து” என தந்தை சொன்ன மந்திரச்சொற்கள் காதில் ஒலித்தாலும், பசுமரத்தாணி போல் சிறுவயதில் பதிந்த மனப்பதிவுகளை அழிக்க இயலாமல் திணறுவார்!

வேலை கிடைத்தவுடன் திருமணமாகி விட, வேலை குடும்பமென ஓய்வின்றி இருந்த நிலையில் அனைத்தையும் மறந்து மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ்ந்தாலும் உறவில், நட்பில் துக்கச்செய்தி வந்து விட்டால் கவலையில் ஆழ்வதோடு, வாரக்கணக்கில் யாரோடும் பேசாமல் இருப்பார்!

‘இளைய வயதுள்ளவர்களும் விதி முடிந்தால் இறக்கும் நிலையில், நீண்ட நாட்கள் உயிரோடு வாழ்வது கூட ஒரு சொத்து, வரம்’என தோன்றியது.

மனைவி சொல்லிச்சென்றதிலிருந்து ‘இனி மனம் இறப்பையே அடிக்கடி சிந்திப்பதை தடுக்க வேண்டும், தவிர்க்க வேண்டும். இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என புதிய சிந்தனை தோன்றியது.

‘ஆசையும் ஒருவகையில் நம் உடலை இயங்கத்தூண்டும் கருவிதான். பேராசை தான் கூடாது’ என எண்ணியவர் வெடித்துப்போன பேராசைப் பஞ்சுகளை ஒதுக்கி விட்டு, ஆசைப் பஞ்சுகளை மட்டும் ஈர்த்து மனதுள் வைத்துக்கொண்டார்!

தொண்ணூறைக் கடந்து மகிழ்வுடன் இருக்கும் மனிதர்களைப்போல, நற்சிந்தனைகளுடன் இருந்திட வேண்டும் எனும் மாற்று சிந்தனை தோன்ற, உற்சாகம் பொங்க, கூடுதல் இனிப்புடன் காபி போட்டுக் குடித்தவர் சிறு குழந்தையின் மன நிலைக்கு மாறியவராய் பேரனை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள பூங்காவிற்கு செல்லத் தயாரானார் பரமசிவம்!

– அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி