How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு

அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? – நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு



How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருபுத்தக விமர்சனம்
மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்

கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான ஆய்வு, நுணுக்கமான ஆவணங்களுக்கு சாட்சிகளாக புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற காலத்திலிருந்து இந்திய அரசியல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. மாநிலத்தில் கடைப்பிடித்த அரசியல் மற்றும் தேர்தல் உத்திகளைத் தேசிய அளவில் முயன்று பார்க்கவும், சர்ச்சைக்குரிய ‘குஜராத் மாடல் வளர்ச்சியை’ தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கவும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மோடிக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.

மூன்று பாகங்களாக உள்ள இந்தப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் ஆட்சியை வென்றெடுக்க மோடி கையாண்ட உத்திகளை ஜாஃப்ரெலோட் அலசியிருக்கிறார். மோடியின் ஆவேசமான சொல்லாட்சி, ஆத்திரமூட்டும் சொற்களஞ்சியம், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தகவல்தொடர்பு பாணி, எவ்வித தடையுமின்றி போட்டியாளர்களை – குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை – பரம்பரை, மேல்தட்டினர், ஊழல் நிறைந்தவர்கள், செயல்திறனற்றவர்கள் என்று விமர்சித்தது போன்றவை 2014, 2019 பொதுத்தேர்தல்களில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன. அரசியல் விளையாட்டின் புதிய ஜனரஞ்சகவாதி என்று கருத்துரையாளர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினர்.

இந்திராகாந்தி மட்டுமே ஜனரஞ்சகவாதி என்று அழைக்கப்படக்கூடிய ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்த புகழ்பெற்ற கூட்டணி அமைப்பைத் தகர்த்து, அவர் ஒரு தேசியத் தொகுதியை 1971ஆம் ஆண்டில் உருவாக்கினார். எதிர்ப்பாளர்கள் அவரைப் பாராட்ட, ஆதரவாளர்கள் அவரது கால்களில் விழுந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பின் பலத்த ஆதாரமாக இருந்து வந்த பிராந்திய அளவிலான மேல்தட்டினர் அதற்குப் பிறகு பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பலதரப்பட்ட நலன்களுக்கான கூட்டணி என்பதிலிருந்து, தர்பார் என்று சொல்லும் அளவிற்கு கட்சி மாற்றப்பட்டது.

இதேபோன்ற ஒன்றே மோடி குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற போதும் நடந்தது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், தலைவர் என்பவர் கூட்டத்திற்கு அடிபணிந்தவராக இருக்க வேண்டும் என்றே நம்பி வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே மோடியிடமிருந்த தலைவர் சார்ந்த அரசியலை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஜீன்ஸ் அணிந்த நவீன இளம் பெண்கள், ஆண்களைக் கொண்ட இணை ஆதரவு அமைப்பை மோடி உருவாக்கினார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பிறகு இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள். கட்சியின் வல்லமைமிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவை நிர்வகித்த அவர்கள் பொதுக்கருத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர். மோடி, அவரது அரசியலின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர்கள் தடை செய்தனர்.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருபாரம்பரியம் மட்டுமல்லாது நவீனத்துவ உலகையும் சுற்றி வருபவராக இருப்பதால் பிரதமர் வாக்காளர்களைக் கவர்கிறார் என்று ஜாஃப்ரெலோட் கருதுகிறார். உண்மையில் இந்த விவரம் கவனிக்கத்தக்கது. அயோத்தி கோவிலின் துவக்க விழா, லுடியன்ஸ் தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விழாக்களில் மோடி எவ்வளவு எளிதாக விரிவான மதச் சடங்குகளுக்குத் தலைமை தாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர் அதே அளவிற்கு ஸ்மார்ட் போன் துவங்கி சமூக ஊடகங்கள், விண்வெளி, சந்திரன் வரையிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முதல் அரசியல்வாதியாக அவரே இருக்கிறார். ஆர்வமுள்ள, ஆனால் அதிருப்தியுடனிருந்த கோபமான இளைஞர்கள், யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இருபிரிவினரை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களாக அடையாளம் கண்டு அணுகிய முதல் அரசியல்வாதியாகவும் அவரே இருந்தார். தாராளமயமாக்கப்பட்ட இந்தியா வழங்கியிருந்த பலன்கள் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்காமல் போனதால் கண்டு கொள்ளப்படாதவர்களாக தங்களை உணர்ந்தவர்களாக அந்த இரு பிரிவினரும் இருந்தனர்.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருமோடியின் திட்டம் மிகுந்த பேராசை கொண்டது. ஒன்றுபட்ட ஹிந்து தேசம் என்ற அவரது கனவுத் திட்டத்திற்கு சாதிப் பிளவுகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றை நடுநிலையாக்க முயன்றார். அவரது அரசியலின் இந்தப் பரிமாணமே ஜனரஞ்சகம் என்ற வில்லில் ‘தேசியவாத ஜனரஞ்சகம்’ என்ற புதியதொரு நாணை ஏற்றியது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். பெரும்பாலும் ஜனரஞ்சகவாதிகள் நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை, செயல்படாதவை என்று தாக்கி, ஊடகங்கள், குடிமை சமூக அமைப்புகள் போன்ற இடைநிலை நிறுவனங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, நேரடியாக மக்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், தங்களுக்குச் ‘சொந்தமில்லை’ என்று கருதப்படுகிற சமூகப் பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கருத்தை அவர்கள் ஒன்று திரட்டுகிறார்கள். மோடி இத்துடன் ஹிந்து தேசத்தை உருவாக்குவது என்ற ஜனரஞ்சகத்திற்கான நான்காவது பரிமாணத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தை ஜாஃப்ரெலோட் முன்வைக்கிறார். அதன் விளைவாக சிறுபான்மையினர் அவர்களுக்கான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், இனரீதியான ஜனநாயகம் நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருஇறுதியாக, மக்கள்நலன் அரசு என்பதையும் மோடி அரசு கைவிட்டிருக்கிறது. ஆய்வறிஞர்கள் அந்த மாற்றை ‘தொழில்முனைவு அரசு’ என்பதாகக் குறிப்பிடுகின்றனர். வேலைக்காக மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது; பக்கோடா விற்க வேண்டி வந்தாலும், தங்களைத் தாங்களே அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம். முதலாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சமூக உரிமைகளை மக்களுக்கு வழங்குகின்ற பல கொள்கைகளை இயற்றித் தந்தது. தற்போதைய ஆட்சியிலோ கட்டுப்படியாகாத விலையில் இருக்கின்ற எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குதல், தண்ணீர் பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தல், சில வீடுகளை வழங்குதல் என்று சில சலுகைகள் மட்டுமே ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் குடிமக்களுக்கு அவர்களுடைய சமூக உரிமைகளாக வழங்கப்படவில்லை. மாறாக அவை சமூகக் கொள்கையாக அல்லது பிரதமரின் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரிலேயே அவையனைத்தும் நடந்து வருகின்றன.

மொத்தத்தில் அரசியல் விளையாட்டின் விதிகள் அனைத்தையும் மோடி மாற்றி எழுதியிருப்பதாக ஜாஃப்ரெலோட் கூறுகிறார். இந்திய அரசியல் எப்போதுமே தேர்தல் போட்டிகள் மற்றும் நிறுவனங்களால் மையவாத நிலைக்கே தள்ளப்படும் என்றிருந்த நம்பிக்கைக்கு மோடி சவால் விடுத்தார். இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் கூட்டணி அரசியல் சார்ந்தே உள்ளது என்ற கருதுகோளை மக்களவையில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவின் திறன் நிராகரித்தது.

மோடி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவிற்குப் பலன் அளித்ததா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது; அது குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் பொதுமுடக்கத்தை அறிவித்த பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து தங்கள் கிராமங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். சுமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, ரத்தம் வடியும் கால்கள், தண்ணீரின்றி வறண்டு போன தொண்டைகளோடு இருந்ததைத் தவிர ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவைக்கான இடைவிடாத உழைப்பில் வேறு எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு2021ஆம் ஆண்டின் கோடைக்காலம் மேலும் பல சோகங்களைத் தந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையால் வாடிய தலைநகரின் தெருக்களில் மக்கள் ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறி இறந்தனர்; தகன அறைகளும், புதைப்பதற்கான குழிகளும் பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பல குடும்பங்களால் தங்கள் அன்புக்குரியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கைக்கூட நடத்த முடியவில்லை; சிறு குழந்தைகள் அனாதைகளாகினர். ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு தெருவையும் துயரம் சூழ்ந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் அரசாங்கத்திற்கான சிறுதடயமும் காணப்படவில்லை. தன்னைக் குறித்த சுய-பிரதிநிதித்துவம் அரசாங்கத்திடம் இருந்த போதிலும், வறுமை, சமத்துவமின்மை, பற்றாக்குறை போன்றவற்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தவிக்க நேர்ந்தது என்று ஜாஃப்ரெலோட் சுட்டிக் காட்டுகிறார். தற்போதைய அரசாங்கத்தால் புலம்பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பெருத்த ஆரவாரத்துடன் துவக்கி வைக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்த தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை.

அதிகாரத்தின் உச்சமட்டத்தைக் கைப்பற்றி, அதை தனக்கென்று ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு, புதிய லுடியன்ஸ் தில்லி மேல்தட்டினரின் ஆட்சியைத் துவக்கி வைத்திருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கதையை ஜாஃப்ரெலோட் நமக்கு இந்தப் புத்தகத்தின் வழியாக கூறுகிறார். அவர் அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார். சில சமயங்களில் வாசகர் முக்கியமானவற்றைத் தவற விடாத அளவுக்கு அவருடைய ஆய்வு முழுமையானதாக இருக்கிறது. காரணிகள் x, y அல்லது z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நம்மால் அடிக்கடி ஆச்சரியப்பட முடிகிறது என்றாலும் இந்த புத்தகம் நல்ல வாசிப்பிற்கானதாக இருக்கிறது. அந்த காரணிகளுக்கு இடையேயான தொடர்பை நாமே எப்போதும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த மதிப்பாய்வை முடிப்பதற்கு முன்பாக இரண்டு சிறிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்தி சொற்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக ஆசிரியர் யாரிடமாவது ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் முஸ்லீம்களை வேறுமாதிரி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற முழக்கம் ‘ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்த பச்சீஸ் என்பது ஐம்பது அல்ல, அது இருபத்தைந்து. அறுபதாம் பக்கத்தில் இந்தியர்கள் காலா நாயக் அல்லது கருப்பு ஹீரோவின் பாலிவுட் படத்தை விரும்புகிறார்கள் என்று ஜாஃப்ரெலோட் எழுதுகிறார். சரியான சொல் கல்நாயக். 1993ஆம் ஆண்டு அதே பெயரில் சஞ்சய்தத் வில்லத்தனம் கொண்ட ஹீரோவாக நடித்த திரைப்படம். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பர் புத்தகத்தின் நூற்றியேழாவது பக்கத்தில் கிரண் தாப்பர் என்று இடம் பெற்றிருக்கிறார்.

இரண்டாவதாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இயக்கம் பற்றி ஜாஃப்ரெலோட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. குடிமை சமூக அமைப்புகள் மீதான அடக்குமுறைகள் இருந்த போதிலும், 2019 டிசம்பர் மத்தியிலிருந்து 2020 பிப்ரவரி தொடக்கம் வரையிலும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வை நாம் கண்டோம். பாரபட்சமான அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் ஒன்றுகூடி நாடு முழுவதும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களிடமிருந்த ஒரே ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. அரசியலமைப்புச் சட்டமும் அதன் முகப்புரையும் சட்ட ஆவணம் என்பதிலிருந்து அரசியல் ஆவணமாக அப்போது மாறியிருந்தது.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஓராண்டிற்கும் மேலாக நாடு முழுவதிலிருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். அவசர அவசரமாக விவசாயத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். இவை மோடி இந்தியா குறித்த அதிருப்தியால் தூண்டப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மட்டுமாகவே இருக்கின்றன.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருஎந்த அளவிற்கு ஒரு தலைவர் வசீகரமானவராக இருந்தாலும், அதனால் எந்தவொரு ஆட்சியும் கேள்விக்குள்ளாகாமல் இருக்கப் போவதில்லை. ஜாஃப்ரெலோட் சுட்டிக்காட்டுவதைப் போல் வசீகரம் என்பது தார்மீகரீதியாக நடுநிலையானது. ஹிந்து தேசியவாதத்தின் ஒருங்கிணைப்பு குறித்த பாடத்தை சமகால இந்தியா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ‘மதத்தை நம்பிக்கை’யாக அல்லது ‘மதத்தை அரசியலாக’ என்று எத்தனை குடிமக்கள் வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் அது நமக்குச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் 2019ஆம் ஆண்டில் அறுபத்தியிரண்டு சதவிகித குடிமக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.How did Narendra Modi reach the pinnacle of power? Article in tamil translated by tha chandraguru. அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? - நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுருஅரசியல் வரலாறு என்பது அதிகாரத்தின் கதையாக மட்டுமே இருப்பதில்லை. அது அதிகாரத்திற்கு எதிரானதொரு கதையாகவும், மேலாதிக்க அமைப்புகளுக்கிடையிலான போட்டியாகவும் இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டின் மற்றொரு புத்தகத்திற்கான மற்றுமொரு கதையாக அது இருக்கக்கூடும்.
https://thewire.in/books/christophe-jaffrelot-modis-india-review
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

All the farmers have got is pain and suffering Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு



All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே
தேவிந்தர் சர்மா உணவு மற்றும் விவசாய நிபுணர் ட்ரிப்யூன் இந்தியா

1995இல் உலக வர்த்தக அமைப்பு (WTO) தோன்றி சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விவசாயியை ஐரோப்பிய விவசாயியோடு ஒப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுத வேண்டுமென்று என்னை லண்டன் தி ஈக்காலஜிஸ்ட் பத்திரிகை அணுகியது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் இருக்கின்ற குறைந்த உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு சர்வதேச வர்த்தகம் தொடங்கிய பிறகு இந்திய விவசாயி எந்த அளவிற்குப் பொருளாதார ரீதியாக ஆதாயமடைந்துள்ளார் என்பதைக் கண்டறிவதே அதன் நோக்கமாக இருந்தது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் விவசாயிகளுக்கு அளிக்கும் மகத்தான வாய்ப்புகளைச் சொல்லி அதில் சேர வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்துவதற்காக விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி முக்கிய பொருளாதார வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட பொதுவான கருத்தாக அது இருந்தது. அந்த ஒப்பந்தத்தால் உருவாகப் போகின்ற மிகப் பெரிய மாற்றத்தால் விவசாய ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், விவசாயிகளின் வருமானம் அதனால் அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் இந்திய விவசாயத்தின் எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றி விட முடியும் என்று சொல்லும் அளவிற்கு பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் சென்றிருந்தார். அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாது அவ்வாறான தொடர்பிற்கு எந்தவொரு வாய்ப்பும் இருக்கவில்லை என்பதால் இந்திய விவசாயியை ஐரோப்பிய மாட்டுடன் ஒப்பிட்டே நான் அந்தக் கட்டுரையை முடிக்க வேண்டியதாயிற்று.

All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 செப்டம்பரில் வெளியாகியுள்ள கிராமப்புற இந்தியாவில் விவசாயக் குடும்பங்களின் வருமானங்கள் குறித்த தேசிய புள்ளிவிவர அமைப்பின் (NSO) அறிக்கை விவசாயிகளின் இருண்ட பக்கத்தை நமக்கு காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கான நிலை மதிப்பீட்டு ஆய்வு (எஸ்ஏஎஸ் – SAS) 2018-19இல் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையில் விவசாயிக்கும் ஒருவருக்கும் பசுவுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை என்றாலும், சராசரி இந்திய விவசாயி ஒருவர் ஒரு தொழிலாளியைக் காட்டிலும் மோசமான நிலையிலேயே இருக்கிறார் என்பதாக அது சொல்லும் சேதி நம்மை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் விவசாயிகள் பயிர் சாகுபடியைக் காட்டிலும் தங்களுடைய கூலிகளிலிருந்தே அதிகமாகச் சம்பாதித்து வருகிறார்கள். மலிவான உழைப்பு நகரங்களுக்குத் தேவைப்படுவதால், கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடப்பெயர்வைத் துரிதப்படுத்துவதற்காக விவசாய வருமானத்தை வேண்டுமென்றே குறைவாக வைத்திருக்கும் பொருளாதார வடிவமைப்பை மட்டுமே நாடு பெற்றிருக்கிறது.

All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

2012-13இல் நிலை மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டபோது ​​ஒரு விவசாயக் குடும்பம் தன்னுடைய 48% வருமானத்தை பயிர் சாகுபடியிலிருந்து ஈட்டுவதாகத் தெரிய வந்தது. அதுவே 2018-19 கணக்கெடுப்பின் கீழ் 38% என்று குறைந்து விட்டது. அதே காலகட்டத்தில் கூலியின் மூலம் மட்டும் விவசாயிகளுக்கு கிடைக்கின்ற விவசாய வருமானத்தின் பங்கு 32% என்பதிலிருந்து 40% என்பதாக அதிகரித்திருக்கிறது. விவசாயிகளின் சராசரி வீட்டு வருமானத்தில் கூலி என்பது பெரும்பகுதி என்றாகியுள்ளது. அது வரப்போகும் ஆண்டுகளிலும் நம்பிக்கையுடன் தொடரவே போகிறது. ஒரு விவசாயக் குடும்பத்திற்கான மொத்த மாத வருமானம் ரூ.10,218 என்பதாக ‘செலுத்தப்பட்ட செலவுகள்’ என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டு மாதத்திற்கு ரூ.6,426 என்றிருந்த மாத வருமானத்துடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்திற்கு ஏற்றவாறு இந்த வருமானம் பெயரளவில் 16% மட்டுமே அதிகரித்திருக்கிறது. 2018-19இல் ‘செலுத்தப்பட்ட செலவுகள் மற்றும் கணக்கிடப்பட்ட செலவுகள்’ அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.8,337 என்று கணக்கிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வருகின்ற உள்ளீடுகள், ஊதியம் பெறாத உழைப்பு, சொந்த இயந்திரங்கள், சொந்த விதைகள் போன்றவை ‘கணக்கிடப்பட்ட செலவுகள்’ என்பதைக் குறிக்கின்றன.

All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு சராசரி விவசாயக் குடும்பம் 2018-19ஆம் ஆண்டில் ரூ.3,798 சம்பாதித்தது. உண்மையில் இந்தப் பணத்தை பணவீக்கத்திற்காக சரிசெய்யும் போது, ​​சாகுபடியின் வருவாய் 2012-13 மற்றும் 2018-19க்கு இடையில் 8.9% அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு நாளின் அடிப்படையில் அந்த வருவாயைப் பிரித்து பயிர் சாகுபடியின் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு நாளைக்கு 27 ரூபாய் என்றிருப்பதாக செய்தித்தாள் ஒன்றில் சுவாரஸ்யமான பகுப்பாய்வு வெளியிடப்பட்டது. அந்த விவசாயியைக் காட்டிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை பார்க்கின்ற தொழிலாளி ஒருவர் கூட கூடுதலாகவே சம்பாதிக்கிறார். விவசாயிகள் உண்மையில் விவசாயம் செய்வதற்காகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நீண்ட காலமாக நான் சொல்லிக் கொண்டிருப்பதையே இந்தச் செய்தி நிறுவியிருக்கிறது. பண்ணையில் பாலின் விலை லிட்டருக்கு சுமார் முப்பது ரூபாய் என்றிருக்கும் நிலையில் சாகுபடியின் மூலம் கிடைக்கும் வருமானம் சராசரியாக ஒரு நாளைக்கு சராசரியாக பாலைத் தருகின்ற பசுவிடமிருந்து கிடைக்கின்ற வருவாயை விட மிகக் குறைவாகவே உள்ளது.

விவசாய வருமானம் குறைவாக இருப்பதால் கடன் பெறுவதற்கான முயற்சிகள் அதிகமாகின்றன. பல ஆதாரங்களில் இருந்து விவசாயிகள் பெற்றுள்ள சராசரி விவசாயக் கடன் 2012-13ல் ரூ.47,000 என்றிருந்த நிலை மாறி 2018-19இல் அந்தக் கடன் ரூ.74,100 என்று அதிகரித்துள்ளது. பாதி விவசாயக் குடும்பங்களில், துல்லியமாகச் சொல்வதென்றால் 50.2% குடும்பங்கள் நிலுவையில் உள்ள கடன்களுடனே வாழ்ந்து வருகின்றன. நிலுவையில் உள்ள விவசாயக் கடன்கள் மிசோரம் மாநிலத்தில் 709% அதிகரித்துள்ளது. அதைத் தொடர்வதாக வடகிழக்கில் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் உள்ளன.
மிக அண்மையில் 2021 மார்ச் மாத இறுதி வரையில் நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன்கள் ரூ.16.8 லட்சம் கோடி என்ற அளவில் இருப்பதாக பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் (1.89 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது.

All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

ஏறக்குறைய 77% விவசாயக் குடும்பங்கள் சுயதொழில் செய்பவர்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, 70.8% பேரிடம் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் 9.9% பேரிடம் மட்டுமே இருக்கிறது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஒரு குடும்பத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து 4000 ரூபாய்க்கு மேல் பெறுகின்ற குடும்பமே ஒரு விவசாயக் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

All pain no gain for farmers Article by Dhevindar sharma தேவிந்தர் சர்மாவின் விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே

கிராமப்புறக் குடும்பங்களில் பத்து ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் 0.2% மட்டுமே இருப்பதால், விவசாயிகள் நடத்தி வருகின்ற போராட்டங்கள் பெரும் விவசாயிகளின் வேலை என்பதாகக் குற்றம் சாட்டி பறை சாற்றப்பட்டு வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் அடுத்தடுத்த அரசாங்கங்களால் விவசாயத்தை விட்டு மக்களை வெளியேற்றுவதற்காகச் செயல்படுத்தப்பட்டுள்ள கொள்கை உந்துதலால், பெரும் அல்லது சிறிய விவசாயிகளுக்கு உரிய சரியான வருமானத்தை மறுப்பது நிகழ்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதை உலக வங்கி/ஐஎம்எஃப் வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து நகரமயமாக்கலின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், விவசாயத்தை வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருப்பதால் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறும் சூழ்நிலைகள் உருவாகும் என்ற எண்ணமும் இருந்து வருகிறது. 2018-19ஆம் ஆண்டின் நிலை மதிப்பீட்டு ஆய்வு முடிவுகளை நகர்ப்புற இடப்பெயர்வு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான கொள்கை மாற்றங்களுக்காக முக்கிய பொருளாதார வல்லுனர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால் அதுகுறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

இதை தலைகீழாக மாற்றிட வேண்டும். இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2020-21ஆம் ஆண்டில் 308.65 மில்லியன் டன் என்று மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. தானிய உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், வேளாண் வருமானம் கீழ்நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. 2000-02 துவங்கி இருபது ஆண்டு காலத்திற்கு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) தயாரித்துள்ள தயாரிப்பாளர் மானிய மதிப்பீடு, வியட்நாம், அர்ஜென்டினாவுடன் இந்தியாவும் சேர்ந்து மூன்று நாடுகள் விவசாயிகளுக்கு எதிர்மறையாக வரி விதிப்பதாக நமக்குச் சொல்கிறது. இந்தியா மொத்த வேளாண் வரவுகளில் ஏறக்குறைய -5% (மைனஸ் ஐந்து சதவீதம்) வரையிலும் தனது விவசாயிகளிடம் வரியாக வசூலித்து வருகிறது.
அரசாங்கம் உறுதியளித்துள்ள மத்திய சட்டங்கள் விவசாய நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்பதை விவசாயிகள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். வேளாண் வருமானக் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுவதன் மூலம் மட்டுமே விவசாய வருவாயை ஈடுசெய்யக் கூடிய வகையில் இருந்து வருகின்ற விவசாயம் அல்லாத கூலி இல்லாமல் பொருளாதார ரீதியாக சாத்தியமான நிறுவனமாக விவசாயமானது மாறும் என்பதால் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுவதையே விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
https://www.tribuneindia.com/news/comment/all-pain-no-gain-for-farmers-311197

நன்றி: ட்ரிப்யூன் இந்தியா

The importance of the Muzaffarnagar Farmers Rally Peoples Democracy Article Translated By Sa. Veeramani. Book Day, Bharathi Puthakalayam

முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவம்



சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய இயக்கத்தில் வரலாற்று முத்திரை பதிக்கும் விதத்தில் மாறியிருக்கிறது. இப்பேரணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் உத்தரப்பிரதேசம், ஹர்யானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து கணிசமான அளவிற்கும் விவசாயிகள் வந்து பங்கேற்றார்கள்.

விவசாயிகள் மகாபஞ்சாயத்திற்கான அறைகூவல், ஆகஸ்ட் 26-27 தேதிகளில் சிங்கூ எல்லையில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தேசிய சிறப்புமாநாட்டில் விடுக்கப்பட்டது. மகாபஞ்சாயத்து உத்தரப்பிரதேசத்திலும், உத்தர்காண்டிலும் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அங்கே ஆட்சிபுரியும் பாஜக அரசாங்கங்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. சிறப்பு மாநாடு வரும் செப்டம்பர் 25 அன்று பாரத் பந்த் அனுசரித்திடவும் (பின்னர் அது செப்டம்பர் 27 என மாற்றப்பட்டது) அறைகூவல் விடுத்தது.

தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஒன்பது மாதங்களாக நடைபெற்றுவரும் விவசாய இயக்கத்தின் விரிவான அம்சங்களைக் காட்டியது. இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சி2+50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் போன்ற இதர உழைக்கும் மக்கள் பிரிவினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க – விவசாயிகள் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்திடக் கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இவை பிரதிபலித்தன.

Hundreds of thousands of Indian farmers rally against farm laws | Reuters

முசாபர்நகர் பேரணி விவசாயிகள் பெரும்திரளாகக் கலந்து கொண்டதால் மட்டுமல்லாமல், மற்றுமொரு அரசியல் முக்கியத்துவத்தாலும் குறிப்பிடத்தக்கதாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2013இல், இதே முசாபர்நகர் மாவட்டத்தில்தான் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் வகுப்புவாதப் பிளவினை உருவாக்கியது, குறிப்பாக இங்கே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாட் இனத்தினர் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்படுத்தியது. இதனை பாஜக 2014 மக்களவைத் தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தலில் முழுமையாக வெற்றிபெற்றது. இவ்வாறு மதவெறித் தீயை உருவாக்கி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தியது, ஹர்யானா மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்திலும்கூட ஒரு “மகா பஞ்சாயத்து” நடந்தது. 2013 செப்டம்பர் 7 அன்று முசாபர்நகர் அருகே சிகாரா கிராமத்தில் நடந்த அந்த மகா பஞ்சாயத்தில் நரேஷ் திகாயத், ராகேஸ் திகாயத் போன்ற கிராமக் கட்டப்பஞ்சாயத்து (khap leaders) தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ரானா போன்றவர்களும், சாமியார் பிராச்சி போன்றவர்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி உரையாற்றினார்கள். இதன் காரணமாக அப்போது முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித்தீ விரிவான அளவில் இவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.

ஆனால் இப்போது முசாபர்நகரில் நடைபெற்றுள்ள இந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்து முற்றிலும் வித்தியாசமானதாகும். சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராகேஸ் திகாயத், பேசுகையில் மக்களிடையே மதவெறி அடிப்படையில் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்றும் பிளவினை ஏற்படுத்தும் மதவெறியர்களின் உரைகளுக்கு இரையாகிவிடக்கூடாது என்று அறிவித்தார்.

பேரணியில், பெரும் திரளாக முஸ்லீம்கள் பங்கேற்றதைப் பார்த்தபின், உரைநிகழ்த்திய ஒவ்வொரு பேச்சாளரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக-விற்கு எதிராக விவசாயிகள் அனைவரும் தங்கள் மதமாச்சர்யங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டுநின்று போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.

முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் ‘புனித ஜிகாத்’ போன்ற சட்டங்களைக் கொண்டுவந்துள்ள ஆதித்யநாத் அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் வெறிபிடித்த மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு முற்றிலும் முரணான விதத்தில் அனைத்து விவசாயிகளும் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் ஒன்று சேர்ந்திருப்பதை இந்த மகாபஞ்சாயத்து நன்கு வெளிப்படுத்தியது. இவ்வாறு இந்த மகாபஞ்சாயத்து, பாஜக ஆட்சியாளர்களின் பிளவுவாத மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறித்தனமான அரசியலுக்கு சவால்விடும் விதத்தில் அமைந்திருந்தது.

Bhakyu Mahapanchayat In Muzaffarnagar, Farmers Agitated Against Administration - मुजफ्फरनगर: भाकियू की महापंचायत में शासन, प्रशासन के खिलाफ भड़का किसानों का आक्रोश, देखें ...

விவசாய இயக்கம் தன்னுடைய வீர்யத்தை இழந்துவிடவில்லை என்பதையும், அதன் நலன்களைத் தீவிரமான முறையில் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் ஹர்யானாவில் நடைபெற்ற நிகழ்வுகளும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. ஹர்யானாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம் கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகளுக்கு எதிரகப் பல்வேறுவிதங்களில் நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக, காவல்துறையினரின் முற்றுகைகள், தடியடிப்பிரயோகங்கள், கண்ணீர்ப்புகை குண்டுவீச்சுகள் வீசியபோதிலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளபோதிலும் அவற்றையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து தீவிரமானமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே ஆட்சி செய்யும் கட்டார் அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தை நசுக்குவதற்கு எண்ணற்ற விதங்களில் சூழ்ச்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கை ஒவ்வொன்றும், விவசாயிகளின் உணர்வுமிக்க கிளர்ச்சிப் போராட்டங்களின் மூலமாக முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 28 அன்று கர்னாலில் போராடிய விவசாயிகள் மீது ஏவப்பட்ட தடியடிப் பிரயோகம் கொடுங்கோன்மையின் புதிய உச்சத்திற்கே சென்றது. தாக்குதலில் காயங்களுக்கு ஆளான சுஷில் கஜல் என்னும் விவசாயி, அக்காயங்களினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர்நீத்தார். ஆயுஷ் சின்கா என்கிற ஐஏஎஸ் அதிகாரியான கோட்டாட்சித் தலைவர், போராடும் விவசாயிகளின் “மண்டையை உடையுங்கள்” என்று கூறியது வீடியோவில் பதிவாகி, மக்கள் மத்தியில் வைரலாகப் பரவி, விரிவான அளவில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முசாபர் நகர் பேரணி நடைபெற்று இரு நாட்களுக்குப்பின்னர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு, கர்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தின்முன்பு பேரணியாகச் சென்று, மேற்படி ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கோரியும், விவசாயிகளுக்கு எதிராக தடியடிப் பிரயோகம் நடத்திய காவல்துறையினர்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரியும், முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை, மோடி அரசாங்கத்திற்கு எதிராக அமைந்துள்ள விரிவான எதிர்க்கட்சிகளின் மேடையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. 19 கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை செப்டம்பர் 20க்கும் 30க்கும் இடையே நடைபெறவுள்ள கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளே முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதேபோன்று விவசாயிகளை விரிவான அளவில் அணிதிரட்டி செப்டம்பர் 27 பாரத் பந்த்தை மகத்தான அளவில் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (செப்டம்பர் 8, 2021)
(தமிழில்: ச. வீரமணி)

விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன?  – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன?  – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு

சீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள் ‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை தருபவையாக, அவமானகரமானவையாக இருந்தன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடந்திருக்கும் அந்த துரதிர்ஷ்டவசமான…
விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?  – தேவிந்தர் சர்மா, உணவு மற்றும் வேளாண் நிபுணர் | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?  – தேவிந்தர் சர்மா, உணவு மற்றும் வேளாண் நிபுணர் | தமிழில்: தா.சந்திரகுரு

ஷான் டைவர் அயர்லாந்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றின் மேலாளர். அவருடைய பண்ணையில் 240 ஆடுகள் இருக்கின்றன. கடந்த மாதம் அவர் 455 கிலோ அளவிற்கான கம்பளியை 67 யூரோவிற்கு விற்றிருந்தார். ‘இந்த 240 ஆடுகளிலும் கம்பளியை வெட்டி எடுப்பதற்கு மட்டும்…
என்னுடன் நிற்க: ஒரு விவசாயியின் பாடல் | ஆங்கிலத்தில் : அலோக் பல்லா | தமிழில் : வசந்ததீபன்

என்னுடன் நிற்க: ஒரு விவசாயியின் பாடல் | ஆங்கிலத்தில் : அலோக் பல்லா | தமிழில் : வசந்ததீபன்

பணக்கார நீதிமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் நிற்கிறார்கள் செங்கல் சுவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் முள் கம்பிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் போலீஸ் தடியடிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள். நபிமார்களும் பார்வையாளர்களும் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள் ரவிதாஸ், கபீர் மற்றும் ஃபரித் ஆகியோர்…
புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன – ஜெய்மல் ஷெர்கில் | தமிழில்: தா.சந்திரகுரு

புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன – ஜெய்மல் ஷெர்கில் | தமிழில்: தா.சந்திரகுரு

இரட்டை வேடங்கள், கதை திருப்பங்கள் என்றிருந்த பழைய பாலிவுட் திரைப்படங்களைப்  போலவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் அந்த குறிப்பிட்ட சட்டங்களுக்குடன் மட்டுமே பொருந்துபவையாக இருக்கவில்லை. அந்த சட்டங்களுக்குள் இன்னும் கூடுதலான, மிகவும் மோசமான அம்சங்கள் பொதிந்திருக்கின்றன. 1995ஆம்…
போராடும் விவசாயிகளும் ‘காகித விவசாயிகளும்’ – கோபால் குரு | தமிழில்: தா.சந்திரகுரு 

போராடும் விவசாயிகளும் ‘காகித விவசாயிகளும்’ – கோபால் குரு | தமிழில்: தா.சந்திரகுரு 

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து, விவசாயிகள் என்பதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் விவசாயிகள் என்ற வார்த்தையைச் சுற்றித் தெளிவில்லாத வளையத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளின் உண்மைத்தன்மையை மறுக்க முற்படுகின்ற அவர்கள் உண்மையான…
‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்?’  – கொந்தளித்த விவசாயிகள் | அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா | தமிழில்: தா.சந்திரகுரு

‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்?’  – கொந்தளித்த விவசாயிகள் | அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா | தமிழில்: தா.சந்திரகுரு

2021 ஜனவரி 26 செவ்வாயன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி இது வரையிலும் தேசிய தலைநகரின் பகுதிகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றிருந்த பகுதிகளுக்கு ஊடகங்களின் ஒட்டுமொத்த பார்வையை மாற்றியமைத்தது. மிகவும் நெருக்கமான மக்கள் குடியேற்றங்கள், வளைந்து நெளிந்து செல்கின்ற குறுகிய…