Movie Review: Jivan Sandhya Marathi Movie Review By Era. Ramanan. திரை விமர்சனம் ஜீவன் சந்தியா இரா. இரமணன்

திரை விமர்சனம்: ஜீவன் சந்தியா – அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? – இரா. இரமணன்




நவம்பர் 9ஆம் தேதி வெளிவந்துள்ள மராத்தி மொழிப் படம். தீபக் பிராபகர் மன்டாடே எழுதி இயக்கியுள்ள முதல் படம். அசோக் சராப்,கிஷோரி சஹானே, சமீர் தர்மதிகாரி, ருசிதா ஜாதவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர் ஜீவன் அபயங்கர். ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். தன் மகன் அங்கூரை சிரமப்பட்டு வளர்த்து நல்ல பணியில் அமர உதவியிருக்கிறார். மருமகளிடம் மிகவும் அன்பாயிருப்பவர். அவர் சந்தியா ஜோஷி எனும் பெண்மணியை சந்திக்கிறார். அவர் இள வயதிலேயே கணவனை இழந்து ஒரே மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இப்பொழுது முதுமையின் தொடக்கத்தில் தனியே இருக்கிறார். அவரது மகள் அவரிடம் பெரிய ஒட்டுதல் எதுவும் இல்லாமல் வேறு நகரில் கணவனுடன் வசிக்கிறார். அப்யங்கார், சந்தியா இடையே அன்பு ,காதல்,பற்று என்று உறவு மலர்கிறது. கேள்வி கேட்கும் மகனிடம் தங்களுக்கிடையே இருப்பது பக்தி என்கிறார். இதை அவரின் மகனும் அவளது மகளும் ஏற்காமல் எதிர்க்கிறார்கள். அங்கூரின் மனைவி பிரதீபா, அப்யங்காரின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறாள். ஆனால் அங்கூர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவுடன் வாழ்வதில் உறுதியாக இருக்கும் அப்யங்கார், குடும்பத்தை விட்டுப் பிரிந்து அவளை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். சந்தியாவின் குடியிருப்பு நண்பர்கள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
Jivan Sandhya (2021) Review: A Bit Messyஐந்தாண்டுகள் ஓடுகிறது. திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. சிகிச்சைக்கு பணம் இல்லை. சந்தியாவின் நகைகள் அனைத்தையும் விற்றும் போதவில்லை. மகள் உதவி செய்ய மறுக்கிறாள். அப்யங்காரின் மகன் உதவி செய்கிறான் -சந்தியா அவரை விட்டுப் பிரிய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் சிகிச்சை முடிந்து மகன் வீட்டிலேயே தங்க வேண்டியதிருக்கிறது. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சந்தியா சொத்தில் பங்கு கேட்பாள் என்று கூறி அவளை விவாக ரத்து செய்ய வேண்டும் என்கிறான். அவனுடைய மகிழ்ச்சிக்காக அதையும் செய்கிறேன் என்கிறார். ஆனால் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. அவரைக் கவனித்துக்கொள்ள சந்தியாவே நர்சாக வருகிறாள். சந்தியாவை அங்கூர் சந்தித்ததே இல்லை என்பதால் பிரச்சினை எதுவும் இல்லை. (தமிழ்த் திரைப்படம் ‘பாலும் பழமும்’ காட்சிகள் நினைவுக்கு வரலாம்.) மகிழ்ச்சியாக வாழ்க்கை ஓடுகிறது. அவர் இறக்கும்போது அங்கூர் சந்தியாவை தாயாக ஏற்றுக்கொள்கிறான். ஆனால் சந்தியாவும் அவருடனே இறந்துவிடுகிறாள். இப்படி படம் முடிகிறது.

இந்தக் கதையை பார்க்கும்போது பழைய திரைப்படங்கள் போல தெரியும். அது உண்மைதான். அன்புக்குக் குறுக்கே நிற்கும் சமூக நியதிகளை தூக்கி எறியும் வலுவான கதை பிற்பாதியில் செயற்கையாக மாறிவிடுகிறது. குடும்பத்தையே விட்டுவிட்டு சந்தியாவின் அன்புக்காக செல்லும் அப்யங்கார் தன்னுடைய சிகிச்சைக்காக மகன் செலவு செய்தான் என்பதற்காக அவளைவிட்டுப் பிரிவானா? விவாகரத்து செய்யவும் ஒத்துக்கொள்வானா? விவாக ரத்து தங்களது அன்பைக் குறைக்காது எனபது அவரது வாதம். கதை எதார்த்தத்திற்கும் கற்பனாவாதத்திற்கும் இடையே மாறி மாறிப் போய் வருகிறது. தந்தை தன்னை வளர்த்து ஆளாக்கியதை பாசத்துடன் நினைக்கும் மகன் அவரது சிகிச்சைக்கு அப்படி ஒரு நிபந்தனை விதிப்பானா? ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்ட தந்தையிடம் விவாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்பானா? விமர்சகர்கள் சிலர் கூறுவது போல் கதைக்கு ஒரு வில்லன் தேவைப்படுகிறான். அதை மகன் பாத்திரத்தில் செய்துவிட்டார் கதாசிரியர். அவன் மன மாற்றத்தை ஒரு புரசசாகவாது காட்டியிருக்கலாம்.

ஆனால் வசனமும் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. தான் கணவனை இழந்தவள் என்பதால் பூ வைத்துக் கொள்வதில்லை என்கிறாள் சந்தியா. (கதாசிரியர் எந்தக் காலத்தில் இருக்கிறார்?)அது தனது உணர்வுகளை புண்படுத்தும் என்கிறாள். அதற்கு ‘மலர்கள் குழந்தையைப் போன்றவை. அது யாரையாவது புண்படுத்த முடியுமா?’ என்று அப்யங்கார் கூறும் இடம்;. ‘நான் மம்தா கரேலியாக இருந்தேன். பின் சந்தியா ஜோஷியானேன். அப்புறம் சந்தியா அப்யங்கார். இப்போது மீண்டும் மம்தா கரேலி. அந்த மம்தா வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினாள். இந்த மம்தா எல்லாவற்றையும் பார்த்து விட்டாள்.’ என்று கசப்பான விரக்தி கலந்த குரலில் கூறும் இடம் இந்தியப் பெண்களின் சோகத்தை ஒட்டு மொத்தமாக சொல்லிவிடுகிறது. அப்பொழுதுதான் அப்யங்கார் தான் அவளது பழைய வாழ்க்கையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்கிறான்.

பொதுவாக பெண்ணுக்கு பெண்ணே எதிரி.மருமகளுக்கு மாமியார் அல்லது மாமியாருக்கு மருமகள் என்று சொல்வதுண்டு. இந்தக் கதையில் மாமனாரையும் மாமியாரையும் புரிந்துகொள்ளும் ஒரு அன்பான பெண்ணாக பிரதிபா என்கிற பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.

அப்யங்காராக நடித்திருக்கும் அசோக் சராப் சிறப்பாக நடித்திருக்கிறார். பக்கவாதம் வந்து பேச்சு குழறும் ஒரு மனிதனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இவர் பாடகர்,மேடை நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராம்.நம்பவே முடியவில்லை. அன்புக்கும் அதற்கு எதிரான சமூக நெருக்கடிக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதையே இதைப் போன்ற படங்கள் காட்டுகின்றன.

Ranjith Sankar's Malayalam Film Sunny Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

சன்னி (கொரோனா பின்னணியில் ஒரு புதிய முயற்சி) – இரா. இரமணன்



Ranjith Sankar's Malayalam Film Sunny Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

செப்டம்பர் 2021 வெளிவந்த மலையாள திரைப்படம். மலையாளத் திரை உலகில் இயங்கும் ஜெயசூரியா நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முக ஆளுமைகொண்டவர். இது அவரது நூறாவது படம். ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே நடிக்கும் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆவலில் தயாரித்துள்ளார். பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ நினைவுக்கு வருகிறது.

சன்னி ஒரு இசையமைப்பாளர். காதலி நிம்மியை திருமணம் செய்துகொண்டபின் பிறக்கும் குழந்தை இறந்து விடுகிறது. அந்த சோகத்தில் துபாய் சென்று அங்கு வியாபாரத்தில் பணத்தை இழந்துவிடுகிறார். அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த நேரம் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவன் மனைவி விவாகரத்து கேட்கிறார். சன்னி தீவிரமான குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இந்தியா திரும்பும் அவர் கொரோனா விதிகளின்படி ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார். குடிப்பதற்கு மது கிடைப்பதில்லை. கடன் கொடுத்தவன் மிரட்டுகிறான். ஆகவே தற்கொலை மனப்பான்மைக்கு ஆளாகிறான். காவல்துறை அவனுக்கு ஒரு மருத்துவரை ஆலோசனை கூற ஏற்பாடு செய்கிறது. அவர் அவனுடய பிரச்சினைகளை கேட்கிறார். தொட்டியில் வளரும் ஒரு செடியை பரிசாக அனுப்புகிறார். அவனுடைய இருமலுக்கு அதன் இலைகளையே மருந்தாக எடுத்துக் கொள்ள சொல்கிறார். அவன் தற்கொலை முயற்சி செய்யும்போது மேல் மாடியில் அவனைப்போலவே கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகிறாள். அவனுடைய நண்பனும் தொலைபேசியில் அவனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறுகிறான். அவனை பண விசயத்தில் ஏமாற்றிய இன்னொரு நண்பனிடமிருந்து பணத்தைப் பெற்று வட்டிக் கடனை அடைக்க அவந்தி வழக்குரைஞர் ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட இருக்கிறான். அதே சமயம் அவன் மனைவி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கிறாள். அவனுடன் மீண்டும் வாழ விரும்புவதாக மனைவி கூறுவதுடன் கதை முடிகிறது.Ranjith Sankar's Malayalam Film Sunny Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஒருவனுக்கு இவ்வளவு பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் வருமா? பிறகு அத்தனையும் ஒரே நேரத்தில் தீருமா? இந்தக் கேள்விகளை ஒதுக்கிவிட்டு கதையை தொலைபேசி உரையாடல் மூலமே நகர்த்துவதை பாராட்டலாம். ஓரிரு கதாபாத்திரங்களே திரையில் காட்டப்படுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தொலைபேசி வழியே நாம் காண்கிறோம். ஐந்து நட்சத்திர விடுதியிலுள்ள பல சொகுசு வசதிகளைக் கொண்ட அறையிலேயே கதை நகர்வதால் அந்த ஓட்டல் விளம்பரம் போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மேல்மாடியில் இருக்கும் பெண்ணின் பாத்திரம் சற்று வேறுபட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவள் ஏதோ ஒரு தகவல்தொழில் நுட்ப பணியில் இருப்பவள். ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அது சரிப்பட்டு வராததால் தனியாக இருக்கிறாள். புகை பிடிப்பவள். மாலை நேரத்தில் பிரியாணி உண்பவள். சன்னியின் இசைத் திறமையை பாராட்டுகிறாள். பிறகு விடுதியை விட்டு செல்லும்போது அவனிடம் சாதாரணமாக விடை பெறுகிறாள். வாழ்க்கையை இயல்பாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்பவள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

முதல் நாள் வரை விவாகரத்து வேண்டும் என்று கூறியவள் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தைக்காக கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாள். இது நம் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை. சில இல்லற கோபங்கள் மறக்க வேண்டியதுதானே. மறப்பதும் மறக்காதிருப்பதும் அவரவர் சூழ்நிலையும் சொந்த முடிவும்தானே? அவனுக்கு கவுன்சலிங் கொடுத்த மருத்துவர் திடீரென மாரடைப்பால் இறந்து விடுகிறார். அவனை உற்சாகப்படுத்திய மேல்மாடிப் பெண்ணும் விடைபெறுகிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளும் சூழ்நிலையின் கனத்தைக் கூட்டுகின்றன. அதே சமயம் அவனது சிக்கல்கள் ஒவ்வொன்றாக தீர்ந்து நம்பிக்கை பெறுகிறான். அவனுடைய அறைக்கு வெளியே தெரியும் கடலில் சில படகுகள் மெதுவாகவும் சில வேகமாகவும் செல்கின்றன. சிலவற்றில் ஒற்றை ஆள், சிலவற்றில் இரண்டு பேர், சில ஒரே திசையில், சில வந்த திசையிலேயே திரும்ப செல்வது என ஒவ்வொரு நாளும் காட்சிகள் விரிகின்றன. இயக்குனர் அதன்மூலம் வாழ்க்கையின் போக்குகளை உணர்த்துகிறாரோ?

கொரோனா எளிய மக்களுக்கு வழ்க்கைபாட்டை மேலும் துன்பமயமாக்கியது. மேல்தட்டு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கொரோனா கால தனிமைப்படுத்துதல் மூலமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். தனிமை, விரக்தி, தோல்வி ஆகிய சிக்கல்களில் நண்பர்கள், மருத்துவர்கள்,அக்கம்பக்கத்தார் ஆகியோரின் உதவி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்கிறார்.

Rachakonda vidyasagar's Telugu Film Nootokka Jillala Andagadu Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நூறு ஜில்லாக்களிலும் அழகியவன் – இரா. இரமணன்



இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். அவசரல ஸ்ரீனிவாஸ் என்பவர் கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். அவரே கதாநாயகன் பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். ராச்சகொண்ட வித்யாசாகர் இயக்கியுள்ளார். ருகானி ஷர்மா , தமிழ் நடிகர் ரோகினி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிஎஸ்என் என்றழைக்கப்படும் கோட்டி சூரியநாராயணா ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிகிறான். பிரி மெச்சூர் பால்டிங் எனப்படும் இளமையிலேயே வழுக்கை விழும் குறைபாடு உடையவன். அதை மறைக்க ‘விக்’ வைத்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய தந்தை இதை மட்டும்தான் தனக்கு விட்டுவைத்துவிட்டு இறந்துவிட்டார் என்று வருத்தமும் கோபமும் கலந்த உணர்வு அவனுக்கு. அவனுடைய குறைபாடு தாயார் (ரோகிணி) மற்றும் ஒரு நண்பனுக்கு மட்டும்தான் தெரியும். அவனுடைய நிறுவனத்தில் புதிதாக பணிக்கு வரும் பெண்ணுடன் காதல் மலர்கிறது. தனக்கு வழுக்கை குறைபாடு இருப்பது தெரிந்தால் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்கிற சந்தேகத்தில் அதை மறைத்து விடுகிறான். அவளிடம் சொல்லிவிடலாம் என்று சில நேரங்களில் நினைக்கிறான். ஆனால் சொல்ல தைரியம் வருவதில்லை. ஒருநாள் அவளுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் பொய் சொன்னான் என்று கூறி அவனை விட்டு விலகி வெறுக்கிறாள். பிறகு அவன் நல்ல அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நிலையில் கூட பொய் சொல்லவில்லை என்பதை அறிந்த அவள் அவனை ஏற்றுக்கொள்கிறாள்.

தன்னம்பிக்கையோடு எல்லோரையும் எதிர்கொள்ள சொல்கிறாள். அவள் பேச்சால் தைரியம் கொண்ட அவன் உண்மையான தோற்றத்துடன் அவள் வீட்டிற்கு செல்லும்போது அவளுடைய தாயார் அவனை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அவன் விரக்தியாகி அவர்களை விட்டு விலகுகிறான்.. தந்தை தனக்கு வழுக்கையை மட்டும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்; வீடு இல்லை; வசதி இல்லை என்று தாயாரிடமும் கோபிக்கிறான். எது வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்கிற இயல்பைத்தான் அவனுக்கு முன்னோர்கள் விட்டு செல்லவில்லை என்று அவன் தயார் கோபிக்கிறாள். அவன் வழுக்கையை ஒரு குறைபாடாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிறாள்.

தன்னை சந்திக்க வரும் இளவயது நண்பனுடன் பேசுவதைக்கூட தவிர்க்கிறான். இந்த வழுக்கைக்காகவா தங்கள் நட்பு குறைந்துவிடும்; அவன் எப்படி இருந்தாலும் நண்பன்தான் என்கிறான் அவன். தாயாரின் ஊக்கமும் நண்பனின் பாசமும் அவனை புது மனிதனாக்குகிறது. நிறுவனத்தில் உற்சாகமாக வேலை செய்து விற்பனையை அதிகரிக்கிறான். அவனுக்கு நடத்தப்படும் பாராட்டுக் கூட்டத்தில் தன்னுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறான். தன் தாயாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறான். வெளி மாநிலத்திற்கு பணி தேடி பிரிந்து செல்லும் காதலியையும் சந்தித்து தன் புதிய மன நிலையை சொல்லி இருவரும் இணைகிறார்கள்.

குள்ளம், குண்டு, கருப்பு போன்ற தோற்றக் குறைபாடு உடையவர்கள் பெரும்பாலான திரைப்படங்களில் கேலி செய்யப்படுவார்கள். ‘பேரழகன்’ போன்ற திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானது. இதில் ஒரு இடத்தில்கூட அப்படிப்பட்ட வசனங்களோ நிகழ்வுகளோ இல்லை. இதே குறைபாட்டை மையமாகக் கொண்ட இந்தி திரைப்படம் ‘பாலா’வில் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். பார்க்க இந்தியா டைம்ஸ் விமர்சனம். Nootokka Zillala Andagaadu Movie Review: Fun entertainer with a predictable story (indiatimes.com).

முதல் பாதி நகைச்சுவை என்கிற பெயரில் சற்று தொய்வாக உள்ளது. நகைச்சுவை என்பது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. ஜிஎஸ்என்னின் தந்தை படம் கிரேசி மோகனைப் போல இருக்கிறது. அவர் படத்தை வைத்தவர்கள் நகைச்சுவையையும் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம். விக் தயாரிக்கும் சத்தார் பாய் தாங்களும் கலைஞர்கள் தான் என்று கூறும் இடம் எதுவாக இருந்தாலும் படைப்பு படைப்பாளி என்பது மதிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறுகிறது. தன்னுடைய இளவயது நண்பனுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே தான் சிபாரிசு செய்தால் பணி கிடைக்கும் என்று தெரிந்தும் அவன் அதிகம் பேசுவான், தன்னுடைய வழுக்கை தெரிந்துவிடும் என்பதால் அவன் பொருத்தமானவன் இல்லை என்று கதாநாயகன் ஜிஎஸ்என் சொல்லிவிடுகிறான். ‘மனிதன் மகா சல்லிப்பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னது இதைப் போன்ற நிகழ்வுகளால் தானோ? அதே நண்பனின் வார்த்தைகளே அவனை புது மனிதனாக்குகிறது.

நிறுவனத்தின் உரிமையாளர் கதாநாயாகியின் கல்லூரி நண்பர் என்பதால் அவளிடம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறார். திருமணமும் செய்ய முன்மொழிகிறார். இது பாலியல் துன்புறுத்தல்(HARASMENT) என்று கூறி அவள் வேலையை விட்டு விலகிவிடுகிறாள். அவள் வேறு வேலை தேடும்போது பழைய நிறுவனத்திடம் நடத்தை சான்றிதழ்(REFERENCE) கேட்கிறார்கள். அவள் சரியாக பணி செய்ய மாட்டாள் என்று கூறுமாறு ஜிஎஸ்என்னை வற்புறுத்துகிறார் உரிமையாளர். அவன் அதை மறுத்து அவள் சிறப்பாக பணி புரிவாள் என்று கூறுகிறான். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.
நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வழுக்கை போன்ற சிறு குறைபாடே ஒருவனை இவ்வளவு தொல்லைகுள்ளாக்கும் என்றால் மற்ற குறைபாடு உடையவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படும்? சமுதாயம் எல்லோரைப்போல எல்லோரும் இருக்க வேண்டும்(CONFORM) என்கிற நியதியை வற்புறுத்துவதும் ஒரு பிரச்சினையே.

North 24 Kaatham Malayalam Movie Review By Era. Ramanan. வடக்கில் 24 காதம் - பயணம் செய்யும் மாயம் | இரா. இரமணன்

வடக்கில் 24 காதம் (North 24 Kaatham) – பயணம் செய்யும் மாயம் | இரா. இரமணன்



2013ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம். அனில் ராதாகிருஷ்ணன் மேனன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரது முதல் படமும் கூட. பஹத் பாசில், நெடுமுடி வேணு, சுவேதா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாள மொழிப் படங்களுக்கான தேசிய விருது பெற்றுள்ளது. மலையாளத்தில் காதம் என்றால் 16 கிலோமீட்டராம். தமிழில் 26கிமீ என்று தோன்றுகிறது.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி OCD (Obsessive compulsory disorder) எனும் குறைபாடு உடையவர். இவர்கள் கைகளை மீண்டும் மீண்டும் கழுவுவது, எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களைப் பெற்றிருப்பர். ஹரி கூடுதலாக யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை; யார் குறுக்கிட்டாலும் கடுமையாக கோபித்துக் கொள்கிறார். அவருடைய பெற்றோர்களும் அவரிடம் எதுவும் சொல்வதில்லை. அலுவலகப் பணியாக திருவனந்தபுரம் செல்லும்போது அந்த ரயில் பெட்டியில் ஆசிரியர் ஒருவரும் சமூக செயற்பாட்டாளப் பெண்மணி ஒருவரும் பயணிக்கின்றனர். ஆசிரியரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவலினால் அவர் பயணத்தின் பாதியிலேயே இறங்குகிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நாராயணி என்கிற அந்தப் பெண்ணும் இறங்குகிறாள்.

அவருடைய கைபேசியைக் கொடுப்பதற்காக ஹரியும் இறங்குகிறான். ரயில் சென்றுவிடுகிறது. அவர் உடனடியாக கோழிக்கோடு சென்று மனைவியைப் பார்க்க வேண்டும். அன்று கேரளாவில் முழு அடைப்பு என்பதால் அவர்களால் பேருந்திலோ ரயிலிலோ பயணிக்க முடியவில்லை. நடந்தும் பலவிதமான வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் ஹரியும் அவர்களுடன் பயணிக்கிறான். பல அனுபவங்கள் ஏற்படுகிறது. இறுதியில் கோழிக்கோடு அடையும்போது ஆசிரியரின் மனைவி இறந்துவிடுகிறார். அவரும் அவரது மனைவியும் இடதுசாரி அரசியல்வாதிகள் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெருந்திரளாக திரண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். ஹரியும் நாராயணியும் திரும்புகிறார்கள். இந்த அனுபவங்களால் ஹரி இயல்பான மனிதனாகிறான். அவனுக்கும் நாராயணிக்கும் காதல் மலர்வதோடு கதை முடிகிறது.

North 24 Kaatham: A film full of optimism

தன்னுடைய மனைவியை முதல் முதலில் சந்தித்து காதல் மலர்வது, அவள் உடல் நிலை குறித்து கவலைப்பட்டுக்கொண்டே பயண அனுபவங்களை உற்சாகமாக ஏற்றுக்கொள்வது என நெடுமுடி வேணு சிறப்பாக செய்திருக்கிறார். மனைவியின் உடலைப் பார்த்து அதிர்ந்துபோவது, அந்த நேரமும் கட்சிக் கொடியை எடுத்து வந்து போர்த்துவது என மிக நெகிழ்வான தருணங்கள் நம்மை உணர்வுபூர்வமாக ஒன்ற வைக்கின்றன. ஒரு நவீனப் பெண் குறித்த சித்தரிப்பை இயக்குனர் வெகு இயல்பாக காட்டி செல்கிறார். ஆசிரியர் அதிர்ச்சியினால் சரிந்து விழும்போது சக பயணியான ஹரியை உதவிக்கு அழைக்கிறாள்.

அவன் வராதபோது தானே அவரை ரயிலை விட்டு இறக்குவது, பக்கத்து நகருக்கு செல்ல ஆயிரம் ரூபாய் கேட்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் கடுமையாக பேரம் பேசுவது, உதவி செய்வது போல தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் இளைஞனை செருப்பு பிய்யுமாறு அடிப்பது, ஹரியின் தொட்டால் சுருங்கி இயல்பை ஒரு உதட்டு சுழிப்புடன் புறம்தள்ளுவது என அந்தப் பாத்திரம் சிறப்பான படைப்பு. ஹரியின் பாத்திரத்தை, சிடுசிடுப்பது, வெகுளியாகத் தோன்றுவது, பயப்படுவது, அதே சமயம் கூட வந்த பெண்ணுக்கு ஆபத்து எனும்போது வேகப்படுவது என பல உணர்ச்சிகளை பஹத் பாசில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். திசையை கண்டுபிடிப்பது, காரை ரிப்பேர் செய்வது என அந்த உளவியல் நோயாளிக்குள்ளும் திறமைகள் இருப்பதை காட்டியிருப்பதும் ஒரு நல்ல விஷயம்.

பயணத்தின்போது ஒரு நாடோடிக் குடும்பத்தின் வேனில் பயணிக்கிறார்கள். கணவன் தமிழன்; மனைவி குஜராத்தி. இருவரும் மற்றவர் மொழி பயிலாமலேயே குடும்பம் நடத்துகிறார்களாம். சற்று நெருடலாக இருக்கிறது. அதேபோல் அவருடைய தம்பியின் பாத்திரமும் சற்று செயற்கையாக தோன்றுகிறது. முதல் படத்திலேயே ஒரு சிறப்பான இயக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். 2010இல் தொடங்கிய புதுவகை மலையாள திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்கிறது விக்கிபீடியா.

இரா. இரமணன்

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Karuppu Anbarasan. Vijay Sethupathi And Shruthi Haasan Leads.

விவசாயகுடிகளின் சக்தியை.. கூட்டு உழைப்பை உயர்த்திப் பிடிக்கிறது..*லாபம்* – கருப்பு அன்பரசன்.



விவசாயிகள் ஒன்றுபடும் பொழுது அவர்களைப் பிளவுபடுத்த உழைப்பை, அதன் வியர்வையினை நக்கி ருசிகண்ட அதிகாரவர்க்கம் எல்லாவித திருட்டு வேலையையும் செய்யும் என்கிறது லாபம்..

எல்லா சமூகத்திலும் மாற்றம் என்பது பெரும் மக்கள் கூட்டு சக்தியாலேயே நடைபெற்றிருக்கிறது..
மக்கள் சக்தி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று உரக்கச் சொல்கிறது லாபம்.

தனிமனித ஹீரோயிசத்தை தவிர்த்து மக்கள் சக்தியின் மேன்மையை உயர்த்திப் பிடிக்கிறது லாபம்.

விவசாயிகள் ஒன்று சேர்வது மட்டுமே தங்களது நிலத்தில் விளைந்த விளைச்சலுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க முடியும் என்று விவசாயிகளின் ஒற்றுமையை பேசுகிறது லாபம்.

இந்தியா முழுவதிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதே இன்றைக்கு ஆண்டுகொண்டு இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளை இதுவரையிலும் நியாயமான பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது. அனைவரும் உணர வேண்டிய தருணத்தில் இந்த படம் வந்து இருப்பது நம் உழைக்கும் சமூகத்திற்கு லாபம்

களப்பலியான கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது லாபம்..

விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற.. ஆதிக்க சாதித் திமிருக்கு எதிராக “அடித்தால் திருப்பி அடி” என்று உரக்க முழக்கமிட்டு.. பட்டியலினத்து விவசாய தொழிலாளிகளை.. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஓரணியில் திரட்டிய தோழர் சீனிவாசராவ் அவர்களின் பெயரை உச்சரிக்க செய்கிறது லாபம்..
ரவுடிகளை எதிர்த்து களப்பலியான லீலாவதியை கொண்டாடுகிறது படம்.. பலியான இன்னும் பல போராளிகளை.. கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது.. நம்மை கொண்டாடச் செய்கிறது லாபம்.

இந்தியாவின் கிராமங்கள் பலதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் புதியதாக தொழிற்சாலை அமைக்கப்போவதாக கூறி.. பல தில்லாலங்கடி திருகு தாளங்களை நடத்தி தொழிற்சாலையை அமைத்து இயற்கையின் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
அருகில் இருக்கும் கிராமங்களின் விவசாயிகள் இரத்தத்தையும் சேர்த்தே..
இதற்கு உடந்தையாக ஆளும் அரசுகளும்.. அடிவருடிகளும் அவர்களுக்கு மானியமாகவும் இலவசமாகவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Karuppu Anbarasan. Vijay Sethupathi And Shruthi Haasan Leads.

இன்னும் கொஞ்ச காலத்தில் இங்கே தமிழகத்தின் செங்கல்பட்டில், பெரிய கார்பரேட் நிறுவனம் ஒன்றின் கார் தொழிற்சாலை மூடப்படவிருக்கிறது.. வேலை பார்க்கும் 7000 தொழிலாளர்களும் அந்த ஆலையை சார்ந்து நிற்கும் 30 ஆயிரம் தொழிலாளர்களும்.. மொத்தமாக முப்பத்தி ஏழு ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் நடுவீதியில் தள்ளப்படவிருக்கிறார்கள். அந்த தொழிற்சாலை மூடப்படுவதால் அந்தத் தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்யக்கூடிய சிறு குறு தொழிற்சாலைகள் பலவும் மூடப்படவிருக்கிறது. நீங்களும் நானும் என்ன செய்யப்போகிறோம் என்று பார்ப்போம் எதிர்காலத்தில்.

படத்திலும் கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளி கிராமத்து மொத்த விவசாய நிலங்களையும் விலைபேசி தொழிற்சாலை அமைக்க முற்படும் நேரமதில் கார்ப்பரேட்டின் அயோக்கியத்தனத்தை உணர்ந்து.. புரிந்து.. அறிந்து.. வெகுண்டெழும் மக்கள் ஆயுதங்களோடு களத்தில் இருக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான நிஜ வரலாறுகள் ஏராளம் நம் கண் முன்னே. ஆயுதங்கள் கைகள் மாறத் தொடங்கி விட்டால் என்னவாகும் என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது லாபம்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறி என்பது
சிறிய தொழிற்சாலைகளையும் விட்டுவைக்காது என்பதற்கு உதாரணம் கோவையும்.. திருப்பூரும்.. சென்னையும் தமிழகத்தில்.
இந்தியா முழுவதிலும் மூடப்பட்டிருக்கும் சிறு குறு தொழிற்சாலைகள் பல ஆயிரம் உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வெறியினை அதன் கூட்டுக் கயவாளித்தனம் உலகம் முழுவதும் எப்படி நீண்டு இருக்கிறது என்பதனை
பேசுகிறது லாபம்.

சாதிகளைக் கடந்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கமாக இணைவதால் மட்டுமே நாம் நினைக்கும் நிஜமான விடுதலையும் வாழ்வும் கிடைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமும் அதுவே என்பதற்கு லாபம்..

கூட்டுப்பண்ணை விவசாய வடிவத்திற்குள் ஒரு கிராமத்தின் எல்லா குடிமக்களும் இணைய முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறது லாபம்.

நடக்கப்போகும் எதிர்காலத்தை இன்று கனவுத் தொழிற்சாலையின் தயாரிப்பில் காட்சிகளாக நிஜப்படுத்தி இருக்கிறது லாபம்.

படத்தில் அழகியல் இல்லை எடிட்டிங் சரியில்லை.. வெறும் வசனங்களாகவே இருக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களுக்கு உழைக்கும் மக்களுக்கு ஆதரவான இந்த படம் எரிச்சலைக் கூட்டும்தான்.. மூட்டும்தான்.!

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Karuppu Anbarasan. Vijay Sethupathi And Shruthi Haasan Leads.

வரலாறுகளை.. போராட்டங்களை எதிரிகளுக்கு எதிரான திட்டமிடுதல்களை..
மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய..
புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வசனங்களால் பேசித்தான் ஆகவேண்டும்.
பல தலைமுறைகளாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து வரும் நமது மக்களின் வாழ்வியல் குறித்தான தரவுளை விவரங்களை வசனங்களாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.. அதனை மிகச் சரியாக பேசியிருக்கிறது லாபம்.

நமது உரிமையான.. நமக்குச் சொந்தமான.. நமக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் இன்று எவரிடம் இருக்கிறது என்பதை.. அது எப்படி வந்தது என்பதை ..
அது எப்படி களவு போனது என்பதை..
அந்த மண்ணை எவர் வழியாக எவரெல்லாம் விழுங்கினார்கள் என்பதை வசனங்களாக தான் சொல்ல வேண்டியிருக்கும்.
விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருக்கிறார் என்று “நீங்கள்” பேசினால் பேசிக் கொண்டே தான் இருப்பார்..
அவர் வரலாற்றினை நிஜங்களை அப்படியே பேசியிருக்கிறார். உண்மைகளைப் மெய்யான உண்மையாக பேசி இருப்பது உங்களுக்கு “காண்டாகும்” என்றால் ஆகட்டும்.
அதில் ஒன்றும் தவறு இல்லை.. இந்தக் “காண்டு” நாங்கள் எதிர்பார்த்தது தான்.
இப்படியான படங்களை உங்களுக்கு கொண்டாடுவதை விட.. நடித்தவர்கள் மீதும் இந்த படத்தை தயாரித்தவர்கள் மீதும்
வன்மம் இருக்கும்.. வன்மம் கலந்த உரையாடல் இருக்கும்.. ஏனென்றால் அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட டார்கெட்.
அதுதான் உங்களின் அடையாளம் என்பதை நாங்கள் அறிவோம்.

உழைக்கும் மக்களுக்கு எந்த அடையாளம் தேவை என்பதை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறார் மறைந்த அருமை தோழர் எஸ் பி ஜனநாதன் அவர்கள். மக்களை அணிதிரட்டும் பொழுது மக்களை ஒருங்கிணைக்கும் பொழுது கலைகளின் வேலைகள் எப்படி இருக்க வேண்டும்.. அது தானாக முன்வந்து எதைச் செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

ஏற்றத்தாழ்வற்ற சமூகம் வேண்டுமென்பவர்கள்.. அதற்காக நிதமும் பந்தலை அர்ப்பணித்துக் கொண்டு போராட்டங்கள் பலதை நிகழ்த்தி கொண்டிருப்பவர்கள்
கொண்டாடப்பட வேண்டிய படம் லாபம்.

பலராலும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களை உள் வைத்து இருக்கும் படம் லாபம்.

கொண்டாடுவோம் விவாதிப்போம்
வெகு மக்களை பார்க்க வைப்போம்.

லாபம்.

கருப்பு அன்பரசன்.

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Pa. Prashath. Vijay Sethupathi And Shruthi Haasan Lead The Movie

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய *லாபம்* திரை விமர்சனம் – ப. பிரசாந்த்



மன உறுதி பெறுவதிலே
ஜெகமதையே ஜெயித்திடலாம்

சிவப்பே வழியாய் கொள்வோமய்யா..

தனி ஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல

இணைந்தே எதையும் வெல்வோமய்யா…

தோழர் யுகபாரதி அவர்களின் அற்புத பாடல் வரிகள் அந்த வரிகள் தான் படத்தின் ஒட்டு மொத்த கதையும் அடங்குகிறது

லாபம் திரைப்படத்தின் சில காட்சிகள் ராஜபாளையத்தில் கடந்த இரண்டு வருடங்கள் முன்பு துவங்கியது. அன்றுதான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு படப்பிடிப்பில் தோழர் எஸ்பி ஜனநாதன் அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பு உணவு இடைவேளையில் அறிவிக்கிறார். இன்று லெனின் அவர்களின் பிறந்தநாள் இன்று தான் நமது படத்தை தூங்குகிறேன் என்று அறிவித்தார். பின்னர் நான் அறிமுகம் ஆகினேன், அன்றைய தினம் எந்த எதிர்பார்ப்போடு இந்த படம் வருமென்று இருந்தேனோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் லாபம் திரைப்படம் இருந்தது.

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Pa. Prashath. Vijay Sethupathi And Shruthi Haasan Lead The Movie
லாபம் திரைப்பட படபிடிப்பில் இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் மற்றும் படக்குழுவினரோடு விருதுநகர் மாவட்ட இந்திய மாணவர் சங்க தோழர்கள்

ஒரு கிராமத்தின் சாதாரண ஏழை எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கி தான் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை எளிதாக அனைத்துப் பகுதிகளிலும் சென்றடையும் வகையில் எட்டு வழிசாலை உட்பட தங்க நாற்கர சாலை பொருள்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக்கூடிய கிடங்குகள் அவற்றின் மூலம் பொருளின் விலை ஏற்றத்தின் போது அதை விற்பனை செய்வதற்கான ஒட்டுமொத்தமாக லாப வெறியை மையமாக வைத்து இயங்கும் கூடிய அந்த கார்ப்பரேட் முதலாளி அவர்களுக்கு அடிமையாக உள்ளுரில் நான்கு சிறு அடிமை முதலாளிகள் இவர்களை எதிர்த்து பக்கிரி சாமியாக விஜய் சேதுபதி அவர்கள் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வில்லனை அழித்தொழித்து இதேபோன்று உழைக்கும் மக்களுக்கு எதிராக அடுத்த கிராமத்தின் நடக்கக்கூடிய பிரச்சனையை எதிர்த்து இறுதியில் கிளம்புகிறார் விஜய்சேதுபதி. இப்படியாக ஒட்டுமொத்த படத்தின் கதை அமைகிறது.

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Pa. Prashath. Vijay Sethupathi And Shruthi Haasan Lead The Movie

படத்தில் லாபம் குறித்து எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய காட்சி அமைப்புகள், அதேபோன்று சங்கத்தின் மூலம் தங்களின் உரிமைகளை கேட்க ஒன்றிணைய வேண்டும் என்பது விவசாய நலன் காக்க மாபெரும் மக்கள் பணியை செய்த தோழர் சீனிவாச ராவ் அவர்களின் பெயரில் கூட்டு பண்ணை திட்டம் துவங்குவது.

லாபம் குறித்து சிறுமிக்கு விஜய் சேதுபதி அளிக்கும் விளக்கம், ஊருக்குப் புதிதாக வந்தவர் சங்கத்தில் வந்து சீனிவாச ராவ் பற்றிக் கேட்பது சேகுவேராவைப் போன்று விஜய் சேதுபதியின் பாத்திர வார்ப்பு புல்லட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Director S.P. Jananathan's (எஸ்.பி. ஜனநாதன்) Laabam (லாபம்) Movie Review By Pa. Prashath. Vijay Sethupathi And Shruthi Haasan Lead The Movie

பல நூறு பக்கங்கள் மேலும் படம் முடிந்ததும் கடைசியில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் லாபம் குறித்தான இரண்டு நிமிட வீடியோ அந்த இரண்டு நிமிட வீடியோவை ஒரு முழுநீள படமாக புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக படம் மக்கள் ஜாதி மதங்களை கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும்.

என்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக லாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கும் கார்ப்பரேட் முதலாளிகள் இந்த சமூகத்தின் சாபம் என்று பறைசாற்றுகிறது.

ப. பிரசாந்த் எம்ஏ.பிஎட்
முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் 
விருதுநகர் மாவட்டம் 
9543058686

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஹோம் – இல்லத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் | இரா. இரமணன்



இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியான மலையாள மொழித் திரைப்படம் ‘ஹோம்’ . ரோஜின் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் பாபு, ஸ்ரீநாத் பாசி, ஸ்ரீகாந்த் முரளி, இந்திரன், மஞ்சு பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர்.

கால மாற்றங்களோடு மாறாததால் கேசட் கடை நடத்தி அதை மூட வேண்டிய ஆலிவர் ட்விஸ்ட், தன்னுடைய இரண்டாவது திரைப்படக் கதையை முடிக்க முடியாத அவரது மூத்த மகன் ஆண்டனி, வீடியோ காட்சிகள் எடுத்து வெளிவிடும் இரண்டாவது மகன் ஆகியோரை சுற்றி வரும் கதை.

நவீன தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள திணறும் சென்ற தலைமுறை, பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற ஊடகங்களில் மூழ்கி இருக்கும் இந்த தலைமுறை, சாதனை என்பது என்ன, குடும்பம் என்கிற நிறுவனத்தின் முக்கியத்துவம் என பல கோணங்களில் இந்தப் படத்தை ரசிக்கலாம். இது குறித்து களப்பிரன், வடமலை சேதுராமன், கருப்பு அன்பரசன் மற்றும் சிலரது பதிவுகள் முகநூலில் வந்துள்ளன.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Indrans as Oliver Twist. YouTube

என்னுடைய கருத்தாக நான் சுட்டிக்காட்ட விரும்புவது இரண்டு பெண் கதாபாத்திரங்கள். ஒன்று ஆன்டனியின் தாயார் குட்டியம்மா. இன்னொருவர் அவனது காதலி பிரியா. எல்லாப் பாத்திரங்களையும் கதாசிரியர் இயல்பாக காட்டியிருந்தாலும் கதையில் ஆண் பாத்திரங்கள் முக்கிய இடங்களை எடுத்துக் கொண்டபோதும் இந்த இரண்டு பெண்களை நாம் கவனிக்க வேண்டும்.

குட்டியம்மா ஒரு நர்ஸ் என்பது ஒரு காட்சியில் அவர் காயத்திற்கு கட்டுப் போடும்போது நம்மை ஊகிக்க வைக்கிறார். இன்னொரு இடத்தில் குடும்ப புகைப்படங்களில் அவர் புகைப்படம் இல்லை என்று அவர் சாதாரணமாக சொல்லும்போது ‘நீ நர்ஸ் வேலைக்கு ஓடிக்கொண்டிருந்ததால் இல்லை’ என்று ஆலிவர் டுவிஸ்ட் கூறுவதிலிருந்தும் அவர் நர்ஸ் வேலை பார்த்தார் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால் மொத்த வீட்டு வேலைகளை செய்வது மட்டுமல்ல எல்லோருடைய மன வேதனைகளைப் பகிர்ந்து கொள்வது, எப்பொழுது தலையிட வேண்டும் எதில் தலையிடக்கூடாது என்று அந்தக் கதாபாத்திரம் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு அமைதியான அந்தப் பெண்மணி, விருந்தினர் முன் தன் கணவரை மூத்த மகன் கோபித்துக்கொள்ளும்போது, இளைய மகனைக் கடிந்துகொள்வதுபோல் சீறும் இடம் சிறப்பாக இருக்கிறது. எல்லோரும் சாப்பிட்டபிறகு அவர் மட்டும் தனியாக சாப்பிடும் காட்சியும் குடும்பத்தில் தலைவிகளின் நிலையை காட்டுகிறது.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Manju Pillai as Kuttiyamma. YouTube

இனியாவது நம் குடும்பங்களில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும்போது குடும்பத் தலைவியையும் உட்காரவைத்து சாப்பிடுவோம். சில கேரளக் குடும்பங்களில் பெண்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது ஆண்கள் பரிமாறுவதைப் பார்க்கலாம்.புகைப்படங்களிலும் எல்லோரும் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். இன்னொரு பெண் பாத்திரம் இதற்கு நேர் எதிராக உணர்ச்சி வசப்படுவதும் சட்டென்று அழுவதும் என ஒரு பலவீனமான ஆளுமை. ‘நீரஜா’ என்கிற இந்தித் திரைப்படத்தில் ‘மகளை அழக்கூடாது; தைரியமாக இருக்க வேண்டும் ‘என்று சொல்லி வளர்க்கிற தந்தையைக் காட்டியிருப்பார்கள். நாமும் அது போன்ற தந்தைகளாகுவோம்.

இந்தப் படத்தில் இன்னும் ஒரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ஆண்டனி கதை சொல்ல வேண்டிய திரைப்பட கதாநாயகன் கேரவானில் அமர்ந்திருக்கிறார். ஆண்டனியின் தந்தை தனது நண்பனின் தூண்டுதலினால் நடிகருடன் செல்பி எடுத்துக்கொள்ள கேரவானுக்குள் அனுமதி இல்லாமல் நுழைகிறார். நடிகருடன் சகஜமாகப் பேசி அங்குள்ள பழத்துண்டுகளை வாயில் போட்டுக்கொள்கிறார். செயற்கையான மரியாதை பழகாத மனிதர்கள் வெள்ளந்தியாக நடந்துகொள்வதை காட்டியிருக்கிறார்.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Johny Antony and Indrans in a still from #Home. YouTube

நம்முடைய அதிகார மையங்களில் செயற்கையாக பவ்யமாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. இதைத்தான் விவேக் அவர்கள் வானத்தில் போகும் மந்திரிக்காக தரையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மரியாதை செய்வதை ஒரு படத்தில் கிண்டலடித்திருப்பார். மேலதிகாரிகள் போனில் பேசும்போது கீழ் அதிகாரிகள் எழுந்து நின்று பேசுவதும் ஒரு முறை எம்எல்ஏ ஆகவோ மந்திரியாகவோ இருந்துவிட்டால் அந்த ஊரில் அவரை எப்போதும் எம்எல்ஏ, மினிஸ்டர் என்று அழைப்பதையும் பார்த்திருக்கிறோம். இதற்கு மாறாக இடதுசாரி அரசியல்வாதிகள் மந்திரியாக இருக்கும்போதும் அதற்குப் பிறகும் சாதாரண மக்களோடு பேசுவதும் பழகுவதும் பயணிப்பதும் உண்பதையும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு நடிகரும் சிறப்பாக நடித்துள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ற இரண்டு மூன்று பாடல்கள். முதல் முப்பது நிமிடங்கள் சற்று மெதுவாக நகர்வது பொறுமையை சோதிக்கலாம். அதுபோல் அந்த ப்ளாஷ் பேக்கும் இன்னும் சற்று சிந்தித்து எடுத்திருக்கலாம்.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Sreenath Bhasi as Antony Oliver Twist. YouTube
Rajisha Vijayan's Kho Kho Malayalam Movie Review In Tamil By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam

கோ கோ – (Kho-Kho) விளையாட்டும் வாழ்க்கையும் பின்னிப் பிணையும் சித்திரம்



ஏப்ரல் 2021 வெளியான மலையாளப் படம். கோ கோ விளையாட்டைப் பிரதானமாகவும் அதன் பயிற்சியாளரின் வாழ்க்கையை அதனூடாகவும் சொல்கிறது. ராகுல் ரிஜி நாயர் எழுதி இயக்கியுள்ளார்.ரஜிஷா விஜயன் கதாநாயகியாக பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.மமிதா பைஜூ, ரெஞ்சித் சேகர்,வெங்கிடேஷ்,வெட்டுக்கிளி பிரகாஷ்,ராகுல் ரிஜி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இரண்டு தடகள வீரர்கள் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். பெண் வீரர் மரியா முக்கியப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கும்போது ஊக்க மருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு விலக்கப்படுகின்றார். மனமுடைந்து போகின்றாள். பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். அவனுடைய வணிகம் நஷ்டத்தில் விழுகிறது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சிறிய தீவில் இருக்கும் பள்ளிக்கு உடற்பயிற்சி ஆசிரியராக மரியா சேர்கிறாள். அங்கு பெண்கள் கோ கோ விளையாட்டை முறையான பயிற்சியில்லாமல் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு பயிற்சியளித்து சிறந்த அணியாக மாற்றுகிறாள்.

Rajisha Vijayan's Kho Kho Malayalam Movie Review In Tamil By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayamமுதலில் அதை விரும்பாத தலைமையாசிரியர்,பெற்றோர்கள் பிறகு ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு நடந்த ஒரு பஸ் விபத்தில் பலர் இறந்து போனதற்கு அந்த பஸ்ஸை ஓட்டிய மரியாவின் தந்தைதான் காரணம் என்று தெரிந்து அவளை சிலர் தாக்குகிறார்கள். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து பள்ளி அணியை வெற்றி பெற உதவுகிறாள். கணவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுடன் மரியா சேர்கிறாள்.

விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாணியில்தான் செல்லும். முதலில் சரியாக விளையாடாத அணியை பயிற்சியாளர் மிகுந்த சிரமப்பட்டு வெற்றி பெறச் செய்வார். அதிகாரிகள் அல்லது எதிர் அணிப் பயிற்சியாளர்கள் பல இடைஞ்சல்களை ஏற்படுத்துவார்கள்.இறுதிக் காட்சியில் வெற்றிக்குக் காரணமான பயிற்சியாளர் பங்கு கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும். கடைசிப் பாயிண்ட் அல்லது ரன் அல்லது கோல் அடிக்கும்வரை அந்த அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும்.கடைசி நிமிடத்தில் நாக் அவுட் அல்லது கோல் அல்லது சிக்சர் அடித்து வெற்றி பெறுவார்கள். இந்தப் படத்திலும் இப்படிப்பட்ட சில அம்சங்கள் உள்ளன. ஆனால் கோ கோ விளையாட்டின் நுணுக்கங்களை சிறப்பாகக் காட்டியுள்ளார்கள்.

Rajisha Vijayan's Kho Kho Malayalam Movie Review In Tamil By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayamபாராட்டப்பட வேண்டிய விஷயம் மரியாவின் பாத்திரப் படைப்பு. வாழ்க்கையில் நடக்கும் பல துயரங்களைத் தாங்கிக்கொண்டு மாணவிகளுக்கு விளையாட்டைக் கற்றுக் கொடுப்பதை ஒரு இலட்சியமாக எடுத்துக் கொள்வது; உடைந்து போகும் வேளையில் ஆறுதலுக்காக தந்தையை துணைக்கு அழைப்பது; மாணவிகளிடம் கண்டிப்பும் பரிவும் மாறி மாறி காட்டுவது என அந்தப் பாத்திரம் வடிவமைக்கபப்ட்டுள்ளது. தந்தை பாத்திரத்தில் இயக்குனர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.

விளையாட்டையும் மரியா மற்றும் மாணவிகளின் குடும்ப சிக்கல்களையும் மாறி மாறி காட்டுவது சற்று புதிய முறை. ஆனால் சில இடங்களில் போதனைகள் வருவது சற்று அலுப்பைத் தரலாம். ஆனால் மொத்தத்தில் ஒரு இனிமையான அநுபவத்தையும் நேர்மறை உணர்வையும் தருகிறது என அன்னம்மா வெட்டிக்காட்(Firstpost Anna MM Vetticad) கூறுவது சரியான மதிப்பீடாக இருக்கிறது.

இரா. இரமணன்

Korean American Movie Minari Review By Era. Ramanan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

மினாரி (Minari) வேற்று மண்ணில் விளையும் மூலிகை – இரா. இரமணன்



2020ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட கொரிய படம். 2021இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. லீ ஐசக் சுங் இயக்கத்தில் ஸ்டீவன் யென், ஹான் யேரி, ஆலன் கிம், நோயெல் கேட் சோ, யூன்யூ ஜங், வில் பேட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனரின் சுய சரிதையை சிறிது தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவில் குடியேறியுள்ள கொரியக் குடும்பம் ஒன்று. கணவன், மனைவி, 10-12 வயதில் ஒரு பெண் குழந்தை, 5-6 வயதில் ஒரு பையன். கணவன் மனைவி இருவரும் கலிபோர்னியாவில் கோழிக்குஞ்சு பொரிக்கும் ஆலை ஒன்றில் பணி புரிகிறார்கள். கணவன் ஜேகப்பிற்கு நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று பெரும் கனவு. அதனால் அரக்கான்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து அத்துவானக் காட்டில் நிலம் வாங்குகிறான். சக்கரங்கள் மேல் நிற்கும் தற்காலிக வீட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. அந்த இடம், வீடு என எதுவுமே மனைவி மோனிக்காவிற்கு பிடிக்கவில்லை. மகன் டேவிடிற்கு இருதய நோய். மருத்துவமனை வெகு தூரம். அந்தப் பகுதியில் சர்ச் எதுவும் இல்லை. புயலடித்தால் வீடு பறந்துவிடும் என்று ஜேகப் கூறுவதிலிருந்து அவர்கள் இடையே சண்டை அதிகமாகிறது.

நீரோட்டம் பார்ப்பவர் 200டாலர் கேட்பதால் தானே தனியாக கிணறு தோண்டி விவசாயம் செய்கிறான். வேலைக்கு மட்டும் பால் என்பவரை வைத்துக் கொள்கிறான். அவர் இறை நம்பிக்கை மிக்கவர். ஜேகப் வழிபாட்டில் ஈடுபாடு இல்லாதவன். ஆனால் மோனிக்கா நம்பிக்கை உள்ளவள். இரவில் பிரார்த்தனை செய்தால் சொர்க்கத்தைப் பார்க்கலாம் என்று மகனுக்கு நம்பிக்கை ஊட்டி வளர்க்கிறாள்.

Korean American Movie Minari Review By Era. Ramanan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இதற்கிடையில் டேவிட்டைக் கவனித்துக்கொள்ள கொரியாவிலிருந்து தாய்வழிப் பாட்டியை வரவழைக்கிறார்கள். தன்னுடைய படுக்கை அறையை பாட்டியுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத டேவிட் அவளை வெறுப்புடன் அணுகுகிறான் ஜேகப் சிரமப்பட்டு பயிர் செய்த காய்கறிகளை வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்ன நகர வியாபாரி வேண்டாமென்று சொல்லிவிடுகிறார். நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் கணவன் மனைவிக்குள் சண்டை வலுக்கிறது. பிறகு சமாதானம் ஆகிறார்கள். கடன் வாங்கி மீண்டும் பயிர் செய்கிறான். இந்த முறை கிணற்றில் தண்ணீர் வற்றிவிடுகிறது. வீட்டிலும் தண்ணீருக்கு கட்டிய பணம் முடிந்துவிட்டதால் தண்ணீர் நின்றுவிடுகிறது..சிறுவன் டேவிட்டும் பாட்டியும் சேர்ந்து வெளியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். பாட்டிக்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. குழந்தைகளை நண்பர் வீட்டில் விட்டு பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக் கொள்கிறாள். ஒருவாறு பாட்டி குணமாகி திரும்புகிறாள்.

இந்த முறை ஜேகப் நீரோட்டம் பார்ப்பவரின் உதவியோடு மீண்டும் கிணறு தோண்டுகிறான். பயிராகி வந்துள்ள காய்கறிகளை மாதிரி பார்த்துவிட்டு வியாபாரி ஒருவர் அடுத்த வாரத்திலிருந்து வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். பாட்டியின் ஆறுதலான,தைரியமூட்டும் வார்த்தையாலோ அல்லது இயற்கையாகவோ டேவிட்டிற்கு இருதய நோய் சற்று குணமாகிறது. ஆனால் மோனிக்கா கலிபோர்னியா திரும்பி சென்றுவிடலாம்;இங்கு கடன் அதிகமாகிறது.குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்கிறாள். ஜேகப் நிலத்தைவிட்டு வர முடியாது என்கிறான். இருவரும் பிரிவது என்று முடிவு செய்கிறார்கள். வீட்டில் தனியாக இருக்கும் பாட்டி குப்பைகளை எரிக்கும்போது காய்கறி சேமித்து வைத்திருந்த கிடங்கு தீப்பற்றி எரிந்துவிடுகிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து காய்கறிகளை முடிந்த மட்டும் காப்பாற்றுகிறார்கள். தன்னால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டதே என்று வருந்தி பாட்டி வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். ஆனால் டேவிட்டும் அக்கா ஆனியும் அவளை திரும்ப அழைத்து வருகிறார்கள். ஓடைக்கரையில் பாட்டி விதைத்த மினாரி எனும் கீரை வகை செழித்து வளர்ந்திருக்கிறது. அதை ஜேகப் அறுவடை செய்வதோடு படம் முடிகிறது.

படம் எந்தவித மிகை உணர்ச்சியும் இல்லாமல் இயல்பாக அதே சமயம் நம்மை நெகிழ்விக்கவும் சிரிக்கவும் கதையோடு ஒன்றவும் செய்விக்கிறது. கணவன், மனைவி இருவரில் யார் பக்கம் நியாயம் என்று நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. மோனிகா ஒரு குடும்பத் தலைவிக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு, பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கிற கவலை, அகலக் கால் வைக்காமல் வருகின்ற வருவாயை வைத்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற உணர்வுகளோடு வாழ்கிறாள். எந்த நேரமும் கோழிக்குஞ்சுகளின் பின்புறத்தையே பார்த்துக்கொண்டு இருக்கும் தொழிலை விட்டு, ஐம்பது ஏக்கர் பரப்பளவில் கொரிய காய்கறிகள், பழங்களை விளைவித்து ஒரு கவுரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஜேகப்பின் கனவையும் குறை சொல்ல முடியாது. கொரிய கிராமிய வாழ்க்கைமுறைகளையும் பேரனிடம் பாசத்தையும் வைத்திருக்கும் பாட்டியும் அமெரிக்க முறையில் வாழும் பேரன் டேவிட்டுக்கு பாட்டியின் பால் ஏற்படும் ஒவ்வாமையும் ரசிக்க வைக்கிறது. கணவன்-மனைவி சண்டை போட்டுக்கொண்டாலும் முக்கிய தருணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது இரு நேர்மையான உள்ளங்களைக் காட்டுவதாக உள்ளது.

Korean American Movie Minari Review By Era. Ramanan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

பதினாறு பாடல்கள் என்று இணையதள விவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு நிமிடம் இரு நிமிடம் அவ்வளவுதான். சர்ச் என்பது சமூக உறவுகளுக்கான இடம் என்பதும் அங்கும் முதலில் இன, அந்தஸ்து வேறுபாடுகளில் தொடங்கும் தொடர்புகள் பின்னர் சிறுவர்களுக்கிடையே நட்பாக மாறுவது என யதார்த்தமாக காட்டியிருக்கிறார். இறை நம்பிக்கை அதிகம் உடைய பாலுக்கும், இறை நம்பிக்கை குறித்து ஒரு அலட்சிய போக்கு கொண்ட ஜேகப்பிற்கும் இடையே நிலவும் உறவும் சுவாரசியமானது.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு குறும்புகள் செய்யும் டேவிட்டாக நடிக்கும் சிறுவனை நாம் நிச்சயம் ரசிப்போம். அவனுடைய அக்கா ஆனியின் பாத்திரம் சிறிதளவே இருந்தாலும் அந்தப் பெண்ணும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

முதலில் ஜனவரி 2020இல் சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இரண்டு விருதுகள் பெற்றது. 93ஆவது ஆஸ்கார்(அகடெமி) விருதுகளுக்கு ஆறு பிரிவுகளில் நியமனம் செய்யப்பட்டு பாட்டியாக நடித்த யுவான் யூ ஜங்கிற்கு (75வயது) சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளது. இவர்தான் ஆஸ்கார் விருது பெரும் முதல் கொரியன் நடிகர். 1947இல் பிறந்த இவர் கொரிய திரைப்படங்கள், தொலைக்கட்சிகளில் 50 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அகெடமி விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்கு கோல்டன் குளோப் விருது போன்ற வேறு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. விமர்சகர்களாலும் பாராட்டப்படுகிறது.

இரா. இரமணன்