thodar-20: samakala sutru suzhal savaalkal - pa.ram manohar தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் - பா. ராம் மனோகர்

தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

                    கவனத்தோடு காப்பாற்றப் படவேண்டிய கழிமுகங்கள்!                நமது இயற்கை சூழல்களில், பெரும்பான்மை மக்கள் இதுவரை அறியாத நீர் சூழல், கழிமுகம்(ESTUARY ) ஆகும்.உப்பங்கழிகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர்.நன்னீர் உள்ள…
Kadalin mel oru Kaiyezhuthu Kavithai By Kala Bhuvan கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை - கலா புவன்

கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை – கலா புவன்

பரந்து கிடந்தது கடல்
சூரியக் கதிர்கள்
கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றன
சிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களை
தாங்கி நின்றன
பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன
திமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டன
கட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்
மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்
கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தன
காற்று மட்டும் கடலின் மேல்
கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது
கடலின் கவிதைகள் அலைகளின் மேல் பயணித்து
கரைகளை சென்றடைந்தன
காதலர்கள் கால்களை கடலைகளில் நனைத்துக்கொண்டனர்