அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை (God, Faith And Superstition From A Scientific Perspective) - அ. குமரேசன்

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை – அ. குமரேசன்

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை… - அ. குமரேசன் அறிவியலுக்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் பற்றி அறிவியல் ஆராய்வதில்லை. அறிவியலே அடிப்படையில், இருக்கிற ஒரு பொருள், அதன் மூலம், அதன் மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதுதானே? பிறகெப்படி கடவுள் பற்றி ஆராய…
அஸ்வகோஸ் (Ashwaghosh) எழுதிய கடவுள் என்பது என்ன? (Kadavul Enpathu Enna) - நூல் அறிமுகம் | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) - https://bookday.in/

கடவுள் என்பது என்ன? – நூல் அறிமுகம்

கடவுள் என்பது என்ன? - நூல் அறிமுகம் கடவுள் என்பது யார்? என்று தான் இருக்க வேண்டும். ஆனால் கடவுள் என்பது என்ன? என்ற கேள்வியிலேயே புத்தகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். மனித வாழ்க்கை எத்தனையோ சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி தத்தளித்துக்…
Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸின் நான்கு கவிதைகள்

1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று தூக்கிட்டுத் தொங்க மனிதர்கள் கிடைக்காமல் தங்களையே தூக்கிட்டுத் தொங்குகின்றன கோடைகால மின்விசிறிகள் காவிரி…
உயிர்த்தெழும் நாள் | Day of Resurrection - ஐ.முரளிதரன்

தொடர் : 2– சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்

உயிர்த்தெழும் நாள்   வெரோனிகா வை பற்றி முதன்முதலாக குமரன் எனக்குச் சொன்னது “அந்த உதட்டு மச்சத்தைப் பற்றி தான்”. நல்ல வடிவான முகம் அவளுக்கு. அந்த முகத்தில் மேலுதடு முடிந்து கிழுதட்டினை தொடுகிற இடத்தில் மெல்லிதாக ஒரு புள்ளி. பிறந்த…
சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. சாதி நிழல்கள்  நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது அவர் வாகனம்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது - ராம்குமார். ரா

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ராம்குமார். ரா

      சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல். ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும் அனுபவங்களின் மூலம் இவை விவரிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என்று…
nool arimugam : saamigalin pirappum irappum - prof s.balaraman நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் - முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் – முனைவர் சு.பலராமன்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்னும் அபுனைவு பிரதி அறுபத்து நான்கு பக்கங்களுடன் 2011ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.  ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், திறனாய்வாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவர் என பன்முக ஆற்றலோடு இயங்கி வருகிறார்.…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்*                                          •••••••••••••••••••••••••••••••• சேரிகளில் வாழ்ந்து மறைகின்றவர்க்கு சொர்க்கத்திலோ நரகத்திலோ…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




கடவுள் மனதில் சாத்தான் நுழைவது
*******************************************
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள்
ஒரு நாள் தொலைந்து போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும்
தேவாலயங்களிலும் தேடியபிறகும்
அவரின் இல்லாமை
குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
ஆற்றாமையில் அரற்ற
சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார்
தவளையுடையணிந்த கடவுள்
இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள்
புரிந்தாக வேண்டும்
இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும்
நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல்
தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது
கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில்
அழுத்த
விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில்
நெருஞ்சி முட்கள் முளைக்க
இதயத்தைக் கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் நுழைகிறான்

நிழல்களை அழைத்தல்
**********************************
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கிய உருவா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்தத் தெருவெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும் கவிஞர்களுக்கு
சவால் விட்டுச் செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்

ஒற்றைச் சொல்
***********************
ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது
மூன்று எழுத்து
ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது

அது சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும் இருந்தது
நம்மை அறியாமலேயே
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்தபடியேவும்
அது இருந்தது

ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்திலிருந்த தவளை
குதித்து வெளியேறிப் போனது
அது எழுப்பிப்போன பேரலைகள்
இன்னும் குளத்தை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன

பச்சை பாசிக்கடியில் நீரின் மூலக்கூறுகளும் இன்னும்
மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்து குதித்துப் போன
மாயம் தான் இன்னும் தெரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான் …

– தங்கேஸ்