நா.வே.அருளின் "புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை | Puratchikkum GSTya? Tamil Kavithai | சிறந்த தமிழ் கவிதைகள் pdf | www.bookday.in

நா.வே.அருளின் “புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை

"புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை ********************************* இன்பத்தில் கொடிகட்டும் இகலோக வாழ்க்கை வேண்டுமா? என்னுடன் வாருங்கள்!… கடைசி வரையிலும் என் கவிதையைக் கேளுங்கள் இகலோகத்தில் இன்பம் சித்திக்கும் என் கவிதை சொல்வதைக் கடைப்பிடித்து வாழுங்கள் உங்களுக்கு – நிகழ்கால இன்பம் நிச்சயம் உறுதி…
kavithai: aazap puthaithidu - kovi.bala.murugu கவிதை: ஆழப் புதைத்திடு! -கோவி.பால.முருகு

கவிதை: ஆழப் புதைத்திடு! -கோவி.பால.முருகு

இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து      இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள் வெந்து தணிந்திட வேதனை கொண்டு         வீதியில் நின்றாரே-நம் சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்          செவிட்டில் அறைந்தாரே-மோடி    …
“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்

“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்




இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார். அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார்.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது 18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.

கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.

இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.

ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

– அ.பாக்கியம்

நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி




நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-

ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : bharathiputhakalayam@gmail.com
www.thamizhbooks.com

ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.

ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.

ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.

நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.

இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.

சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.

ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.

அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.

மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்




புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன.  இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. ரேசன் பொருட்களை நம்பி இருக்கும் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டில் மத்திய பாஜக ஆட்சி இருந்த காலத்தில் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக அரிசிக்குப் பதிலாக நேரடி பணப் பட்டுவாடா செய்யும் திட்டத்தை அமல்படுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி போராட்டம் நடத்தியது. அந்தத் திட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி, மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, ரேசன் விநியோகத்திற்குப் பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, அமலாக்கினார். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதை மக்கள் எதிர்த்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங் களை நடத்தியது. இருந்தபோதிலும் வலுக் கட்டாயமாக பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

15 மாதங்களாக பாதிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, பணப்பட்டுவாடாவையும் நிறுத்தி விட்டதன்  விளைவாக, கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு (வறுமைக் கோட்டுக்குக் கீழே) 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000, மற்றும் ரூபாய் 4500 இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றுள்ளது. அன்றாடம் அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏற்றத்தால் வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்களால் தங்களின் உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இவர்களின் குழந்தைகள்  ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தர வருமானம் இல்லாத உடல் உழைப்பை நம்பி வாழ்கின்ற மக்கள் அனை வருமே வறுமை நிலையில் உள்ளனர்.  இவர்களுக்கு சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் செய்தித்தாள்களில் பழங்குடியின மக்களுக்குக்கூட சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில்  அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பிறகு சிறுகுறு தொழில்கள் நெருக்கடியில் உள்ளன. முறைசாராத் தொழிலாளர் குடும்பங்களும், ஏழை எளிய குடும்பங்களும் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமின்றி விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அவல நிலைமைக்குப் பிறகும் கூட, பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி, அரிசிக்குப் பதிலான பணப்பட்டுவாடா செய்ய முடியாது என சமீபத்தில் அவரை சந்தித்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர்களிடம் கூறியிருக்கிறார்.

இத்தகைய நிலைமைக்கு என்ன காரணம்

கடந்த 2017 ஜூலை மாதம் 31 ஆம் தேதி, பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும்  புதுச்சேரியில் பொருள் விநியோகத் திட்டத்தை முழுமையாக நிறுத்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் போடப்படுகிறது எனக் கூறியிருந்தார். மேலும், இதே முறையினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்தார். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்குப் பதிலாக, மானியத்தை வங்கிக்கணக்கில் நேரடியாக அரசு செலுத்தும் திட்டத்தை மோடி அரசு அமலாக்கியது. தற்போது சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய முறையில்தான் அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் பாண்டிச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவை யும் நிறுத்திவிட்டது.

ரேசன் அரிசி விநியோகத்தை நிறுத்தி விட்ட மோடி அரசு, வரலாற்றிலேயே இல்லாத  வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது கொடுமையிலும் கொடுமை. விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடைகளை மூடு வதன் மூலம் கொள்முதலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

மத்தியில் பாஜக மோடி அரசு- புதுவையில் பாஜக கூட்டணி அரசு

மத்தியிலும் புதுவை மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ள பாஜக, முற்றாக உணவு மானியத்தை நிறுத்தும் தனது மக்கள் விரோதக்கொள்கையை அமலாக்கிட, புதுவை மாநிலத்தை முன்னோட்ட மாநிலமாக, பரிசோதனை எலியாக பயன்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். அங்கு வழங்கப்பட்டுள்ள மொத்த ரேசன் கார்டுகள் 3,52,382. இவற்றில் 1,60,211 சிவப்பு அட்டைகள் (முன்னுரிமை குடும்பங்கள்-வறுமைக்கோட்டுக்கு கீழ்). 1,66,142 மஞ்சள் அட்டைகள் (வறுமைக் கோட்டுக்கு மேல்).  புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 515 ரேசன் கடைகள் உள்ளன. கடந்த தேர்தலின்போது, ‘ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்’ என்ற அறிவிப்புடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ரங்கசாமி வெளியிட்டார். நடைமுறையில் ரேசன் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘நடமாடும் நியாயவிலைக் கடைகள் ஏற்படுத்தப்படும்’ என்ற வாக்குறுதியுடன் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பாஜக ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கு வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளித்து மோடி அரசு ஏமாற்றியதுபோலத்தான், புதுச்சேரியில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் மக்களை ஏமாற்றிவிட்டன.

காற்றோடு கலந்த ஆளுநரின் வாக்குறுதி

தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதிஉதவி பெற்று புதுச்சேரி மற்றும்  காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்துவோம்! என புதுச்சேரியின் தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவித்தார். அவர் வாக்குறுதி அளித்து ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. அவர் அளித்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. கடந்த ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி போட்டி அரசாங்கமே நடத்தி ஒன்றிய அரசின் ஏஜெண்டாகவே செயல்பட்டார். அவர் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என்பதை வலுக்கட்டாயமாக அறிவித்தபோது, காங்கிரஸ் – திமுக கூட்டணியின்  நாராயணசாமி அரசாங்கம் ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் ஒன்றிய  பாஜக அரசு அரிசிக்குப் பதிலாக பணப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு அமலாக்கியது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில், ஏழைகளிலே பரம ஏழைக்  குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் மாநில அரசின் உணவு வழங்கல் திட்டத்துடன், கூடுதலாக ஒன்றிய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 26,000 குடும்பங்கள்  அந்தியோ தயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு,  மாநில அரசு வழங்கி வந்த இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, பாமாயில், சக்கரையுடன், ஏஏஒய் (AAY)  திட்டத்தின் கீழும் கூடுதல் தானி யத்தைப் பெற்று வந்தன. மேலும், கொரோனா காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமான வரி விளிம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும்; உணவு தானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துப் போராடியது. சர்வதேச அளவில் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உணவு தானியங்கள், நேரடி பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதனால் ஒன்றிய அரசு, கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நபருக்கு தலா 5 கிலோ அரிசி விநியோகத்தைத் தொடங்கியது. புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் என்ற திட்டம் அமலுக்கு வந்த பிறகு, அந்தியோ தயா அன்னயோஜனா    திட்டம், கரீப் கல்யாண் திட்டத்தைத் தவிர, மாநில அரசின் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு அட்டை தாரர்களுக்கு தற்போது கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கிடைத்துவரும் ஒன்றிய அரசின் 5 கிலோ அரிசி, வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

உணவு பெறும் உரிமை மறுப்பு

தேர்தல் அறிக்கையில் ரேசன் பொருட்கள் வழங்குவோம் என வாக்குறுதி வழங்கும் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு,  நடைமுறையில் மக்கள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாது, அவர்களுடைய உணவு  பெறும் உரிமையைக் கூட மறுத்துவருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கிரண்பேடி விதி முறைகளை மீறி, பாஜக கட்சியின் மூன்று நபர் களை நியமன உறுப்பினர்களாக்கி சட்ட சபையில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்த உறுப்பினர்களோடு விலைக்கு வாங்கிய உறுப்பி னர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் ஆட்சியை பாஜக கலைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும், சபாநாயகராக இருந்தவரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் விலைக்கு வாங்கப்பட்டு பாஜக வில் இணைந்தார்கள். அடுத்து நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் 16 சட்டமன்ற இடங்களைப் பெற்ற தோடு, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று பாஜக நியமன உறுப்பினர்களோடு பாஜக கூட்டணி அமைச்சரவையை ஏற்படுத்தி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகி வருகிறது.

ஒரு புறம் கடந்த  மூன்றாண்டுகளாக ரேசன் கடைகளை மூடிவைத்து, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, நியாய விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை கிடைக்க விடாமல், பாஜக பட்டினி போட்டு வதைத்து வருகிறது. மறுபுறம் புதுவை முழுக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை  மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.  உணவின்றி மக்கள் தவிப்பதைக் கண்டுகொள்ளாமல் தனது கட்சியை வளர்ப்பதிலேயே பாஜக குறியாக இருக்கிறது.

முற்றாக நிறுத்த சதி 

2018இல் இந்தியாவில் சில மாநிலங்களில் அரிசிக்குப் பதில் நேரடி பணப்பட்டு வாடா என்ற திட்டத்தை பரீட்சார்த்த முறையில் ஒன்றிய அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டம் நடத்தியதால் சில மாநிலங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சண்டிகர், புதுச்சேரி, தாதர் நாகர் ஹவேலியில் அமலில் உள்ளது. ரேசன் பொருட்களுக்குப் பதிலாக பணப்பட்டுவாடா எனச் சொல்வதன் நோக்கமே உணவு மானியத்தை காலப்போக்கில் முற்றாக நிறுத்துவதே என்பதை சிலிண்டர் விலை மானிய நிறுத்தம், மற்றும் புதுச்சேரி பணப்பட்டுவாடா திட்டம் நிறுத்தம் ஆகியவற்றில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அதானி ஐந்தாவது இடத்திற்கு வந்து, தற்போது நான்காவது இடத்திற்கும் முன்னேறிவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கோடிகோடியாக சலுகை அளிக்கும் பாஜக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மறுக்கிறது.

ரேசன் கடைகளை திறந்திடுக

1.புதுவையில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறந்து, தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை  வழங்க  வேண்டும். 2. முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் அற்றவர்கள் உள்ளிட்ட  தகுதி உள்ள அனைவருக்கும் சிவப்பு குடும்ப அட்டை வழங்கிட வேண்டும். சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் அட்டைக்கு மாதம் 10 கிலோ  இலவச அரிசியும் முன்பு போல வழங்கிட வேண்டும். 3.  புதுச்சேரி அரசின் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டம் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 9000 ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளது. இந்தப் பணத்தை வழங்கிட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தரமான உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து, வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற வளாகத்திற்கு முன்பாக, என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்புப் போராட்டத்தை நடத்த இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி உயர்வுகளும் விலைவாசி உயர்வும்  ஏழைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – தமிழில்: ச.வீரமணி

ஜிஎஸ்டி வரி உயர்வுகளும் விலைவாசி உயர்வும் ஏழைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – தமிழில்: ச.வீரமணி




டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு முதன்முறையாக 80 அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பணவீக்கத்தின் நிர்ப்பந்தங்களை அதிகரித்திட இட்டுச் செல்லும். இது, ஏற்கனவே இருந்துவரும் பணவீக்கம் மற்றும் அதிக அளவிலான வேலையின்மை ஆகியவற்றுடன் சேர்ந்து, நாட்டின் பொருளாதாரம் மோடி அரசாங்கத்தின் பெரும் வர்த்தகர்கள் ஆதரவுக் கொள்கைகளால், எப்படி மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது. மொத்த பணவீக்கமும், சில்லரை பணவீக்கமும் முறையே தொடர்ந்து 15 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருப்பது அதே நிலையில் தொடர்ந்து இருந்துவருகிறது. இது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளை, தொடர்ந்து உயர்வதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இத்துடன் மக்கள் நாளும் உயரும் எரிபொருள்களின் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் அதீத விலை உயர்வு ஆகிய கூடுதல் சுமைகளைச் சுமப்பதற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள நடப்புக்கணக்குப் பற்றாக்குறையாகும். (Important among them are the increases in the trade and current accounts deficits of the balance of payments.) இதில் மிகவும் முக்கியமான காரணி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தன்னுடைய வட்டி விகிதங்களை உயர்த்தியதால், அந்நிய முதலீட்டாளர்கள் (foreign portfolio investment) வெளியேறியதேயாகும். உதாரணமாக, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (foreign institutional investors) தங்கள் பங்குகளை (equities) விற்றதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 30 பில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியானது தன்னிடம் உள்ள அந்நிய பரிவர்த்தனை ரிசர்வுகளைப் பெரிய அளவில் கொடுத்து திறந்தவெளிச் சந்தையில் தலையிட்டு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதிலிருந்து சரி செய்திருக்க முடியும். ஆனால், ஒரு சில சமயங்கள் தவிர மற்ற சமயங்களில் அது அவ்வாறு செய்யாததால், இந்திய ஏற்றுமதிகளில் போட்டியை அதிகரித்திடவும், இந்திய இறக்குமதியை விலை உயர்ந்ததாக மாற்றக் கூடிய விதத்திலும், இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இவ்வாறு செய்தால் வர்த்தகப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கருதியது. ஆயினும் அது நடைபெறவில்லை. ஏனெனில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் நாட்டிலுள்ள மூலதனங்கள் அதாவது, அந்நிய முதலீடுகள் (foreign portfolio investments) வெளியேறியதேயாகும். எனவேதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்திட இட்டுச்செல்லவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதிக்கான கட்டணங்களை அதிகரித்திடும். இதனால் இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு அளித்துவரும் மானியங்களையும் வெட்ட வேண்டும் என்று அரசாங்கம் கோரும். மானியங்கள் வெட்டப்படும். இதனாலும் மொத்த பணவீக்கமும் விலைவாசிகளும் மேலும் உயரும்.

இவ்வாறாகப் பாய்ச்சல் வேகத்தில் உயரும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இந்த சமயத்தில்தான் ஒன்றிய அரசாங்கம் பல்வேறு உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது. நாட்டில் முதன்முதலாக பேக்கேஸ் செய்யப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள், தயிர், பாலாடைக் கட்டி, இறைச்சி, மீன் முதலான உணவுப் பொருள்களுக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சுடுகாட்டுச் செலவுகள், மருத்துவமனைகளுக்கான அறைகள், காசோலைகள் மூலம் பணம் பெறுதல் போன்ற இதர சேவை இனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களின் நலன்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தடித்தனமான ஓர் அரசாங்கத்தால் மட்டுமே இவ்வாறு மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருள்களுக்கும் வரிகள் மூலமாக இத்தகைய சுமைகளை ஏற்றச் சிந்திக்க முடியும். நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலில், புதிய ஜிஎஸ்டி முன்மொழிவுகளுக்கு மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் எவரும் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காததால், அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மையல்ல.

கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் அமைச்சர்கள் குழுவில் (member of the group of ministers (GoM) on implementing GST rate revision) ஓர் உறுப்பினர். 2021 நவம்பர் 29 தேதியிட்ட ஒரு கடிதத்தில் கே.என்.பாலகோபால், சாமானிய மக்கள்மீது சுமைகளை ஏற்றாமல் ஜிஎஸ்டி அமைப்புமுறை மூலமாக வருவாயைப் பெருக்க வழிவகைகளைக் காண ஆழமான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். கேரள அரசாங்கத்தின் நிலைபாட்டை மீளவும் வலியுறுத்தி, இந்தக் கடிதம் மீண்டும் ஜூன் 17 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் அமைச்சர்கள் குழுக்கூட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வகையான உணவுப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படுவதற்கான முடிவு சண்டிகாரில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் கவுன்சிலின் கூட்டத்தில் மிகவும் தந்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கேரள அரசாங்கம் குடும்பஸ்ரீ (Kudumbashree) என்னும் சிறிய கடைகள் மூலம் ஒன்று அல்லது இரண்டு கிலோ பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கிறது.

உணவுப் பொருள்களுக்கும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நுகர்வுப் பொருள்களுக்கும் வரி ஜிஎஸ்டி வரி விதிப்பதற்குப் பதிலாக ஆடம்பரப் பொருள்களுக்கு (luxury goods) ஏற்கனவே விதிக்கப்பட்டுவந்ததுபோல் 28 விழுக்காடு வரி விதித்திட வேண்டும் என்றும் முந்தைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தாமஸ் ஐசக், நிதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

எனினும், மோடி அரசாங்கம் பணக்காரர்கள் வாங்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு வரி விதித்திட விரும்பவில்லை. இந்த அரசாங்கமானது கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே அட்சி செய்துகொண்டிருக்கிறது. 2019இல் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்தது. தொடர்ந்து ஏராளமான வரிச்சலுகைகள் மூலம் கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருந்த 2.4 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அரசின் வருவாயில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட, சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மீதும் நுகர்வுப்பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன, பெட்ரோலியப் பொருட்கள் மீதும் வரிகள் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இத்தகைய படுபிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான சர்சார்ஜ் மற்றும் செஸ் வரிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மாறாக, மகா கோடீஸ்வரர்கள் மீதும், கார்ப்பரேட்டுகள் மீதும் அதிக அளவில் வரிகள் விதித்திட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

(ஜூலை 20, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு

ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு




இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து
இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள்
வெந்து தணிந்திட வேதனை கொண்டு
வீதியில் நின்றாரே-நம்
சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்
செவிட்டில் அறைந்தாரே-மோடி
செயலால் இறந்தாரே!

இந்திய வீரர் இறப்பது மோடியின்
இழிந்த அரசியலாம்-அவர்
சொந்தம் அழுது சோர்ந்திடக் கண்டும்
சொகுசாய் வாழ்பவராம் -அட
பந்தம் இலாதவர் பாசம் இதுதான்
பாருங்கள் மக்களே-பகை
தீருங்கள் மக்களே!

சிலையால் அரசியல் சில்லறை மதவெறி
சீர்கெட்ட ஆட்சியாம் -இவர்
கொலைகள் செய்வது கொள்கை என்றாகும்
கொடுமைக் காட்சியாம்-அட
மலைபோல் பொய்யை மனதாரச் சொல்லும்
மோடியே சாட்சியாம்-அவர்
தேடிடும் வீழ்ச்சியாம்!

வங்கியின் பணத்தை வாரிச் செல்வர்கள்
வளம்பெறக் கொடுத்தவராம்-அவர்
வாங்கிய பணத்துடன் வெளிநாடு ஓடிட
வசதியும் செய்தவராம்-மோடி
ஏங்கிடும் மக்களை ஏழ்மையில் தள்ளி
ஏளனம் செய்பவராம்-மோடி
ஏளனம் செய்பவராம்!

வரியாய் ஜிஎஸ்டி விதித்து மக்களை
வாடிட வைத்தாரே-நாட்டில்
சிறுகுறு தொழிற் சாலைகள் எல்லாம்
சிதைந்திடச் செய்தாரே-மோடி
நரியாய்ச் செய்த வேலை அதனால்
நாட்டை அழித்தாரே-மோடி
நாட்டை அழித்தாரே!

ஊழல் மதவெறி உலுத்த சாதி
ஒழிந்திடச் சங்கூது-அவர்
வீழ உழைத்திடு வீதியில் களமிடு
வெற்றி என்றோது-பாஜகாவை
ஆழப் புதைத்திடு ஆக்கம் நிலைத்திடு
அதற்கிணை ஏது-இனி
அதற்கிணை ஏது!

Eththanai Pinangalai Puthaippathu Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை

எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்




குளிர் காலம்
அதற்குரிய குளிர் இல்லாவிடினும்
அது குளிர் காலம் தான்

பக்கவாட்டில் போர்த்திக்கொண்ட சிற்றுந்தின்
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல யாருமின்றிப் பயணித்தன
இன்னும் தார் அணிந்து கொள்ளா
கிராமத்துச் சாலைகள்
நிர்வாணமாய்
தம் மேடு பள்ளங்களை மறைக்க முடியாமல்

விதைக்கப்பட்ட எல்லைக் கற்களுடன்
நாற்புறமும் வயல்கள்
கான்கிரீட் விளைச்சலுக்குத் தயாரானபடி
உயர்ந்து பறந்து அதைக் கொண்டாடிய
பல வண்ணக் கொடிகள்

பனிக்கிரீடம் சூடியும்
தன்னடக்கம் காத்து
தலை சாய்ந்த புற்கள் வரப்புகளில்
அந்த அதிகாலை வேளையிலும்
சிற்றுந்தை விழுங்கிய புழுதி மூட்டம்
கடைசி நிறுத்தம் வந்ததை
மூச்சுத் திணறலோடு சொன்னது

நூற்றுக்கும் குறைவான வீடுகள்
தேவைக்கும் அதிகமான தேநீர்க்கடை ஒவ்வொன்றும்
பெயர்ப்பலகை இல்லா
அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம்
எந்த அரசியலையும்
சூடாக்கிடும் தேநீர்க் கடையின் இருக்கைகள்
அச்சூட்டைத் தணித்திடும் சூடான தேநீர்
காலை நாளிதழ்கள் வாசிக்கக்
காத்திருந்த மேசைகள்

குக்கிராமத் தகுதிகளைத் தாண்டிய குக்கிராமம்
வாட்ஸ் அப் வரை வளர்ந்துவிட்ட தொழில் நுட்பம்
பண மதிப்பு இழப்பு ஜிஎஸ்டி யானைகளைக்
காரசாரமாகத் தடவிக் கொண்டிருந்தவர்கள்
என்னை எளிதில் அடையாளம் கண்டனர்
என் அப்பாவின் பட்டப் பெயரோடு
நண்பனின் மறைவு பற்றியும் சொன்னார் அதில் ஒருவர்

நானும் ஒரு தேநீரை வாங்கிக் குடித்த பின்
குவளையைக் கழுவிக் கவிழ்த்து வைத்தேன்
அதற்குரிய இடத்தில்
குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் நண்பன்
அவன் முகமும் ரோஜா மாலையும் வாடாமல்
நண்பனின் முகத்தை வருத்தத்தில்
வருடினேன் கண்ணாடியில்

என் கண்ணீரைத் துடைக்க
சில நேரங்களில்
கைக்குட்டை போதவில்லை
சில நேரங்களில்
அதற்குச் சாமர்த்தியம் போதவில்லை
துக்கத்தின் சுவை உப்பு எனச் சொன்னது
அதைக் கரைத்து வந்த கண்ணீர்

நண்பனை அடக்கம் செய்ய மாலை ஆனது
ஊருக்கு வெளியே
வெகு தொலைவில் தனித்து இருந்த சுடுகாட்டில்
சாதிக் கட்டுப்பாடு பிணங்களுக்கும்

“எவ்வளவு சாலைகளில் நடக்கவேண்டும் ஒரு மனிதன்
அவனை நீங்கள் மனிதன் என்று அழைப்பதற்கு?” எனத் தொடங்கும்
பாப் டிலனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன
இரவில் நான் சிற்றுந்து ஏறுகையில்
எத்தனை (தலை)முறை நாங்கள் பயணிக்கவேண்டும்
உங்களுடன் முன் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க?

எத்தனைக் குவளைகளை நாங்கள் கழுவ வேண்டும்
உங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த?
எத்தனைப் பிணங்களை நாங்கள் புதைக்க வேண்டும்
உங்கள் பிணங்களோடு எங்கள் பிணங்களைப் புதைக்க?
அருகிலிருந்த ஒரு சிறு நகரம் செல்லும் வரை
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல
யாருமின்றிப் பயணித்தன………..எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல் 

strengthen the struggle against autocracy. Peoples Democracy editorial Tamil Translation. Book Day Branch of Bharathi Puthakalayam

எதேச்சதிகாரத்திற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம் – தமிழில்: ச. வீரமணி

நாட்டில், மாநிலங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்காமலோ, கூட்டாட்சி அமைப்பின் வரம்புகளை மீறாமலோ ஒருநாள் கூட கடந்து செல்லவில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக தடுப்பூசிக் கொள்கையை அறிவிக்கிறது. அதன்படி, மாநில அரசாங்கங்கள் அவர்களாகவே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திட வேண்டும்…