நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி

நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி




இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய இந்நூலின் ஆசிரியர்.
தமிழில் : தேவா.

1970 களில் இலங்கையில் இப்புத்தகமானது வெளியிடப்பட்டது.

மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீன்பிடி முறை, நம்பிக்கை எல்லாவற்றையும் தெளிவாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். கதையில் வரும் சுமனே 17 வயது மீனவ சிறுவன். விடியலின் முதல் கீற்று படற தொடங்கும் போது அவன் கடற்கரையில் இருப்பான் ஏனென்றால் எப்போதுமே இலகுவாக கிடைத்து விடாத மீனாம்பலை தேடி. மீனாம்பல் என்பது திமிங்கலத்தின் கழிவு ஆகும் அது ஒரு சிறிய தூண்டின் விலை மிகப் பெரியதாகும் அதுதான் தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்பிக்கை கொண்டு விடாது ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டே இருப்பான் அதனால் கிராமத்தில் உள்ளவர்கள் அவனை கேலியாக அம்பரைய என்று தான் அழைப்பார்கள். சுமன் மற்றும் அவனது இரண்டு தங்கைகள் வயது முதிர்ந்த பாட்டி ஆகியோரே குடும்பத்தின் உறுப்பினர்கள். வயதான பாட்டியையும் தன் தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் கடமையும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. தன்னுடைய தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்.

தனக்குத் தெரிந்த மீன்பிடித்தொழில் மூலம் அன்றாட உணவுக்கு தேவையான வருமானம் ஈட்ட முயற்சிப்பான். அவனது மீன்பிடிமுறை மிகச் சாதாரணமானது ஆற்றினுள் இறங்கி அவன் சரி என நினைக்கும் இடத்தில் மரக்கிளைகளை அங்கும் இங்குமாக போட்டு வைப்பான் தாறுமாறான ஒரு கொக்கு கூடு போல் அது இருக்கும் அதன் நடுவே சோற்றை தூவி வைப்பான். ஏனென்றால் புண்ணாக்கு வாங்க அவனிடம் பணம் இருக்காது. இதில் கிழிந்த வலையில் தான் மீன் பிடிப்பான் அதுவும் யாரோ வேண்டாம் என்று தூக்கிப் போட்ட வலையை அவனது பாட்டி தைத்துக் கொடுப்பார். அந்த வலையே வைத்து தான் மீன் பிடித்து அந்த மீன்களை விற்று தினமும் சாப்பாட்டிற்கு வழி செய்வான். இவ்வாறு மீன்பிடித்தும் தேங்காய் புடுங்கியும் சிறுசிறு வேலைகள் செய்தும் வருமானம் ஈட்ட முயற்சிப்பான். ஆனாலும் அது அவர்களின்மூன்று வேளை உணவுக்கு கூட போதவில்லை.

அதனால் கூடுதலாக வருமானம் ஈட்ட சாராயம் கடத்த முற்படுகிறான். சாராயம் கடத்தி சிறை செல்கிறான். சிறை தண்டனையை அனுபவிக்கும் போது காவலாளி தண்டனை காலம் முடிந்து நீ விடுதலையான பின்பு என்ன செய்யப் போகிறாய் என்று சுமனிடம் கேட்கிறார். அதற்கு அவன் வீடு கட்ட போகிறேன் சகோதரிகளை படிக்கவைக்க போகிறேன், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், பாட்டியை பார்த்துக் கொள்வேன். என்று சொல்கிறான் அதற்கு காவலாளி இதற்கெல்லாம் எப்படி உழைக்கப் போகிறாய் என்று கேட்கும் பொழுது அதற்கு அவன் நான் எப்படியாவது ஆம்பல் கண்டெடுக்க வேண்டும் திரும்பவும் மீன்பிடிக்க வேண்டும் எனக்கு சொந்தமான நல்ல கூரை சுவர்கள் தரை என எல்லாம் உள்ள ஒரு வீட்டை சம்பாதிக்கும் வரை ஆம்பல் தேடுவதை நான் விடப் போவதில்லை என்கிறான். ஆம் அவனுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான் மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு நல்ல கூரை வீட்டிற்க்காக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் போராடிக் கொண்டே இருக்கிறான் ஏனென்றால் கிராமத்திலேயே அவனது வீடுதான் மிகப் பரிதாபமானது சித்தப்பாவின் வீட்டு சுவரோடு சாய்வாக இறக்கிய ஓலை கூரை. மூங்கிலான சுவர். கதவோ ஜன்னல்களோ இல்லை. மழை பெய்தால் கூரை ஒழுகும்.

எல்லோரும் ஒழுகாத இடத்தில் நெருங்கி இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இதுவே அவனது வீட்டு நிலை. எனவே நல்ல கூரை உள்ள ஒரு வீடு என்பதே அவனது பெரும் கனவாக இருந்தது. தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின் சிறையில் ஓர் உயர் அதிகாரியின் உதவியால் படகும், வலையும் கிடைக்க பெறுகிறான். அதன் மூலம் மீன்பிடித் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுகிறான். ஒருநாள் கிராமத்தை ஒட்டி உள்ள ப்ரீஸ் தோட்ட நிலம் மக்களுக்குபிரித்து பகிர்ந்து அளிக்க இருப்பதாக அறிகிறான் . ஆனால் அவனது பாட்டி வயது முதிர்ந்த காரணத்தாலும் சுமன் வயது குறைவாக உள்ள காரணத்தாலும் அவனுக்கு நிலம் கிடைக்கவில்லை எனவே அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகிறான் அரசாங்கத்தின் உதவியால் எல்லோரும் வேண்டாம் என்று கழித்து விடப்பட்ட நிலத்தில் இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நிலம் அவனுக்கு கிடைக்கிறது. இதுவரை அவன் சிறிது சிறிதாக சேமித்த பணத்தின் மூலம் பாதி வீட்டை கட்டி முடிக்கிறான் இந்நிலையில் அவனுக்கு ஒரு சில மருத்துவ காரணங்களால் உடல்நிலை சரியில்லாமல் போனபோது சேமிப்பில் இருந்த பணமும் செலவாகிறது. எனவே சுமன் தனக்கு வழங்கப்பட்ட கழிவு நிலத்தை சமப்படுத்தும் போது அதில் கிடைத்த மண்ணையும் கல்லையும் வைத்து வைத்து வீட்டை கட்டி முடிக்கிறான்.

பாட்டி சிறு சிறு செடிகளை நட்டு வீட்டை மேலும் அழகு படுத்துகிறாள். இப்போது கிராமத்திலேயே அவனது வீடு தான் மிகவும் அழகாக இருந்தது அவன் கண்ட கனவு இல்லம் நனவாகியது. அவனுக்கென்று இப்போது சொந்தமான படகும் மீன்பிடி வலையும் உள்ளது .

தன்னுடைய கடின உழைப்பால் அவன் தன்னுடைய கனவை நனைவாக்கினான் விடாமுயற்சி கடின உழைப்பு என்பது மீனவர்களுக்கே உரித்தான குணம் அதை கதையில் பல இடங்களில் காணலாம். சோர்ந்து போகும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அம்பரய புத்தகம் கற்றுக் கொடுத்தது நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.

தோழர் A.காயத்ரி
மூன்றாம் ஆண்டு,
மதுரை சட்டக் கல்லூரி.

நூல் : அம்பரய
ஆசிரியர் : உசுல பி.விஜயசூரிய
தமிழில்: தேவா
வெளியீடு : வடலி
விலை : ரூ. 115/-
பக்கம் : 175
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

bharathiputhakalayam@gmail.com

Kavithai thamizha's Poems கவிதை தமிழனின் கவிதைகள்

கவிதை தமிழனின் கவிதைகள்




உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே….!

உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே….!

வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை…!

நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை…!

உடலை வருத்தி
ஓய்வை மறந்து
இயங்கும் உயர்பிறப்பே…!

உலகம் சுழல
உறவுகள் மகிழ
உழைக்கும் எம்மக்களே…!

உழையுங்கள் உயருங்கள்
உறவோடு மகிழுங்கள்….!
மேன்மைமிக்க உங்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்…!

**********************************************************
கல்லூரி வாழ்கைபோல இருந்ததில்லை எங்கும்…..!
கரையாத நினைவுகள் நெஞ்சின் ஓரமாய் தங்கும்….!
அரட்டைகள் அடித்துவிட்டு
நள்ளிரவே தூங்கும்….!
தருணங்கள் மீண்டும்வருமா என்றுமனம் ஏங்கும்….!

அதுபோல ஓர்நாளை
எதிர்நோக்கி காத்திருந்தேன்….!
ஆனாலும் இதுவரையில்
ஈடேற மறுக்கிறதே…..!
எங்கெங்கோ பிறந்திருந்தோம்,
நாமங்கே இணைந்திருந்தோம்…..!
நட்பென்ற ஓர்மொழியால்,
நகம்சதைபோல் பிணைந்திருந்தோம்…..!

அந்தநான்கு வருடங்கள்,
நினைவில்நீங்கா நிமிடங்கள்….!
இடையிடையே திருப்பங்கள்,
ஈடில்லா சொந்தங்கள்….!
எதிர்பாலின ஈர்ப்பியலால்,
மலர்ந்திருந்த காதல்கள்…..!
எதிர்கால இலக்கறியாது
கடந்துவிட்ட காலங்கள்…..!

எதிர்கால சிந்தனையில்லை,.
எதைப்பற்றியும் கவலையுமில்லை….!
குடும்பச்சுமை முதுகில்இல்லை,
கொடுத்துவைத்த வாழ்க்கையிதுவோ…!

பையில்பெரும் பணமுமில்லை,
எம்தலையில் கணமுமில்லை…..!
எதிர்கொண்ட இன்பமதற்கோ,
எல்லையும் இல்லவே இல்லை….!

************************************
மெய்போல பொய்யையும்
பாரெங்கும் பரப்பும்…!
ஒருபடத்தை பலகுழுவில்
பதிவிட்டு வருத்தும்…!
இவனாலே இளம்விழிகள்
இரவெங்கும் விழிக்கும்…!
நேரத்தின் மாண்பினையும்
நேர்த்தியாக அழிக்கும்…!

அப்டேட் செய்யச்சொல்லி
அவ்வப்போது வதைக்கும்…!
ஆண்ட்ராய்டு போன்களின்
ஆயுளையும் குறைக்கும்…!
நாம்தொலைத்த உறவுகளை
எளிதாக இணைக்கும்…!
நாள்முழுக்க நம்மோடு
பயணிக்க துடிக்கும்…!

காலத்தை விரயமாக்கும்
சதிகாரன் கண்டுபிடிப்பு…!
நண்பர்கள் கைகோர்க்கும்
அறிவியலின் அன்பளிப்பு…!
ஆயிரமாயிரம் தகவல்களின்
ஒட்டுமொத்த அணிவகுப்பு…!
அவ்வப்போது சலசலப்பு
அளவற்ற கலகலப்பு – அட
அதுதாங்க நம்ம வாட்ஸ்அப்பு…!

***************************************
ஆண்டவன் நேரில் வந்திட மாட்டான்…!
அதனால் அன்னையை அனுப்பிவைத்தான்.!
ஆனால் அவளோ,கடவுளை விஞ்சி
அன்பை பகிர்ந்தே, உயர்ந்து நின்றாள்..!

கேட்டது யாவையும், எம்மத இறைவனும்
உடனடியாகத் தருவதும் இல்லை..!
கேட்காமலே தந்திடுவாளே அவள் போல்
உலகில் எவருமே இல்லை…!

பிள்ளையின் சிறு வெற்றியைக்கூட,
சாதனை போலவள் மெச்சிடுவாளே….!
உதட்டில் நாளும் உச்சரித்தே
ஊரார் முன்பவள் உளமகிழ்வாளே…!

பிழையாய் அவளை ஒதுக்கி வைத்தாலும்
பிள்ளைகள் நம்மை வெறுத்திட மாட்டாள்…!
அன்பை நாமும் தர மறுத்தாலும்
அன்னை அவளோ, ஒதுங்கிட மாட்டாள்…!

கள்ளங் கபடம், இல்லா அன்பை
கடவுளர் கூட காட்டுவதில்லை..!
காசு கொடுத்த மாந்தருக்கே
கருவறை வரையில் தரிசனம் தருவார்…!

முந்நூறு நாட்கள் நம்மை சுமந்து
கருவறை தன்னில் இடமும் தந்து
வாழ்கிற வரையில், நம்மை நினைந்து
வீழ்கிற உயிரை, மறந்திடலாமா…!

அவள்செய்த தியாகத்திற்கு தந்திட ஈடாய்
அவனி முழுவதும் போதாது, உணர்வாய்..!
குருதியை பாலாய், கொடுத்தவள் அறிவாய்…!
தாயென்னும் இறைவியை நித்தம் தொழுவாய்…!

*****************************************************
எளியோர்க்கும் புரியும்படி
எழுதி வைப்பது
எளியநடையில் தமிழ்ச்சொற்களை
தொகுத்து அமைப்பது

வந்துவிழும் வார்த்தைகளை
அடுக்கி வைப்பது….!
வரிமுழுதும் எதுகை,மோனை
அமைத்து வைப்பது…!

கனவுகளை நடுநடுவே
திணித்து வைப்பது…!
கற்பனைகளை கண்முன்னே
விரிய வைப்பது…!

கவிதைபற்றி இதற்குமேலே
என்ன சொல்வது..?
மொத்தத்தில் அதன்பணியோ
மனதை வெல்வது…!

*****************************
அண்ணா…
நாடாளும் மன்றத்தினை
நாவாலே வென்றவனே…! தமிழ்நாடென பெயர்சூட்டிய
தன்மானத் தமிழ்மகனே…!
விந்திய மலைதாண்டி
இந்திக்கு வேலையில்லை…!
திராவிட இனம்போல
திராணிகொண்டோர் எவருமில்லை…!

கலப்புத் திருமணத்தை
கலங்காமல் ஆதரித்தாய்….!
சட்டத்தை கொண்டுவந்து
சரித்திரத்தில் இடம்பிடித்தாய்…!

சமூக நீதிகாக்க
சளைக்காமல் நீ உழைத்தாய்…!
சாதியத்தை வேரறுக்க
சட்டங்கள் இயற்றிவைத்தாய்…!

பெரியாரியம் பேசிவந்த
பெருமைமிகு தலைமகனே….!
மகத்தான ஆட்சியினை
மறவாது தமிழினமே…!

*******************************
நம்மாழ்வார் நம்மை ஆள்வார்…!
இவரை யாரென்றறியா தமிழினம்-இங்கு
இருப்பதால் வலிக்கிறது என்மனம்…!
தன்னலம் அறியா இவர்குணம்-இவர்
தமிழ்நில இயற்கையின் நூலகம்…!

இயற்கை வேளாண்மை இவர்மூச்சு-நம்மை
இழுத்து கிறங்கடிக்கும் இவர்ப்பேச்சு…!
சற்றும் ஓய்வறியா இளைஞரிவர்- சூழலில்
சர்வமும் கற்றறிந்த கலைஞரிவர்…!

ஒருபோதும் அழிவில்லா ஒருதலைவர்-இவர்
ஒருவரே வேளாண்மைத் தமிழ்த்தலைவர்…!
இன்றென் வரிபோற்றும் நம்மாழ்வார்…!
என்றும் நல்வழியில் நமை ஆள்வார்…!

*******************************************
வ.உ.சி வரலாற்றை
வாசித்து முடிப்பதற்குள்,
கண்கள் குளமாகி,
கசிந்துருகிப் போகுமையா…!

அமுதத் தமிழ் மொழியில்
ஆழ்ந்த அறிவு மிக்கார்…!
வறுமையில் உழல்வோர்க்கு
வழக்காடும் குணம் உடையார்…!

அந்நிய நாட்டுப் பொருட்களை
அவர்கள் முன்னே தீயிட்டார்…!
பாரதியுடன் நட்பு கொண்டு,
பட்டாளிக்காய், பாடு பட்டார்…!

சுப்பிர மணிய சிவாவோடு,
சுதந்திரப் போரில் ஈடுபட்டார்…!
விடுதலை வீர வரலாற்றில்
விபரீத தீர்ப்பைப் பெற்றார்…!

சணல் நூற்கப் பணிக்கப்பட்டு
சகிக்க முடியா இன்னலுற்றார்…!
சிறப்பு மிக்க வழக்கறிஞன்
சிறை பட்டு செக்கிழுத்தார் …!

மண்ணுக்காய் மக்களுக்காய்
பொன்பொருளை இழந்திருந்தார்…!
சிறை முடிந்து திரும்புகையில்
மறுபடியும், மனம் நொந்தார்…!

வரவேற்க எவரும் இல்லை
வந்து தங்க வீடுமில்லை
வாங்கி மேவிய கப்பலில்லை
ஏங்கி தவித்தான் குறைவாழ்வில்…!

தென்னாட்டுத் திலகரின்,
தியாகப் பெரு வாழ்வை,
இந்நாட்டில் வாழுகிற
மக்கள் நாம் மறவலாமா…!

அவர்தம் தியாகம்,
அறியாத் தலைமுறை
இருப்பது வன்றோ
இழி நிலைமை…!

அவர்தம் நூற்றாண்டை
அழகுற நடத்துதல்
அரசின் இன்றைய
முதல் கடமை…!

Thathavin Thattu Koodai ShortStory By Meera Pandi மீராபாண்டியின் தாத்தாவின் தட்டுக்கூடை குறுங்கதை

தாத்தாவின் தட்டுக்கூடை குறுங்கதை – மீராபாண்டி




எண்பது வயது நிறையப் போகும் எங்கள் தாத்தாவிற்கு விடுமுறை அளித்ததேயில்லை அவர் வாழ்வை சுமந்து திரியும் அலுமினிய பாத்திரங்கள் நிறைந்த தட்டுக்கூடை…

வித விதமாய் சோற்றுப் பானையும் குழம்பு சட்டியும்… வறுவல் கடாயும், இட்லி பானையும், பசி தீர்க்கும் தட்டுகளும், ஆப்பைக் கரண்டிகளும் அண்டாவும் குண்டாவும் அந்தக் கூடையில் வசித்திருக்கும்…

பொங்கல் தீபாவளி கோவில் திருவிழாக்களுக்கும் பண்டிகைகளுக்குப் பஞ்சமே இல்லை…

எத்தனை பலத்த காற்று வீசி நெற்கதிர்கள் சாய்ந்தாலும் தாத்தா விற்கும் சோற்றுப் பானைகளில் கு(கொ)தித்து விளையாடி பசி தீர்க்க எப்படியேனும் தப்பிப் பிழைத்திடும் சில நெல் மணிகள்…

எத்தனை தடைகாலம் வந்தாலும் எப்படியேனும் துள்ளி வந்து குழம்பு சட்டியில் நீந்தும் மீனினங்கள்…

எத்தனை விலைவாசி ஏற்றத்திலும் எப்படியேனும் சில காயும் கறியும் கொதித்தே தீரும் வறுவல் கடாயும் எப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சம் வந்தாலும் துளித் துளியாய்க் கசிந்து நிறையும் அண்டாவும் குத்தண்டாக்களும்…

எங்களுக்கு எப்போதும் பசி தெரியாமல் பார்த்துக் கொண்டது…

வியாபாரம் முடிந்து வீடு திரும்பு தாத்தா கூடை குறைந்திருந்தால் எங்களுக்கான தின்பண்டங்களும் அவரது டவுசர் பையும் நிறைந்திருக்கும்…

பழையன கழித்துப் புதிய பாத்திரங்களைப் புகுத்தும் தாத்தாவின் தட்டு கூடைக்கு நித்தமும் போகிதான்…

அவரோடு வாழும் எங்களுக்கு எப்போதும் பண்டிகை தான்…

காலத்தைத் தன் கால்களால் மிதித்து உருட்டிக் கொண்டிருக்கும் தாத்தாவும் புன்னைகைத்து பளபளத்திருக்கும் தாத்தாவின் தட்டுக்கூடையும் எப்போதும் எங்களுக்கு வாழ்வு கொடுத்து வழிநடத்தும் சூரிய வெப்ப விளக்குகள்…