தங்கேஸ் கவிதை thangesh kavithai

தங்கேஸ் கவிதை

இதயங்கள்... இருளின் முலைக்காம்பை சப்பியபடி விழித்துக் கொண்டிருக்கும்  ஒற்றை நிலவை  பார்க்கச் சகிக்கவில்லை எட்டினால் அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் மடியில் அமர்த்திக்கொள்ள  இங்கே இப்படி  இருளில்  கைவிடப்பட்ட  எத்தனை எத்தனை இதயங்கள் பரிதவித்துக் கொண்டு  இருக்கின்றனவோ யார் கண்டது?…
சசிகலா திருமால் கவிதை

சசிகலா திருமால் கவிதை




காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…

ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…

மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…

உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…

என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…

சசிகலா திருமால்
கும்பகோணம்.

இரா. மதிராஜ் கவிதை

இரா. மதிராஜ் கவிதை




உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன

கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ?

வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும்.

தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது.

பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம் இப்போது
பாலித்தீன் பைகளில்.

நான் எங்கே இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னிடம் மட்டுமே.

விலையுர்ந்த மகிழுந்தில்
சோகப் பாடல்களே
கேட்கின்றன

பரபரப்பான சாலை
ஓரங்களில்
முட்செடி
வேடமிட்டு
ஒளிந்திருக்கும்
இலந்தை.

– இரா. மதிராஜ்

காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
அலைப்பேசி
9788475722.

கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்

கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்




நாங்கள்
மனிதர்கள் தானா….!!!!
*****************************
மாடி கட்டிடம்
மல்லாக்க
படுத்துக்கொண்டு
குடிசையை
பார்த்துச் சிரிக்கிறது
குடிசையில்
வாழ்பவர்களெல்லாம்
மனிதர்கள்
இல்லையென்று
சொல்லிக்கொண்டு

வெயில்
காலத்தில்
காய்ந்து போன
எங்களின்
குரவலைக்கு
நீரை ஊற்றுகிறது
மழை காலத்தில்
குடிநீரோடு கழிவு நீரும்
சாக்கடை நீரும் கலந்தவாறே,

நமுத்துப்
போன அரிசியையும்
கிழிந்து
போன போர்வையையும்
தருகிறார்கள்
கதர் வேட்டிக் கந்தசாமிகள்,
நீ இங்கேயே இரு,
இங்கே
இருந்து மடிந்து
போயென்று
மனதுக்குள்ளே வாயை வளர்த்து
சொல்லிக் கொண்டே ,

கொடுத்த அரிசியும்
போர்வையும்
நாம் வாழ்வதற்கு அல்ல
நாளை நாம்
இறந்து போனால்
தலைமாட்டில்
வைத்துப் படைப்பதற்கு,

பாம்பு,
பூரான், பல்லி
போன்றவற்றிற்கு
அடைக்கலம்
கொடுக்கின்றன
எங்கள் குடிசைகள்,

நீங்கள்
கொடுத்த
தேர்தல் வாக்குறுதிச் சொற்களை
பேப்பர்களில் எழுதி
காகிதக் கப்பலாக
செய்து மழைநீரில்
ஓட்டுகிறோம்
மூழ்கிப்போன
உங்கள் ஊழல் ஊராட்சியின் எதிரே,

தெருவெள்ளாம்
மழைநீர்
மழைநீரில்
மிதக்கிறது குடிசைகள், குடிசையிலிருந்து
எட்டி பார்க்கிறது
மழைநீரில்
அடித்து வரப்பட்ட பாம்பொன்று

காலில் விழுந்து
வாக்கு கேட்டவர்கள்
சிவப்பு நிற
காரில் ஏறிச் செல்கிறார்கள் ,

சாலையெங்கும்
பீ நாற்றங்கள்
நீர் கட்டித்தருவோம்
யென்று சொன்ன
பொது கழிப்பிடங்கள் இதுதானே ?

கொஞ்சம்
திரும்பி பாருங்களேன்
நாங்களும்
மனிதர்கள் தான்,

இதய விளக்கு…..!!!!
***********************
“நீ இல்லாத
இந்த குடிசைக்காரனின்
வீட்டில் இதயமாக
எறிந்து கொண்டிருக்கிறது
உனது நினைவலைகள் ”

“விளக்கை ஏற்றி
வைத்துவிட்டு
ஏன் இருட்டினில்
ஒளிந்து கொண்டிருக்கிறாய்
வா நாம் சேர்ந்தே எறிவோம்
வெளிச்சமும் இருட்டுமாக ”

“இருண்டு
போன குடிசைக்காரனின்
குடிசையில் தீபமாக
எறிந்து கொண்டிருக்கிறது
வெடித்து சிதறாத
உனது நினைவலைகளை
சுமந்த மண்சுவர்களாகிய
மனமெனும் மண் ”

“சுட்ட
மண்ணில் சுடப்பட்ட
அகல்விளக்கு
திரிகளென்னும்
தூண்டுதலால் எரிகிறது
வீடெங்கும்
காற்றுப்பைகளில்
அடைக்கப்பட்ட
உனது நினைவுகளை சுமந்தவாறு ”

“எறிந்து முடிந்த
என் எலும்பு குச்சிகளை
மீண்டும் உடலோடு
ஒட்டி வைத்து
நீ கொடுத்த விளக்கை ஏற்றுகிறேன் மீண்டும் எரிகிறது குடிசை ”

தீப்பெட்டியை
கடண்கேட்டு
நிற்கிற்கும்
பக்கத்துவீட்டு பாட்டிக்கு
எறிந்து கொண்டிருந்த
எலும்பு குச்சிகளை கொடுத்தனுப்புகிறேன்
அவளோ பெரிய மாடி வீட்டில்
வாடகைக்கு வாழ்கிறாள் ,

குடிசை…..!!!!!
****************
அந்த கடைசி
தெருவில் தான்
என் வீடு இன்னுமும் இருக்கு
ஆனால் வீடு
என்றொரு பெயரை
மட்டுமே தான்
அது தாங்கிக்கொண்டிருக்கு ,

நினைவலைகள்….!!!!!!
**************************
நேற்றைய கனவில்
அப்பா வந்து சிறிது நேரம் உரையாற்றியாற்றி
விட்டு சென்றார்
திடுக்கிட்டு எழுந்து
கண்ட கனவிலிருந்து
வெளியேறி
அங்கும் இங்குமாக
மனதின் கண்களால்
நோட்டமிட்டவாறு
சுவற்றை பார்க்கிறேன்
ஆணியால் அறையப்பட்டு
தொங்கவிடப்பட்டிருந்தது
அப்பாவின்
பழைய புகைப்படம்,

தீ….!!!!
********
ஒடுக்கப்பட்ட
தொழிலாளர்களின்
வயிற்றில் வேள்வி தீயை
மூட்டிகிறார்கள் முதலாளிகள்,

அவன் வீட்டு
கழிப்பறைகள்
எங்களது
வேர்வை துளிகளால் சுத்தமாகிறது,

அப்போது
வெந்து மடிந்தோம் வெண்மணியில்
இப்பொழுதும்
வெந்து மடிகிறோம்
மலக்குழியில்
நீங்கள்
கழித்த மலங்கள்
மன மனக்கிறது
எங்களது கைகளில்,
தண்டவாள பாதையெங்கும்
தலையில்லா
முன்டங்கலாக
எங்களது பிணங்கள்……..!!!!!!

“””நீங்கள்
நீங்கலாக இருக்கும்வரை
நாங்கள்
நாய்களாதான் இருக்க முடியும்;

அறிவு சூரியன்…..!!!!
************************
சேறும் சகதியும்
சுவரை அழுக்காக்கலாம்
சூரியனை
அழுக்காக்க முடியுமா….?
அழுக்குப்படுத்த
முடியாத
அறிவுச் சூரியன்
அண்ணல் அம்பேத்கர்
அவர்கள் அவரே ,

உலக சூரியன்
கிழக்கிலிருந்து பிறக்கிறான்
உழைக்கும்
மக்களுக்கான
சூரியன் மேற்கிலிருந்து
பிறக்கிறான்,
சூரியனை
சுற்றியே பல கோள்கள்
எங்கள் அறிவு
சூரியனை
சுற்றியே பல உலக நாடுகள்,

நீங்கள்
ஆயுதங்களோடு
போரிட்டுக் கொண்டிருந்த
போது தன்
அறிவாயுதத்தால்
போரிட்டு வெற்றி கண்டவர்,

அவர்
அவர்களுக்கானவர் அல்ல
எல்லோருக்குமானவர்
அறிவை நம்பியவர்,
அகிலத்தை ஆள்பவர்,

காதல்….!!!!
*************
பனிக்கட்டியாக கரைந்து
உருகி பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,

நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,

மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறை கையுறையிலே
வைத்து அலைபவள்

இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புது புத்தகமாய் மினுக்குறாள்,

தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரே
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடியது

மேலாடையாக போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
களைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?

உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசைப்
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியை போல…….!!!!

பேராசான் புத்தன்…..!!!!
****************************
தன் ஆசைகளை துறந்து
போதிமரங்கள் தான் தன் வீடென
கூறிக் கொண்டிருந்த
புத்தனின் சிலையை செதுக்க
ஆரம்பிக்கும் சிற்பியின்
கைகளில் முளைக்க ஆரம்பிக்கிறது
உலகத்திற்கான ஞானம்,

அம்மாவுக்கும்
மகனுக்குமான உறவு …!!!!
******************************
கருவறையின்
முதல் பந்தலில்
ஆரம்பிக்கப்பட்ட உனக்கும் எனக்குமாக தொப்புள் கொடி முடிச்சி கல்லறையின்
கடைசி பந்தலில்
அவிழப்படுகிறது
மரணமெனும் உயிர் புரிதலில்,

பறவையின் நோக்கம்…!!!!!
*******************************
அவைகள்
சிறிய பறவையே
பெரிய பறவையே
அவைகள் எல்லாம்
பறவைகளாக ஆனதே
வானத்தில் பறப்பதற்கு தானே,

மழை…..!!!!
**************
நீ கைநீட்டிய பிறகு தான்
அம்மழையும் மண்ணுக்கு உரமாகிறது
அதில் நான் சிறு பூவாக பூக்கும் துளிராகிறேன்,

மரம் வளர்ப்போம்….!!!!!!
*****************************
வெட்டப்பட்ட மரத்துக்காக
கவிதை ஒன்றை எழுத முற்படும் பொழுதெல்லாம் காகிதமும்
கண்ணீர் விட்டு அழுகிறது
நீ என்
உயிரில் தான்
கவிதை வடிக்கிறாய்யென்று ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,

இரா.மதிராஜ் கவிதைகள்

இரா.மதிராஜ் கவிதைகள்




இதயத் துடிப்பு
நிற்கும் போது
மட்டுமல்ல,
உன் நினைவுகள்
மறக்கும் போதும்
மரணிக்கிறேன்.

கண்ணிலிருந்து
வரும்
கண்ணீரும்
எரி தணலாய்
கொதிக்கிறது,

உன்னைப் பற்றிய
செய்திகளே
இன்னும்
என்னை
வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது.

உறவுகள் கூடி
இழுக்கும் தேரில்
உட்கார்ந்து
கொண்டிருக்கும்
நான்
அடிக்கடி
தனிமையாயிருக்கிறேன்.

அன்று என்ன
சொன்னாய்?
இப்போது என்ன
செய்து கொண்டிருக்கிறாய்
என்றொரு கேள்வி
கேட்கிறது,

ஆழ்கடல் பெரிதென்று
நினைக்கிறார்கள்
கண்ணீர்க் கடலில்
விழாதவர்கள்.

தேவதைகளின்
ஊர்வலத்தில்
குறுக்கே
சென்றவர்களும்
வாழ்க்கையைத்
தொலைக்கிறார்கள்.

உலகைச் சுற்றவைப்பது
சூரியனும், சத்திரனுமல்ல,
தானமும், தாயன்பும்
தான்.

இன்னும் ஆவலுடன்
பார்த்து ரசித்துக்
கொண்டிருப்பது
வெற்றி பெறாமல்
முயற்சி செய்துகொண்டிருக்கும்

மனிதன் தான்.

இரா. மதிராஜ்,
97884 75722.

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




பிறழ்
*******
நரகத்தில் தான் வாழ்கிறேன்
நரகம் எனத் தெரிந்து தான் வாழ்கிறேன்
நரகத்தில் உயிரோடு தான் இருக்கிறேன்
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில்
இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்
அழிக்க வேண்டிய சொல்
அன்பைக் குடிக்கும் வெயில்
அதிகாரம்
கபர்குழியில் சாந்தமானான் கவிஞன்
கவிதைகளின் கோபம் கூடுகிறது
காலம் ஒருநாள் கண்ணீர் சிந்தும்
கடந்து செல்கிறான் கவிஞன்
கண்ணீர் வழிய கசிகிறேன்
மனம் காலத்தைத் தூற்றுகிறது
ஆண் சிட்டுக்குருவி சிறு குச்சியைக் கொண்டு வந்தது
பெண் குருவியும் ஒன்று
இரண்டும் கட்டியது காதல்
ஆபத்தில் கை கொடுப்பதல்ல
துக்கத்தில் பகிர்ந்து கொள்வதல்ல
இதயத்தில் இடம் கொடுப்பது நட்பு
காலம் கண்ணீர் வடிக்கிறது
கவிஞனின் ஆன்மாவில் துடிப்படங்கவில்லை
கனவுகளில் நரகம் மெல்ல வளர்கிறது
தியாகம் இங்கே சிரிப்புக்குள்ளாகிறது
களவாணித்தனம் பெருமையோடு போற்றப்படுகிறது
இவர்கள் என்ன ஜனங்கள்?

இது என்னதேசம்.?

தூண்டில்காரனின் தியானம்
***********************************
ஆயுதம் தீர்வல்ல
அகிம்சை தீர்வல்ல

அநியாயங்களை எதிர்க்கும் மக்கள் திரளின் கோபமே தீர்வு
மழை பெய்கிறது
மண் மணம் எழவில்லை
சாக்கடை நாத்தம் சகிக்க முடியவில்லை
முச்சந்தியில் அலங்காரம்
கோலாகல ஊர்வலம்
கடைசியில் கடலில் பிணம்
பறக்க நினைக்கிறேன்
கூர் அம்புகள் குறிபார்க்குமே
பறக்கும் ஆசையோடு நடக்கிறேன்
மார்க்ஸிசம் வேணுமா ?
நக்சலிசம் வேணுமா ?
அடையாள அரசியல் வேணுமா?
விடுதலை அரசியல் வேணும்
எதிரிகளை விட்டு விட்டீர்கள்
தோழர்களோடு மல்லுக்கு நிற்கிறீர்கள்
ஞாபகம் கொள்ளுங்கள்
எதிரி இரக்கமற்றவன்
ஓடிக் கொண்டிருக்கும் ஆறு
ஆடிக் கொண்டிருக்கும் மரம்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அன்பை மொழிபெயர்த்தேன்
கணக்கற்ற பூக்கள் பறவைகள்
எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கின
பாழ் நிலத்தின் வழியே பயணிக்கிறேன்
ஆதுரத்துடன் என்னை உற்று நோக்குகிறது
ஏதும் உதவமுடியாத அதன் இயலாமை வெக்கையாய் கமழ்கிறது
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டாதவர்கள்
வேண்டுதலும் வேண்டாமையும் அவரவருக்குரியது.

வசந்ததீபன்

கவிதை வாத்தியார் – பாங்கைத் தமிழன்

கவிதை வாத்தியார் – பாங்கைத் தமிழன்




உம்மை
நினைவில் கொள்ளமாட்டோம்
என்றுதானே
இன்றைய நாளை
உங்கள் நினைவு நாளாக
கொடுத்து விட்டீர்?

வலிகளின் நிவாரணம்
உங்கள் வரிகள்;

பொய்களை
பிறருக்காக கவிதையில்
வைத்தீர்…

உண்மைகளை உடைத்து
இதயம் காட்டினீர்….

கவிதையை
எழுதியும், வாசித்தும்
காட்டிய கெட்டிக்கார
வாத்தியாரே…

இன்னும்
கற்றுக்கொள்ள
முயலாதோரெல்லாம்
கவிஞன் என்கின்றார்;

வாலி….
நீங்கள் கவிஞனாக
இல்லாமல் போயிருந்தால்
கவிதையின் வடிவமும் வீச்சும்
இந்நேரம் காணாமல் போயிருக்கும்!

சுவை நிறைந்த சொற்களை
சுவைத்துப் பார்த்து
கனியான கவிதைகளைக்
கொடுத்தக் கவிக்கிளி நீ!

பறந்துதானே போயிருக்கிறாய்?

திரும்ப வருவாய்தானே
தீஞ்சுவை கவிதைக் கனிகளோடு;
கவிஞர்களின் வடிவங்களில்? !

(காவியக் கவிமேதை வாலி விட்டுச்சென்ற வலிமிகுந்த நாள் நினைவாக )

– பாங்கைத் தமிழன்

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்




வலி தாங்கு
விசை கொண்டு எழு
உன் கனவுகளை மெய்ப்பி
காதல் வலி
இதயங்களில் உலாவும்
கண்ணீர் ஊற்றெடுக்கும்
கசிந்து கசிந்து மெதுவாக விசும்பும்
கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்
காதலில் கரைந்தோடும் இதயம்
காற்றாய் அலையும் அன்பின் ஆவி
மகத்தான சல்லிப்பயல்
வேளா வேளைக்கி சாப்பிடுகிறான்
தூக்கம் வராமலே
தூங்குவதாய்ச் சொல்கிறான்
என் சொல் உன் சொல்
வன் சொல் தீர்ந்திட மென் சொல்
முளைக்கிறது இன் சொல்
வெட்கத்தைத் தின்றுவிடு
வெட்கம் தின்றுவிடும்
வெட்கமே காதலின் சத்ரு
கடந்து போவது விடுதலையின் களிப்பு
கண்ணீரா? மகிழ்ச்சியா?
எல்லாம் ஒன்றுதான்
தயங்கித் தேங்குவதால்
பாரங்கள் லேசாவதில்லை
இம்மை எரிகடல்
மறுமை இருட்கடல்
இன்மையில் போகிறது என் படகு
வாலாட்டுபவை வாய் மூடியிருக்கும்
குனிந்தபடி திரிபவை
அரவம் காட்டா
ரோசமானவை

குரலெழுப்பி நடுங்க வைக்கும்.

– வசந்ததீபன்

கலாபுவன் கவிதைகள்

கலாபுவன் கவிதைகள்




நேசப் பெருவெளியில்

பெளர்ணமி நிலவொளியில் படகில் பயணிக்கையில்
துள்ளிடும் வெள்ளி மீன்கள் ஒளிர்ந்து கொண்டே
நீரில் தொடர்ந்து வந்தன
வியப்பாக முழுநிலவும் ஆற்று நீரில் பிம்பமாக
தொடந்து வந்தது
வானின் நட்சத்திரங்களின் பிம்பங்கள்
மீன்களுடன் போட்டி போட்டன
படகோட்டி துடுப்பிட்டுக் கொண்டே
மெல்லிய பாடலொன்று பாடினான்
நீண்ட பெருநிலத்தின் நிதம் தோன்றி நிதம் மறையும்
நிரை நிரையாய் செடிப்பூக்கள்
காலதேவன் கடமையது
காரிருளும் கதிரவன் ஒளியும் மாறி மாறி
பூமிப்பந்தை முறையிட்டு நிறப்பூச்சுப் பூச
ஏகாந்தமும் இரைச்சல்களும்
வாழ்வின் மொழிகளாகின்றன
வலியும் வழியும் ஜன்மாவின் இருகூறுகளாய்
மானுடரை ஆட்டுவிக்கின்றன
பிரபஞ்ச பெரு நடை இதுவே

ஆமென்

****************************
அதீதங்களால்
ஆட்கொண்டவனே..

நாட்குறிப்புகளைப் புரட்டிப் பார்க்கிறேன்..
என் ஞாபகங்கள் மீண்டும் துளிர்விட்டு
புரியாத புதிராய்
அடர் தாகங்களின் நீர்த் திவலைகளாய்
இதயத்தைக் கொல்கிறதே…

தொலைந்து போன கனவுச் சிதறலாய்
சிறகடித்த அந்த நீங்கா நினைவுகள்…

என் தொலைந்து போன கனவுகள்…

– கலா புவன்
லண்டன்