நூல் அறிமுகம்: மு.நியாஸ் அகமதுவின் ‘களவு போகும் கல்வி’ – முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: மு.நியாஸ் அகமதுவின் ‘களவு போகும் கல்வி’ – முனைவர் சு.பலராமன்



இனி உங்கள் குழந்தைகள் ‘கிராக்கிகள்’

உயர்கல்வி தொடர்பான GATS ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் ஏற்படப் போகும் பேராபத்தைக் குறித்து பேசும் நூல் ‘களவு போகும் கல்வி’. இந்த நூல் குறித்த பதிவுகளைப் பார்ப்போம்.

இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பின் 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் இந்தியாவில் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் வணிக நிறுவனங்களாக அமைத்துக் கொள்வதற்கு இடம் அளிக்க முன்வந்துள்ளது. அதனடிப்படையில், சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கையில் உலக வர்த்தக அமைப்பு (WTO)கென்யா நாட்டில் தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் 15 முதல் 18 வரை நடத்தவிருக்கும் 10ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் சேவையின் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் (GATS) இறுதி செய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டால் ஏற்படப்போகும் விளைவுகளை எச்சரிக்கையோடு கலந்துரையாடி விவரிக்கிறது இந்தப் புத்தகம். அதன்பால் கல்வி குறித்த பிரச்சினைகளைப் பேசிய நூல்களுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்த நூலாக களவு போகும் கல்வி உள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும், சந்தையில் நாம் அடிமைகளை உற்பத்தி செய்வோம், உயர் கல்வி என்பது பண்டமாக மாறும், மாணவர்கள் நுகர்வோர் (கிராக்கிகளாக) மாறுவார்கள், உள்ளூர் பெருமுதலாளிகளின் கையில் இருந்த கல்வி இனி உலகப் பெருமுதலாளிகளின் கையில் செல்லும் என்பதை வேதனை கலந்த பொறுப்போடு பேசுகிறார் நியாஸ் அகமது. இனி உங்கள் குழந்தைகள் கிராக்கிகள் என அழைக்கப்படுவார்கள், உங்கள் வீட்டுப் பெண்ணை அரசன் படுக்கைக்கு அழைத்தால் சம்மதமா?, காந்தியும் பகத்சிங்கும் தேசத் துரோகிகள் உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் தலைப்புகளில் கல்வி பறிபோகும் அபாயத்தை முன்வைக்கிறார்.

கல்வியும் மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் ஒட்டு மொத்த உயர்கல்வியும் நம் கையை விட்டுப் போகும். இதனால் ஏழை மாணவர்களுக்குக் கல்வி மறுக்கப்படும் என்பதை உணர்த்துகிறார் நியாஸ் அகமது. மேலும் உள்ளூர் கல்வி வியாபாரிகள் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை எதிர்க்கப் பெயரளவிலாவது சட்டம் உள்ளது. ஆனால் பன்னாட்டுக் கல்வி வியாபாரிகளை எதிர்க்க சட்டம் உள்ளதா? என்பதான வினாவை நம் முன் வைக்கிறார்.

கட்டற்ற அந்நிய முதலீடு உள்ளே வருவதால் இந்திய உயர்நிலைத் துறை பெரும் பன்னாட்டுச் சந்தையாக மாறும். விரைவில் கல்வித்துறை சேவை என்பதிலிருந்து விலகி முழு வணிக நிறுவனமாக மாறும் என்பதை உறுதிபட கூறுகிறார். அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என இந்தப் புத்தகம் வினா எழுப்புகிறது. பன்னாட்டுக் கல்வி வியாபாரிகள் நம் நாட்டுக்குச் சூழலுக்கு எதிரான கல்வியை வழங்கினால் கூட, நம் அரசால் எதிர்த்து வினா எழுப்ப முடியாத நிலை ஏற்படும். இது குறித்து யுனெஸ்கோ, சர்வதேச வணிக மையம், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகளையும், தகவல்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார் நியாஸ் அகமது. ஆப்பிரிக்க நாட்டில் கல்வியாளர்கள் ஒன்றிணைந்து இந்த ஒப்பந்ததிற்கு எதிராகக் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்துள்ளனர். அதனடிப்படையில் ஆப்பிரிக்கா அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்னும் பதிவையும் முன் வைத்துள்ளார்.

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வில் நீண்டதொரு போராட்ட பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் எனக் கவலையோடு தெரிவிக்கிறார் நியாஸ் அகமது. மேலும், உயர்கல்வி குறித்த விழிப்புணர்விற்காகப் பல்வேறு வினாக்களைத் தொடுப்பது நம்மைத் தட்டி எழுப்புவதாக உள்ளன. இந்திய அரசிற்கு அழுத்தம் தந்து வாக்குறுதிகளைத் திரும்ப பெற வைப்போம் என்னும் சூலுரை நம் முன் வைக்கிறார் நியாஸ் அகமது.

இந்த புத்தகமானது எதிர்நிலையில் வாசிக்கும் வாசகர்களின் மனநிலையில் வினாக்களை எழுப்பியும் அவர்களது கருத்தை உள்வாங்கியும் ஒரு கலந்துரையாடல் முறையில் கல்வி குறித்த சிக்கலை விவாதித்துச் செல்கிறார். அதன்பால் இந்நூலானது வாசிப்பில் நம்பகத் தன்மையை உள்வாங்கி நகர முனைகிறது எனக் கூறலாம். மு.நியாஸ் அகமது எழுதிய 30 பக்கங்கள் கொண்ட களவு போகும் கல்வி என்னும் நூலை இயல்வாகை பதிப்பகம் 2015இல் வெளியிட்டுள்ளது.

முனைவர் சு.பலராமன்
அலைபேசி-99423 29290.

நூல் : களவு போகும் கல்வி
ஆசிரியர் : மு.நியாஸ் அகமது
விலை : ரூ.₹20
வெளியீடு : இயல்வகை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

ஒரே நாடு.. ஒரே நுழைவுத் தேர்வு  உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் நுழைய முடியுமா? கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்

ஒரே நாடு.. ஒரே நுழைவுத் தேர்வு உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் நுழைய முடியுமா? கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்




இந்த வருடம் பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு-2022(CUET-2022) நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஐந்து தனியார் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இது தேசிய கல்விக் கொள்கை 2022 பரிந்துரையின் அடிப்படையில் தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டது. உயர்பட்ட மேற்படிப்புக்கான தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அதனடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே சென்ற வருடம் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு (CUCET-2021) நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த வருடம் அனைத்து மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், அதன் கல்லூரிகளுக்கும் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக (CUET-2022) இது மாற்றப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் மாநிலப் பல்கலைக் கழகங்கள் இதை அமுல்படுத்தத் தயாராக இல்லாத காரணத்தால் மத்தியப் பல்கலைக் கழகங்களில் மட்டும் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருட சேர்க்கையில் தற்போது கிடைத்த தகவலின்படி மாநிலத் தேர்வு வாரியங்களில் படித்தவர்களை விட அதிக அள்வில் சி பிஎஸ்ஸி யில் படித்த மாணவர்கள் மத்திய பல்கலைக் கழகங்களில் அதிகம் இடம் பெற்று உல்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஒரு கல்லூரியில்(இந்து கல்லூரி) அரசியல் விஞ்ஞானப் படிப்பில் 120 கேரளா மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். இந்த வருடம் ஒரு மாணவர் மட்டுமே இது வரை சேர்ந்துள்ளனர் என்று வயர் இதழ் கூறுகிறது.

வருடந்தோறும் சிபிஎஸ்ஸி மாணவர்களே அதிகமாக, 80 சதவீதத்திற்கு மேல், சேரும் போது கடந்த வருடத்தில் கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா சுமார் 1500-1800 மாணவர்கள் சிபிஎஸ்ஸி க்கு அடுத்தபடியாக சேர்ந்திருந்தனர். கேரளா மாநில கல்வி வாரிய மாணவர்களே பிற மாநிலங்களை விட அதிகமாகச் சேர்கிறார்கள் என்றும் கேரளாவில் அதிக மார்க்குகள் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்பட்டது. இந்த வருடம் தற்போதைய நிலவரப்படி அனைத்து மாணவர்களும் 95 சதவீத்திற்கு மேல் சிபிஎஸ்ஸி போன்ற மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் என்சிஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வடிவமைக்கப்படுவதும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெறுவதும் தான் என்கிறார்கள்.சுமார் 39 மாநிலக் கல்வி வாரியங்களின் மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஹரியானா மாநிலக் கல்வி வாரிய மாணவர்கள் அதிக இடம் பிடித்துள்ளனர். ஆனால் ஹரியானாவை யாரும் குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள் வயர் இதழில் எழுதியுள்ள அபூர்வானந்த், முனைவர் அனிதா ராம்பால்.

தேசிய தேர்வு முகமையும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளும்:

தேசிய தேர்வு முகவை என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரையின்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.1860ம் வருட கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவர் உட்பட 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நிதி உட்பட அனைத்திலும் சுயமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இனிமேல் இந்த முகமை மூலமே நடத்தப்பட உள்ளது. இதுவரை சிபிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வு தற்பொழுது இந்த முகமை மூலமே நடத்தப்படுகிறது. தற்போது கலை அறிவியல் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து உயர்கல்வி பொறியியல், விவசாயக் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இம் முகமை நடத்தும் எனவும் தெரிகிறது.

நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு ஏன் தேவை என்பதற்கு யுஜிசி கூறும் காரணம் என்னவென்றால் உயர்கல்விக்கு வரும் பள்ளி மாணவர்கள் பல்வேறு போர்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவதால் அதிக கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை கைப்பற்றுகின்றனர். பிறர் விடுபடுகின்றனர். எனவே பொது நுழைவுத்தேர்வு மூலம் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு முலம் உரிய மாணவர்கள் உரிய உயர்கல்விச் செல்ல வாய்ப்பிருக்கும் என்கிறது.

இப்பொழுது நமது கேள்வி என்பது பல்வேறு போர்டுகளின் மதிப்பீட்டு முறையில் ஒழுங்குமுறை கொண்டு வந்து மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்குப் பதிலாக மற்றொரு மைய மதிப்பீட்டு முறையின் மூலம் மாநில தேர்வு மாணவர்களை வடிகட்டும் முறை எதற்கு என்பது தான். இந்த மையத் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து உள்ளெ நுழைவதும் ஏழை மாணவர்கள் இதில் வெளியேற்றப்படுவதும் தான் நடைபெறுகிறது. இதைத் தான் நீட் தேர்வு கடந்த வருடங்களில் நிரூபித்து வருகிறது. எனவே மைய நுழைவுத் தேர்வு தீர்வு அல்ல.

பொது நுழைவுத் தேர்வின் சவால்கள்:

பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கேள்வித்தாள் என்பதே இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த வருடம் நடத்தப்பட்டது. அப்படியானால் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் படித்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா? மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதிலிருந்து இவர்களை நுழைய விடாமல் தடுத்து நிறுத்திவிடப் பட்டிருக்கிறார்கள் அல்லவா?

இந்தியாவில் ஏற்றத் தாழ்வுமிக்க சமூக அமைப்பு, முழுமையற்ற பள்ளிக் கல்வி கட்டமைப்பு, உறுதி செய்யப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு வகைப் பாடத்திட்டங்கள், பல்வேறு வகை கற்பித்தல் முறை ஆகியன மூலம் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் மூலம் தேர்வை நடத்துவது அராஜகமான அணுகு முறை அல்லவா?

அகில இந்திய பொதுத் தேர்வை நடத்த மிகப்பெரிய கட்டமைப்புத் தேவைப்படுகிறது. இந்த வருடம் ஒவ்வொரு நுழைவுத் தேர்வு மையத்திலும் சுமார் 300 கம்ப்யூட்டர்கள் இருப்பதும் மிக திறன் மிக்க இணய வசதி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சாத்தியமாகுமா? வட கிழக்கு மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இத் தேர்வு நடத்துவதை கைவிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி மாணவர்கள் கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று நுழைவுத் தேர்வு எழுதி உள்ளனர் என திரிபுரா பலகலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சலீம் ஷா குறிப்பிடுகிறார்.

நீட் தேர்வு, ஜேஈஈ, சட்ட நுழைவுத் தேர்வு, நிர்வாகவியல் நுழைவுத்தேர்வு ஆகிய மைப்படுத்தபப்ட்ட தேர்வுகளில் பள்ளியில் படிக்கும் போதே தனியார் பயிற்சியில் அதிகப் பணம் கட்டிப் பயிற்சி பெற்று இந்த இடங்களைக் கபளீகரம் செய்து இருக்கிறார்கள். இது போல் தரமான பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை வசதி படைத்தோரே பிடித்தமான படிப்புகளில் சேர முடியும் என்ற நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்லவா? இதற்கான தனியார், பைஜூஸ் போன்ற கார்ப்பொரேட் பயிற்சி மையங்கள் கோட்ட ராஜஸ்தான் போன்ற இடங்கள் மட்டுமில்லாமல் இனி இந்தியா முழுவதும் பரவ வழி வகை செய்யாதா? அவர்கள் மாணவர்களிடம் கொள்ளையடிக்கப் பச்சை விளக்கு காட்டுவது போல் இல்லையா?

உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு தான் முக்கியமென்றால் +2 வரையிலான கல்வியையும், நுழைவுத் தேர்வுக்காக மொழிக் கேள்விகள் கொண்ட இரண்டு பகுதிகள் , ஆறு துறைசார்ந்த படிப்புக்கான கேள்விகள் கொண்ட ஒரு பகுதி மேலும் பொது அறிவு,சமகாலச் செய்திகள், லாஜிக், அனலிடிகல், கணித அறிவு ஆகியன கொண்ட ஒரு பகுதி என நான்கு பகுதி கொண்ட கேள்வித்தாளில் ஒன்பதுக்கு மேற்பட்ட பாட வகையில் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அல்லவா?

உயர்கல்வி பொதுப்படிப்புகள் பல்வகையாக இருக்கும் பொழுது ஒரே நுழைவுத் தேர்வு மூலம் எப்படி அறிவியல் , வரலாறு, பொருளாதாரம் வணிகம் , வியாபாரம் என உயர்கல்வியில் தேர்ந்தெடுத்துப் படிப்பது? சில சமயங்களில் வேறு படிப்புக்குச் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு தேர்வும் எழுத வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?

இறுதியாக:

சமீபத்திய கால்நடைக் கல்லூரிக்கான விளம்பரத்தை நினைவு கூற வேண்டியுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதினால் மட்டும் போதுமானது மதிப்பெண் பற்றிக் கவலை வேண்டாம் என விளம்பரம் கொடுத்துள்ளது. கட்டணம் வருடத்திற்கு 5.5 லட்சம் ரூபாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்கல்விக்குச் செல்ல வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுதித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் திணிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாகப் பெற்றால் உயர்கல்வியில் சேர்வதற்கு இது போன்ற தனியார் வணிகமயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டியது தான். மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளி உயிருக்கே உலை வைத்து விடும் என்பதை நீட் தேர்வு நமக்கு தீய முன்னுதாரணமாக கண் முன்னே தெரிகிறது.

இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள், 1027 மாநில பல்கலைக்கழகங்கள், 126 நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் 403 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன.பல்கலைக் கழகங்கள் கீழ் இயங்கும் கல்லூரிகள் சுமார் 42,000 கல்லூரிகள் சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் என உயர்கல்விக் கட்டமைப்பு உள்ள சூழலில் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வு வெவ்வேறு காலங்களில் முடிவடைகிறது. இதனால் ஒரே தேதியில் நடைபெறும் தற்போதைய நுழைவுத் தேர்வு மிகத் தாமதமாக நடைபெற்றுள்ளது.இதுவே ஒரே நாடு ஒரே தேர்வு என்ற முறையின் முதல் தோல்வி எனலாம்.

மொத்தத்தில் கிராமப்புற, ஏழை மாணவர்கள் சாதரணமாக கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கே பெரும்பாடு படும் போது இது போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தோல்வி அடைந்து போவதை விட தொலை நிலைக் கல்வி, திறந்த வகை ஆண் லைன் கல்வி என்ற முறைசார உயர்கல்வியை நோக்கித் தள்ளி விடப்படுவது நடக்கும். இதற்காக ஒன்றிய அரசு ஆண் கல்விக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வைத்துள்ளது.

மொத்தத்தில் நிறுவனம் சார் உயர்கல்விக்யில் இருந்து ஏழை மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கே ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு வழி வகுக்கும்.

மேலும் இந்த வருட சேர்க்கையின் விளைவுகளை உற்று நோக்கினால் மாநில கல்வி வாரியத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவ சேர்க்கைக்கு மத்தியத்துவப் படுத்தப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகம் தவிர வேறு எந்த மாநிலமும் குரல் கொடுக்காத சூழலில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் குரல் எழுப்பி நீட் உள்ளிட்ட அனைத்து மத்தியத்துவப் படுத்தப்பட்ட தேர்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

– பொ.இராஜமாணிக்கம்

பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் கட்டுரை – பேரா. எ.பாவலன்

பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் கட்டுரை – பேரா. எ.பாவலன்



பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள்

யார் இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்?. அவர் பெயரில் நல திட்டங்கள் ஏன் வழங்கப்படுகின்றன?. இந்த நூற்றாண்டிலும் பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசாங்கம் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்டது ஏன்?. தொடர்ந்து 1989இல் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இராமாமிர்தம் பெயரில் திருமண நிதி உதவியாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்து தொடங்கி வைக்க காரணம் என்ன?. பின்னர் அவரே 2009 ஆம் ஆண்டு 25,000 ரூபாய் உயர்த்தி வழங்கினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதே அம்மையார் பெயரில் திருமண நிதியாக ரூபாய் 50,000மும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கினார். அதை 2016 ஆம் ஆண்டு 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டது ஏன்?. இந்த சூழலில் தான் இன்றைய முதலமைச்சர் (2022) திரு. மு. க‌. ஸ்டாலின் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளார்.

இப்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்பவர் யார் அவருடைய பெயரில் இத்தனை நல திட்ட உதவிகள் அறிவிக்க காரணம் என்ன? என்னும் கேள்விகளுக்கு பதில் தேடும் முகமாகவும், அடுத்த தலைமுறையினர் அம்மையாரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. அதன் பொருட்டு இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

பேரறிஞர் சி. அண்ணாதுரை அவர்கள் தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று இராமாமிர்தம் அம்மையாரைப் பாராட்டினார். காரணம், அவர் பெண் விடுதலை, நாட்டு விடுதலை, மொழி விடுதலை, சனாதன எதிர்ப்பு, என்று எல்லா தளங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு போராடியவர். பெண் அடிமையில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காக அரும்பாடுபட்டவர். அதனால் ஆதிக்க சக்திகள் அவருடைய தலை முடியை மேடையிலேயே அறுத்து எறிந்தனர். ஆனாலும் சிங்கத்தின் சீற்றம் குறையாது, உயிரே போனாலும் பரவாயில்லை போனது தலைமயிறு தானே என்று தன் சிங்கக் குரலால் மேடைகளில் கர்ஜித்த வரலாறு பெண் மணியின் பெயரால் தான் சமகால‌த்தில் நல திட்டம் வழங்கப்படுகிறது.

இராமாமிர்தம் அம்மையார், கிருஷ்ணசாமி சின்னம்மாள் பெற்றோருக்கு 1883 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பாலூர் எனும் கிராமத்தில் பிறந்தார். பிறந்தது பாலூரில் என்றாலும் வளர்ந்தது மூவலூரில் அதனால் மூவலூர் இராமாமிர்தம் என்று பின்னாளில் அறியப்பட்டார்.

அவர்களுடைய குடும்பம் வறுமையின் காரணமாக சொல்லோனார் துயரக் கடலில் சிக்கிய போது ஒரே இடத்தில் மையம் கொண்டு சூறாவளிக்காற்று சுழன்று அடித்ததை போல வறுமை அவர்களை வாரி சுருட்டியது. அதனால் கட்டிய மனைவியையும் காப்பாற்ற முடியாமல், பெற்ற குழந்தையும் கரை சேர்க்க முடியாமல் கிருஷ்ணசாமி வீட்டை விட்டு சென்று விட்டார். அதன்பின் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தவித்தனர். மீண்டும் சொல்லொண்ணா வேதனையும், துயரைமும் அடைந்தனர்.

கணவனும் கைவிட்டு சென்ற பிறகு மாமியாரும் தன் மகன் வீட்டை விட்டு சென்று விட்டான் என்ற துயரத்தில் இறந்துவிட்டார். எல்லா நிலையிலும் வறுமையும் வெறுமையும் வாழ்வதற்கு கூட வாய்ப்பளிக்காமல் சின்னம்மாள் செய்வதறியாமல் தவித்தார்.

கடைசியில் அந்த அம்மையார் தன் குழந்தையை யாருக்காவது கொடுத்து விடலாம். நாம் சுகப்படவில்லை என்றாலும் குழந்தையாகிலும் சுகப்படட்டும் என்று தீர்மானித்து விட்டாள். இந்த எண்ணம் காரணமாக தன் குழந்தையுடன் மூவலூர் சென்றார். அங்கே ஒரு தாசி அம்மாள் குழந்தையைக் காப்பாற்ற முன்வந்தாள்.‌ அந்த அம்மையாரிடம் தன் குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை விற்று விட்டாள். குழந்தையைப் படிக்க வைத்து பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசையை கொன்றுவிட்டு, குழந்தை பெரிய பெண்ணான  பின்பு அதன் திருமண கோலத்தைக் கண்டு இன்புற வேண்டும் என்று எண்ணியிருந்த எண்ண கோட்டையை இடித்து தள்ளிவிட்டு தாய் உள்ளத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு விற்று விட்டார்கள் ரூபாய் பத்துக்கும் ஓர் பழைய புடவைக்கும் இந்தச் சூழலில் தான் சின்னம்மாள்,  ஆச்சி கண்ணு என்னும் தேவதாசி பெண்ணிடம் ஒரு பழைய புடவைக்கும் பத்து ரூபாய்க்கும் விற்று விட்டார். தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத்தாய் ஆச்சிகண்ணுவின் நினைவாக தன்னுடைய பெயருக்கு முன்னால் “ஆ” என்ற தலைப்பு எழுத்தை வைத்து
ஆ. இராமாமிர்தம் என்றே தன் பெயரை எழுதத் தொடங்கினார்.

என்னை ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தி வாழப்பழகிய சமுதாயத்தில் அன்று இறைவன் பெயரைச் சொல்லி தேவதாசியும், இன்று வாடகைத்தாய் என்று சொல்லியும் அடிமைப்படுத்துகின்றனர். 

இராமாமிர்தம் அம்மையார் ஒடுக்கப்பட்ட தேவதாசி வழியில் இருந்து வந்தவர் என்ற பார்வையால் எண்பது வயது முதிர்ந்த கிழவனுக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடைய எண்ணங்களை தவிடு பொடி ஆக்கினார். இப்படி எல்லா நிலைகளிலும் அவருடைய வாழ்க்கைக் சிறைப்படுத்தப்பட்டது. இவை எல்லாவற்றிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக மாற்றி பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் இன்னலும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதனை அர்த்தமுள்ளதாக்கினார் பெருமைக்குரிய தாயார் இராமாமிர்தம் அம்மா.

அடிப்படையில் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு பெரியார் வழியில் அம்மையார் இராமாமிர்தம் அவர்கள் தனது 38 வது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். 1919 இல் இருந்து 1925 வரை காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு 1922 ஆம் ஆண்டு சிறை சென்றார். காங்கிரஸ் இயக்கம் அடிப்படையில் சமத்துவத்தை விரும்ப மறுக்கிறது. வாவேசு ஐயர் தலைமையில் நடத்தப்பட்ட சேரமான் தேவி குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு உணவருந்த தனி இடம் ஒதுக்கப்பட்டதாலும், 1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இந்த முப்பெரும் இயக்கங்களில் இணைத்துக் கொண்டு மக்கள் தொண்டாற்றினார். பொதுவெளியில் மக்கள் மன்றங்களில் பெண் விடுதலை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு கொள்கைகளை முழங்கினார். குறிப்பாக மிகத் தீவிரமாக தேவதாசி முறை ஒழிப்பை முன்வைத்து பிரசாரம் செய்ய தொடங்கினார். அப்படி ஒரு நாள் பொது மேடையில் பேசும்போது ஆதிக்க சக்திகள் ஒன்று இணைந்து அவருடைய தலை முடியை அறுத்து எறிந்தனர். எதை பேசிய குற்றத்திற்காக அவருடைய கூந்தலை அறுத்தார்களோ அதை சட்டமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி சட்டம் ஒழிப்பு கொண்டு வருவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமிக்கும், முவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்பு சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி அந்தத் திருமணத்தை கொண்டுவர தீர்மானம் ஏற்றிய போது தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியமிக்க இந்திய கலாச்சாரம் சீரழிந்து விடும் என்று ஆவேசப்பட்டனர். அப்போது இராமாமிர்தம் அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமி இடம் கூறுனார். அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டுமென விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பிள்ளைகள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்திய பண்பாட்டுக்காக இனிமேல் உங்கள் வீட்டு பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும் என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு அவமானமாய் இருந்த தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி கேட்ட கேள்விக்கு முத்துலட்சுமி அம்மையார் கொடுத்த பதில் இவை.

ஆண்டாண்டு காலமாக பெண்கள் ஆண்களுக்கு அடங்கி ஒடுங்கியவர்கள். எதிர்த்து பேசுவதற்கு மட்டுமின்றி தங்கள் உரிமைகளையும் தேவைகளையும் கூட கேட்பதற்கு உரிமை மறுக்கப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இராமாமிர்தம் அம்மையார் ஒரு சாட்சி.  போராட்ட காலங்களில் இவர் மீது கொலை குற்றங்களும் அவவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்துக் கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனாலும் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தான் நினைத்ததை சாதிக்க போராடினார். இந்த வரலாற்று எல்லாம் திருமதி சத்தியவாணி முத்து அம்மையார் ஆசிரியராக இருந்து நடத்திய அன்னை இதழில் இராமாமிர்தம் அம்மையார் தொடராக எழுதினார். அது என் வாழ்க்கை என்னும் தலைப்பில் தொடராக வெளிவந்தது.

1936-இல் தன்னுடைய சுயசரிதை நூலான தாசிகளின் மோசவலை அல்லது மதிக்கெட்ட மைனர் என்ற புதினத்தை எழுதினார் அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு செய்தியும் அத்துனை உருக்கமானவை. குழந்தையாக இருந்த போது, ஏற்பட்ட அனுபவத்தை அம்மையாரே பின்வருமாறு விவரிக்கிறார். 

மறுநாள் காலை கண் விழித்துப் பார்த்தேன் தாயைக் காணவில்லை பக்கத்தில் இருந்தவர்களை கேட்டு எழுந்தேன். திருவாரூருக்கு உன் தகப்பனாரை தேடி கொண்டு போயிருக்கிறாள். வந்து விடுவாள் என்று ஆறுதல் வார்த்தைக் கூறினார்கள். அழுதேன் சாப்பிட மறுத்து சமாதானம் கூறித் தேற்றினாள். இரண்டு ஒரு நகைகள் பாவாடை சட்டை துணிகள் புதிதாக தைத்துக் கொடுத்தால் இவைகளை நான் பார்க்காதவளானதால் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த அம்மாள் எனக்கு கல்வி புகட்ட ஆசிரியரை நியமித்தாள். ஆசிரியரும் மிகவும் நல்லவர். அவர் எனக்கு அன்போடு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவைகளைப்  பாடம் சொல்லித் தந்தார். அவரின் அன்பினாலும் கல்வியின் மீது நான் காட்டிய ஆர்வத்தினாலும் என் பெற்றோரை அறவே மறந்து விட்டேன். மூன்று வருடத்திற்குள் மூன்று மொழிகளும் எனக்கு நன்றாக வந்து விட்டன. அடுத்து சங்கீத தேர்ச்சிக்காக படிக்க வைத்தாள். அந்த காலத்தில் சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும்.

குழந்தையாக இருந்த போது தாயைப் பிரிந்து தேடி ஓங்கி அழத் தொடங்கிய அந்த அழுகுரல் தான் பின்னாளில் விடுதலைக்கான பாதையை சமைப்பதற்கு முழங்கியது. தன் வாழ்நாளில் இன்பம் மகிழ்ச்சி என்ன பிற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத குழந்தைதான் பெரும்பாலும் துயரக் கடலில் விழுந்தவர்களை மகிழ்ச்சி என்னும் நாவாயில் கரை சேர்த்தது. தன் வாழ்நாளில் வெளி உலகமே தெரியாமல் மண்ணோடு மண்ணாக மாண்டு போக வேண்டிய குழந்தை ஒன்று பெரியார் காந்தி திருவிக்க அண்ணாதுரை கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பெரும் தலைவர்களிடம் நட்பு இறை சம்பாதித்தது.

இப்படி தன் வாழ்நாள் எல்லாம் போராட்ட தளத்தில் செலவிட்டு பெண்ணின் விடுதலைக்கு பெரும் விருட்சமாக ஓங்கி வளர்ந்த இராமிரதம் அம்மையாரின் வரலாற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவருடைய பெயரால் வழங்கப்படும் உதவித்தொகையை பெறவிருக்கும் மாணவிகள் கட்டாயம் அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த உலகம் உள்ளவரை இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்து கொண்டிருப்பார்.

– பேரா. எ. பாவலன்

உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா? – ஆயிஷா இரா. நடராசன்

உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா? – ஆயிஷா இரா. நடராசன்



உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா?

ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை உயர் கல்வியில் எட்டப்படும் வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வளரும் நாடான இந்தியா, உயர் கல்வி சார்ந்த வளர்ச்சியில் எங்கே இருக்கிறது? அதற்கு முன்னர் உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் சில நாடுகளின் நிலையைப் பார்ப்போம்.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற இந்தியாவைவிடச் சிறிய நாடுகள். இந்த நாடுகளில் உயர் கல்வி கற்பதற்கான கல்லூரி-பல்கலைக்கழகம் இரண்டிலுமே கல்விக் கட்டணம் கிடையாது. மக்கள்தொகையிலும் பொருளாதார நிலையிலும் நம்மை ஒத்த ஜெர்மனியில் உயர் கல்வி வரை எந்தக் கட்டணமும் இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் கிராஸ்மன் மருத்துவக் கல்வியகத்தில் கடந்த ஆண்டு வித்தியாசமான ஒரு முயற்சி நடந்தது. தங்களது கல்வியகத்தின் முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்பிற்கான அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், பொது நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்து, அந்தக் கல்வியகமே செலுத்திவிட்டது.

டென்மார்க்கில் கடந்த ஆண்டு முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து வந்து உயர்கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் நிர்ணயித்துச் சட்டம் இயற்றப்பட்டது.

இதேபோல அயல்நாடுகளிலிருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகக் கட்டணத்தை நிர்ணயிக்க பின்லாந்து அரசு முயன்றபோது ‘கல்வி கற்கக் கட்டணமா, கூடவே கூடாது’ என்று பொது விவாதம் மூலம் மக்கள் அந்த முயற்சியைத் தோற்கடித்தனர். உடனடியாக பின்லாந்து அரசும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

கட்டணமற்ற கல்வியும் மகிழ்ச்சித் தரவரிசையும்

மக்களுக்குக் கட்டணமின்றித் தரமான கல்வியை வழங்கும் பின்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மூன்று விஷயங்களில் நம்மைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அவைதான் முதல் ஆறு, ஏழு இடங்களை ஆண்டுதோறும் பிடிக்கின்றன (கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றது).

உலக கல்வித் தரவரிசைப் பட்டியலிலும் கட்டணமற்ற கல்வி தரும் நாடுகளே முதல் 10 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன (இந்தியா 132-வது இடத்தில் உள்ளது). அவர்களுடைய சமூகங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அதிகபட்ச மாதச் சம்பளம் பெறுகிற அளவுக்கு பட்ஜெட்டில் போதிய தொகையைக் கல்வித் துறைக்கு அந்நாடுகள் ஒதுக்குகின்றன.

கட்டணக் கல்வியின் பின்விளைவுகள்

இந்தப் பின்னணியில் உயர் கல்வித் துறை சார்ந்து இந்திய அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொறியியல் படிப்புக்கான குறைந்தபட்சக் கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திய, அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சிலின் (AICTE) சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியைத் தருகிறது. ஒருவர் தொழிற்கல்விப் படிப்பை முடிக்கும் முன்பே வங்கிக் கடனாளி ஆகும் நிலை நிதர்சனமாக உள்ளது.

இந்தியக் கல்வித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு 2014-ல் 17 சதவீதமாக இருந்தது, தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. பள்ளிக்குள் நுழையும் 100 மாணவர்களில் இந்திய அளவில் 19 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கிறார்கள். தமிழகம் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் கல்லூரிக்கு அனுப்புகிறது.

ஆனால், உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணத்துக்காகக் கடன் பெற்றும் நிலபுலனை விற்றும் பெறப்படும் கல்வியால், ‘போட்ட பணத்தை எப்படியாவது திரும்ப எடுத்துவிட வேண்டும்’ எனும் மனநிலையில் எதிர்கால வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பட்டதாரிகள் உருவாகிறார்கள்.

சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, சமூக நலன் சார்ந்த உழைப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில், உயர் கல்விக்கும் சேர்த்து ஒரு மாற்று வழியைத் தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

– ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர், எழுத்தாளர்

நன்றி: இந்து தமிழ் திசை

முதல் பருவத் தேர்வைவிட ஆறாம் பருவத் தேர்வு எந்தவிதத்தில் முக்கியமானது? – பேராசிரியர்.நா.மணி

முதல் பருவத் தேர்வைவிட ஆறாம் பருவத் தேர்வு எந்தவிதத்தில் முக்கியமானது? – பேராசிரியர்.நா.மணி

  ‌உயர் கல்வித் துறையில் பணியாற்றுவோருக்கும் உயர் கல்வித் துறை பற்றி நன்கு அறிந்தோருக்கும் அதில் படித்த, படித்து கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும். "இறுதித் தேர்வை நடத்தாமல் எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது"…

புதிய கல்விக் கொள்கை – 2 (உயர்கல்வி) – ஆ. அறிவழகன்

  தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கத்தில் உள்ளவை சில: “உயர்கல்விக்கென பெரிய அளவிலான, வளங்களை நன்கு பெற்ற, உயிர்த்துடிப்புள்ள பல்துறை நிறுவனங்களைக் கொண்ட புதிய தொலைநோக்கும் கட்டமைப்பும் கருதப்பட்டுள்ளது.  தற்போதுள்ள 800 பல்கலைக்கழகங்களும் 40,000 கல்லூரிகளும், 15,000 சிறந்த…

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும்…