க.பாண்டிச்செல்வியின் கவிதைகள்
ஒரு நடுசியில்
நெடுந்தூரப் பேருந்துப் பயணமொன்றில்
சிறு நீர் கழிக்கும் உபாதையில் அவள்!.
பயணத்தின்போதெல்லாம் நீர் அருந்துவதை தவிர்ப்பாள்
நிறுத்துமிடங்களிளோ,
நிறுத்தச் சொல்லியோ ,
போய்விடுவார்கள்
அவர்கள்.
தாகமும், தவிப்புமாய்
அவஸ்தை கடக்க முயலுகிறாள்
எப்படி முடியும்
ஆத்திரத்தை அடக்கலாம்.,
வேறு வழியின்றி
ஒரமாகப் பேருந்து நிற்க வேண்டுகிறாள்.
முணுமுணுத்தவாறே அவர்கள்.
அகன்ற எட்டுவழிச்சாலையில்,
அடர்ந்த இருளைத் தேடுகிறாள்
ஒதுங்க,.
நாலாப் பக்கமும் ஒளிச்சிதறல்கள் ஒலிப்பான்களோடு
அவளை நோக்கியாவாறு விரைகின்றன
சிற்றின்பத்துடன்.
நின்ற பேருந்து ஜன்னல்களோ
இவளின் அசைவைக்
கண்காணிக்கிறது
கள்ளத்தனமாக.
அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையை விட
மூத்திர வாடையே மேலானாது.
********************
இணைந்து வாழ்தல் வரமென்று
மெனக்கெட்டு விதவைக்கு பொட்டிட்டாய்.!
முந்திய தழும்புகளை
காயப்படுத்தி
எச்சில் இலையென்றாய்
சுவைத்துண்டு,
– க.பாண்டிச்செல்வி
