நெவர் அகேன் சிறுகதை – சாந்தி சரவணன்
“ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்ய தெரிகிறதா? முண்டம். நீ எல்லாம் படிச்ச முட்டாள். “தண்டம்” உன்னே போய் பூர்த்தி செய்ய சொன்னேன் பாரு. என்னை சொல்லனும் என கத்திக் கொண்டே இருக்கும் கணவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை “, வெண்பா.
கண்களில் வழியும் நீரை துடைத்த வண்ணம் பேசாமல் “பெண் ஏன் அடிமையானால்” பிடித்த பெரியாரின் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு பிள்ளைகளின் அறைக்குள் சென்றாள். மகன் ரித்விக் கல்லூரியில் முதல் ஆண்டு கணிதம் படிக்கிறான். மகள் காவியா 12ம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார்கள்.
ஒரு வங்கி விண்ணப்பம் பூர்த்தி செய்யதான் இத்தனை ஆர்ப்பாட்டம்.
வெண்பா முதுநிலை படித்த பெண். அலுவலகத்தில் மேலாளர் பொறுப்பு ஆவணங்கள் தயாரிப்பு என்றால் அது வெண்பாதான். அத்தனை கச்சிதமாக இருக்கும். அவள் ஒரு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றுதான் இப்போது இந்த பேச்சு.
அலுவலகத்தில் இருக்கும் வெண்பா வேறு. வீட்டில் இருக்கும் வெண்பா வேறு. அலுவலகத்தில் வெண்பா என்றாலே அனைவரின் பார்வையில் திறமைசாலி, புத்திசாலி, அன்பானவள் சிரித்த முகம், நல்ல குணமுடையவள், ஈகை குணம் கொண்டவள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மாறாக வீட்டில் அவள் ஒரு மக்கு, திமிர் பிடித்தவள், அடங்கா பிடாரி, உமனா மூஞ்சி, இப்படி பல பட்டங்கள். ஆனால் வெண்பா என்பவள் ஒருத்தி தான். மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வைதான் மாறுபடுகிறது.
அலுவலகத்தில் ராணி. வீட்டிற்குள் வந்தவுடன் அடிமையாகி விடுவாள். இது பெண் இனத்தின் சபாக்கேடு. இந்த சூழலிலும் வேலை செய்து கொண்டே சைக்காலஜி பட்டம் படித்து முடித்தாள்.
வீட்டு வேலைகள் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி மிஷினில் போடுவது, காய்ந்த துணி எடுத்து மடித்து வைப்பது, கிரைண்டர் போடுவது, பெருக்கி மாப் போடுவது etc., இப்படி பெரும்பாலும் பெண் இனம் செய்யும் வரிசையில் நமது வெண்பா. அனைத்து வேலைகளையும் சரியான திட்டமிடலுடன் அவளே முடித்து விடுவாள். பிள்ளைகள் பார்த்து கொள்வது, அலுவலகம் செல்வது, கவுன்சிலிங் பகுதி நேர வேலை என 24 மணி நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வாள்.
கணவன் யுவன் பெற்றோர்கள் பார்த்து வைத்து செய்த திருமணம்தான். அப்பாவின் அன்பில் வளர்ந்தவள். ஆனால் திருமணத்திற்கு பின் எதற்கேடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் கணவன். அப்பாவிற்கு தான் மகிழ்ச்சியாக இல்லை என தெரிந்தால் சங்கடப்படுவார் என் ஓரே காரணத்தால், பழகிக் கொண்டாள். அது யுவனுக்கு வசதியாக போய்விட்டது. அதனின் தொடர்ச்சிதான் இது…….
தன்னை பற்றிய சிந்தனையில். “பெண் ஏன் அடிமையானால்” புத்தகத்தை கையில் வைத்தபடி அமர்ந்து இருந்தவளை கைபேசியில் ஒலிக்க, அவள் தன்னிச்சையாக ஹலோ என்றாள்.
“லில்லி பேசறேன் மேடம் உங்க கிளினிக் கிட்ட தான் இருக்கேன். தயவு செய்து வர முடியுமா?”
“மணி என்னமா? இரவு 10.00. இந்த நேரத்திலா?.”
“கொஞ்சம் அவசரம் மேடம். பொண்னை கூட்டிட்டு வந்து இருக்கிறேன். பிளிஸ். மேடம் கொஞ்சம் வாங்க….'”
“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கீழே வரேன்”, என சொல்லி அலைபேசியை வைத்தாள்.
கோபமாக இருக்கும் கணவன் யுவனிடம், “பேஷன்ட் வந்து இருக்காங்க. கிளினிக் போய்விட்டு வந்து விடுகிறேங்க…..”
“இந்த நேரத்திலயா…..”
“ஏதோ அவசரமா..’
“நீ பார்த்து என்ன சரியாக போது. உனக்கு வீட்டையே ஒழங்கா பார்த்துக்க தெரியலா……. நீ போய். சரி சரி போ. ….”
அவ்வாறு அவன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. திருமணம் முடிந்த நாள் முதல் இன்று வரை அது தொடர்கிறது. ஆரம்பத்தில் அதை சமாளிக்க கடினமாக இருந்தது. பின்னர் அது பழகி விட்டது.
கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.
லில்லி அதற்குள் மறுபடியும் ஆழைத்தாள் “மேடம் இன்னொரு முறை வருகிறேன். பாப்பா போகலாம் என்கிறாள்…”
வெண்பாவின் இதயம் படபடத்தது. “என்னம்மா இப்போ தானே கூப்பிட்ட இதோ கீழே வந்துட்டேன்.”
“இல்ல மேடம் பாப்பா போலாம் என்கிறாள்….”
வெண்பாவிற்கோ போகவில்லை என்றால் மறுபடியும் கணவனிடம் வசையடி வாங்க வேண்டி வருமே என்ற பயம் ஒருபுறம். “இதோ கீழே வந்துவிட்டேன்”, என ஓடினாள்.
ஸ்கூட்டியோடு நின்ற வண்ணம் லில்லி பின்னால் அவளின் மகள் லைலா. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.
வெண்பாவிற்கு லைலாவை பற்றி தெரியும். சென்ற வாரமே லில்லி அலைபேசியில் அவளின் பிரச்சினைகளை பகிர்ந்து இருந்தாள். ஆனால் லைலாவிற்கு இது தெரியாது.
“நான் மேலே வரமாட்டேன்”
“அம்மி போலாம் போலாம்…. என ஸ்கூட்டியை விட்டு இறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.”
வெண்பா, “ஹைய் எப்படி இருக்கீங்க, என புன்னகையோடு அவள் அருகில் செல்ல….”
அவள் கண்களை மூடிக் கொண்டு “அம்மி பிளிஸ் பிளிஸ். வா போலாம்…. வா போலாம்”, என கண்களை மூடிக்கொண்டு சொல்லிக் கொண்டே இருந்தாள்….
வெண்பா, “லைலா நானும் உங்க அம்மாவும் பிரண்ட்ஸ். முதல ஒன்னா வர்க் செய்தோம். ஆன்டிக்கு ஒரு ஹெல்ப் வேண்டும். அதைப் பற்றி பேசதான் அம்மா வந்து இருக்காங்க. பிளிஸ் எனக்காக உள்ளே வாம்மா. ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீங்கள் கிளம்பி விடலாம்”, என சொல்ல லைலாவிடம் மௌனம் உண்டானது.
“லில்லி, நீங்கள் இறங்கி வாங்க. லைலா உள்ளே வருவாங்க”, என கூறி கிளினிக்கை திறந்து உள்ளே சென்றாள் வெண்பா.
அவளை தொடர்ந்து லில்லி செல்ல தயக்கத்துடன் லைலா லில்லியின் கைகளை பற்றி கொண்டு பின் தொடர்ந்தாள்.
“வா லில்லி, உட்காரு மா”
“லைலா அம்மா பக்கத்தில் உட்காருமா..”
“தயங்கி தயங்கி அமர்ந்தாள்.”
“சொல்லு லில்லி எப்படி இருக்கீங்க”.
“நல்லாயிருக்கேன் மேடம் என உதடுகள் மட்டுமே உச்சரிக்க, கண்களில் அருவியாக கண்ணீர்”.
“என்னம்மா என்னாச்சு”
“லைலா மகிழ்ச்சியாக இல்லை மேடம்.”
அவர் மில்டிரி ஆபிசர். உங்களுக்கு தெரியும். நானும் லைலாவும் தான் வீட்டில் இருக்கிறோம். அனைத்து வேலைகளையும் நான் தான் செய்ய வேண்டும். அலுவலகத்தில் வேலை ப்ளூ அதிகமாக உள்ளது. கொரானா கட்டுபாடு. ஆட்குறைப்பு வேறு நடக்கிறது. எங்கு என் வேலை பறிபோகுமா என்ற அச்சத்தோடு பயணிக்கிறேன். இது அத்தனையும் ஏன்? என் மகள் மகிழ்ச்சியாக இருக்கதான். இது அவளுக்கு புரியவில்லை என அழ ஆரம்பித்தாள்.
“லைலா அம்மாவின் கைகளை பிடித்துகொண்டு அம்மி don’t cry…. Don’t cry என்றாள்.”
“லைலா உனக்கு என்னடா பிரச்சினை? நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை.”
அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.
தொடர் போராட்டத்திற்கு பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தாள்
“மம்மி என்னை பாட்டி வீட்டில் வீட்டு விட்டு ஆபிஸ் செல்கிறார்கள்.”
“சரி…”ஆனால் அங்கு எனக்கு சரியான மதிப்பு அளிக்க மாட்டேன் என்கிறார்கள்.
“அப்படியா?”
அம்மா “அட்சஸ்ட் பண்ணிக்கோ என என்னைதான் சொல்கிறார்கள்”
“நான் ஏன் அட்சஸ்ட் ஆகனும். நான் தப்பு செய்யாத போது. அட்சஸ்ட் செய்து கொண்டே போனால் நான் எப்படி ஆண்டி இருப்பேன்”.
“கரக்ட் தானே!”
லைலா வெண்பா அவளுக்கு தான் ஆதர்வாக பேசுகிறாள் என உணர்ந்தாள்..
வெண்பா மேல் நம்பிக்கை பிறந்தது….
ஆண்டி ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது பெரியம்மா பையன் அண்ணன் பிரேம் டிவியை சத்தமாக வைக்கிறான்.
அவனை யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள். என்னால் கிளாஸ்ஸை கவனிக்க முடியவில்லை.
அது மட்டும் அல்ல, பாட்டி நடுவில் வந்து, நான் என்ன செய்கிறேன் என பார்த்து விட்டு செல்கிறார்கள்.
என்னை நம்ப மறுக்கிறார்கள்.
அம்மாவிடம் சொன்னால், அட்ஜஸ்ட் செய்து கொள் என்கிறார்கள்.
“I will loose my originality, my uniqueness if I compromise”.
“நான் தவறாக இருந்தால் நான் திருத்தி கொள்கிறேன். இல்லையெனில் why should I?”
அனைத்து விஷயங்களுக்கு காம்பிரமைஸ் ஆனால் அம்மா மாதிரி தான் ஆண்டி தன்னந்தனியாக கஷ்டப்பட வேண்டும்.
“No means no aunty”
இப்போ கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆண்டி. அதனால் எனக்கு இங்கு வர வேண்டிய அவசியமில்லை என பளிச் என்று பேசும் லைலாவை பார்த்த வெண்பா ஒரு நிமிடம் மௌனம் ஆனாள்.
இங்கு கவுன்சிலிங் யாருக்கு தேவை. லைலாவிற்கா, அல்ல்து தனக்கும், லில்லிக்கா?
லைலா சரியாக தானே உள்ளாள்.
யார் யாருக்கு கவுன்சிலிங் கொடுப்பது.
பெண் பிள்ளைகள் “எண்ண சுதந்திரம்” கொண்டு வளர்ந்தால் அவர்களின் வாழ்க்கையில் அவளுக்கு நடக்கும் அநீதியை அவள் கடந்து வெற்றி அடைவாள்.
தன் பெற்றோர் தனக்கு செய்தவற்றை லில்லிக்கு அவளின் பெற்றோர் செய்த தவற்றை இருவரும் சேர்ந்து லைலாவிற்கு செய்ய கூடாது.
“தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். சரி எனும் போது ஏன் காம்பிரமெஸ் ஆக வேண்டும்.”
“கரெக்ட் செல்லம்”
நான் மம்மி கிட்ட சொல்றேன்.
“கொஞ்சம் நீங்க உள்ள மீன் தொட்டி இருக்கு போய் பாருங்க, நான் மம்மியிடம் ஆபிஸ் பற்றி பேசிட்டு, உங்களையும் திட்ட வேண்டாம் என சொல்கிறேன்”, என்றாள்.
லைலா மீனுடன் விளையாட செல்ல…..
வெண்பா லில்லியை பார்த்து, “மாற வேண்டியது லைலா இல்லை, லில்லி, “நாம தான்” என லில்லிக்கு புரியும்படி எடுத்து உரைத்தாள்.
சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பினார்கள். லைலா மகிழ்ச்சியாக ஒரு சிரிப்பை வெண்பாவை பார்த்து உதிர்த்து bye aunty என்றாள்.
“bye ma” கூறி அவர்கள் கிளம்பியதும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
எனோ அவள் நினைவில் பல் எண்ண ஒட்டங்கள் இன்றைய நிலைக்கு நாம் தான் காரணம்.
நாம் ஏன் கோழையாக இருக்கிறோம் என பல கேள்விகள் மனதில்…… இதற்கடையில் எதிர்வீட்டில் புதுமைபெண் பட பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அமைதியாக அமர்ந்து முழுமையாக கேட்க துவங்கினாள். ரேவதி கதாபாத்திரம் அவளின் கண் முன்னே!
ஓஒருதென்றல்புயலாகிவருமே
ஓஒருதெய்வம்படிதாண்டிவருமே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே
வீட்டிற்கு வந்தாள், வெண்பா
“தண்டம்” என்ன இவ்வளவு நேரம்? என்ற கணவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். இதுவரை அப்படி ஒரு பார்வையை அவன் பார்த்ததில்லை.
முதலில் என்னை “தண்டம்” என்று எல்லாம் சொல்லும் வேலை வேண்டாம். பிறகு விண்ணப்பத்தை நான் சரியாக தான் பூர்த்தி செய்துள்ளேன், நீங்கள் சரியாக பாருங்கள்.
“அப்புறம் இதன் பிறகு என்னை மக்கு முட்டாள் என வசைப்பாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். “
“Never again” “நெவர் அகேன்”
ஆணின் “எண்ண கழிப்பறையாக” பயணித்தது போதும். முக்கியமாக அவளின் வாழ்வியல் முறைதான் தன் மகள் காவியாவிற்கு வழிகாட்டலாக அமையும் என்பதை நன்கு உணர்ந்தவளாய், உள்ளே சென்றாள்.
வெண்பாவா ! இது என விகித்து நின்றான் யுவன்.