ஹைக்கூ கவிதைகள் - ஐ.தர்மசிங் | Tamil Haiku poems - வீடு திரும்பும்வியாபாரியின் கூடையில்மௌனமாக புல்லாங்குழல்கள் - https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் - ஐ.தர்மசிங்   1. வீடு திரும்பும் வியாபாரியின் கூடையில் மௌனமாக புல்லாங்குழல்கள் 2. கன மழை உதிர்ந்த இலையோடு போகிறது கலங்கிய நதி 3. பதறும் பட்டாம்பூச்சி அங்குமிங்கும் துரத்துகிறது வாலறுந்த பட்டம் 4. அரவணைப்பில் தீபம்…
ஒரு கேள்வி- ஐ.தர்மசிங் |A question-Poem-I. Dharmasingh

” ஒரு கேள்வி …” (கவிதை) – ஐ.தர்மசிங்

இறைவன் கனவாகவே இருக்கும் இன்னொரு பொம்மை சாத்தான் பயமுறுத்தும் இன்னொரு பூச்சாண்டி மதம் ரசனை ததும்பும் இன்னொரு பாட்டிக் கதை போர் விமானம் சிறகடிக்காமல் பறக்கும் அதிசய பட்டாம்பூச்சி வெடிகுண்டு விழாக்கால நவீனப் பட்டாசு உள்நாடு துள்ளி விளையாடும் சொந்த வீடு…
Poem - கவிதை |கருவறை | I. Dharmasingh

ஐ.தர்மசிங் எழுதிய கவிதைகள்

1. " கருவறை"   ஒன்றில் தீப ஒளியின் பரவல் ஒன்றில் அடர் இருட்டின் ஆதிக்கம் ஒன்றில் ஊசலாடும் நம்பிக்கை ஒன்றில் தீர்க்கமான நம்பிக்கை ஒன்றில் ஒன்றன் பின் வரிசை ஒன்றில் புதுமையான தனித்துவம் ஒன்றில் தகுதியைப் பொறுத்த அங்கீகாரம் ஒன்றில் புதையல்…
வனம் | Mets | கவிதை | Poem

“வனம்” கவிதை – ஐ.தர்மசிங்

மலர்கள் மலர்ந்தால் இயற்கை அழகாகும் மலர்கள் உதிர்ந்தால் மண்ணை அழகாக்கும் இலைகள் துளிர்த்தால் நம்பிக்கை வசமாகும் இலைகள் விழுந்தால் சருகாகி உரமாகும் காய்கள் காய்த்தால் தன் மதிப்பை உயர்த்தும் காய்கள் கனிந்தால் சுவை தரும் கனிகளாகும் கிளைகள் படர்ந்தால் விருட்சமாக உருமாறும்…
Matram Kavithai By Dharma Singh மாற்றம் கவிதை - ஐ. தர்மசிங்

மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்

விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்

விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்

ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்

ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்

கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்

வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்

குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்

கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா

தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்

சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்

கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா

காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்

கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்

தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்

வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்

வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…

ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…

Marathi Kavithai By Dharmasingh. மறதி கவிதை - ஐ. தர்மசிங்

மறதி கவிதை – ஐ. தர்மசிங்

“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி
அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம்

அலைகளின் மேலே
நடை பழகும் வித்தையை
கண்டிப்பாகக் கற்றுத் தருவோம்

காற்றிலும் பறந்து மகிழ
வினோதமான சிறகுகளை
விலை குறைவாக வழங்குவோம்

பசி போக்கும் மாத்திரைகளை
இலவசமாக
வீடுகளிலேயே விநியோகிப்போம்

நகரும் வீடுகளை உருவாக்கி
எங்கேயும் வசிக்கும் உரிமையை
சட்ட வடிவமாக்குவோம்

ஒளியினைச் சேகரித்து
இருளில்லாப் பாதைகளில்
பயமின்றி உலவச் செய்வோம்

கார் மேகங்களைக் கட்டிப்போட்டு
ஒளிந்திருக்கும் மழைத்துளிகளை
அவிழ்த்து விடுவோம்”

இப்படித்தான்
முன்பும் சொன்னார்கள்
இப்போதும் சொல்கிறார்கள்
எப்போதும் சொல்வார்கள்

அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும்
எத்தனைமுறை ஏமாந்து போனாலும்
கரவொலிகளோடு
நாம்
காத்திருக்கும் இரகசியம்

நமது இரகசியமே
அவர்களின் முதலீடு

அவர்களின் முதலீடு
என்பது
நமது மறதி…

I. Dharma singh Writes Two Poetries in Tamil. ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள் (வெற்று வார்த்தைகள்). Book Day and Bharathi Puthakalayam

ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள்



1. கவிதை

கடந்து போகிறவர்கள்
எல்லோரும்
இருளின் நிறத்தில்
நிழலாய் தென்படுகிறார்கள்
கருப்பில் தோய்ந்த முகங்களை
பார்க்கும் போதெல்லாம்
இரகசியமாக
எனக்குள் நானே
நகைத்துக் கொள்கிறேன்
என்னிடமிருந்த நகைப்புகள்
வலுவிழந்த பிறகுதான் புரிகிறது
இதுவரையிலும்
அடர்ந்த இருளுக்குள் நின்று
அன்னியரை பார்த்துக் கொண்டிருந்ததே
நான் தான் என்பது…
எனக்குள் நானே
வெட்கப் பட்டுக் கொள்கிறேன்
என்னுள் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரியாதெனும்
நம்பிக்கையில்…
” தெரிந்தால் யாரும் நகைத்து விடுவார்களோ எனும்
மெல்லிய பதட்டத்தில்…”

I. Dharma singh Writes Two Poetries in Tamil. ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள் (வெற்று வார்த்தைகள்). Book Day and Bharathi Puthakalayam

2. “வெற்று வார்த்தைகள்”

வார்த்தைகளை வீசினான்
விழுந்தேன்
எழுந்து விட முயலும் போதெல்லாம்
வார்த்தைகளை இன்னும்
வசீகரமாக வீசுவதில்
கவனமாக இருந்தான்
எனக்கு விழுந்து கிடப்பதே
சுகமாகிப் போனது
அவன் வெற்றியை
உயர்த்திய பிறகுதான்
எனது தோல்வியின்
ஆழம் புரிந்தது
ஆவேசத்துடன் எழும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
என் மனமுதுகில் சுமையாய்
குவிந்து கிடக்கும்
புகழ்ச்சியின் முனையில்
அவனது
வெற்று வார்த்தைகள்…

ஐ. தர்மசிங்

கவிதை: ” இன்னும் எத்தனை காலமோ? ” – ஐ.தர்மசிங்

கவிதை: ” இன்னும் எத்தனை காலமோ? ” – ஐ.தர்மசிங்

வரப்பு வெட்டியவனின் முதுகும் நீர் பாய்ச்சியவனின் முதுகும் பாத்தி கட்டியவனின் முதுகும் விதை விதைத்தவனின் முதுகும் உழுது பண்படுத்தியவனின் முதுகும் உரமிட்டவனின் முதுகும் நாற்று நட்டவனின் முதுகும் களை பிடிங்கியவனின் முதுகும் மருந்து தெளித்தவனின் முதுகும் விளைந்த கதிர்களின் முதுகும் அரிவாள்களின்…