” ஒரு கேள்வி …” (கவிதை) – ஐ.தர்மசிங்
ஐ.தர்மசிங் எழுதிய கவிதைகள்
“வனம்” கவிதை – ஐ.தர்மசிங்
மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்
விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்
விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்
ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்
ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்
கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்
வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்
குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்
கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா
தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்
சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்
கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா
காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்
கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்
தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்
வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்
வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…
ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…
மறதி கவிதை – ஐ. தர்மசிங்
“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி
அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம்
அலைகளின் மேலே
நடை பழகும் வித்தையை
கண்டிப்பாகக் கற்றுத் தருவோம்
காற்றிலும் பறந்து மகிழ
வினோதமான சிறகுகளை
விலை குறைவாக வழங்குவோம்
பசி போக்கும் மாத்திரைகளை
இலவசமாக
வீடுகளிலேயே விநியோகிப்போம்
நகரும் வீடுகளை உருவாக்கி
எங்கேயும் வசிக்கும் உரிமையை
சட்ட வடிவமாக்குவோம்
ஒளியினைச் சேகரித்து
இருளில்லாப் பாதைகளில்
பயமின்றி உலவச் செய்வோம்
கார் மேகங்களைக் கட்டிப்போட்டு
ஒளிந்திருக்கும் மழைத்துளிகளை
அவிழ்த்து விடுவோம்”
இப்படித்தான்
முன்பும் சொன்னார்கள்
இப்போதும் சொல்கிறார்கள்
எப்போதும் சொல்வார்கள்
அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும்
எத்தனைமுறை ஏமாந்து போனாலும்
கரவொலிகளோடு
நாம்
காத்திருக்கும் இரகசியம்
நமது இரகசியமே
அவர்களின் முதலீடு
அவர்களின் முதலீடு
என்பது
நமது மறதி…
ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள்
கடந்து போகிறவர்கள்
எல்லோரும்
இருளின் நிறத்தில்
நிழலாய் தென்படுகிறார்கள்
கருப்பில் தோய்ந்த முகங்களை
பார்க்கும் போதெல்லாம்
இரகசியமாக
எனக்குள் நானே
நகைத்துக் கொள்கிறேன்
என்னிடமிருந்த நகைப்புகள்
வலுவிழந்த பிறகுதான் புரிகிறது
இதுவரையிலும்
அடர்ந்த இருளுக்குள் நின்று
அன்னியரை பார்த்துக் கொண்டிருந்ததே
நான் தான் என்பது…
எனக்குள் நானே
வெட்கப் பட்டுக் கொள்கிறேன்
என்னுள் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரியாதெனும்
நம்பிக்கையில்…
” தெரிந்தால் யாரும் நகைத்து விடுவார்களோ எனும்
மெல்லிய பதட்டத்தில்…”
2. “வெற்று வார்த்தைகள்”
ஐ. தர்மசிங்