அர்த்தமண்டபம் (Ardhamandapam) Tamil Poetry இளையராஜா Ilaiyaraaja temple issue - ஆண்டாள் கட்டளையிடுகிறாள் அங்கேயேநில் என்கிறாள் - https://bookday.in/

அர்த்தமண்டபம்

அர்த்தமண்டபம்   ஆண்டாள் கட்டளையிடுகிறாள் அங்கேயே நில் என்கிறாள் விதிர்விதிர்த்துப் போன இசையின் உடம்பிலிருந்து பூணூல்கள் கழன்று விழுகின்றன குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும் கோடு கிழித்த பின்பும் மெளனம் கொள்கின்றன மார்கழித் திங்கள் மதிகெட்ட தீ நாளில் சூடிக் கொடுத்த…
ஜமா - திரைப்பட விமர்சனம் | Jama (2024) Tamil Movie Review - Street theatre - Pari Elavazhagan - Ilaiyaraaja - Chetan - தெருக்கூத்து - https://bookday.in/

ஜமா Jama (2024) – திரைப்பட விமர்சனம்

ஜமா Jama (2024) - திரைப்பட விமர்சனம் நடிகர்கள் :  பாரி இளவழகன், சேட்டன், ஸ்ரீ கிருஷ்ணா தயாள், அம்மு அபிராமி கே வி என் மணிமேகலை, சத்யா மருதாணி, உள்ளிட்ட பலர். எழுத்து இயக்கம்: பாரி இளவழகன் இசை :…
isai vazhkai 90: kaathula soodam pola karaainthavarukkaga - s.v.venugopaalan இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக... - எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக… – எஸ் வி வேணுகோபாலன்

உன்னுள் நான்  என்னுள் நீ  நமக்குள் பிரபஞ்சம்  - சௌம்யா தீபக் பீடு (1979-2023) நூறுக்கு மேல் இருக்கும், நாற்காலி போதாது போய் நிறைய பேர் நின்று கொண்டிருக்க மேடையேறும் தீபக் பீடு,  'இது இரங்கல் கூட்டம் அல்ல, அவளது  வாழ்க்கையைக் கொண்டாடும்…
இசை வாழ்க்கை 69 : இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் – எஸ்.வி.வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 69 : இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் – எஸ்.வி.வேணுகோபாலன்



இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் 
எஸ்.வி.வேணுகோபாலன்

கடந்த சில நாட்களில் இசை வாழ்க்கை குறித்த நேரடி உரையாடல்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக அமைந்தது மிகவும் தற்செயலான ஒன்று.

அன்புத் தங்கை ஆண்டாள் (நான் அவளுக்கு வைத்த பெயர் ராதா), தங்கள் மகள் திருமண அழைப்புக்காக அண்மையில் வீட்டுக்கு வந்திருக்கையில், இசை வாழ்க்கை தொடரை முடிக்கலாமா என்றேன். வாக்கியத்தை முடிக்குமுன்பே, ‘ஏன் அண்ணா, எதுக்கு…அதெப்படி…யார் விடுவாங்க உன்னை?’ என்று அடுக்கடுக்காக வந்த அவளது கேள்விகளும், அவளது முகத்தில் பளிச்சிட்ட ஏக்கமும் வாழ்நாள் மறக்க முடியாதது.

‘எலந்தப் பயத்த’ விட்டுடீங்களே சார் என்று எல் ஆர் ஈஸ்வரி கட்டுரையைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பி அதன் தொடர் கடிதப் போக்குவரத்தில் மிக நெருக்கமான நட்பு பாராட்டும் கோவை லிங்கராசுஅவர்களும் தொடர் பற்றிக் கேட்டார். நேரில் பாராது மூன்றாண்டுகளாக அன்பு கொண்டாடும் கோவையின் மற்றுமோர் அன்பர் முருகானந்தம் கடந்த வாரம் நேரில் பார்க்கும்போது இசை வாழ்க்கை பற்றியே முதலில் பேசினார்.

அதன் அடுத்த சில நாளில் சென்னையில் ஒரு திருமண வரவேற்பில் பார்த்தபோது, சி ஐ டி யு தலைவர் தோழர் அ சவுந்திரராஜன் அவர்கள், இசை வாழ்க்கை தொடரைப் புத்தகமாக எப்போது தருவீர்கள் என்றே கேட்டார்.

இசை எல்லோரது வாழ்க்கையிலும் அவரவர் தேர்வு செய்யும் விகிதத்தில் கலந்திருக்கவே செய்கிறது. இசையே வாழ்க்கையாக இருப்போர், நம் வாழ்க்கையில் இசை நிரப்பித் தருகின்றனர்.

முருகானந்தம் அவர்கள் கோவையில் நான் சென்றிருந்த திருமண மண்டபத்திற்கே தமது கவிதை நூலோடு வந்து பேசிக்கொண்டிருக்கையில், மேலே மண்டபத்திலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதுவும் இசை வாழ்க்கை அழைப்பு தான்.

அதற்குச் சற்றுமுன் தான் அருமையான ஒரு திரைப்பாடலைத் தனது இசைக்கருவியின் வழி செவிகளில் பொழிந்து கொண்டிருந்தார் நாதஸ்வரக் கலைஞர், என்னுள், வண்ணதாசனின் நடேசக் கம்பர் மகன் வந்து போனார். ஜெயபிரகாஷ் (அல்லது ஜெய்பிரகாசக் கம்பர்!)தான் அழைத்தது, ‘அந்தப் பாடல் வாசிப்பை அலைபேசியில் பதிவு செய்தீர்களே, எனக்கும் அனுப்புங்கள்’ என்று தான் அவரது அழைப்பு. இதைவிட இசை வாழ்க்கை வேறென்ன என்று ரசித்தார் முருகானந்தம்.

முழு பாடல் கூட அல்ல, இருக்குமிடத்திலிருந்து எழுந்து சென்று நாதஸ்வர இசைக்குழுவினர் அருகே அமர்ந்து தலையாட்டி ரசித்து, இரண்டாம் சரணத்தின் பிற்பகுதியிலிருந்து பாடல் நிறைவு பெறும்வரை தான் பதிவு செய்தது. முதல் நாள் அவரே சாக்ஸஃபோன் வாசித்துக் கலக்கினார் என்றார் மணவீட்டாரான தோழர் மோகன சுப்பிரமணியன்.

இளையராஜா – வாலி – ஜேசுதாஸ் – சித்ரா கூட்டணியில் விளைந்த மனதில் உறுதி வேண்டும் படத்தின், கண்ணா வருவாயா பாடலுக்குத் தங்கள் உடல் பொருள் ஆவி கொடுக்கத் துடிக்கும் கருத்துகள் நிரம்பித் ததும்புகின்றன யூ டியூபில்.

நேரடிக் காதல் பாடல் அல்ல, கண்ணா வருவாயா! நிறைவேறுமா என்ற கலக்கம், கூடிவிடாதா என்ற ஏக்கம், ஒன்று கலத்தலின் தாபம், அதன் நீட்சியான கனவுகளின் பரவச உச்சம். அதனால் தான், கவிஞர் மீராவைத் தேர்வு செய்கிறார். இரு கோடுகளில் வாலி எடுத்துக் கொண்டது ‘பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக’ என்பது. இங்கே ராதையைக் கூட யோசிக்க முடியாது. கண்ணன் வரவேண்டும் என்பதல்ல பல்லவி, கண்ணா வருவாயா என்பது தான்!

கண்ணனின் நினைப்புக்கான குழலோசையும், துயரக் கனவுகளுக்கான வயலின்களும், இரண்டின் இடையே ஊசலாடும் நெஞ்சைத் தாங்கிப் பிடித்துத் தேற்ற அபாரமான வீணையும், இதயத் துடிப்புகளுக்கான அசத்தல் தபலாவுமாக ஓர் அற்புத இசைக்கோவையை வழங்கி இருக்கிறார் ராஜா. கண்ணனின் வசீகரக் கனிவு நாடகத்திற்கான குரலை ஜேசுதாஸ் பொழிகிறார் எனில், மீராவின் பரிதவிப்பும், மோகமும் ஓர் உருக்கமான மொழியில் இசையாகிறது சித்ராவின் குரலில்!

கேட்பவர் மன நிலையைப் பாடல் நிகழும் களத்தை நோக்கி ஈர்ப்பது கூட அல்ல, திரட்டுகிறார் ராஜா. இந்தப் பாடலை கோரஸ் குரல்களில் தொடங்குகிறார்! குழுவினரின் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ….ஹம்மிங், மீராவின் தனிமைத் துயரின் இருளை எதிரொலித்து வெளிச்சம் நோக்கி ஒரு குறும்பயணம் போல் அமைகிறது. அதன் நிறைவில் (மோர் சிங் கூட ஒலிப்பது போல் உணர முடிகிறது), தபலாக்கட்டு சதிர் போல ஒலித்து படிப்படியாக விலகி ஓய்ந்து பாடகிக்கு இடம் கொடுத்து நிற்கிறது.

கண்ணா வருவாயா என்ற பல்லவியின் முதல் வரியைத் தாளக்கட்டு இன்றித் தான் இசைக்கிறார் சித்ரா. ஒற்றை அழைப்பில் வருபவன் அல்ல என்பதால், தாளத்தோடு இயைந்து மீண்டும் அதே வரியை இசைக்கிறார் சித்ரா. அடுத்த வரியை மீரா கேட்கிறாள் என்று வாலி எழுதுகிறார், ‘மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்’ என்று கண்ணன் வருகையை மேலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குகிறார். எங்கே இருந்து எப்படி வெளிப்படுவான் கண்ணன் என்பதன் இலக்கியக் காட்சிப்படுத்தலாக அமைகிறது அவரது அடுத்த வரி: ‘மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து’.

பல்லவியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அத்தனை சங்கதிகள்….. அதிலும், ‘மாலை மலர்ச்சோலை’ என்ற இரண்டு சொற்களில் அத்தனை மயக்க விசைகள் முடுக்குவார் சித்ரா. நதியோரம் என்பதில் அந்த யோ…அய்யோ, எத்தனை அழகாகத் தொடுப்பார், நடந்து என்பதில் அந்த உகரம் பல்லவியின் சிகரம், உண்மையில் மலையிலிருந்து ஒய்யாரமாக வேகத் தப்படிகள் போட்டுக் கீழிறங்கி வருவது போல் தான் இழைப்பார்கள் முதலில் சித்ராவும், பின் ஜேசுதாசும்!

முதல் சரணத்தை நோக்கிய ராஜ பாட்டையில், கோரஸ் ஒலிக்கிறது கண்ணா கண்ணா கண்ணா என்று உருக்கமாக! வீணை கனிவாகக் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகிறது, வயலின்களோ எச்சரிக்கையாக இரு, எச்சரிக்கையாக இரு என்று தேம்பித் துடிக்கின்றன. ஆவலுக்கும் கேவலுக்குமான உரையாடலாக இசைக்கருவிகள் இழைக்கும் காதல் நாடகத்தில், கண்ணன் வரவைப் புல்லாங்குழல் தான் மென்மையாக அறிவிக்கிறது. சுருளாகத் திரளும் கருமேகங்கள் போல் குழலிசை பரவ, காற்றில் பறக்கும் முடி கண்களில் பட்டுவிடாது, கைதொட்டு விலக்கி முகத்தை வருடிக் கொடுப்பது போன்ற மென்மையான ஹம்மிங் கொடுத்துச் சரணத்தைத் தொடங்கும் ஜேசுதாஸ், ‘நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்’ என்பதில் காதலிக்கு சத்தியம் செய்து கொடுக்கும் காதலனின் மனத்தை பிரதியெடுக்கிறார் குரலில்!

‘உண்ணும்போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்’ என்ற இடத்தில் சித்ரா மீராவின் ஆற்றாமையை அழுத்தமாகப் பதிவிடுகிறார். வாலியின் சிருங்கார ரசனையில் எழுதப்பட்ட ‘கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்’ என்ற வரியில் ததும்பும் காதல் உறவை ஜேசுதாஸ் பின்னிப் பிணையும் வண்ணம் பற்ற வைக்க, தன்னையே ஒப்புவிக்கக் காத்திருக்கும் மீராவின் விரகத்தை விவரிக்கும் ‘உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்’ வரியை சித்ரா எடுக்கிறார்.

அடுத்த இரு வரிகளில் இரண்டறக் கலக்கும் சங்கம அரங்கேற்றத்தில் காதலின் சங்கதிகளை இருவரையும் இசையின் சங்கதிகளாகச் சொல்ல வைக்கிறார் ராஜா, அதிலும், ‘சொர்க்கம் இதுவோ’ என்ற வரியில் தான் எத்தனை எத்தனை ரசவாதம்… ஜேசுதாஸ் இதயங்களைக் கரைத்துவிடுகிறார். அதுவும், ‘மீரா வருவாளா……’ என்று அவர் எடுக்கும் பல்லவியில் கண்ணனின் கள்ளக் குறும்பு நாடகமும் மனக்கண்களில் விரிகிறது.

இரண்டாவது சரணத்தை, சோகம் இழையோட ஒற்றை வயலினும், அதன் எதிரொலியாகக் கூட்டான வயலின்களும் மீண்டும் மீராவின் கலக்கங்களை பிரதிபலிக்க, வீணை ஒரு சமாதான சமரசத்தை எடுத்துப் பேசுகிறது. ஆனாலும், இதயத் துடிப்புகள் கூடி விடுகின்றன, சூழலின் பரிதவிப்பில். எனவே ராஜா தாளகதியை வேகப் படுத்த வேண்டி இருக்கிறது. தன்னன தன்னன தானத் தன்னன தன்னன தானத் தான தா….ன……னா என்ற மெட்டில் அமையும் இரண்டாம் சரணம், மஞ்சத்தில் கொஞ்சி மகிழ்ந்து குலாவும் இணைகளின் இன்ப விளையாட்டை வாலியின் துள்ளல் சந்தங்களில், சித்ராவும் ஜேசுதாசும் வழங்கும் ரசனை மிக்க குரல்களில் படைக்கிறது.

பாடலின் நிறைவுப் பகுதியில் உருளும் வேக தாபத்தை அன்று கோவை திருமண நிகழ்வில் ஜெயபிரகாஷ் இயன்றவரை நாதஸ்வரத்தில் வழங்க எடுத்த முயற்சி மறக்க முடியாதது.

ஜூன் 24, கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள், என்ன கவித்துவ இசையான தற்செயல் ஒற்றுமை! சொற்களில் இருந்து இசை கிடைக்கிறது என்ற விஸ்வநாதன் அவர்களும், இசையாகவே கவிதை வார்த்துக் கொண்டிருந்த கண்ணதாசன் அவர்களும் தமிழ்த் திரை இசைக்கு வழங்கிச் சென்றுள்ள செல்வ நிதியம் அள்ள அள்ளக் குறையாதது.

ஏனோ கடந்த சில நாட்களாக, ‘கண்கள் எங்கே’ பாடலில் நெஞ்சம் கிறங்கிக் கிடக்கிறது. கர்ணன் படத்திற்கான இசையை மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி – டி கே ராமமூர்த்தி முற்றிலும் விரிந்த கற்பனை தளங்களுக்கு எடுத்துச் சென்று, காவிய முயற்சிக்கேற்ற இசைக்கருவிகளையும் வடக்கே இருந்து தருவித்து, இசைக்கலைஞர்களையும் வருவித்துப் படைத்திருக்கும் பாடல்கள் கால காலத்திற்குமானவை.

நாயகி, நாயகனை எண்ணி உருகுவது பற்றி இலக்கியங்களில் கொட்டிக் கொட்டி எழுதப்பட்டிருக்கிறது. தோழிகள் அவளைச் சீண்டி ரசித்துப் படுத்தும் பாடும், தோழிகள் அவளிடம் சிக்கிக் கொண்டு படும் பாடும் ஒரு வண்ணமயத் திரைச் சீலையில் மெல்லிசை மன்னர்களும், கவிஞரும் குழைத்துக் குழைத்துத் தீட்டிய சித்திரம் கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே….

யாருமறியாத அந்திப் பொழுதில் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் பாவனையில் மென்மையாகத் தொடங்கும் பாடல், ஒரு பெருங்குழாம் புடை சூழப் பின்னர் கொண்டாட்ட கதியில் இசைக்கருவிகளின் கொண்டாட்டத் திருவிழாவாக மாறி விடுகிறது.

எம் எஸ் வி டைம்ஸ் இணையதளத்தில், பி சுசீலா குரலினிமையோடு, கோரஸ் ஹம்மிங் ஆக ஹா……ஹ…ஹா…ஹ ….ஹா…ஹ…ஹா… ஹ ….ஹா…ஹ…ஹா…ஹ …. என்று பாடல் நெடுக மெல்லிசை மன்னர்கள் பயன்படுத்தி இருப்பதை அத்தனை சிலாகித்து ராமன் என்பவர் சிறப்பாக எழுதி இருப்பார். வத்சன் எனும் மற்றுமோர் அன்பர் அதே பக்கத்தில், தாளக்கருவிகள் இன்றி சுசீலா பல்லவியின் முதல் அடியைப் பாடியதும் சிதார், சைலோஃபோன் உள்ளிட்ட கருவிகள் ஒலிப்பதையும், வீணையின் நாதம் இணைவதையும் உருகி எழுதி இருப்பார்.

‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, கண்ட போதே சென்றன அங்கே..’ என்ற பல்லவியை ஒரு கேள்வி பதிலாகத் தொடங்கும் நாயகி, சரணங்களிலும் தனக்குத் தெரிந்த கேள்விகளை எழுப்பித் தானே பதிலும் சொல்லியவாறு காதல் கொதிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் கவிஞர் புனைந்திருப்பார்.

இந்த அருமையான பாடலை பி சுசீலா தொடங்கும் இடத்தில், பூம்பாதங்கள் தரைக்கு வலிக்குமோ என்று நடப்பது போல அத்தனை மென்மையான தாளக்கட்டு ஒலித்தும் ஒலிக்காதது மாதிரி அமைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். பின்னர் தோழிகளின் ஹம்மிங் இணையவும் பாடலின் மொத்தத் தன்மையும் ஒரு கனவுலக நிகழ்வாகவே துள்ளாட்ட கதிக்கு மொழி பெயர்க்கப்பட்டுவிடும்.

பல்லவியில், ‘கால்கள் இங்கே மேனியும் இங்கே’ என்பதும் மெத்தென்ற குரலில் இசைக்கிறார் சுசீலா, ஆனால், அடுத்து, ‘காவலின்றி வந்தன இங்கே’ என்ற அடியில், கா என்ற நெடிலை நெடிதுயர்ந்து சங்கதிகள் இழைத்து மெருகூட்டி அந்த வரியின் தொடர்ச்சியில் ஒயிலான ஹம்மிங் சேர்த்து முடித்துப் பல்லவிக்குத் திரும்பும்போது பின்னணியில் கோரஸ் அபாரமாக வந்து கலந்து இழையோடி இன்பம் சேர்க்கிறது.

சரணங்களை நோக்கிய இசைக் கலவை ஒரு குதூகலக் காதல் களியாட்டத்திற்கான ஒத்திகை தான். அதிலும் கோரஸ் ஹம்மிங், இந்துஸ்தானி இசைக்கருவிகள் இணைந்து கிளர்த்தும் உணர்வுகள் மனத்தை வசப்படுத்தும். இரண்டாம் சரணத்திற்கு முன்பும் அதையே பயன்படுத்தி இருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

சரணங்கள் இரண்டிலும் அருமையான வரிகளை லயத்தோடு தொடுத்திருப்பார் கவிஞர். அதிலும், முதல் சரணத்தில், ‘துணை கொள்ள அவனின்றித் தனியாகத் துடிக்கும், துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்’ என்ற இடம் அபாரம். ஏன் இந்த மயக்கம் என்ற பதங்களை அத்தனை கிறக்கமாக இசைத்திருப்பார் சுசீலா. பாடல் முழுவதிலும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கும் தேவிகா இந்த வரிகளுக்கான பாவத்தை மிகவும் காத்திரமாகச் செய்திருப்பார். சரணத்தின் நிறைவிலும் சுசீலா ஹம்மிங் எடுத்து முடிக்க, கோரஸ் உடனே கலந்து விடுகின்றனர் அவரது பல்லவிக்கு ஈடு கொடுக்க!

இரண்டாவது சரணத்தில், ‘இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்’ என்ற வரியில் அறியாமையும், ‘ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்’ என்பதில் வெகுளித்தனமும் தெளிவும் ஒரு தினுசாகக் கலந்த குரலில் எடுப்பார் சுசீலா. சரணத்தின் நிறைவில் கோலாகல கொண்டாட்ட கோரஸ் மீண்டும் வந்து இணைந்து விடுகிறது. பின்னர் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சங்கதிகளும், ஏற்ற இறக்கங்களும், மென்மையும், அழுத்தமும் மாறி மாறி ஒலிப்பதுமான கடினமான பாடல் தான் இது, ஆனால் மிக இலேசாக இசைப்பது போல் வெளிப்படுத்தும் சுசீலா மொத்தப் பாடலையும் கட்டி ஆள்கிறார். பாடலுக்கான மொத்த உழைப்பையும் மேன்மைப்படுத்தும் வண்ணம் படமாக்கி இருப்பார் திரையுலக மேதை பி ஆர் பந்துலு.

கவிஞரும் மெல்லிசை மன்னர்களும் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அமர்ந்து மூன்றே நாட்களில் கர்ணன் படத்திற்கான பாடல்களுக்கான அடித்தளத்தை ஒருங்கிணைத்து முடித்தனர் என்று எழுதி இருந்தார் ஒருவர். இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

எண்ணற்ற எளிய மனிதர்களது வாழ்க்கையில் அவரவர் இன்ப துன்பத் தருணங்களில் எல்லாம் இசை நிறைந்திருக்கிறது. வெடிச்சிரிப்பிலும், மென் புன்னகையிலும் வெளிப்படும் இசை, கண்களில் திரையிடும் நீரிலும் கலந்திருக்கவே செய்கிறது. இசை, காற்றின் வடிவமும் வண்ணமுமாக உருவெடுக்கிறது. அதனால் தான் இசையே மூச்சாகிறது, இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

நூல் அறிமுகம் : என்.சொக்கனின் ’ஏ.ஆர்.ரஹ்மான்’ – விஜய் மகேந்திரன்

நூல் அறிமுகம் : என்.சொக்கனின் ’ஏ.ஆர்.ரஹ்மான்’ – விஜய் மகேந்திரன்




ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வரும்வரை குறிப்பிட்ட பாடகர்கள்தான் பெரிய இசையமைப்பாளர்களிடம் பாடி வந்தார்கள். தனது முதல் படமான ‘ரோஜா’விலிருந்தே புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியவர் ரஹ்மான். ‘சின்ன சின்ன ஆசை’ பாடல்தான் பாடகி மின்மினியின் தமிழில் முதல் பாடல் என நிறைய பேர் நினைத்துக்கொண்டிருப்பார்கள் . அந்தப் பாடலின் தெலுங்கு மற்றும் இந்தி வடிவத்தை அவரேதான் பாடினார் என்பதும் உண்மை தான். மக்கள் அவரின் குரலையும் அந்தப் பாடலின் இசையையும் கொண்டாடினார்கள் என்பதும் உண்மை தான். ஆனால், அதற்குமுன் மின்மினி 1989ஆம் ஆண்டில் இருந்தே மலையாளத்தில் பாட ஆரம்பித்துவிட்டார். பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் இளையராஜா இசையில் மனோவுடன் பாடிய ‘லவ்வுன்னா லவ்வுதான்’ முதல் தமிழ் பாடல். ஆனால், ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் தான் உலகப்புகழ் பெற்றார். அதனால் அதுதான் அவரது முதல் பாடல் இது என்று நினைப்பவர்கள் அதிகம். புதிய பாடகர்கள் அல்லது அதிகம் புகழ்பெறாத திறமையான பாடகர்களை தனது படங்களில் பாட வைத்து வெளியே தெரியவைத்த பெருமை ரஹ்மானுக்கு உண்டு.

உன்னிமேனன் இளையராஜாவின் இசையில் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் ‘பொன்மானே’ பாடியிருந்தாலும் அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ரஹ்மான் இசையில் ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலின் மூலம்தான் மீண்டும் புகழ் பெறுகிறார். அதன் பிறகு மின்சார கனவில் ‘ஊ…லா..லா’ பாடலைப் பாடியதற்கு அவருக்கு தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது. ரஹ்மான் இசையில் சிறந்த பாடல்களை பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கே.ஜே.ஜேசுதாஸ் போன்றவர்கள் பாடக்கூடிய குரல்வளத்துடன் பாடல்களை ரஹ்மான் உன்னிமேனனுக்கு தயங்காமல் கொடுத்தார். ‘ரிதம்’ படத்திலும், ‘கண்களால் கைது செய்’ படத்திலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன.
சுரேஷ் பீட்டர், ரஹ்மானின் இளம்வயது நண்பர். பல்வேறு குழுக்களில் பாடியும், டிரம்ஸ் வாசித்து வந்த இவரை முதல் பாடலான ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் உச்சத்தை அடையச்செய்தது. அதன் பிறகு ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’, ‘பேட்டை ராப்’ போன்ற பாடல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப் பாடல்களை கேட்ட அனு மாலிக் போன்ற இசையமைப்பாளர்கள் இவரை இந்தியிலும் பாட வைத்தார்கள். அனு மாலிக் இசையில் ‘சிக்கு புக்கு ரயிலு’ இந்தி வடிவத்திலும், ஜோஷ் படத்தில் ‘ஷைலாரோ’ பாடலையும் பாடி ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தார்.
ரஹ்மான் அறிமுகப்படுத்திய குரல்களில் மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீதின் குரல் தனித்துவமானது. அசலானது. அவருக்கு
அருமையான பாடல்களை கொடுத்து ஷாகுல் ஹமீதின் குரலை அனைவரும் கேட்கச் செய்தார். அதற்கு முன்பு ஷாகுல், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மெல்லிசை பாடகராக இருந்தார். ரஹ்மானை ஒரு விளம்பரப்படத்தில் பாட சந்தித்தார் ஷாகுல் ஹமீது. அவரது குரலும், பண்பும் ரஹ்மானுக்கு பிடித்து போனது. இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். அப்போதுதான் பஞ்சதன் ரிக்கார்டிங் தியேட்டரை கட்டியிருந்தார். அதில் 1989ஆம் ஆண்டு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது ‘தீன் இசை மாலை’ என்னும் இஸ்லாமிய இசை ஆல்பம். அந்த ஆல்பத்தில் அதிக பாடல்களை ஷாகுல் ஹமீதை பாட வைத்தார். அதன் பிறகு சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்ற நேரம் ஷாகுலை பாட அழைத்தார் ரஹ்மான்.
திரையிசைக்கு ஷாகுல் பாடிய முதல் பாடல், ‘திருடா திருடா’ படத்தில் வரும் ‘ராசாத்தி’ என்ற பாடல் தான். ஆனால், அதற்கு முன்பாக ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆகிவிட்டது. தொடர்ந்து காதலன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, உழவன், மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு என வரிசையாக ரஹ்மான் இசையமைத்த படங்களில் ஹிட் பாடல்களை பாடி, தமிழக இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஷாகுல் ஹமீது. மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடிக்கொண்டிருந்து
அருமையாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் ரஹ்மானை மிகவும் பாதித்தது. அதை ரஹ்மானே பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார். ஷாகுல் ஹமீது கடைசியாக பாடிய பாடலும் ரஹ்மானுக்குத்தான் என்பதும் நம்மை சோகத்தில் ஆழ்த்தும் விஷயம். ‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘வராயோ தோழி’ என்ற பாடல்தான் ஷாகுல் பாடிய கடைசி பாடல்.
ஸ்ரீநிவாஸ் கெமிக்கல் என்ஜினீயராக வேலைபார்த்துக் கொண்டிருந்தவர். பாடகராக வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து கொண்டிருந்தார். ரஹ்மானிடம் வாய்ப்பு கேட்டுப்போன அவர் மெஹ்தி ஹாசனின் பாடல்களை பாடிக் காண்பிக்கிறார். ரஹ்மான் அவருக்குக் குழுவில் பாடும் வாய்ப்பை முதலில் தருகிறார். மெல்ல மெல்ல இரண்டு, மூன்று பாடகர்கள் சேர்ந்து பாடும் பாடலை தருகிறார். ஒரு கட்டத்தில் தனது என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ரஹ்மான் குழுவில் ஒரு முக்கிய அங்கத்தினராகவே ஆகிவிடுகிறார் ஸ்ரீநிவாஸ். ‘ரட்சகன்’ படத்தில் இவர் பாடிய ‘கையில் மிதக்கும் கனவா நீ’ பாடல் தனியாக பாடிய முதல் பாடல்.
படையப்பா படத்தில் ‘மின்சாரப் பூவே’ பாடலை பாடகர் ஹரிஹரனுக்கு டிராக் பாடகராக பாடுகிறார். அதன் பிறகு ஹரிஹரனும் பாடிவிட்டு போய் விடுகிறார். ஆனால், ரஜினிகாந்துக்கு ஸ்ரீநிவாஸ் குரல் பிடித்துவிட, அவர் பாடியதையே டிராக்கில் வைத்துவிட சொல்கிறார். அந்த பாடல் ஸ்ரீநிவாஸுக்கு பெரிய புகழை வாங்கிக் கொடுத்தது. தமிழக அரசின் சிறந்த பாடகர் விருதும் அவருக்குக் கிடைத்து. அதன் பிறகு அவரது கிராஃப் மடமடவென ஏற ஆரம்பித்து. இந்தி, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் பாடல்களை பாடிய ஸ்ரீநிவாஸ், சில படங்களுக்கு இசையும் அமைத்தார். இன்றுவரை ரஹ்மானுக்கு நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார்.
பாடகர் ஹரிஹரன் சில இந்தி படங்களில் பாடியிருந்தார். கஜல் பாடகராக அறியப்பட்ட அவரை ‘ரோஜா’ படத்தில் ‘தமிழா தமிழா’ பாடலுக்கு பாட வைத்தார். ஹரிஹரனின் கஜல் பாடல்களின் ரசிகர் ரஹ்மான். ரஹ்மானும், ஹரிஹரனும் இணைந்து பல அருமையான பாடல்களை பம்பாய், இந்தியன், லவ் பேர்ட்ஸ், முத்து, மின்சார கனவு, ஜீன்ஸ், ரங்கீலா, தால் ஆகிய படங்களில் கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தமிழ் இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டேட் பாடகராக மும்பையில் இருந்து பறந்து சென்னைக்கு வந்து பாடிக்கொண்டிருந்தார் ஹரிஹரன். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிலும், இந்தியிலும் பல புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழில் பாடிக்கொண்டிருந்த பல பாடகர்களை இந்தியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுஜாதா, ஸ்வர்ணலதா, ஜெயச்சந்திரன், சித்ரா ஆகிய பாடகர்களை தனது இந்திப் படங்களில் பயன்படுத்தி நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இந்தியிலும் சினிமா மார்க்கெட்டுக்கு வெளியிலிருந்து நல்ல குரல்களைக்கூட தேடிப்பிடித்து இந்திப் பாடல்களில் பாடவைத்துள்ளார். அட்னான் சாமி, ராகேஸ்வரி, அலிசா செனாய், லக்கி அலி, ரூப்குமார் ரதோட், சோனு நிகம் போன்ற பாடகர்கள் தனியிசை ஆல்பங்களில்தான் அதிகம் பாடி புகழுடன் இருந்தனர். இவர்கள் அனைவரையும் இந்தியில் பாடவைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். நரேஷ் அய்யர், பென்னி தயாள், ஜோனிடா காந்தி போன்ற இளம் பாடகர்களை இந்தியில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் தமிழில் பல
அருமையான
பாடல்களைப் பாடவைத்திருக்கிறார். நரேஷ் அய்யர் வடஇந்தியாவில் வளர்ந்த தமிழ் இளைஞர். அவரை சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் சந்திக்கிறார் ரஹ்மான். அவரது குரல் பிடித்துப் போகிறது. போட்டியில் நடுவர்களில் ஒருவரான ரஹ்மான் அவரிடம் சொல்கிறார் ‘ உங்களை அடுத்த கட்டத்துக்கு தேர்வுசெய்ய முடியவில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் எனது இசையமைப்பில் தமிழ்ப் படங்களில் பாடலாம். ரிக்கார்டிங் தேதிகளை தெரிவிக்கிறேன். சென்னைக்கு வாருங்கள்’ என்கிறார். நரேஷ் அய்யருக்கு எதிர்பாராத வாய்ப்பு இது. அந்தப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால்கூட அவர் இந்தளவு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார். முதல் பாடலே ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
நரேஷ் அய்யர் சென்னைக்கு வந்த பாடிய முதல் பாடல்தான் எஸ்.ஜே.சூர்யாவின்’ அன்பே ஆருயிரே’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆன ‘மயிலிறகே மயிலிறகே’ பாடல். கலக்கலான நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் இன்றுவரைக்கும் தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறது. இன்றும் தென் தமிழகங்களில் திருமண வீடுகளில் ஒலிக்கவிடப்படுகிறது என்பது இன்னும் சிறப்பம்சம். இன்னும் ஒரு மறக்கவியலாத பாடலையும் நரேஷ் அய்யர் ரஹ்மானுக்குப் பாடியுள்ளார். ’ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் வரும் ‘முன்பே வா’ என்னும் அற்புத மெலடி. அதன்பிறகு எத்தனையோ பாடல்களை நரேஷ் அய்யர் பாடினாலும் இந்த இரண்டு பாடல்களுக்காக தமிழ்த் திரையிசையில் என்றும் நினைக்கப்படுவார்.
ஹரிணி, ரஹ்மான் அறிமுகப்படுத்திய பாடகிகளுள் மிக முக்கியமானவர். இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாடலைப் பாடியபோது அவர் பத்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். அதற்கடுத்த பாடலே இந்தியன் படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ பாடலே அவரை மிகப் பிரபலம் ஆக்கியது. கர்நாடக வாய்ப்பாட்டு இசையை முறையாகக் கற்றவர். பல
அருமையான
பாடல்களைப் பாடிய ஹரிணி, இந்தியிலும் முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார்.
கர்நாடக இசைப்பாடகியாக புகழுடன் விளங்கிய டி.கே.பட்டம்மாள் அவர்களின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவனை திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் ரஹ்மான்தான். ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல்தான் நித்யஸ்ரீ திரையிசைக்குப் பாடிய முதல் பாடலாகும். நித்யஸ்ரீயை ஜதிகளையும் பாடச்சொல்லி ரிக்கார்ட் செய்துகொண்டாராம் ரஹ்மான். அவர் பாடிய ஜதிகளை பாடலின் ஆரம்பத்திலேயெ அசத்தலாக பயன்படுத்தியிருப்பார். சுதந்திரமாக பாடலைப் பாட அனுமதித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார் நித்யஸ்ரீ. எல்லா பாடகர்களையும் அவர்கள் விரும்பும்படி பாடச்செய்து அவர்களின் தனித் திறமையை தனது இசைக்குள் கொண்டு வருவதுதான் ரஹ்மான் ஸ்டைல். இந்த மேஜிக்கை அவர் பல ஆண்டுகளாக நிகழ்த்திக் காட்டி வருகிறார்.
பாடகரை முதலில் பாடச் செய்து ரிக்கார்ட் செய்துகொண்ட பின்புதான் இசையை மிக்ஸ் செய்வார் ரஹ்மான். பாடல் வெளிவரும்போது அதைச்சுற்றி பல லேயர்கள் வேலை செய்திருப்பார். பாடிய பாடகர்களுக்கே தாங்கள் பாடிய பாடலைக் கேட்கும்போது அற்புதமான மேஜிக்கை உணர்வார்கள்.
பாலக்காடு ஸ்ரீராம் என அழைக்கப்படும் எஸ்.ஸ்ரீராம், தனது மனைவியை பாட வைப்பதற்காக ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். ரிக்கார்டிங் அறையில் மனைவிக்கு பாட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தவரின் குரலை மைக்கை ஆப் செய்யாமல் வைத்திருந்ததால் ரஹ்மான் கேட்டுவிட்டார். ஸ்ரீராமின் குரல் ரஹ்மானுக்குப் பிடித்துவிட நீங்கள் பாடகரா? எனக் கேட்டவர், அவரது தொடர்பு எண்ணை கொடுத்துப்போகச் சொல்லியிருக்கிறார். அடுத்து, தாஜ்மகால் படத்தின் ஆரம்பப் பாடலான ’ திருப்பாச்சி அருவாள’ பாடலை பாட வைத்தார். படையப்பா படத்தில் வரும் ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா’ பாடலையும் பாடவைத்து அவரை ஹிட் பாடகர் ஆக்கினார். ரஹ்மான் கண்பார்வையில் படும் பாடகர்கள் உடனடியாக லைம்லைட்டுக்கு வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.
’திருடா திருடா’ படத்தில் வரும் ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலைக் கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அனுபமா பாடிய முதல் பாட்டு. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு திலீப்பாக விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தபோது, சில ஜிங்கிள்ஸ் பாடியுள்ளார் அனுபமா. அவர் அப்போது டெல்லியில் இருந்தார். ரோஜாவில் அறிமுகமாகி பரபரப்பாக இசையமைத்துக் கொண்டிருந்தபோது, ஒருமுறை ரஹ்மானை பாடலுக்காக சந்தித்தபோதுதான் திலீப் தான் ரஹ்மான் என அறிந்துகொண்டாராம். அனுபமாவுக்கு இயற்கையில் அற்புதமான குரல். ஹைபிட்ச்சில் வரும் வரிகளை அருமையாகப் பாடுவார். ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சந்திரலேகா என்னும் உச்சஸ்தாயிக்குச் செல்லும்போது அனுபமா காட்டியிருக்கும் பல்வேறு வெரைட்டி பிட்ச்சுகளை இன்றும் ரசிக்க முடியும். ரஹ்மானைப் பார்த்தபோது ஆங்கில பாப் பாடல் ஒன்றை பாடிக் காண்பித்திருக்கிறார். அவர் பாடியவிதம் பிடித்துப் போகவே இந்தப் பாடலை பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். இந்த ஒரே பாடலில் அனுபமாவுக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. இந்த பாடலுக்குப் பிறகு இந்தி, தெலுங்கு படங்களிலும் பாடினார் அனுபமா.
‘திருடா திருடா’ படத்தில் ’தீ தீ தித்திக்கும் தீ’ பாடலை கேரலின் பாடினார். இது பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாடல். இதில் வரும் ஜதிகளை ரஹ்மானே பாடியிருப்பார். மிஸ்டர் ரோமியோ படத்தில் ’தண்ணீரைக் காதலிக்கும்’ பாடலை சங்கீதா சுஜித், ‘கல்லூரி சாலை’ மற்றும் ‘சம்பா சம்பா’ பாடலைப் பாடிய அஸ்லாம் முஸ்தபா, ‘உன்னைக் காணவில்லையே நேற்றோடு’ பாடலை எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடிய கர்நாடக இசைப்பாடகர் ஒ.எஸ்.அருண் என்று ஒரிரு பாடல்களை பாடியவர்கள்கூட அந்தப் பாடல்களால் இன்றும் நினைவில் கொள்ளப்படுவது ரஹ்மான் இசைக்கு கிடைத்த வெற்றியேயாகும்.
சுக்வீந்தர் சிங் ரஹ்மான் இசையில் பாடுவதற்குமுன் வேறுசில பாடல்களைப் பாடியிருந்தாலும் தில் சே படத்தில் பாடிய ‘சைய்யா சைய்யா’ பாடல்தான் அவரை உலகம் முழுக்க பிரபலம் ஆக்கியது. ஆனால் அதற்குமுன்னரே தமிழில் பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பாடல், ரட்சகன் படத்தில் வரும் ‘லக்கி லக்கி’ பாடல். அதன்பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சிறந்த பாடல்களைக் கொடுத்துள்ளார் சுக்வீந்தர். ஆஸ்கார் விருதை வென்ற ஜெய்ஹோ பாடலில்கூட முதன்மையான பாடகராக சுக்வீந்தர் இருந்தார். இந்தியில் பல நல்ல பாடல்களை ரஹ்மான் இசையில் பாடியுள்ள சுக்வீந்தர், சில படங்களுக்கு இந்தியில் இசையும் அமைத்துள்ளார். தனக்கு இந்த இடம் கிடைத்ததற்கு ரஹ்மான் முக்கியக் காரணம் என பல மேடைகளில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சுக்வீந்தர்.
சங்கர் மகாதேவனுக்கும் பல முக்கிய பாடல்களைக் கொடுத்துள்ளார் ரஹ்மான். ‘வராக நதிக்கரையோரம்’, ‘உப்புக் கருவாடு’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ என பல ஹிட் பாடல்களை ரஹ்மானுக்காகப் பாடியுள்ளார், ’என்ன சொல்லப் போகிறாய்’ பாடல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்று அந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் முதன்மையான பட்டியலில் இருந்தது. அந்தப் பாடலை பாடியதற்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றார் சங்கர் மகாதேவன்.
புதிய பாடகர்களை அதிகமாக பயன்படுத்துவதற்கான காரணத்தையும் ரஹ்மான் தனது சுயசரிதையில் விளக்கியிருக்கிறார்.’ஒருகாலத்தில் குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட பாடகர் பாடினால்தான் மக்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று சொல்வார்கள். சிவாஜிக்கு டி.எம்.செளந்தரராஜன் பாடுவார். இந்தியில் ராஜ்கபூருக்கு முகேஷ் பாடினார். நாம் அந்தக் காலங்களை தாண்டி வந்துவிட்டோம். இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மல்டி டிராக் ரிக்கார்டிங் வசதி வந்துவிட்டது. ஹோம் ஸ்டுடியோ செட்டப்பில் வேலை செய்வதால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புதிய பாடகர்களுக்கு எங்களால் பயிற்சி கொடுக்க முடிகிறது. இதனால் பல திறமையான பாடகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடிகிறது. அவர்களும் தங்களது தனித்துவத்தை நிரூபித்து, சாதித்தும் வருகிறார்கள். குடத்திலிட்ட விளக்குகளாக இருக்கும் அவர்களை குன்றில் வைப்பது மட்டும் எனது வேலை’ என்கிறார் ரஹ்மான்!
( நான் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகத்திலிருந்து…)
புனிதனின் – கவிதைகள்

புனிதனின் – கவிதைகள்




இரண்டாம் ஆட்டம்
***********************
இரண்டாம் ஆட்டம் சினிமா
பார்க்கப் போயிருக்கலாம்

தூக்கம் வராததற்கு
மனைவியோடு
காலார நடந்திருக்கலாம்

எழுதிய கவிதையை அவளிடம்
வாசித்துக் காட்டி இருக்கலாம்

பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கேட்காமல்
இருவரும் சேர்ந்து
பாட்டு கேட்டு இருக்கலாம்

இரண்டொரு
முத்தத்தோடு முடித்து இருக்கலாம்

தேநீர் உவர் சுவையோடு
இரவு கழிந்திருக்கலாம்

ஐந்து நிமிடம் தள்ளிப் போயிருந்தால்
இப் பிறவி நிகழாது போயிருக்கும்

கடவுளை மற
******************
தேர் போல் நகரும்
காகிதப் பூக்கள் கொடியை
ரசிப்பது

கொஞ்சம் கொஞ்சமாய்த்
தேநீர் பருகுவது

இளையராஜா பாடல் கேட்பது

உறங்கும் போதும்
கீழ்ப்படிந்த மாணவனாக இருப்பது

ஒரே நீர் நிலையில்
நீர் பருகினாலும்
கூழாங்கற்களுக்கும்
தனக்கும் சம்பந்தம் இல்லை
என பறந்து போகும்
கொக்கை தினமும் காண்பது

தேநீர் நன்றாக இருக்கிறது
நன்றி என மனித மொழி
பேசுவது

ஜென்னை போல
கடவுளை மறப்பதற்கும்
பல தடைகளை
கடந்து வரவேண்டி இருக்கிறது

கூழாங்கல் பெண்
***********************
அம்மாவின் விதான மூளையில் இருக்கும்
கற்பனைவாத கரும்புள்ளியில்
முல்லை ஆதிரை பசுக்களும்
அவை நீர் பருகும்
தாழி அடியில் தவளைகளும்
ஒற்றுமையாய் வாழ்கின்றன
தென்னை தென்றல் வீசும்
மன்றத்தில் ஓய்வெடுக்கிறது
ஏஞ்சல் நாய்க்குட்டி
கானகத்தில் இருந்து
அழைத்து வந்த
கனகாம்பர கோழிகள்
பேன் சீப்பை ஒளித்து வைத்து
கட்டிதறி எறிந்த
கொத்து போல்
இளையராஜா பாடல்கள்
உப்பு உறைத்த
நீச தண்ணி போல்
அம்மா நீக்கமற நிறைந்து இருக்கிறாள்
நினைவில்

ஜென்னின் வயது
**********************
தென்னை மரத்தடி
வெயிலுக்கு தாழி பருகிய
எருமை கன்றுக் குட்டி
அப்பாடா என படுத்துக் கிடக்கிறது

எதிரில் ஒரு மலைக் குன்றும்
அப்பாடா என
படுத்து கிடக்கிறது

98 வயதிலும் கண்ணாடி போடாமல்
புத்தகம் வாசிக்கும்
நண்பனின் தாத்தாவை பார்த்து
நானும் பணக்காரன் ஆவேன்
என நண்பனிடம் சொல்லி வந்தேன்

கிணற்றில் ஒரு முறை அவர்
தவறி விழுந்து விட்டதாய்
நண்பன் சொன்னான்

கிணற்றை எட்டி பார்த்தேன்
அவரின் பால்ய காலம்
தெரிந்தது

ஓடையோரம்
நாணல் புற்களின் ராகம்
அம் மலையின் வயதை
இசைக்கிறது

கற்றலின் இனிமை
ஊறிக் கொண்டிருக்கிறது
அந்த ஓடையில்

நினைவில் இன்னும்
வாசித்துக் கொண்டிருக்கிறார்
நண்பனின் தாத்தா
கருப்புச் சட்டை அணிந்த
கிழவரின் புத்தகத்தை

அருகில் இசைக்கும்
ஆல மரக் காற்று
தன் வயதையே
நண்பனின் தாத்தா ஞானம்
அடைந்த வயதாய்
அறிவிக்கிறது

ஆற்றைக் கடப்பது
***********************
சீடன் குரு வீட்டிற்குப்
போயிருந்தான்
வீடு குடில் போலிருந்தது

தன் எழிலான மனைவியிடம்
தேநீர் வைக்கும்படி
சொல்லி விட்டு
ஐந்து நிமிடத்தில் வருவதாய்
அவனிடம் சொல்லி விட்டுப் போனார்

அவர் அழகான மனைவி
தேநீர் தந்தார்கள்

தேநீர் பருகத் தொடங்கிய
மூன்று நிமிடத்தில் திரும்பி
வந்தார்

அவன் முகத்தையும் மனைவி
முகத்தையும் அர்த்தமாய்ப் பார்த்தார்
சீடன் மௌனமாய் அமர்ந்திருந்தான்

சீடன் முகத்தில் கள்ளத்திற்குப் பதிலாய்
குருவின் ஞானம் தெரிந்தது

கோப்பையில் தேநீர்ப் பூக்கள்
பூத்திருந்தன.

கருப்பு சினிமா
*******************
கருப்பு மாட்டைக் கண்டால்
விடுதலை உணர்ச்சி பிறக்கும்

பறவைக் கூட்டிற்கு
புல் கொண்டு வருவது போல்
வெயிலில் அலைந்து
அம்மா புல் சுமை
கொண்டு வருவாள் மாட்டிற்கு

ஒட்டகத்தில் பாதி இருக்கும்
மிருகம் என்ற சொல்லுக்கு
பொருத்தமா இருக்கும்
சின்ன புள்ளைகள் கயிறு பிடித்து
வர கட்டுப்படும்

-க. புனிதன்

தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




இசைமேதை இளையராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வந்திருக்கிறேன். அவரின் குரல் சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. எனக்கு அவர் பாடிய பாடலென்றால் உயிர். அந்தக் குரல் அத்தனை இதமானதாகத் தோன்றும் எனக்கு. வைரமுத்து அவர்களின் கட்டுரை வழியாகவோ பாரதிராஜா அவர்களின் வாழ்க்கை சரிதத்திலிருந்தோ இளையராஜா பற்றிய செய்தி வரும்போது லயித்து விடுவேன். அதற்காக எனக்கு பாரதிராஜா வைரமுத்து இருவரையும் பிடிக்காதென்று அர்த்தமில்லை இந்த இருவரையுமே எனக்கு இளையராஜா அளவுக்குப் பிடிக்கும்.

இளையராஜா போல் தமிழை மிக சரியாக உச்சரித்துப் பாட வேறு ஒருவரைத் தேடுவது கடினம். மொழி இலக்கணத்திலும் அவருக்கு ஞானம் அதிகம். “மயிலு” எனும் படத்தில் தான் அவர் இசையில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில்,

“நம்மலோட பாட்டுத்தான்டா
ஒலகம்பூரா மக்கா
கண்ட பாட்ட நாங்க கேக்க
காணப் பயறுத் தொக்கா”

என்றொரு பாடல் எழுதியிருப்பேன். அதில் முதலில் ‘காணப் பயிரு’ என்று தான் எழுதியிருந்தேன், அவர் தான் எனக்கு “காணப் பயறு” என்பதுதான் சரியென்று கற்றுத் தந்தார். அதே போல் அவர் கொடுக்கும் தத்தகாரம் மிக எளிமையாக இருக்கும். அவரின் தத்தகாரத்திற்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதிவிடலாம். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தை தரும்போதே எழுபது சதவீத வேலையை முடித்து விடுவார்கள் ஆனால் இளையராஜா அவர்கள் மெட்டைத தருகிபோது மிக மிக ராவாக இருக்கும், ஆனால் அதன் பின் அந்தப் பாடலை “அவனா இவன்” என்பதுபோல் அசத்திவிடுவார். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதிவிட்டால் போதும் ஒருவன் எப்படி மெட்டுக்கு பாடல் எழுதுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் அவர் மெட்டுப் போடுகிற பெரும்பாலான பாடல்களின் பல்லவியை அவரே எழுதிவிடுகிறார் என்பது அவர் மேலுள்ள குற்றச்சாட்டு எனினும் அவர் எழுதியதற்கு மேலான பல்லவி வரிகளை கவிஞர்கள் எழுதிவிட்டால் அதை ஏற்க மறுப்பவரும் இல்லை.Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

அவர் இசையில் கடைசியாக நான் எழுதிய பாடல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் “விடுதலை” எனும் படத்திற்கு. அவர்மேல் திரைப்படத்துறையில் ஒரு பார்வை இருக்கிறது அவர் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பார்கள். ஆனால் நான் பணிசெய்த குறைந்த படங்களின் அனுபவத்தில் அவரைப்போல் ஒரு எளிமையான இலகுவான மனிதரைப் பார்க்க முடியாது என்பதுபோல் இருந்தது. அவரருகே அமர்ந்துவிட்டால் அத்தனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவ்வளவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் இயக்குநர் பாலா அவர்கள் மீதும் ஒரு பார்வை உண்டு மற்றவர்களுக்கு ஆனால் நான் அவரோடு இரண்டொரு பட வேலைகளில் பாட்டுக்காக உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் அதுவரை அவர்மேல் வைத்திருந்த அத்தனை தப்பிதமான பிம்பங்களும் உடைந்துபோயின. இயக்குநர் பாலா மிகவும் மென்மையானவர். நேர்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பிறரை மரியாதையோடு நடத்துகிற மாண்பு மிகப் பெரியது.

என் சிறு பிராயத்தில் இளையராஜா அவர்களின் பேட்டி ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது நிருபர் கேட்ட கேள்வியும் பதிலும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. நீங்கள் எப்படி இசையை உருவாக்குகிறீர்கள்? நான் எதையும் உருவாக்குவதில்லை இந்த பூமி இசையால் நிரம்பியிருக்கிறது. பெய்யும் மழைத் தூறலிலும் ஒரு ரிதம் இருக்கிறது அதை எப்படி இசையாக்குவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். கிராமத்திலிருந்து வந்த நீங்கள் எப்படி நகரத்து வாழ்வோடு ஒத்துப் போனீர்கள் என்பது போன்ற ஒரு கேள்வியை நிருபர் எழுப்புமுன் இடை நிறுத்தி, 100 வருடங்களுக்கு முன் சென்னையும் கிராமம் தான் என்று சின்னதாகச் சினந்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒன்று இல்லை, நான் இப்போது உங்களோடு பேசும் நேரத்தே வேண்டுமானால் எனது ஓய்வு நேரமென்று சொல்லலாம் என்றார். இப்படியாக அப்போதைய இளையராஜா அவர்களின் தீர்க்கமான எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் இப்போதிருக்கும் இளையராஜாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவரின் முடிவும் செயல்பாடுகளும் அவரது உரிமை என்றாலும் அவரை விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரும் அவரின் இசை ரசிகர்களே. அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் காதலை அவர் உணரவேண்டும் என்பதே என் கருத்து.

Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிநான் இரண்டாவதாக இயக்கிய “அருவா” எனும் திரைப்படத்திற்கு நண்பர் ஜெய கே தாஸ் தான் இசை. ஆறு பாடல்களை இழைத்துத் தந்துள்ளார். அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உலகம் அறிந்து கொள்ள இந்தப் படம் வெளியாவது அவருக்குத் துணையாக இருக்குமென நம்புகிறேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு காதல் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் பாடினார்கள். அப்போது இசையையும் பாடல் வரிகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதில் தந்தையின் அன்பைச் சொல்லுகிற ஒரு பாடல். இந்தப் பாடலை இசைமேதை இளையராஜா அவர்கள் பாடினால் நன்றாக இருக்குமென யோசித்தோம் ஆனால் பிறர் இசைக்கும் இசையில் பாடமாட்டார் எனவும் விதிவிலக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் ஒரு படத்தில் பாடியிருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அவர் குரல் வேண்டும் என்பதால் அவர் குரலையொத்த கங்கை அமரன் அவர்களை அழைந்துப் பாடவைத்தோம் மனம் நிறைவடைந்தது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் தோழர் வேல ராமமூர்த்தி அவர்கள். இந்தப் படத்தின் டப்பிங் பேச வந்த அவருக்கு அந்தப் பாடலை காட்சியோடு பார்த்தவர், நான் எத்தனை படம் பண்ணியிருந்தாலும் எனக்கு இது வேற ஒரு படம் எனச்சொல்லி என்னைக் கட்டியணைத்தார். காரணம் எல்லா படங்களிலும் வேல ராமமூர்த்தி கடுங் கோபக்காரர் என் படத்தில் கனிவான அப்பா.

பல்வவி:
காசு பணமெல்லாம் சும்மா – இவர்

கர்ப்பப் பை இல்லாத அம்மா (2)

எத்தனை முகங்கள்
யாருமற்று அலைய
தண்ணீர் துளிகள் இங்கு
காற்றடித்துத் தொலைய

பிடித்து நடந்து செல்ல
விரல் தரும் மனிதருண்டோ
இவர் போல் அன்பு கொள்ள
கடவுள் உண்டோ

சரணம் – 1
செம்மறி ஆட்டுக்கெல்லாம்

மேய்ப்பவனே அப்பா
பார்வையற்ற மனிதனுக்கு
ஊன்றுகோல் அப்பா

நிலவு அம்மா என்றால்
சூரியன் தான் அப்பா
அன்பை நட்டு வைத்தால்
சொல்லுங்களேன் தப்பா

பாருங்களேன் மாலைக்குள்ள
பல பூவிருக்கும் – அவை
அத்தனையும் கட்டிக்கொண்டு
ஒரு நூலிருக்கும்

சரணம் – 2
பூக்கள் வாசனையை

பூட்டி வைப்பதில்லை
வேர்களை பூமியிங்கு
விட்டுப் போவதில்லை

சொந்த பந்தம் எல்லாம்
சொல்லில் மட்டும் இல்லை
விழுதாடும் அத்தனையும்
ஆலமரப் பிள்ளை

கத்துகிற பறவைக்கெல்லாம்
ஒரு பேர் இருக்கும்
ஒத்தையடிப் பாதைக்கெல்லாம்
ஓர் ஊர் இருக்கும்

திசை மாறிய பறவை கட்டுரை – டி. செல்வராஜ்

திசை மாறிய பறவை கட்டுரை – டி. செல்வராஜ்




இசையமைப்பாளர் இளையராஜா ‘அவுட் லுக்’ என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பாப் மாக்ஸி, பாப் டிலன் மற்றும் தமிழகத்தில் பாவலர் வரதராஜன் ஆகிய மக்கள் பாடகர்களைப்பற்றிக் கேட்ட போது “அந்தக் குப்பைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று சென்னதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இக்கூற்றை இளையராஜா இது வரையில் மறுக்கவில்லை .

இளையராஜா தன் உடன் பிறந்த சகோதரரான பாவலர் வரதராசனின் நாட்டார் இசைப் பற்றிச் சொல்லியிருப்பது உண் மையானால், அவர் தன்னைத் தானே மறுப்பதாகும். தான் பிறந்து வளர்ந்த இசை மரபை அவமதிப்பதாகும். பாவலர் வரதராசன் பற்றியும், வரதராசன் இசைக்குழுவில் அங்கமாகித் தமிழகம் பட்டி தொட் டிகள் எல்லாம் அலைந்த கலைப் பயணம் பற்றியும் சொல்லியி ருப்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இளையராஜா, பாவலர் வரத ராசனை ஒரு பிறவிக் கலைகள் ஏன்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் பாவலர் இசையின் வல்லமை பற்றி, “பாவலர் சிரித்ததால் மக்கள் சிரித்தார்கள். அவர் அழுதால் அவர்களும் அழுதார்கள். அவருடைய உணர்ச்சிகளை, அவருடைய பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அவர் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தினர்,” என்று சொன்ன தோடு மட்டுமல்லாமல், அந்த மகத்தான மக்கள் கலைஞருதுடைய இசைப்பயணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்:

“இப்பொழுதுகூட நான் வேடிக்கையாகக் சொல்வதுண்டு, மாட்டு வண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டு வண்டி போயிருக்கு இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்று கூட நாள் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியைப் பல மைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாட்டுப் பாடியிருக்கிறோம்.” (1982-ம் ஆண்டு வெளியான பாவலர் பாடல் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை), இப்படி, தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எல்லாம் அலைந்து, நாட்டு மக்களின் இசை உணர்வை உள்வாங்கி, இசையமைப்பாளராகப் பரிணாமம் பெற்ற ஒரு கலைஞன், இப் படி மாறுபட்டு, மறுதரிப்பாகப் பேசியிருப்பது, நாபிக்கொடி அறுந்ததும், தன்னைப் பிரசவித்த கர்ப்பகிரகத்தையே சூரிக்கத்தியால் குத்திக் கிழித்துச் சிதைப்பதற்கு ஒப்பாகும்.

பாவலர் வரதராசளது பாடல்கள் அவ் வளவு மகத்துவம் பெற்றதற்குக் காரணம் அவர் பாடல்களுக்குப் பயன்படுத்திய இசை நாட்டார் இசை வடிவமாகும். அவரது  பாடல் களின் கருப்பொருள் மக்கள் பிரச்சனை. நாட்டு மக்கள் அவர் பாடல்களில் தங்களைக் கண்டனர். கடந்த ஆகஸ்ட் 30 அன்று சன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், மேற்கத்திய இசையில் தாம் இசையமைத்திருக்கும் திருவாசகத்தைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பாடல் வரிகளையே மாற்றிப் போட்டிருப்பதாகக் கூறும் ராசைய்யாவுக்குப் பாமரர்கள் இசை வடிவம் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?

பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப் பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ம் ஆண்டு வாக்கில் கேரள மாநிலம், தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழு நேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர்.

அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரி சபையைக் காப்பாற்றும் பெரும் முக்கியத் துவம் வாய்ந்த தேவிகுளம், சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கோள் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ், அப்போது, முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவ ரது இசைஞானமும், கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலை தோட்டங்களுக்குச் சென்று மைக்கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரையாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில்கூட மக்கள் அந்தப் பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.

சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா வெக்கங்கெட்ட காளைரெண்டு முட்டி ஒடைஞ்ச காளை எங்கண்ணம்மா மூக்குக் சுவுரு அவுந்த காளை எம் பொள்ளம்மா (அப்போது காங்கிரஸ் கட்சியின் தேர் தல் சின்னம் இரட்டைக்காளை) இப்படித் தொடங்கும் இந்தப் பாடலின் பின் வரிகள் இன்றும் சக்தியானவை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரதராசன், தோழர் மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை நினைத்து இசைக்குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இங்கே நம் கவனத்திற்கு வருவது, இளையராஜா தனது சகோதரரின் மக்கள் சார்ந்த பாடலை குறைகூறியிருப்பது அல்ல. நாட்டார் பாடல்களின் பாரம்பரியத்தையும் வன்மையையும் உணராமல் மேல்தட்டு வர்க்கத்தின்பால் நின்று பேசியிருப்பதுதான். இன்றைக்கும் இளையராஜா, தாம் இசையமைக்கப் பெரிதும் பயன்படுத்துகின்ற புல்லாங்குழல், உடுக்கை, பம்பை, உரும், பறை, தப்பு, நையாண்டி நாயனம் போன்ற இசைக்கருவிகள் அத்தனையும் நாட்டார் இசைக்கருவிகளே அல்லவா? நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, பதம், வர்ணம், தாலாட்டு, ஒப்பாரி போன்ற வண்ணமிகு இசை வடிவங்கள் நாட்டார் இசை வடிவங் கள்தானே?

இன்று நாம் போற்றும் இனசடிவங்கள் பண்டைத் தமிழ்நாட்டுக் கலைஞர்களான பாணர், பாணினி, கூத்தர், விறலியர் ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்கள் விட்டுச்சென்ற இசை வடிவங்களின் பரிணாமங்களே. ஊர் மக்களை மகிழ்விப்பதற்காகவும், பரிசில் பெறுவதற்காகவும் உருவாக்கிய இசை வடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்றைய பல இசை கோலங்கள். பழந்தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் நாட்டார் இசையின் வன்மையை உணர்ந்துதான் தளது காவியத்தில் குன்றக் குரவை, வேட்டுவ வசி, ஆய்ச்சியர் குரவை போன்ற நாட்டார் இசை வடிவங்களை எடுத்து வார்த்துள்ளார். மக்களும் புலவர்களும் அனுபவித்து இன்புறும் மதுரை மீனாட்சி குறம், திருக்குற்றாலக் குறவஞ்சி – மற்றும் முக்கூடற் பள்ளு ஆகிய இசை தழுவிய நூல்கள் நாட்டார் இசையையும் வாழ்வையும் ஆதாரமாகக் கொண்டவையே.

திரிகூட ராசப்பக் கவிராயர், அருணா சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி யார், முத்துத்தாண்டவர், அண்ணாமலை செட்டியார், இராமச்சந்திர கவிராயர், வேதநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் ஜனரஞ்சகமான பாடல்களை நாட்டார் இசையிலேயே அமைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி பாரதி, நாட்டு மக்கள் இசைவடிவங்கள் பற்றி, “ஏற்ற நீர்பாட்டினிலும், நெல்லிடிக்கும் கோற்றொடியாக் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் பேளைக்கரங்கள் தகமொலிக்க கொட்டி இசைத்திடு மேகக்கட்டமுதப் பாட்டியிலும் நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லம் நன்றொலிக்கும் பாட்டிளிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,”

என்று போற்றிப் பாடியிருப்பதன் மூலம் நாட்டார் இமாயின் மகத்துவம் எத்தகையது என்பது புலப்படும். இளையராஜா நெக்குறுகி இசையமைத் திருக்கும் திருவாசகம் பக்தி இயக்க மார்க்கத்தில் தோன்றியது என்பதை யாரும் மறுக்க இயலாது. பக்தி இயக்கமானது சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துத் தோன்றிய இயக்கம் என்கிறார் மனோகர் பாண்டே என்கிற இந்தி இலக்கியத் திறனாய்வாளர். பக்தி இயக்கமானது சமண, பவுத்த மதங்களுக்கு எதிராகத் தோன்றிய இயக்கமும் கூட சைவமும், வைணவமும் தழைக்கப் பணி செய்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாடு முழுவதும் அலைந்து திரிந்து, ஆண்ட வனை வழிபடுவதற்கு எடுத்துக்கொண்ட இசை வடிவம் நாட்டார் பண்.. ஆண்டவன், மனிதனுக்கு எட்டும் தெய்வமாக இருப்ப தற்கு, அம்மக்கள் மொழியிலேயே அம்மக்கள் மத்தியில் வழங்கிய இசை வடிவங்களிலேயே ஆண்டவனை வழிபட்டார்கள்,

பக்திப் பாடல்களை அமைத்தனர். 7ம் நூற்றாண்டு வாக்சில் தமிழகத்தில் உருவான அந்த இயக்கம், இந்திய உகண்டம் முழுதும் பரவி, ஒரு மாற்றத்தையே ஏற்படுத்திற்று தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட, அனாய நாயனாரும், திரு நீலகண்ட யாழ்ப்பாணரும், திருப்பாணாழ் வாரும், தமது மொழியிலேயே, தமக்குப் பரிச்சயமான நாட்டார் பண் வடிவங்களையே ஆண்டவனை வழிபடப் பயன்படுத்தினர். உண்மை இப்படி இருக்க நாட்டார் பள் வடிவங்களிலேயே உருவாள திருவாசகத் துக்கு இசையமைத்த இளையராஜா நாட்டார் பாடல்களை, வடிவங்களைக் குப்பை என்று குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்பது மட்டுமல்லாமல் திசை மாறிவிட்டார் என்பதையே காட்டுகிறது.

காலப்போக்கில், சமுதாயத்தில் தவிர்க்க இயலாதவாறு ஏற்பட்ட வர்க்க வேறுபாடுகளின் காரணமாகவும், பிரதிபலிப்பாகவும் இசையிலும், கலையிலும் சல்தட்டு வர்க்கக் கலை, இசை என்றும் பாக்கலை என்றும் இசை என்றும் பாகுபாடு எழுந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவற்றை வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் தமிழர் கொண்டனர்.

அதாவது உழுதுண்போர் ரசிக்கும் கலை, உழுவித்துண்போர் ரசிக்கும் கலை. உழைப்பினின்றும் அந்நியப்பட்டு நிற்கும் சுரண்டும் உயர் வர்க்கம் ரசிக்கும் கலை வடிவம் ‘தூய கலை என்கிற அர்த்தமற்ற கலை- இசை வடிவங்கள் “சரிகமபதநிச போட்டும் பாடும் சங்கீதம். வேறு அர்த்தம் எதும் இல்லாமல் தரந்த போட்டுக்கொண்டு மணிக்கணக்கில் ஆரோகணம், அவரோ கணம் செய்யும் சங்கீதம், நுண்கலையாகக் கருதப்படுகிறது” என்கிறார் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார்.

எனவே, மக்களது போர்க்கும் படைத்த பாமரர் இசையையும், பாடல்களையும், குப்பை என்று சொல்லியுள்ள இளையராஜா, தன்னை உருவாக்கி, வடிவம் பிடித்துவிட்ட மண்ணை மறந்து, ‘சுத்த தூய கலை-இசை’ என்கிற மாய்மாலத்தில், தன்னை மறந்து, திசைமாறிப் பறந்துகொண்டிருக்கிறார். இந்த மாயையினின்றும் விடுபட்டுத் தாய் பூமிக்குத் திரும்புவாரா என்று பார்ப்போம்.

நன்றி: தீக்கதிர்

Kamanam Movie directed By Sujana Rao Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை - இரா. இரமணன்

திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை – இரா. இரமணன்




டிசம்பர் 2021 இல் வெளிவந்துள்ள தெலுங்கு படம். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சுஜானா ராவ் இயக்கியுள்ள முதல் படம். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஷிரேயா சரண், சிவா கந்துகூரி, சாருஹாசன், பிரியங்கா ஜவால்கர், சுகாஸ் மற்றும் இரண்டு சிறார் நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹைதராபாத் நகரத்தில் வாழும் மூன்று பேரின் வாழ்க்கையை ஒரு பெரு வெள்ளம் எவ்வாறு புரட்டிப் போடுகிறது என்பதே கதை. துபாய்க்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட ஒருவனால் கைவிடப்பட்ட கமலா கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல்  தொழிலாளி. கணவன் திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் கைக்குழந்தையுடன் போராட்ட வாழ்க்கை வாழ்பவர்.

கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற பெரு விருப்பத்துடன் இருப்பவன் அலி. அவன் சாரா என்கிற பெண்ணைக் காதலிக்கிறான். இருவரும் இஸ்லாமியர்கள்தான் என்றாலும் சாராவின்  தந்தை அந்தஸ்து பார்க்கிறவர். பெற்றோரை இழந்த அலியை அவனது தாத்தா வளர்க்கிறார். தாங்கள் இறக்கும்வரை குடும்ப கவுரவம் பாழாகாமல் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.

வீடில்லாமல் வடிகால் குழாய்க்குள் வசிக்கும் இரண்டு சிறுவர்கள். குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். கிடைப்பதை அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படுவதைப் பார்க்கிறார்கள். சிறியவனுக்கு பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாது.தாங்களும் கேக் வாங்கி சாப்பிட வேண்டும் என்று காசு சேர்க்கிறார்கள். அவர்களுக்கு அறிமுகமான நடைபாதை வியாபாரியிடம் அதைக் கொடுத்து அவர் விற்றுக் கொண்டிருக்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை  வாங்கிக் கொள்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை திரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒரு நாள், நகரில் பெரு மழை கொட்டுகிறது. நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தொலைக்காட்சி செய்தியாளர்கள் அதிகாரிகளை நேர்காணும்போது ‘ஆற்றின் மீது பெரும் குடியிருப்புகளை கட்டினோம்.இப்போது ஆறு அதன் மீது செல்கிறது என்று நமக்குப் பழக்கமான வசனத்தைக் கூறுகிறார்கள். கமலா கைக்குழந்தையுடன் தன் சிறு வீட்டில் மாட்டிக் கொள்கிறார்.கதவை திறக்க முடியவில்லை. குழந்தையைக் காப்பாற்றவும் கதவை திறக்கவும்  போராடுகிறார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஜன்னலை உடைத்து குழந்தையும் அவளும் வெளியில் வருகிறார்கள்.  

இன்னொரு பக்கத்தில் சாராவின் தந்தை அலியின் தாத்தாவிடம் வந்து அலியும் சாராவும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி சண்டையிடுகிறார். குடும்ப கவுரவமே முக்கியம் என நினைக்கும் தாத்தா, அலியை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். விரக்தியில் அலைந்து கொண்டிருக்கும் அலி, வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பள்ளி மாணவர்களைக் கப்பாற்றுகிறான். அதில் தன் உயிரையும் இழக்கிறான்.

பிள்ளையார் பொம்மைகளை விற்கவும் முடியாமல் மழையில் அவை கரையாமல் காப்பாற்றவும் முடியாமல் சிறுவர்கள் இருவரும் போராடுகிறார்கள். சிலைகளை பாதுகாப்பதற்காக கிடைத்த  கித்தான் துணியை மழையில் ஆட்டோவில் பிரசவம் நடக்கும் ஒரு பெண்ணின் மறைப்பிற்கு கொடுத்து உதவுகிறார்கள்.

எளிய மனிதர்களின் போராட்டமான வாழ்க்கை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில்  அது மேலும் அழிவது, ஆணின் சந்தர்ப்பவாத மனப்போக்கு என சமுதாயத்தை மையமாகக் கொண்ட  படத்தை எடுத்ததற்குப் பாராட்டலாம்.ஆனால் சில இடங்கள் பலவீனமாகக் காட்டப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில்  மாணவர்கள் ஒரு வாகனத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மாடியில் இருந்து கொண்டு அரற்றுகிறார்கள். யாரும் காப்பற்ற முயலுவதில்லை.அலி மட்டும் தனி ஒருவனாக அவர்களைக் காப்பாற்றுகிறான். நல்ல திரைப்படங்களை எடுப்பவர்கள் கூட இது போன்ற சினிமாத்தனங்களை விட முடிவதில்லை. வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் தனி ஆளாக பலரைக் காப்பாற்றிய உண்மை சம்பவங்களை பார்க்கிறோம். இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் சரியில்லை. 

காந்தியின் ‘வைஷ்ணவ ஜனதோ பாடலும் அதன் உண்மையான பொருளில் வாழ்ந்து காட்டுபவர்கள்  சாதாரண மனிதர்கள் என்று காட்டியிருப்பதும் சிறப்பு. ஷிரேயாவின் மற்றும் சிறுவர்களின்  நடிப்பும் சிறப்பாக உள்ளது.