The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயது 21 – ஒன்றிய அரசின் போலி நாடகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு



The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும் என்றாலும்கூட, மிகவும் ஆழமான பரிசீலனைகள் தேவைப்படுகின்ற பல முக்கியமான சிக்கல்கள் அதில் உள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை தொடர்புடைய நிலைக்குழுவிற்குப் பரிந்துரைப்பதே அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த வழியாக இருக்கும்.

ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுகிறாள். குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. பதினெட்டு வயதிற்குப் பிறகு தான் செய்யும் செயல்களுக்கு அவளே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அளவிற்கான வயது ஒரு பெண்ணுக்கு 18-21 வயதிற்கு இடையில் வந்து விடுகின்ற போதிலும், முன்மொழியப்படவிருக்கின்ற மசோதாவின்படி, அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தப் பெண் இளமையானவளாகவே இருப்பாள்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரமாக இல்லாமல், அவர்களைக் குழந்தைகளாக்குவதாகவே உள்ளது. முதிர்வயது என்பது பிரித்துச் சொல்ல முடியாதது. திருமணம் தொடர்பான முடிவுகளில் வயதுக்கு வந்த பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெரும்பாலும் இந்த மசோதா சாதி மற்றும் சமூக தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். இந்த மசோதா வயதுக்கு வந்த பெண் ஒருவள் அனுபவித்து வருகின்ற தனிப்பட்ட விருப்பம் குறித்த விஷயங்களில் இன்றைக்கு இருந்து வருகின்ற சட்டத்தின் கீழ் அவளுக்கிருக்கும் சுதந்திரம் குறித்ததாக நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.

மேலும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் தங்கள் வாழ்வு குறித்த முடிவுகளில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்துடனான மாற்றத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களிடையே இளம் வயது திருமணம் குறித்து அதிக கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்களுக்கு எதிராக இளம் பருவத்தினர் கிளர்ந்தெழுந்துள்ள பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

திருமணத்திற்கான சராசரி வயது 22.2 ஆக (MOSPI 2019) இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு இளம் பெண்களிடம் இதுபோன்று உருவாகியுள்ள எண்ணமும் ஒரு காரணமாக உள்ளது. உண்மையில் தன்னார்வத்துடன் திருமணத்திற்கான வயது கணிசமாக அதிகரித்து வந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு தண்டனை தரும் வகையிலான நடவடிக்கைகளை ஏன் இப்போது மேற்கொள்ள வேண்டும்? 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், தாங்களாக தேர்வுகளைச் செய்து கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்கித் தருகின்ற உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான அணுகல் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். பெண்கள் கருவுறும் விகிதம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், திருமண வயதை உயர்த்தும் இதுபோன்ற நடவடிக்கை​​ மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்காக பாஜக தலைமையிலான சில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கொடூரமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவற்ற தன்மையைப் போன்றதாகவே இருக்கும்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

திருமண வயதை உயர்த்துவதில் என்ன தவறு உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், ​​அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆயினும் இந்தக் குறைப்பு நகர்ப்புறங்களிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும், கிராமப்புற இந்தியாவில் 20-24 வயதில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கும் அதிகமானவர்கள் பதினெட்டு வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவையாகவே இருக்கின்றன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இப்போதைய தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிக்கும், குழந்தைகள் பாதிக்கப்படும் அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சமூக விளைவுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமுடக்க காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் உதவி எண்ணுக்கு குழந்தை திருமணம் குறித்து 5,200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பவர்களின் பெண் குழந்தைகளுக்கே பதினெட்டு வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வறுமை, அதிகரித்து வருகின்ற வரதட்சணைக் கோரிக்கைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த அச்சம் போன்றவற்றைச் சமாளிக்கும் தீர்வாகவே அந்த திருமணங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் செல்வத்தை தானமாக (பரய தான்) கொடுப்பது, பெண்களை அடுத்தவருக்கு கைப்பிடித்துத் தர வேண்டிய புனிதக் கடமை பெண்களின் பாதுகாவலர்களுக்கு இருக்கிறது என்பது போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கின்ற வகையிலே குழந்தை திருமணங்களுக்கான கலாச்சார அங்கீகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

அத்தகைய கலாச்சாரங்களுடன் தற்போதைய ஆட்சிக்காலம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கான அணுகலை அதிக அளவிலே உறுதி செய்திருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்கள் விடுக்கின்ற சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்தும், ஆண்களுக்கு பதினெட்டு வயதிலிருந்தும் முறையே பதினெட்டு மற்றும் இருபத்தியொன்று என்று 1978ஆம் ஆண்டில் இந்தியா மாற்றியது. எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் குழந்தை திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை மீற முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கி வந்துள்ளதால், இந்தச் சட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்து வருகின்றன. இந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணங்களை ஒழிக்கத் தவறியுள்ள நிலை நீடித்து வருகின்ற நிலைமையில், திருமணத்திற்கான பெண்களின் தகுதி வயதை இருபத்தியோரு ஆண்டுகளாக உயர்த்துவது என்பது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் – முக்கியமாக ஏழைகள் – சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்வதற்கே வழிவகுத்துக் கொடுக்கும்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

மிகக் குறைந்த வயதிலேயே தாயாகின்ற இளம் பெண்களின் உடல்நலம் மீதான அக்கறையே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும், திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துவதன் மூலம் குழந்தை பிறப்பைத் தடுத்து இலம் பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் போலித்தனமான வாதம். தாய் மற்றும் சிசு இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் பொதுக்கொள்கையுடன் தொடர்புடையவை. பொதுசுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு முறையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் உடல்நலம் மீதான தன்னுடைய அக்கறையை அது இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராத அரசாங்கம், இனப்பெருக்க உடல்நலம் என்ற பெயரில் வயதுக்கு வந்த பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது.

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்றாக உயர்த்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமன் செய்யப்படுவது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு படியாகும் என்ற அரசின் கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம் குறித்து உண்மையிலேயே இந்த அரசு ஆர்வமுடன் இருக்குமென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான தகுதியான வயதை பதினெட்டு என்று வைத்திருக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாது?The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

தனிப்பட்ட உறவுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உண்மையிலேயே இந்த அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால், ‘ஆணவக் குற்றங்களுக்கு’ எதிரான தனிச் சட்டம், திருமண உறவில் ஏற்படுகின்ற பலாத்காரத்தை குற்றமாக அங்கீகரிக்கும் சட்டம் என்பது போன்ற மிக முக்கியமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், வயதுக்கு வருகின்ற வயதிற்கும், திருமணத்திற்கான தகுதிக்கான வயதிற்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. வயதுக்கு வரும் வயதை பதினெட்டு என்று பரிந்துரைத்து 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. உலகளாவிய ஒருமித்த கருத்துக்கு எதிராகச் செல்வதற்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள் எதுவும் உண்மையில் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.

https://www.ndtv.com/opinion/centres-hypocrisy-in-raising-marrying-age-for-women-to-21-2660378

நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

BJP National Executive Committee: Nothing but flattery to Modi Article in tamil translated by Sa. Veeramani. பாஜக தேசிய செயற்குழு: மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை தமிழில் ச. வீரமணி

பாஜக தேசிய செயற்குழு: மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை – தமிழில்: ச. வீரமணி




பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நவம்பர் 7 அன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இக்கூட்டம் நடைபெற்றுள்ளதால், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை எப்படி மதிப்பீடு செய்திருக்கிறது என்றும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அதன் வேலைகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசின் வேலைகள் குறித்தும் அதன் கொள்கைகள் எப்படி பின்பற்றப்பட்டன என்பது குறித்தும் அறிந்துகொள்ள ஒருவர் எதிர்பார்த்திருந்தார் என்றால் நிச்சயமாக அவர் மிகவும் பரிதாபகரமான முறையில் ஏமாற்றம் அடைந்திருப்பார். செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் உரை, அரசியல் தீர்மானம் மற்றும் மோடியின் நிறைவுரை ஆகிய அனைத்துமே ஒரு சிறிதளவுகூட சுய விமர்சன மதிப்பீட்டைக் காட்டவில்லை.

The what, the how and the why of the pandemic | Royal Society
image credit: Royal Society

அரசியல் தீர்மானத்தை ஆராய்வோமானால், அது அனைத்துத் துறைகளிலும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியது, சுகாதாரப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, இலவச உணவு தான்யங்கள் முதலானவற்றை மக்களுக்கு அளித்தது என அனைத்து குறித்தும், பிரதமர் மோடியின் கொள்கைகளையும் சாதனைகளையும் முகத்துதி செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. தீர்மானத்தின் ஒவ்வொரு பத்தியுமே மோடியின் திட்டங்களைப் போற்றிப் பாராட்டிப் புகழ்பாடும் விதத்திலேயே அமைந்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை.

இவை எதைக்காட்டுகின்றன? கட்சியானது முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை நன்கு காட்டுகிறது. தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததன் மூலமாகவும், எட்டு மாதங்களுக்கு எண்பது கோடி ஏழைகளுக்கு உணவு தான்யங்களை இலவசமாக விநியோகித்ததன் மூலமாகவும், சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலமாகவும் மோடி அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள வயதுவந்த மக்கள்தொகையில் வெறும் 30 சதவீதத்தினருக்கு மட்டும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதனைக் குறிப்பிடாமல், நூறு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதாக வெகுவிமரிசையாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது அரசின் தரப்பில் தடுப்பூசிகள் போடப்படும் விகிதத்தின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் 2021க்குள் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்கிற அரசின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகமாகும்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். இவர்களுக்கு இரக்கம் தெரிவித்து ஒரு வார்த்தைகூட இத்தீர்மானத்தில் இல்லை. தடுப்பூசி இருப்பு குறித்து பெரிய அளவில் குளறுபடிகள் இருந்ததுபற்றியும் ஒருவார்த்தைகூட இதில் இல்லை. அதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், பலருக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது குறித்தும் எதுவும் இதில் கூறப்படவில்லை.



சமாளிக்கப்படவேண்டிய பொருளாதாரப் பிரச்சனைகள் எதுவும் உருப்படியான முறையில் சமாளிக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுமார் ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் இதில் எதுவும் கூறப்படவில்லை. அதற்குப் பதிலாக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விவசாய ஆதரவு நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ‘டிஜிடல்’மயம் மற்றும் சுயவேலைவாய்ப்புகளைப் பெருக்குதல் என்ற கொள்கையின்படி, “இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் கோருபவர்களாக இருப்பதற்குப் பதிலாக, கொடுப்பவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜக-வின் அரசியல் தீர்மானத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தபின்னர், பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியில் அங்கே புதியதொரு அத்தியாயம் தொடங்கியிருக்கிறதாம். அங்கே ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலமும், இணைய சேவையை ‘சஸ்பெண்ட்’ செய்திருப்பதன் மூலமும், மக்களின் இயல்பு வாழ்க்கையையே முற்றிலுமாக தடை செய்திருப்பதன் மூலமும் அங்கே ஒரு மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது என்பதை அத்தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.

Climate Change and Global Warming Introduction — Global Issues

மோடி தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தொனி மிகவும் அபத்தமான எல்லைக்கே சென்றிருக்கிறது. மோடி, புவி வெப்பமயமாதலை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கும், தன்னுடைய ஆட்சியின் கீழ் அயல்துறைக் கொள்கையை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கும், இந்தியாவை இதர நாடுகளுடன் சமமான அளவிற்கு அல்ல, மாறாக அதற்கும் மேலாக உலகத்தில் ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கும் உலகத்திற்கே வழிகாட்டி இருக்கிறாராம்.

மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கவலைப்படாத இத்தகைய இரக்கமற்ற அரக்கத்தனமான அணுகுமுறையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் அனைத்துத் தோல்விகளைப் பற்றியும் கவலைப்படாத போக்கும் ஒரு விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறது. அதாவது, பாஜக-வானது வேலையில்லா இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றியோ, விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியோ, நாளும் உயரும் விலைவாசிகளைப் பற்றியோ, மக்கள் அனுபவித்து வரும் பொருளாதார சிரமங்கள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதாகும். இவை அனைத்தும் உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இவை தங்களைப் பாதிக்கும் என்பது குறித்தும் அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு மாறாக பாஜக-வானது மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிட்டும், “இந்து” தேசியவாதத்தைத் தூண்டியும் வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என்று நினைப்பதாகவே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அதன் அரசியல் தீர்மானத்தின் நிலைப்பாடு காட்டுகிறது.

இவற்றுடன் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சாதிய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு இடங்களில் சாதி-சமூக ரீதியாகப் பதற்றத்தை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பிரயோகிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர். இதனை யோகி ஆதித்யநாத் இந்த அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது ஆற்றிய உரையே நன்கு வெளிப்படுத்துகிறது. ஆதித்யநாத் ‘அப்பா ஜான்’ (‘Abba Jaan’) என்று கூறுபவர்களுக்குத்தான் முந்தைய ஆட்சியில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன என்று கூறியும், 2017இல் எழுப்பப்பட்ட பிரச்சனையான கைரானா என்னுமிடத்திலிருந்து இந்து குடும்பங்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறியும் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். (‘அப்பா ஜான்’ என்பது முஸ்லீம்கள் தொழுகையின்போது பயன்படுத்தும் உருது வார்த்தைகள் ஆகும். மேலும் இது தந்தை வழி மகன் என்ற முறையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் கிண்டல் செய்யும் வார்த்தைகளுமாகும்.)

எனினும், சமீபத்தில் மக்களவைக்கும், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியபோதும் அதனைப்பற்றி அது எவ்விதமான பரிசீலனையும் மேற்கொள்ளாது, இடைத்தேர்தல்களில் “ஒரு பெரிய வெற்றி” கிடைத்திருப்பதுபோல் கூறியிருக்கிறது. இவற்றிலிருந்து பாஜக தலைமை தங்களுடைய மதவெறி-சாதிவெறி சூழ்ச்சித் திட்டங்களையே முழுமையாகத் தங்கள் வெற்றிக்கு அடிப்படையாக நம்பியிருப்பது நன்கு தெரிகிறது. அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அதாவது இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து அது கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றைப் பரிசீலனை செய்வதற்குப் பதிலாக, மிகவும் அற்பத்தனமான முறையில் தன்னைப்பற்றித் தானே திருப்திகொள்கிற மனப்பான்மையை, பாஜக தன்னுடைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது.

(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

What government has achieved on BRTE consultation Article by Theni Sundar தேனி சுந்தரின் கட்டுரை BRTE கலந்தாய்வு - அரசு சாதித்தது என்ன

BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன? – தேனி சுந்தர்



BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?

சரியான, தெளிவான கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை..

எந்த இடம் காட்டப்படும், எந்த இடங்கள் மறைக்கப்படும் என்கிற விபரங்கள் கடைசி வரையிலும் தெரியவில்லை..

முன்னுரிமை பட்டியல் வெளியிடப் பட்டு ஆசிரியர் பயிற்றுநர் அனைவரிடமும் திருத்தம் ஏதுமில்லை என்று கடிதம் பெற்று முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் தான் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வின் போதே சிலரது தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்ட வினோதமும் நடந்தது…!

ஏற்கனவே இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி புதிதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.. அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதுவரையில் சரி. ஆனால் கலந்தாய்வு நடக்கும் போதே பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை..

மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை.. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கை.. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.. ஒரு பொதுவான வழிகாட்டுதல் இருக்க வேண்டுமா இல்லையா.. ஒத்தையா ரெட்டையா போடுவது எப்படி சரியாக இருக்க முடியும்..
Spouse முன்னுரிமை என்பது அவரவர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அந்த காரணத்தினால் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்த மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்தது அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமைந்து விட்டது..

மாவட்டங்களுக்குள் நடந்த பணி நிரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொந்த மாவட்டத்திற்கு மீண்டும் வருவதற்காக deployment முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..

மாநில அளவிலான பூஜ்ய கலந்தாய்வு என்று அறிவித்த பிறகு முன்னுரிமை அளித்தது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.

அந்த முன்னுரிமை பட்டியலும் கூட எந்த ஆண்டில் பணியேற்றார் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து முன்னுரிமை பட்டியல் என்பது என்ன வித அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்றும் தெரியவில்லை. 2002, 2005, 2010, 2014 என்று எல்லோரையும் ஒரே பட்டியலில் வைத்து அதில் முன்னுரிமை என்றால் 5 வருடம், 10 வருடம், 15 வருடம் என பணியாற்றிவரும் அரசு ஊழியரின் பணி மூப்புக்கு என்ன மரியாதை, என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை. 2007ல் பணி ஏற்றவர் சொந்த மாவட்டத்தில் தன்னுடைய பணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரை விட பணியில் இளையோர் அவருடைய வாய்ப்பை பறிக்க முடிகிறது என்றால் இது என்ன வகையான அணுகுமுறை..?

Convertion மற்றும் பணி ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் தற்போது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதன் மூலமே மாவட்டத்தில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி இருக்க முடியும். அதைச் செய்யவில்லை. இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..

மீதி உள்ள இடங்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். அதை செய்யவில்லை.

பணியில் மூத்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர். சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தோர் பல்வேறு மாவட்டங்களுக்கு பந்தாடப் பட்டுள்ளனர்.

சில நூறு பேருக்கு வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு சில ஆயிரம் பேரை கடும் மன உளைச்சலுக்கும் பரிதவிப்பிற்கும் ஆளாக்கி உள்ளது. குடும்பங்கள், குழந்தைகள், கணவன்/மனைவி என பலரையும் நிம்மதியற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.

காலை எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தனக்கான பணியிடத்தை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு செய்து விட்டு எதற்கு காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே பத்து, பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த கொடுமைகள் ஒருபுறம்..

காத்திருந்து, பொறுமை இழந்து அதிகாரிகளிடம் கேட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று இரவு வீடு வந்து சேர மீண்டும் ஒரு தகவல் வருகிறது. உடனே வந்து ஆர்டர் வாங்கி புதிய பணியிடத்தில் சேர வேண்டும்.. ஆசிரியர் பயிற்றுனர்கள் அயராது பணியாற்றுவதால் அதிகாரிகள் இவர்களை ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்றே நினைக்கின்றனர் போலும். ஒரு சுற்று சுற்றியதும் DPO வந்து விடுவார்கள். இன்னொரு சுற்று சுற்றியதும் BRC போய் விடுவார்கள். அடுத்த நொடியில் பள்ளிக்கும் பார்வையிட்டு விட வேண்டும்..!

பல இடங்களில் மருத்துவ வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை.

தேவையில்லாத மன அழுத்தம், பதற்றம் காரணமாக மானாமதுரையில் பலியான ஆசிரியர் பயிற்றுநர் சின்னத் தங்கம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கும்… அவை ஒரு பக்கம் இருக்கட்டும்..!

ஆசிரியர் பயிற்றுநர்கள் வாழ்வில் அக்டோபர் 20-2021 கலந்தாய்வு ஒரு போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படி அவர்கள் மறக்க நேர்ந்தாலும் கூட மறைந்த நண்பர் மானாமதுரை சின்னத் தங்கம் அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி..!

*இத்தனை சிரமங்கள் இருந்த போதிலும் இந்த கலந்தாய்வு மூலம் கல்வியை மேம்படுத்தும் வகையில், பணித் தரத்தை உயர்த்தும் வகையில் என்ன சாதித்துள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்..!*

தகவல் வெறுமை – டி.கே ராஜலட்சுமி (தமிழில்:செ. நடேசன்)

தகவல் வெறுமை – டி.கே ராஜலட்சுமி (தமிழில்:செ. நடேசன்)

  கோவிட் 19 ஓர் உச்சக்கட்டத்தை நோக்கிச்செல்வதுபோல தோன்று கிறது: ஆனால், மத்திய அரசோ தொற்று மற்றும் சிகிச்சைகள் பற்றிய முறையான தகவல்களையும்,புள்ளி விவரங்களையும் பகிர்ந்து கொள்வதில் விருப்பமின்றி தவிர்த்துவருகிறது. மத்திய அரசு கோவிட்19 சூழ்நிலை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது, இந்த ஒட்டுவாரொட்டி…
குழந்தைகளுக்கான காமிக் படங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்யும் மத்திய அரசு…!

குழந்தைகளுக்கான காமிக் படங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்யும் மத்திய அரசு…!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து விதமான முறையிலும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…