தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்

தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்




எங்கள்
கண்கள் கூடத் தொட்டதில்லை;
கற்பகிரகத்தின் கதவுகளை!

நாங்கள்
எல்லாமும் சிந்திய
உழைப்பால் உருவான
கற்பக்கிரகத்தில்……
கடவுள்!

அபிஷேகங்களாலும்
அர்ச்சனைப் பூக்களாலும்
ஆனந்தப் படுகிறார்
ஆண்டவர்!

அபிஷேகப் பொருளும்
அர்ச்சனைப் பூக்களும்
நாங்கள் சிந்திய
வியர்வையிலும்
குருதியிலும் வந்தவை!

கற்பக்கிரகமும்
அய்யர் வீடும்
மணக்கிறது நாளும்
தீண்டும் தீட்டு….
கண்களுக்குத் தெரியாமல்!

– பாங்கைத் தமிழன்